உவரி சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை

  • Home
  • India
  • Tisaiyanvilai
  • உவரி சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை

உவரி சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை அன்பே சிவம்!

உவரி சுயம்புலிங்கசுவாமி பக்தர்கள் குழுமம் (வலைதளங்களில் மட்டும்).

Uvari Suyambulingaswamy Devotees | This website is merely operated by like-minded individuals who share a common devotion. It is important to note that it is not a registered association, organization, or spiritual entity. This online platforms for devotees are not directly connected to the temple's management. If you have any opinions or thoughts, it is best to visit the temple administration off

ice in person. These online platforms are created solely for connecting devotees who share a similar devotion and do not handle administrative matters. They provide a virtual experience of darshan but are not involved in temple administration. If you have any concerns, it is advisable to express them directly at the temple administration office.

உவரி  #வைகாசி விசாகத்திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை வைக்கிறோம்.!உவ...
22/05/2026

உவரி #வைகாசி விசாகத்திருவிழாவிற்கு வருகைதரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை வைக்கிறோம்.!

உவரி அருள்மிகு சுயம்புலிங்கசுவாமி திருக்கோவில், #திசையன்விளை.

தென்கடலோரத்தில் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக மிகவும் புகழ்பெற்ற கோவில்கள் #உவரி மற்றும் #குலசை..!!!

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கவனத்திற்கு...

கடந்த சிவராத்திரியன்று கழிப்பறை உட்பட முக்கிய அடிப்படை வசதிகள் இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பக்தர்கள் சார்பில் மிக முக்கியமான சிலகோரிக்கைகளை நெல்லை மாவட்ட நிர்வாகம் ஆட்சியர், திசையன்விளை வட்டார வருவாய்த்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கும் எங்களின் பணிவான கோரிக்கைகளை முன் வைக்கின்றோம்.

திருக்கோவில் வளாகத்தில் உள்ள கழிப்பறை வசதிகள் எதுவும் சரியான முறையில் இயங்கவில்லை. இதனை முறைப்படுத்த நடவடிக்கை தேவை.

திருவிழா காலங்களில் அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி, குளியலறை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். பக்தர்களுக்குத் தேவையான சுகாதார வசதி, குடிநீர் வசதி, மருத்துவ சேவை, பேருந்து வசதி, பாதுகாப்பு வசதி பிற அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டுகிறோம்.

DrChristopher TVK Tirunelveli Actor Vijay

உவரி  #வைகாசி விசாகத்திருவிழா!அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் - வைகாசி விசாகத் திருவிழா - 2026திருவிழா நாட்கள...
22/05/2026

உவரி #வைகாசி விசாகத்திருவிழா!

அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் - வைகாசி விசாகத் திருவிழா - 2026

திருவிழா நாட்கள்: 29-05-2026 (வெள்ளிக்கிழமை) முதல் 30-05-2026 (சனிக்கிழமை) வரை.

🔹 வைகாசி 15-ம் தேதி (29-05-2026) வெள்ளிக்கிழமை

மாலை 4.00 முதல் 7.00 மணி வரை: 1008 சுமங்கலி பூஜை (நடத்துபவர்: A. முத்துசெல்வி).

மாலை 7.00 மணி: பரதநாட்டியம்.

இரவு 10.00 மணி: சமய சொற்பொழிவுகள்:
புலவர் C. சுயம்புராஜன் ("திருவாசகம் தந்த மாணிக்க வாசகர்").

S. தங்கசுவாமி ("திருநாவுக்கரசர் தந்த உழவாரப்பணியும் இறைவன் திருவருளும்").
இரவு 12.00 மணி: அகில ராகம் கலைக்குழு வழங்கும் மாபெரும் இசைப்பட்டிமன்றம் (நடுவர்: இன்னிசை வேந்தன் பொன்சுப்பையா).

🔹 வைகாசி 16-ம் தேதி (30-05-2026) சனிக்கிழமை - விசாகத் திருநாள்

காலை முதல் இரவு வரை: திருக்கோவில் சார்பாக பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம்.

காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை: ஓம் நமச்சிவாய திருவாசக சபை சிவனடியார் திருக்கூட்டம் நடத்தும் திருவாசக முற்றோதுதல்.

மாலை 4.00 முதல் 7.00 மணி வரை: மங்கள இசை - கேரளா ஒச்சிறை சகோதரிகளின் நாதஸ்வரம் மற்றும் சிறப்பு தவில்.

மாலை: ஆன்மீக சிறப்புரை - "உவரி சுயம்புலிங்கசுவாமி யுகங்களின் மகிமை" (வழங்குபவர்: சிவத்திரு. கனகராஜன்).

