Unnatharin Anbu உன்னதரின் அன்பு

Unnatharin Anbu உன்னதரின் அன்பு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Unnatharin Anbu உன்னதரின் அன்பு, Religious organisation, Polepettai, Tuticorin.

Unnatharin Anbu - The Love of God is started by Mr.J.Chandra Singh from Tuticorin, Tamilnadu according to the calling of Jesus Christ to tell and show the Love of eternal God to the people.

முழங்கால்படியிட்டுத் தான் ஜெபிக்க வேண்டுமா? முழங்கால்படியிட்டு ஜெபிப்பதால் என்ன விஷேசம்? என்ற  கேள்விகள் நம் எல்லார் உள்...
20/05/2026

முழங்கால்படியிட்டுத் தான் ஜெபிக்க வேண்டுமா? முழங்கால்படியிட்டு ஜெபிப்பதால் என்ன விஷேசம்? என்ற கேள்விகள் நம் எல்லார் உள்ளத்திலும் எழலாம்.

எலியா தீர்க்கதரிசியின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் மூலம் இந்த கேள்விகளுக்கான பதிலை நாம் பெற்றுக் கொள்ளலாம். ஆம், ஆவியானவர் என் உள்ளத்தில் போட்ட காரியம் இது.

அகசியா என்னும் இஸ்ரவேலின் ராஜா தீர்க்கதரிசியாகிய எலியாவை அழைத்து வர ஒரு தலைவனையும், கூட ஒரு ஐம்பது பேரையும் அனுப்புகிறார். அங்கு என்ன நடக்கிறது?!

"அப்பொழுது எலியா, அந்த ஐம்பது பேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது" (2 இராஜா 1:10).

அதோடு விட்டாரா அகசியா இராஜா?! மீண்டும் ஒரு தலைவனையும், கூட ஒரு ஐம்பது பேரையும் அனுப்புகிறார். அந்த தலைவன், தான் இராஜாவின் ஆள் என்ற அதிகாரத் திமிரில், இன்னொரு வார்த்தையையும் சேர்த்து கூறுகிறார். அதாவது, இராஜா உன்னை "சீக்கிரமாய்" வரச் சொல்லுகிறார் என்று அவசரப்படுத்திக் கூறுகிறார்.

முன்பைப் போல இந்த ஐம்பது பேர் மற்றும் தலைவனையும் எலியா தீர்க்கதரிசி வானத்திலிருந்து அக்கினியை இறக்கிக் கொன்று விடுகிறார்.

இப்பொழுது அகசியா இராஜா மூன்றாவது முறையாக ஒரு தலைவனையும், ஐம்பது பேரையும் அனுப்புகிறார்.

ஆனால், இந்த மூன்றாவது தலைவன் அக்கினியை இறக்கிக் கொல்லப்படவில்லை. மேலும், இவர் வேண்டுதலைக் கேட்டு எலியாவும் அவரோடு கூட செல்லுகிறார். இது எப்படி நடந்தது?!

இந்த மூன்றாவது தலைவன் எலியாவை எப்படி அணுகினார் என்பது தான் அந்த மாற்றத்திற்கு, தயவிற்குக் காரணம். ஆம், இந்த மூன்றாவது தலைவன் எலியாவின் முன்பு வந்த போது, "முழங்காற்படியிட்டு" அவனை வேண்டிக் கொண்டான் என்று வேதம் கூறுகின்றது.

இதிலிருந்து நமக்கு என்ன தெரிகின்றது?! அவன் தேவனுடைய மனுஷனாகிய எலியாவிற்கு முன்பதாகத் தன்னை எவ்வளவு தாழ்த்த முடியுமோ, அவ்வளவாய் தாழ்த்தினார். முதல் இரண்டு தலைவர்களும் எலியா தீர்க்கதரிசியை மரியாதை இல்லாமல் "உன்னை" வரச் சொல்லுகிறார் என்கிறார்கள் அதிகாரத்துடன்.

