சம்மோஹன சாஸ்தா

சம்மோஹன சாஸ்தா Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சம்மோஹன சாஸ்தா, Religious organisation, Street, Tirunelveli.

ஒரு முறை பூதை படைகளின் தலமை தலைவர் ஸ்ரீ சாஸ்தா அவர்கள் தனது வெள்ளை அசுப வாகனத்தில் குத்து கம்பு, போர்வாள், ஈட்டியுடன் பூ...
13/03/2024

ஒரு முறை பூதை படைகளின் தலமை தலைவர் ஸ்ரீ சாஸ்தா அவர்கள் தனது வெள்ளை அசுப வாகனத்தில் குத்து கம்பு, போர்வாள், ஈட்டியுடன் பூத படைகள் சூல ஊர் எல்கையை வலம் வர தயாராகி கொண்டு இருப்பார். அப்போது கஜ முக வாகனம் அருகே நின்று கொண்டு இருக்கும் தளபதி சங்கலி பூதத்தானரை அழைத்து இன்று இங்கு காவல் நில்லுங்கள் நான் சுடலை மற்றும் மாட படைகளை அழைத்து செல்கிறேன் என்று கூறிவிட்டு வெள்ளை அசுப வாகனத்தில் ஏறி புறப்பட்டார். அவருடன் வரும் பூத படைகளை வழி நடத்தும் சுடலைமாடனுக்கு ஒரு சந்தேகம் மற்றும் மனகுழப்பம் தோன்றியது.

நமக்கு ஏன் படை தளபதி பட்டம் கிடைக்கவில்லை? நமது ஐயன் சாஸ்தாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நமது குலத்திற்கு காவலாக தான் இருக்கிறேன் என்று சிந்தித்து கொண்டு இருப்பார். அதை ஞான சித்தி மூலம் உணர்ந்த சாஸ்தா ஏன் சுடலையான் உன் முகத்தில் இத்தனை கலவரம்? என்ன வேண்டும் உனக்கு என கணத்த குரலில் கேள்வி கேட்பார். ஐயனே சிவ குலத்தில் மானிடனாக பிறந்த நான் மானிட ஆசை பாசங்களை அனுபவித்து இறுதியாக என் சீவன் என் பூத உடலில் இருந்து பிரிந்த காரணத்தால் உங்களிடம் வந்து சேர்ந்தேன். எனது பாவ புண்ணிய கணக்கை கொண்டு மாட படைகளில் ஒருவராக இருந்த நான் தற்போது சிவ மகன் பட்டம் கொண்ட சுடலை மாடன் பதவிக்கு உயர்ந்துள்ளேன். இதற்கு 100 வருட காலங்கள் ஆகிவிட்டன. உங்கள் கட்டளைகளை நிறைவேற்றி மாட படைகளை நன்றாக வழி நடத்துகின்றேன். ஆனால் எனது தந்தையின் தம்பி மகனாகிய என்னுடைய இளை சகோதரன் 18 வருட காலங்கள் கூட ஆகவில்லை ஆனால் அவனுக்கு பூத படைகளின் தளபதி என்று சொல்லக்கூடிய சிவனின் உயர்ந்த மகன் பூதத்தனார் பதவியை கொடுத்து விட்டீர்கள் என்று மன வருந்தி கூறினார்.

