Imam channel

Imam channel இஸ்லாம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

This Page is only for Dawah,Only Dawah Posts,Pics,Videos will be Uploaded In'Shaa'Allah; And other Islamic Speeches willn't be posted(As we have many pages for that); And Questions, Allegations, Misconeceptions posed by Non Muslims will be answered In'Shaa'Allah in a Good Manner.. :) :) Non Muslim Brothers and Sisters feel free to message us to know about Islam thereby clearing your doubts and Misconceptions on ISLAM. :) :) Please Go through all our posts to know the TRUE MESSAGE OF ISLAM.

06/03/2026

#திருக்குறள்_திருக்குர்ஆன்_ஒழுக்கம்_அமைதி_மருத்துவம்_நல்லிணக்கம்_இயேசுவின்இரண்டாம்வருகை_உலகஅழிவு பற்றிப் பேசும் அறிவுப் பெட்டகம்
= ரூ.360 மதிப்புள்ள 7 புத்தகங்கள் ரூ 200 க்கு
- தள்ளுபடி மற்றும் STOCK CLEARANCE SALE!

1. #திருக்குறளும்_திருக்குர்ஆனும் - புதிய புத்தகம்..
தமிழின் பெருமையை உலகம் முழுவதும் உணர்த்திய நூல் திருக்குறள். அதேபோல், உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் இறைவேதம் திருக்குர்ஆன். இரண்டும் வெவ்வேறு காலத்திலும், வெவ்வேறு சூழலிலும் தோன்றியவை என்றாலும், அவை சொல்லும் கருத்துக்களில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. (32 பக்கம்)
குர்ஆனுக்கும், குறளுக்கும் இருக்கிற முரண்பாடுகளை ஒரு பக்கம் வைத்து விட்டு, அவை சொல்லும் ஒத்த கருத்துக்கள் மேல் கவனம் செலுத்தினால், பன்முக சமூகத்தில் வாழும் நமக்கு மத்தியில் இணக்கமும், புரிதலும் அதிகரிக்கும். இந்த சிறு நூலில் குர்ஆனுக்கும், குறளுக்கும் இருக்கும் ஒத்த கருத்துக்களை பற்றி பார்க்கலாம்.

2. #இணைய_காத்திருக்கும்_இருபெரும்_சமூகங்கள். இந்த நூலில் இயேசுவைக் களங்கங்களில் இருந்து காத்த தேற்றரவாளர் யார், முஹம்மது நபியவர்களின் முக்கியத்துவம், இருவரும் போதித்த இறை ஏகத்துவம், இறைவனுக்கு இணைவைத்தலைக் கண்டிக்கும் பைபிள், தேற்றரவாலரின் சிறப்புக்கள் , இயேசுநாதரின் அற்புதப் பிறப்பு, இயேசுநாதரின் இரண்டாம் வருகையின்போது நடைபெற உள்ளவை, இயேசுவுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள தொடர்பு, அன்னை மரியாள் யூதர்கள் சுமத்திய களங்கங்களில் இருந்து காப்பாற்றப்படுதல்... இன்னும் சுவையான பல உண்மைகள் (பக்கம் 48)

3. #தவறான_புரிதல்கள்* (pages 258)
- இஸ்லாத்தின் மீது தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளும் அவற்றுக்கான தெளிவான பதில்களும்.

4. #அமைதி_அது_உங்கள்_சாய்ஸ்! (p 28)
- தனி மனித மற்றும் சமூக அமைதிக்கான வழி இறைவனுக்கு அடிபணிந்து வாழ்வதே என்பதை தெளிவாக விளக்கும் நூல்.

5. #திருக்குர்ஆன்_மருத்துவம்- உடலும் உள்ளமும் நலம்பெற..
வழக்கமான மருத்துவம் பெரும்பாலும் உடலை மட்டுமே நோக்கிப் பார்ப்பதாக இருக்கும். ஆனால் குர்ஆன் மருத்துவம், உடல்–மனம்–ஆன்மா என்ற மும்முறையையும் ஒன்றாகக் கருதுகிறது. மன அமைதி, இறை நம்பிக்கை, நேர்மையான வாழ்க்கை, தீமையிலிருந்து விலகல், தூய்மை, உணவு ஒழுக்கம் போன்ற அம்சங்கள் அனைத்தும் மருத்துவத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றன.
அதனால் குர்ஆன் மருத்துவத்தில், நோயைச் சிகிச்சை செய்வதற்குப் பிறகும், நோய் வராமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை வழிமுறைகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. குர்ஆன், தூய்மையை, அளவான உணவை, குடிநீர் பாதுகாப்பை, தவறான பழக்கவழக்கங்களிலிருந்து விலகலை, மன அழுத்தத்தைக் குறைக்கும் இறை நினைவுகளை—இவை அனைத்தையும் ஆரோக்கியத்தின் தூண்களாகக் காட்டுகிறது. (பக்கம் 24)

6. #உலகம்_இப்படித்தான்_அழியும்* (pages 101)
சாட்ஜிபிடி துணையோடு ஆதாரங்களுடன்
- மகத்தான் யதார்த்தத்தை எதிர்கொள்ள துணை செய்யும் தெளிவான நூல்!
உலக அழிவு என்பது பூமியில் வாழும் அனைத்து உயிர்களும் அழிந்து, இயற்கையின் நிலைமைகள் முற்றிலும் மாறி உலகம் தனது இயல்பான நிலையை இழக்கும் நிலையாக வரையறுக்கப்படுகிறது. அறிவியல் பார்வையில், இது இயற்கை பேரழிவுகள், சுற்றுச்சூழல் வீழ்ச்சி,

