Arulmigu Sorimuthu Ayyanar

Arulmigu Sorimuthu Ayyanar Arulmigu Sorimuthu Ayyanar temple

இந்த தெய்விக பக்கத்தில் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்து.தெய்வங்களை சார்ந்த படங்களும் மற்றும் அதன் வரலாறுகளும் மட்டுமே பகிருங்கள் நண்பர்களே.சினிமா,அரசியல், இதில் பகிர வேண்டாம்...அன்புடன் அய்யனார் பக்தன்

ஆடிஅம்மாவாசை கடந்த ஆண்டை  விட வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது..அதிக மழை இருப்பினும் மக்கள் பொருட்படுத்தாமல் தங்கள் வேண்டுத...
17/08/2018

ஆடிஅம்மாவாசை கடந்த ஆண்டை விட வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது..அதிக மழை இருப்பினும் மக்கள் பொருட்படுத்தாமல் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
#காணிக்குடிஇருப்பு Agu-12-18❤️

சொரிமுத்து அய்யனார் கோயில் செல்லும் பக்தர்களே கவனியுங்கள் நீங்கள் கோயிலுக்கு செல்லும் முன்பு அங்குள்ள புனிதத்தை தெரிந்து...
05/08/2018

சொரிமுத்து அய்யனார் கோயில் செல்லும் பக்தர்களே கவனியுங்கள் நீங்கள் கோயிலுக்கு செல்லும் முன்பு அங்குள்ள புனிதத்தை தெரிந்து கொள்ளுங்கள்.வனத்தை அசுத்தம் செய்யாதிர்கள்
முருகனுக்கு ஆறுபடை வீடு இருப்பது போல் ஐயப்பனுக்கும் சொரிமுத்து அய்யனார் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என ஆறுபடை வீடு உள்ளது. சபரிமலையிலேயே சாஸ்தா முதலில் அமர்ந்தார் என்று சொல்வதுண்டு. ஆனால், அதற்கும் முன்னதாக அமைந்த கோயிலாக இந்த சாஸ்தா கோயில் கருதப்படுகிறது. இங்குள்ள சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டபடி, சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார். இவருக்கு எதிரே ஒரே பீடத்தில் நந்தி, யானை, குதிரை வாகனங்கள் இருப்பதும், இவரது சன்னதியிலேயே சப்தகன்னியர்கள் இருப்பதும், முன்மண்டபத்தில் உள்ள பைரவரின் எதிரே நாய் வாகனம் இருப்பதும் விசேஷமான அம்சம். குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வழிபடுகிறார்கள்.மகாலிங்கம், சொரிமுத்தைய்யனார், சங்கிலி பூதத்தார், பிரம்மரட்சஸி, தளவாய்மாடன், தூசிமாடன், பட்டவராயர், அகத்தியர், பேச்சியம்மன், சுடலைமாடன், இருளப்பன், இருளம்மன், கரடிமாடசாமி, மொட்டையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளனர்.சிறப்பம்சம்: பந்தள மன்னர் அரண்மனையில் வளர்ந்து வந்த சாஸ்தாவின் அம்சமான ஐயப்பன், தன் இள வயதில், இப்பகுதிக்கே முதன் முதலில் வீர விளையாட்டு கற்க வந்தார். அதன் காரணமாக இங்கு முதன் முதலில் கோயில் எழுந்ததாகவும், அடுத்து அவரது வரலாற்று நிகழ்வுகள் நடந்த குளத்துப்புழை, ஆரியங்காவு, அச்சன்கோவில் தலங்களில் கோயில்கள் எழுப்பப்பட்டதாகவும், இறுதியாக அவர் தவம் மேற்கொள்ள சபரிமலை சென்ற போது தான், சபரிமலை கோயில் தோன்றியதாகவும் ஒரு கருத்து இருக்கிறது.

