13/09/2024
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஆனைகுளம் அம்பேத்கர் நகர் அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் கொடைவிழா கடந்த திங்கட்கிழமை 9-9-2024 அன்று கன்னியாகுமரியிலிருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு திருவிளக்கு பூஜையுடன் ஆரம்பமானது. மறுநாள் செவ்வாய்கிழமை காலை விநாயகர் ஆலயத்திலிருந்து பால்குடம் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் மதியம் கோவிலின் சிறப்பு நிகழ்ச்சியான தடியங்காய் வெட்டுதல் சிறப்பாக நடைபெற்றது. மாலை ஆனைகுளம் பெரியகுளத்திலிருந்து மேளதாளங்களுடன் கும்பம் மற்றும் முளைப்பாரி எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. இரவு கரகாட்டம் , சிறப்பு விருந்தினர்களை கவுரவிக்கும் , இரவு பன்னிரெண்டு மணியளவில் சுடலை ஆண்டவர் மயான வேட்டைக்கு செல்லுதலும் நடைபெற்றது. மூன்றாம்நாள்சுவாமி வீதி உலா வருதலும் ஊர்மக்களுக்கு ஆசி வழங்குதலும், அம்மன் மஞ்சள்நீராடுதலும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அம்பேத்கர்நகர் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
#ஆனைகுளம் #ஸ்ரீசந்தனமாரியம்மன்