கத்தோலிக்க திருச்சபை

கத்தோலிக்க திருச்சபை Traditional Catholic Church and Prayers
(1)

1836 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் ஜெயமாதா கோவில் விசாரணைக் குருவானவர் தம் அதிகாரத்துக்குட்பட்ட ஜனங்கள் தேவபக்தியில்லாமல் இர...
31/05/2026

1836 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் ஜெயமாதா கோவில் விசாரணைக் குருவானவர் தம் அதிகாரத்துக்குட்பட்ட ஜனங்கள் தேவபக்தியில்லாமல் இருக்கிறதைக் கண்டு, பாவிகளுக்கு அடைக்கலமாகிய தேவமாதாவின் மாசற்ற இருதயத்துக்குத் தம்மையும் தமது விசாரணைக்குள் அடங்கிய ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து இந்தப் பரமநாயகியின் மாசில்லாத திரு இருதயத்தின் பெயரால் ஓர் சபையை ஏற்படுத்த விரும்பினார். இந்தச் சபையின் ஒழுங்குகளையும், பிரமாணங்களையும், கட்டளைகளையும், பாரீஸ் நகர அதிமேற்றிராணியாரின் அங்கீகாரத்திற்குப்பின் இந்தச் சபை தொடங்கியது.

சிறிது காலத்துக்குப் பிறகு தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட சபையானது சர்வேசுரனுக்கும் தேவமாதாவுக்கும் பிரியப்பட்டிருக்கிறதென்று குருவானவர் அற்புதமாக அறிந்து மரியாயின் மாசற்ற இருதய சபையை உறுதிப்படுத்தவும் அனைத்துலகிலும் பரப்பவும் பிரயாசைப்பட்டார். அவர் நினைத்தபடி இச்சபையில் திரளான ஜனங்கள் சேர்ந்து பெயர் எழுதிக் கொடுத்துத் தேவதாயாருடைய திருஇருதயத்துக்குரிய வணக்கம் செலுத்தி பாவிகள் மனந்திரும்புவதற்காக வேண்டிக்கொண்டு வருகிறார்கள். இந்த வேண்டுதலுக்கு இரங்கின சர்வ ஜீவ தயாபர சர்வேசுரனுடைய அனுக்கிரகத்தினாலும் தேவமாதாவினுடைய உதவியினாலும் கணக்கற்ற பாவிகள் மனந்திரும்பி நல்லவர்களானார்கள். ஆகையால் இந்தச் சபைக்கு பெரும் கீர்த்தியும் மகிமையும் கிடைத்ததுமன்றி, நாடெங்கும் இச்சபையைச் சேர்ந்த மற்ற அநேகம் கிளைச் சபைகள் நிறுவப்பட்டன. இச்சபையில் சேர்ந்த அநேக இலட்சம் ஜனங்கள் தேவமாதாவின் மாசில்லாத திரு இருதயத்தை வணங்கி வருவதுமன்றி, பாவிகள் எல்லோரும் மனந்திரும்பும்படியாக மிகுந்த பக்தியுடன் வேண்டிக்கொள்ளுகிறார்கள். திருச்சபைக்கு அஸ்திவாரமும் தலைவருமாகிய பாப்பானவர் இந்தப் பரிசுத்த இருதய சபை வழியாகச் சர்வேசுரன் அளித்த ஞான நன்மைகளை அறிந்து இந்தச் சபையின் சட்ட திட்டங்களையெல்லாம் சரியென்று அங்கீகரித்து இந்தச் சபையில் சகல கிறிஸ்தவர்களும் சேரும்படியாக புத்தி சொல்லி இந்தச் சபையாருக்கு அநேக பலன்களை வழங்கினார்.

இந்த சபையின் மூலமாக பரம நாயகி செய்த அதிசயமான அற்புதங்களையும், பெரிய பாவிகளை மனந்திருப்பின வரலாறுகளையும், நோயாளிகளுக்கு அற்புதமாய் அளித்த ஆரோக்கியங்களையும், கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்கு வருவித்த ஆறுதலையும், தேவதாய் செய்த மற்றும் அநேக உதவிகளையும் இங்கு எடுத்துக் கூறுவது சுலபமல்ல.

ஆகையால் கிறிஸ்தவர்களே, நீங்கள் எல்லோரும் இந்த உத்தம சபையில் சேர்ந்து மீட்புப்பெற உங்களால் இயன்ற அளவு பாவிகளை மனந்திருப்ப பிரயாசைப்படக்கடவீர்கள்.

