கூவம் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி. Koovam Shivan Temple.

  • Home
  • India
  • Tiruvallur
  • கூவம் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி. Koovam Shivan Temple.

கூவம் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி. Koovam Shivan Temple. This sivasthalam temple is located at Koovam. Tiruvallore - Kancheepuram bus route goes via Perambakkam, a small town. Koovam is next to Perambakkam.

The temple is located about 1 Km. from Koovam bus stop. கோவில் விபரம்: கூவம் என்ற பெயரில் தற்போது அறியப்படும் இத்தலம் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து சுமார் 50 கி.மி. தொலைவில் இருக்கிறது. இத்தலத்தின் அருகே தான் கூவம் ஆறு உற்பத்தியாகிறது. சுத்தமான நீரோட்டம் உள்ள இந்த ஆறு சென்னையை நெருங்கும் போது மிகவும் அசுத்தமடைந்து விடுகிறது. இத்தலத்து இறைவன் ஒரு சுயம்பு லிங்கம். இங்குள்ள இறைவனை, லிங்கத

் திருமேனியை ஆலய அர்ச்சகர்கள் கூட தொடுவதில்லை. அதனால் இறைவன் தீண்டாத் திருமேனி நாதர் என்றும் பெயர் கொண்டுள்ளார். இங்குள்ள லிங்கம் காலத்திற்கு ஏற்ப நிறம் மாறுவதாக கூறப்படுகிறது. அதிக மழைபெய்வதாக இருந்தால் இறைவரின் திருமேனியில் வெண்மை நிறம் தோன்றுவதும், யுத்தம் ஏற்படுவதாயிருந்தால் சிவப்புநிறம் படர்வதும் ஆகிய அற்புதம் பொருந்திய தலம். இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் இறைவி திருபுரசுந்தரியை வணங்கிவிட்டுத் தான் பிறகு மூலவர் திரிபுராந்தகரை வழிபடவேண்டும் என்ற நியதி வழக்கத்தில் உள்ளது. திருமணமான தம்பதியர்களுக்கு இடையே ஏற்படும் எந்தவிதமான பிரச்னைகளும் இத்தலத்து இறைவனை வழிபடுவதின் மூலம் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.

தெற்கு திசையிலுள்ள 5 நிலை இராஜகோபுரம் தான் இவ்வாலயத்தின் பிரதான வாயிலாகும். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்து தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள வாயில் வழியாக அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகள் உள்ள பகுதிக்குள் செல்லலாம். முதலில் அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதியும், அதையடுத்து திரிபுராந்தக சுவாமி சந்நிதியும் கிழக்கு நோக்கு அமைந்துள்ளன. சுவாமி சந்நிதி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. இரண்டு சந்நிதிகளையும் சேர்த்து வலம் வர பிரகாரம் உள்ளது. உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் அச்சிறுத்த விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது. அம்பாள் மற்றும் சுவாமி சந்நிதிகளுக்கு தனித்தனியே கொடிமரம், பலிபீடம் இருக்கின்றன. சுவாமி சந்நிதி நுழை வாயிலுக்கு முன் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் திரிபுராதிகள் மூவருள் இருவர் இவர்கள் என்று சொல்லப்படுகிறது. சுவாமி சந்நிதி நுழை வாயிலுக்கு முன் வலதுபுறம் தெற்கு நோக்கிய நடராஜர் சந்நிதி உள்ளது. வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகர், தட்சினாமூர்த்தி ஆகிய மூர்த்தங்களும் பார்க்க வேண்டியவை. சுவாமி கருவறை கோஷ்டத்தில் உள்ள லிங்கோத்பவர் சிற்பமும் கலையழகுடன் உள்ளது. மஹாவிஷ்னு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைவதும், பிரம்மா அன்னப் பறவை உருவில் ஜோதி உருவமான சிவபெருமானின் முடியைக் காண முயலுவதும் லிங்கோத்பவர் சிற்பத்தில் காணலாம். பக்கத்தில் பாலமுருகன் சந்நிதியும் அடுத்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் சந்நிதியும் உள்ளன. துர்க்கை சந்நிதிக்கு எதிரில் சந்தன மேடை உள்ளது. இதில் அரைத்த சந்தனம் சுவாமிக்குச் சார்த்தப்படுகிறது.நவக்கிரக சந்நிதி வடக்கு வெளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் உள்ளது.

