எச்சரிப்பின் சத்தம்

எச்சரிப்பின் சத்தம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from எச்சரிப்பின் சத்தம், Christian church, Tuticorin.

தேவனுடைய வார்த்தைகளை ஏனோதானோ என்று கேட்காமல், வாசிக்காமல் ஒரு விலையேறப்பெற்ற பொக்கிஷத்தைப் பாதுகாப்பது போல திருவசனத்தை க...
22/07/2026

தேவனுடைய வார்த்தைகளை ஏனோதானோ என்று கேட்காமல், வாசிக்காமல் ஒரு விலையேறப்பெற்ற பொக்கிஷத்தைப் பாதுகாப்பது போல திருவசனத்தை கேட்டு அல்லது வாசித்து அதை நம் இருதயத்தில் பத்திரப்படுத்தி, அதற்குக் கீழ்ப்படிவதே கைக்கொள்ளுதல்.

முழு இருதயம்: பிரிக்கப்படாத, அரைகுறையான இருதயத்தோடு அல்லாமல், நம்முடைய முழு அன்பு, ஆசை, எண்ணம் மற்றும் விருப்பத்தோடு தேவனைத் தேடுவதைக் குறிக்கிறது.

நாம் உலக ஆசீர்வாதங்களுக்காகவோ அல்லது கடமைக்காகவோ, அல்லது சுயநல நோக்கத்தோடோ
மட்டும் தேவனைத் தேடாமல், தேவனை மட்டுமே நேசித்து, அவரே நம் வாழ்வின் பிரதான நோக்கம் என்று உணர்ந்து தேட வேண்டும்.

நாம் உண்மையான மகிழ்ச்சியையும் அமைதியையும் தேடி உலகப் பொருட்களின் பின்னால் ஓடாமல், கிறிஸ்துவின் வார்த்தைகளை நம் இதயத்தில் இருத்தி, அதன்படி வாழும்போது நம் வாழ்வு ஆசீர்வதிக்கப்பட்டதாக மாறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

மத்தேயு 7:26
நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான்.

நீங்கள் யார் என்பதை உங்களை அலசி ஆராய்ந்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கிறிஸ்துவின் போர்வீரன்
பேதுரு 💪 ROCK 💪
நாசரேத்
தூத்துக்குடி மாவட்டம்
தேவ செய்தியை வாட்ஸ் அப்பில் பெற்றிட விரும்பினால்
9486080025

கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.சங்கீதம் 119:1 மனித வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி ...
21/07/2026

கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.
சங்கீதம் 119:1

மனித வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி மற்றும் ஆசீர்வாதத்திற்கான வழியை இவ்வசனம் மிக எளிமையாக விளக்குகிறது.

உத்தம மார்க்கத்தார்" என்பது பாவமே செய்யாத மனிதர்களைக் குறிக்கவில்லை. மாறாக, தங்கள் இருதயத்தில் கர்த்தருக்கு பயப்படும் பயத்தோடு, கபடு சூதுவாதற்ற உத்தமமான நல்மனசாட்சியுடன் வாழத் தங்களை அர்ப்பணிப்பவர்களைக் குறிக்கிறது. உலகப் போக்குகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்காமல், ஆவிக்குரிய வாழ்க்கையை ஆவியானவரின் வழி நடத்துதலுக்கு ஒப்புக் கொடுத்து வாழ்பவர்களே உத்தமர்கள்.

இந்த வசனத்தின்படி நம் அன்றாட வாழ்க்கையை அலசி ஆராய்ந்து பார்க்க மூன்று கேள்விகள்:

1. இருதயம்: மனிதர்கள் பார்க்காத என் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கையில் நான் தேவனுக்கு முன்பாக உத்தமனாக இருக்கிறேனா?

2. தீர்மானிப்பது எதை வைத்து?: என் அன்றாட தீர்மானங்களை (வியாபாரம், குடும்பம், நட்பு) வழிநடத்துவது உலகத்தின் தத்துவங்களா அல்லது கர்த்தருடைய வேதமா?

3. எதில் மகிழ்ச்சி அடைகிறோம்: என் சந்தோஷத்தை நான் உலகப் பொருட்களில் தேடுகிறேனா, அல்லது தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில் பெறுகிறேனா?

சிந்தனைக்கு: நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.
என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;
அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன்சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். யாக்கோபு 1:22-24

கிறிஸ்துவின் போர்வீரன்
பேதுரு 💪 ROCK 💪
தேவ செய்தியை வாட்ஸ் அப்பில் பெற்றிட விரும்பினால்
9486080025
நாசரேத், தூத்துக்குடி மாவட்டம்

கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்.  சங்கீதம் 9:1 தாவீது கடவுளைத் துதிக்கும்போது ஏனோதானோ என்றோ அல்லது ...
16/07/2026

கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன். சங்கீதம் 9:1

தாவீது கடவுளைத் துதிக்கும்போது ஏனோதானோ என்றோ அல்லது கடமைக்காகவோ, வெறும் சடங்காகவோ அல்லது உதட்டளவிலோ செய்யாமல், தன் முழு இதயத்தோடு தேவனுக்கு நன்றி செலுத்துகிறார்.

ஆழ்ந்த நன்றியுணர்வு: வாழ்வில் நேரிடும் இன்ப துன்பங்கள் அனைத்திலும் கிறிஸ்துவின் கரம் இருப்பதை உணர்ந்து, வஞ்சகம் அல்லது முறுமுறுப்பு இல்லாத தூய உள்ளத்தோடு நன்றி கூறுவதே உண்மையான துதி.

"அரை இதயம் என்பது ஒரு இதயமே அல்ல". உதடுகளால் மட்டும் கடவுளைத் துதித்துவிட்டு, உள்ளத்தில் குறைகளோடும் முறுமுறுப்போடும் இருப்பது உண்மையான துதி அல்ல.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நாம் கிறிஸ்தவ வட்டாரத்தில் துதி பாடல்களுக்கோ, துதிப்பதற்க்கு பாடல்களை பாடி ஆடி நடத்துபவர்களுக்கும் குறைவில்லை ஆனால் தேவனை துதிக்கிற நாம் முழு இதயத்தோடு தான் துதிக்கிறோமா?

தயவாக சிந்திக்க வேண்டுகிறேன்

இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. மத்தேயு 15:8

நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது.
அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.
துதித்தலும் சபித்தலும் ஒரேவாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது. யாக்கோபு 3:8-10

கிறிஸ்துவின் போர்வீரன்
பேதுரு 💪 ROCK 💪
தேவ செய்தியை வாட்ஸ் அப்பில் பெற்றிட
9486080025

Address

Tuticorin
636810

Website

Alerts

Be the first to know and let us send you an email when எச்சரிப்பின் சத்தம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share