7. #இல்லறத்தை_நல்லறமாய்_துவங்கிட இறைவன் கூறும் வழிமுறைகள்..
- வரதட்சணைக்கு மாறாக வது தட்சணை, கணவன் மனைவி கடமைகள் - உரிமைகள், திருமணத்தின் மற்றும் இல்லறத்தின் புனிதம், விருந்தும் செலவும் ஆண் மீது கடமை, குழந்தை வளர்ப்பு .. போன்ற பல விடயங்கள். (Pages 24)
===============
#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர் உங்கள் இல்லம் தேடி வர ₹180 சந்தா கட்டி சந்தாதாரர் ஆகலாம் இன்ஷாஅல்லாஹ் https://wa.me/p/33176695991945755/918867298998

 #திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்பிப்ரவரி 2026 இதழுக்கான கேள்விகள்1. இஸ்லாமிய மனமாற்றம் என்றால் என்ன? 2. அது உண்டாக்கிய ஒரு...
25/02/2026

#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்
பிப்ரவரி 2026 இதழுக்கான கேள்விகள்
1. இஸ்லாமிய மனமாற்றம் என்றால் என்ன?
2. அது உண்டாக்கிய ஒரு ஆறு புரட்சிகளை கூறுக.
3. இஸ்லாம் எவ்வாறு சமத்துவத்தை நடைமுறைக்கு கொண்டு வருகிறது?
4. சிரவணக்கம் செய்ய முற்பட்ட நபிததோழரிடம் நபிகளார் என்ன கூறினார்கள்?
5. பெண்ணை வாழவிடாமல் மனிதகுலம் தழைக்காது- ஏன்?
6. யாருடைய அன்பைப் பெற்றால் நம் வாழ்க்கை முழுமை அடையும்?
7. சமத்துவம் பேணுவேன் என்பதற்கான உறுதிமொழி எது?
8. ஒரு அடிமையை விடுவித்தால் அவர் இறைவனிடமிருந்து பெரும் நன்மை என்ன?
================
- மேற்படி கேள்விகளுக்கு வாசகர்கள் பிப்ரவரி இதழின் அடிப்படையில் பதில் அளிக்கலாம்.
- சரியான விடைகளை வாட்சப் மூலம் எழுதி அனுப்பும் மாற்றுமத அன்பர்களுக்கு பரிசுகள் உண்டு.
- இஸ்லாமிய வாசகர்களும் பங்கேற்கலாம். (சந்தா தாரர்கள் மட்டும்)
- வாட்சப் மூலம் பதில்கள் அனுப்பவேண்டிய எண்: 9886001357
- போட்டி விஷயத்தில் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
- தொடர்ந்து போட்டியில் கலந்து கொண்டு பதில் அனுப்புபவர்களுக்கு சர்ப்ரைஸ் பரிசுகள் காத்திருக்கின்றன.
- --------++++-------
#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர்
- பிப்ரவரி 2026 இதழ்
- பொருளடக்கம்
உலக நடைமுறைகளை திருத்திய இஸ்லாமிய மன மாற்றம் -2
சமத்துவம் – உலக அமைதிக்கான அஸ்திவாரம் -6
அடிமைத்துவத்தை உடைத்தெறிந்த இறையச்சம் -8
சுயமரியாதையின் அடித்தளமும் இறையச்சமே! -10
பெண்ணை வாழவிடாமல் மனிதகுலம் தழைக்காது! -12
பாவங்களை மன்னிக்கக் காத்திருப்பவன்! -14
இன்றைய செய்திகளும் இறைவனின் வழிகாட்டலும் -15
கேள்விகள் பல – விடை தெரிந்ததே! -17
புதிய கேள்வி -பதில் பகுதி -20
ஆசிரியர் - வாசகர் நேரடி சந்திப்பு நிகழ்ச்சி.-21
(PDF வாசிக்க க்ளிக் செய்யுங்கள்)
https://www.quranmalar.com/2026/02/2026.html
===============
திருக்குர்ஆன் நற்செய்திமலர் உங்கள் இல்லம்தேடி வர ₹180 சந்தா கட்டி சந்தாதாரர் ஆகலாம் இன்ஷாஅல்லாஹ் https://wa.me/p/33176695991945755/918867298998

இந்த ரமலான் மாதத்தின் சிறப்புக்கு ஒரு மிகச்சிறந்த காரணம் இருக்கிறது!அது என்ன? அதை அறிய வரலாற்றில் சற்று பின்னோக்கி பயணிப...
19/02/2026

இந்த ரமலான் மாதத்தின் சிறப்புக்கு ஒரு மிகச்சிறந்த காரணம் இருக்கிறது!

அது என்ன? அதை அறிய வரலாற்றில் சற்று பின்னோக்கி பயணிப்போம்...

அனைத்துமே ஆரம்பமானது அங்கே...

முஹம்மத் நபி அவர்கள் மக்கா நகரில் அன்று உயர்குலமாக அறியப்பட்டிருந்த குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும், பிறந்து சில மாதங்களில் தனது தாயாரையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள். அநதையாகவே வளர்ந்தாலும் நற்பண்புள்ளவராகவும் உண்மையாளராகவும் திகழ்ந்த இவரை மக்கள் அல் அமீன் (பொருள்: நம்பிக்கைக்கு உரியவர்) என்று பட்டம் சூட்டி அழைத்தனர்.

ஆனால் அவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள் முன்னோர்கள் விட்டுச்சென்ற முடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். யாரென்றே தெரியாதவர்களுக்கு எல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை அடிமைகளாக நடத்தினர், சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர், நிறவெறி, கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.