செருப்பு காணிக்கை: இப்பகுதியில் வசித்த பிராமணரான முத்துப்பட்டன் என்பவர், பிராமண குலத்தில் பிறந்து, சூழ்நிலை காரணமாக தாழ்த்தப்பட்ட குலத்தில் வளர்ந்த இரு பெண்களைக் காதல் திருமணம் செய்து கொண்டார். காதலுக்கு ஜாதியில்லை என்பதை முதன் முதலாக நிரூபித்த இவர், பசுக்களைப் பாதுகாக்கும் ஒரு போரில் பங்கேற்று மரணமடைந்தார். அவரை பட்டவராயன் என்று அழைத்து, இந்தக் கோயிலின் ஒரு பகுதியில் சன்னதியும் எழுப்பினர். பொம்மக்கா, திம்மக்கா என்ற தம் மனைவியருடன் பட்டவராய சுவாமி அருள்கிறார். இவர் பிராமணராயிருந்தும், தன் மாமனார் உத்தரவுப்படி, காதல் திருமணம் செய்து கொள்வதற்காக, செருப்பு தைக்கும் பயிற்சியும் எடுத்துக் கொண்டார். இதன் காரணமாக இவரது சன்னதியில் பக்தர்கள் செருப்புகளை காணிக்கையாக கட்டுகின்றனர். முதல் ஆண்டு கட்டப்படும் செருப்பை மறுஆண்டில் போய் பார்த்தால் அது தேய்ந்திருக்கும். பட்டவராயரே இந்த செருப்புகளைப் பயன்படுத்துகிறார் என்று பக்தர்கள் பரவசத்துடன் சொல்கின்றனர். இது வனப்பகுதி என்பதால் ஆட்களும் அதிகம் செல்வதில்லை. செல்பவர்களும் இந்த செருப்புகளைத் தொடுவதுமில்லை. அப்படியிருந்தும், செருப்புகள் தேய்வது, கலியுக அதிசயமாகவே இருக்கிறது. இவரிடம் வேண்டிக்கொண்டால், கால்நடைகள் நோய்கள் இன்றி இருக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், கிராமப்புற மக்கள் ஏராளமாக வருகின்றனர்.

இரட்டை யானை விநாயகர்: கோயில் வளாகத்தில் இலுப்பை மரம் இருக்கிறது. இதனை, மணி விழுங்கி மரம் என்கின்றனர். பக்தர்கள் பிரார்த்தனைக்காக இம்மரத்தில் கட்டும் மணிகளை, மரம் விழுங்கிவிடுவதைப் போல, உள்ளேயே பதிந்து விடுகின்றன. இது பக்தர்களின் காணிக்கையை சுவாமி, ஏற்றுக்கொள்வதன் அடையாளமாக இருப்பதாக சொல்கிறார்கள். இம்மரத்திற்கு கீழே சங்கிலிபூதத்தார், மொட்டையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்கள் இருக்கின்றன. அருகிலேயே ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு இருபுறமும் இரண்டு யானைகள் இருப்பது வித்தியாசமான அமைப்பு கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். அகத்தியர் பொதிகையில் தங்கியிருந்த போது, லிங்க பூஜை செய்தார். காலப்போக்கில் அந்த லிங்கம் மண்ணால் மூடப்பட்டுவிட்டது. பிற்காலத்தில், இவ்வழியாக சென்ற மாடுகள் ஓரிடத்தில் மட்டும் தொடர்ந்து பால் சொரிந்தன. இதுபற்றி அப்பகுதி மன்னரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கே தோண்டிய போது, ஒரு லிங்கம் உள்ளே இருந்ததைக் கண்டெடுத்து கோயில் எழுப்பினார். இத்தலத்திலேயே தர்ம சாஸ்தாவுக்கும் சன்னதி கட்டப்பட்டது. சாஸ்தாவை கிராமப்புறங்களில் அய்யனார் என்பர். அய்யன் என்றால் தலைவன். இதில் மரியாதைக்காக ஆர் விகுதி சேர்ப்பர். பக்தர்களுக்கு அருளைச் சொரிபவர் என்பதால் இவர் சொரிமுத்து ஐயனார் எனப்பட்டார்..🔥🔥💐💐

