St.Antony's Siluvaipatti

St.Antony's Siluvaipatti கோடி அற்புதர் புனித அந்தோனியார் திருத்தலம் சிலுவைப்பட்டி

Follow the Channel: https://youtube.com/?si=vvdcqxKhzlKskmNX
(1)

Follow us & Subscribe our YouTube channel

https://www.youtube.com/c/StAntonysSiluvaipatti?sub_confirmation=1

மே மாதம் மாதாவின் வணக்க மாதம்
26/05/2026

மே மாதம் மாதாவின் வணக்க மாதம்

 #புனித_அந்தோனியாரை_நோக்கி  #வேண்டுதல்_ஜெபம்  இப்புண்ணிய ஷேத்திரத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங்கொ...
25/05/2026

#புனித_அந்தோனியாரை_நோக்கி #வேண்டுதல்_ஜெபம்

இப்புண்ணிய ஷேத்திரத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங்கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோனியாரே ! பரிசுத்தத்தனம் விளங்கும் லீலியே ! விலைமதிக்கப்படாத மாணிக்கமே ! பரலோக பூலோக காவலரே ! கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்குப் பரம சஞ்சீவியானவரே ! பாவிகளின் தஞ்சமே ! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோனியாரே ! சூரத்தனமுள்ள மேய்ப்பரே ! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே ! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே ! இவ்உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ! எங்கள் தஞ்சமும் நீரல்லவோ ! எங்கள் சந்தோஷமும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ ! நீர் எங்கள் ஞானத்தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர்கள் பாராட்டுவார்களோ, உம்மைத் தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும் அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும். நீர் இரங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இரங்குவார்? நீர் ஆதரியாவிட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்? தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பெயரில் தயவாயிரும். பரிசுத்த வெண்மையின் தூயதான தயாபரமே ! தயைக்கடலே ! தவிப்பவர்களுக்குத் தடாகமே ! தனித்தவருக்குத் தஞ்சமே ! உமது இன்பமான சன்னிதானம் தேடிவந்தோம். ஆறு, காடு, கடல்களைக் கடந்து ஓடிவந்தோம். துன்பம், பிணி, வருமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பயன் அற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ? அப்படி ஆகுமோ ஐயா, எங்களின் அன்பான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக்கோடுக்கிறோம். எங்களைக் கையேற்றுக்கொண்டு ஆசீர்வதித்தருளும் -ஆமென்.

#செபிப்போமாக:
சர்வேசுரா சுவாமி ! புனித அந்தோனியாரை வணங்கி அவருடைய சலுகையை இரந்து, சாஷ்டாக்கமாக விழுந்து கிடக்கிற யாத்திரிகர்களாகிய அடியோர்கள் பேரில் தயை செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். இந்த மன்றாட்டுக்களையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் ஆமென்

Follow: St.Antony's Siluvaipatti

மே 25  :  நற்செய்தி வாசகம்இவரே உம் மகன்! இவரே உம் தாய்!✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27அக்காலத்த...
24/05/2026

மே 25 : நற்செய்தி வாசகம்

இவரே உம் மகன்! இவரே உம் தாய்!

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

அக்காலத்தில்

சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர்.

இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
----------------------------------------------------------------------
நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் தாய்

புனித கன்னி மரியா, திருஅவையின் அன்னை

I தொடக்க நூல் 3: 9-15, 20
திருப்பாடல் 87: 1-2, 3, 5, 6-7
II யோவான் 19: 25-27

நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் தாய்

தாயின் பாதுகாவலில் நம்மை ஒப்படைப்போம்

நேற்றைய நாளில் பெந்தக்கோஸ்துப் பெருவிழாவைக் கொண்டாடினோம். அன்றைய நாளில்தான் தூய ஆவியார் சீடர்கள்மீது இறங்கி வந்தார். அதே நேரத்தில் கிறிஸ்துவின் மறையுடலாம் திருஅவையும் பிறந்தது. அந்தத் திருஅவையை ஒரு தாய்க்குரிய கரிசனையுடன் மரியா வழிநடத்தியதால், அவரைத் திருஅவையின் அன்னை எனச் சொல்லலாம்.