அதற்கு சாஸ்தா அவர்கள், மாடனே இந்த பதவி தலைமை பொறுப்பு பட்டம் என்பது உனது காக்கும் திறமையை மட்டும் பொறுத்தது அல்ல நீ மானிடனாக வாழும் காலத்தில் உனது பெரியவர்கள், பெற்றோர், மனைவி, மக்கள் மற்றும் பெண்களை எவ்வாறு நடத்தினாய் அதே போன்று உனது தந்தை வழி கர்மவினையை பொருத்து தான் அமையும். உன்னை விட வயதில் மூத்தவர்கள் இன்று பரிவார தெய்வங்களிலும் இல்லாமல் பந்தி சேனைகளிலும் இல்லாமல் பேய், பிசாசு, தூர் ஆன்மாவக தீய மாந்தீரிகர்களின் கைப்பிடியில் சிக்கி பல துயரங்களை அனுபவிக்க காரணம் குலத்தை மதிக்காதது, குலத்தை நல்வழி படுத்தாது, குலத்தின் ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டது, துர் மாந்தீரியாகி அப்பாவி ஏழை மக்களை கொடுமைபடுத்தியது, பெற்றோர் மற்றும் மனைவிகளை அடிமைபடுத்தியது, பெண்கள், உடன் பிறந்தவர்கள், நம்பியவர்களுக்கு துரோகம் செய்தது, கோயில் உடைமைகளை அபகரித்தது என்று பல குற்றங்களை ஈவு இறக்கம் இன்றி செய்ததன் வினையே ஆகும். உனது கர்ம வினை குறைவாக இருந்த காரணத்தால் தற்போது நீ சுடலை மாடன் பதவி அந்தஸ்தை பெற்று உள்ளாய். உனக்கு அஷ்டமா சித்தியான பிரபஞ்ச சக்தியை வரமாக அளிக்கும் சக்தி என்னிடம் இருந்தாலும் சிவன் அனுமதி இல்லாமால் உனக்கு அந்த வரத்தை அளிக்க முடியாது. அந்த வரமே மற்றவர்களுக்கு நீ அளிக்கும் வர சக்தி ஆகும். உனது கர்மவினை கணக்குகள் அனைத்தும் மகேஸ‍‍்வரன் அறிவார். மேலும் அஷ்டமா சக்திகளான அணிமா, மகிமா, இலகிமா, சித்திகள், கரிமா, ப்ராப்தி, பிரகாம்யம். ஈசத்துவம் போன்றவை கை கூடும் போது நீ மாமிச உணவுகளை தவிர்த்து ஞான சிந்தனையில் இருந்தால் மட்டுமே தேவ ரகசியமான எதிர்காலத்தை உணர முடியும். அதை உணர்ந்த பிறகு தான் உன்னை நம்பி வந்தவர்களுக்கு என்ன வரம் கொடுப்பதால் கால சக்கரம் சரியாக சுழலும் என்பதை உணர்வாய். எனவே இதை உணர்ந்து உனது தலமையாளர்களின் கட்டளைக்கு அடி பணிந்து சிவன் கூற்றுக்கு கட்டுபட்டு உனது கடமையை தொடர்ந்து நிறைவேற்றிவா, வெற்றி உனக்கே என்று கூறி அசுபம் கனைக்க ஊரை காக்க வலம் சென்று விடுவார்.

மனித பிறவி என்பது பிறந்து சராசரியாக 60 முதல் 70 வருட காலங்கள் வரை வாழும் போது நீ செய்த வினையை, கர்ம வினையாக பல ஆயிரம் ஆண்டு காலம் அனுபவிக்க வேண்டும் என்பது தெரியாமல் பல மனிதர்கள் இந்த பிறவி பணம் சம்பாதிக்கவும், ஆடம்பரமாக வாழவும் பல தவறுகளை செய்து வருகின்றனர். இதனை உணர்ந்து நல் புரிதலுடன் குல மற்றும் குடும்ப ஒற்றுமையுடன், தவறு புரியாமல் செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கும் என்ற மன பயத்துடன், நோய் இல்லாத நல் வாழ்க்கை வாழ உறுதி எடுங்கள். இயற்கை மற்றும் பிரபஞ்ச சக்திகளை உணர முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆன்மாவை நல் வழிபடுத்துங்கள்.

பங்குனி உத்திரம் அன்று சிவன் கோயில், முருகர் கோயில் மற்றும் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட வேண்டிய நேரம் 24/03/2024 ஞ...
13/03/2024

பங்குனி உத்திரம் அன்று சிவன் கோயில், முருகர் கோயில் மற்றும் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட வேண்டிய நேரம் 24/03/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 11.30 முதல் 25/03/2024 திங்கள் கிழமை காலை 11.15 வரை உத்தமம். அகால மரணம், தொழில் நஷ்டம், கடன் சுமை, திருமணம் தடை, குழந்தையின்மை, தீராத நோய் போன்றவை குடும்பத்தில் அதிகமாக இருந்தால் குறைந்த பற்றம் மூன்று நாள் விரதம் இருந்து பூர்வீகக் குல தெய்வ கோயிலில் 9 மண் அகல் விளக்கில் விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி சூர தெங்காய் உடைத்து வழிபட சத்ரு கட்டு உடைந்து குல தெய்வம் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதனால் எதிர் மறையினால் ஏற்பட்ட பிரச்சனைகள் குடும்பத்தில் குறைந்து நோய் பிணியை குணப்படுத்த நல்ல வைத்தியர் அமைவார். சிவன் கோயிலாக இருந்தால் இலுப்பை எண்ணேய் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

பண்டைய காலம் தொட்டு இன்று முதல் தென் தமிழக மக்கள் குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சார்ந்த பூர...
26/10/2023

பண்டைய காலம் தொட்டு இன்று முதல் தென் தமிழக மக்கள் குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சார்ந்த பூர்வக்குடி மக்கள் வழிபடும் சாஸ்தா ஐயனார் யார்? பூத கணப்படைகள் என்றால் என்ன? பூதப்படைகளின் தலைவன் சாஸ்தா என்று அழைக்க காரணம் ஏது? சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் மற்றும் குல தெய்வ வழிபாடு பற்றிய பல சந்தேகங்களை உள்ளடக்கிய காணோளி, கானத்தவறாதீர்கள்...

