08/12/2021
اللَّهُمَّ احْرُسْنِي بِعَيْنِكَ الَّتِي لا تَنَامُ ، وَاكْنُفْنِي بِرُكْنِكَ الَّذِي لا يُرَامُ ، وَارْحَمْنِي بِقُدْرَتِكَ عَلَيَّ ، أَنْتَ يَقِينِي وَرَجَائِي ، فَكَمْ مِنْ نِعْمَةٍ أَنْعَمْتَ بِهَا عَلَيَّ قَلَّ لَك بِهَا شُكْرِي ، وَكَمْ مِنْ بَلِيَّةٍ ابْتَلَيْتَنِي بِهَا قَلَّ لَكَ عِنْدَهَا صَبْرِي ، فَيَا مَنْ قَلَّ عِنْدَ نِعْمَتِهِ شُكْرِي فَلَمْ يَحْرِمْنِي ، وَيَا مَنْ قَلَّ عِنْدَ بَلائِهِ صَبْرِي فَلَمْ يَخْذِلْنِي ، وَيَا مَنْ رَآنِي عَلَى الْخَطَايَا فَلَمْ يَفْضَحْنِي ،
சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம்
அல்லாஹும்ம ஸல்லி அலா சய்யித்னா முஹம்மதின் வ அலா ஆலி சய்யித்னா முஹம்மதின் வ பாரிக் வஸல்லிம் அலைஹி
யா ரப்பனா! யா ரப்பனா! தூங்காத உன் கண்கொண்டு என்னைக் காப்பாயாக!
தகர்க்க இயலா உன் ஆற்றலைக் கொண்டு எனக்கு அபயமளிப்ப்பயாக
என் மீது உனக்குள்ள சக்தியினால் என் மீது அருள் புரிவாயாக!
நீயே எனது நம்பிக்கை, எனது ஆதரவு. எவ்வளவோ நிஃமத்களை நீ எனக்களித்தாய், ஆனால் அதற்கு நான் செய்த நன்றியோ மிகவும் குறைவு.
எத்தனையோ சோதனைகளைக் கொண்டு என்னைச் சோதித்தாய், அப்பொழுது நான் காட்டிய பொறுமையோ மிகவும் குறைவு.
நீ அளித்த அருட்கொடைகளுக்கு என் நன்றி குறைவாக இருந்தும் அருட்கொடைகளை
தடை செய்யாதவனே
சோதனைகளின் போது என் பொறுமை குறைவின் காரணமாக உதவியை நீக்காதவனே!
நான் தவறுகள் செய்வதை அறிந்தும் என்னைக் கேவலப்படுத்தாதவனே!
எங்களின் பாவங்களை மன்னித்து எங்களின் மீது உன் கருணையைப் பொழிவாயாக!
இம்மையிலும் மறுமையிலும் எங்களின் குற்றங்குறைகளை
மறைத்தருள்வாயாக!
எங்களின் துஆக்களை ஏற்றுக்கொள்வாயாக!
ஆமீன்