விடியலுக்கு ஏங்கிய உள்ளம்

இப்படிப்பட்ட சூழலில் அனைத்துமே அனைவருமே பாவங்களில் மூழ்கியிருப்பதால் நன்மை எது, நீதி எது, நியாயம் எது என்பதையே யாரும் சிந்திக்காமல் இருக்கும் நிலை! ஆனால் நபிகள் நாயகத்தின் மனம் மட்டும் அங்கு இதற்கோர் விடிவு பிறக்காதா என்று ஏங்கியது! அவரால் அந்த அசிங்க சூழலை சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. அதன் விளைவாக அவர் மனம் தனிமையை விரும்பியது.

அவருக்கு அப்போது நாற்பது வயது நெருங்கியிருந்தது. சத்துமாவையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு மக்காவிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள நூர் மலையின் ஹிரா குகைக்குச் செல்லத் தொடங்கினார். அக்குகை நான்கு முழ நீளமும் ஒன்றே முக்கால் முழ அகலமும் கொண்டது. ரமழான் மாதத்தில் அங்கு தங்கி வணக்க வழிபாடுகளிலும், இப்புவியையும் அதைத் தாண்டிய பிரபஞ்சத்தையும் இயக்கும் அபார சக்தியைப்பற்றி சிந்திப்பதிலும் ஈடுபட்டார்கள்.

அன்று பெய்தது தேன்மழை!

இப்படிப்பட்ட அந்த சூழலில்... அந்த ரமலான் மாதத்தின் ஒரு இரவில்தான்... அந்த பேரற்புதம் நிகழ்ந்தது! ஆம் மனித வரலாற்றின் போக்கை மாற்றி எழுதிய அந்த அற்புதம்! விண்ணும் மண்ணும் உறவைப் புதுப்பித்துக்கொண்ட அற்புதம்! வருடங்களாக வறண்டு கிடந்த வானம் பார்த்த பூமியின்மேல் வான்மழை பொழிந்தால் எப்படியிருக்கும்? அதுவும் பொழிந்தது தேன்மழையாக இருந்தால் கேட்கவும் வேண்டுமோ? ஆம் அன்று பெய்த தேன்மழை அன்றோடு நின்று விடவில்லை. தொடர்ந்து பெய்தன அத்தேன் துளிகள்! நபிகளார் இப்புவியில் நடமாடிய காலம் வரை தொடர்ந்து சிறுகச்சிறுகப் பெய்தன அந்த அமுதத்தின் துளிகள். நபிகளாரின் இதயத்தில் சேகரமான அந்த தேன்துளிகளின் தொகுப்பே இன்று உலகெங்கும் பரவி நிற்கும் திருக்குர்ஆன் என்ற வான்மறை!
https://www.quranmalar.com/2016/06/blog-post_10.html
-----------
நன்றி:
திருக்குர்ஆன் நற்செய்தி மலர்
இதழ் உங்கள் இல்லம்தேடி வர ₹180 சந்தா கட்டி சந்தாதாரர் ஆகலாம் இன்ஷாஅல்லாஹ் https://wa.me/p/33176695991945755/918867298998

தனி இதழ் விலை -ரூ.15 - ஆண்டு சந்தா ரூ.180- · ₹180.00

 #இறுதித்தீர்ப்பு_நாள் #இஸ்லாம்_என்றால்_என்ன #அமைதி_அது_உங்கள்_சாய்ஸ் #திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர் – ஜனவரி 26 இதழ்பொருள...
15/02/2026

#இறுதித்தீர்ப்பு_நாள்
#இஸ்லாம்_என்றால்_என்ன
#அமைதி_அது_உங்கள்_சாய்ஸ்

#திருக்குர்ஆன்_நற்செய்தி_மலர் – ஜனவரி 26 இதழ்
பொருளடக்கம்:
புதிய ஆண்டு – புதிய மனிதன் -2
இஸ்லாம் நபித்தோழர்களில் ஏற்படுத்திய அதிசய மாற்றங்கள் -4
நபிகளார் – மனமாற்றத்திற்கான சிறந்த ஆசான் -6
மனமாற்றமும் குணமாற்றமுமே இலக்கு -8
கண்டிக்கக் கற்றுத்தரும் அழகிய ஆசான் நபிகளார் -9
தவறைத் திருத்தும் நபிவழி
விபச்சாரத்தில் இருந்து விடுபட்ட இளைஞன்! -11
பள்ளிவாசலில் சிறைக்கைதியின் தலைகீழ் மனமாற்றம் - 14
சிறைச்சாலைகளை ஏன் சீர்திருத்த வேண்டும்?-18
சிறைவாசிகளை சீர்திருத்திடும் இறைநம்பிக்கை! -21
மால்கம் எக்ஸ் – சிறையிலிருந்து சிந்தனைப் புரட்சிவரை.. -23
===========
ஜனவரி 2026 இதழுக்கான கேள்விகள்
1. மனிதனின் மாற்றத்திற்கான அடிப்படை விதியை அறிவிக்கும் இறைவசனம் எது? வசன எண் குறிப்பிடுக.
2. நபித்தோழர்களை சீர்திருத்த நபிகளார் கையாண்ட வழிகள் எவை?
3. பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த கிராமவாசியை நபிகளார் என்ன செய்தார்கள்?
4. விபச்சாரம் செய்ய விரும்பிய இளைஞனை நபிகளார் எவ்வாறு திருத்தினார்கள்?
5. அந்த இளைஞன் முடிவில் என்ன கூறினான்?
6. பள்ளிவாசலில் சிறைவைக்கப்பட்ட கைதி யார்?
7. சிறைகள் எவ்வாறு கைதிகளை சீர்கேடுக்கின்றன?
8. சிறைவாசிகளை எவ்வாறு இறைநம்பிக்கை சீர்திருத்தும்?
9. மால்கம் x எதற்காக சிறை சென்றார்?
10. எவ்வளவு வருடமாக நற்செய்தி மலரை வாசித்து வருகிறீர்கள்?
---------------------------------------
- மேற்படி கேள்விகளுக்கு வாசகர்கள் கடந்த ஜனவரி இதழின் அடிப்படையில் பதில் அளிக்கும் வாசகர்களுக்கு 6 மாத சந்தா அன்பளிப்பு
- பதில்கள் அனுப்பவேண்டிய எண்: 9886001357
- போட்டி விஷயத்தில் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது.
===============
திருக்குர்ஆன் நற்செய்திமலர் உங்கள் இல்லம்தேடி வர ₹180 சந்தா கட்டி சந்தாதாரர் ஆகலாம் இன்ஷாஅல்லாஹ் https://wa.me/p/33176695991945755/918867298998

