Panduranga Vittaleswarar temple, Vittalapuram, Tuticorin 628809

Panduranga Vittaleswarar temple,  Vittalapuram,  Tuticorin 628809 500 yrs old temple of Lord Vittal. The urchavar here belongs to Pandharpur obtained from Tamirabarani

31/05/2026

Ram Krushna Hari 🙏✨️
Dakshina Pandaripuram happily welcomes all devotees to VARUSHABISHEKAM & SHRI PANDURANGA VITTALESWARAR THIRUKALYANA Vaibhavam on 27th June, 2026 Vishwa Varakari Samsthan Janakiraman Ramakrishnan Juggu Revathi

✨️✨️✨️Dakshina Pandaripuram-  Thaayaar Darshan✨️✨️✨Dakshina Pandaripuram - Shri Rukmini thaayaar & Shri Sathyabhama Thaa...
28/04/2026

✨️✨️✨️Dakshina Pandaripuram- Thaayaar Darshan✨️✨️✨

Dakshina Pandaripuram - Shri Rukmini thaayaar & Shri Sathyabhama Thaayaar (Today's(Tuesday) Divya Darshan 28/04/2026)

️செவ்வாய்க்கிழமையான இன்று (28/04/2026) தக்ஷிண பண்டரீபுரமான விட்டலாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயிலில் அருள்புரிகின்ற தாயார் ஸ்ரீ ருக்மிணி மற்றும் தாயார் ஸ்ரீ சத்யபாமா அவர்களின் திவ்ய அலங்கார தரிசனம் 🙏🙏🙏

தக்ஷிண பண்டரீபுரமான விட்டலாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயிலில் அருள்புரிகின்ற தாயார் ஸ்ரீ ருக்மிணி மற்றும் தாயார் ஸ்ரீ சத்யபாமா இருவருக்கும் அனைத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 11 மணிக்கு மேல் திருமஞ்சனமும் சிறப்பு அலங்காரத்துடன் பூஜையும் நடைபெற்று பிரசாதமாக பால் பாயாசம் வழங்கப்பட்டு வருகின்றது. வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் திருக்கோவில் பகலில் மதியம் 1 மணி வரை நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

திருமணம் கைகூடவும் குழந்தை பேறு கிடைக்கவும் வேண்டும் பக்தர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தாயார் இருவருக்கும் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு தாயாரிடம் மனமார பிரார்த்தித்து அவர்களின் அருளால் பலன் பெறும்படி வேண்டிக் கொள்கிறோம்🙏🙏

ஸ்ரீ பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயில் ( தட்க்ஷிண பண்டரீபுரம்)
விட்டலாபுரம், தூத்துக்குடி மாவட்டம் - 628809.
தொலைபேசி எண்: 8946032479

இடம்: திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணாபுரம் , செய்துங்கநல்லூர் ஆகிய கிராமங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது தக்ஷிண பண்டரீபுரமான விட்டலாபுரம்.

1.வேலைக்காரியின் புத்ரரான விதுரரின் வீட்டில் கஞ்சி குடித்தான். ராக்ஷஸனான ஹிரண்யகசிபு வீட்டில் பிறந்த ப்ரஹ்லாதனையும் ரக்ஷ...
11/03/2026

1.வேலைக்காரியின் புத்ரரான விதுரரின் வீட்டில் கஞ்சி குடித்தான். ராக்ஷஸனான ஹிரண்யகசிபு வீட்டில் பிறந்த ப்ரஹ்லாதனையும் ரக்ஷித்தான்.

2. ஸந்த் ஸ்ரீ ரோஹிதாஸ் மஹாராஜுடன் செருப்புத் தைப்பதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். ஸந்த் கபீர்தாஸ் மஹாராஜுடன் சேர்ந்து துணி நெய்தான்.

3. ஸந்த் ஸ்ரீ ஸஜன கஸாயிக்காக மாமிஸம் விற்றான். ஸந்த் ஸ்ரீஸாவதாமாளி மஹாராஜுடன் தோட்ட வேலை செய்தான்.

4. ஸந்த் ஸ்ரீ நரஹரி ஸோனார் மஹாராஜுடன் நகை செய்வதற்காக துருத்தி ஊதினான். ஸந்த் ஸ்ரீசோகாமேளா மஹாராஜுடன் தம்பட்டம் அடித்தான்.

