ஆழ்வார்கள் கண்ட அருள் தேசம்

ஆழ்வார்கள் கண்ட அருள் தேசம் ஆழ்வார் பாசுரங்களின் அருட் கருத்து

22/04/2026

🌸 **ஸ்ரீ ராமானுஜர் அவதார தின நல்வாழ்த்துக்கள்!** 🌸
இன்று உலகிற்கு சமத்துவம், பக்தி, ஞானம் ஆகியவற்றின் ஒளியை பரப்பிய எம்பெருமானார் அவதரித்த புண்ணிய நாள். அவர் காட்டிய பாதை — “அனைவரும் ஒன்றே” என்ற உயர்ந்த சிந்தனை — இன்றும் மனித சமுதாயத்திற்கு வழிகாட்டும் விளக்காக உள்ளது.
ஜாதி, மத வேறுபாடுகளை தாண்டி, எல்லாருக்கும் பகவத் அனுக்ரஹம் கிடைக்க வேண்டும் என்ற கருணைமிகு எண்ணத்தோடு வாழ்ந்தவர் எம்பெருமானார். “திருமந்திரம்” எனும் பரம ரகசியத்தையே பொதுமக்களுக்கு பகிர்ந்த அவரது தியாகம், அவரின் பரம கருணையின் சான்று.
இந்நாளில், நாம் அவரின் உபதேசங்களை நினைவுகூர்ந்து, அன்பும், சமத்துவமும், பக்தியும் நிறைந்த வாழ்க்கையை நடத்த உறுதி எடுத்துக் கொள்வோம்.
🙏 *எம்பெருமானார் திருவடிகளே சரணம்!* 🙏
-ஶ்ரீவத்ஸன்@கோவிந்தராஜன்
#எம்பெருமானார் #ராமானுஜர் #அவதாரதினம் #சமத்துவம் #பக்தி

கநு எனும் பண்டிகை வருணனுக்கு நன்றி சொல்லும் பண்டிகை.  எனவே இன்று நாம் அனைவரும் வருணனுக்கு நன்றி நவின்று மேலும் வேளாண்மைக...
16/01/2026

கநு எனும் பண்டிகை வருணனுக்கு நன்றி சொல்லும் பண்டிகை. எனவே இன்று நாம் அனைவரும் வருணனுக்கு நன்றி நவின்று மேலும் வேளாண்மைக்கு உறுதுணையாக இருக்கும் பசுக்களுக்கும், எருதுகளுக்கும் இன்ன பிற உயிரினங்களுக்கும் நன்றி சொல்வோம்.

15/01/2026
ஸ்ரீவாரி ஆலயத்தில் நிறைவடைந்த அத்யயனோத்ஸவங்கள்திருமலை, 12 ஜனவரி 2026:திருமலை ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமிவாரி ஆலயத்தில் கடந்த ...
14/01/2026

ஸ்ரீவாரி ஆலயத்தில் நிறைவடைந்த அத்யயனோத்ஸவங்கள்

திருமலை, 12 ஜனவரி 2026:
திருமலை ஸ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமிவாரி ஆலயத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி தொடங்கிய அத்யயனோத்ஸவங்கள் திங்கள்கிழமை நிறைவடைந்தன. இதையொட்டி, ஆலயத்தின் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி ஸமேத ஸ்ரீ மலையப்ப ஸ்வாமியை எழுந்தருளச் செய்து திவ்யபிரபந்த கோஷ்டி நடைபெற்றது.

கடந்த 25 நாட்களாக ஸ்ரீவாரி ஆலயத்தில் ஸ்ரீவைஷ்ணவர்கள், 12 ஆழ்வார்கள் அருளிய திவ்யபிரபந்தப் பாசுரங்களை தினமும் கோஷ்டிகானமாக ஸ்வாமிவாருக்கு நிவேதனம் செய்து வந்தனர். ஆழ்வார் திவ்யபிரபந்த பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டது.

திங்கள்கிழமை அத்யயனோத்ஸவங்கள் முடிந்த அடுத்த நாள், அதாவது ஜனவரி 13ஆம் தேதி, ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி தெற்கு மாட வீதியில் உள்ள ஸ்ரீ திருமலைநம்பி ஆலயத்திற்கு எழுந்தருளினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், திருமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரிய ஜீயர் ஸ்வாமி, திருமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீ சிறிய ஜீயர் ஸ்வாமி, ஆலய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

— டிடிடி (TTD) முக்கிய மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்ட செய்தி.

