Iskcon Tirunelveli - Sri Sri Krishna Balaram Temple

Iskcon Tirunelveli - Sri Sri Krishna Balaram Temple ISKCON Temple
Founder Acharya:
His Divine Grace
A.C.Bhaktivedanta Swami Prabhupada

*வசந்த பஞ்சமி பீதாம்பர அலங்காரம்*ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர் இஸ்கான், திருநெல்வேலி.
23/01/2026

*வசந்த பஞ்சமி
பீதாம்பர அலங்காரம்*
ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பலராமர்
இஸ்கான், திருநெல்வேலி.

23/01/2026
பகவத் கீதை வைபவம் 📚 Bhagavad Geethai-Vaibhavam🛕 December 14, 2025 - Sunday - 5.30 PMhttps://forms.gle/hUkr91UdGYWhef5D8அ...
10/12/2025

பகவத் கீதை வைபவம்
📚 Bhagavad Geethai-Vaibhavam
🛕 December 14, 2025 - Sunday - 5.30 PM
https://forms.gle/hUkr91UdGYWhef5D8

அன்பிற்குரிய பக்தர்களுக்கு,

ஹரே கிருஷ்ணா. 🙏

இவ்வருடம் பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட திருநாளை
விசேஷமாக கடைபிடிக்கும் விதமாக,

👉 ‘பகவத்கீதை வைபவம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சியை
டிசம்பர் 14 ஞாயிறு அன்று மாலை 5.30 மணிக்கு
திருநெல்வேலி இஸ்கான் நடத்த இருக்கிறது.

🪷 பகவத்கீதையில் 18.68 பகவான் ஸ்ரீகிருஷ்ணர்,
‘‘பகவத்கீதையின் ஞானத்தை மற்றவர்களுக்கு வழங்குபவர்களுக்கு,
தூய பக்தித் தொண்டு நிலைநிறுத்தப்படுவதோடு, அவர் இறுதியில் நிச்சயமாக என்னிடம் திரும்பி வருகின்றார்’’ என்று குறிப்பிடுகிறார்.

எனவே இந்த பகவத்கீதை வைபவத்தின் மிக முக்கிய நோக்கம்
‘‘பகவத்கீதையை வழங்கி, பக்தியில் நிலைக்க வேண்டும்’’ என்பதே ஆகும்.

🛕 இதற்காக ‘பகவத்கீதை வைபவ’ திருநாளன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பகவத்கீதை வாங்கும் பக்தர்களுக்காக விசேஷ பிரார்த்தனைகள் செய்யப்பட்டு பகவத்கீதை வழங்கப்படுகிறது.

பகவத்கீதை வைபவத்தில் பங்கேற்று, பகவானின் விசேஷ திருவருள் பெற இஸ்கான் அன்புடன் அழைக்கின்றது.
👉 முன்பதிவு அவசியம்!

📚 எனவே உங்கள் பெயரில் மற்றும் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் பெயரில் பூஜிக்கப்பட்ட பகவத்கீதையை பெற உடனே முன்பதிவு செய்யுங்கள்.

📝 ‘பகவத்கீதை வைபவம்’ முன்பதிவு லிங்க்:
https://forms.gle/hUkr91UdGYWhef5D8

📚 ஒன்றல்ல, இரண்டல்ல, நாம் ஒவ்வொருவரும் நூற்றுக்கணக்கான பகவத்கீதை புத்தகங்களை வழங்கி பக்தியில் நிலை பெறுவோம் வாருங்கள்.

நன்றி. ஹரே கிருஷ்ணா.

– ISKCON Sri Sri Krishna Balaramar Temple, Tirunelveli.