முன்னதாக, இயேசு சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது தனது தாய் மரியாவிடம் யோவானைச் சுட்டிக்காட்டி, “அம்மா! இவரே உம் மகன்” என்று கூறியிருப்பார். அதைப் பற்றி நாம் இன்றைய நற்செய்தியில் வாசகத்தில் வாசிக்கலாம். இங்கே யோவான் தனியாள் அல்ல, இயேசுவின்மீது நம்பிக்கை கொண்ட அனைவரையும் அல்லது திருஅவையைக் குறிக்கின்றார். அந்த வகையில் மரியாவை நாம் திருஅவையின் அன்னை எனச் சொல்லலாம்.

இன்றைய முதல் வாசகத்தில் முதல் பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறி, விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டு பாவம் செய்ததால், கடவுள் அவர்களையும் அலகையையும் தண்டிக்கின்றார். அந்த நிகழ்விற்குப் பிறகு மனிதன் தன் மனைவிக்கு உயிருள்ளோர் எல்லாருக்கும் தாய் எனப் பொருள்படும் ஏவாள் எனப் பெயரிடுகின்றான். ஏவாள் கடவுளின் கட்டளையை மீறியிருக்கலாம், மரியாவோ கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து, புதிய ஏவாளாய்த் திகழ்ந்து எல்லாருக்கும் தாயாகின்றார். இதனால் இன்றைய நாளில் நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் இடம்பெறுவது போல், மரியா எல்லாராலும் மேன்மை மிக்கவராய்ப் போற்றப்படுகின்றார்.

மரியா ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடித்து திருஅவைக்கும்; ஏன், நம் அனைவருக்கும் தாயாகத் திகழ்கின்றார். அவரின் முன்மாதிரியைப் பின்பற்றி, நாம் கடவுளுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்வோம்.

என் தாயே உலகின் ஒளி

ஒரு பங்கில் ஞாயிறு மறைக்கல்வி மாணவர்களுக்கு மனப்பாடப் போட்டி நடைபெற்றது. போட்டிக்காக அவர்களுக்கு யோவான் நற்செய்தியில் இயேசு பேசும் “நானே...” என்று தொடங்கும் இறைவாக்குப் பகுதியானது கொடுக்கப்பட்டது

போட்டி தொடங்கி எல்லாருக்கும் கொடுக்கப்பட்ட இறைவாக்குப் பகுதியை நன்றாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு சிறுவன் மட்டும் சொல்லவேண்டிய இறைவாக்குப் பகுதியைப் பாதிலேயே மறந்து போனான் அப்போது அவனுக்கு முன்னால் இருந்த அவனுடைய தாய் அவனுக்கு எடுத்துக் கொடுத்தார். அப்படியிருந்தும் அவனால் சொல்ல முடியாததால், அவனுடைய தாய், அவனருகில் சென்று, “நானே உலகின் ஒளி” என்று சொல்லிவிட்டுத் திரும்பி வந்தார்.

அவர் திரும்பி வந்ததும் சிறுவன், “என் தாயே உலகின் ஒளி” என்றான். அதைக் கேட்டு எல்லாரும் அவனை வியப்புடன் பார்த்தார்கள்.

இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவன் அறியாமையில் சொன்னாலும், ஒவ்வொருவருக்கும் அவருடைய தாய்தான் ஒளியாக, விளக்காக இருக்கின்றார் என்பதுதான் உண்மை. மரியா நம் அனைவருக்கும் தாய் என்பதால், அவரே, நமக்கு ஒளியாக இருந்து, நம்மை வழி நடத்துகின்றார் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆன்றோரின் வார்த்தை

“அன்னை என்றால், உன் அன்னை என் அன்னை என்ற வேறுபாடெல்லாம் இல்லை. ஒரே அன்னைதான்” – லா.சா.ரா (பிரபல தமிழ் எழுத்தாளர்)

தீர்மானங்கள்

1) அன்னையின் மரியாவின் பாதுகாவலில் நம்மை ஒப்புக் கொடுப்போம்.

2) கடவுள் நமது விண்ணகத் தந்தை, நாம் அனைவரும் சகோதரர் சகோதரிகள் என்பதால் நம்மிடம் இருக்கும் பிரிவினைகளைக் களைவோம்.

3) அன்னை மரியா சொல்வது போல், இயேசு சொல்வதையெல்லாம் செய்வோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

மே 25 :  பதிலுரைப் பாடல்திபா 87: 1-2. 3,5. 6-7 (பல்லவி: 3)பல்லவி: கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்ற...
24/05/2026

மே 25 : பதிலுரைப் பாடல்

திபா 87: 1-2. 3,5. 6-7 (பல்லவி: 3)

பல்லவி: கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன.