Who is Lord Sastha? சாஸ்தா, ஐயனார் யார்குலதெய்வத்தின் பலம் என்ன? குலதெய்வம் பாகம் -2 Kuladeivam - Part -2 சாஸ்தா, ஐயனார் யார்? குலதெய்வத்த.....

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் சாஸ்தா, ஐயனார் தெய்வங்கள் அங்கு உள்ள பல மக்களுக்கு குல தெய்வமாக உள்ளன. இ...
12/08/2023

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் சாஸ்தா, ஐயனார் தெய்வங்கள் அங்கு உள்ள பல மக்களுக்கு குல தெய்வமாக உள்ளன. இந்த தெய்வங்கள் மற்றும் பரிவாரங்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை கொடைவிழா எடுப்பார்கள். அப்போது இசைக்கும் நையாண்டி மேளத்திற்கு மயங்காத தெய்வங்கள் இல்லை மனிதர்களும் இல்லை எனலாம். இந்த இசையின் போது குடும்பத்தில் உள்ளவர்கள் சிலர் மீது பரிவாரங்கள் இறங்கி ஆடும். 3 முதல் 5 விநாடி மட்டுமே இறங்கு அதன் உணர்வு 3 மணி நேரம் முதல் 5 மணி நேரம் அவர்கள் உடம்பில் இருக்கும். சாஸ்தா ஐயனார் கோவிலாக இருந்தால் சுடலை ஆண்டவர் தான் முதலில் வந்து இறங்குவார். தெய்வ உபாசனை எடுத்தவர்கள் யாராவது அந்த இடத்தில் இருந்தால் சாக் அடித்த உணர்வு ஏற்படும். அந்த சில விநாடிகள் சாமி ஆடுபவரின் துளு ஆன்மா அவர்கள் உடம்பில் இருந்து விலகி சென்று சுடலை மாடன் அவர்கள் உடம்பில் வந்து இறங்கி ஆடும். அடுத்து பரிவார தெய்வங்கள் வந்து ஆடும். அந்த சமயம் வாக்கு பலிதம் இருக்கும் குறி நன்றாக வரும். இந்த நிகழ்ச்சி நடந்த அடுத்த சில விநாடிகளில் சங்கிலி பூதத்தனார் வருவார் அடுத்த சில விநாடிக்குள் ஈரேழு உலகத்தின் அதிபதி குல மண்ணன் குல காவலர் ஸ்ரீ சாஸ்தா அம்பாள் பூத படைகள் மரியாதை ஏற்று வந்து இறங்குவார். இது எல்லாம் ஒரு குறிப்பிட்ட விநாடிகளுக்குள் நடக்கும் செயலாகும்.

அந்த சமயம் சாமியாடிகளுக்கு நெருப்பு இதமாக இருக்கும். கொதிக்கும் பானைக்குள் கை விட்டாளும் அவர்களுக்கு தீக்காயம் ஏற்படாது. ஒரு வெண்கல கொப்புரைக்குள் அதிகமான சூடத்தை ஏற்றி கொடுத்தாலும் கையில் வெப்பம் ஏராது. ஆனால் இன்று பலர் தற்பெருமைக்காவும் நான், என் குடும்பம் மட்டும் தான் சாமி ஆட வேண்டும் என் கோவில் என்ற சுயநலத்துடன் தீ பட்டாலும் சுடாமல் இருக்க சில மந்திரங்களை சித்தி செய்து பொய்யாக ஆடுகின்றனர். அதன் தீ தழும்பு சபை அறியும். இதனால் எந்த ஒரு சிறு நன்மையும் நடக்காது மாறாக அவ்வாறு பொய்யாக ஆடுபவர்களின் குடும்பத்திற்கு தான் பாதிப்பு அதிகம். அதிலும் ஒரு சிலர் ஒரு படி மேலே போய் ஸ்தம்பனம் மந்திரத்தை உரு ஏற்றி வேரு யாருக்காவது சாமி வந்தால் எதற்காக வந்தது கோயில் பூஜை முறைகளில் தவறு ஏதேனும் இருக்கின்றனவா என்று கேட்க விடாமல் சாமி ஆட விடாமல் ஒரு நொடியில் நிறுத்தி விடுவார்கள். பூஜை முறையில் தவறு இருக்கும் பற்றத்தில் குல தெய்வம் உள்ளே வராது குல தெய்வம் உள்ளே வரவில்லை ஏன்றால் அதை உணர்த்த பரிவார தெய்வங்கள் வேறு யாரேனும் ஒருவர் மீது இறங்கி அந்த பிரச்சினை கூறி சரி செய்ய நினைக்கும். ஒரு குடும்ப கோவிலில் நான் தான் இது என் கோவில் என் தெய்வம் என்று வீராப்பு பேசுபவர்கள் பலர் இருக்கும் இடம் இல்லாம் ஆக்கி விடுவார் அந்த சுடலை ஆண்டவர்.