5. ஸந்த் ஸ்ரீ நாமதேவ் மஹாராஜ் வீட்டிலிருந்த ஜனாபாயுடன் வறட்டி தட்டினான். தர்மாவின் வீட்டில் தண்ணீர் நிறைத்தான், தரையைப் பெருக்கினான்.

6. ஸந்த் ஸ்ரீ நாமதேவ் மஹாராஜுடன் சங்கோசம் இல்லாமல் போஜனம் செய்தான். ஞானதேவருக்காக, குட்டிச் சுவற்றைப் பறக்கச் செய்தான்.

7. அர்ஜுனனுடைய ரதத்தின் ஸாரதியானான். சுதாமாவின் (குசேலரின்) அவலை ப்ரீதியுடன் சாப்பிட்டான்.

8. ஆயர்மார்களின் வீட்டில் ப்ரேமையுடன் பாடினான். பலி மஹாராஜனின் வாசலில் த்வாரபாலகனானான்.

9.ஹ்ருஷிகேசன், ஸந்த் ஸ்ரீ ஏக்நாத் மஹாராஜின் கடனை அடைத்தான். அம்பரீஷனுக்காக கர்பவாஸத்தை ஸஹித்தான்.

10. ஸந்த் ஸ்ரீ மீராபாயிக்காக விஷத்தை அருந்தினான். ஸந்த் ஸ்ரீ தாமாஜி சேட்டுக்காக (தலையாரியாக/சுமப்பவனாக) ஆனான்.

11. ஸந்த் ஸ்ரீ கோரகும்பார் மஹாராஜுக்காக மண் மிதித்தான். ஸந்த் ஸ்ரீ நரஸி மேஹ்தாவின் கடனை அடைத்தான்.

12. புண்டலீகனுக்காக (வந்தவன்) இன்று வரை நின்று கொண்டிருக்கிறான். ஆச்சர்யமான கார்யங்களைச் செய்த இந்த பக்தர்கள் தன்யர்கள்" என்று ஜகத்குரு ஸ்ரீதுகாராம் மஹாராஜ் கூறுகிறார்.

இராம கிருஷ்ண ஹரி🙏✨️

Ram Krishna Hari🙏🥰🥳Welcome all devotees to Dakshina Pandaripuram🙏✨️24/03/2026 - PANGUNI ROHINI UTSAVAM🙏✨️Shri Panduranga...
10/03/2026

Ram Krishna Hari🙏🥰🥳
Welcome all devotees to Dakshina Pandaripuram🙏✨️

24/03/2026 - PANGUNI ROHINI UTSAVAM🙏✨️

Shri Panduranga Vittaleswarar Temple,
Dakshina Pandaripuram (Vittalapuram),
Tuticorin - 628809,
Contact no : 8946032479

Location : The Divine Bhaktha kshetram Dakshina Pandaripuram is located between the villages Krishnapuram and Seydunganallur on Tirunelveli-Tiruchendur main road

Ram Krishna Hari🙏✨️

உரைநடையில் ஸ்ரீமத் பாகவதம் - 09ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா09. பாவம் தீர யாகம்         அதன்பிறகு யுதிஷ்டிரர் யாகங்களைச் செய்...
30/01/2026

உரைநடையில் ஸ்ரீமத் பாகவதம் - 09
ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா

09. பாவம் தீர யாகம்

அதன்பிறகு யுதிஷ்டிரர் யாகங்களைச் செய்தார். கிருஷ்ணரும் ஹஸ்தினாபுரியில் நீண்டகாலம் இருந்தபிறகு துவாரகைக்குக் கிளம்பிப் போனார். பாட்டன்மார்களான பாண்டவர்களால் சீராட்டி வளர்க்கப்பட்ட பரீட்சித் வளர்பிறைச் சந்திரனைப் போன்று விரைவாக வளர்ந்தான்.

யுதிஷ்டிரர் போரினால் ஏற்பட்ட பாவத்தைப் போக்கிக் கொள்ள அஸ்வமேதயாகம் செய்ய விரும்பினார். ஆனால் அதற்கான பொருள் இல்லை. ஏற்கெனவே போரினால் இழப்பை அடைந்திருக்கும் மக்களிடம் வரிவசூலிக்க விரும்பவில்லை அவர்.