ஒரு காலத்தில் முரா என்ற கொடிய அசுரன் இருந்தான்.அவன் மிகவும் பலசாலி;  அகந்தை மிகுந்தவன்.  தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள்...
29/12/2025

ஒரு காலத்தில் முரா என்ற கொடிய அசுரன் இருந்தான்.
அவன் மிகவும் பலசாலி; அகந்தை மிகுந்தவன். தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் எல்லோரையும் அவன் மிகவும் துன்புறுத்தினான்.

முராசுரன் தன் பலத்தால் அகந்தை கொண்டு,
“என்னை யாராலும் வெல்ல முடியாது!” என்று நினைத்தான்.

அவனது கொடுமைகளைத் தாங்க முடியாமல்,
தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர்.

மகாவிஷ்ணு முராசுரனை அழிக்க முடிவு செய்து,
அவனது கோட்டைக்குச் சென்றார். பெரிய போர் நடந்தது.

நீண்ட நேரம் போராடிய பிறகு, மகாவிஷ்ணு சிறிது நேரம் யோக நித்திரையில் இருந்தார்.

அந்த நேரத்தைப் பயன்படுத்தி, முராசுரன் மஹாவிஷ்ணுவைக் கொல்ல நினைத்தான்!

ஏகாதசி தேவியின் தோற்றம்

அந்த அபாயக் கணத்தில், மகாவிஷ்ணுவின் தெய்வீக சக்தியிலிருந்து ஒரு ஒளிமயமான தேவி தோன்றினாள்.

அவள்தான் — ஏகாதசி தேவி

அவள் துணிச்சலுடன் முராசுரனை எதிர்த்து,
அவனுடன் போராடி, அவனைக் கொன்று உலகை காப்பாற்றினாள்.

விஷ்ணுவின் வரம்

யோகநித்திரை முடிந்து விழித்த மகாவிஷ்ணு,
நிகழ்ந்ததை அறிந்து மகிழ்ந்தார்.

ஏகாதசி தேவியிடம், “நீ தோன்றிய இந்த நாள் மிகவும் புனிதமானது. இந்த நாளில் என்னை வழிபடும் அனைவரும் பாவங்களில் இருந்து விடுபட்டு
வைகுந்தத்தை அடைவார்கள்” என்று வரம் அளித்தார்.

அதனால் அந்த நாள் ஏகாதசி என்றும், மிகச் சிறந்தது
வைகுந்த ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.

மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியான அந்நாளே வைகுந்த ஏகாதசி எனப்படுகிறது.

வைகுந்த வாசல் – அதன் பொருள்

வைகுந்த வாசல் என்பது கோவில் கட்டிடத்தில் உள்ள
ஒரு கதவல்ல மட்டும் அல்ல.

அது —
🔸 அஹங்காரத்தை விட்டு
🔸 பக்தியை ஏற்று
🔸 நாராயணனை அடையும்
உள் வாசல் அவ் வாசல் ஆகும்.

வைகுந்த ஏகாதஸியின் மகத்துவம்

மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதஸி — திருமால் தமது வைகுந்த வாசலை பக்தர்களுக்காகத் திறந்து அருளும் நாள்.

இந்த நாளில்
🔸 ஏகாதஸி விரதம்
🔸 பகவான் நாம சங்கீர்த்தனம்
🔸 வைகுந்த வாசல் தரிசனம்

இவற்றை செய்தால் மோட்சப் பிராப்தி உறுதி என்பது
வைணவ சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.