 #ஒழுக்கம்_திரும்ப_வழி கள்ளக்காதலால் சிதையும் குடும்பங்கள், காமப்பசி தீர்த்துவிட்டு கன்னியரை கர்ப்பிணியாக்கி விட்டோடும் ...
14/02/2026

#ஒழுக்கம்_திரும்ப_வழி
கள்ளக்காதலால் சிதையும் குடும்பங்கள், காமப்பசி தீர்த்துவிட்டு கன்னியரை கர்ப்பிணியாக்கி விட்டோடும் காமுகர்கள், பெற்றோரை அவமதிக்கும் பிள்ளைகள், பெருகும் சிசுக்கொலைகள், பெருகும் மது-போதைப் பொருள் புழக்கம், ஓரினச்சேர்க்கை, குடும்ப உறவுகள் மதிப்பிழத்தல், பாலியல் வல்லுறவுகள், இலஞ்சம், ஊழல், கொலை, கொள்ளை என அனைத்து தீய ஒழுக்கங்களும் கட்டுக்கடங்காமல் மலிந்து காணப்படும் இக்காலத்தில் மனிதன் வாழவே வெறுக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. தேசிய குற்றவியல் ஆவணக் காப்பக அறிக்கைப்படி நாளொன்றுக்கு 450 தற்கொலைகள் இந்திய காவல் நிலையங்களில் பதிவாகின்றன. (பதிவாகாதவை இன்னும் ஆறுமடங்கு!)
மீண்டும் உலகில் ஒழுக்கம் திரும்ப வழி உண்டா?
ஆம் என்கிறான், மனிதனுக்குள் குடிகொண்டிருக்கும் ஆத்மாவைப் படைத்த இறைவன்:
"ஆத்மாவைப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார். ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்." (திருக்குர்ஆன் 91:9,10)
ஆத்மாவைப் பரிசுத்தப்படுத்துவது எவ்வாறு?
அதற்கு முதற்கண் படைத்த இறைவனைப் பற்றியும் அவனது கண்காணிப்பைப் பற்றியும் மறுமையில் #இறுதித்தீர்ப்பு_நாள் அன்று நம் செயல்களுக்கு விசாரணையும் அதற்கேற்ப சொர்க்கமும் நரகமும் உண்டு என்னும் உண்மைகளைப் பகுத்தறிவுபூர்வமாக அவனுக்குக் கற்பிக்க வேண்டும்.
மக்களுக்கு இவ்வுண்மைகளைக் கற்பிக்கவே இறைவன் தொன்றுதொட்டு தன் தூதர்களையும் வேதங்களையும் அருளி வந்துள்ளான். அந்த தூதர்கள் வரிசையில் இறுதியாக வந்தவரே நபிகள் நாயகம் (ஸல்). அவர் மூலமாக அருளப்பட்ட வேதமே திருக்குர்ஆன். திருக்குர்ஆன் மற்றும் நபிகளாரின் செயல்முறை விளக்கத்தின் அடிப்படையில் அமைந்த வாழ்வியல் திட்டமே இஸ்லாம் என்று இன்று அறியப்படுகிறது.
#இஸ்லாம்_என்றால்_என்ன?
இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்.
அதாவது இறைவன் கற்பிக்கும் கட்டுப்பாடுகளை (discipline)ப் பேணி வாழ்வதால் தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் பெறப்படும் அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம்! இவ்வாறு கட்டுப்பாடு மிக்க வாழ்வை வாழ்ந்ததற்குப் இறைவன் புறத்திலிருந்து மறுமையில் வழங்கப்படும் பரிசே நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம்!
------------
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
இஸ்லாம் என்றால் என்ன? #முஸ்லிம்_என்றால்_யார்?
http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_7.html
பற்பல மதங்கள் எவ்வாறு உருவாயின?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_31.html
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!!

05/02/2026

https://www.facebook.com/reel/1048886155144479
இதைக் காணும்போது பூமி என்ற பந்தின் மீது அமர்ந்துகொண்டு விசாலமான இந்த விண்வெளியில் உலா வந்துகொண்டு இருப்பதை உணரமுடிகிறது.
இந்தப் பயணத்தின் நோக்கம் என்ன?
இதை நம்மால் நாம் கண்டும் காணாமல் இப்படியே இருந்துவிட்டால் இதை நடத்திக்கொண்டு இருப்பவன் சும்மா விடுவானா? அவன் வீணுக்காக இதை செய்கிறானா? நாம் சிந்திக்க வேண்டாமா?

23:115. ''நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?''