“முன்னர் இமயமலையடிவாரத்தில் மருத்தமன்னர் யக்ஞம் செய்தார். அதில் மிகுந்த பொருட்களெல்லாம் அங்கே புதையுண்டு இருக்கின்றன. அவற்றைக் கொண்டு வந்து அஸ்வமேதம் செய்வாயாக” என்று அந்த இடத்தை ஸ்ரீவேதவியாச பகவான் யுதிஷ்டிரரிடம் கூறினார்.

அப்படியே, என்று கூறி அங்கு புறப்பட்டார் யுதிஷ்டிரர். கொஞ்சமான செல்வமல்ல, அங்கு இருந்தது. அங்கிருந்த தனத்தை 60 லட்சம் ஒட்டகங்கள், ஒருலட்சம் ரதங்கள், ஒரு லட்சம் குதிரைகளில் ஏற்றிக் கொண்டு வந்தார்கள். சுமையில்லாமல் வந்தவர் சக்ரவர்த்தியான யுதிஷ்டிரர் மட்டும் தான். பீமன் முதல் எல்லோருமே சுமக்க முடியாமல் சுமந்து வந்தார்கள்.

யுதிஷ்டிரர் மூன்று முறை அஸ்வமேதயாகம் செய்தார். யாகங்கள் நிறைவடையும் வரை கிருஷ்ணரும் அங்கு இருந்தார். பிறகு துவாரகைக்குப் புறப்பட்டார். உடன் அர்ஜுனனையும் அழைத்துக் கொண்டு போனார்.

-தொடரும்

✨️🌼✨️Dakshina Pandaripuram - Lakshaarchanai (25/01/2026)✨️🌼✨️24/01/2026 - Sudarshana Homam (at 09:00 am)25/01/2026 - lak...
18/01/2026

✨️🌼✨️Dakshina Pandaripuram - Lakshaarchanai (25/01/2026)✨️🌼✨️

24/01/2026 - Sudarshana Homam (at 09:00 am)

25/01/2026 - lakshaarchanai (starts at 08:00 am)

Followed by Pushpanjali in the evening

Then Followed by Lord PandurangaVitthal's veethi ula purappaadu

Dakshina Pandaripuram happily welcomes all devotees to take part in this divine occasion.

Ram Krishna Hari🙏✨️

Shri Panduranga Vittaleswarar Temple,
Dakshina Pandaripuram (Vittalapuram),
Tuticorin district, TamilNadu-628809,
Contact number: 8946032479

Location : This Bhakthi kshetram Vittalapuram is located between the villages Krishnapuram and Seydunganallur situated at Tirunelveli-Tiruchendur main road near Tirunelveli district in the state of TamilNadu.

உரைநடையில் ஸ்ரீமத் பாகவதம் - 08-ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா8. பரீட்சித் பிறந்தான் - பிழைத்தான்             கிரகங்களெல்லாம் ...
14/01/2026

உரைநடையில் ஸ்ரீமத் பாகவதம் - 08
-ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா

8. பரீட்சித் பிறந்தான் - பிழைத்தான்

கிரகங்களெல்லாம் அனுகூலமாக இருக்கும் சுபவேளையில், பாண்டுவம்சத்தைத் தாங்கும் சத்புத்திரனை உத்தரை பெற்றாள். பிறந்த குழந்தை அசைவற்றுக் கிடந்தது. உத்தரை அழுது புலம்பியபடி கிருஷ்ணரின் பாதங்களைப் பற்றிக் கொண்டாள். அவர் பாதங்களிலேயே குழந்தையைக் கொண்டு வந்து கிடத்தினாள். சுபத்ரை, திரௌபதி முதலானவர்களெல்லாம் கண்ணீரில் மூழ்கினார்கள்.

உத்தரை, “தாங்கள்தான் என் குழந்தையைக் காக்க வேண்டும்” என்று கதறினாள்.

சுபத்ரையும் “அண்ணா, எங்கள் வம்சத்து ஒரே விளக்கும் அணைந்து போவதா? அன்று என் மகன் அபிமன்யுவைத்தான் காக்காமல் போய்விட்டாய். இன்று அவன் மகனையாவது காப்பாற்று” என்று அழுதாள்.