புராண வரலாறு: இத்தலம் சிவபெருமான் நிகழ்த்திய திரிபுர சம்ஹாரத்துடன் சம்பந்தம் கொண்டதாகும். சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட போது முழுமுதற் கடவுள் விநாயகரை வழிபட்டு கிளம்பாததால் சிவன் ஏறிய தேரின் அச்சு முறிந்து விட்டது. பிறகு விநாயகர் வழிபாடு செய்து புறப்பட்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் வில் கையிலேந்தி காட்சி கொடுப்பதால் இத்தலம் திருவிற்கோலம் என்ற பெயரில் ஒரு பாடல் பெற்ற தலமாக விளங்குகிறது. இத்தலத்திலுள்ள விநாயகருக்கு அச்சிறுத்த விநாயகர் என்று பெயர்.

ஆலய சிறப்பு: இந்த கோவிலிலுள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம் (கூபாக்கினிதீர்த்தம் ) எனப்படும். ஆலய அர்ச்சகர்கள் இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடிய பிறகே தினசரி பூஜைகள் செய்வார்கள். கடுமையான வறட்சி காலத்திலும் இந்த அக்னி தீர்த்தம் வற்றுவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 4 கி.மி தொலவிலுள்ள கூவம் ஆற்றிலிருந்து கொண்டு வரும் நீரால் மட்டுமே இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் வழக்கத்தை அர்ச்சகர்கள் கடைபிடித்து வருகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக என்றேனும் இவ்வாறு கூவம் ஆற்று நீர் அபிஷேகத்திற்கு இல்லையெனில் இளநீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பகல்நேர அபிஷேகம் செய்ய அருகில் உள்ள பிஞ்சவாக்கம் என்ற கிராமத்தில் இருந்து கொண்டு வரப்படும் பால் பயன்படுத்தப்படுகிறது. பிஞ்சவாக்கம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் இவ்வாலய இறைவன் அபிஷேகத்திற்கு பால் கொடுப்பதை தங்கள் கடமையாக நினைத்து செயல்படுகின்றனர்.

அதிக மழை, வெள்ளம் வரும் அறிகுறி இருந்தால் சுவாமி மீது வெண்மை படரும் என்றும், போர் நிகழ்வதாயின் செம்மை படரும் என்றும் சொல்லப்படுகின்றது. இது பற்றியே ஞானசம்பந்தர் தம் பதிகத்தின் 3-வது பாடலில் ஐயன் நல் அதிசயன் என்று குறிப்பிடுகின்றார். இவ்வண்ண மாற்றம் தற்போது காணப்படவில்லையாம். மூலவர் - திரிபுரம் எரித்த மூர்த்தி. அபிஷேகங்கள் செய்வதால் உண்டாகும் மேற்புறப் படிவுகள் தானாகவே பெயர்ந்து விழுந்து திருமேனி சுத்தமாகி விடும் என்று சொல்லப்படுகிறது.

கோயிலுக்கு வெளியே - திரிபுர சம்ஹார காலத்தில் தேர் அச்சு முறிந்திட, உடனே பெருமானை விடையாக இருந்து தாஙகியதாகச் சொல்லப்படும் - கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் உள்ளது.

 #சித்திரை_திருவிழா 🌺சித்திரைத் திருவிழா இனிதே நிறைவு பெற்று, விடையாற்றி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. 🙏🏻✨பல நாட்கள் பக்த...
22/05/2026

#சித்திரை_திருவிழா 🌺

சித்திரைத் திருவிழா இனிதே நிறைவு பெற்று, விடையாற்றி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. 🙏🏻✨

பல நாட்கள் பக்தர்களுக்கு அருள்காட்சி தந்த அருள்மிகு சோமாஸ்கந்தர், இறுதியாக அனைவரையும் தன்னருளில் சேர்த்தருளினார். 🌺

