உவரி சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை

  • Home
  • India
  • Tisaiyanvilai
  • உவரி சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை

உவரி சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை அன்பே சிவம்!

உவரி சுயம்புலிங்கசுவாமி பக்தர்கள் குழுமம் (வலைதளங்களில் மட்டும்).

Uvari Suyambulingaswamy Devotees | This website is merely operated by like-minded individuals who share a common devotion. It is important to note that it is not a registered association, organization, or spiritual entity. This online platforms for devotees are not directly connected to the temple's management. If you have any opinions or thoughts, it is best to visit the temple administration office in person. These online platforms are created solely for connecting devotees who share a similar devotion and do not handle administrative matters. They provide a virtual experience of darshan but are not involved in temple administration. If you have any concerns, it is advisable to express them directly at the temple administration office.

எத்தனை துயரங்கள் எதிர்வந்த போதிலும், அத்தனை துயரையும் அழித்திடும் வித்தகா!அவன் இன்றி ஓர் அணுவும் அசைவதில்லை, அவன் அருளுக...
24/08/2026

எத்தனை துயரங்கள் எதிர்வந்த போதிலும், அத்தனை துயரையும் அழித்திடும் வித்தகா!

அவன் இன்றி ஓர் அணுவும் அசைவதில்லை, அவன் அருளுக்கு ஈடு இணை ஏதுமில்லை!

10ம் ஆண்டில் #உவரி பக்தர்பேரவை...

உவரி சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை, #10ம்ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது..!!!

சுவாமியின் புகழை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதற்கு தான் இந்த உவரி ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை வலைதளங்கள் என்பதை கருத்தில் கொண்டு நமது வலைதளங்களுக்கு தொடர்ந்து 10-வது ஆண்டாக ஆதரவளித்து எங்களுடைய எல்லா செயல்களிலும் எங்களுடன் சேர்ந்து பயணிக்கும் நமது பக்தர்பேரவை பக்தர்கள் அனைவருக்கும் நன்றிகள். இந்த வலைதளங்கள் அடுத்தடுத்து சிறப்புடன் வளர உங்கள் அனைவரின் வாழ்த்துக்களோடு...

தொடர்ந்து நமது #உவரி_பக்தர்பேரவை வலைதளங்களில் இணைந்திருங்கள்..!!!

31.08.2017 ஆவணி - 14, மாலை 6 மணிக்கு, பிரம்மசக்தியம்மன் கோவில் கொடைவிழா #புதன்கிழமை முடிந்த கணத்தில் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

Uvari Suyambulingaswamy Devotees | This website is merely operated by like-minded individuals who share a common devotion. It is important to note that it is not a registered association, organization, or spiritual entity.

This online platforms for devotees are not directly connected to the temple's management. If you have any opinions or thoughts, it is best to visit the temple administration office in person. These online platforms are created solely for connecting devotees who share a similar devotion and do not handle administrative matters. We provide a virtual experience of darshan but are not involved in temple administration. If you have any concerns, it is advisable to express them directly at the temple administration office.

With gratitude, our devotees join us in all our activities and embark on this journey together. To all devotees, our sincere thanks. May these social media platforms continue to flourish and grow with your blessings...

Keep engaging with our online social media platforms..!!!

Thank you!

ஓம் நமசிவாய.!

24/08/2026

🥹
..

உலகின் அனைத்து #பிரம்மசக்தியம்மன் கோவில்களுக்கும் மூலக்கோவில்.!!!

தலைப்பு : "பிரமசக்தியம்மன் கதை ஒரு திறனாய்வு" - சிவ. விவேகானந்தன்.

தென்தமிழகத்தில் கிராம தெய்வங்களில் பிரமசக்தியம்மன் வழிபாடு குறித்து கேரளப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள்.!

முழுநூல் PDF_FILE இலவசமாக பெற விரும்புவோர் : பக்தர்பேரவை Admin Whatsapp எண்ணிற்கு 7548816375 message செய்யவும்.

பிரம்மசக்தி அம்மனுக்கென்று பூமியில் தோன்றிய முதல் திருத்தல சிறப்புகள்..!

#உவரிநாயகி அருள்தரும் ஸ்ரீ பிரம்மசக்தி அம்பாள் திருக்கோவில்...!!!

முன்னடி சுவாமி சன்னதியை அடுத்து தனி கோயிலில் உவரிநாயகி அருள்தரும் ஸ்ரீபிரம்மசக்தி அம்பாள் அருள்பாலிக்கிறாள்.

நாளெல்லாம் பரமனுக்கு  #திருநாளே..!பிரதோஷ நாளில் உவரிக்கு சுற்றுவட்டார ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் சுவாமி தரி...
24/08/2026

நாளெல்லாம் பரமனுக்கு #திருநாளே..!

பிரதோஷ நாளில் உவரிக்கு சுற்றுவட்டார ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் சுவாமி தரிசனம், பஜனைகளில் பங்கு பெற்று அருளைப் பெறுவர்.