ஆனால், இந்த மூன்றாம் தலைவனோ, "உமது" என்று மரியாதையோடு பேசுகிறார். ஆகவே பாருங்கள், முதல் இரண்டு தலைவர்களுக்கும் செய்தது போல எலியா வானத்திலிருந்து அக்கினியை இறக்கி இவர்களைக் கொல்லவில்லை.

அடுத்ததாக, தேவனிடம் இருந்தே அவருடைய தூதன் மூலமாக, அவர் வேண்டுதலுக்குப் பதில் வருகிறது. "அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப் போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப் போய்," (2 இராஜா 1:15) என்பதாகப் பார்க்கிறோம்.

ஆம் பிரியமானவர்களே, தேவனுக்கு முன்பதாக நாம் முழங்கால்படியிட்டு ஜெபம் செய்வது, நமது பணிந்த ஆவியை தேவனுக்குக் காட்டுகின்றது. தேவனுக்கு முன்பதாக நாம் நம்மை தாழ்த்துவதைக் குறிக்கின்றது. தேவன் மீதுள்ள நமது பயபக்தியை வெளிப்படுத்துகின்றது.

அந்த பயபக்தி தான் தேவனிடம் இருந்து, நமது வேண்டுதலுக்குப் பதிலை கொண்டு வருகிறது. ஆம் பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவின் ஜெபத்திற்கே அப்படித் தான் தேவனிடம் இருந்து பதில் வந்ததாக வேதம் கூறுகிறது.

"அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லைமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல் செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு," (எபி 5:7) என்று பார்க்கிறோம்.

தேவனிடம் பயபக்தியாக இயேசு கிறிஸ்து இருந்த காரணத்தினால் தான் எப்பொழுது தனியாக ஜெபம் செய்தாலும், இயேசு கிறிஸ்து முழங்கால்படியிட்டு ஜெபித்திருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிகின்றது.

ஆம் பிரியமானவர்களே, முழங்கால் ஜெபத்தின் அவசியத்தை, பலனை அறிந்து கொண்டீர்களா? உங்கள் பயபக்தியை இன்று நீங்கள் எப்படி வெளிப்படுத்தப் போகிறீர்கள்?

ஜெ.சந்திர சிங்
உன்னதரின் அன்பு, தூத்துக்குடி
--------------------------------------------------------------------
செய்திகளை வாட்சப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்: +91 809 809 79 78.

முந்தைய செய்திகளைப் படிக்க: https://www.facebook.com/UnnatharinAnbu2020
யூ-டியூப்:

This channel is dedicated to spread Gospel and to tell about Jesus, Christianity, the life within Jesus Christ, the way of life that leads to God and Heaven. This channel is created and maintained by J.Chandra Singh, Founder: Unnatharin Anbu (Love of God). The title, "Unnatharin Anbu (Love of God)"....

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, இந்த கோடை விடுமுறை நாட்களில் உங்கள் பிள்ளைகளை கலை, விளையாட்டு போன்ற அநேக காரியங...
14/05/2026

கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமானவர்களே, இந்த கோடை விடுமுறை நாட்களில் உங்கள் பிள்ளைகளை கலை, விளையாட்டு போன்ற அநேக காரியங்களை கற்றுக் கொள்ளும்படி செய்வீர்கள்.

நம்மில் எத்தனை பேர் இந்த கோடை விடுமுறை நாட்களில் வேதத்தை கற்றுக் கொள்ள செய்கிறீர்கள்? வருடத்தில் பத்து பதினோரு மாதங்கள் நம் பிள்ளைகள் உலக ஞானத்தை தான் காலை முதல் இரவு வரை கற்றுக் கொள்கிறது. இந்த ஒரு மாதத்திலாகிலும் தேவன் நமக்காக எழுதிக் கொடுத்த வேதத்தை நம் பிள்ளைகள் கற்றுக் கொள்கிறதா?

நம் பிள்ளைகள் வேதத்தை படிக்காவிடில் வேறு எந்த பிள்ளைகளை வேதத்தை கற்றுக் கொள்ளும்? நாம் நம் பிள்ளைகளை வேதத்தை படிக்க வைக்காவிடில் வேறு யார் தங்கள் பிள்ளைகளை வேதத்தை படிக்க வைப்பார்கள்?