எத்தேசங்களிலும் எக்காலங்களிலும் தேவமாதாவின் வேண்டுதலினால் மாபெரும் அற்புதங்களும் சுகிர்த நன்மைகளும் நடந்து வந்திருக்கின்...
31/05/2026

எத்தேசங்களிலும் எக்காலங்களிலும் தேவமாதாவின் வேண்டுதலினால் மாபெரும் அற்புதங்களும் சுகிர்த நன்மைகளும் நடந்து வந்திருக்கின்றன என்பது நிச்சயம். இந்தப் பரமநாயகி பசாசின் தலையை மிதித்தவளும் பாவிகளுக்கு அடைக்கலமுமாய் இருக்கிறதினால், எக்காலத்திலும் அன்னையுடைய தயையைக் கொண்டு அரோகம் பாவிகள் தங்களுடைய அக்கிரம வழிகளை விட்டுத் தபசு செய்து புண்ணியவான்களானார்கள். ஆயினும் தேவமாதாவின் மாசற்ற இருதயச்சபைவழியாக இந்தப் பரம இராக்கினியின் தயையும் மகிமையும் இரக்கமும் தனிச்சோபையுடன் இந்நாட்களில் விளங்க சர்வேசுரன் சித்தமானார் என்கிறதற்குச் சந்தேகமில்லை.

தேவமாதா, தேவாலயத்தில் மறைந்து தேவ சமூகத்தில் எப்பொழுதும் இருந்ததுபோல நடந்து சர்வேசுரனை இடைவிடாமல் நினைத்து அவரை அதிகமாக ...
30/05/2026

தேவமாதா, தேவாலயத்தில் மறைந்து தேவ சமூகத்தில் எப்பொழுதும் இருந்ததுபோல நடந்து சர்வேசுரனை இடைவிடாமல் நினைத்து அவரை அதிகமாக நேசித்து வந்தார்கள். அப்போது அர்ச். அமிர்தநாதர் தேவமாதாவைப் பற்றி கூறுவதுபோல, தேவ சத்தியங்களை அதிக பக்தியோடு தியானித்து அவசரங்களில் மாத்திரம் பேசுவார்கள். தன் இருதயத்தில் பற்றி எரிகிற தேவசிநேக அக்கினியால் ஒடுக்கம் நல்லதென்று எண்ணி செபத்தில் சர்வேசுரனோடு பிணைக்கப்படுவதை மாத்திரம் பெரிதாக எண்ணிக்கொண்டிருந்தார்கள். நாமும் தேவமாதாவைப்போல் சர்வேசுரனை மாத்திரம் நாடி இடைவிடாமல் அவருடைய சமூகத்தில் நடக்கக்கடவோம். அவரை அடிக்கடி நினைத்து நாம் செய்கிறது எல்லாம் அவருக்கு பிரியமாய் இருக்கும் கருத்தோடு செய்யக்கடவோம்.

30/05/2026
தேவகுமாரனுக்குத் தாயாரானவரும் பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவரும் தெய்வீகத்துக்குத் தேவாலயமுமாகிய பரிசுத்த கன்னிமாமரி...
30/05/2026

தேவகுமாரனுக்குத் தாயாரானவரும் பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவரும் தெய்வீகத்துக்குத் தேவாலயமுமாகிய பரிசுத்த கன்னிமாமரியாள் எவ்வளவோ புண்ணியம் உள்ளவர் என்று சொல்லவும் கருதவும் முடியாது. அன்னையிடத்திலே ஓர் அற்பப் பாவமும், அற்பக்குறையும் காணப்படுகிறதில்லை. அன்னையில் சகல புண்ணியங்களும் சகல சுகிர்தங்களும் விளங்குகிறதுமல்லாமல் தேவமாதா ஆத்துமத்தை அலங்கரிக்கிற வரங்களுக்கும் எண்ணிக்கையில்லை. சர்வேசுரனால் சம்மனசுக்களுக்கும் மனிதர்களுக்கும் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதங்களைவிட அன்னை அதிகமாய் பெற்று தேவ இஷ்டப் பிரசாதத்தினால் பூரணமாய் அலங்கரிக்கப்பட்டு தேவ உதவிகளைக் கொண்டு எண்ணப்படாத பேறுபலன்களை அடைந்து, பூர்வீகத்திலும் வருங்காலத்திலும் எப்போதும் சிருஷ்டிகளுள் நிகரில்லாதவராய் இருக்கின்றார்கள். நாமோவெனில் சர்வேசுரன் தேவமாதாவுக்குக் கொடுத்த வரங்களில் கொஞ்சமாகிலும் நமக்கு அவர் கொடுக்க வேண்டுமென்று மன்றாடி நாம் பரிசுத்தராகும்படிக்கு பரிசுத்த கன்னிமாமரி அன்னை காட்டின் புண்ணிய மாதிரிகைகளைக்கூடிய மட்டும் கண்டுபாவிக்கப் பிரயாசைப்படுவோம்.

