பரிசுத்த வேதாகமம், ஒரு தெய்வீக வெளிப்பாடு

  • Home
  • India
  • Tiruchirappalli
  • பரிசுத்த வேதாகமம், ஒரு தெய்வீக வெளிப்பாடு

பரிசுத்த வேதாகமம், ஒரு தெய்வீக வெளிப்பாடு யோவான் 17:17 - "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்". whatsapp@9965485247

“ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்” – 1 கொரி. 9:26"I THEREFORE SO RUN, NOT AS...
14/01/2025

“ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்” – 1 கொரி. 9:26
"I THEREFORE SO RUN, NOT AS UNCERTAINLY; SO FIGHT I, NOT AS ONE THAT BEATETH THE AIR."

🏆 பந்தய பொருள் என்ன என்பதைப் பற்றிய தெளிவான அறிவு அப்போஸ்தலர் பவுலுக்கு இருந்தது. இதை பற்றி அவர் நிச்சயமில்லாதவராக இருக்கவில்லை. அது ஒன்றா அல்லது வேறொன்றா என்ற கேள்வி அவரிடம் எழவில்லை.

🥇 "கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் பரம அழைப்பு" என்பதின் பொருள், நாம் அவருடன் உடன் சுதந்திரவாளிகளாக இருக்கிறோமென்பதையும், அவரோடுகூட பாடுபட்டால் மட்டுமே அவரோடு கூட மகிமையில் பிரவேசிப்போம் என்பதையும் பரி. பவுல் அறிந்திருந்தார்.

🏆 பந்தயத்தின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் குறித்தும் அப்போஸ்தலர் நிச்சயமில்லாதவராக இருக்கவில்லை. இவை மரண பரியந்தம் இருக்கக்கூடியவை என்பதையும், தன் ஜீவனை ரட்சிக்க முயற்சித்தால் அதை இழந்துவிடுவோம் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

🥇 மேலும், தான் எடுத்துக்கொண்ட தனது சொந்த தீர்மானத்திலும் அவர் நிச்சயமில்லாதவராக இருக்கவில்லை. பந்தயசாலையில் தான் பிரவேசித்திருக்கிறேன் என்பதை ஆக்கபூர்வமாக அறிந்தவராகவே இருந்தார்.

🏆 "நான் ஒருநாள் அதைச் செய்ய முயற்சிப்பேன்" என்று வெறுமனே கூறுபவர்களில் ஒருவராக இல்லாமல் கர்த்தரிடத்தில் மரணபரியந்தம் நிறைவேற்றக்கூடிய பலியின் உடன்படிக்கையை அவர் செய்திருந்தார்.

🥇 பந்தய பொருளை பெறுவதற்கான வாய்ப்பு குறித்தும் அப்போஸ்தலர் நிச்சயமில்லாதவராக இருக்கவில்லை. தேவனுடைய நல் விருப்பத்திற்கு இசைவிணக்கமாக செய்யவேண்டும் என்பதே தன்னுள் நிலைத்திருக்கிறது என்பதையும் அறிந்திருந்தார்.

🏆 இந்தப் பந்தயத்தில் அவரது திராணிக்கு மீறிய எதுவும் கேட்கப்படவில்லை என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

🥇 "தேவைப்படும் ஒவ்வொரு ஏற்ற சமயத்திலும் சகாயம் செய்யும் கிருபையானது" பந்தயத்தின் நிபந்தனைகளிலும், விதிமுறைகளில் உள்ளடங்கியுள்ளன என்பதையும் அறிந்திருந்தார். இந்த கிருபையும், ஒத்தாசையும் கர்த்தரிடமிருந்தே வரும் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

🏆 எனவே, இந்த பந்தயத்தில் ஓடுபவர்களுக்கு ஆரம்பத்திலிருந்து முடிவு வரை நிச்சயமில்லாமை என்று ஒன்றுமில்லை என்பதுவே அப்போஸ்தலருடைய வார்த்தைகளாக உள்ளது.

🥇 இவ்வாறே மகா மீட்பரின் வழிநடத்தும் கண்காணிப்பின் கீழ் உள்ள அனைவருக்கும் இது நடைபெறக்கூடும் என்பதே.

🏆 இவ்வாறாக நம்மில் ஒவ்வொருவரும் நமது அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்த முடியும்: " ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை.இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்”. – 2 பேதுரு 1:10,11.

REF: R 4809
Image courtesy : Vecteezy.com

தேவனால் ஜெநிப்பிக்கப்பட்ட எவனும் பாவம் செய்யான்"HE THAT IS BEGOTTEN OF GOD DOES NOT PRACTISE SIN"“என் பிள்ளைகளே, நீங்கள்...
13/01/2025

தேவனால் ஜெநிப்பிக்கப்பட்ட எவனும் பாவம் செய்யான்
"HE THAT IS BEGOTTEN OF GOD DOES NOT PRACTISE SIN"
“என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்” (1 யோவான் 2:1).

🗞️ வரலாற்று பதிவின் படி, இந்த நிரூபத்தை எழுதுகையில் அப்போஸ்தலர் யோவான் வயது முதிர்ந்த மனிதனாக இருந்திருக்கிறார். செவி வழி பாரம்பரிய செய்திப்படி, இவர் அப்போஸ்தலர்களிலேயே கடைசியாக மரித்தவராவார்.

🗞️ இவர் தமது வயது முதிர்ந்த காலத்தில், அனைத்து சபையினிடத்திலும் இயற்கையிலேயே கனிவு கொண்டதும் தகப்பனுக்குரியதுமான உணர்வுகளை கொண்டவராக இருந்தார். தம்முடைய அனுபவங்களின் மூலம் இவர் குணாம்சத்தில் மிகவும் பக்குவமடைந்தவராக (முதிற்சியடைந்தவராக) ஆயினார்.

🗞️ அசல் எழுத்தின் படி பார்க்கையில், நம்முடைய பாட வசனம் இன்னும் பொருத்தமாக வாசிக்கப்படக்கூடும். "என் அருமைக்குரியவர்களே (எனது அருமையானவர்களே or நேசிக்கப்பெற்றவர்களே - My Darlings), இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்" என்பதே. இதற்கு பதிலாக மொழிபெயர்ப்பாளர்கள் "சிறு பிள்ளைகளே" என்று இதனை சொல்லுவதில் சுயாதீனம் பெற்றிருக்கிறார்கள். ஏனென்றால், ஒரு சிறுபிள்ளை எப்போதுமே அருமைக்குரியதாகவே (நேசிக்கப்பெற்ற, செல்ல பிள்ளையாகவே) கருதப்படும்.

🗞️ பரி யோவான் "கர்த்தராகிய இயேசுவினால் நேசிக்கப்பட்ட சீஷனாகவே" பேசப்பட்டிருக்கிறார். இது அப்போஸ்தலனின் சொந்த சாட்சியுமாகும். குணாம்சத்தின் அதிக வலிமையோடு கூட கலந்த விசேஷித்த அன்பின் மனோபாவத்தை கொண்டவராக இவர் பார்க்கப்படுகிறார். இப்போது, இவருடைய யாத்திரை முடிவு பெற சமீபித்திருக்கையில், தேவனுடைய "சிறு பிள்ளைகளினிடத்தில்" இவருடைய இருதயம் அன்பின் அக்கறையுடன் சென்றது.

