17/02/2025
நமது ஆடலரசன் அருட்பணி அறக்கட்டளையின் சார்பாக 16.2.2025 ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி மாவட்டம் தருவையில் அமைந்துள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத வாழவல்லப பாண்டீஸ்வரர் ஆலயத்தில் வைத்து உழவாரப்பணி நடைபெற்றது.
இதில் திருநெல்வேலி, கோவில்பட்டி, பாளையங்கோட்டை, ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 150 சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
கோவில் விக்ரகங்களை சுத்தம் செய்தல் விளக்கு மற்றும் பாத்திரங்களை சுத்தம் செய்தல் கோவிலில் சுற்றி அமைந்துள்ள தேவையற்ற குப்பைகள் மற்றும் புல் கிளைகளை அகற்றுதல் போன்ற வேலைகளை இனிதே செய்தனர்.
அத்துனை அடியார் பெருமக்களுக்கும் அன்னம் பாலிப்பு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மற்றும் இதற்கு பொருளுதவி, பண உதவி வழங்கிய அனைத்து அன்பர்களுக்கும் நமது ஆடலரசன் அருட்பணி அறக்கட்டளையின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.🙏🙏🙏🙏🙏🙏🙏