मुरो नाम महासुरो
देवान् पीडयते सदा ।
तेन त्रस्ताः सुराः सर्वे
विष्णुं शरणमागताः ॥

गत्वा स भगवान् विष्णुः
बदर्याश्रमसन्निधौ ।
निद्रां जगाम योगेन
गुहायां हरिरव्ययः ॥

तस्य देहात् समुत्पन्ना
कन्या तेजस्विनी शुभा ।
सर्वालङ्कारसंयुक्ता
विष्णुशक्तिसमन्विता ॥

सा तं मुरं महासत्त्वा
युद्धे हत्वा महासुरम् ।
पातयामास भुव्यां वै
क्षणमात्रेण शोभना ॥

प्रबुद्धः स हृषीकेशः
तां दृष्ट्वा विस्मयं गतः ।
उवाच देवीम् प्रीतात्मा
वरं वृणीष्व शोभने ॥

माम् भजिष्यन्ति ये लोके
एकादश्यां विशेषतः ।
ते यान्तु मम लोकं वै
नात्र कार्या विचारणा ॥

एकादशी मम प्रिया
सर्वपापप्रणाशिनी ।
मद्भक्तानां विशेषेण
मोक्षदा नात्र संशयः ॥

मार्गशीर्षे सिते पक्षे
एकादशी विशिष्यते ।
वैकुण्ठद्वारमित्युक्ता
भक्तानां मुक्तिदायिनी ॥

-பத்ம புராணத்தில் இருந்து

-ஶ்ரீவத்ஸன் ஐயங்கார்
ஆழ்வார்கள் கண்ட அருள் தேசம்

🙏 ஆழ்வார்கள் கண்ட அருள் தேசம் முகநூல் பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்🙏திருமாலின் திருவருளில் தோன்றி, தமிழ்வேதம...
29/12/2025

🙏 ஆழ்வார்கள் கண்ட அருள் தேசம் முகநூல் பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்🙏

திருமாலின் திருவருளில் தோன்றி, தமிழ்வேதமாக விளங்கும் நாலாயிர திவ்யப்ரபந்தத்தை உலகிற்கு அளித்த பன்னிரு ஆழ்வார்கள் கண்ட அருள் தேசம் — நம் பாரத தேசம். அதனை நினைவூட்டும் ஓர் ஆன்மீகத் தளமே

“ஆழ்வார்கள் கண்ட அருள் தேசம்”.

இந்தப் பக்கத்தின் வாயிலாக,

🔸 பன்னிரு ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கங்கள்
🔸 அவர்கள் பாடிய பாசுரங்களின் பொருள், பக்தி அனுபவம்
🔸 108 திவ்ய தேசங்களின் மஹிமை, ஸ்தலப் பெருமை
🔸 வைணவ சமயத்தின் தத்துவ அடிப்படைகள்
🔸 யதிகுலோத்தமன் ஸ்ரீ எம்பெருமானார் (ராமானுஜர்) திருவருளால் நியமிக்கப்பட்ட
74 சிம்மாசனாதிபதிகள் – அவர்களின் வரலாறு, குருபரம்பரை, சமயப் பணிகள்
🔸 ஸ்ரீவைணவ மரபு, ஆசாரங்கள், சம்பிரதாய விளக்கங்கள்

என பல்வேறு வைணவம் சார்ந்த ஆன்மீக–வரலாற்றுப் பதிவுகள் தொடர்ந்து பதியப்படும்.

📌 நமது பக்கத்தைத் தொடர்வோருக்கு ஒரு அன்பான அறிவிப்பு:

இந்தப் பக்கத்தைப் பின்தொடரும் பக்தர்கள்,
தங்கள் எழுத்துகள், ஆன்மீகக் குறிப்புகள், ஆழ்வார் பாசுர விளக்கங்கள், திவ்ய தேச அனுபவங்கள் ஆகியவற்றை வாட்ஸ்அப் மூலம் அனுப்பினால்,
அவை அவர்களது பெயரிலேயே இப்பக்கத்தில் வெளியிடப்படும்.

📿 இது ஒருவரின் பக்கம் அல்ல;
ஆழ்வார்கள் வழி நடந்தோர் அனைவரின் பக்தி சங்கமம்.

திருமாலும், தாயாரும் அருள்புரிய, ஆழ்வார்களின் திருவடி நிழலில் நம் பயணம் இனிதே தொடரட்டும்.

நன்றி 🙏
ஆழ்வார்கள் கண்ட அருள் தேசம்

Address

4, Agraharam, Kariyamanickam West, Vathalai Post, Manachanallur Taluk
Tiruchirappalli
621204

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆழ்வார்கள் கண்ட அருள் தேசம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category