🔖 நம்முடைய பாட வசனத்திற்கு முந்தய அதிகாரத்தில், பாவமானது எல்லாரையும் பாதிக்கக்கூடியதான வக்கிரமான, முறைகேடான பண்பாகும் என்று அப்போஸ்தலர் சுட்டி காண்பிக்கிறார்.

🔖 எந்த மனிதனாவது தன்னிடத்தில் பாவம் இல்லை என்று சொல்லுவானேயாகில் அவன் தன்னை தானே வஞ்சிக்கிறான் என்றும், அவன் பொய்யன் என்றும், தேவனையும் அவன் பொய்யனாக்குகிறான் என்றும் அறிவிக்கிறார்.

🔖 நம்மிடத்தில் பாவம் இல்லையென்று நாம் சொல்வோமேயாகில், நம்முடைய பாவங்களை ஏற்றுக்கொண்டு, சுத்திகரிப்பதற்கு அனுமதித்து, கூடியமட்டிலும் பாவத்தை புறம்பே தள்ளி போடுவதற்கு நாம் நாடுகிறவர்களாக இருக்கவேண்டுமென்பதில் பிரியப்படுகிற தேவனை நாம் அவமதிக்கிறோம் என்று பரி யோவான் நமக்கு மனதில் பதிய வைக்கிறார்.

🔖 அப்போஸ்தலர் சொல்லும்போது "நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்" என்கிறார். ஆனால் நாமெல்லாரும் பாவிகள் - இந்த விஷயத்தில் நமக்கு நாமே உதவ முடியாது- ஆக, நாம் பாவத்தில் தொடர்ந்து இருக்கக்கடவோம் என்று அவர் சொல்லவில்லை.

🔖 மாறாக, உங்களுடைய இருதயத்தின் விருப்பத்திற்கு மாறாக நீங்கள் குற்றம் செய்கிறீர்கள் என்பதை உணர்ந்து, உங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு, பாவ மன்னிப்பை பெற்றுக்கொள்ளுவதற்கு கிருபாசனம் என்கிற இடத்திற்கு போக வேண்டும் என்பதை நினைவு கூறக்கடவீர்கள் என்றே அவர் சொல்லுகிறார். "பிதாவிடத்தில் பரிந்து பேசக்கூடிய நீதிபரராகிய இயேசு கிறிஸ்துவை நாம் உடையவர்களாக இருக்கிறோம்" என்பதை நினைவு கூற க்கடவோம்.

🔖 அவருடைய இரத்தத்தில் விசுவாசம் வைப்பதின் மூலம் மாம்சத்தின் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்பதை நினைவு கூறக்கடவோம். நம்மடைய அபூரண மாம்சத்தினால், நாம் புதிய சிருஷ்டிகளாக காரியங்களை பூரணமாக செய்ய முடியாது என்பதையும், இதன் காரணமாகவே தேவன் எல்லா காரியங்களுக்கும் அவரையே நமக்கு பரிந்து பேசுகிறவராகவும், தலையாகவும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார் என்பதையும் நாம் நினைவுகூர கடவோம்.

கிறிஸ்தவனே, விழிப்புள்ளவனாக (ஜாக்கிரதையாக) நட!
CHRISTIAN, WALK CAREFULLY!
📝 கர்த்தருடைய சித்தத்திற்கு விரோதமாகவும், கிறிஸ்துவுக்குள் புதிய சிருஷ்டியாக இருந்து நம்முடைய சுய நலன்களுக்காக தகுந்த வகையில் விழிப்புள்ளவர்களாக இல்லாததினாலும், அல்லது மாம்ச சீர்கேட்டினாலும் நாம் தவறான பாதையை தெரிவு செய்ததை உணர்ந்தோமேயாகில், அந்த படிகளை மீண்டும் பின்சென்று ஆராய்வதில் நேரத்தை செலுத்த தவறாமலும், மன்னிப்பிற்காக பிதாவை அழைக்கவும் கடவோமாக.

📝 “நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை.” (எபிரேயர் 13:10) இது, இளங் காளை மற்றும் வெள்ளாட்டு கடாக்கள் ஆகியவற்றின் இரத்தத்தினால் அல்ல, ஆனால் கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்பட்ட பலிபீடம் ஆகும்.

📝 “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் (பரிசுத்த மனோதிடனோடும், விசுவாச உறுதியோடும் – with Holy courage and confident faith) கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.” (எபிரேயர் 4:16).

📝 நம்முடைய பிதாவின் அன்பினால் நமக்கு அருளப்பட்ட இந்த கிருபாசனமாகிய, கிருபையின் சிங்காசனம் என்னே பாக்கியமுள்ளது (ஆசீர்வாதமானது)! இது இல்லாமல் நாம் ஒன்றுமே செய்யமுடியாது இருப்போம். இருப்பினும், அன்பிற்குரியவர்களே, நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் (கவனத்துடன்) நடக்கக்கடவோமாக. நாம் முன்னெடுத்து வைக்கும் நம்முடைய அடிகளில் நாம் அஜாக்கிரதையாக இருப்பதின் மூலம் நம்முடைய தேவனுடைய இரக்கத்தின் மேல் நாம் ஒருபோதிலும் துணிவு கொள்ளாதிருப்போமாக.

📝 மாறாக, நமது பிதா, “தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உண்டாக்கிவரும்போது”, நாம் ஊக்கமான ஜெபத்துடனும், விழிப்புடனும் கூட " நமது இரட்சிப்பு நிறைவேற அதிக பயத்துடனும் நடுக்கத்துடனும் பிரயாசப்படக்கடவோமாக" (பிலிப்பியர் 2:12,13).

"Christian, walk carefully! oft wilt thou fall,
If thou forget on thy Savior to call.
Safe shalt thou walk through each trial and snare,
If thou art clad in the armor of prayer!"

REF: R 5491

"உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். (சங்கீதம் 73:24)🛤️ தற்கால வாழ்க்கைய...
11/01/2025

"உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். (சங்கீதம் 73:24)

🛤️ தற்கால வாழ்க்கையில் ஏற்படும் கடினமான அனுபவங்களின் மத்தியில் சர்வ வல்லமையுள்ள தேவன் தமது தெய்வீக ஆலோசனையினால் தம்முடைய ஜனங்களை வழிநடத்துகிறார் என்ற இந்த கருத்தே எவ்வளவு ஆச்சரியமான விஷயம்!

🛤️ சிலர் தேவனுடைய வார்த்தையை நிராகரிக்கிறார்கள், மற்ற சிலர் பெயரளவில் மட்டும் ஏற்றுக்கொண்டாலும் அந்த ஆலோசனைகளை தங்கள் அனுதின ஜீவியத்தின் செயல்பாட்டிற்கென்று அவற்றை உண்மையில் ஏற்றுக்கொள்ளுவதில்லை.

🛤️ நம்முடைய பரம பிதா நமக்கு அநேக ஆலோசனைகளை வழங்குகிறார். அவற்றில் ஒன்று “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரி 12:9) என்பதே.