* யார் ஒருவர் பக்தியுடன் பகவத்கீதையை பரிசளிக்கிறாரோ, அவர் ஆரோக்கியம், புகழ், நல்லதிர்ஷ்டம் மற்றும் மிக உயர்ந்த ஆனந்தத்தையும் பெறுகிறார். அவரது உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் அவரை மிகவும் நேசிப்பர்.
– வைஷ்ணவ்ய தந்திர ஸாரம் (பதம் 27-28)

கீதையை வழங்கி, பக்தியில் நிலைப்போம்! – Bhagavad Geethai Vaibhavam 2025 | ISKCON Tirunelveli | Ph/WA: 7558148198

மக்களின் மன அமைதி மற்றும் ஒற்றுமைக்காக  ‘தீபாவளி தீபத் திருவிழா’திருநெல்வேலி வண்ணாரப் பேட்டையில் உள்ள, இஸ்கான் கோயிலில் ...
19/10/2025

மக்களின் மன அமைதி மற்றும் ஒற்றுமைக்காக ‘தீபாவளி தீபத் திருவிழா’
திருநெல்வேலி வண்ணாரப் பேட்டையில் உள்ள, இஸ்கான் கோயிலில் மக்களின் மன அமைதி மற்றும் ஒற்றுமை வேண்டி, தீபாவளி தீபத் திருவிழா அக்டோபர் 20, 21 ம் தேதிகளில் நடைபெறுகிறது.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்த ‘நரக சதுர்தசி’ திருநாளன்றும் (அக்.20),
ஸ்ரீராமர், அயோத்தி திரும்பிய ‘தீபாவளி’ திருநாளன்றும் (அக்.21) இஸ்கான் கோயிலில் தீபாவளி சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
விழாவின் சிறப்பம்சமாக பக்தர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் பகவானுக்கு தீப ஆரத்தி காண்பிக்கலாம்.
தீபாவளி தீப ஆரத்தி நிகழ்ச்சிகள் அக்டோபர் 2௦, 21ம் தேதிகளில் காலை 7:30 மணி முதல் 12:30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 8:00 மணி வரையிலும் தொடர்ந்து நடைபெறும். இதில் மக்கள் மன அமைதி மற்றும் ஒற்றுமை வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு ஸ்ரீஸ்ரீ கிருஷ்ண பலராமர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்வார். சுவாமி சன்னதி முழுவதும் நெய் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டு, புஷ்ப மண்டபமும் அமைக்கப்பட உள்ளது. புஷ்ப மண்டபத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ‘தாமோதரர்’ என்றழைக்கப்படும் குழந்தை வடிவில் அருள்பாலிப்பார். தொடர்ந்து ஹரிநாம சங்கீர்த்தனம், நரசிம்ம ஆரத்தி, ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜபம் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறும்.
தீபாவளியன்று பகவானுக்கு தீப ஆரத்தி காண்பிப்பது, மிக உயர்ந்த நற்பலன்களை தர வல்லது என்று வேத சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. முக்கியமாக தீபாவளியின் முழு பலனை
மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

– இஸ்கான் கோயில், திருநெல்வேலி. போன்: 7558148198,

ஸ்ரீ தாமோதராஷ்டகம்(பத்மபுராணத்திலிருந்து)- ஸ்ரீ சத்யவ்ரத முனிவர் (1)நமாமீஷ்வரம் சச் - சித் - ஆனந்த - ரூபம்     லசத் - கு...
19/10/2025

ஸ்ரீ தாமோதராஷ்டகம்
(பத்மபுராணத்திலிருந்து)
- ஸ்ரீ சத்யவ்ரத முனிவர்

(1)
நமாமீஷ்வரம் சச் - சித் - ஆனந்த - ரூபம்
லசத் - குண்டலம் கோகுலே ப்ராஜமானம்
யசோதா - பியோலூகலாத் தாவமானம்
பராம்ரிஷ்டம் அத்யந்ததோ த்ருத்ய கோப்யா

சச்சிதானந்த ரூபம் மற்றும் ஊஞ்சலாடும் மகர குண்டலங்கள் காதில் கொண்ட, கோகுலத்தின் ஒளியான பரமபுருஷர் தாமோதரருக்கு வணக்கங்கள். அன்னை யசோதை கடைந்து கொண்டிருந்த தயிர்ச்சட்டியை உடைத்து, அதில் இருந்த வெண்ணெய்யைத் திருடிக் கொண்டு, பயந்து மர உரலில் இருந்து அவர் குதித்து ஓட, அவரை விட வேகமாக ஓடி அவரைப் பின்புறமாக பிடித்த அன்னை யசோதையிடம் பிடிபட்ட பரம்பொருள் தாமோதரருக்கு என் வணக்கங்கள்.