வேதத்திலே தேவன் இப்படியாகக் கூறுகிறார், "நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன்" (ஓசியா 4:6) என்று.

வேதத்தைக் கற்றுக் கொள்வதன் பலனைக் குறித்து நீதிமொழிகள் 2ம் அதிகாரத்தில் நாம் பார்க்கலாம். அந்த அதிகாரத்தில் இப்படியாகக் கூறப்பட்டு உள்ளது.

தேவனுடைய வார்த்தைகளை நாம் ஏற்றுக் கொண்டு இருதயத்தில் பத்திரப்படுத்தும் போது, தேவனை அறியும் அறிவைக் கண்டடையலாம் என்று. அதனால் என்ன உண்டாகிறது?! கர்த்தர் ஞானத்தைத் தருகிறார் என்று வேதம் கூறுகிறது. அதுவும் மெய்ஞ்ஞானத்தை. அதாவது உண்மையான ஞானத்தை!

அந்த ஞானம் எப்படிப்பட்டது?! அது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்து கொள்ளும் ஞானம்! அந்த ஞானம் தான் துன்மார்க்கருடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும், அந்தகார வழிகளுக்கும், மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் தப்புவிக்கிறதாம்.

ஆம் பிரியமானவர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு உலக ஞானத்தை மாத்திரம் கொடுக்காமல், இந்த (நீதிமான்களுக்கான) மெய்ஞ்ஞானத்தையும் இந்த மாதம் முழுவதும் கொடுப்பீர்களா? குறைந்தபட்சம் தினம் ஒரு நீதிமொழிகள் அதிகாரத்தையாவது மனப்பாடம் செய்யச் சொல்வீர்களா?

அப்பொழுது, உங்களை பிள்ளைகள் செம்மையானவர்களாக வளருவார்கள். ஆம், நீதிமொழிகள் 2ம் அதிகாரம் கூறுவது போல தேவனுடைய வார்த்தை, அந்த ஞானம் அவர்களை காப்பாற்றும். இல்லவிடில், உங்கள் பிள்ளைகளைக் குறித்து பின்னாளில் கண்ணீர் வடிக்க நேரிடலாம்.

"நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்து விடுவேன்" (ஓசியா 4:6) என்று தேவன் கூறி இருக்கிறாரே.

ஆம், சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள் என்று சொன்ன ஆண்டவர், இன்று உங்களைப் பார்த்து தான் அப்படிக் கூறுகிறார். தடுக்கப் போகிறீர்களா? இல்லை, அனுப்பப் போகிறீர்களா?

ஜெ.சந்திர சிங்
உன்னதரின் அன்பு, தூத்துக்குடி
--------------------------------------------------------------------
செய்திகளை வாட்சப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்: +91 809 809 79 78.

முந்தைய செய்திகளைப் படிக்க: https://www.facebook.com/UnnatharinAnbu2020
யூ-டியூப்:

This channel is dedicated to spread Gospel and to tell about Jesus, Christianity, the life within Jesus Christ, the way of life that leads to God and Heaven. This channel is created and maintained by J.Chandra Singh, Founder: Unnatharin Anbu (Love of God). The title, "Unnatharin Anbu (Love of God)"....

அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்! இன்றைய நாளில் "உழைக்கும் கரங்கள்" பற்றி நாம் பேசுவோம், போற்றுவோம். அது போல...
01/05/2026

அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்! இன்றைய நாளில் "உழைக்கும் கரங்கள்" பற்றி நாம் பேசுவோம், போற்றுவோம். அது போல, "ஜெபிக்கும் கரங்கள்" பற்றியும் இன்று நாம் அறிந்து கொள்வது மிகவும் நன்று.

