தூய அந்தோணியார் திருத்தலம் புளியம்பட்டி

  • Home
  • India
  • Tuticorin
  • தூய அந்தோணியார் திருத்தலம் புளியம்பட்டி

தூய அந்தோணியார் திருத்தலம் புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலம் புளியம?

தென்னகத்துப் பதுவை என்று மக்களால் போற்றப்படும் தூய அந்தோனியார் திருத்தலம், தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள புளியம்பட்டி என்ற ஊரில் உள்ளது. பாளையங்கோட்டை மறைமாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் தலையாயத் திருத்தலம் இது.

ஆயிரக்கணக்கில் மக்கள் இங்கு வருகிறார்கள். தமிழகத்தில் இருந்து மட்டுமல்ல, கொல்லம், புதுவை, கருநாடகம், மும்பை, டில்லி போன்ற இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் மதம்

, இனம், மொழி, நிறம் பண்பாடு கடந்து மக்கள் கூடுகிறார்கள்.

புளியம்பட்டி சுற்றுலாத் தளம் இல்லை. தொழில் நகரம் இல்லை. இங்கு வானுயர்ந்த கட்டடங்கள் இல்லை. வங்கிகள் இல்லை. பொழுது போக்கு வசதிகள் இல்லை. சில சமயங்களில் போக்கவரத்துக்கு கூட வழி இல்லை. இது வானம் பார்த்த பூமி. வானம் பொழிந்தால் மட்டுமே மண் விளையும். எல்லா நிலையிலும் பின் தங்கியதுதான் புளியம்பட்டி, வெளிப்புற ஈர்ப்புகளுக்கான எந்த அடையாளங்களும் இல்லாத அநத ஊருக்கு இலட்சக்கணக்கான மக்கள் தேடி வருவதுதான் அனைவரின் வியப்பு! இது எப்படி சாத்தியம்? அந்த அற்புதத்தைதான் தூய அந்தோனியார் செய்து வருகிறார்.

புளியம்பட்டி ஊரைச் சுற்றி ஆண்டாண்டு காலமாய் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, சமூகத்தில் பறக்கணிக்கப்பட்ட மக்கள் தான் வாழ்கிறார்கள். புளியம்பட்டி “ஆண்டவர் இத்தகையோர் மத்தியில்தான் குடி கொள்வார்” (திருப்பாடல் 9.9) என்ற விவிலிய உண்மைக்கு புளியம்பட்டி ஓர் பெரிய சான்று. புளியம்பட்டி புதுமை விளையும் பூமி. ஒவ்வொரு நாளும் கோடி அற்புதர் புதுமை செய்கிறார். புதுமைப் புனிதர் கடவுளின் அருளைப் பெற்றுத் தருகிறார். ஏக்கங்களையும், எதிர்பார்ப்புகளையும் சுமந்து வரும் மக்கள் அமைதியையும் மகிழ்ச்சியையும் பெற்றுத் திரும்புகிறார்கள். நூற்றுக்கணக்கான நோயாளிகள், உடலால், உள்ளத்தால் நலிந்தவர்கள் திருத்தலத்தில் பல நாட்கள் ஏன் பல மாதங்கள் தங்கி நம்பிக்கையோடு செபித்து, கோடி அற்புதரின் பரிந்துரையால் நலிவு நீங்கி, உடல் மன நலம் பெற்றுச் செல்லும் காட்சியைக் காணக் கோடிக் கண்கள் வேண்டும்.

வந்தவர் உணவைப் பட்டைகளில் அசன விருந்தாக ஏழைகள், கவனிப்பாரற்றவர்கள், அனாதைகள் போன்றோருக்குப் படைக்கிறார்கள். அந்தோணியாருக்கு தங்களை விற்று வாங்கிக் கொள்கிறார்கள். தங்கள் விருப்பம் போல வழிபாடு செய்கிறார்கள். புதுமைக் கிணற்றில் குளித்து மாதா கெபியை வளம் வந்து ஆலயத்தை சுற்றிவிட்டு அந்தோனியாருக்காக மொட்டை போட்டு, தங்கள் நேர்ச்சைகளைச் செலுத்தி புனிதர் வழியாக வரம் பெற்றுச் செல்கிறார்கள்.