கிருஷ்ணர் தன் காலடியில் கிடந்த குழந்தையைப் பார்த்தார். தம் திருப்பாதத்தால் மெள்ள அக்குழந்தையைத் தடவினார். குழந்தை அசைந்தது; கண் திறந்து பார்த்தது. இப்போதும் எல்லோர் கண்களும் நிறைந்தன. ஆனால் ஆனந்தக் கண்ணீரால். பாண்டு மகாராஜாவே திரும்ப வந்து பிறந்தது போலிருந்தான் குழந்தை. சக்கரவர்த்தி யுதிஷ்டிரரின் பேரனல்லவா, விமரிசையாக எல்லா வைதிகக்கிரியைகளும் நடந்தன. அளவற்ற தானங்கள் செய்யப்பட்டன. ஜாதகர்மா செய்ய வேண்டும். என்ன பெயர் சூட்டலாம் என்று முனிவர்கள் யோசித்தார்கள். கர்ப்பத்தில் இருக்கும்போதே பகவான் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டவன் இந்தக் குழந்தை. ஆகையால் இவனுக்கு அதையே பெயராக வைத்துவிடுவோம் என்று அப்பொருள்படும்படியாக விஷ்ணுராதன் என்று பெயர் வைத்தார்கள்.

யுதிஷ்டிரர், “பெரியோர்களே, இந்த குமாரன் மஹாத்மாக்களைப் பின்பற்றுவானா? நல்லவனாக விளங்குவானா?” என்று கேட்டார்.

யுதிஷ்டிரருக்கு தர்மபுத்திரர் என்னும் தன் பெயருக்கேற்றபடி எப்போதும் தர்மத்தை பற்றியேதான் கவலை. இந்தக் குழந்தைதான் நாளை பாண்டு வம்சத்தை விளங்கச் செய்ய வேண்டும். பொதுவாக பிறக்கும் பிள்ளைகள் நல்லவர்களாக இருக்க வேண்டுமல்லவா? இல்லாவிட்டால் வம்சத்துக்கே அழிவு ஏற்படும். துரியோதனன் ஒருவன் பிறக்காமலிருந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்குமே. அந்த ஒருத்தனால் எத்தனை அழிவுகள்! ஏன், சிறுவயது முதல், பாண்டுவின் பிள்ளைகளான இவர்கள் ஐவரும், இவர்களைப் பெற்ற தாயும், மணந்த திரௌபதியும் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் அவன் தானே காரணம். எத்தனை பேரின் அழிவுக்கு அவன் காரணமாகிவிட்டான். எனவே யுதிஷ்டிரர் கவலை நியாயமானது. பொதுவாகவே ஒரு குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையின் குணநலன்கள், வித்தை, அறிவு, அதிர்ஷ்டம், ஆயுள் முதலியவையெல்லாம் நல்லபடியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதிலும் அவன் ராஜகுமாரன், வம்சத்தின் ஒரே விளக்கு. அதனால் யுதிஷ்டிரர் கேட்டார்.

முனிவர்கள், “அரசே, இவன் குணநலன்களைப் பற்றிக் கூறவேண்டியதே இல்லை. அந்த ஸ்ரீராமரைப் போல சத்யசந்தனாக இருப்பான்; சிபிமன்னரைப் போன்று பெருங்கொடையாளியாக இருப்பான்; தன் தாத்தாவான அர்ஜுனனைப் போன்று நிகரற்ற வில்லாளியாக இருப்பான்; அனைவரையும் சம நோக்கோடு பார்ப்பதில் பிரம்ம தேவரைப் போன்றும், அருள் செய்வதில் சிவபெருமானைப் போன்றும் இருப்பான்.”