🛤️ கர்த்தரின் இந்த நல்ஆலோசனையை நாம் நினைவுக்கூறும்போது, நாம் கர்த்தருடையவர்களல்ல என்று நம்மால் தவிர்க்கமுடியாத நம்முடைய பெலவீனங்களாலும் அபூரணங்களாலும் சத்துருவானவன் நாம் நம்பும்படி அவன் நமக்கு எதிராக மேற்கொள்ளும் தாக்குதல்களில் இருந்து நமக்கு எத்தனை முறை ஆசீர்வாதங்களையும் நிவாராணத்தையும் (சுமை தணிப்பையும்) இது நமக்கு அளிக்கிறது

🛤️ இப்படிப்பட்ட ஆலோசனை நமக்கு முன் இருக்கும்போது நம்மை சுற்றி நெருங்கி நிற்கும் உலகம், மாம்சம் மற்றும் பிசாசு ஆகியவற்றிற்கு எதிரான நம்முடைய போராட்டத்தில் நமக்கு எப்படிப்பட்ட பலத்தை இது அளிக்க கூடியதாக உள்ளது.

🛤️ சோதனை நேரத்தில் "நமக்கு அவசியமான சமயத்தில் தேவ கிருபையினால் உதவியை பெற" கர்த்தரிடத்தில் நாம் ஜெபிக்க நமது இருதயங்களை உயர்த்த இது எந்தளவிற்கு நம்மை வழிநடத்துகிறது.

🛤️ நம்முடைய பெலவீனங்களையும், அபூரணங்களையும் பற்றிய பாடத்தை நாம் கற்றுக்கொள்ளவும், அவருடைய பலத்தை நமக்கு தேவைப்படும் சமயத்திற்கு முன்பல்ல ஆனால் ஒவ்வொரு உபத்திரவ கால சமயத்திலும் அவரது பலம் நமக்கு "தேவைப்படும் அந்த சமயத்தில்" அவரண்டைக்கு செல்லும்படியான பாடத்தையும் கற்றுக்கொடுக்க நமது கர்த்தர் பிரியமுள்ளவராக இருக்கிறார்.

🛤️ கர்த்தருடைய ஆலோசனையை நாம் மெய்யாக மதித்துணரும்போது எப்படிப்பட்ட ஆசீர்வாதம் நமக்கு கிடைக்ககூடியதாக உள்ளது.

REF: Z 2240 (Songs in the Night - Jan 11)

"வருஷத்தை உம்முடைய நன்மையினால் முடிசூட்டுகிறீர்""THOU CROWNEST THE YEAR WITH THY GOODNESS"சங்கீதம் 65:11☔ தகப்பனாகிய ஆதா...
30/12/2024

"வருஷத்தை உம்முடைய நன்மையினால் முடிசூட்டுகிறீர்"
"THOU CROWNEST THE YEAR WITH THY GOODNESS"
சங்கீதம் 65:11

☔ தகப்பனாகிய ஆதாமின் கீழ்படியாமையையும், இதன் காரணமாக இவர் நீதியான தீர்ப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதையும், இதன் விளைவாக நாமும் இவருடைய சந்ததி அனைவரும் இவர் மூலமாக ஜீவனுக்கான ஆசீர்வாதங்களில் பங்கடைந்ததுபோல இவருடைய அபூரணங்களிலும், மரிக்கும் நிலையிலும்கூட பங்கடைந்ததை நாம் நினைவுகூர்ந்து பார்க்கும்போது, நாம் அனுபவிக்கவேண்டுமென்று தேவன் நமக்கு அனுமதிக்க விரும்பினது எவ்வகையான சகிக்கக்கூடிய நிலைமையாக இருந்தாலும் அதற்காக நாம் தேவனிடத்தில் நன்றியறிதலுள்ளவர்களாக இருப்பதற்கு உறுதியான காரணமிருக்கிறது.

⏳ இந்த நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும்போது ஒவ்வொரு ஆசீர்வாதமும், அதாவது அது சிறியதோ அல்லது பெரியதோ எதுவானாலும் அதுவொரு தகுதியற்ற தயவாகும். ஏனென்றால் நாம் ஒன்றுக்கும் தகுதியானவர்களல்ல. நம்முடைய உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டும் போயுள்ளன.

☔ எனவே, உலகத்தில் வாழ்ந்து வரும் ஒரு அங்கத்தினர் என்ற நிலையில் இவ்வருடத்தின் முடிவிலே நாம் சிருஷ்டிகரை கண்ணோக்கிப்பார்த்து, உரிமையோடு நம்மால் கோரமுடியாத எண்ணிலடங்காத இரக்கங்களையும், ஆசீர்வாதங்களையும் அவருடைய கரங்களிலிருந்து நாம் பெற்றுகொண்டோமென்பதை அவரிடம் அறிக்கையிடக்கடவோம்.

⏳ பரம்பரை பரம்பரையாக நாம் ஆக்கினை தீர்ப்பின்கீழ் இருப்பதுமட்டுமல்ல, ஆனால் தெய்வீக தயவை பெற்றுக்கொள்ளுவதற்கு தனிப்பட்ட முறையில் நாம் தகுதியற்றவர்கள் என்பதையும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

☔ எப்பிஸ்கோப்பல் சபையை சேர்ந்த நமது நண்பர்கள் தெரிவிப்பதை போல: "நாங்கள் செய்யக்கூடாத அனைத்தையும் செய்திருக்கிறோம். செய்யவேண்டியவைகளையோ செய்யாமல் விட்டுவிட்டிருக்கிறோம். ஆகவே எங்களிடத்தில் பெலனில்லை" என்று உணரவேண்டும்.

⏳ "தவித்து பிரசவ வேதனைப்படும் சிருஷ்டி" என்று உலகத்தை குறித்து அப்போஸ்தலர் பேசுவது பொருத்தமாகத்தான் உள்ளது. கசப்பான ஏமாற்றங்கள், சஞ்சலங்கள், அழுகைகள் ஆகியவற்றால் இவர்கள் பாதிப்படைந்திருந்தாலும், தாங்கள் அனுபவிக்கிற ஆசீர்வாதங்களுக்காக பெருமிதமாக தேவனுக்கென்று இவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும்.

☔ தேவனுக்கு நன்றியறிதலுள்ளவராக இருப்பதற்கு சுபாவ மனிதனுக்கே காரணங்கள் பல இருந்தால், நமது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் சொந்தமாக்கப்பட்டதினால் தேவ பிள்ளைகளான நமக்கு இன்னும் எவ்வளவு காரணங்கள் இருக்கவேண்டும்.

⏳ உலகம் அனுபவிக்கும் எல்லா ஆசீர்வாதங்களையும் நாம் அனுபவிப்பதில்லையா? அவர்கள் நன்றி செலுத்தத்தக்க அதே அழைப்பை நாமும் பெற்றுக்கொள்ளவில்லையா? கூடுதலாக, தம்முடைய கிருபையின் சம்பூரணத்தினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாக தேவன் நமக்கு அருளியிருப்பது நிச்சயமல்லவா? (எபேசியர் 3:20).

☔ நம்முடைய மனங்களை பின்னோக்கி பார்க்கும்படிசெய்து, தேவ மகிமையின் நம்பிக்கையில் களிகூரத்தக்கதாக நம்முடைய தற்போதைய நிலை வரைக்கும் நம்மை வழிநடத்திய தெய்வீக கிருபையின் படிகளை ஆராய்ந்துபார்ப்பது எவ்வளவு பிரயோஜனமானது.

