St Paul, the Hermit தூய வனத்துச் சின்னப்பர்

St Paul, the Hermit தூய வனத்துச் சின்னப்பர் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from St Paul, the Hermit தூய வனத்துச் சின்னப்பர், Religious organisation, 21/37 B, Venice Street, 2nd Cross, Chinthamani, Tiruchirappalli.

தூய வனத்துச் சின்னப்பரை நோக்கி செபம்எல்லாம் வல்ல இறைவா! வனத்திலே வியப்புக்குரிய தவ வாழ்க்கை நடத்தி உமக்கு ஊழியம் புரியும...
12/06/2021

தூய வனத்துச் சின்னப்பரை நோக்கி செபம்

எல்லாம் வல்ல இறைவா! வனத்திலே வியப்புக்குரிய தவ வாழ்க்கை நடத்தி உமக்கு ஊழியம் புரியும் வரத்தை தூய வனத்துச் சின்னப்பருக்கு அளித்தீரே! நாங்கள் எங்களையே ஒறுத்து அனைத்துக்கும் மேலாக உம்மையே இடையறாது அன்பு செய்யுமாறு இப்புனிதரின் வேண்டுதலால் எங்களுக்கு அருள வேண்டுமென எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

துறவற வாழ்வின் முன்னோடியாக வாழ்ந்து காட்டிய எம் புனிதரே! தவத்தினை வாழ்க்கை நெறியாகவும் சிந்தனை நெறியாகவும் கொண்டவரே! உமது அசைக்கமுடியாத இறைநம்பிக்கையின் காரணமாக உமது பெயரால் இறையை நோக்கி எழுப்பப்படும் வேண்டுதல்கள் புதுமைகளாய் மலர்கின்றன என்ற உண்மையை உணர்ந்தவர்களாக இப்போது நாங்கள் கேட்கப்போகும் விண்ணப்பங்களைக் கண்ணோக்கியருளும். (வேண்டுதல்களை நினைவு கூறவும்) இந்த விண்ணப்பங்கள் எங்களுக்குக் கிடைக்கப் பெற்றால் நாங்கள் என்றும் இறைவனுக்கு உகந்தவர்களாக இருப்போம் என்று உறுதி கூறுகிறோம். நாங்கள் கேட்டவை இறைவனின் திருவுளத்திற்கு ஏற்புடையது இல்லை என்றால் இதைவிட சிறந்ததொன்றை எங்களுக்கு பெற்றுத் தந்தருளும். இந்த எங்கள் மன்றாட்டுகளை தூய வனத்துச் சின்னப்பர் வழியாக பெற்றுத் தரும்படி உம்மை மன்றாடுகிறோம்.

(1 பர, 1 அரு, 1 திரி)

ஆமென்

தூய வனத்துச் சின்னப்பர் வரலாறுகத்தோலிக்கத் திருச்சபையின் இன்றைய அசாதாரண வளர்ச்சி நிலை பல்வேறு புனிதர்களோடு தொடர்புடையது....
12/06/2021

தூய வனத்துச் சின்னப்பர் வரலாறு

கத்தோலிக்கத் திருச்சபையின் இன்றைய அசாதாரண வளர்ச்சி நிலை பல்வேறு புனிதர்களோடு தொடர்புடையது. இறைவனின் திட்டத்திற்காக பல்வேறு புனிதர்கள் உழைத்ததன் விளைவாக இன்று ஆலமரமாக படர்ந்து விரிந்துள்ளது. இப்புனிதர்களின் வாழ்வு இறைத் திட்டத்திற்கு மக்களைத் தயாரிப்பதாகவும் அமைந்துள்ளது. இப்புனிதர்களின் வாழ்வு கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களை இறைவனின் சாட்சிகளாக மாற்றுவதாக இருக்கின்றது. தொடர்ந்து நிலைத்திருக்க உதவுகிறது. அவர்களில் முதல் வனவாசியான தூய வனத்துச் சின்னப்பர் குறிப்பிடத்தக்கவர். இப்புனிதரின் வாழ்வும், தியானமும் இன்றளவும் பெரும்பாலான மக்களை கத்தோலிக்க விசுவாசத்தில் ஊன்றி நிற்கச் செய்கின்றது.

தூய வனத்துச் சின்னப்பர் ஆஃப்ரிக்கா கண்டத்தின் எகிப்து என்ற நாட்டினில் தெபாய்த் என்ற பகுதியில் 228ஆம் ஆண்டு பிறந்தார். சொத்தை அபகரிக்க நினைத்த தனது மைத்துனன் மற்றும் வேத கலாபனை ஆகியவற்றின் காரணமாக கிபி 250 வாக்கில் காடுகளில் மறைந்து வாழ துவங்கினார். கி.பி. 250 மற்றும் அதற்குப் பிறகுள்ள ஆண்டுகளில் தேசியுஸ் மற்றும் வலேரியனுஸ் என்ற அரசர்கள் காலத்தில் வேத கலாபனை நடைபெற்றது. கிறிஸ்தவத்தை ஒழிக்கவேண்டும் என்றெண்ணிய அவர்களை எதிர்த்து கிறிஸ்தவ விசுவாசத்தை மாதிரியாக தனது நீடிய தவமுயற்சியால் வரலாற்றாய் வாழ்ந்து காட்டியவர். தவம் ஒன்றையே நெறியாகக் கொண்ட இவரது வாழ்க்கை கிறிஸ்தவத்தின் துறவறத்திற்கே ஒரு மாதிரியாகும்.