யுதிஷ்டிரருக்கு இதைக் கேட்டதும் பரம சந்தோஷம் ஏற்பட்டது. இனி கவலையில்லை. சில வருடங்களில் இவன் கையில் ராஜ்ஜியத்தை ஒப்படைத்துவிட்டு, நிம்மதியாக கண்ணன் கழலிணைகளில் மட்டுமே நாட்டம் கொண்டிருக்கலாம் என்று நிம்மதியடைந்தார். இப்போதே அப்படித்தான் இருக்கிறார். இவ்வளவு பெரிய போருக்குப் பிறகு ராஜ்ஜியத்தை அடைந்த அவர் அதனால் சிறிதும் சந்தோஷப்படவில்லை. கடமையெனவே அரசாண்டு வருகிறார். முதலிலேயே கிருஷ்ணரைப் பற்றித் தெரிந்தாலும், தன் மாமன்மகன் என்றும், தனக்கு வயதில் சிறியவன் என்றும் நினைத்துக் கொண்டிருந்துவிட்டார். கிருஷ்ணரும் இவரைத் தன்னைவிட மூத்தவர் என்பதற்காக வணங்குவார். ஆனால் என்று மரணப்படுக்கையிலிருந்த பீஷ்மர், இவரைப் பார்த்து, ‘கிருஷ்ணர் பரமாத்மா, அவரைப் போய் சாதாரணமாக எண்ணி தூதனாகவும் தேரோட்டியாகவும் செய்தாயே?’ என்று கேட்டாரோ அன்றே இவர் மனதில் ஒட்டியிருந்த கொஞ்சநஞ்ச அறியாமையும் நீங்கிவிட்டது. அது முதல் கிருஷ்ண பரமாத்மா என்று வாயால் அவர் நாமத்தை சொல்லிக் கொண்டும், மனதால் தினானித்துக் கொண்டும்தான் இருக்கிறார். ஆனால் அரச கடமைகள் குறிக்கிடுவதால் அதற்கு இடைவெளி ஏற்படுகிறது. இதோ உத்தமனான பேரன் பிறந்துவிட்டான். இனி உலகபாரம் குறையும் என்று சந்தோஷப்பட்டார்.

அடுத்து ஒன்று தோன்றியது. “பெரிய பூபாரம் சுமக்க வேண்டியவன் இவன். இவன் வாழ்க்கை எப்படியிருக்கும்?” என்று கேட்டார்.

“இவன் புகழ் நிலைத்து இருக்கும். தர்மத்தைக் காப்பதற்காக கலிபுருஷனை அடக்குவான்,” என்று முனிவர்கள் கூறியதைக் கேட்டவுடன் தர்மபுத்திரருக்கு அளவில்லாத ஆனந்தம். அடுத்து, “ஆயுள் எப்படி?” என்று கேட்டார்.

முனிவர்கள் தயங்கினார்கள். இதற்கான பதிலைச் சரளமாக சொல்ல முடியவில்லை. ஆனாலும் யுதிஷ்டிரர் திரும்பவும் கேட்கவே சொன்னார்கள். “இவன் மரணம் கங்கைக்கரையில் ஏற்படும். ஒரு முனிகுமாரனின் சாபத்துக்காளாகி மரணம் ஏற்படும். மரணத்தறுவாயில் சுகமுனிவர் வந்து ஸ்ரீமத்பாகவதத்தை இவனுக்குக் கூறுவார். அதைக்கேட்ட பிறகு தட்சகனால் தீண்டப் பட்டு இறப்பான். ஆனால் இவன் இறக்கும்போது மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு ஒரே மனமாகத் தியானித்து விஷ்ணுவின் பாத கமலங்களை அடைவான்” என்றார்கள்.

இதைக் கேட்ட யுதிஷ்டிரருக்கு வருத்தம் ஏற்படவில்லை. பிறந்தவர்களுக்கு இறப்பு நிச்சயம். இந்தக் குழந்தை நல்லவனாகவும் வல்லவனாகவும் வாழப் போகிறான். வாழ்நாளில் தாங்கள் பட்ட கஷ்டங்களைப் போன்று எதுவும் படப் போவதில்லை. ஆயுள் முடிவு, சாபத்தால் என்னும்போது வருத்தமாக இருந்தாலும்கூட விஷ்ணுபதங்களை அடைவான் என்பதைக் கேட்டவுடன் அவருக்கு வருத்தம் நீங்கி விட்டது. ஜீவன் எதை அடைய வேண்டுமோ, அதை அடைந்து விடுவான் என்பதில் அவருக்குத் திருப்தியே ஏற்பட்டது.