(2)
ருதன்தம் முஹுர் நேத்ர - யுக்மம் ம்ருஜன்தம்
கராம்போஜ - யுக்மேன சாதங்க - நேத்ரம்
முஹு: ஷ்வாஸ-கம்ப-த்ரிரேகாங்க-கண்ட
ஸ்தித-க்ரைவம் தாமோதரம் பக்தி-பத்தம்
அன்னையின் கரங்களில் அடிக்கும் தடியைக் கண்ட தாமோதரர் தன் தாமரைக் கரங்களால் கண்களை மீண்டும், மீண்டும் கசக்கிக் கொண்டு அழுகிறார். அவருடைய கண்களில் அச்சம் நிறைந்திருந்தது. சங்கின் வரிகள் போன்று மூன்று புரிகளை உடைய அவருடைய கழுத்தில் இருந்த முத்தாரம், அவர் அழுது கொண்டு மூச்சு விட்டதால் அசைந்து கொண்டிருந்தது. கயிற்றால் அல்ல, அவருடைய அன்னையின் தூய அன்பினால் கட்டப்பட்ட, அந்தத் தாமோதரருக்கு என் வணக்கங்கள்.

(3)
இதீத்ரிக் ஸ்வ - லீலாபிர் ஆனந்த - குண்டே
ஸ்வ - கோஷம் நிமஜ்ஜந்தம் ஆக்யாபயன்தம்
ததீயேஷித-க்ஞேஷு பக்தைர் ஜிதத்வம்
புன: பிரேமதஸ் தம் சதாவ்ருத்தி வந்தே

இது போன்ற பால லீலைகளினால் கோகுல வாசிகளை ஆனந்தக் கடலில் அமிழ்த்தினார். தன்னுடைய ஐஸ்வர்யங்களை உணர்ந்து, அதில் ஆழ்ந்த பக்தர்களுக்கு, மாறாத தூய பக்தியால் மட்டுமே தன்னை வெல்ல முடியும் என்று காட்டிய அந்தத் தாமோதரருக்கு, அன்புடனும், பக்தியுடனும் மீண்டும், மீண்டும் நூற்றுக்கணக்கான வந்தனங்களைச் சமர்ப்பிக்கிறேன்.

(4)
வரம் தேவ மோக்ஷம் ந மோக்ஷாவதிம் வா
ந சான்யம் வ்ருனே ’ஹம் வரேஷாத் அபீஹ
இதம் தே வபுர் நாத கோபால - பாலம்
சதா மே மனசி ஆவிராஸ்தாம் கிம் அன்யை:

தேவனே, நீங்கள் மோட்சம் மற்றும் வைகுண்டம் முதற் கொண்டு எல்லாவித வரங்களையும் அளிக்க வல்லவர் ஆயினும், எவ்வித வரத்தையும் உம்மிடம் நான் வேண்டவில்லை. நாதா!, விருந்தாவனத்தில் உள்ள உமது இந்த பால கோபால வடிவம், சதா என்னுடைய மனதில் நிலைக்கட்டும். மற்றவற்றால் என்ன பயன்?

(5)
இதம் தே முகாம்போஜம் அத்யந்த - நீலைர்
வ்ருதம் குந்தலை: ஸ்நிக்த - ரக்தைஷ் ச கோப்யா
முஹுஷ் சும்பிதம் பிம்ப - ரக்தாதரம் மே
மனசி ஆவிராஸ்தாம் அலம் லக்ஷ - லாபை:
பகவானே! கருநீலக் கூந்தலால் சூழப்பட்ட உம்முடைய தாமரை முகம், அன்னை யசோதையால் மறுபடியும், மறுபடியும் முத்தமிடப்பட்டு சிவந்து காணப்படுகிறது. பிம்பப் பழம் போல் உமது உதடுகள் சிவந்து காணப்படுகிறது. இத்தகைய திருமுகம் என்றென்றும் என் மனதில் நிலைக்கட்டும். ஆயிரக் கணக்கான வேறு வரங்களால் என்ன பயன்?