ஆம், ஜெர்மனி நாட்டில் ஒரு ஏழைக் குடும்பத்தில் இரண்டு சகோதரர்கள் இருந்தனர். இரண்டு பேருக்கும் சிறந்த ஓவியராக வேண்டும் என்று ஆசை. ஆனால், குடும்ப வறுமை காரணமாக கல்லூரிக்குச் சென்று ஓவியம் கற்றுக் கொள்ள முடியாத நிலை.

ஆகவே, இரண்டு பேரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். முதலாவது ஒருவர் கல்லூரிக்குப் போய் ஓவியம் கற்றுக் கொள்ள மற்றவர் உழைத்து பணம் அனுப்ப வேண்டும். பின்பு அடுத்தவர் போய் கற்றுக் கொள்ள இவர் உழைத்துப் பணம் அனுப்ப வேண்டும் என்பதாக.

அப்படியே ஒருவர் ஓவிய கல்லூரிக்குச் செல்ல, மற்றவர் சுரங்கத் தொழிலாளியாக கடுமையாக உழைத்துப் பணம் அனுப்பினார். முதலாவது சகோதரர் படித்து முடித்து வந்து விட்டார். ஆனால், இரண்டாவது சகோதரரால் தற்போது ஓவியம் கற்றுக் கொள்ள செல்ல முடியவில்லை.

ஏனெனில், சகோதரனை ஓவியம் படிக்க வைக்க சுரங்கத் தொழிலாளியாக மிகக் கடுமையாக உழைத்ததால் அவர் கரங்கள் கரடு முரடாக மாறி இருந்தது. இனி அவரால் மென்மையான தூரிகைகளைப் பிடித்து ஓவியம் வரைய முடியாது என்ற நிலை ஆகி விட்டது.

அப்படி கரடு முரடாக மாறிப் போன கைகளை வானத்துக்கு நேராக ஏறெடுத்து தனது சகோதரன் ஒரு நாள் ஜெபிப்பதை, ஒரு ஓவியமாக வரைந்தார் அந்த ஓவியம் கற்ற சகோதரர். ஆம், தியாகமாய் வேலை செய்து, கரடுமுரடான அந்த ஜெபிக்கும் கரங்கள் தான் இன்று அநேக கிறிஸ்தவ பத்திரிக்கைகளிலும் வழிபாட்டுத் தளங்களிலும் பயன்படுத்தப்படும் "ஜெபிக்கும் கரங்கள்" படம்.

ஆம் பிரியமானவர்களே, ஓவியம் தீட்ட வேண்டும் என்று விரும்பிய அவரின் இரண்டு கரங்களையே இன்று மிகவும் பிரபலமான ஒரு ஓவியமாக தமக்காகப் பயன்படச் செய்தார், தேவன். இரண்டு கைகள் சேர்ந்தால் தான் ஓசை வரும் என்று கூறுவது போல, ஆல்பிரக்ட்(ALBRECHT) மற்றும் ஆல்பர்ட்(ALBERT) என்ற அந்த இரண்டு சகோதரர்களையுமே ஒருசேர பயன்படுத்தி ஆசீர்வதித்தார் தேவன்.

அது போல நமது தியாகத்திற்கும் ஒரு பலன் உண்டு பிரியமானவர்களே, திடன் கொள்ளுங்கள். ஆம், தன் குடும்பத்திற்காய் கருத்தாய் உழைக்கும் ஒரு பெண்ணைக் குறித்து வேதம் இப்படியாக வாழ்த்துகிறது, "அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது" (நீதி 31:31) என்று.

தியாகமாய் பிறருக்காக உழைக்கும் உங்களையும் தேவன் இன்று இப்படியே வாழ்த்துவார். குடும்பத்திற்காக, பிறருக்காக, சமூகத்திற்காக, நாட்டிற்காக நீங்கள் செய்த ஒவ்வொரு தியாகத்தையும் எண்ணி இந்த உழைப்பாளர் தினத்தில் தேவன் உங்களுக்கு நிறைவான பலனளிக்கும்படி ஜெபிக்கிறேன். ஆமென். ஆமென்.

ஜெ.சந்திர சிங்
உன்னதரின் அன்பு, தூத்துக்குடி
--------------------------------------------------------------------
செய்திகளை வாட்சப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்: +91 809 809 79 78.