1
நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.
2
யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்.
3
கடவுளின் நகரே! உன்னைப் பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. - பல்லவி

4
எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, ‘இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்’ என்று கூறப்படும்.
5
‘இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!’ என்று சீயோனைப் பற்றிச் சொல்லப்படும். - பல்லவி

6
மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, ‘இவர் இங்கேதான் பிறந்தார்’ என ஆண்டவர் எழுதுவார்.
7
ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து ‘எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது; எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது’ என்பர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா!

தூய கன்னிமரியே, பெருமகிழ்வு கொண்டவர் நீர்; புகழ் அனைத்திற்கும் தகுதி பெற்றவரும் நீர். ஏனெனில், நீதியின் ஆதவன், நம் இறை கிறிஸ்து, உம்மிடமிருந்து உதயமானார். அல்லேலூயா.

இன்றைய வாசகங்கள் தூய கன்னி மரியா, திரு அவையின் அன்னை நினைவுக்கு உரியது.மே 25 : முதல் வாசகம்உயிருள்ளோர் எல்லாருக்கும் அவள...
24/05/2026

இன்றைய வாசகங்கள் தூய கன்னி மரியா, திரு அவையின் அன்னை நினைவுக்கு உரியது.

மே 25 : முதல் வாசகம்

உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 9-15, 20

அந்நாள்களில்

ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கின்றாய்?” என்று கேட்டார்.

“உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.

“நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார்.

அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான்.

ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள். ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், “நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார். மனிதன் தன் மனைவிக்கு ‘ஏவாள்’ என்று பெயரிட்டான்; ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

† இன்றைய திருவிழா †(மே 24)✠ கிறிஸ்தவர்களின் சகாய அன்னை ✠(Our Lady Help of Christians)சலேசியர்களின் பாதுகாவலி:(Patroness ...
24/05/2026

† இன்றைய திருவிழா †
(மே 24)

✠ கிறிஸ்தவர்களின் சகாய அன்னை ✠
(Our Lady Help of Christians)

சலேசியர்களின் பாதுகாவலி:
(Patroness of the Salesians)

திருவிழா நாள்: மே 24

"கிறிஸ்தவர்களின் சகாய அன்னை" (Our Lady Help of Christians) என்பது, ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் கொண்டாடப்படும் அன்னை மரியாளின் பக்தியாகும். இத்திருவிழா, மே மாதம், 24ம் நாளன்று, கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும்.

கி.பி. 345ம் ஆண்டில், அன்னை கன்னி மரியாளுக்கான பக்தியாக இந்த மரியான் பட்டத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் புனிதர் ஜான் கிறிஸோஸ்டம் (Saint John Chrysostom) ஆவார். இந்த தலைப்பில் மரியான் பக்தியை பரப்புவதில் சிறப்பான பங்காற்றியவர், புனிதர் டான் போஸ்கோ (St. Don Bosco) ஆவார். "கிறிஸ்தவர்களின் சகாய அன்னை" (Our Lady Help of Christians) என்ற தலைப்பு, கிறிஸ்தவ ஐரோப்பா (லத்தீன் மற்றும் கிரேக்கம்), ஆப்பிரிக்காவின் வடக்கு மற்றும் மத்திய கிழக்கு ஆகியவற்றை, இடைக்காலத்தில் கிறிஸ்தவமல்லாத பிற இன மக்களிடமிருந்து பாதுகாப்பதில் தொடர்புடையது ஆகும்.

இஸ்லாமிய ஒட்டோமான் பேரரசின் (Islamic Ottoman Empire) விரிவாக்கத்தின்போது, கிறிஸ்தவ ஐரோப்பாவை அவர்கள் ஆக்கிரமிக்கும் வேளையில், திருத்தந்தை ஐந்தாம் பயஸ், (Pope Pius V) கிறிஸ்தவப் படையினரை உதவிக்கு அழைத்தார். ஐரோப்பா முழுவதிலும் உள்ள கத்தோலிக்கர்கள் ஜெபமாலை ஜெபித்தபோது கிறிஸ்தவமண்டலம் முழுவதும் கிறிஸ்தவர்களின் சகாய அன்னை மரியாளின் உதவியால் காப்பாற்றப்பட்டது. கி.பி. 1571ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7ம் தேதி, லெபாண்டோவின் பெரும் போர் (Great Battle of Lepanto) நிகழ்ந்தது.