மேலும் அக்குழந்தை கர்ப்பத்திலிருக்கும் போது பத்தாவது மாதம் சதுர்புஜனான பகவானுடைய தரிசனம் கிட்டியது. பிறந்த பிறகு, தான் கண்ட திவ்ய புருஷன் இவரா, இவரா என்று ஒவ்வொருவரையும் உற்றுப் பார்த்து பரீட்சித்தது. இக்குழந்தை ஒவ்வொருவரையும் பரீட்சிப்பதுபோல் பார்க்கிறதே என்று எல்லோரும் பரீட்சித் என்றே அழைக்கலானார்கள். மேலும் க்ஷீணமடைந்து போன பாண்டவ குலத்தைக் காக்கப் பிறந்தவனாதலால் பரீட்சித் என்ற பெயர் பிரசித்தியாயிற்று.

-தொடரும்

✨️🙏✨️Dakshina Pandaripuram- Koodaaravalli✨️🙏✨️Ram Krishna Hari 🙏✨️
10/01/2026

✨️🙏✨️Dakshina Pandaripuram- Koodaaravalli✨️🙏✨️

Ram Krishna Hari 🙏✨️

உரைநடையில் ஸ்ரீமத் பாகவதம் - 07-ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா7. பீஷ்மரின் இறுதி                யுதிஷ்டிரர் குருக்ஷேத்திர யுத்...
03/01/2026

உரைநடையில் ஸ்ரீமத் பாகவதம் - 07
-ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா

7. பீஷ்மரின் இறுதி

யுதிஷ்டிரர் குருக்ஷேத்திர யுத்தத்தால் ஏற்பட்ட உயிர் நாசத்தைக் கண்டு மிகவும் துயரத்தில் இருந்தார். வேதவியாசரும், மற்ற முனிவரும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவருக்கு மனத் தெளிவு ஏற்படவில்லை. கிருஷ்ணரும் சாஸ்திரங்களை மேற்கோள் காட்டினார். ஆனால் பிரயோஜனமில்லை. “கிருஷ்ணா, தர்மயுத்தத்தில் எதிரிகளைக் கொல்வது சரி என்பது சாஸ்திரம் கூறும் தர்மம்தான். ஆனாலும் எனக்கு ஏனோ மன சாந்தி கிடைக்கவில்லை. பாவம் ஏற்பட்டிருந்தாலும் பாவங்களைப் போக்கும் யாக யக்ஞங்களைச் செய்துவிடலாம் என்கிறார்கள். ஆனால் பந்துக்களை இழந்து விட்டுத் தவிக்கும் பெண்களுக்கு அதனால் பரிகாரம் ஏற்பட்டு விடுமா?” என்று புலம்பினார்.

பீஷ்மர் அப்போது அம்புப்படுக்கையில் இருந்தார். எனவே அவரைக் காண்பதற்காக பாண்டவர்களும், வியாசர் தௌம்யர் முதலான ரிஷிகளும் கிளம்பினார்கள். கிருஷ்ணரும் அர்ஜுனனுடன் தேரில் சென்றார். அங்கு போனதும் பாண்டவர்கள் தங்கள் பிதாமகரான பீஷ்மரை, அம்புப்படுக்கையில் இருந்தவரை, வணங்கினார்கள். கிருஷ்ணரும் வணங்கினார்.

தன்னை வணங்கும் கிருஷ்ணர் சாட்சாத் பகவான் என்பதை பீஷ்மர் நன்கு அறிவார். அவரைத் தம் உள்ளத்தில் வைத்துப் பூஜிப்பவர் பீஷ்மர். இப்போது எதிரில் வந்த அவரைக் கண்டு பூஜித்தார். தன்னை வணங்கிவிட்டு வினயத்தோடு அமர்ந்த பாண்டவர்களைக் கண்டு அன்பு பெருக்கால் கண்ணீர் விட்டார். “என்ன அநியாயம், எவ்வளவு கஷ்டப்பட்டு விட்டீர்கள் நீங்கள். தர்மத்தையே துணையாகக் கொண்ட உங்களுக்கு பகவானே கூட இருந்தும்கூட எவ்வளவு கஷ்டம்!