நாம் செய்யும் தவறை மன்னித்து நம்மை ஏற்கும் பக்குவம் குல தெய்வத்தற்கு உண்டு ஆனால் சுடலை ஆண்டவர் கோவம் பொல்லாதது. ஈவு இரக்கம் பார்க்க மாட்டார் நமது மன்னிப்பை ஏற்க மாட்டார். நாம் போய்யாக செய்யும் ஒவ்வொரு தவறும் (சிவ பொங்கல் பானை பொங்கும் போது சண்டை, அர்த்த சாம பூஜை நேரம் மாறும் போது) பரிவாரங்களின் உக்கிரம் அதிகமாகும். இதனால் மந்திரி சங்கிலி பூதத்தனார் படை தளபதி சுடலை ஆண்டவரின் வேலை அதிகமாகும். கவனம் சிந்தனை அனைத்தும் மாமன்னன் ஸ்ரீ சாஸ்தா அகம் மகிழ்ந்து ஆசி வழங்க கருவறை வர வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை செய்து கொண்டே இருக்கும். இதில் இடையூறு செய்யும் அனைவரையும் கடுமையாக தண்டிப்பார். எனவே குடும்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு இது போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பது நமது உறவுகள் அனைவருக்கும் மிக நன்று.

12/08/2023

எச்சில் படையல்

எச்சில் படையல் என்பது ஒரு பெரிய தலை வாழை இலையில் இனிப்பு பழகாரம், பொரியல், அவியல், கூட்டு, பாயாசம் புழுங்கள் அரிசி சாதம், காய்கறி சாம்பார், அப்பளம், பருப்பு நெய் என எல்லாய் வைத்து நாம் சாப்பிடும் தருவாயில் நாய் வாய் வைத்தால் எப்படி இருக்கும்?

சாஸ்தா , ஐயனார் குல தெய்வமாக கொண்டவர்கள் ஆண்டிற்கு ஒரு முறை அவரவர் குல தெய்வங்களுக்கு கொடை கொடுப்பார்கள். அவ்வாறு கொடை விழா கொடுக்கும் போது அந்த மூன்று நாட்கள் தொடர்ந்து அம்பாள் உடனாய சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்கள் கோவிலில் வந்து தங்கி, கொடுக்கும் மரியாதையை ஏற்றுக்கொண்டு அகம் மகிழ்ந்து குலம் வாழ ஆசி வழங்கும். மற்ற காலங்களில் பூஜை கால நேரங்களில் மட்டுமே வந்து படையலை ஏற்று அருள் பாலித்து சென்று விடும். அதனால் தான் வருடத்திற்கு ஒரு முறை அதுவும் கோவில் திருவிழாவின் போது கண்டிப்பாக குல தெய்வ கோவிலுக்கு வர வேண்டும் என்று குடும்ப பெரியவர்கள் கூறுகின்றனர். தெய்வங்கள் இவ்வாறு தங்குவது சாதரண விஷயமாக எண்ண வேண்டாம்.