🙇🏻‍♂️ நாம் பலனற்றவர்களாக இருக்கும்போதும், தகுதியற்றவர்களாக இருக்கும்போதும், நம்மையும் உட்பட தேவபக்தியற்றவர்களுக்காக கிறிஸ்து மரித்தார்.

🙇🏻‍♂️ எனவே நாம், தேவனுடைய கிருபையை கேள்விப்பட்ட தயவுபெற்றவர்களின் மத்தியிலே இருக்கிறோம்.

🙇🏻‍♂️ நாம், கர்த்தருடைய கிருபையையும், சத்தியத்தையும் உணர்ந்துகொள்ளத்தக்கதான புரிந்துகொள்ளுதலின் செவிகளையும், கண்களையும் உடைய அந்தசொற்ப பேர் மத்தியில் இருக்கிறோம்.

🙇🏻‍♂️ மேலும், இவைகளை கேள்விப்பட்டாலும் சொல்லிமுடியாத சந்தோஷத்தில் களிக்கூர்ந்து, தங்களுக்கென்று ஆசீர்வாதங்களை சொந்தமாக்கிக்கொண்ட இன்னமும் சொற்பபேறாக உள்ளவர்கள் மத்தியில் இருக்கிறோம்.

🙇🏻‍♂️ கூடுதலாக நாம், தேவனுடைய கிருபையை விருதாவாக பெற்றுக்கொள்ளாமல் கர்த்தருடைய வார்த்தை மற்றும் ஆவியின் வழிநடத்துதலின்கீழ், நியாயமான ஊழியராக தங்கள் சரீரங்களை பரிசுத்தமும், தேவனுக்கு பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புவித்த இன்னமும் சொற்பபேறாக உள்ளவர்கள் மத்தியில் இருக்கிறோம்.

"என் இரட்சகரும், என் தேவனுமானவரே உம்மிலே எனது விருப்பத்தை உறுதிப்படுத்தின நாள் சந்தோஷமான நாள்
ஒளிவீசுகிற இந்த இருதயம் களிக்கூர்ந்து இந்த பெரும் மகிழ்ச்சியை எல்லாவிடங்களிலும் எடுத்துரைக்கும்"

☔ "மற்றவர்கள் மேன்மைபாராட்டுவதற்கு இடமிருந்தால் நான் அதிகம்" என்று அப்போஸ்தலர் தம்மைக்குறித்தே சொல்லியிருக்கிறார்.

⏳ தேவனுடைய கிருபைவரங்களுக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் உலகமானது மேன்மைபாராட்டுவதற்கு ஏதாவது இருந்ததேயாகில், நன்றிகூறுவதற்கு உலகத்திடம் ஏதாவது இருந்ததேயாகில், கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிற நமக்கு நன்றிகூறுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன.

☔ அதாவது தேவனுடைய நல்வார்த்தையையும், இனிவரும் யுகத்தின் பலன்களையும் ருசிபார்த்த நாம், பரிசுத்த ஆவியை பெற்ற நாம், அபரிமிதமான அளவில் களிகூருவதற்கு ஏராளமாக உள்ளன.

⏳ இங்கே நமக்கு நிலையான நகரம் இல்லையென்றபோதிலும், வாசம் செய்யக்கூடிய பாதுகாப்பான இடம் இல்லையென்றபோதிலும், உலகம், மாம்சம், எதிராளி ஆகியோரால் தொடர்ந்து தாக்கப்பட்டாலும் நமது பரதேசி யாத்திரையின் வீட்டிலும் கூட நாம் சந்தோஷப்பட கூடும்.

☔ நமது பெரிய மீட்பரான கர்த்தர் நம்மோடு இருக்கிறார். அவருடைய மகா மேன்மையும் விலையேறப்பெற்றதுமான வாக்குத்தத்தங்கள் நம்முடைய ஆதரவுக்காகவும், ஆறுதலுக்காகவும் இருக்கின்றன. இரட்சிக்க வல்லமையுள்ளவரிடத்திலே நம்மை ஒப்புவித்திருக்கிறோம். ஆம், அப்போஸ்தலர் கூறுகிறபடி "கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் பற்றிப்பிடிக்கப்பட்டிருக்கிறோம்" (பிலிப்பியர் 3:12). நம்முடைய இருதயங்கள் அவருக்கு உண்மைப்பற்றோடு இருக்கும்வரைக்கும் நம்மை அவர் பற்றிக்கொண்டிருப்பார்.

⏳ ஒருவேளை நம்முடைய பங்கில் விருப்பத்துணிவு இருந்ததேயாகில் அதுவே கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் தேவ அன்பிலிருந்து நம்மை பிரிக்கக்கூடியதாக இருக்குமேயொழிய மற்றபடி மேற்கூறப்பட்ட அந்த வகுப்பாரை சேர்ந்த நாமனைவரும் விசேஷமாக ஆவிக்குரிய நிலைப்பாட்டிலிருந்து இந்த வருடத்தை ஆராய்ந்து பார்க்கக்கடவோமாக.

☔ ஆவிக்குரிய வளர்ச்சியிலும், கிருபையிலும், அறிவிலும், அன்பிலும், பரிசுத்த ஆவியின் கனிகளிலும், கிருபை குணாம்சங்களிலும் எந்தளவிற்கு முன்னேற்றமடைந்திருக்கிறோம் என்பதை கவனித்து பார்க்கக்கடவோமாக.

⏳ இவை அதிக அளவில் இருந்ததேயாகில் நாம் களிகூரக்கடவோமாக. ஒருவேளை குறைந்த அளவில் இருந்ததேயாகில் இந்த இந்த உண்மை நிலையைக்குறித்து மனம் வருந்த கடவோமாக. எனினும் அதைரியமடைந்தோ அல்லது சத்துருவிடம் சரணடைந்துவிடக்கூடிய அளவுக்கோ இது சென்றுவிடக்கூடாது.

☔ "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் 16:33; 2 கொரிந்தியர் 12:9) என்று சொன்ன நமது எஜமானாருடைய சத்தத்தை நாம் கேட்க கடவோமாக.

⏳ இந்த வருடத்தின் தற்காலிகமான ஆசீர்வாதங்கள், இரக்கங்கள், சிலாக்கியங்கள் மற்றும் தயவுகள் ஆகியவற்றிலும், ஆவிக்குரிய சந்தர்ப்பங்கள், பலம், அறிவு, நமது அருமை மீட்பருடைய குணாம்ச சாயலின் அபிவிருத்தி ஆகியவற்றிலும் இந்த வருடத்தை ஆராய்ந்து பார்க்கும்போது இவை அனைத்திலும் நாம் களிகூரும் அதேசமயத்தில் தெய்வீக நன்மையிலுள்ள ஆசீர்வாதங்களால் தேவன் வருடத்தை முடிசூட்டுகிறார் என்ற நமது பாட வசனத்தின் வாக்கியத்தை நாம் நமக்குள்ளாக சொல்லிக்கொள்ளுவோமாக.