மேலும், இப்போரின் வெற்றியின் விளைவு, இந்த தலைப்பின் கீழே, மரியாளின் பரிந்துரையே காரணம் என நம்பப்படுகிறது. இறுதியில், இஸ்லாமியம் மீது கிறிஸ்தவத்தின் தீர்க்கமான வெற்றிக்கு நன்றி செலுத்துவதற்காக கி.பி. 1903ம் ஆண்டு, மே மாதம், 17ம் நாளன்று, திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ (Pope Leo XIII) இவ்விழாவினை ஏற்படுத்தி, மரியன்னையின் திருவுருவத்திற்கு "கிறிஸ்தவர்களின் சகாய அன்னை" எனும் பெயர் பொறிக்கப்பட்ட பட்டத்தினை முடிசூட்டினார். இது, தற்போது "கிறிஸ்தவர்களின் சகாய அன்னை பேராலயத்தில்" (Basilica of Mary Help of Christians) நிரந்தரமாக பொறிக்கப்பட்டுள்ளது.

புனிதர் ஜான் போஸ்கோவும், கிறிஸ்தவர்களின் சகாய அன்னையும்:
புனிதர் ஜான் போஸ்கோ, ஒரு சக்தி வாய்ந்த கத்தோலிக்க குரு ஆவார். இவர், கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டில், தமது சலேசியன் சபையை (Salesian Order) நிறுவினார். அவரது பல தீர்க்கதரிசன கனவுகள், ஒன்பது வயதில் தொடங்கி, அவருடைய ஊழியத்திற்கு வழிகாட்டின. எதிர்கால நிகழ்வுகள் பற்றிய நுண்ணறிவுகளையும் அளித்தன.

கி.பி. 1862ம் ஆண்டு, மே மாதம், 14ம் நாளன்று, திருச்சபையானது, பிந்தைய நாட்களில் எதிர்கொள்ளவிருக்கும் போர்களைப் பற்றி ஜான் போஸ்கோ கனவு கண்டார். அந்த காலத்தைய திருத்தந்தை, இரண்டு தூண்களுக்கு இடையில் திருச்சபையின் 'கப்பலை' நங்கூரமிடுவதாகவும் கனவு கண்டார். ஒன்று தூண், கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் சொரூபம் என்றும், மற்றொன்று பெரியதொரு நற்கருணை என்றும் அவருக்கு காட்சியளித்தது.

ஜான் போஸ்கோ, தமது சலேசிய சபையினைப் பற்றி எழுதுகையில், "நற்கருணை பக்தியை பரப்புவதும், கிறிஸ்தவர்களின் சகாய அன்னையின் பக்தியை பரப்புவதுமே இச்சபையின் பிரதான நோக்கமாகும்" என்று எழுதினார். மேலும், "'கிறிஸ்தவர்களின் சகாய அன்னை' எனும் இத்தலைப்பானது, ஆகஸ்ட் விண்ணரசியை மிகவும் மகிழ்விக்கும்" என்று எழுதினர்.

ஓ பரிசுத்த ஆவியே எங்கள் மேல் இறங்கும்...!!!
23/05/2026

ஓ பரிசுத்த ஆவியே எங்கள் மேல் இறங்கும்...!!!

தூய ஆவி பெருவிழா - ஞாயிறு
23/05/2026

தூய ஆவி பெருவிழா - ஞாயிறு

மே 24 :  நற்செய்தி வாசகம்தந்தை என்னை அனுப்பியதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்; தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.✠ யோவான...
23/05/2026

மே 24 : நற்செய்தி வாசகம்

தந்தை என்னை அனுப்பியதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்; தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-23

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
----------------------------------------------------------------------
தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்

பெந்தக்கோஸ்தே பெருவிழா

(திப 2: 1-11; 1 கொரி 12: 3b-7, 12-13; யோவா 20: 19-23)

தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்

நீங்கள் தூய ஆவியால் நிரப்பப்பட்டுள்ளீர்களா?

நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் நியூயார்க்கிலிருந்து இந்தியாவிற்குக் கப்பலில் புறப்பட்டு வந்தவர் ஜான் ஹைட் (John Hyde).