அந்த வகையில் ஆவணி மாதத்திற்கான பிரதோஷ வழிபாடு நாளை நடைபெறுகிறது. அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சுவாமியின் அருளைப் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

பிரதோஷ வழிபாடு :

காலை 4.30 மணி - நடைத்திறப்பு.
காலை 6 மணி - உதயமார்த்தாண்ட பூஜை.
மதியம் 11:30 மணி - உச்சிக்கால பூஜை.
மதியம் 12 மணி - அன்னதானம்.
மாலை 4.00 மணி - பஜனை வழிபாடு.
மாலை 5 மணி - அபிஷேக ஆராதனைகள்.
மாலை 5.15 மணி - சுவாமி வீதிஉலா.
மாலை 5.30 மணி - பிரசாதம் வழங்குதல்.
இரவு 7 மணி - சாய்ரஷ்சை பூஜை.
இரவு 8:30 மணி - அர்த்தசாம பூஜை.
இரவு 9 மணி - நடை திருக்காப்பிடுதல்.

உவரி அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோயிலில் பிரதோஷம் தோறும் மாலை கூட்டுவழிபாடு (பஜனை) இறை அருளால் வெகு சிறப்பாக பல வருடங்கள் நடந்து வருகின்றது.

திருமுறைப் பாடல்களை அன்பர்கள் பாடுவதைக் கேட்கக் கேட்க நமது உள்ளம் இறை அருளினால் நிரம்பி அமைதியில் மகிழ கூட்டுவழிபாட்டில் உணர்வது கண்கூடு.

மாலை 5 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சுவாமி- அம்பாள் #விடை வாகனத்தில் வீதி உலா வரும் அருள்நிரை காட்சிகளும் நடைபெறும்.

பக்தர்கள் அனைவரும் உள்ளத்தை அமைதியில் அமிழ்த்தும் திருமுறைப் பாடல்களைப் பாடும் இந்த பிரதோஷ வழிபாட்டில் கலந்து, விடை வாகனத்தில் சுவாமி-அம்பாளைக் கண்டு இறை அருளைப் பெற #உவரி திருத்தலம் வருக...!

அனைவரும் வருக! அய்யன் அருள் பெறுக!

திருச்சிற்றம்பலம்.!!!

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!

நன்றி!

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

23/08/2026

காண்பதற்கரிய #உவரி திருக்கோவில் பழைய காட்சிகள்..!

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட பல தென் மாவட்டங்களில், லிங்கமூர்த்தி, லிங்கம், லிங்கப்பாண்டியன், சுயம்புலிங்கம், சுயம்புமூர்த்தி என்றெல்லாம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவார்கள். இவர்கள் எல்லோரும் உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமியைக் கண்கண்ட தெய்வமாக வழிபடுபவர்களாக இருப்பார்கள்; இவர்களின் குலதெய்வம் அல்லது முன்னோர் காலத்திலிருந்தே சுயம்புலிங்கசுவாமியை வழிபடுபவர்களாக இருப்பர். இவர்களின் இஷ்ட தெய்வம் உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமியாகவும் பிரம்மசக்தி அம்மனாகவும் இருக்கும்!

தென் மாவட்டங்களில் வாழும் அன்பர்களும், அந்த மாவட்டங்களில் இருந்து பிழைப்புக்காக வெளியூரில் வசிக்கிற அன்பர்களும் சதாசர்வ காலமும் நினைப்பதும் வேண்டுவதும், உவரி சிவனாரைத்தான்!

திருச்செந்தூரின் கடலோரத்தில் பிள்ளை முருகப்பெருமான் அருளாட்சி நடத்த... உவரி கடற்கரையில் அழகு மிளிரும் ஆலயத்தில் இருந்தபடி, அருளாட்சி நடத்துகிறார் சிவனார்.

Credits : FriendsTv & திரு.ஆறுமுகநயினார்.

23/08/2026

காண்பதற்கரிய #உவரி திருக்கோவில் பழைய காட்சிகள்..!

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட பல தென் மாவட்டங்களில், லிங்கமூர்த்தி, லிங்கம், லிங்கப்பாண்டியன், சுயம்புலிங்கம், சுயம்புமூர்த்தி என்றெல்லாம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவார்கள். இவர்கள் எல்லோரும் உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமியைக் கண்கண்ட தெய்வமாக வழிபடுபவர்களாக இருப்பார்கள்; இவர்களின் குலதெய்வம் அல்லது முன்னோர் காலத்திலிருந்தே சுயம்புலிங்கசுவாமியை வழிபடுபவர்களாக இருப்பர். இவர்களின் இஷ்ட தெய்வம் உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமியாகவும் பிரம்மசக்தி அம்மனாகவும் இருக்கும்!

தென் மாவட்டங்களில் வாழும் அன்பர்களும், அந்த மாவட்டங்களில் இருந்து பிழைப்புக்காக வெளியூரில் வசிக்கிற அன்பர்களும் சதாசர்வ காலமும் நினைப்பதும் வேண்டுவதும், உவரி சிவனாரைத்தான்!

திருச்செந்தூரின் கடலோரத்தில் பிள்ளை முருகப்பெருமான் அ�

Address

Uvari
Tisaiyanvilai
627651

Telephone

+917548816375

Website

Alerts

Be the first to know and let us send you an email when உவரி சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to உவரி சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை:

Shortcuts

Share

Category