சீயோன் குமாரத்தி

சீயோன் குமாரத்தி (Sharing Christ, Serving others) Sharing Christ, Serving Others

Devotional Bible Verse for today
03/09/2026

Devotional Bible Verse for today

01/09/2026

ரெகொபோத் :
சீயோன் குமாரத்தி(பகுதி 7)

ரெகோபோத் என்பதற்கு “விடுதலை” என்றும் பொருள் :

என் பிரியமானவர்களே,
நீங்கள் இனி அடிமைத்தனத்திலோ அல்லது எதிரியால் கட்டுப்படுத்தப்பட்டோ இருக்க மாட்டீர்கள். நீங்கள் விடுதலையாவீர்கள்.

அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார்.சங் 146:7
குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். யோவான் 8:36

ஒடுக்கப்பட்டு வாழ்ந்த நமக்கு கிடைக்க போகும் நியாயம்
கட்டுண்ட நமக்கு குமாரன் கொடுக்கப் போகும் விடுதலை ஆமேன் என்று சொல்லி ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்.சகரியா 9:11

புதிய உடன்படிக்கையின் இரத்தம், இயேசுவின் இரத்தம், உங்களைப் பாவத்திலிருந்து மட்டுமல்ல, பாவங்களின் விளைவுகளிலிருந்தும் விடுவிக்கிறது. ரெகோபோத்! இயேசுவின் நாமத்தில் நமக்கு விடுதலை உண்டு.ஈசாக்கும் அவனுடைய ஊழியர்களும், தங்கள் கிணறுகளைப் பலவந்தமாகப் பறித்துக்கொண்ட எதிரியிடமிருந்து விடுதலையடைந்தார்கள். நானும் சில எதிரிகளிடமிருந்து விடுதலை அடைந்து விட்டேன், ஆனாலும் எனக்கான சில நியாயங்களுக்காய் கண்ணீரோடுக் காத்திருக்கிறேன்.

இறுதியாக இந்த முறை, அவர்கள் ஒரு கிணற்றைத் தோண்டினார்கள், அங்கே எந்தவிதமான வாக்குவாதமோ பகைமையோ இருக்கவில்லை. தேவன் தம்முடைய சத்துருவை அவரோடு சமாதானமாயிருக்கச் செய்தார் .

ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.நீதிமொழிகள் 16:7

உங்கள் முன்னேற்றத்திற்கு எதிரான ஒவ்வொரு வாதத்தையும் தேவன் அடக்குகிறார், உங்கள் வளர்ச்சிக்கு எதிரான எந்தப் பகைமையையும்
தேவன் நிறுத்துகிறார். சத்துருவின் கிரியைகளையும் மீறி, நீங்கள் செழிப்படைந்து, வெற்றி பெற்று, மேன்மை அடைவீர்கள்! அல்லேலூயா!!!!

தொடரும்......

01/09/2026
31/08/2026

ரெகொபோத் :
சீயோன் குமாரத்தி(பகுதி 7)

ரெகோபோத் என்பதற்கு விரிவாக்கம் என்றும் பொருள்:

நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.(ஆதி 26). உங்கள் வாழ்க்கையில் ஒரு பெருக்கத்தைக் காண்பீர்கள்.

என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; (சங் 4:1)
நாம் நெருக்கத்தில் இருந்தப் போதே தேவன் நம்மை ஆசீர்வதித்து நம் வாழ்க்கையில் ஒரு விசாலத்தை உண்டாக்குவார். நெருக்கத்தின் நடுவிலே விசாலத்தையும், ஆசீர்வாதத்தையும் தேவனால் மட்டுமே நம் வாழ்க்கையில் கொண்டு வர முடியும்.

இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே.ரோம 8:37. தேவன் நம் வாழ்க்கையில் ஜெயத்தைக் கட்டளையிடப்போகிறார்.

உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து. நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள்.ஏசா 54:2,3. இந்த வசனத்தின் படியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.உங்கள் வாசஸ்தலங்கள் விரிவாகட்டும்.

யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார்.1 நாளா 4:10. இந்த வசனத்தின் படி தேவன் உன் எல்லையை விரிவாக்குவார்.

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.யோவான் 15:7
கர்த்தரின் வார்த்தையின் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்பதைக் கர்த்தர் கொடுப்பார். உங்கள் நிலப்பரப்புகள் விரிவாகட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென்.

தொடரும்......

30/08/2026

ரெகொபோத் :
சீயோன் குமாரத்தி(பகுதி 6)

ரெகோபோத் என்பதற்கு “போதுமான இடம்” என்றும் பொருள்:

நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்.( ஆதி 26)

*) நீங்கள் எந்த இடத்தில் கஷ்டப்படுகிறீர்களோ அந்த‌ இடத்தில், இயேசுவின் நாமத்தில் ஜெயங்கொள்வீர்கள்.
*) தேவன் உங்களுக்கான போதுமான இடத்தை உண்டாக்குவார்.

போதுமான இடமுள்ள கிணறு தான் ரெகோபோத்.
*) முந்தைய தோல்விகள் எதுவாக இருந்தாலும், இப்பொழுது இறுதியாக, நீங்கள் ஜெயங்கொள்வதற்குப் போதுமான இடம் இருக்கிறது.
*) உங்கள் இழப்புகளைக் கர்த்தர் திருப்பி செலுத்தப் போகிறார்.

வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரப்பண்ணுவதுபோல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரப்பண்ணுவார்.Nahum 2:2
*) எதிரி நம்மிடம் திருடியது அல்ல, அதைவிட மேலானதை தேவன் நமக்குக் கொடுக்கப் போகிறார்.
*) நீங்கள் வெறுமையாக்கப்பட்டிருந்தால், தேவன் உங்களை மீண்டும் பரிபூரணத்தால் நிரப்புவார்.

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.யோவான் 10:10
*) யோபுவை மீட்டெடுத்த அதே தேவன், உங்களையும் மீட்டெடுப்பார்.
*) யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.

இரட்டிப்பான நன்மை நம் வாழ்க்கையில் இதோ வருகிறது. பிறருக்காக ஜெபிக்கும் பொழுது நம் சிறையிருப்பு மாற்றப்படும்.வியாழக்கிழமைத் தோறும் ஜெபம் நடைபெறுகிறது. ஜெபிக்க வாருங்கள்.
தொடரும்......

28/08/2026

ரெகொபோத் :
சீயோன் குமாரத்தி(பகுதி 5)

இதோ ரெகொபோத் வருகிறது :
ஈசாக்கின் ஊழியர்கள் மற்றொரு கிணற்றைத் தோண்டச் சென்றார்கள், அது அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படவில்லை.அதற்கு அவர்கள் ரெகொபோத் என்று பெயரிட்டார்கள். ரெகோபோத் என்றால் பரந்த விசாலாமான என்றுப் பொருள். இறுதியாக, இந்தத் தேசத்தில் நாம் செழிப்படைவதற்குப் போதுமான இடத்தை கர்த்தர் உண்டாக்கினார் என்று ஈசாக்கு சொன்னான்,

என் பிரியமானவர்களே,
கடந்த காலத்தில் நீங்கள் சந்தித்த இழப்புகள் அல்லது இன்று நீங்கள் அனுபவிக்கும் தற்போதைய தோல்விகள் எனக்குத் தெரியாது. நீங்கள் எத்தனை முறை முயற்சி செய்து தோற்கடிக்கப்பட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் செழிப்படைவதற்காக, தேவன் திறந்த, பரந்த, விசாலமான இடங்களை உருவாக்குவார். எனக்கெல்லாம் ஒரு நிரந்தரமான வேலைக் கிடைக்குமா, ஆசீர்வாதம் கிடைக்குமா என்று முந்தைய தோல்விகளை யோசித்துக் கொண்டு துக்கமாய் இருக்கிறீர்களா, கர்த்தர் சொல்கிறார் ரெகோபோத் உன் வாழ்க்கையில் வருகிறது என்று....