இருபத்திரண்டு வயது முதல் சுமார் 115 வயது வரை காட்டிலேயே வாழ்ந்து மரித்தார். கொடிய காட்டினில் விலங்குகளுக்கு இடையில் வாழ்ந்தார். ஆனால் அந்த விலங்குகளால் எவ்வித துன்பத்திற்கும் இவர் உள்ளாகவில்லை. அதனால்தான் தூய வனத்துச் சின்னப்பரை இன்றளவும் வனவிலங்குகளால் தீங்கு ஏற்படாமல் இருக்க பாதுகாவலராக திருச்சபை நமக்கு வழங்கியுள்ளது. தான் இறக்கும் வரை இறைவன் ஏற்பாட்டின்படி இறைவாக்கினர் எலியாஸ் அவர்களுக்கு அப்பத்தினை உணவாக வழங்கிய 'மேரையாய்' என்ற காகத்தினால் தினமும் அரை அப்பம் உணவளிக்கப்பட்டார். மடாதிபதியான தூய வனத்து அந்தோணியார் கனவில் தூய வனத்துச் சின்னப்பரின் தவவலிமை உணர்த்தப்பட்ட போது இவரைக் காண ஆவல் கொண்டார். நீண்ட பயணத்திற்குப் பின் புனிதரைக் கண்டார். இறைத் திட்டத்தின் வலிமையைப் போற்றினர். துறவற வாழ்வு வாழ்வது எவ்வாறு என்று கலந்து பேசினர். தூய வனத்துச் சின்னப்பரின் மரண காலம் நெருங்கினதை அறிந்து துக்கித்து அலெக்சாந்திரியா மறை ஆயரான தூய அத்தனாசியார் கொடுத்த கம்பளத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். அவர் வந்துசேரும்முன் தூய வனத்துச் சின்னப்பர் முழந்தால்படியிட்டபடி மரித்திருக்கிறதைக் கண்டார். மரித்த இவரை அடக்கம் செய்ய இரண்டு சிங்கங்கள் கல்லறை தோண்டின.

இவ்வாறு தவ வாழ்க்கை வாழ்ந்த இவரது புகழும், இவர் கொண்ட தேவ விசுவாசமும் கீழ்த்திசை நாடுகளில் காலப்போக்கினில் பரவ ஆரம்பித்தன. பிலிப்பைன்ஸ் என்ற நாட்டில் சான் பாப்லோ என்ற மறைமாவட்டத்தின் பாதுகாவலராக ஏற்கப்பட்டுள்ளார். கி.பி. 13ஆம் நூற்றாண்டில் துவங்கப்பட்ட தூய வனத்துச் சின்னப்பர் துறவற சபை உலகப்புகழ்பெற்றது. தவத்தினை வாழ்க்கை நெறியாகவும் சிந்தனை நெறியாகவும் கொண்ட நமது இந்திய நாட்டிலும் இவரின் புகழ் பரவ ஆரம்பித்தது. தமிழகத்தில் பாண்டிச்சேரி உயர்மறைமாவட்டத்தில் கல்பட்டு என்ற இடத்தில் இவரின் திருத்தலம் ஒன்றும் உள்ளது. இவரின் அசைக்கமுடியாத இறைநம்பிக்கையின் விளைவினால் இவர் வழியாக இறையை நோக்கி எழுப்பப்படும் வேண்டுதல்கள் புதுமைகளாய் மலர்ந்தன. புனிதரின் புகழ் பரப்பும் குருசடிகள் இந்தியாவின், தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உருவாகின. வனவிலங்குகள், பூச்சிகள் ஆகியவற்றிலிருந்து விசேசமான பாதுகாப்பு அளிப்பவராக கத்தோலிக்க மக்களால் இன்றளவும் போற்றப்படுகிறார். இப்புனிதர் வழியாக இறைவனை நோக்கி மன்றாடுவோம். வாழ்வில் வளம்பெறுவோம்.

தூய வனத்துச்சின்னப்பரின் பிரார்த்தனை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தூயவரிடம் வேண்டிக்கொள்ள பயன்படுத்தலாம்.
10/06/2021

தூய வனத்துச்சின்னப்பரின் பிரார்த்தனை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தூயவரிடம் வேண்டிக்கொள்ள பயன்படுத்தலாம்.

10/06/2021

தூய வனத்துச் சின்னப்பர் பாடல் தங்களது செப உணர்வினை ஆழப்படுத்தட்டும். இப்பாடலை உருவாக்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

25/12/2015

கிறிஸ்து பிறப்பு பெருவிழா வாழ்த்துக்கள். பாலன் இயேசு உங்களையும், குடும்பத்தாரையும் நிறைவாக ஆசீர்வதிக்க எங்கள் செபங்கள்.

மகிழ்வுடன்...
சேவியர் தமிழ்மணி

30/08/2014

This is to propagate the history and development of devotion of St Paul the Hermit.

Religious organisation

Address

21/37 B, Venice Street, 2nd Cross, Chinthamani
Tiruchirappalli
620002

Telephone

9443922601

Website

Alerts

Be the first to know and let us send you an email when St Paul, the Hermit தூய வனத்துச் சின்னப்பர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St Paul, the Hermit தூய வனத்துச் சின்னப்பர்:

Share