☔ தேவன் நமக்காக ஒவ்வொன்றையும் செய்வதால் நாம் ஒன்றும் செய்யவேண்டியதில்லை என்றல்லாமல், நம்முடைய காரியங்கள் அனைத்தும் அவருடைய ஒத்தாசை இல்லாமல் நடந்தேறாது, ஆகவே தெய்வீக தயவும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே நமது முயற்சிகளும், நம்முடைய பிரயாசங்களும் பிரயோஜனமான பலாபலனாக அமையும் என்பதையே நாம் புரிந்துகொள்ளவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்.

⏳ தேவனுடைய நன்மையே நமக்காக வருஷத்தை முடிசூட்டுகிறது. விசேஷமாக விசுவாச வீட்டாருக்கு அவர் என்னே நல்லவராகவும், என்னே தயாளராகவும், என்னே ஒத்துணர்வுள்ளவராகவும், என்னே காருண்யமுள்ளவராகவும், என்னே அன்பும், கனிவுமுள்ளவராகவும் இருந்திருக்கிறார் என்பதை இந்த வருடத்தின் முடிவிலே நாம் நினைவுகூர்ந்து களிக்கூறக்கடவோமாக.

☔ இப்படிப்பட்டவர்களுக்கு மட்டுமே தமது கிருபையின் செய்தியையும், சமாதானத்தின் செய்தியையும் தேவன் வெளிப்படுத்துகிறார் (அ) அனுப்புகிறார்.

⏳ இருப்பினும், சீக்கிரத்திலேயே புது உடன்படிக்கை துவங்கப்பட்டு, எக்காள தொனியோடு இதன் பாவமன்னிப்பின் செய்தியும், புது உடன்படிக்கையை முத்தரிக்கக்கூடிய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டு, "உலகம் உண்டானது முதற்கொண்டு தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளின் வாக்கினாலே உரைத்த இழந்துபோனவைகளை திரும்ப கொடுத்தலை" (அப்போஸ்தலர் 3:21) சாத்தியமாக்கக்கூடிய உலக மனுகுலத்திற்கான யூபிலி செய்தியும் புறப்பட்டு செல்லும்.

☔ நம்முடைய தயவு மற்றும் ஆசீர்வாதங்கள் மட்டுமல்லாமல், வரவிருக்கும் ஆசீர்வாதங்களும் தெய்வீக நன்மையினாலும் தெய்வீக நன்மையின் மூலமாகவும் வருகிறது என்பதை உணர்ந்துகொள்ளுவதின் மூலம் களிகூரக்கடவோமாக.

⏳ இந்த தெய்வீக நன்மையின் மகா பெரிய ஊற்றின் வாய்க்காலாக நமது கர்த்தராகிய இயேசுவே இருக்கிறார். இவர் மூலமாக இவரை பின்பற்றும் இவருடைய சீஷர்களாகிய நம்மை இது வந்தடைகிறது.

☔ ஆகவே, நாம் அவரோடுகூடிய பந்தத்தினுள் வருவதற்கு அனுமதிக்கப்படுகிறோம். எனவே, முடிவில் சுபாவ இஸ்ரயேலர்களுக்கும், பூமியின் வம்சங்கள் அனைத்திற்கும் தெய்வீக நன்மையை பொழிந்தருளக்கூடிய வாய்கால்களாக நாமும் ஆவோம்.

📝 REF: R 4100

 #கிறிஸ்துவின் பிறப்பு - THE BIRTH OF CHRISTலூக்கா 2:10-14Golden Text : "இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்ட...
26/12/2024

#கிறிஸ்துவின் பிறப்பு - THE BIRTH OF CHRIST
லூக்கா 2:10-14

Golden Text : "இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்"

💞 வாக்குத்தத்தம் செய்யப்பட்ட இந்த பிள்ளையின் பிறப்பிற்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நாற்பது நூற்றாண்டுகளின் போது, சில விசுவாசமுள்ள ஆத்துமாக்கள் இந்த வாக்குத்தத்தங்களின் பேரில் தொடர்ந்து நம்பிக்கை கொண்டு வந்ததுடன், அவர் மூலமாக கொண்டுவரப்படும் இரட்சிப்பிற்காகவும் தொடர்ந்தேர்ச்சியாக கண்ணோக்கியும் வந்தனர்.

💔 கர்த்தருடைய வருகையை பற்றிய செய்தியை முதலில் பெற்றுகொண்ட தாழ்மையான மேய்ப்பர்கள், தேவனுடைய வாக்குத்தத்தங்களின் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்களாக இருந்தனர். இப்படிப்பட்டவர்களுக்கே, இப்படிப்பட்டவர்களுக்கு மாத்திரமே, கர்த்தர் தமது தீர்மானங்களை (நோக்கங்களை) தெரியப்படுத்துகிறார்.

💞 அவர்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி, “பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் - "Fear not; for, behold, I bring you good tidings, of GREAT JOY, which shall be to ALL PEOPLE” என்பதாகும்.

💔 இப்படிப்பட்ட இந்த செய்தியின் ஆசீர்வாதமான பேரின்ப நிலை, அடுக்கடுக்காக உள்ளது. முதலில் இது, “சந்தோஷ நற்செய்தி”, பின்னர் “மிகுந்த சந்தோஷம்”, அடுத்து இதன் மேலான தாற்பரியம் "எல்லா ஜனத்திற்குமாகும்".

💞 அப்படியென்றால் இந்த இரவில் இஸ்ரயேலின் நம்பிக்கைக்காக எதிர்நோக்கி கொண்டிருக்கிற மேய்ப்பார்களாகிய உங்களுக்கு மட்டுமல்ல, தூரத்திலும் சமீபத்திலுமிருக்கிற உங்களுடைய சிநேகிதர்கள், உறவினர்கள் மற்றும் அயலாகத்தார்கள் எல்லாருக்கும், மேலும், இப்போது வாழ்ந்து வருகிற மற்றும் இனி வாழப்போகிறவர்களுடைய சிநேகிதர்கள், உறவினர்கள் மற்றும் அயலாகத்தார்கள் எல்லாருக்கும், அதே சமயம், மரணத்தில் அயர்ந்து நித்திரை செய்யும் அனைவருக்கும் இது சந்தோஷ நற்செய்தியும், மிகுந்த சந்தோஷமுமாகும் என்பதாக அந்த செய்தி இருந்தது.

💔 “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்”. (வச. 11) என்கிற ஆசீர்வாதமான செய்திக்கு!, மகிழ்ச்சிமிக்க தொனிக்கு செவிகொடுப்போமாக!

💞 பின்பு அவர் எல்லா ஜனங்களுக்கும் இரட்சகராக இருக்க வேண்டும். ஆகவே வேதவாக்கியம் தெளிவாக உறுதிப்படுத்துகிறபடி , தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்த்து, எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்தார். இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கவிருக்கிறது - எல்லாருக்கும் விளங்கவிருக்கிறது. (எபிரேயர் 2:9; 1 தீமோத்தேயு 2:6).