உபசரிப்பு, மரியாதை பய பக்தியுடனும் ஒழுக்கத்துடன் நடை பெறுகிறதா என்பதை கவனிக்க தவறாது. கொடை விழாவின் போது தீர்த்தம் எடுக்க எந்த கோவிலுக்கு எந்த ஆற்றங்கரைக்கு குடும்ப பெரியவர்கள் செல்கிறார்களோ அது தான் அவர்களின் தாய் வழி கோவில் ஆகும். கோவில் திருவிழா தொடங்குவதற்கு முன் விநாயகருக்கு அருகம்புல் மாலை வாங்கிய பின் ஐந்து வகையான பழங்கள் , பேரிச்சை, வெற்றிலை, கொட்டாம் பாக்கு, கிழி சுண்ணாம்பு, மல்லிகைப் பூ, பன்னீர் ரோஜா போன்ற மணம் வீசும் மாலைகள், அத்தர், ஜவ்வாது, பசு சாண விபூதி, ஈர சந்தனம், குங்குமம், பத்தி, சூடம், பட்டு, அங்கவஸ்திரம் போன்றவற்றுடன் மேளதாளம் முழங்க தாய் வழி கோவிலுக்கு சென்று இனிப்பு பொங்கல் படைத்து தேங்காய் பழம் உடைத்து குல தெய்வத்தை நம்முடன் அழைத்த வருவார்கள். அவ்வாறு அழைத்து வரும் போது குடும்பத்தில் உள்ள பெரியவர்களை முன்னிருத்தி தான் அனைத்து செயல்களையும் செய்ய வேண்டும். இதில் வாங்கு பொருட்கள் தரமற்றதாகவும், ஏற்கனவே பயன்படுத்தியதாகவும் இருக்க கூடாது.

சாமி ஆடுபவர்களிடம் ஒருமையில் பேச கூடாது. பூஜையின் போது அநாகரீகமான வார்த்தைகள் பேச கூடாது. இவ்வாறு அழைத்து வந்த பிறகு பிள்ளையாரின் பூஜைக்கு பிறகு சாஸ்தா மற்றும் சாஸ்தா உடனாய அம்பாளுக்கு உரிய மரியாதை மற்றும் படையல்கள் கொடுத்த பிறகு தான் பரிவார தெய்வங்களுக்கு படையல் மற்றும் பலி இட வேண்டும். பரிவார தெய்வங்களுக்கு படையில் கொடுக்கும் போது மூத்தவர்கள் யார் என்பதை அறிந்து வரிசையாக தான் போஜன பூசை பரிமாற வேண்டும். இந்த படையல் முறையில் பரிவார தெய்வங்களுக்கு பிறகு பிள்ளையாருக்கோ அல்லது சாஸ்தாவிற்கோ கொடுத்தாலும் அது எச்சில் படையல் ஆகும். அதை பரிவாத தெய்வங்கள் ஏற்காது அதே போன்று சாஸ்தாவிற்கு பிறகு பிள்ளையாருக்கு கொடுத்தாலும் அது எச்சில் படையல் ஆகும். இதை சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்கள் ஏற்காது. மேளதாள முழங்க மரியாதையுடன் அழைத்த தெய்வத்தை அவமதிப்பதற்கு சமம் ஆகும்.

இது கோவில் திருவிழாவை முன்னின்று நடத்தியவர்களை அதிக அளவில் பாதித்தாலும் இவ்வாறு எச்சில் படையாளக அமையும் பற்றத்தில் கூலி வேலை பார்த்தோ, வியாபாரம் பார்த்தோ, வியர்வை சிந்தி உழைத்தோ நீங்கள் குடுக்கும் வரி பணம் அந்த ஆண்டு பயனற்று
போகும். அந்த வருட முழுவதும் அந்த வகையாறை சார்ந்தவர்கள் வீட்டில் பக்கவாதம், புற்றுநோய், அறுவை சிகிச்சை, தற்கொலை, மாரடைப்பு, விபத்து, பைத்தியம், பேய் கோளாறு, திருமண தடை, வியபாரம் நஷ்டமாகி கடன், நீதிமன்ற பிரச்சனை, சிறைச்சாலை செல்ல வேண்டிய சூழ்நிலை என்று பல பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவில் பூஜை முறை சரியாக நடக்கும் பற்றத்தில் எப்பேற்பட்ட மாந்திரீக கட்டிலும் அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் அக பட மாட்டார்கள்.

அண்ணன்னோ, தம்பியோ, மகனோ, தந்தையோ பூஜை முறையில் தவறு செய்தால் அதற்கு எதிராக கேள்வி கேட்டு அதை சரி செய்ய துளி கூட தயங்க கூடாது. இதனால் ஒட்டு மொத்த தெய்வத்தின் அனுகிரகமும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பமும் ஒற்றுமையுடன் இருக்கும் வளர்ச்சி அடையும். எனவே கோவில் கொடைவிழாவை நடத்தும் உறுப்பினர்கள் பெரியவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். யாரோ ஒருவர் செய்யும் தவறால் ஒட்டு மொத்த குடும்பமும் பாதிப்படையும் என்பதை கவனத்தில் கொண்டு சரியான முறையில் கொடை விழாவை நடத்தி குடும்பத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லுங்கள்.