(6)
நமோ தேவ தாமோதரானந்த விஷ்ணோ
ப்ரசீத ப்ரபோ துக்க - ஜாலாப்தி - மக்னம்
க்ருபா - த்ரிஷ்டி - வ்ருஷ்ட்யாதி - தீனம் பதானு-
க்ருஹானேஷ மாம் அக்ஞம் எதி அக்ஷி - த்ரிஷ்ய:

ஓ நமோ தேவா! தாமோதரா, அனந்தா, விஷ்ணோ, பிரபு
என் மீது திருப்தி கொள்ளுங்கள். துக்க ஜால கடலில் மூழ்கி மிக வீழ்ந்து கிடக்கும் என்னை, கிருபா த்ருஷ்டி மழை பொழிந்து, அனுகிரஹித்து, ஈஸனே! அஞ்ஞானம் நிரம்பிய என்னுடைய கண்ணுக்கு காட்சி அளியுங்கள்.

(7)
குவேராத்மஜௌ பத்த - மூர்த்யைவ யத்வத்
த்வயா மோசிதௌ பக்தி - பாஜௌ க்ருதௌ ச
ததா ப்ரேம - பக்திம் ஸ்வகாம் மே ப்ரயச்ச
ந மோக்ஷே க்ரஹோ மேஸ்தி தாமோதரேஹ
ஓ தாமோதரா! மர உரலில் கட்டுண்ட குழந்தை வடிவத்தில், குபேரனின் பிள்ளைகளை நாரதரின் சாபத்திலிருந்து விடுவித்து, உமது பக்தர்கள் ஆக்கினீர்கள். அத்தகைய பிரேம பக்தியை எனக்கு அளித்தருளும்! வேறு எந்தவித மோட்சத்திற்கும் நான் ஆசைப்பட வில்லை.

(8)
நமஸ் தே ’ஸ்து தாம்னே ஸ்புரத் - தீப்தி - தாம்னே
த்வதீயோதராயாத விஷ்வஸ்ய தாம்னே
நமோ ராதிகாயை த்வதீய -ப்ரியாயை
நமோ அனந்த - லீலாய தேவாய துப்யம்

ஓ பிரபு! தாமோதரா! நான் முதலில் உமது உதரத்தை கட்டிய
ஒளிநிறைந்த பிரகாசமான கயிற்றை வணங்குகின்றேன். பின் உமது உதரத்தை வணங்குகின்றேன். உமது உதரமோ அண்ட
சராசரம் அனைத்தையும் அடக்கியுள்ளது. அடுத்ததாக உமக்கு மிக பிரியமான உமது அருமை ஸ்ரீமதி ராதா ராணியை வணங்குகின்றேன். இறுதியாக எண்ணற்ற லீலைகளைப் புரியும் பரமபுருஷரும், பரம் பொருளுமாகிய உம்மை வணங்குகின்றேன்.

இந்த தாமோதர அஷ்டக பாடல், சத்யவிரத முனிவரால் பாடப்பெற்றதும், நாரத முனிவர் மற்றும் செளனக ரிஷியின் உரையாடலில் பேசப்பட்டதும் ஆகும். இது கிருஷ்ண த்வைபாயன வியாசரின் பத்ம புராணத்தில் உள்ளது.

கார்த்திகை தாமோதர மாதத்தில் தாமோதரரை வழிபட்டு, ‘தாமோதர அஷ்டகம்’ என்று அறியப்படும் இந்த பாடலை தினமும் பாட வேண்டும்.
சத்யவிரத முனிவரால் பேசப்பட்ட இது பகவான் தாமோதரரை கவர்கின்றது"
(ஹரி பக்தி விலாசம் 2.16.198).

🪔 Glories of Damodara Monthதாமோதர மாதத்தின் சிறப்பும், தீபஆரத்தியின் பலனும்இறைபக்திக்குரிய நான்கு மாதங்கள் என்றழைக்கப்பட...
19/10/2025

🪔 Glories of Damodara Month

தாமோதர மாதத்தின் சிறப்பும், தீபஆரத்தியின் பலனும்

இறைபக்திக்குரிய நான்கு மாதங்கள் என்றழைக்கப்படும் சாதுர் மாதங்களில் தாமோதர மாதம் சிறந்த மகிமைகள் பொருந்தியது ஆகும். சாதுர் மாதங்களில் இதனை கார்த்திகை என்றழைப்பர். தமிழ் மாதங்களில் கார்த்திகையைப் போல் இந்த தாமோதர மாதத்தில் பகவானின் ஆலயத்தையும், பூஜை அறையையும் நெய் தீபங்களால் அலங்கரிப்பது அவசியமானதாகும். இவ்வருடம் இந்த தாமோதர மாதம் அக்டோபர் 7ம் தேதி துவங்கி நவம்பர் 5ம் தேதி முடிவுறுகிறது.