சர்வேசுரன் ஆதியில் தமது திருக்குமாரன், மனிதவதாரமெடுத்து உலகத்தை இரட்சிப்பாரென்று தீர்மானித்து, அந்தத் திருக்குமாரனுக்குத...
30/05/2026

சர்வேசுரன் ஆதியில் தமது திருக்குமாரன், மனிதவதாரமெடுத்து உலகத்தை இரட்சிப்பாரென்று தீர்மானித்து, அந்தத் திருக்குமாரனுக்குத் தாயாராக இருக்கும்படிக்கு மற்றப் பெண்களைத் தெரிந்து கொள்ளாமல் பரிசுத்த கன்னிமாமரியாயைத் தெரிந்து கொண்டார். பரலோகத்தில் சம்மனசுக்களும் பூலோகத்தில் மனிதர்களும் பெற்றுக்கொண்ட மகிமையும் பிரதாபமும் அவருகளுடைய மகிமைக்கும் பிரதாபத்துக்கு முன் ஒன்றுமில்லாததுபோல் இருக்கிறது. சர்வேசுரனுடைய திருக்குமாரனுக்குத் தாயாரானதிலேயும், உண்டாக்கப்பட்ட சகல வஸ்துக்களுக்குள்ளே மேலானவருமாய் சம்மனசுக்களுடைய நவவிலாச சபைக்கு இராக்கினியானவருமாய்க் கிறிஸ்தவர்களுக்குத் தாயாருமாய் மனிதர்களுக்காக மனுப்பேசுகிறவருமாய் இருக்கிறதினாலேயும் மாமரி அன்னைக்கு அனந்த பிரதாபமுண்டு. சிநேகத்துக்குரிய தம்முடைய தாயாராகிய பரிசுத்த கன்னிமாமரி அடைந்த மேன்மையும் அன்னை பாவிகளுக்காக வேண்டி சர்வேசுரனிடத்தில் அப்படிப்பட்ட அபிமானத்தை அடைந்திருக்கிறார்கள் என்கிறதையும் பற்றி சர்வேசுரனுக்குத் தோத்திரம் சொல்லி அந்த இராக்கினி பாதத்தில் விழுந்து அன்னைக்கு மேன்மைக்குரிய வணக்கத்தையும் செய்வோமாக.

சேசுநாதருடைய திவ்விய தாயாரே! அநேகர் தங்கள் பாவத்தினால் கெட்டுப்போய் நரகத்தில் விழுந்து மோட்சத்துக்குத் தெரிந்து கொள்ளப்ப...
29/05/2026

சேசுநாதருடைய திவ்விய தாயாரே! அநேகர் தங்கள் பாவத்தினால் கெட்டுப்போய் நரகத்தில் விழுந்து மோட்சத்துக்குத் தெரிந்து கொள்ளப்பட மாட்டார்கள் என்ற பரம இரகசியத்தை ஆராய்ந்து எண்ணுகிறபோது நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன். ஆகிலும் வேதபாரகர் எழுதியிருக்கிறபடி உமது பேரில் வைத்த நேசமான பக்தியானது மோட்சம் சேருவதற்கு நிச்சயத்துக்கு அடுத்த அடையாளமாய் இருக்கிறதினால் ஆறுதலடைந்து தேறி சந்தோஷப்படுகிறேன். என் நல்ல தாயாரே! நான் உம்மைச் சிநேகித்து உமது பேரில் என் நம்பிக்கையெல்லாம் வைத்து கூடின மட்டும் எவ்விதத்திலும் உமக்கு ஊழியம் செய்ய ஆசையாயிருக்கிறேன். உமது பேரில் நம்பிக்கை வைத்து, சாகும் வரையிலும் உம்மை சிநேகித்து, உமக்கு ஊழியம் செய்தால் நான் சர்வேசுரனால் தெரிந்து கொள்ளப்பட்டு, உம்முடைய உதவியினால் பேரின்ப பாக்கியத்தை அனுபவிப்பேன் என்று நிச்சயமாயிருக்கிறேன். ஆனால் என் பலவீனமும் என் உறுதியின்மையும் உமக்கு தெரிந்திருக்கின்றதே. என் ஆத்துமத்தில் நீர் மூட்டின பக்தி ஒருக்காலும் குறையாமல் மரணமட்டும் நிலைக்கொண்டு நான் இடைவிடாமல் உம்மை வணங்கி சிநேகித்து மன்றாடி மோட்சத்தை அடைந்து உம்மோடுகூட சதாகாலமும், நானிருக்கும்படிக்கு எனக்கு உதவி செய்தருளும். ஆமென்.

மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக்...
29/05/2026

மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.

Address

Maadha Church Street
Tuticorin
60001

Alerts

Be the first to know and let us send you an email when கத்தோலிக்க திருச்சபை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to கத்தோலிக்க திருச்சபை:

Share