இறைவனின் இக்கேள்விக்கான பதிலை சிந்திக்கும்போதுதான் இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும். அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் இவ்வுலகை நமக்கு ஒரு பரீட்சைக் கூடமாகப் படைத்துள்ளான் என்பதெ!.
ஆம், இந்த பூமியென்ற விண்கலத்தின் மீதமர்ந்து நாம் செய்யும் இந்த குறுகிய சவாரியின் நோக்கம் மறுமை வாழ்வில் நம் இருப்பிடத்தை முடிவு செய்வதற்காகவே! இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்வோர் இப்பயணத்தின் இறுதியில் சொர்க்கத்தை சென்றடைகிறார்கள். அல்லாதோர் நரகத்தை சென்றடைகிறார்கள்.
http://quranmalar.blogspot.in/2014/05/blog-post_15.html

 #எல்லா_பைல்களும்_திறக்கப்படும்_நாள் இது நம்மைப் படைத்த இறைவனுக்கு சொந்தமான உலகம். இங்கு நமது குறுகிய தற்காலிக வாழ்க்கை ...
04/02/2026

#எல்லா_பைல்களும்_திறக்கப்படும்_நாள்
இது நம்மைப் படைத்த இறைவனுக்கு சொந்தமான உலகம். இங்கு நமது குறுகிய தற்காலிக வாழ்க்கை ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக்கூடமாகவும் படைக்கப் பட்டுள்ளது. இதில் இறைவன் நம்மிடம் எவற்றை ஏவுகிறானோ அவை நமக்கும் மனித குலத்திற்கும் நன்மை பயப்பவை. அவற்றை செய்தால் அவை புண்ணியங்களாக இறைவனிடம் பதிவு செய்யப்படுகின்றன. எவற்றை செய்யக்கூடாது என்று நம்மைத் தடுக்கிறானோ அவை நமக்கும் மனிதகுலத்திற்கும் தீங்கு விளைவிப்பவை. அவையே பாவங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன. எனவே இந்த வாழ்க்கைப் பரீட்சையில் வென்று மறுமையில் சொர்க்கத்தை நமது நிரந்தர வாழ்விடமாக அடையவேண்டுமானால் நாம் அவனது எவல்-விலக்கல்களை பேணியே ஆகவேண்டும்.
இந்த வாழ்க்கைப் பரீட்சையில் இறைவனால் தடை செய்யப்பட்ட அந்நிய ஆண்பெண் உறவுகள், கள்ளக்காதல், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள், மது மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாடு உள்ளிட்ட ஒழுக்ககேடுகள் அனைத்தும் தண்டனைக்கு உரியவை ஆகும். இவை மனிதனின் தனிநபர் வாழ்க்கைக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் அளப்பரிய தீங்கு விளைவிப்பவை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அவனது தடையை மீறி அவற்றை செய்வதால் மனிதனுக்கு இங்கு உண்டாகும் தீமைகளை விட மறுமையில் உண்டாகக்கூடிய வேதனைகளும் நரகத்து தண்டனைகளும் அதிபயங்கரமானவை. இறைவனின் இறுதிவேதம் திருக்குர்ஆன் கூறுகிறது:
= 20:74 நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது அதில் அவன் மரிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான்.
= 7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும் (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
= 78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக! அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!
அற்பமான தற்காலிக வாழ்க்கை
இன்று நாம் வாழும் தற்காலிகவாழ்கை என்பது மறுமையோடு ஒப்பிடும்போது மிகமிக அற்பமானதே.
= நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைவன் மீதாணையாக! மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலகின் நிலையானது, உங்களில் ஒருவர் தமது இந்த அதாவது சுட்டு விரலை கடலில் வைப்பதைப் போன்றுதான். அதில் எந்த அளவு தண்ணீர் ஒட்டிக்கொள்கிறது என்று அவர் பார்க்கட்டும். (நூல் :முஸ்லிம் 5490)
செயல்களின் பதிவேடு
இறைவன் கூறுகிறான்:
தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா? அவனுக்கு நாம் இரண்டு கண்களை ஆக்கவில்லையா? மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? (திருக்குர்ஆன் 90:7 -9)
இங்கு மனிதன் செய்யும் அத்துமீறல்கள் ஒவ்வொன்றும் தவறாமல் பலவகைகளில் பதிவாகின்றன. இன்று எங்கும் கண்காணிப்புக்காக பொருத்தப்படும் CCTV கேமராக்கள் பதிவு செய்கின்றனவோ அதைப்போலவே நம் ஒவ்வொருவரது கண்களும் காதுகளும் தோல்களும் நமது நடவடிக்கைகளை இயற்கையாகவே பதிவு செய்து கொண்டிருக்கின்றன. வேறு பலவகையிலும் நமது செயல்களின் பதிவுகள் நடந்து கொண்டிருந்தாலும் இவை ஒன்றே போதுமானவையாக இருக்கும் என்பதை நாம் அறியலாம்.

உங்களைப் படைத்தவன் தரும் தீர்வுகள் இவை..