ஒவ்வொரு செவ்வாய் கிழமையையும் அந்தோனியார் நாளாகக் கருதிப் பக்தர்கள் கூடினாலும், தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய் ஆயர் வருகையாலும் மக்கள் திரளாளும் திருத்தலமே தனிப் பொலிவு பெறும். “தை மாதத்தின் கடைசி செவ்வாய்” அன்று திருத்தலத் திருவிழா சிறப்புடன் கொண்டாடப்படும். திருப்பயணிகளுக்கென செவ்வாய் முற்பகல் 12 மணிக்கும், ஞாயிறு முற்பகல் 11.30 மணிக்கும் சிறப்புத் திருப்பலிகள் நடக்கின்றன. செவ்வாய் மாலை 6.30 மணிக்கு நோயாளிகளுக்கான குணமாக்கும் சிறப்பு நற்கருணை வழிபாடுகள் நடக்கின்றன.

திருத்தலத்திற்கு வாருங்கள்!
நம்புங்கள் செபியுங்கள!;
நல்லது நடக்கும்!

28/01/2019
தூய அந்தோணியார் திருத்தலம் புளியம்பட்டி திருவிழா 2015..!!!புளியம்பட்டி கோடி அற்புதர்புனித அந்தோணியார் ஆலய திருவிழாநேற்று...
31/01/2015

தூய அந்தோணியார் திருத்தலம் புளியம்பட்டி திருவிழா 2015..!!!

புளியம்பட்டி கோடி அற்புதர்
புனித அந்தோணியார் ஆலய திருவிழா
நேற்று 29-01-2015,
பாளையங்கோட்டை
மறைமாவட்ட ஆயர் மேதகு அ ஜூடு பால்ராஜ் அவர்கள் திருக்கொடியேற்றி ஆடம்பர கூட்டுத்திருப்பலியுடன் தொடங்கியது.
திருவிழா 10-02-2015 அன்று நிறைவடைகிறது..!

30/01/2015
═════════════ ღೋƸ̵̡Ӝ̵̨̄Ʒღೋ═══════⊰✿░ G░O░D░ ✿ ░B░L░E░S░S░ ✿ Y░O░U░⊰✿Psalm 91:1-2(NIV)Whoever dwells in the shelter of th...
02/09/2014

═════════════ ღೋƸ̵̡Ӝ̵̨̄Ʒღೋ═══════
⊰✿░ G░O░D░ ✿ ░B░L░E░S░S░ ✿ Y░O░U░⊰✿
Psalm 91:1-2(NIV)
Whoever dwells in the shelter of the Most High will rest in the shadow of the Almighty. I will say of the LORD, “He is my refuge and my fortress, my God, in whom I trust.”
Sometimes life is really hard and we go through so many struggles.
Why do we feel this way? Because the enemy tries to remind us of our past and all the things we have done. We feel open and unprotected but David gives us hope. If we remain in God’s shelter he gives us rest and protection. John 15:5, “I am the vine; you are the branches. If you remain in me and I in you, you will bear much fruit; apart from me you can do nothing”. If we continue having faith in God through the toughfest times, we will be able to say like King David, ” I will say of the LORD, “He is my refuge and my fortress, my God, in whom I trust.” Today, trust in God with all your heart, and when the enemy comes to remind you of your past, remind him of his future. You are a child of God Almighty, and you are in his hands. Psalm 108:6, “Save us and help us with your right hand, that those you love may be delivered”.
Pray: God thank you for your hand of protection over me and my family. I want to remain faithful to you, help me when satan comes to remind me of my past help me to stay focused on you.
Amen!
ღ May you have a blessed and peaceful day In our Lord!ღ
══════════════ ღೋƸ̵̡Ӝ̵̨̄Ʒღೋ═════════════
⊰✿░L░I░V░I░N░G░⊰✿░F░O░R░⊰✿░J░E░S░U░S░✿⊰
══════════════ ღೋƸ̵̡Ӝ̵̨̄Ʒღೋ═════════════