நம் குல தெய்வமாகிய சொரிமுத்து அய்யனார் திரு கோவிலில் வரும் 11-8-18ஆம்தேதி ஆடிஅம்மாவாசை திருவிழா வரயிருப்பதால் கால் நாட்ட...
05/08/2018

நம் குல தெய்வமாகிய சொரிமுத்து அய்யனார் திரு கோவிலில் வரும் 11-8-18ஆம்தேதி ஆடிஅம்மாவாசை திருவிழா வரயிருப்பதால் கால் நாட்டுடன் தொடங்கியது .நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலை காரையாறு பகுதியில் உள்ளது சொரிமுத்தையனார் கோயில்.திருநெல்வேலி மாவட்டத்தில்
தேரோட்டத்துக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழா இதுவே..🎆🎆🎆🎆🎆

பங்குனி உத்திரம் அன்று நம் குல தெய்வம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடபட்டது. #30-03-18
01/04/2018

பங்குனி உத்திரம் அன்று நம் குல தெய்வம் சொரிமுத்து அய்யனார் கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடபட்டது.
#30-03-18

நெல்லை,மாவட்ட குலதெய்வ கோயில்களில் பங்குனி உத்திர வழிபாடுகுலதெய்வம் அதிகம் உள்ள ஊர் நம்ம திருநெல்வேலிதான் சொரிமுத்து அய்...
29/03/2018

நெல்லை,மாவட்ட குலதெய்வ கோயில்களில் பங்குனி உத்திர வழிபாடு

குலதெய்வம் அதிகம் உள்ள ஊர் நம்ம திருநெல்வேலிதான்

சொரிமுத்து அய்யனார் சூட்சமுடையார் வீரவநல்லூர் கல்லிடை சாஸ்தா கோயில், சீவலப்பேரி பூலுடையார் சாஸ்தா, கீழபிள்ளையார்குளம் திருமேனி அய்யனார் சாஸ்தா, அம்பை மன்னார்கோயில் மெய்யப்ப சாஸ்தா கருஞ்சுடையார், மணக்கரை புங்கமுடையார் சாஸ்தா, கோபாலசமுத்திரம் பசுங்கிளி அய்யன் சாஸ்தா, மருகால்குறிச்சி சாஸ்தா, தாழையூத்து பாலுடையார் சாஸ்தா, சேரன்மகாதேவி செங்கோடி சாஸ்தா, சிதம்பர சாஸ்தா, கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் பாடகலிங்கசாமி சாஸ்தா, சங்கரன்கோவில் அய்யனார் கோயில், முக்கூடல் அரியநாயகிபுரம் சாஸ்தா, ஆலங்குளம் அருகேயுள்ள ஆண்டிபட்டி ஆனைமலை சாஸ்தா,ரவணசமுத்திரம் ஞாணல் குளத்து அய்யனார் சாஸ்தா கோவில் பாப்பாகுடி எட்டுடையார் சாஸ்தா பிரான்சேரி வீரியபெருமாள் சாஸ்தா & ஸ்ரீ கரையடி மாடஸ்வாமி கோயில்,இலத்தூர் ஆதினம்காத்த அய்யனார் கோவில்
இரண்டு நாட்களில் ஐம்பதாயிரம் மக்கள் வருகின்றனர் கோவில் குளம் புஸ்பகலை பூரனகலை சமேத வேலங்காவுசாஸ்தா..(ஆலங்குளம் to அம்பை)பாப்பான்குளம் களக்கோட்டீஸ்வர் சாஸ்தா நெடுவயல் வீர பராக்கிரம பாண்டிய சாஸ்தா. குற்றாலம் மேலவாசப்பா சாஸ்தா .பெரியாண்டவர்.பன்றிமாடன். சங்கிலிபூதத்தார் வெள்ளைகல் பூதத்தார்

நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தன்று அனைத்து சாஸ்தா கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக ...
29/03/2018

நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தன்று அனைத்து சாஸ்தா கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக ஒவ்வொரு குடும்பத்தினரும் குல தெய்வமாக சாஸ்தாவை வழிபடுவது வழக்கம். இவர்கள் வெளி மாநிலத்தில் பணி புரிந்தாலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குடும்பத்துடன் ஒன்று சேருவர்.

தங்கள் குல தெய்வ சாமி அமைந்துள்ள கோயிலுக்கு சென்று பொங்கலிட்டு குலம் தலைக்க சிறப்பு வழிபாடு நடத்துவர். இத்தகைய பங்குனி உத்திரம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இரவே பல குடும்பத்தினர் குல தெய்வ கோயிலுக்கு சென்று முகாமிட்டுள்ளனர். அதை போல் தான் நம் சாஸ்தாவாகிய ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திரு கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.மேலும் மூலவர் முதல் அனைத்து சாஸ்தாவிற்கும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது..அரசு சார்பாக பேருந்து வசதியும் அமைத்து தரப்பட்டுள்ளது. ஆதலால் அனைவரும் வந்து தங்கள் சாஸ்தாவை வணங்கி.தங்கள் மனக்கவலை,குடும்ப சிக்கல் வேலையின்மை,திருமணத்தடை,கல்வி என பல்வேறு பிரச்சனைகளில் இருந்து தீர்வு அமைந்து ஆசி பெற்று செல்லுங்கள் அன்புடன்... #அய்யனார்_பக்தன்.
#30-03-18

காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயில்ல ஆடி அமாவாசை வெகு சிறப்பாக நடைபெற்றது.பாபநாசத்தில் இருந்து வளைந்த...
26/07/2017

காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயில்ல ஆடி அமாவாசை வெகு சிறப்பாக நடைபெற்றது.

பாபநாசத்தில் இருந்து வளைந்து நெளிந்த மலைப் பாதையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது சொரிமுத்து அய்யனார் கோயில். பட்டவராயன் கோயில் அருகில் அமைக்கப்பட்டு உள்ள மேடையில் 31-வது பட்டம் பெற்ற முருகதாஸ் தீர்த்தபதி, ராஜா கெட்டப்பில் வெண்கொற்றக் குடையின் கீழ், வாள் ஏந்தி அமர்ந்து இருந்தார். கோயில் விழாவின் முக்கிய நிகழ்ச்சி... பூக்குழி இறங்குதல். சங்கிலி பூதத்தார், பிரம்மராக்ஷி அம்மன் மற்றும் பட்டவராயன் கோயில் என மொத்தம் மூன்று இடங்களில் பத்து அடி நீளத்துக்கு பூக்குழி அமைத்து இருந்தார்கள். பூக்குழி தயாராகும் வரை சொரிமுத்து அய்யனார் சாமியாடிகள் வெள்ளிப் பிடி போட்ட பிரம்புக் கம்புகளை வைத்துக்கொண்டு, எதிர்எதிராக நின்று விளையாட்டாகக் கம்புச்சண்டை போடுவார்கள்.மேளம் முழங்க ராஜா முன்பு தலைவணங்கி கோயில் பிரசாதமான விபூதியைக் கொடுத்து ''நாங்கள் பட்டவராயரின் பிரதிநிதிகள்... பூக்குழிக்கு அனுமதி தாருங்கள் அரசே'' என்கிறார்கள்.மரியாதையை ஏற்றுக்கொண்ட ராஜா, பதிலுக்குத் தாம்பாளத்தில் தேங்காய், பழம், வெற்றிலைப் பாக்குடன் கருப்பட்டி, எள்ளுப் புண்ணாக்கு ஆகியவைகளை வைத்துக்கொடுத்து ''தொடங்கட்டும் பூக்குழி'' என்றுச் சொல்லி அனுமதி தருகிறார்.