இவர் கப்பலில் வந்துகொண்டிருந்தபோது இவரது நெருகிய நண்பர் சில நாள்களுக்கு முன்பு இவருக்கு எழுதிய ஒரு கடிதத்தைப் படிக்க நேர்ந்தது. அந்தக் கடித்தத்தில், “இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்கச் செல்லும் நீ தூய ஆவியால் நிரப்பப்பட்டிருக்கின்றாயா?” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. இவ்வார்த்தைகளைப் படித்துப் பார்த்ததும், இவர், ‘நான் எவ்வளவு படித்திருக்கின்றேன். தூய ஆவியால் நிரப்பப்பட்டிருக்கின்றாயா? என்று கேட்கின்றானே இவன்’ என்று அந்தக் கடிதத்தைக் கசக்கிப் போட்டார்.

இவர் இந்தியாவிற்கு வந்து நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கியபோதும் தூய ஆவியின் முக்கியத்துவத்தை உணராமலேயே நற்செய்தி அறிவித்தார். இதனால் மக்கள் நடுவில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. அப்போதுதான் இவர் தூய ஆவியின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். உடனே இவர் கடவுளிடம் தூய ஆவியைத் தன்மீது பொழியுமாறு மன்றாடினார். கடவுளும் இவர்மீது தூய ஆவியைப் பொழியவே வல்லமையோடு இவர் நற்செய்தி அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களை ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார்.

நற்செய்திப் பணியாளரான ஜான் ஹைட் தூய ஆவியைப் பெறும்வரை பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. எப்போது இவர் தூய ஆவியைப் பெற்றுக்கொண்டாரோ, அப்போது இவரால் வல்லமையோடு நற்செய்தியை அறிவிக்க முடிந்தது. இன்று நாம் பெந்தக்கோஸ்தே பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். தூய ஆவியின் வருகை திருஅவையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது? இன்று அவர் நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன? என்பன குறித்து நாம் சிந்திப்போம்.

உள்ளே

புளிப்பற்ற அப்பவிழா, வாரங்கள் விழா, கூடார விழா என முப்பெரும் விழாக்களுக்கு யூதர்கள் ஆண்டுதோறும் எருசலேமிற்குச் செல்ல வேண்டும் (இச 16: 16). புளிப்பற்ற அப்பவிழாவாம் பாஸ்கா விழாவிற்குப் பின் ஐம்பதாம் நாளில் – பெந்தக்கோஸ்து நாளில் – அறுவடை விழாவாம் வாரங்கள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவைக் கொண்டாட யூதர்கள் எருசலேமில் கூடியிருந்தார்கள். அப்போதுதான் இயேசுவின் சீடர்கள்மீது தூய ஆவி இறங்கி வர, அவர்கள் இறைவாக்கு உரைக்கத் தொடங்குகின்றார்கள்.

தூய ஆவி வருவதற்கு முன்பு, சீடர்கள் எப்படி இருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் தூய ஆவி அவர்களுக்கு “உள்ளே” எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தினார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இன்றைய முதல் வாசகத்தில், “யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள்” என்று வாசிக்கின்றோம். இப்படி யூதர்களுக்கு அஞ்சி வாழ்ந்த சீடர்கள், தூய ஆவியின் வருகைக்குப் பின் துணிவோடு நற்செய்தியை அறிவிக்கிறார்கள். எனில், தூய ஆவி அவர்களுக்கு உள்ளே துணிவையும் ஆற்றலையும் வல்லமையும் தந்திருக்கின்றார் என்று உறுதியாகச் சொல்லலாம்.

வெளியே

தூய ஆவி சீடர்களுக்கு உள்ளே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், வெளியேயும் - மக்களிடையேயும் - மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

பெந்தக்கோஸ்தே நாளில் எருசலேமிற்குப் பல நாடுகளிலிருந்தும் மக்கள் வந்திருந்தார்கள். அவர்கள் அடிப்படையில் யூதர்களாக இருந்தாலும், பல்வேறு காரணங்களால் பல இடங்களுக்குச் சிதறுண்டு போனார்கள். இவர்கள் தூய ஆவியால் நிரப்பப்பட்ட இயேசுவின் சீடர்கள் இறைவாக்கு உரைக்கின்றபோது, தத்தம் மொழியிலேயே கேட்கின்றார்கள்; இயேசுவை நம்பி ஏற்றுக் கொள்கின்றார்கள். இது தூய ஆவி “வெளியே” செய்த மிகப்பெரிய மாற்றமாகும்.