🪔தாமோதர மாதம் என்பதன் பொருள்?
தாமோதரர் என்றால் ஸ்ரீகிருஷ்ணரை குறிக்கும். தாம என்றால் கயிறு. உதர என்றால் வயிறு. குறிப்பாக பகவான் ஸ்ரீகிருஷ்ணரை, அன்னை யசோதா தேவி கயிற்றால் உரலில் கட்டிய நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் பொருட்டும், கிருஷ்ணரின் தூய பக்தை ஸ்ரீமதி ராதாராணியை வழிபடும் பொருட்டும் தாமோதரத் திருவிழா கொண்டாடப் படுகிறது.

🪔பத்ம புராணம் ‘‘இம்மாதம் ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானதாகும். இம்மாதத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு சிறிதளவு பக்திசேவை செய்தால் கூட கிருஷ்ணர் தன் திவ்ய ஸ்தலத்தையே அப்பக்தனுக்கு வழங்குவார்’’ என்று கூறுகிறது. அதே போல், ‘‘புண்ணிய மாதங்கள் அனைத்திலும் அதி புண்ணிய மாதம் தாமோதர மாதம்’’ என்று ஸ்கந்த புராணமும் இம்மாதத்தின் மகிமைகளை பலவாறு விவரிக்கிறது.

🪔விழாக்கள் நிரம்பிய மாதம்
‘தீபாவளி’, ‘தாமோதர லீலை’, ‘ஸ்ரீமதி லெக்ஷ்மி பூஜை’, ‘பகுலாஷ்டமி’ - ஸ்ரீராதா குண்டம் உருவான நாள், ‘துளசி -சாளக்கிராம திருக்கல்யாணம்’, ‘கோவர்த்தன கிரி பூஜை’ - மற்றும் பல முக்கியமான விழாக்கள் இந்த மாதத்தில் தான் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தாமோதர விரதம் கடைபிடிக்கும் முறை

👉(1) ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜபமும் (2) கிருஷ்ணருக்கு நெய் தீபம் காட்டுவதும், (3) உணவுக்கட்டுப்பாடும் தாமோதர மாத விரதத்தின் முக்கியமான மூன்று சிறப்பம்சங்களாகும்.

📿மஹாமந்திர ஜபம்
‘‘ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம; ராம ராம ஹரே ஹரே’’ எனும் பதினாறு வார்த்தைகளடங்கிய இந்த மஹாமந்திரத்தை குறைந்த பட்சம் 108 தடவையும், அதிகபட்சம் எவ்வளவு முறை உச்சரிக்க முடியுமோ அவ்வளவு முறை உச்சரிக்கலாம். ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவின் மிக நெருங்கிய சீடரான ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி அவர்கள் விரதங்கள் பின்பற்றுவதில் மிக முக்கியமானது ஹரி நாமத்தை உச்சரிப்பதே ஆகும் என்று வலியுறுத்தியுள்ளார். ஏனெனில் ஹரே கிருஷ்ண மஹாமந்திரம், விரதத்தை கடைபிடிப்பதற்கான மனநிலை உட்பட அனைத்து நலன்களையும் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

🪔தீப ஆரத்தி வழிபாடு
பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு பிரியமான தாமோதர மாதத்தில் தீப ஆரத்தி காட்டுவதால் பலவிதமான நற்பலன்களை பெறலாம் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதோ அவற்றில் சில. .

🪔ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயத்தில் பகவானுக்கு தீப ஆரத்தி காட்டினால் நிலைத்த செல்வத்தையும், நல்ல குழந்தைகளையும், புகழையும், வெற்றியையும் பெற முடியும்.