இந்த ஓவியத்தை சில்பா சிலை ஓவியமாக தத்ரூபமாக வரைந்த ஸ்தபதிகளுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள். ஸ்ரீ சுடலை மாட சுவாமி, சங்கில...
09/08/2023

இந்த ஓவியத்தை சில்பா சிலை ஓவியமாக தத்ரூபமாக வரைந்த ஸ்தபதிகளுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்.

ஸ்ரீ சுடலை மாட சுவாமி, சங்கிலி பூதத்தனார் முதல் 64 பந்தி தெய்வங்களும் 21 சேனைகளும் புடை சூல, வானுலக தேவர்கள் பணிந்து வணங்க, ரிஷிக்கள் வாழ்த்த, பணி பெண்கள் வாழ்த்து கூறி விசிர, வெள்ளை யானை என்று சொல்லக்கூடிய ஐராவதத்தின் மீது ஐயன் அமர்ந்து பூமியே அதிர வலம் வரும் அழகிய காட்சி தான் இது.

இந்த வெள்ளை யானை என்று சொல்லக்கூடிய ஐராவதம் தேவலோக அதிபர் இந்திரன், சிவ புத்திரனான முருகப்பெருமான் மற்றும் ஐயன் சாஸ்தாவின் வாகனமாக உள்ளன. சாதாரண யானை போன்று இல்லாமல் ஆயிரம் மடங்கு பலம் கொண்டது. ஒவ்வொரு கால் அசைவிற்கும் பூமியே அதிரும் போர் குணம் கொண்ட யானை ஆகும். இதை தன் சொல்லில் கட்டுபடுத்தும் நமது ஐயன் எவ்வளவு பெரிய பலம் கொண்டவராக இருப்பார்?

குறிப்பு: சில்பா சிலை சாஸ்திரம் என்பது சிற்ப கலை ஸ்தபதிகளின் முன்னோர்கள் அவர்கள் வரைய வேண்டிய தெய்வத்திற்காக உபாசனை இருந்து சித்தி பெற்று தெய்வ உருவம் மற்றும் அமைப்பை ஞானத்தால் உணர்ந்து அதன் உண்மை தன்மையை ஓவியமாக வரைந்தவர்கள் ஆவார்கள்.

கோவில் திருவிழா, கொடை விழா மற்றும் கும்பபிஷேகம் போது ஐயன் இவ்வாறு தான் வலம் வந்து இயற்கை சீற்றம், பருவ கால நோய், விபத்து, பொருளாதர பாதிப்பு போன்றவற்றில் இருந்து நம்மை காத்து அருள் புரிவார்.

09/08/2023
ஐயனார், சாஸ்தா போன்ற தெய்வங்கள் கலி உலக காவல் மற்றும்  குல தெய்வங்கள் ஆகும். இந்த மாதிரியான குல தெய்வங்களுக்கு 61 பந்தி ...
07/08/2023

ஐயனார், சாஸ்தா போன்ற தெய்வங்கள் கலி உலக காவல் மற்றும் குல தெய்வங்கள் ஆகும். இந்த மாதிரியான குல தெய்வங்களுக்கு 61 பந்தி தெய்வங்கள் 21 சேனைகள் ஐயன் சொல்லிற்கு கட்டுபட்டு வேலை செய்யும். கோவிலின் இடம் அமைப்பு மற்றும் அந்தந்த குடும்ப பாவ புண்ணிய கருமாக்கள் படி பந்தி தெய்வங்கள் மற்றும் சேனைகள் அந்தந்த கோவிலுக்கு அமையும். இந்த பரிவார தெய்வங்களை களிமண் அல்லது செம்மண் பீடத்தில் பிராண பிரதிஷ்டை செய்வார்கள். இதற்கு பல்வேறு வகையான காரணங்கள் உள்ளன. இந்த தெய்வங்களுக்கு வருடா வருடம் அசைவ பலி அந்தந்த குடும்பத்தார்கள் ஒன்று சேர்ந்து திருவிழா கொடுப்பார்கள். அப்படி பலி கொடுக்கும் முன் கணபதி பூஜை முடித்த பின் கருவறையில் உள்ள குல தெய்வத்துக்கு பல்வேறு விதமான அபிஷேகம் செய்து பட்டு உடுத்தி சைவ படையல் பரிமாறி குலம் வாழ வேண்டி அர்த்த சாம பொங்கள் இட்டு பூஜை செய்வார்கள். அந்த திருவிழாவின் போது கா்மவினை பாதிப்பு அதிகமாக உள்ளவர்கள் குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவர் மீது இந்த பந்தி தெய்வங்கள் இறங்கி ஆடும். அவன் கர்ம வினை குறைந்து அவன் குடும்பம் வளர்ச்சி அடைய பரிவார தெய்வங்களுக்கு அந்த குல தெய்வம் கட்டளையிடும். அந்த சாமியாடிகள் மூன்று வருட காலங்கள் மட்டும் ஆடுவார்கள் பரம்பரையாக ஆட மாட்டார்கள் அதிலும் சில பேர் எனக்கு பிறகு என் மகன் மற்றும் என் வாரிசு மேல் வந்து ஆட கூடாது என்று குல தெய்வம் முன் பரிவார தெய்வங்களிடம் சத்தியம் வாங்கி குல தெய்வம் முன் கீழே விழுந்து வணங்கி வேண்டிக் கொள்வார்கள்.