இத்திருவிழாவில் கலந்து கொண்டு இறையருள் பெற்ற அனைத்து பக்தர்களுக்கும் எம்பெருமானின் திருவருள் என்றும் துணையாக இருக்க பிரார்த்திக்கிறோம். ✨

தொடரட்டும் பக்தி… பெருகட்டும் இறையருள்… 🙏🏻🌸

சிவா திருச்சிற்றம்பலம் 😊🙏🏻

#விடையாற்றி_உற்சவம் #சோமாஸ்கந்தர் #சித்திரைதிருவிழா #திரிவிற்கோலம் #சிவன் #ஆன்மிகம் #இறையருள்

12/05/2026

#அப்பர் #திருநாவுக்கரசர்
இறைவனிடம் கலந்த ஜெயந்தி விழா.
#சதயம் #சித்திரை

🕉️சித்திரை சதயம் நட்சத்திரத்தில்  #திருநாவுக்கரசர் (அப்பர்) பெருமான் இறைவனுடன் ஒன்றாக கலந்த திருநாள்.🕉️சமண சமயத்தில் இரு...
12/05/2026

🕉️சித்திரை சதயம் நட்சத்திரத்தில் #திருநாவுக்கரசர் (அப்பர்) பெருமான் இறைவனுடன் ஒன்றாக கலந்த திருநாள்.

🕉️சமண சமயத்தில் இருந்த அப்பர் பெருமானை சூலை நோய்(வயிற்று வலி) கொடுத்து 60 வயதில் இறைவன் ஆட்கொண்டார்.

🕉️அன்றிலிருந்து தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு ஆலயங்களுக்கு சென்று உழவாரப் பணி மேற்கொண்டு,தனது 81 வது வயதில் இறைவனடி சேர்ந்த திருநாள் இன்று.

🕉️சமணர்கள் அப்பர் பெருமானை கொதிக்கும் சுண்ணாம்பு கலனில் ஒரு வாரம் அடைத்து வைத்த போதும்,உங்க உடலில் சிறு காயங்கள் கூட இல்லாமல் இறைவனின் அருளால் "மாசில் வீணையும் மாலை மதியமும்" என்ற பதிகத்தை பாடிக்கொண்டே வெளியேறினார்.

🕉️அதேபோல் கல்லை கட்டி கடலில் வீசியபோதும், மிதந்து கொண்டே "கற்றுனைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே" என்ற நமச்சிவாய பதிகத்தை பாடிக் கொண்டே கரை வந்து சேர்ந்தார்.

🕉️நால்வர் பெருமக்களில் ஒருவரான திருநாவுக்கரசர் பெருமானை இன்றைய தினத்தில் வீட்டிலிருந்தோ, ஆலயம் சென்றோ அவர் புகழ் பாடி அருளை பெறுவோமாக*..!🙏

சித்திரைத் திருவிழா பிரம்மோற்சவத்தின் அழகிய தருணங்களையும், எம்பெருமானின் அருள்மிகு காட்சிகளையும் தினமும் புகைப்படங்களாக ...
10/05/2026

சித்திரைத் திருவிழா பிரம்மோற்சவத்தின் அழகிய தருணங்களையும், எம்பெருமானின் அருள்மிகு காட்சிகளையும் தினமும் புகைப்படங்களாக பதிவு செய்து பகிர்ந்து வரும் அன்பிற்கினிய அட்மின் திரு அசோக் Krishna Ashok அவர்களுக்கும் அவருக்கு உதவி அளித்த அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 😊🙏🏻🌺

நமது ஆலய முகநூல் பக்கத்தின் உயிர்நாடியாக இருந்து, வெளியூரில் வாழும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று தினமும் இறைவனின் அழகிய தரிசனங்களை அவர்கள் இல்லங்களுக்கும் கொண்டு சேர்க்கும் புனித இறைப்பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறார். ✨

அவரது இந்த பக்தி நிறைந்த சேவைக்கு எல்லாம் வல்ல எம்பெருமான் வாழ்வில் அனைத்து நலன்களும், ஆரோக்கியமும், வளமும் அருள்வாராக என அன்புடன் பிரார்த்திக்கிறோம். 🌺🙏🏻

