04/09/2015
தஞ்சாவூரில் இருந்து 62 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது திருவாரூர். இதன் புகழை பற்றி சொல்வதென்றால் இது சோழர்களின் ஐந்து தலைநகரங்களில் (உறையூர், பழையாறை, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம்) ஒன்று, முதலாம் குலோத்துங்க சோழன் இங்குதான் ஆட்சி செய்தான். சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜா, முத்துசாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரிகள் பிறந்த ஊர் இது ! திருவாரூரை ஆண்ட மனு நீதி சோழன் பசுவிற்கு நீதி வழங்க தன் சொந்த மகனையே தேரை ஏற்றி கொன்றது வரலாற்றில் நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக அறியப்படுகிறது. இதன் பெயர் காரணம் தெரிய வேண்டும் என்றால்...... திருவாரூர் = திரு+ஆரூர் . திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் ( சப்தவிடங்க தலங்கள் ) எனவே முதலில் ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது. திருவாரூர் என்ற பெயருக்கு வழங்கப்படும் மற்றும் ஒரு காரணம் என்பது...... திருமகள் திருமாலை அடையவேண்டி திருவாரூரில் உள்ள வன்மீகநாதரை வழிபட்டு, வரம் பெற்று திருமாலை மணந்து கொண்டதுடன் தன் பெயரிலேயே இவ்வூர் வழங்கப்படவேண்டும் என்று கேட்டதால் கமலாலயம் (அ) திருவாரூர் ( திரு - லட்சுமி ,ஆர் - பூமாதேவி பூஜித்தது ) என பெயர் பெற்றது.
பிரியமுடன் சாய் சக்தி கனேஷ் சாய் ராம் திருவாரூர் sai sakthi ganesh