💔 கிறிஸ்து, எல்லோருக்காகவும் தம்மையே மீட்கும் பொருளாக கொடுத்தினால், பாவிக்கான ரட்சிப்பு அவசியமாக உள்ளது என்பதே இந்த சாட்சியாகும். யார் மீதும் இரட்சிப்பின் சலுகையானது (favor of salvation) பலவந்தம் பண்ணப்படுவது கிடையாது. ஆயினும், தேவனுடைய சட்டதிட்டங்களுக்குட்பட்டு, இந்த தயவை ஏற்றுகொள்ளுவதின் நிபந்தனையின் பேரிலேயே, ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அல்லது நிராகரிக்கப்படுவதற்கு என்று ஒவ்வொரு மனிதருக்கும் வழங்கப்படுகிறது.

💞 வச. 12: “பிள்ளை யைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.
அப்போது, இந்த வாக்குத்தத்தின் அரும்பானது (மலர் மொக்கு) எங்கு, எப்படி அவர்கள் கண்டுகொள்ளலாம் என்பது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் அவர்கள் அவரை கண்டுகொள்ளும்போது, இது அவர்தாம் என்று இருமடங்கு உறுதிபெறுகிறவர்களாக இருப்பார்கள்.

💔 வச. 13,14: “அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்”

💞 தேவ தூதர்கள், மனிதருடைய விவகாரங்களில் எவ்வளவு ஆர்வம் காண்பிக்கிறவர்களாக இருக்கிறார்கள் என்பதையும், எவ்வாறு அவர்கள் நம்மோடு அனுதாபம் கொள்ளுகிறார்கள் என்பதையும், நாம் சுபீட்சம் பெறுவதில் (நம்முடைய வாழ்வுவளத்திற்காக) அவர்கள் எந்த அளவிற்கு களிகூரக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் இது நமக்கு தெரிவிக்கிறது. மேலும், இது, மனம்திரும்புகிற ஒரு பாவியினிமித்தம் பரலோகத்தில் தேவதூதர்கள் மத்தியில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்ற விஷயத்தையும் நமது நினைவிற்கு கொண்டுவருகிறது (லூக்கா 15:7).

💔 அதோடுகூட, தேவதூதர்களாகிய இவர்கள், மனுக்குல இரட்சிப்பை பற்றிய தேவ ஏற்பாட்டின் மேல் அக்கறையுள்ள முனைப்பார்வம் கொண்ட மாணாக்கரும் ஆவர் என்பதையும் (earnest students of the plan for human salvation), இவர்களனைவருமே, இரட்சிப்பிற்கு சுதந்தரவாளிகளாக ஆகப்போகிறவர்களுக்கு ஊழியம் செய்யும்படி அனுப்பப்பட்ட பணிவிடை ஆவிகள் என்பதையும் கூட நமது நினைவிற்கு கொண்டு வருகிறது (1 பேதுரு 1:12; எபிரேயர் 1:14)

💞 இவ்வாறு, இவர்கள் தேவனுடைய சிருஷ்டிகளாக, வீழ்ந்து போன சந்ததிகளிடத்திலும் அன்புகனிந்த இரக்கமுள்ள மனப்பான்மை நிறைந்தவர்களாக இருப்பதை நாம் காண்கிறோம். மேலும், இவர்கள், தேவனுடைய ஏற்பாட்டை மிகுந்த ஆவல்மிக்கவர்களாக உற்று நோக்கி வருவதால், இந்த வீழ்ந்து போன சந்ததியிலுள்ள சிலர், ஒரு போதும் பாவமே செய்யாத தூதர்களை காட்டிலும் உன்னதத்திற்கு உயர்த்தப்படுவார்கள் என்பதை அறிந்தவர்களாக இருப்பினும், இந்த இரட்சிப்பை சுதந்தரித்து கொள்ளப்போகிற சுதந்திரவாளிகளுக்கு ஊழியம்செய்வதை (பணிவிடை செய்வதை) பாக்கியமாக எண்ணுவதையும் கூட நாம் காண்கிறோம் (esteeming it a privilege to serve the heirs of this salvation).

💔 தமக்கு சித்தமானதை செய்யக்கூடிய சிருஷ்டிகருக்கு இருக்கும் உரிமையை, இவர்கள் மனத்தாழ்மையோடு அங்கீகரிப்பதையும், ஒருபோதும் தவறிழைக்காத அவருடைய ஞானத்திலும், அவருடைய ஆழங்காணா அன்பிலும் செயலாற்றுகிற அவருடைய பூரண சித்தத்திற்கு, எந்த எதிர்ப்பு உணர்ச்சியின்றி இணங்கக்கூடிய அவர்களுடைய உற்சாகமான மற்றும் சந்தோஷம் நிறைந்த செயல்பாடுகளையும் கூட நாம் காண்கிறோம்.

💞 ஆ! பரலோகத்திலும் பூமியிலுமுள்ள தேவனுடைய முழு குடும்பமும், யாவே தேவனால் அபிஷேகம் செய்யப்பட்டவருடைய தலைமையின் கீழ் முழுவதுமான இசைவிணக்கத்திற்குள் வரும்போது என்னே ஒரு உலகளாவிய சந்தோஷமானது மேலோங்கி நிலைபெற்றிருக்கும்!
Oh! what universal joy will prevail when the whole family of God in heaven and in earth is brought into fullest harmony under the headship of God Yahweh's Anointed.

REF: R 1478

பாத்திரவான் யார்? -  #யூதா கோத்திரத்து சிங்கமே பாத்திரவான் ஆவார்(வெளிப்படுத்தின விசேஷம் 5ம் அதிகாரம்)🦁 பாத்திரவானாகிய யூ...
21/12/2024

பாத்திரவான் யார்? - #யூதா கோத்திரத்து சிங்கமே பாத்திரவான் ஆவார்
(வெளிப்படுத்தின விசேஷம் 5ம் அதிகாரம்)

🦁 பாத்திரவானாகிய யூதா கோத்திரத்து சிங்கம் – Lion of Judah the Worthy One:
தன்னுடைய பராமரிப்பின் கீழ், தெய்வீக நோக்கத்தின் சுருளை (புத்தகம்) வைத்திருப்பதற்கும், அதனை திறப்பதற்கும், தெய்வீக நோக்கத்திற்கு இசைவிணக்கமாக செயலாற்றுவதற்குமுரிய (இதனை நிர்வகிப்பதற்கும்) இந்த உன்னதமான கனத்தை பெற்றுக்கொள்ளுவதற்கு பாத்திரவான் யாராவது இருக்கின்றனரா என்று பரலோகம் மற்றும் பூலோகம் முழுவதிலும் விசாரித்தறியக்கூடிய ஒரு பிரகடனத்தை யோவான் இந்த காட்சியில் கவனிக்கிறார் (வெளி 5ம் அதிகாரம்)

🦁 யார் இதற்கு பாத்திரமுள்ளவர் (பாத்திரவான் யார்) என்று யோவான் நோக்கியபோது, பாத்திரவான் ஒருவருமில்லை என்பதை கண்டறிந்தபோது அவர் அழுதார்.

🦁 அதாவது, தம்முடைய திட்டத்தை சம்பந்தப்படுத்திய விஷயத்தில் தெய்வீக செயலதிகாரியாக (பிரதிநிதி) இருப்பதற்கு பாத்திரவான் ஒருவருமில்லாததால் உன்னதமான, அருமையான தேவனுடைய நோக்கங்கள் பயனற்றதாக ஆகிவிடுமோ என்பதாக யோவானுக்கு இருந்திருக்கவேண்டும் (யோவான் அழுதத்திற்கான காரணம் – வெளி 5:3).