“வாழ்வதற்காக நீங்கள் பட்ட கஷ்டங்கள்தான் எத்தனை யெத்தனை! மாபெரும் வீரனான பாண்டு இறந்தபின் சிறு குழந்தைகளான உங்களை வைத்துக் கொண்டு எத்தனைமுறை எத்தனை கஷ்டங்களுக்கு ஆளானாள் குந்தி! பாவம் அப்போது அவளுக்கும் சிறு வயது. காலவசத்தால் நீங்கள் பல கஷ்டங்களுக்காளானீர்கள். தர்மபுத்திரன் மன்னனாகவும் கதை ஏந்திய பீமன் காவலனாகவும், காண்டீபம் வில்லாகவும் அர்ஜுனன் வில்லாளியாகவும், கிருஷ்ணர் துணைவராகவும் இருந்த இடத்திலுமல்லவா ஆபத்துக்கள் ஏற்பட்டன? மகா யோகிகளாலும் அறிய முடியாத பகவானுடைய லீலையை எந்த மனிதன்தான் அறியமுடியும்? யுதிஷ்டிரா, நடந்ததெல்லாம் தெய்வத்தின் கட்டளை என்று மனதை திடப்படுத்திக் கொள். இனி மகுடம் சூடி மக்களை நல்ல முறையில் காப்பாற்றுவாயாக” என்று கூறிய பீஷ்மர் மேலும் பல ராஜ தர்மங்களையும் இன்னும் சாஸ்திரங்களையும் யுதிஷ்டிரருக்குக் கூறினார். அதில் யுதிஷ்டிரரின் மனம் தெளிந்தது.

பிறகு பீஷ்மர் கிருஷ்ணரைப் பற்றி அறிந்தும் அறியாதவர்களாக இருக்கும் பாண்டவர்களைத் தெளிவிக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே மேலும் பேசலுற்றார்.

“இந்த கிருஷ்ணர் சாட்சாத் பகவான். இவர்தான் ஆதிநாராயணர். தன்னை மறைத்துக் கொண்டு யாதவர்களிடையே வாழ்கிறார். இவரது பெருமையை சிவபெருமான் அறிவார்; தேவரிஷியான நாரதர் அறிவார்; சாட்சாத் பகவானேயான கபிலர் அறிவார். அப்படிப்பட்டவரை நீங்கள் மாமன் மகனாகவும், அன்புக்குரியவனாகவும், நண்பனாகவும், உங்களிடம் இரக்கம் கொண்டவனாகவும் நினைக்கிறீர்கள். தூது அனுப்புவதற்கும் தேரை ஓட்டுவதற்கும்கூட அல்லவா உபயோகப்படுத்திக் கொண்டீர்கள். ஆனால் பரமாத்மாவான அவருக்கு உயர்வு தாழ்வு என்ற பேதம் இல்லை. அவரை இனிப் புரிந்து கொள்ளுங்கள். அவருக்குப் பக்தர்களிடம் உள்ள பக்தியைப் பாருங்கள், உயிரை விடப் போகின்ற எனக்கு, தரிசனம் கொடுக்க வேண்டியே இங்கு வந்திருக்கிறார்” என்றார்.

தக்கநேரம் வந்தது. பீஷ்மர் தம் மனதை அடக்கிக் கொண்டு, முன்னால் நிற்கும் கிருஷ்ணரிடமே பார்வையை நிலைநிறுத்தியவராக துதித்தார்.

“சுருண்ட முடியும் மூவுலகையும் கவரும் அழகும் கொண்ட அர்ஜுன நண்பனிடத்தில் நிஷ்களங்கமான பக்தி எனக்கு இருக்கட்டும்.

நண்பனுடைய வார்த்தையைக் கேட்டு, இரு படைகளுக்குமிடையே தேரைக் கொண்டு போய் நிறுத்தி, எதிரிப்படையைப் பார்த்து, தம் பார்வையாலேயே அவர்களின் ஆயுளை அபகரித்தவராகிய பார்த்தசாரதியிடத்தில் பக்தி எனக்கு இருக்கட்டும்.