ஆடி அமாவாசையை முன்னிட்டுகாரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடபட்டது.க...
26/07/2017

ஆடி அமாவாசையை முன்னிட்டுகாரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடபட்டது.கடல் அலைஎன திரண்டு வந்த பக்தர்களின் கூட்டம்...

நம் குல தெய்வமாகிய சொரிமுத்து அய்யனார் திரு கோவிலில் வரும் 23-ஆம்தேதி ஆடிஅம்மாவாசை திருவிழா வரயிருப்பதால் நேற்று கால் நா...
13/07/2017

நம் குல தெய்வமாகிய சொரிமுத்து அய்யனார் திரு கோவிலில் வரும் 23-ஆம்தேதி ஆடிஅம்மாவாசை திருவிழா வரயிருப்பதால் நேற்று கால் நாட்டுடன் தொடங்கியது .
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சிமலை காரையாறு பகுதியில் உள்ளது சொரிமுத்தையனார் கோயில்.திருநெல்வேலி மாவட்டத்தில்
தேரோட்டத்துக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் மிகப்பெரிய திருவிழா இதுவே..🎆🎆🎆🎆🎆

நம்ம ஊரில் பெரும்பாலானவர்களுக்கு குல தெய்வமான காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில்.இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.அன...
09/04/2017

நம்ம ஊரில் பெரும்பாலானவர்களுக்கு குல தெய்வமான காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில்.இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அனைவருக்கும் பங்குனி உத்திர திருநாள் வாழ்த்துக்கள்..

நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தன்று அனைத்து சாஸ்தா கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக ...
08/04/2017

நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்தன்று அனைத்து சாஸ்தா கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக ஒவ்வொரு குடும்பத்தினரும் குல தெய்வமாக சாஸ்தாவை வழிபடுவது வழக்கம். இவர்கள் வெளி மாநிலத்தில் பணி புரிந்தாலும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு குடும்பத்துடன் ஒன்று சேருவர்.

தங்கள் குல தெய்வ சாமி அமைந்துள்ள கோயிலுக்கு சென்று பொங்கலிட்டு குலம் தலைக்க சிறப்பு வழிபாடு நடத்துவர். இத்தகைய பங்குனி உத்திரம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இரவே பல குடும்பத்தினர் குல தெய்வ கோயிலுக்கு சென்று முகாமிட்டுள்ளனர். அதை போல் தான் நம் சாஸ்தாவாகிய ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திரு கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.மேலும் மூலவர் முதல் அனைத்து சாஸ்தாவிற்கும் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது..அரசு சார்பாக பேருந்து வசதியும் அமைத்து தரப்பட்டுள்ளது. ஆதலால் அனைவரும் வந்து தங்கள் சாஸ்தாவை வணங்கி.தங்கள் மனக்கவலை,குடும்ப சிக்கல் வேலையின்மை,திருமணத்தடை,கல்வி என பல்வேறு பிரச்சனைகளில் இருந்து தீர்வு அமைந்து ஆசி பெற்று செல்லுங்கள் அன்புடன்...அய்யனார் பக்தன்.

பங்குனி உத்திரம் அன்று இங்கு நல்ல கூட்டம் பலருக்கு குலதெய்வம் சொரிமுத்து ஐய்யனார்..
02/04/2017

பங்குனி உத்திரம் அன்று இங்கு
நல்ல கூட்டம் பலருக்கு குலதெய்வம்
சொரிமுத்து ஐய்யனார்..

Address

Kaani Kudieruppu-Karayar
Tirunelveli
627002

Alerts

Be the first to know and let us send you an email when Arulmigu Sorimuthu Ayyanar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category