ஈசாக்கின் வரலாற்றை மாற்றி, அவருடைய உழைப்பு வீணாகாமல் பார்த்துக்கொண்ட தேவன், உங்கள் விஷயத்தில் தலையிட்டு, உங்கள் உழைப்புக்கு வெகுமதி அளிப்பார். நம் வரலாறுக் கர்த்தரால் மாற்றி எழுதப்படும்.நம் உழைப்புக்கு வெகுமதி உண்டு. நீங்கள் இழந்ததை கர்த்தர் உங்களுக்கு இரட்டிப்பாய் திருப்பித் தருவார்.

நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு 2நாளா 15:7. நம் கிரியைகளுக்குப் பலன் உண்டு, நம்பினவர்கள் ஆமேன் என்று சொல்லலாமா> இதோ நாம் இனிப்பெறப்போவதை யாராலும் நம்மிடமிருந்துப் பறிக்க இயலாது. கர்த்தர் சொல்கிறார்.....

நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்; Jeremiah 31:16

ரெகோபோத்தை பெற்றுக் கொள்ள ஆயத்தமாகுங்கள் என்னோடு......விசுவாசத்தோடுக் காத்திருப்போம்.

தொடரும்......

27/08/2026

ரெகொபோத் :
சீயோன் குமாரத்தி(பகுதி 4)

ஈசாக்கும் அவனுடைய மேய்ப்பர்களும் தோண்டிய கிணறுகளுக்கு உள்ளூர் மேய்ப்பர்கள் உரிமை கோரினர் :

கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம்பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான்.ஏசேக்கு என்பதற்கு வாக்குவாதம், சச்சரவு என்பது பொருள். அவர்கள் அடுத்துத் தோண்டிய கிணற்றிலும் ஒரு தகராறு ஏற்பட்டது. ஈசாக்கு அதற்கு 'சித்னா' என்று பெயரிட்டார்; அதன் பொருள் 'பகைமை அல்லது விரோதம்'.

1) இந்த இழப்பு நமக்கு ஏற்பட்டால் நமக்கு எவ்வளவு மனச்சோர்வாய் இருக்கும், ஈசாக்குக்கும் அவ்வாறாய் இருந்திருக்கும்.
2) ஈசாக்கு கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார், ஆனாலும் பொறாமை கொண்ட மக்கள் அவருடைய வெகுமதியைப் பறித்துக்கொண்டிருந்தனர். ( என் உழைப்பின் பலனையும் இவ்வாறாய் பறித்துக் கொண்டவர்கள் என் வாழ்க்கையிலும் உண்டு)
3) நான் மனம் தளர்ந்துப் போன நாட்கள் உண்டு, ஆனால் ஈசாக்கு மனம் தளரவில்லை, அவன் வேலைக்காரர்களும் மனம் தளரவில்லை.
4) ஈசாக்கைப் போல இருப்பது கடினம் தான், பவுலின் வார்த்தைகள் இவ்வாறாய் சொல்கிறது....

நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.2 கொரிந்தியர் 4:8-9

என் பிரியமானவர்களே, மனம் தளர்ந்துப் போகாமல், தொடர்ந்துப் பயணிக்க தயாராகுங்கள். ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய வாகன‌ நெரிசலில் செல்வதுக் கடினமாயிருக்கும், அதைக் காட்டிலும் அமர்ந்து பாடம் எடுக்கக்கூடாது என்ற நடைமுறையினால் மிகவும் என் கால்கள் வலிக்கும், ஆனாலும் திடமனதோடு தினமும் சொல்லுவேன் எனக்குள்... நீ வேகமாய் ஓடு என்று.....எனக்கான ஒரு நாள் வரும் என்ற நம்பிக்கையோடு ....

நாம் காணும் துன்பங்கள் விரைவில் முடிந்துவிடும், ஆனால் வரவிருக்கும் மகிழ்ச்சிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.

தொடரும்......

Address

Tirunelveli

Alerts

Be the first to know and let us send you an email when சீயோன் குமாரத்தி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share