மாலை 7.00 முதல் 10.00 மணி வரை: சமயச்சொற்பொழிவுகள்:
N.M. ஜோதிராமலிங்கம் ("அம்மையப்பரின் திருவருள்").

திருத்தொண்டர் V. திருமணி ("பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து அருளும் எம்பெருமான்").
பேராசிரியர் K. கண்ணன் ("ஞானப்பால் உண்ட ஞானசம்பந்தர்").

மாலை: மாபெரும் சாதனைப் பட்டிமன்றம் - "வாழ்வியல் நியதிகளையும் அரசின் முதல் மக்கள் வரை தற்காலத்துக்குத் தேவையான ஒழுக்கங்களையும் பெரிதும் போதிப்பது - எது? (இராமாயணமே / மகாபாரதமே / திருத்தொண்டர் புராணமே)" (நடுவர்: டாக்டர். K. கதிரேசன்).

இரவு 11.00 மணி: SR சந்திரன் குழுவினர் வழங்கும் பக்தி இன்னிசை கச்சேரி.

இரவு 1.00 மணி: சுவாமி வீதி உலா வருதல், வானவேடிக்கை மற்றும் விழாவின் முக்கிய நிகழ்வான "மகர மீனுக்கு காட்சி கொடுத்தல்".

வேண்டுவோருக்கு வேண்டியதை வழங்கும் சுயம்புலிங்க சுவாமியின் வைகாசி விசாகத் திருவிழாவில் அன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு இறைவனின் அருள்பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்!

 #உவரிநாயகி அருள்தரும் பிரம்மசக்தி அம்பாள் திருக்கோவில் - உவரி.!பொதுவாக உவரியில் பிரம்மசக்தி அம்மனுக்கு உகந்ததாக  #பச்சை...
20/05/2026

#உவரிநாயகி அருள்தரும் பிரம்மசக்தி அம்பாள் திருக்கோவில் - உவரி.!

பொதுவாக உவரியில் பிரம்மசக்தி அம்மனுக்கு உகந்ததாக #பச்சை நிறம் அறியப்படுகிறது.

அம்பாளிடம் வேண்டுதல்களை வைத்து, நிறைவேறியவுடன் #பச்சை_பட்டு எடுத்து வைத்து நேர்ச்சை செலுத்துகின்றனர்.

உகந்த நாள் - புதன்கிழமை.
உகந்த நிறம் - பச்சை.

உவரிநாயகி அருள்தரும் ஸ்ரீபிரம்மசக்தி அம்மனை பஞ்சமி, #புதன்கிழமை, தமிழ் மாத கடைசி வெள்ளி, விசாகம், புனர்பூச நட்சத்திர நாட்களில் கருவறை தீபத்தில்
நல்எண்ணெய் சேர்த்து, வெண்தாமரை மலர் சூட்டி வழிபட கல்வியில் சிறந்து
விளங்கலாம் என்கிறார்கள். இங்கு சுயம்புலிங்க சுவாமியை வழிபட்டு, ப்ரம்மசக்தி அம்மன் சந்நதியில் குழந்தைகளுக்கு அட்சரப்பியாசம்
(குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்வு)செய்து வழிபட்டால் குழந்தைகள்
மேதைகளாய் இருப்பர் என்கிறார்கள்.

இதற்கு நாம் விஜயதசமி வரை காத்திருக்க வேண்டியதில்லை, இத்திருக்கோயிலில் பஞ்சமி,புதன் கிழமை, புனர்பூச நாட்களில்
அட்சரப்பியாசம் செய்து வழிபடல் சிறப்பு. பிரம்மசக்தி அம்மன் அருகில்
சிவனணைந்த பெருமாள் சன்னதி உள்ளது. சிவபெருமானுடன் திருமால் பெண்வடிவம் கொண்டு அணைந்ததால் சிவனணைந்த பெருமாள் என்று பெயர். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சிவனணைந்த பெருமாள் சந்நதியில் மரத்தொட்டில் கட்டி வழிபட குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிட்டும்
என்கிறார்கள். பேச்சியம்மன், இசக்கியம்மன், மாடசுவாமி சன்னதிகளும் உள்ளன. இங்கு இசக்கியம்மனுக்கு 'எண்ணெய் மஞ்சனம்' என்னும் கலவை சாற்றி வேண்டுதல் வழிபாடு செய்கிறார்கள்.

'எண்ணெய் மஞ்சனம்' என்பது
இசக்கியமனுக்கு நல்எண்ணெய் ,மஞ்சள் பொடி சாற்றி வழிபடுவது ஆகும். இங்கு
இசக்கியம்னுக்கு 'எண்ணெய் மஞ்சனம்' சாற்றித் தொடர்ந்து 8 தமிழ் மாத கடை
வெள்ளி நாட்களில் வழிபட குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கிறார்கள்.