இதற்கு மிக முக்கிய காரணம் பந்தி தெய்வமான பல மடங்கு வேகம் கொண்ட ஸ்ரீ சுடலை மாடன் போன்ற பெரும் தெய்வங்கள் முதல் சிறு தெய்வங்கள் வரை அசைவ படையல் ஏற்றாலும் நம்மிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கும். தெய்வம் நம்மிடம் உள்ள போது நமது மன பலம் மற்றும் தைரியம் அதிகமாகும். காம எண்ணங்கள் அதிகமாகும் காரணம் நமது மூலாதார சக்கரத்தில் தான் தெய்வங்கள் இறங்கும். நம் சகிப்பு தன்மை மற்றும் ஒழுக்க
இல்லாமல் இருந்தால் சாப சொற்கள் மற்றும் அசுப வார்த்தைகள் சரளமாக நம் வார்த்தையில் உதிர்க்கும். உழைக்கும் எண்ணம் குறையும் மது மற்றும் அசைவ உணவுகள் ஈர்க்கும் காரணம் அந்த தெய்வத்தின் கோவமே ஆகும். இதனால் மூர்க்க குணம் உண்டாகும் நமது குடும்ப உறவு மனைவி பிள்ளைகள் மற்றும் சொந்தகளுக்கு இடையில் பேச்சுகளில் நிதானம் இழந்து இறுதியில் நிம்மதி இல்லாமல் போய்விடும். விவரம் தெரிந்த பெரியவர்கள் இப்போது கூட அவர்கள் குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவர் மீது குல தெய்வ கோவிலில் உள்ள ஏதாவது ஒரு பரிவார தெய்வம் உடம்பில் வந்து ஆடினால் குல தெய்வம் முன் சத்தியம் வாங்கி கொண்டு அவர்கள் குடும்பத்திற்கு வந்த பிரச்சினை மற்றும் அதற்கான பரிகாரம் என்ன என்று தெரிந்து கொண்டு மன்னிப்பு கேட்டு உடலிறங்கி ஆட வேண்டாம் என குல தெய்வம் முன் சத்தியம் வாங்கி கொள்வார்கள்.

குடும்பத்தில் பிரச்சனை, ஏவல் ,செய்வினை தாக்கம் அதிகமாகி கடன், ஆறாத வடுவான நோய், தொடர்ந்து இறப்பு மற்றும் சரியான குல தெய்வ வழிபாடு இல்லாத காரணத்தால் உன் கர்மாவை நிவர்த்தி செய்து உன்னை வாழ வைக்க மட்டுமே பரிவார தெய்வங்கள் உன் உடலில் இறங்கி வந்து ஆட குல தெய்வம் அருள் புரியும்.