ஆயுதமெடுப்பதில்லை என்ற தனது சபதத்திலிருந்தும் பிறழ்ந்து, ஆயுதம் எடுக்கச் செய்கிறேன் என்ற என் சபதத்தை நிறைவேற்றுவதற்காக, தேரிலிருந்தும் குதித்து சக்கராயுதத்தை ஏந்தியவராக, யானையைக் கொல்லப் பாய்ந்து வரும் சிங்கத்தைப் போல உத்தரீயம் நழுவ பூமி அதிர என்னை நோக்கி வந்த தயாமூர்த்தியிடம் பக்தி எனக்கு இருக்கட்டும்.

கையில் சாட்டையையும், குதிரைக் கடிவாளத்தையும் பிடித்திருந்த இவரது அழகையன்றோ கண்கள் காண வேண்டும். மரணத்தறுவாயிலுள்ள எனக்கு இவரிடத்தில் பக்தி இருக்கட்டும்.

யுத்த சமயத்தில் இவரைப் பார்த்துக் கொண்டே இறந்த வீரர்கள் சாரூப முக்தியையன்றோ அடைந்திருப்பர். (பகவானுடைய ரூபம் போன்றே ரூபமடைந்து அவரருகில் வசிக்கும் நிலை சாரூப முக்தி எனப்படும்.)

சூரியன் ஒருவனே. ஆனால் ஒவ்வொருவர் கண்ணிலும் வெவ்வேறாகத் தெரிவது போன்று ஸ்ரீகிருஷ்ணரும் தான் பிறப்பற்றவராயினும் பிறப்பெடுத்த ஒவ்வொருவரின் உள்ளந்தோறும் உறைபவனாய் உள்ளார். அந்த பகவானை நான் பேத பாவ மோகத்தை அடையாதவனாக அறிந்துள்ளேன்”

இவ்வாறு கிருஷ்ணரிடத்திலேயே தன் மனம் வாக்குககளை நிறுத்தி, அவரையே பார்த்தபடி மூச்சை நிறுத்தினார். அவரது ஆத்மா தன்னுலகை அடைந்தது. பீஷ்மர் நிஷ்களப் பிரம்மத்தை அடைந்ததைக் கண்டு அங்கு அனைவரும் ஆழ்ந்த மௌனத்தில் ஆழ்ந்தனர்.

முக்தியைப் பெற்றவர்களுக்கு உலகநடைமுறையாகச் செய்யப்படும் அந்திமக் கிரியைகள் எதுவும் தேவையில்லை என்றாலும் வழக்கத்தை விடவேண்டாம் என்று யுதிஷ்டிரர் அனைத்தையும் செய்தார்.

பின் ஹஸ்தினாபுரம் சென்று அரசை ஏற்று ஆட்சி செய்யத் தொடங்கினார். தர்ம ஆட்சியில் நாடு எப்படி சுபிட்சமாக இருக்குமோ அப்படியே இருந்தது தர்மருடைய ஆட்சியில். வேண்டிய வரை மழை பெய்தது; வேண்டிய அனைத்தும் விளைந்தன; பால்வளமும் அதிகமாக இருந்தது. மக்கள் உடல் நோய்களற்றவர்களாகவும், மனக்கவலையற்றவர்களாகவும் வாழ்ந்தார்கள். அதிகக் குளிரோ, அதிக வெப்பமோ அவர்களை வாட்டவில்லை.

ஸ்ரீகிருஷ்ணர் சிறிது நாட்கள் ஹஸ்தினாபுரியில் தங்கியிருந்து பின் புறப்பட்டுச் சென்றார்.

-தொடரும்

Address

Vittilapuram
Tuticorin
628809

Opening Hours

Monday 8:30am - 11:30am
5:30pm - 7:30pm
Tuesday 8:30am - 11:30am
5:30pm - 7:30pm
Wednesday 8:30am - 11:30am
5:30pm - 7:30pm
Thursday 8:30am - 11:30am
5:30pm - 7:30pm
Friday 8:30am - 11:30am
5:30pm - 7:30pm
Saturday 8:30am - 11:30am
5:30pm - 7:30pm
Sunday 8:30am - 11:30am
5:30pm - 7:30pm

Telephone

+918946032479

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panduranga Vittaleswarar temple, Vittalapuram, Tuticorin 628809 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Panduranga Vittaleswarar temple, Vittalapuram, Tuticorin 628809:

Share

Category