இறைபணியில்....
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி-திருநெல்வேலி மாவட்டம்.

உலகில் உள்ள அனைத்து பிரம்மசக்தி அம்மன் திருக்கோவில்களுக்கும் மூலக்கோவில் உவரி திருக்கோவில்.

உவரி ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமியை போன்ற வரலாற்று தலபுராணங்கள் உவரி பிரம்மசக்தி அம்மனுக்கும் உண்டு.

ஆதாரம் :

Shodhganga கேரளப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வுகள்.

தலைப்பு : "பிரமசக்தியம்மன் கதை ஒரு திறனாய்வு" - சிவ. விவேகானந்தன்.

முழுநூல் PDF_FILE இலவசமாக பெற விரும்புவோர் : பக்தர்பேரவை Whatsapp எண்ணிற்கு 9597841535 message செய்யவும்.

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி-திருநெல்வேலி மாவட்டம்

11/05/2026

விரைவில்... #உவரி வைகாசி #விசாகத்திருவிழா..!!!

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களில் பெரும்பாலானவர்களுக்கும்,

தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம் மற்றும் தென்தமிழகத்தின் சில மாவட்டங்களில் பலருக்கும் குலதெய்வமாகவும்.... பக்தர்கள் பலருக்கும் இஷ்ட தெய்வமாகவும் விளங்கும் உவரி அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி - ஸ்ரீபிரம்மசக்தி அம்பாள் திருக்கோவில் வைகாசி விசாகப்பெருந்திருவிழா கோலாகலமாக வைகாசி 16 | 30.05.2026 சனிக்கிழமையன்று நடைபெறவிருக்கிறது. பக்தர்கள் அனைவரும் திருவிழாவில் கலந்து கொண்டு சுவாமியின் அருள்பெற்றுச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இறைபணியில்...
ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

29/04/2026

குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் #குலதெய்வம்..!

#உவரி அருள்மிகு சுயம்புலிங்கசுவாமி திருக்கோவில் , திசையன்விளை வட்டம்.!

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட பல தென் மாவட்டங்களில், லிங்கமூர்த்தி, லிங்கம், லிங்கப்பாண்டியன், சுயம்புலிங்கம், சுயம்புமூர்த்தி என்றெல்லாம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவார்கள். இவர்கள் எல்லோரும் உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமியைக் கண்கண்ட தெய்வமாக வழிபடுபவர்களாக இருப்பார்கள்; இவர்களின் குலதெய்வம் அல்லது முன்னோர் காலத்திலிருந்தே சுயம்புலிங்கசுவாமியை வழிபடுபவர்களாக இருப்பர். இவர்களின் இஷ்ட தெய்வம் உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமியாகவும் பிரம்மசக்தி அம்மனாகவும் இருக்கும்!

Video credits : tn_74_kanyakumari

27/04/2026

குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் #குலதெய்வம்..!

#உவரி அருள்மிகு சுயம்புலிங்கசுவாமி திருக்கோவில் , திசையன்விளை வட்டம்.!

நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் உள்ளிட்ட பல தென் மாவட்டங்களில், லிங்கமூர்த்தி, லிங்கம், லிங்கப்பாண்டியன், சுயம்புலிங்கம், சுயம்புமூர்த்தி என்றெல்லாம் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவார்கள். இவர்கள் எல்லோரும் உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமியைக் கண்கண்ட தெய்வமாக வழிபடுபவர்களாக இருப்பார்கள்; இவர்களின் குலதெய்வம் அல்லது முன்னோர் காலத்திலிருந்தே சுயம்புலிங்கசுவாமியை வழிபடுபவர்களாக இருப்பர். இவர்களின் இஷ்ட தெய்வம் உவரி ஸ்ரீசுயம்புலிங்க சுவாமியாகவும் பிரம்மசக்தி அம்மனாகவும் இருக்கும்!

தென் மாவட்டங்களில் வாழும் அன்பர்களும், அந்த மாவட்டங்களில் இருந்து பிழைப்புக்காக வெளியூரில் வசிக்கிற அன்பர்களும் சதாசர்வ காலமும் நினைப்பதும் வே�

வரம் - Blessing in Silence...🙏
26/04/2026

வரம் - Blessing in Silence...🙏

Address

Uvari
Tisaiyanvilai
627651

Telephone

+917548816375

Website

Alerts

Be the first to know and let us send you an email when உவரி சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to உவரி சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை:

Share

Category