 #நாம்_ஏன்_பிறந்தோம்  #அமைதி_அது_உங்கள்_சாய்ஸ்
28/01/2026

#நாம்_ஏன்_பிறந்தோம்
#அமைதி_அது_உங்கள்_சாய்ஸ்

'*யாதும் ஊரே யாவரும் கேளிர்*தீதும் நன்றும் பிறர்தர வாராநோதலும் தணிதலும் அவற்றோர் அன்னசாதலும் புதுவது அன்றே, வாழ்தல்........
28/01/2026

'*யாதும் ஊரே யாவரும் கேளிர்*
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்.....’
என்று தொடங்கி...
'பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்று முடிகிறது கணியன் பூங்குன்றனாரின் பாடல்.
--------------------------------------------------------
இங்கு சொல்லப்படும் யாதும் ஊரே, யாவரும் கேளிர்! என்ற இந்த அருமையான வாழ்வியல் இலக்கணம் எங்கும் எப்போதும் பின்பற்றப்பட வேண்டும் என்பது உலகெங்கும் வாழும் அனைத்து மனிதர்களும் ஆசைப்படும் ஒன்றாகும். இந்த ஆசை நிறைவேற வேண்டுமானால் அதற்கான ஆக்கபூர்வமான செயல்திட்டம் தேவை. .
'வெறுமனே இவ்வார்த்தைகளை கவிதை நயம் ததும்ப உருவிடுவதாலோ அவற்றைப் பாராட்டி எழுதுவதாலோ ஒன்றும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. அது வெறும் ஆசையோடும் ஏக்கத்தோடும் நின்றுவிடும். .

ஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பரவி உள்ளோம். ஆனால் இன்று நாட்டின் பெயராலும், இனத்தின் பெயராலும் மொழியின் பெயராலும் நிறத்தின் பெயராலும் ஜாதிகளின் பெயராலும் ஒருவரை ஒருவர் பயங்கரமான முறைகளில் தாக்கிக் கொண்டு நம்மை நாமே அழித்துக் கொண்டு வருகிறோம்.
தடைகளைத் தகர்த்தெறிய வழி என்ன?
இந்நிலைமை ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று மனிதனிடம் குடிகொண்டுள்ள குழப்பம் நிறைந்த கடவுள் கொள்கைகளும் மூட நம்பிக்கைகளுமே!.

பூமியில் மீணடும் தர்மம் நிலைநாட்டப்பட வேண்டுமானால் நன்மையையும் அமைதியும் நிலைபெற வேண்டுமானால் மனித இதயங்களில் இறைவனைப் பற்றியும் இவ்வுலக வாழ்க்கையைப் பற்றியும் தெளிவான மற்றும் அறிவார்ந்த நம்பிக்கை விதைக்கப் பட வேண்டும்.
அதாவது என்னைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒருவன் உள்ளான். அவன் சர்வ வல்லமை உள்ளவன். இந்த தற்காலிக வாழ்க்கையை முடித்துக் கொண்டு அவனிடமே நான் திரும்ப வேண்டியுள்ளது. அவன் நான் செய்த புண்ணியங்களுக்கு பரிசு தருவான். அதே போல் நான் பாவங்கள் செய்தால் தண்டிக்கவும் செய்வான் என்ற அடிப்படை உணர்வு ஒவ்வொரு மனித மனங்களுக்குள்ளும் ஆழமாக விதைக்கப் பட வேண்டும். அப்போதுதான் மனிதன் பாவம் செய்யாமல் இருப்பான், புண்ணியங்கள் செய்வதற்கு ஆர்வம் கொள்வான்..

ஒன்றே குலம், ஒருவனே இறைவன், அவனிடமே நமது மீளுதல் என்ற இந்த மூன்று உண்மைகளை மனித மனங்களில் விதைத்துதான் எல்லாக் காலங்களிலும் பூமியின் பல்வேறு பாகங்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் மக்களை சீர்திருத்தினார்கள். தர்மத்தை நிலைநாட்டினார்கள். இது காலகாலமாக நிரூபிக்கப்பட்ட ஒரு வழிமுறை.
இனியும்பூமியில் தர்மம் நிலைநாட்டப்படவேண்டும் என்று நாம் நினைப்போமேயானால் அந்த இறைத்தூதர்களும் மற்றும் இறைவேதங்களும் கற்றுத்தந்த அதே வழிமுறையையே நாம் கையாள வேண்டும்.
அந்த அடிப்படையில் முறையான இறையச்சம் வளர கலப்படமற்ற முறையில் இறைநம்பிக்கையை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் போதிக்க வேண்டும். .

இறைவன் எவ்வாறு தன்னைப் பற்றி அறிமுகம் செய்கிறானோ அவ்வாறே மக்களுக்கு கற்றுக் கொடுக்கவேண்டும். வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றியும் மரணம் பற்றியும் மரணத்திற்குப் பிறகு உள்ள மனிதனின் நிலைகளைப் பற்றியும் பகுத்தறிவு பூர்வமாக கற்பிக்க வேண்டும். .

*எந்த வேதத்தை பின்பற்றுவது*?
இன்று பல மதங்களும் வேதங்களும் உள்ள நிலையில் ஒவ்வொருவருக்கும் அவரவர் மதமும் வேதங்களும் பெரிதாகப்படும். அவ்வாறெனில் நாம் எதை அடிப்படையாகக்கொண்டு இறைநம்பிக்கையை போதிப்பது? இந்த ஒரு கேள்வி அனைவர் உள்ளத்திலும் எழுவது இயல்பே.
இங்கு நாம் நினைவுகூர வேண்டிய உண்மை என்னவென்றால் நமது மனித குலம் என்பது ஒன்றே ஒன்று. நமது இறைவனும் ஒரே ஒருவன். எக்காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்கு பிறந்தோரானாலும் நாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதே! இதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது. நம் குடும்பத்துக்கு வழி காட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களை அனுப்பி உள்ளான். அவர்கள் அனைவரும் நம்மவர்களே என்பதுதான் உண்மை. அதேபோல அனைத்து வேதங்களும் நம் வேதங்களே. இந்த பரந்த மனப்பான்மையோடு அணுகினால் இதற்கு ஓர் தீர்வு ஏற்படும். நாம் இன்று இழந்து விட்ட சகோதரத்துவ உணர்வை மீண்டும் நிலை நாட்டவும் முடியும். அந்த வகையில் முன்னாள் வேதங்களும் இந்நாள் வேதங்களும் அந்தந்த காலகட்டத்தின் தேவைகளுக்கேற்ப நமது குடும்ப நலன் நாடி இறைவனால் அனுப்பப்பட்டவை என்பதையும் இன்றைய காலகட்டத்திற்காக அனுப்பப்பட்ட வேதம் எதுவோ அதையே நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதையும் சமூக நலன் நாடும் ஒவ்வொருவரும் தங்களின் மனமாச்சரியங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஏற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர வேண்டும். .