தொடரட்டும் இறைப்பணி…
சிவா திருச்சிற்றம்பலம் 😊🙏🏻

#சித்திரை_திருவிழா #பிரம்மோற்சவம் #இறைப்பணி #திரிவிற்கோலம் #சிவன் #ஆன்மிகம் #இறையருள்

 #மங்கல_இசை 🌺இறைவன் வீதி உலா எழுந்தருளும் தருணங்களில் ஒலிக்கும் மங்கள இசை, பக்தர்களின் மனதில் ஆன்மிக பரவசத்தை ஏற்படுத்து...
10/05/2026

#மங்கல_இசை 🌺

இறைவன் வீதி உலா எழுந்தருளும் தருணங்களில் ஒலிக்கும் மங்கள இசை, பக்தர்களின் மனதில் ஆன்மிக பரவசத்தை ஏற்படுத்தும் தெய்வீக இசையாகும். 🙏🏻✨

அதில் முக்கியமானது “மல்லாரி” எனப்படும் நுட்பமான தாளக்கட்டுகளால் அமைந்த இசைத் தொகுப்பு. இது ஒரு ராகமோ, வாத்தியமோ அல்ல; நாதஸ்வரத்தில் வாசிக்கப்படும் அடையாள இசையாகும். இறைவன் வீதி உலா வரும்போது வாசிக்கப்படும் இம்மல்லாரி இசை, தெய்வீக அதிர்வுகளை பக்தர்களின் உள்ளங்களில் எழுப்புகிறது. 🌺

இசையே இறைவனின் ஒலி, ஓம்காரம் என தமிழர் போற்றுகின்றனர். சிவபெருமானின் உடுக்கை ஒலி முதல் நாதஸ்வர மங்கள இசை வரை, கோவில் வழிபாடும் இசையும் ஒன்றோடொன்று கலந்தவை. 🎶🙏🏻

சித்திரைத் திருவிழாவில் இறைவன் வீதி உலா வருகையில் மங்கள இசை அமைத்து, பக்தர்களுக்கு ஆன்மிக மகிழ்ச்சி அளித்த அனைத்து கலைஞர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 😊🌺🙏🏻

இவர்களின் கலைப்பணியும் இறைப்பணியும் தொடர எம்பெருமானின் திருவருள் என்றும் கிடைக்க பிரார்த்திக்கிறோம். ✨

சிவா திருச்சிற்றம்பலம் 🌺🙏🏻

#சித்திரை_திருவிழா #மங்கலஇசை #மல்லாரி #நாதஸ்வரம் #இறைப்பணி #திரிவிற்கோலம் #சிவன் #ஆன்மிகம் #இறையருள்

 #சித்திரை_மாத_திருவோண_நட்சத்திரம்_நடராஜர்_அபிஷேகம்..!💐எம்பெருமான் சன்னதி முன் உள்ள ஆடலழகன் நடராஜமூர்த்திக்கு சித்திரை ம...
09/05/2026

#சித்திரை_மாத_திருவோண_நட்சத்திரம்_நடராஜர்_அபிஷேகம்..!💐

எம்பெருமான் சன்னதி முன் உள்ள ஆடலழகன் நடராஜமூர்த்திக்கு சித்திரை மாத திருவோண நட்சத்திர நடராஜர் அபிஷேகம் நடைபெற்றது..!🌸

இது நடராஜரின் காலசந்தி பூஜையாகும்..!🌺

தேவர்களின் பகல்பொழுதான உத்திராயணத்தின் நான்காம் மாதம் சித்திரை.🍁

வஸந்த ருதுவில் சித்திரை மாதம் தேவர்களின் உச்சிப்பொழுதாகும்.
இந்த மாதத்தில் வரும் திருவோண நக்ஷத்திரத்தில் தேவர்கள் இறைவனுக்கு உச்சிகால பூஜை செய்வதாக சாஸ்த்திரங்கள் கூறுகிறது.🌾

கூவம் திருபுராந்தக சுவாமி ஆலயத்தில் உள்ள நடராஜ சுவாமிக்கு ஒவ்வோர் ஆண்டும் ஆறு மகா அபிஷேகங்கள் நடைபெறும்.🦚