🦁 ஆயினும், “இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்” (வெளி 5:5) என்று தூதனால் சொல்லப்பட்டபோது யோவானின் கண்ணீர் நிறுத்தப்பட்டது. அப்போது, "இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்” என்று யோவான் தெரிவிக்கிறார். அப்போது ஆட்டுக்குட்டியானவருக்கு அந்த சுருள் கொடுக்கப்பட்டது.

🦁 பின்னர், “அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார்” (வெளி 5:12) என்று தேவதூதர்கள் அனைவரும் ஆட்டுக்குட்டியானவரை தொழுதுகொண்டு இப்படி கூறினார்கள்.

ஏற்ற காலத்தில் பிதாவின் திட்டங்களை இயேசு வெளிப்படுத்துதல் - Jesus Reveals the Father’s Plans in Due season
🦁 இந்த காட்சியை பொருத்திப்பார்க்கும்போது, இதன் முக்கியத்துவத்தை நாம் காணமுடியும். நமது கர்த்தர் அடிக்கப்படும் வரையிலுமே, அவர் மனிதனுடைய மீட்கும் பலிபுண்ணியமாக தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கும் வரையிலுமே தெய்வீக நோக்கங்களை செயல்படுத்துவதற்கு பிரபஞ்சம் முழுவதிலுமே பாத்திரவான் ஒருவரும் இருக்கவில்லை.

🦁 பிதாவின் சித்தத்திற்கு நமது கர்த்தர் காண்பித்த அவருடைய அன்பின் கீழ்ப்படிதலானது மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தம் அதாவது கடைசி நிமிடம் வரைக்கும் தம்மை உண்மையுள்ளவராக நிரூபித்து காண்பித்ததாக இருந்தது.

🦁 இவரை பிதா மரித்தோரிலிருந்து எழுப்பினார், இவர் உன்னதத்திற்கு பரமேறியபோது, தேவதூதர் அனைவரும் இவரை தொழுதுகொள்ளக்கடவர்கள் என்ற பிரகடனம் வந்தது.

🦁 இவரே அடிக்கப்பட்ட தேவாட்டுக்குட்டியாவார், இவர் தம்முடைய மரணத்தினால், கண்டனத்திற்குள்ளாக்கப்பட்ட (தீர்ப்பிடப்பட்ட) உலக மனுக்குலத்தை மீட்டெடுத்ததோடு, தெய்வீக ஏற்பாட்டின் ஒவ்வொரு அம்சமும் இவருடைய பொறுப்பில் வைக்கப்படுவதற்குரிய பிதாவினுடைய நம்பிக்கையின் மதிப்பினையும் பெற்றார். "இவரே பாத்திரவான்".

🦁 இந்த சந்தர்பத்திலிருந்து தெய்வீக ஏற்பாட்டின் ஒவ்வொரு அம்சங்களும் இவருடைய மேற்பார்வையின் கீழ் கொண்டுவரப்பட்டது. மேலும், இவரே முத்திரைகளை திறக்கவும், தேவனுடைய கிருபைபொருந்திய நோக்கங்களின் ஒவ்வொரு அம்சங்களை செயல்முறைப்படுத்தவும் (நிர்வகிக்கவும்) இவரால் கூடியதாயிற்று.

🦁 பிதா தமக்கு வெளிப்படுத்தக்கூடிய காரியங்கள் எதுவாயினும் அதனை, முழுமையான பிரதிஷ்டையென்னும் தம்முடைய அடிச்சுவட்டில் நடக்கக்கூடிய விசுவாசமுள்ள தம்முடையவர்களுக்கு, பரிசுத்த ஆவியின் மூலமாகவும், தமது பரிபாலனத்தினாலும் வெளிப்படுத்துவதாக தமது சபைக்கு வாக்குத்தத்தம் செய்தருளினார்.

REF: WPRT, pg. 37

* #  முன்னறிவின்பேரில்  #விசுவாசம் வைப்பது ஒரு முக்கியமான பாடமாகும் – Faith in divine foreknowledge an Important lesson*...
21/12/2024

* # முன்னறிவின்பேரில் #விசுவாசம் வைப்பது ஒரு முக்கியமான பாடமாகும் – Faith in divine foreknowledge an Important lesson* #

🔖 தெய்வீக முன்னறிவை பற்றி ஆழமாக பதியவைப்பதே தேவன் கற்றுத்தரும் மிகப்பெரிய பாடங்களில் ஒன்றாகும்.. உலக தோற்றத்திற்கு முன்பிலிருந்தே தம்முடைய திட்டத்திலுள்ள ஒவ்வொரு அம்சங்களும் முன்திட்டமிடப்பட்டவைகளும், முன்னொழுங்குபடுத்தப்பட்டவைகளுமாகும் என்பதை நாம் அறியவேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

🔖 தம்முடைய சொந்த சித்தத்தின் ஆலோசனைக்கேற்றபடியும், மாற்றம் செய்யப்படமுடியாத தம்முடைய நிலையான பிரமாணத்துக்கும், கொள்கைகளுக்கும் ஏற்றபடியாகவும் தாம் சகலத்தையும் செய்து வருகிறார் என்ற நிஜ உண்மையை நாம் அங்கீகரிக்கவேண்டுமென்று அவர் விரும்புகிறார். இந்த பாடமானது, தெய்வீக வெளிப்பாட்டினால் கிரியை நடப்பித்துவரும் பிரதானமான நோக்கங்களில் ஒன்றாகும்.

🔖 அடுத்ததாக, தெய்வீக நோக்கங்களை சம்பந்தப்படுத்தின கூடுதல் விவரங்களை முன்கூட்டியே வழங்குவதின்மூலம், இவற்றில் அவர்கள் களிகூர்ந்து, ஒத்துழைக்கத்தக்கதாக தம்மோடுகூட ஒத்துணர்வுள்ள பந்தத்தில் வருவதற்கு இந்த குறிப்பிட்ட வகுப்பாரை ஆசீர்வதிப்பதே இதன் இரண்டாவது நோக்கமாகும்.

தெய்வீக கரத்தில் இருக்கும் சுருள் – The Scroll in the Divine Hand
🔖 இந்த தெய்வீக முன்னறிவை பற்றியும், முன்தீர்மானிக்கப்பட்ட ஒழுங்குமுறையை பற்றியும், வார்த்தை முறையில் விவரிக்கப்பட்டிருக்கும் அழகான காட்சியானது (Beautiful word picture) வெளிப்படுத்தின விசேஷம் ஐந்தாம் அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

🔖 இங்கு பிரபஞ்சத்தின் அதிபதியாகிய யாவே தேவன் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவராகவும், ஏழு முத்திரைகளினால் முத்திரிக்கப்பட்டதும், எழுதப்பட்டதுமான ஒரு சுருள் அவருடைய கரத்தில் இருப்பதாகவும் காண்பிக்கப்பட்டுள்ளது (a written scroll, sealed with seven seals).