இன்று நாம் பின்பற்றவேண்டிய வேதம் எது மற்றும் யார் இக்காலகட்டத்தின் இறைத்தூதர் என்பதையும் மனம்திறந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்வதன் மூலம் அறியலாம்.
அவ்வாறு ஒரு நடுநிலையான ஆராய்ச்சி மேற்கொள்ளும்போது இறுதி இறைவேதம் திருக்குர்ஆனும் அதற்கு விளக்கமாக வாழ்ந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுமே நாம் பின்பற்றவேண்டிய வழிகாட்டிகள் என்பதை உணர முடியும். .

_மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்_. (திருக்குர்ஆன் 4:1)
(அரபு மொழியில் அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்).

அந்த இறைவன் நம்மை விசாரிக்க உள்ளான் என்பதையும் தன வேதத்தில் தெளிவுபடுத்துகிறான்..

_ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை_. (திருக்குர்ஆன் 3:185).

இதை விடுத்து சிதைக்கப்பட்ட நிலையில் காணப்படும் முன்னாள் வேதங்களை அடிப்படையாகக் கொள்வோமேயானால் ஒருபுறம் மக்களின் கடவுள் உணர்வைச் சிதைத்து பாவம் செய்ய அஞ்சாத தலைமுறைகள் உருவாக வித்திடுகிறோம். மறுபுறம் இதையெல்லாம் கண்டுகொண்டிருக்கும் சர்வ வல்லமையும் ஞானமும் கொண்ட இறைவனைச் சிறுமைப் படுத்துவதால் அவனது கடும் கோபத்திற்கும் ஆளாகிறோம்..

நம் கற்பனையில் உதித்தவற்றை எல்லாம் கடவுள் என்று கற்பித்தால் ஒரே இறைவனுக்கு பதிலாக பல போலிக் கடவுள்கள் உருவாகி ஒவ்வொன்றையும் வணங்குவோர் தனித்தனி குழுக்களாகவும் ஜாதிகளாகவும் பிரிந்து தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் நிலைமை உருவாகிறது. ஆனால் இறைவனை அவன் எவ்வாறு கற்றுத்தருகிறானோ அவ்வாறு புரிந்துகொண்டு வணங்கும் போது மொழி, இனம், நிறம், மாநிலங்கள், நாடுகள் போன்ற தடைகளைக் கடந்து மனித சமத்துவமும் உலகளாவிய சகோதரத்துவமும் உருவாகும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற நம் கனவு நனவாகும்.
இது ஒரு வெற்றுப்பேச்சு அல்ல. இதை நீங்கள் இந்த சத்திய இறைமார்க்கத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடையே நிதர்சனமாகக் காணலாம். உதாரணமாக, நமது நாட்டில் உள்ள முஸ்லிம் சமுதாய மக்களைப் பாருங்கள். இவர்கள் யாருமே அரபு நாடுகளிலிருந்தோ அல்லது துருக்கியிலிருந்தோ வந்தவர்கள் அல்ல. இவர்களின் முன்னோர்கள் ஒரு காலத்தில் இந்துக்களாகவோ கிருஸ்துவர்களாகவோ இருந்து இம்மார்க்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள்தான். இன்று இவர்கள் தீண்டாமை மறந்து பள்ளிவாசல்களில் ஒரே வரிசையில் தோளோடு தோள் சேர்ந்து அணிவகுப்பதையும் ஒரே தட்டில் உணவு உண்பதையும் காண்கிறீர்கள். ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜின் போது உலக மக்கள் ஒரே சீருடையில் அணிவகுப்பதையும் காண்கிறீர்கள்.

நபிகளாரைக் கொல்ல தீட்டப்பட்ட தீய சதித் திட்டம்அர்பத் பின் கைஸ் (Arbad bin Qays) மற்றும் ஆமிர் பின் அதுஃபைல் (Amir bin al...
27/01/2026

நபிகளாரைக் கொல்ல தீட்டப்பட்ட தீய சதித் திட்டம்
அர்பத் பின் கைஸ் (Arbad bin Qays) மற்றும் ஆமிர் பின் அதுஃபைல் (Amir bin al-Tufayl) ஆகிய இருவரும் இஸ்லாமிய வரலாற்றில், குறிப்பாக முஹம்மது நபியவர்கள் காலத்தில் வாழ்ந்த முக்கிய நபர்கள் ஆவர். இவர்கள் இருவரும் பனூ ஆமிர் (Banu Amir) பழங்குடியினத்தைச் சேர்ந்த தலைவர்கள். ஹிஜ்ரி 9 அல்லது 10-ஆம் ஆண்டில் (கி.பி. 631), இவர்கள் மதீனாவிற்குச் சென்று நபியவர்களைச் சந்தித்தனர்.

அது இஸ்லாம் வளர்ச்சி பெற்று ஆட்சி அதிகாரம் கைகூடும் காலம்.

