10/08/2025
செயலில் உத்தமம்
பக்த்சிங் (1903-2000)
ஆசியாவிலுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆவிக்குரியத் தகப்பனாகவும், விசுவாசிகளின் மாதிரியாகவும் விளங்கியவர் பக்த்சிங். பஞ்சாபின் #சீக்கிய குடும்பத்தில் பிறந்த இவர், #இங்கிலாந்து சென்று #பொறியாளர் படிப்பை முடித்தார்.
1929ஆம் ஆண்டு உலகப்பிரகாரமான வாழ்வில் உன்னத நிலையை அடைந்தார். கிறிஸ்து உள்ளத்தில் வர புது சிருஷ்டியானார். சீக்கிய மதப் பெற்றோர் அவரை பம்பாயில் விட்டு விட்டுத் தங்கள் நாட்டிற்குப் போய்ச் சேர்ந்தனர்.
தன் ஜீவனையும், தனக்கு அன்பானவர்களையும் விட மேலாக கர்த்தரையே நேசித்ததால், கர்த்தருடைய வார்த்தையே அவருக்கு ஆறுதலாகவும் தேறுதலாகவும் மாறினது.
பம்பாயில் தன் ஊழியத்தை ஆரம்பித்த #பக்த்சிங், பின்னர் பஞ்சாபிலும், கராச்சியிலும் ஊழியத்தைத் தொடர்ந்தார். குறுகிய காலத்திற்குள் தேவன் அவரை உயர்த்தினார். ஒரு மாதத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்ட இடத்திலிருந்து சுவிசேஷப் பணிக்கு அழைப்பு வந்தது.
அவரின் ஊழியத்தின் பயனாக ஆயிரக்கணக்கானோர் கிறஸ்துவைக் கண்டு கொண்டனர்.
சென்னையில் கால்பதித்த அவர் ' #யெகோவா_ஷம்மா' என்ற சபையை 1941ம் ஆண்டு ஆரம்பித்தார். இச்சபை விரைவாக வளர ஆரம்பித்தது. இந்தியாவின் பல பாகங்களிலும், #பாகிஸ்தான், #இலங்கை, #ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளிலும் ஆயிரக்கணக்கான சபைகள் உருவாகின. ஆண்டவர் சகோதரரை அற்புதமாகப் பயன்படுத்தினார்.
வேதவாசிப்பும், ஜெபமும், ஆழ்ந்த விசுவாசமும் இவரது வெற்றிக்குக் காரணங்களாயின. விசுவாசிகளுக்கு மத்தியில் ஐக்கியத்தை நிலைப்படுத்த அன்பின் விருந்தை ஆரம்பித்த இவர் ஓர் அன்பின் ஊழியராகவே வாழ்ந்து தன் ஓட்டத்தை முடித்தார்.
அன்பரே! தேவனின் உண்மையான மனிதனாக நீங்கள் வாழ்கின்றீர்களா?
வாழ்விலிருந்து வாழ்வுக்கு: கிறிஸ்து என் ஜீவனாயிருக்கையில் அவரில்லாமல், நான் எப்படி ஜீவிக்க முடியும்.
+பக்த்சிங்
குயவனின் கரங்களில்: ஆண்டவரே! என் செயலில் உத்தமத்தோடு காணப்பட்டு உம்மை வெளிப்படுத்த என்னை வழி நடத்தும்.