முந்தைய செய்திகளைப் படிக்க: https://www.facebook.com/UnnatharinAnbu2020
யூ-டியூப்: https://www.youtube.com/

01/04/2026
தவறான வழியில் சேர்த்த பணத்தை, செல்வத்தை காணிக்கையாகச் செலுத்த முடியுமா? சவுல், ராஜாவாக இராதபடிக்கு தேவன் தள்ளியதற்கு அது...
28/03/2026

தவறான வழியில் சேர்த்த பணத்தை, செல்வத்தை காணிக்கையாகச் செலுத்த முடியுமா? சவுல், ராஜாவாக இராதபடிக்கு தேவன் தள்ளியதற்கு அதுவே காரணம்!

தேவன் சவுல் ராஜாவிடம், அமலேக்கியரையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் அவர்கள் பாவங்கள் நிமித்தம் அழிக்கக் கூறுகிறார். ஆனால் சவுலோ மோசமானவைகளை அழித்து விட்டு, நல்லவைகளை எடுத்து வைத்துக் கொள்கிறார்.

"சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல் தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக் குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப் போட மனதில்லாமல் தப்ப வைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப் போட்டார்கள்" (1 சாமு 15:9) என்று வேதத்திலே பார்க்கிறோம்.

அமலேக்கியருடைய அந்த ஆடுமாடுகள் நல்ல தரமானவைகளாக இருந்தாலும், தேவனுக்கு அருவருப்பானாவைகள். ஆனால், சவுலும் ஜனங்களும் அந்த நல்ல ஆடுமாடுகளை இச்சித்தார்கள். ஆகவே அதனை எடுத்து வைத்துக் கொண்டார்கள்.

அதில் இருந்து சிலவற்றை தேவனுக்கு பலி (காணிக்கை) செலுத்தி விட்டால் போதும்; தேவன் அமைதியாகி விடுவார் என்று நினைத்தார்கள்.

ஆகவே சவுல் ராஜா, "ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் என்றான்" (1 சாமு 15:21).

"அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம்" (1 சாமு 15:22) என்று கடிந்து கொள்கிறார்.

அது மாத்திரமல்ல, அதற்கு பின்பு தேவனுடைய ஜனத்தை ஆள தகுதியற்றவராக தேவன் நினைத்து, சவுலை ராஜாசனத்தில் இருந்து தள்ளி விடுகிறார்.

"நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்" (1 சாமு 15:23) சாமுவேல் தீர்க்கதரிசி.

ஆம் பிரியமானவர்களே, இன்று நீங்களும் கூட தேவன் அருவருக்கும் தவறான வழியில் பணத்தை சேகரித்துக் கொண்டு, தேவனுக்குக் காணிக்கை கொடுத்து சரி பண்ணிக் கொள்ளலாம் என்று நினைத்தால், தேவன் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்; நம்மையும் சேர்த்தே புறந்தள்ளுவார்.

இன்று உங்கள் காணிக்கை எப்படிப்பட்டதாக இருக்கிறது?

ஜெ.சந்திர சிங்
உன்னதரின் அன்பு, தூத்துக்குடி
--------------------------------------------------------------------
செய்திகளை வாட்சப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்: +91 809 809 79 78.

முந்தைய செய்திகளைப் படிக்க: https://www.facebook.com/UnnatharinAnbu2020
யூ-டியூப்: https://www.youtube.com/

எந்தப் பொருளை நாம் வாங்கினாலும், அது சுத்தமான பொருளாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம். விலையுயர்ந்த தங்கத்தை வாங்கினா...
24/03/2026

எந்தப் பொருளை நாம் வாங்கினாலும், அது சுத்தமான பொருளாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம். விலையுயர்ந்த தங்கத்தை வாங்கினாலும் சரி; அன்றாடம் வாங்கும் பாலாக இருந்தாலும் சரி.