🪔பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தினசரி நெய் விளக்கு காட்டுவதால் பல லட்சக்கணக்கான கல்பங்களில் செய்யப்பட்ட பாவங்கள் முழுவதும் அழிகின்றன.

🪔இரண்டு மரத்துண்டுகளை ஒன்றுடன் ஒன்று தேய்த்தால் ‘நெருப்பு’ உண்டாவது எப்படி நிச்சயமோ, அதே போல் தாமோதர மாதத்தில் பகவானுக்கு நெய் தீப ஆரத்தி காட்டுவதால் நிச்சயம் அதன் நற்பலனை சந்தேகத்திற்கு இடமின்றி பெறலாம்.

🪔எல்லா புண்ணிய நதிகளில் நீராடிய பலனையும், யாகங்கள் செய்த பலனையும் பெறுவதுடன், முன்னோர்களையும் நற்கதியடைய செய்யலாம்.
- பத்ம புராணம், ஸ்கந்த புராணம்

உணவு முறை
அசைவ உணவு வகைகள் பொதுவாகவே தவிர்க்க வேண்டும். இது தவிர இம்மாதம் முழுவதும் உளுந்து மற்றும் உளுந்தால் செய்யப்பட்ட உணவு பதார்த்தங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஏகாதசி நாட்களில் வழக்கம் போல் தானிய உணவு சேர்க்கக் கூடாது.

மக்கள் நலன் கருதி நிகழ்ச்சி ஏற்பாடு
மக்களின் நலன் கருதி இந்த தாமோதர தீபத் திருவிழா நிகழ்ச்சி, வண்ணாரப்பேட்டை இஸ்கான் - ஹரே கிருஷ்ணா கோயிலில் ஒரு மாத கால காலம், தினசரி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் பங்கேற்கும் அனைவரும் தங்கள் கரங்களால் நேரடியாக பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டி மன அமைதியும் மகிழ்ச்சியும் பெறலாம்.
மேலும் விழாவை முன்னிட்டு கோயில் சன்னதி முழுவதும் நெய் தீபங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- ISKCON Temple, Tirunelveli.
- Ph: 075581 48198

15/10/2025

Damodara Deepotsava
ISKCON Tirunelveli

🔔 Six Sunday Bhagavad Gita Course!📔 பகவத்கீதை அமுதம்✅ எளிய தமிழில்பகவத்கீதை பயிற்சி வகுப்பு!🛕 திருநெல்வேலி இஸ்கான் கோயில...
17/09/2025

🔔 Six Sunday Bhagavad Gita Course!

📔 பகவத்கீதை அமுதம்

✅ எளிய தமிழில்
பகவத்கீதை பயிற்சி வகுப்பு!

🛕 திருநெல்வேலி இஸ்கான் கோயிலில்
👉 செப்டம்பர் 21ம் தேதி
ஞாயிறு அன்று துவங்குகிறது!

குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்கலாம்!

👇 முன்பதிவு செய்ய இன்னும்
சில தினங்களே உள்ளன!

📝 முன்பதிவு லிங்க்:
BG Course Registration Link:
https://forms.gle/4FLVYEpDeRFmdXaeA

என்ற லிங்கில் சென்று
உங்கள் பெயரை பதிவு செய்யவும்.

– ISKCON Temple, Tirunelveli. Ph: 7558148198

குறிப்பு: உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் இந்த தகவலை
சேர் செய்து அவர்களும் பகவத்கீதையின் மூலம் பயனைடைய உதவுங்கள்.
நன்றி. ஹரே கிருஷ்ணா

🌕 Sri Bhadra Purnima !September 7, 2025 (Sunday)🌕 பத்ர பூர்ணிமா !!📔 ஸ்ரீமத் பாகவத திருநாள் !!!
30/08/2025

🌕 Sri Bhadra Purnima !
September 7, 2025 (Sunday)
🌕 பத்ர பூர்ணிமா !!
📔 ஸ்ரீமத் பாகவத திருநாள் !!!

Address

Hare Krishna Road
Tirunelveli
627002

Alerts

Be the first to know and let us send you an email when Iskcon Tirunelveli - Sri Sri Krishna Balaram Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Iskcon Tirunelveli - Sri Sri Krishna Balaram Temple:

Share

Category