ஆனால் தற்போது பல பேர் தற்பெருமைக்காக பல மடங்கு பலம் பெற்ற பரிவாரங்களை செயற்கையாக அவர்கள் உடலில் இறக்கி ஆடுகின்றனர். பரிவார தெய்வங்களின் வேகம் மற்றும் ஆட்டத்திற்கு உன் குலம் தாங்காது. இதனால் உன் குல தெய்வமும் ஒதுங்கி செல்லும். எல்லாவற்றிற்கும் முழு முதற் கடவுளான கணபதியை பிறப்பு, திருமணம், சடங்கு மற்றும் பிணத்தை எரிக்கும் போது சுடுகாட்டில் கூட வழிபட காரணம் செய்யும் செயல் தடை இல்லாமல் நடக்க வேண்டும். அப்பேற்பட்ட ஆனை முகத்தானை நீங்கள் உபாசனை செய்ய கூட உங்கள் குல தெய்வ அனுமதி வேண்டும். எனவே குல தெய்வ வழிபாடு முறைகள் விவரம் தெறிந்த பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து நோய் இல்லாத பொருளாதர பாதிப்பில்லாத வாழ்க்கை வாழ குல தெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள். நன்றாக வாழ்ந்தால் 60 முதல் 70 வருட காலம் மட்டுமே என்பதை உணர்ந்து குல தெய்வத்தை மதித்து நான் என்ற அகங்காரம் இன்றி உறவுகளுடன் ஒற்றுமையாக வாழுங்கள்.

உன் குடும்ப கோவில் கருவறையில் உன் குலத்தை காக்க பிரதானமாக எந்த தெய்வம் வீச்சி இருக்கின்றதோ அதுவே உன் குலத்தை காக்கும் கு...
07/08/2023

உன் குடும்ப கோவில் கருவறையில் உன் குலத்தை காக்க பிரதானமாக எந்த தெய்வம் வீச்சி இருக்கின்றதோ அதுவே உன் குலத்தை காக்கும் குல தெய்வம் ஆகும். அந்த தெய்வத்தை மதிக்காமல் நீ பிள்ளையாரை கும்பிடு, முருகரை கும்பிடு, காளியை கும்பிடு, சித்தர் ஞானியை கும்பிடு, சுடலையை கும்பிடு, எல்லா தெய்வத்துக்கும் காவலாக வந்து நிற்கும் 18ம் படி கருப்பன்ன சாமியை கும்பிடு அவ்வளவு ஏன் இந்த பஞ்ச பூதங்களை ஆட்டி படைக்கும், உலக உயிர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக இருக்கும் அண்ட சாரசரத்தை தன் கட்டுக்குள் வைத்து எல்லாம் உயிருக்கும் படி அளக்கும் அந்த ஈசனின் தலையில் வைரம் வைடூரியம் நவ ரத்தினங்கலால் ஆன கீரிடத்தை வைத்து நீ அழகு பார்த்தாலும் உன் குல தெய்வம் அனுமதியின்றி மற்ற எந்த ஒரு தெய்வத்தின் அனுகிரகத்தையும் சிறு துளி கூட உன்னால் பெற முடியாது.

உன் குடும்பத்தில் பிறக்கும் முதல் குழந்தையின் முடி காணிக்கை உன் குல தெய்வத்திற்காக இருக்கட்டும். உன் இல்லத்தில் நடக்கும் எந்த ஒரு விஷேசத்தின் பத்திரிக்கை அழைப்பிதல் முதல் மரியாதை உன் குடும்ப கோவிலின் கருவறையில் உள்ள உன் குல தெய்வத்திற்காக இருக்கட்டும். உன் வீட்டு பிள்ளைகள் ஆணோ பெண்ணோ மேற் படிப்பிறக்காக வெளி ஊரோ வெளிநாடோ செல்லும் தருவாயில் உன் குல தெய்வ கோவில் சென்று வேண்டி வழி அனுப்பு. ஒழுக்கம் கற்பு தவறாமல் எந்த ஒரு பிரச்சனைகளிலும் அகப்படாமல் எத்தனை வருட காலமானலும் அந்த வேலை முடிந்து வீடு திரும்பும் வரை அவர்களுக்கு வரும் பிரச்சனைகளின் போது உன் குலத்தை காக்க உன் வீட்டு தெய்வம் இயற்கை தெய்வமான சிவன், சக்தி, கணபதி ,முருகர் என்று ஏதாவது ஒரு தெய்வத்தை வேண்டிய போது வேண்டிய இடத்தில் துணைக்கு அழைத்து அந்த பிரச்சனைகளில் இருந்து அவர்களை காப்பாற்றும். இவ்வளவு பிரதான சக்தி படைத்த உன் குல தெய்வம் ஆசிர்வாதமின்றி உன் ஆன்மா சிவலோகம் போக முடியாது. பேயாக பிசாசாக அழைகின்றவர்கள் பலர் செய்த தவறு குல தெய்வத்தை மதிக்காமல் போனது தான். பொன் பொருளை விட நோய் இல்லாமல் வாழ்ந்து நம் ஆன்மாவை நல் வழி படுத்த குல தெய்வத்தை மதியுங்கள்.

Address

Street
Tirunelveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when சம்மோஹன சாஸ்தா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share