தொடக்க நூலில், மக்கள் பாபேல் கோபுரத்தைக் கட்டி எழுப்பும்போது, கடவுள் கீழே இறங்கிச் சென்று, ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்துகொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவதைப் பற்றி வாசிக்கின்றோம் (தொ 11:7). காரணம், அவர்கள் கடவுளின் கட்டளைப்படி நடக்காமல், அதாவது உலகம் முழுவதும் சிதறுண்டு போய் மண்ணுலகை நிரப்பாமல் இருந்தார்கள். பெந்தக்கொஸ்தே நாளில் வந்தவர்களோ, ஒருவகையில் கடவுளின் கட்டளைப்படி சிதறுண்டு போனவர்கள். இதனால் அவர்கள் திருத்தூதர் பேசியதைத் தத்தம் மொழியிலேயே கேட்கும் ஆற்றலைப் பெறுகின்றார்கள். அதன்மூலம் இயேசுவை நம்பி ஏற்றுக்கொள்கின்றார்கள.

மேலே

தூய ஆவி சீடர்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். அத்தோடு அவர் இன்னொரு மாற்றத்தையும் கொண்டு வந்தார். அதுதான் மக்களின் உள்ளங்களை மேலே எழுப்பியது.

இயேசு தம் சீடர்களை விட்டுப் பிரிந்து செல்வதற்கு முன்பாக அவர்களிடம், “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் உங்களை முழு உண்மையை நோக்கி வழி நடத்துவார்” (யோவா 16: 13) என்று சொல்லியிருப்பார். இங்கே இயேசு சொல்கின்ற முழு உண்மை என்பது அவரையும், அவரது படிப்பினையும் குறிக்கின்றது. இயேசுவின் படிப்பினை என்ன என்பதைப் பற்றி இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் தெளிவுபடுத்துகின்றார்.

கொரிந்து நகரில் இருந்த ‘இறைமக்கள்’ பல்வேறு காரணங்களால் பிரிந்து கிடந்தார்கள். அதைவிடவும் தூய ஆவி அவர்களுக்கு அருளிய கொடைகளைப் பொது நலத்திற்காகப் பயன்படுத்தாமல், தங்களுடைய நலனுக்காகப் பயன்படுத்தினார்கள். இதையறிந்த பவுல் அவர்களிடம் கிறிஸ்து என்னும் உடலில் நீங்கள் உறுப்புகளாய் இருக்கின்றீர்கள் என்று சொல்லிவிட்டு, உங்களிடையே பிளவுகள் வேண்டாம் என்கிறார்; தூய ஆவி அருளும் கொடைகளைப் பொது நன்மைக்காகப் பயன்படுத்துங்கள் என்கின்றார். பவுல் கூறும் இவ்வார்த்தைகள் மூலம் தூய ஆவி ஒருவரை இம்மண்ணுலகு சார்ந்த வாழ்க்கை வாழாமல், மேலுலகு சார்ந்த வாழ்க்கை வாழ அழைக்கின்றார் என்பது தெளிவாகின்றது.

இன்று பலர் தன்னலச் சேற்றிலும், இம்மண்ணுலக வாழ்க்கையே பெரிது என்ற எண்ணத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட, தங்களையே அவர்கள் கடவுளிடம் ஒப்படைக்கவேண்டும். தூய ஆவியாரால் வழிநடத்தப்படுகின்ற ஒருவரே கடவுளின் மகனாக, மகளாக முடியும் (உரோ 8:14); அவர் அளிக்கும் ஆசிகளைப் பெற முடியும்.

எனவே, நாம் கடவுளின் ஆவியால் இயக்கப்பட்டு அவரது மக்களாவோம்; அவர் தரும் ஆசிகளைப் பெறுவோம்.

சிந்தனைக்கு

மூச்சுத் திணறல் நோய் எனப்படும் ஆஸ்மா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் காற்று இல்லாதபோது மிகவும் துன்பப்படுவார். காற்று வடிவில் வந்த தூய ஆவியார் நம் நடுவில் இல்லாமல் போனாலும், நாம் மிகவும் துன்புறவேண்டும். ஆகையால், நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்ப நம்மிடம் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து, அனைவரும் சகோதரர், சகோதரிகள் என்ற உணர்வோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Address

Siluvaipatti
Tuticorin
628002

Opening Hours

Monday 6am - 8pm
Tuesday 6am - 10pm
Wednesday 6am - 9pm
Thursday 6am - 9pm
Friday 6am - 9pm
Saturday 6am - 9pm
Sunday 6am - 9pm

Telephone

+919629590007

Alerts

Be the first to know and let us send you an email when St.Antony's Siluvaipatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St.Antony's Siluvaipatti:

Share