🔖 அந்த முத்திரிக்கப்பட்ட சுருள் (புஸ்தகம்) - உலக தோற்றத்திற்கு முன்பு தேவனாகிய அவருக்குள் தீர்மானிக்கப்பட்டிருந்ததும், ஒருவருக்கும், அதாவது தேவதூதருக்கோ அல்லது குமாரனுக்கும் கூட வெளிப்படுத்தப்படாதிருந்ததுமான தெய்வீக திட்டத்தை அடையாளப்படுத்துகிறது. (மத்தேயு 24:36).

🔖 ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால், இதிலே சிருஷ்டிப்பு முதல் சம்பவித்தவைகள் அனைத்தும் அடங்கும் - அதாவது, பாவம் அனுமதிக்கப்பட்டது, வீழ்ச்சி, ஆபிரகாமுடன் செய்யப்பட்ட உடன்படிக்கை, இஸ்ரயேலருடன் செய்யப்பட்ட உடன்படிக்கை, கர்த்தருடைய வருகை, பெந்தேகோஸ்தே ஆசீர்வாதம், சபை அங்கத்தினர்களை கூட்டிசேர்ப்பது ஆகிய இவை அனைத்துமே பிதாவினால் முன்னறியப்பட்டவைகள் ஆகும். இவைகளுக்கு தேவையானவைகளை அவர் ஏற்படுத்தியும் தந்தார்.

🔖 கூடுதலாக, இப்போது சம்பவித்துக்கொண்டிருக்கும் அனைத்தையும் பற்றிய பதிவையும், மில்லினிய யுகம் முழுவதும், அதன் முடிவு வரையிலும், அதாவது, வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழுள்ள ஒவ்வொரு சிருஷ்டியும் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவருக்கும், ஆட்டுக்குட்டியானவருக்கும் துதி, கனம், மகிமை, வல்லமை சதாகாலங்களிலும் உண்டாவதாக என்று போற்றக்கூடிய காலம் வரைக்கும் சம்பவிக்க போகும் அனைத்தையும் பற்றிய பதிவையும் அந்த சுருள் உள்ளடக்கியுள்ளது (வெளி. 5:13).

REF: WPRT - "THE SEED OF ABRAHAM AND ITS WORK" , Pg. 36,37

கர்த்தர் (யாவே தேவன்) என் மேய்ப்பராய் இருக்கிறார்“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்” (சங்கீதம் 23...
15/12/2024

கர்த்தர் (யாவே தேவன்) என் மேய்ப்பராய் இருக்கிறார்
“கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்” (சங்கீதம் 23:1)

🐑 தம்மை ஒரு மேய்ப்பனுக்கு ஒப்பிடுவதின் மூலம், கர்த்தர் தம்முடைய ஜனங்களிடத்தில் எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறார் என்பதற்கு சால பொருத்தமான எடுத்துக்காட்டை கொடுக்கிறார்.

🍃 அவர்களுடைய நன்மைக்காக அவர் எப்பொழுதுமே ஆர்வ விருப்பமுடையவராக இருக்கிறார் என்றும்,
🍃 அவர்களுடைய நலன்களில் கவனமுள்ளவராக இருக்கிறார் என்றும்,
🍃 அவர்களுடைய இளம் பருவத்திலும், அனுபவமற்ற நிலையிலும் பொறுமையுள்ளவராகவும், இந்த அன்பின் ஊழியத்தில் தளராதவறாகவும் இருக்கிறார் என்பதையும் அவருடைய இந்த அக்கறை (பராமரிப்பு) அர்த்தப்படுத்துகிறது.

🐑 ஆயினும், எனது கர்த்தர் என் மேய்ப்பராக இருக்கிறார் என்று ஒவ்வொருவரும் தங்கள் இருதயத்தில் சொல்லும்போது மட்டுமே, இந்த ஆசீர்வதிக்கப்பட்ட நல்ல மேய்ப்பரின் ஊழியம் மெய்யாகவே உணர்ந்துகொள்ளப்படக்கூடியதாக இருக்கும்.
மேலும், நாம் அவருடைய ஆடுகளாக தகுதிபெறும்பொழுது மட்டுமே, மேய்ப்பரின் அக்கறையுள்ள பராமரிப்பின் மதிப்பை கற்றுக்கொள்ள முடியும்.

🐑 அப்படி, நல்ல மேய்ப்பரின் பராமரிப்பின் கீழ் அனுபவங்களை பெற்ற மனிதனே சங்கீதக்காரனோடு சேர்ந்து, மெய்யாகவே "நான் தாழ்ச்சியடையேன் (எனக்கு வேறெதுவும் வேண்டியதில்லை - I Shall not want) என்று சொல்லமுடியும். இப்படிப்பட்ட நபருக்கே தற்கால ஜீவியத்திற்கான தற்காலிக தேவைகள் எதுவும் தேவைப்படாது. “அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும்” (ஏசாயா 33:16 ; மத்தேயு 6:33,34).

🐑 இவ்வுலகத்தின் அந்தகாரத்தில் நடக்கும்படி விடப்படுவதும் இப்படிப்பட்ட நபருக்கு வேண்டியதில்லை. ஏனெனில் இவருக்கு ஜீவ ஒளி கொடுக்கப்படுகிறது (யோவான் 8:12).

🐑 எதிர்கால வாழ்வுக்கு தகுதிப்படுத்தும் வண்ணமாக தேவைப்படும் அவசியமான பராமரிப்போ ஒழுங்கு நடவடிக்கையோ இந்த நபருக்கு வேண்டியதில்லை – ஏனெனில் “கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார்” (எபிரேயர் 12:6).

🐑 இப்படிப்பட்ட இந்த நபர் பரீட்சை மற்றும் உபத்திரவ காலங்களில் தெய்வீக கிருபையின் தேற்றரவின்றி இருப்பதில்லை. ஏனெனில் “என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” (2 கொரிந்தியர் 12:9), என்று எழுதப்பட்டுள்ளது.

🐑 தோழமை ஐக்கியமும், ஒத்துணர்வும் கூட இந்த நபருக்கு வேண்டியதில்லை. ஏனெனில் “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” (எபிரேயர் 13:5) என்றும் “சகல நாட்களிலும் நான் உன்னோடுகூட இருக்கிறேன்” (மத்தேயு 28:20) என்றும் கர்த்தர் தாமே கூறியிருக்கிறார்.

🐑 மெய்யான ஆடுகளை போல, உத்தமமாக நடக்கிறவர்களுக்கு எந்த நன்மையையும் நிச்சயம் நடவாதபடி தடுத்து நிறுத்தப்பட்டு போகாது. இப்படிப்பட்டவர்களை அவர் ஒவ்வொரு ஆபத்திலிருந்தும் பாதுகாத்து, மேய்ப்பனுக்குரிய பராமரிப்பினால் காத்துகொள்ளுகிறார்.

REF: R 1745

Address

"YAHWEH YEREH" Cottage, 15/24 Ashok Nagar (south) Karumandapam Trichy/
Tiruchirappalli
620001

Telephone

9965485247

Website

Alerts

Be the first to know and let us send you an email when பரிசுத்த வேதாகமம், ஒரு தெய்வீக வெளிப்பாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to பரிசுத்த வேதாகமம், ஒரு தெய்வீக வெளிப்பாடு:

Share