27/07/2014
Be tolerant with one another and forgive one another whenever any of you has a complaint against someone else. You must ...
27/07/2014

Be tolerant with one another and forgive one another whenever any of you has a complaint against someone else. You must forgive one another just as the Lord has forgiven you. - Colossians 3:13

23/06/2014
தூய அந்தோணியாரை நோக்கி பொது மன்றாட்டுஎங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து பாலகனை கையில...
08/06/2014

தூய அந்தோணியாரை நோக்கி பொது மன்றாட்டு

எங்கள் பாதுகாவலரான தூய அந்தோணியாரே, இறைவனின் அன்புள்ள அடியாரே கிறிஸ்து பாலகனை கையில் ஏந்தும் பேறுபெற்ற தூயவரே, திருமறையை ஆர்வமுடன் போதித்த சிறந்த போதகரே தப்பறைகளை தகர்த்தெறிந்த வித்தகரே, இறைவனின் தனி அருளால் அலகையை ஓட்டுபவரே, துன்புறுவோரின் துயர் துடைப்பவரே, பாவியராகிய நாங்கள் உமது உதவியை நாடி உம்மிடம் ஓடி வந்தோம்..

புதுமை வரம் பெற்றிருக்கும் எம் ஞானத்தந்தையே! நம்பிக்கையுடன் உம்மிடம் ஓடி வந்துள்ள உம் பிள்ளைகளின் மனறாட்டுக்களை கேட்டருளும்..
உமது ஆதரவை நாடி வந்துள்ள உம் அடியார் எம்மீது உம் கருணைக் கண்களைத் திருப்பியருளும். துன்பம், பிணி, வறுமை, சிறுமை ஆகியற்றால் வாடி வந்திருக்கும் எங்களுக்கு உதவியருளும். அழுவோரின் கண்ணீரைத் துடைத்தருளும்..
நோயாளிகளுக்கு உடல் நலம் கொடுத்தருளும்..

எங்கள் அன்புக்குரிய தூய அந்தோணியாரே! இறைவனின் திருவுளப்படி எப்பொழுதும் நீர் நடந்தது போல நாங்களும் இன்பத்திலும் துன்பத்திலும் எப்பொழுதும் அவரது திருவுளத்துக்கு இசைந்து நடக்கவும், நீர் தூய வாழ்வு வாழ்ந்தது போல, நாங்களும் ஒருவருக்கும் வஞ்சகம் நினையாமலும், செய்யாமலும் தீமையை அகற்றி புனிதராய் வாழவும், திருச்சபை தளைக்கவும், நாடு செழிக்கவும், நாங்கள் நேர்மையுடன் உழைக்கவும், மக்கள் யாவரும் மெய்யங்கடவுளைக் கண்டறிந்து, தக்க முறையில் அவரை வழிபடவும் எங்களுக்காக இயேசுவை வேண்டியருளும்..

எங்களையும் எங்கள் குடும்பங்களையும், எங்கள் தொழில் முயற்சிகளையும், உழைப்பினையும் ஆசீர்வதித்தருளும்..
எங்கள் விண்ணப்பங்கள் நிறைவேற எங்களுக்காக இறைவனை மன்றாட வேண்டுகிறோம்..

ஆமென்

Child's Prayer for Protection:Angel of God, my Guardian dear, To whom God's love commits me here;Ever this day, be at my...
08/06/2014

Child's Prayer for Protection:

Angel of God, my Guardian dear, To whom God's love commits me here;
Ever this day, be at my side, To light and guard, To rule and guide..
Amen.

Address

Tuticorin
628303

Alerts

Be the first to know and let us send you an email when தூய அந்தோணியார் திருத்தலம் புளியம்பட்டி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to தூய அந்தோணியார் திருத்தலம் புளியம்பட்டி:

Share