சித்திரை மாதத் திருவோணம்,
ஆனி மாத உத்திரம்,
மார்கழி மாதத் திருவாதிரை ஆகிய நட்சத்திர நாள்களிலும்,
ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி மாதங்களில் வரும் வளர்பிறை சதுர்தசி மகா அபிஷேகங்கள் நடைபெறும்.
இன்று சித்திரைத் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது..!🍓

ஆனந்த மயமாக அனவரதமும் ஆடிக்கொண்டிருப்பவர் #ஸ்ரீநடராஜர்.🙏🏼

நடராஜப்பெருமானின் ஆனந்த தாண்டவத்தால் தான்
(பிரபஞ்சத்தை இயக்கும் அந்த நாட்டியத்தால் தான்)
இந்தப் பிரபஞ்சம் மற்றும் சகல ஜீவன்களும் தோன்றின என்கின்றன புராணங்கள்.
ஓயாமல் ஆடிக்கொண்டிருக்கும் நடராஜப்பெருமானின்
அங்கத்தைக் குளிர்விக்க தேவாதி தேவர்கள் ஆறுகால பொழுதுகளில் அபிஷேகம் செய்வார்கள்.
மனிதர்களுக்கு ஓர் ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள்.
ஆறுகால பூஜையைத் தேவர்கள் நாள்தோறும் செய்துவருகிறார்கள் என்பது ஐதிகம்.🌺

அதன்படி சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தில் செய்யப்படும் அபிஷேகம் உச்சிக்கால அபிஷேகம் என்று பெயர்.🙏🏼🌺

நடராஜரின், இந்த உச்சிக்கால அபிஷேகத்தைக் கண்டால்
பிறப்பில்லாப் பெருநிலையை
( பேரின்ப நிலையை )
எட்டலாம் என்பது ஐதிகம்.
மேலும், அனைத்துத் தோஷங்களும் விலகி இறைவனின் பரிபூரண அருள் கிடைக்கும்..!🌸

திருச்சிற்றம்பலம்❤️

தில்லையம்பலம்😍🙏🏼

சித்திரைத் திருவிழாவில் கைலாய வாத்திய இசைக்குழுவாகவும், ஆலயத்தின் பல்வேறு இறைப்பணிகளிலும் இளம் வயதிலேயே பக்தியுடன் ஈடுபட...
07/05/2026

சித்திரைத் திருவிழாவில் கைலாய வாத்திய இசைக்குழுவாகவும், ஆலயத்தின் பல்வேறு இறைப்பணிகளிலும் இளம் வயதிலேயே பக்தியுடன் ஈடுபட்டு வரும் அனைத்து அன்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 😊🌺🙏🏻

இசைக்குழு சேவையை மட்டுமல்லாமல், ஆலயத்தின் அனைத்து பணிகளிலும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இளைய சமுதாயத்தினர் அனைவரும் வாழ்வில் அனைத்து நலன்களும் பெற்று, பெருவாழ்வு வாழ எம்பெருமானிடம் பிரார்த்திக்கிறோம். ✨🙏🏻

இவர்களின் பக்தியும் இறைப்பணியும் தொடரட்டும். 🌺

சிவா திருச்சிற்றம்பலம் 😊🙏🏻

#சித்திரை_திருவிழா #கைலாயவாத்தியம் #இறைப்பணி #இளையசமுதாயம் #திரிவிற்கோலம் #சிவன் #ஆன்மிகம் #இறையருள்

Address

கூவம் கிராமம்
Tiruvallur
631402

Opening Hours

Monday 6am - 11am
5pm - 8pm
Tuesday 6am - 11am
5pm - 8pm
Wednesday 6am - 11am
5pm - 8pm
Thursday 6am - 5pm
Friday 9am - 11am
5pm - 8pm
Saturday 6am - 11am
5pm - 8pm
Sunday 6am - 11am
5pm - 8pm

Alerts

Be the first to know and let us send you an email when கூவம் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி. Koovam Shivan Temple. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to கூவம் ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை திரிபுராந்தக சுவாமி. Koovam Shivan Temple.:

Share

Category