அது போல, வேதமும் சுத்தமான பக்தி எது? எப்படிப்பட்டது? என்று நமக்குச் சுட்டிக் காட்டுகின்றது.

"திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக் கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது" (யாக் 1:27) என்று.

ஆதி அப்போஸ்தலர்களும் கூட சபைகளுக்கு இந்த இரண்டு காரியங்களையே முக்கியத்துவப்படுத்திக் கற்பித்தார்கள்.

அப்போஸ்தலனாகிய பவுலும் கூட அதனை உறுதிப்படுத்துகிறார். "8.விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பேதுருவுக்குக் கையளிக்கப்பட்டது போல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி அது எனக்கும் கையளிக்கப்பட்டதென்று அவர்கள் கண்டு;

9.எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்த போது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து,

10.தரித்திரரை நினைத்துக் கொள்ளும்படிக்கு மாத்திரம் சொன்னார்கள்; அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன்" (கலா 2) என்று கூறுகிறார்.

ஆம் பிரியமானவர்களே, இன்று உங்களுடைய பக்தி சுத்த பக்தியாக இருக்கிறதா? இல்லை, வெறும் பக்தியாக இருக்கிறதா?

சுத்த பக்தி இருக்கும் என்றால், நாமும் நமது தேவனைப் போல பரிசுத்தமுள்ளவர்களாக மாறி விடுவோம்.

ஜெ.சந்திர சிங்
உன்னதரின் அன்பு, தூத்துக்குடி
--------------------------------------------------------------------
செய்திகளை வாட்சப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்: +91 809 809 79 78.

முந்தைய செய்திகளைப் படிக்க: https://www.facebook.com/UnnatharinAnbu2020
யூ-டியூப்: https://www.youtube.com/

மத்தேயு 22ம் அதிகாரத்தில் நியாயசாஸ்திரி ஒருவர் இயேசு கிறிஸ்துவிடம் பிரதானமான கற்பனை எது என்று கேட்கிறார். அதற்கு இயேசு க...
22/03/2026

மத்தேயு 22ம் அதிகாரத்தில் நியாயசாஸ்திரி ஒருவர் இயேசு கிறிஸ்துவிடம் பிரதானமான கற்பனை எது என்று கேட்கிறார். அதற்கு இயேசு கிறிஸ்து இரண்டு கற்பனைகளைக் கூறுகிறார்.

ஒன்று தேவனிடம் முழு மனதோடு அன்பு கூறுவது. இரண்டாவது, உன்னைப் போல பிறனை நேசி என்பது. இந்த இரண்டு கற்பனைகளை நோக்கமாகக் கொண்டு தான் மற்ற அத்தனை கற்பனைகளும் கூறப்பட்டு இருக்கிறது என்பதாக இப்படிக் கூறுகிறார், "இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்" (மத் 22:40).

"உன்னைப் போல பிறனை நேசி" என்ற இரண்டாம் பிரதான கற்பனையை நாம் நன்கு அறிவோம். ஆனால், அதற்கு முன்பதாகவே தனது பிரசங்கத்தில் அதைக் குறித்து இயேசு கிறிஸ்து ஒரு முறை கூறி இருக்கிறார்.

மத்தேயு 7ம் அதிகாரத்திலேயே அதைக் குறித்து இன்னொரு வகையில் இயேசு கிறிஸ்து கூறுவதை நாம் வேதத்திலே காணலாம்.

"ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிராணமும் தீர்க்கதரிசனங்களுமாம்" (மத் 7:12) என்று.

ஜெ.சந்திர சிங்
உன்னதரின் அன்பு, தூத்துக்குடி
--------------------------------------------------------------------
செய்திகளை வாட்சப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்: +91 809 809 79 78.

முந்தைய செய்திகளைப் படிக்க: https://www.facebook.com/UnnatharinAnbu2020
யூ-டியூப்: https://www.youtube.com/

Address

Polepettai
Tuticorin
628002

Alerts

Be the first to know and let us send you an email when Unnatharin Anbu உன்னதரின் அன்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Unnatharin Anbu உன்னதரின் அன்பு:

Share