இஸ்லாத்தை ஏற்க பேரம் பேசுதல்!

மதீனாவில் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்தார்கள். இஸ்லாம் என்பது ஒரு சுயசீர்த்திருத்தக் கொள்கை என்பதைக் கூட அறியாமல் இறைத் தூதருக்கு ஏதோ நல்லது செய்வதைப் போல பேரம் பேச ஆரம்பித்தார்கள். ஆமிர் பின் அதுஃபைல், "ஓ முஹம்மதே! நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “எல்லா முஸ்லிம்களுக்கும் உள்ள உரிமைகளும் கடமைகளும் உங்களுக்கும் உண்டு.”

ஆமிர் பின் அதுஃபைல், "நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டால் என்னை உங்கள் வாரிசாக ஆக்குவீர்களா?" என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “அது உங்களுக்கோ உங்கள் மக்களுக்கோ உரிய உரிமை இல்லை. எனினும், நான் உங்களைக் குதிரைப் படையின் தளபதியாக (அதாவது, போருக்கு) நியமிக்க முடியும்.”

ஆமிர், "நான் ஏற்கனவே நஜ்த் (அரேபியாவின் வடக்கில்) பகுதியின் குதிரைப் படைத் தளபதியாக இருக்கிறேன். எனக்குப் பாலைவனத்தின் கட்டுப்பாட்டைக் கொடுங்கள், நீங்கள் நகரங்களை வைத்துக்கொள்ளுங்கள்" என்றார்.

நபி (ஸல்) அவர்கள் மறுத்துவிட்டார்கள். இஸ்லாத்தை ஏற்பதற்கு யாரும் யாரையும் நிர்பந்திக்கவும் முடியாது. அதை ஏற்பதற்கு பேரம் பேசுவதும் தவறு.

அமீர் இப்னு துஃபைல் மற்றும் அர்பித் இப்னு கைஸ் ஆகியோரின் அனைத்து முயற்சிகளும், நபி (ஸல்) அவர்களிடமிருந்து அதிகாரத்தையும் ஆட்சியையும் பெறுவதில் தோல்வியடைந்தபோது, ​​அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பதுங்கியிருந்து தாக்க ஒரு தீய திட்டத்தைத் தீட்டினர்.

அமீர் இப்னு துஃபைல், அர்பித் இப்னு கைஸிடம், “நான் அவரைப் பேச்சில் ஈடுபடுத்தி வைத்திருப்பேன், நீ பின்னால் இருந்து காத்திரு. அவர் என்னுடன் பேசுவதில் முழுமையாக மூழ்கியிருப்பதை நீ காணும்போது, ​​அவருக்குப் பின்னால் பதுங்கிச் சென்று உன் வாளால் அவரைத் தாக்கு!” என்று கூறினான்.

இந்த இரண்டு தீய மனிதர்களும் இதைத்தான் செய்ய முடிவு செய்தனர். அமீர் இப்னு துஃபைல், நபி (ஸல்) அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக அவர்களுடன் வாதிடத் தொடங்கினான். அர்பித், நபி (ஸல்) அவர்களைத் தற்காப்பற்ற நிலையில் பிடிப்பதற்காகப் பின்னால் காத்திருந்தான்.

நபி (ஸல்) அவர்கள் துஃபைலுடன் பேசுவதில் முழுமையாக மூழ்கியிருப்பதையும், தன்னை அவர்கள் கவனிக்க மாட்டார்கள் என்பதையும் அர்பித் கண்டபோது, ​​அவன் மெதுவாக நபி (ஸல்) அவர்களின் முதுகுக்குப் பின்னால் பதுங்கிச் சென்று தாக்குவதற்குத் தயாரானான். அமீர், அவன் அங்கே நிற்பதைக் கண்டு, திட்டத்தைச் செயல்படுத்துமாறு சைகை காட்டினான். ஆனால் அர்பித் அசைவற்று நின்றான். அவனால் ஒரு தசையைக் கூட அசைக்க முடியவில்லை. தனக்கு என்ன நடக்கிறது என்று அவனுக்குத் தெரியவில்லை. அவன் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான். அவனது கை வாளுடன் ஒட்டிக்கொண்டு உறைந்து போயிருந்தது.

அமீர் இப்னு துஃபைல், அர்பித் எதுவும் செய்யாததைக் கண்டபோது, ​​அவன் விரைவாகப் பேச்சை மாற்றி, அந்த விஷயத்தை இரகசியமாக விவாதிப்பதற்காகத் தனக்குச் சிறிது தனிப்பட்ட நேரம் தருமாறு நபி (ஸல்) அவர்களிடம் கூறினான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவர்கள் தமக்கு எதிராகச் சதி செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்ந்து, அதை முற்றிலும் மறுத்து, “நீங்கள் அல்லாஹ்வை, அவன் ஒருவன் என்றும் அவனுக்கு எந்தக் கூட்டாளிகளும் இல்லை என்றும் நம்பும் வரை, நான் உங்களுக்கு மேலதிக நேரம் தரமாட்டேன்” என்று கூறினார்கள்.

தோல்வியுடன் திரும்புதல்

தூதருக்கு (ஸல்) தீங்கு விளைவிப்பதற்காகத் தீட்டிய தங்கள் தீய சதித் திட்டத்தில் தாங்கள் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டோம் என்பதை அமீரும் அர்பிதும் உணர்ந்தபோது, ​​அமீர் தூதரை அச்சுறுத்தத் தொடங்கினான்:

உங்களைப் படைத்தவன் தரும் தீர்வுகள் இவை..

Address

Adam Garden, Nallavanpalayam
Tiruvannamalai
606603

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imam channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share