30/12/2024
"வருஷத்தை உம்முடைய நன்மையினால் முடிசூட்டுகிறீர்"
"THOU CROWNEST THE YEAR WITH THY GOODNESS"
சங்கீதம் 65:11
☔ தகப்பனாகிய ஆதாமின் கீழ்படியாமையையும், இதன் காரணமாக இவர் நீதியான தீர்ப்பின் கீழ் கொண்டுவரப்பட்டதையும், இதன் விளைவாக நாமும் இவருடைய சந்ததி அனைவரும் இவர் மூலமாக ஜீவனுக்கான ஆசீர்வாதங்களில் பங்கடைந்ததுபோல இவருடைய அபூரணங்களிலும், மரிக்கும் நிலையிலும்கூட பங்கடைந்ததை நாம் நினைவுகூர்ந்து பார்க்கும்போது, நாம் அனுபவிக்கவேண்டுமென்று தேவன் நமக்கு அனுமதிக்க விரும்பினது எவ்வகையான சகிக்கக்கூடிய நிலைமையாக இருந்தாலும் அதற்காக நாம் தேவனிடத்தில் நன்றியறிதலுள்ளவர்களாக இருப்பதற்கு உறுதியான காரணமிருக்கிறது.
⏳ இந்த நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும்போது ஒவ்வொரு ஆசீர்வாதமும், அதாவது அது சிறியதோ அல்லது பெரியதோ எதுவானாலும் அதுவொரு தகுதியற்ற தயவாகும். ஏனென்றால் நாம் ஒன்றுக்கும் தகுதியானவர்களல்ல. நம்முடைய உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டும் போயுள்ளன.
☔ எனவே, உலகத்தில் வாழ்ந்து வரும் ஒரு அங்கத்தினர் என்ற நிலையில் இவ்வருடத்தின் முடிவிலே நாம் சிருஷ்டிகரை கண்ணோக்கிப்பார்த்து, உரிமையோடு நம்மால் கோரமுடியாத எண்ணிலடங்காத இரக்கங்களையும், ஆசீர்வாதங்களையும் அவருடைய கரங்களிலிருந்து நாம் பெற்றுகொண்டோமென்பதை அவரிடம் அறிக்கையிடக்கடவோம்.
⏳ பரம்பரை பரம்பரையாக நாம் ஆக்கினை தீர்ப்பின்கீழ் இருப்பதுமட்டுமல்ல, ஆனால் தெய்வீக தயவை பெற்றுக்கொள்ளுவதற்கு தனிப்பட்ட முறையில் நாம் தகுதியற்றவர்கள் என்பதையும் உணர்ந்துகொள்ளவேண்டும்.
☔ எப்பிஸ்கோப்பல் சபையை சேர்ந்த நமது நண்பர்கள் தெரிவிப்பதை போல: "நாங்கள் செய்யக்கூடாத அனைத்தையும் செய்திருக்கிறோம். செய்யவேண்டியவைகளையோ செய்யாமல் விட்டுவிட்டிருக்கிறோம். ஆகவே எங்களிடத்தில் பெலனில்லை" என்று உணரவேண்டும்.
⏳ "தவித்து பிரசவ வேதனைப்படும் சிருஷ்டி" என்று உலகத்தை குறித்து அப்போஸ்தலர் பேசுவது பொருத்தமாகத்தான் உள்ளது. கசப்பான ஏமாற்றங்கள், சஞ்சலங்கள், அழுகைகள் ஆகியவற்றால் இவர்கள் பாதிப்படைந்திருந்தாலும், தாங்கள் அனுபவிக்கிற ஆசீர்வாதங்களுக்காக பெருமிதமாக தேவனுக்கென்று இவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
☔ தேவனுக்கு நன்றியறிதலுள்ளவராக இருப்பதற்கு சுபாவ மனிதனுக்கே காரணங்கள் பல இருந்தால், நமது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிற்குள் சொந்தமாக்கப்பட்டதினால் தேவ பிள்ளைகளான நமக்கு இன்னும் எவ்வளவு காரணங்கள் இருக்கவேண்டும்.
⏳ உலகம் அனுபவிக்கும் எல்லா ஆசீர்வாதங்களையும் நாம் அனுபவிப்பதில்லையா? அவர்கள் நன்றி செலுத்தத்தக்க அதே அழைப்பை நாமும் பெற்றுக்கொள்ளவில்லையா? கூடுதலாக, தம்முடைய கிருபையின் சம்பூரணத்தினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாக தேவன் நமக்கு அருளியிருப்பது நிச்சயமல்லவா? (எபேசியர் 3:20).
☔ நம்முடைய மனங்களை பின்னோக்கி பார்க்கும்படிசெய்து, தேவ மகிமையின் நம்பிக்கையில் களிகூரத்தக்கதாக நம்முடைய தற்போதைய நிலை வரைக்கும் நம்மை வழிநடத்திய தெய்வீக கிருபையின் படிகளை ஆராய்ந்துபார்ப்பது எவ்வளவு பிரயோஜனமானது.
🙇🏻♂️ நாம் பலனற்றவர்களாக இருக்கும்போதும், தகுதியற்றவர்களாக இருக்கும்போதும், நம்மையும் உட்பட தேவபக்தியற்றவர்களுக்காக கிறிஸ்து மரித்தார்.
🙇🏻♂️ எனவே நாம், தேவனுடைய கிருபையை கேள்விப்பட்ட தயவுபெற்றவர்களின் மத்தியிலே இருக்கிறோம்.
🙇🏻♂️ நாம், கர்த்தருடைய கிருபையையும், சத்தியத்தையும் உணர்ந்துகொள்ளத்தக்கதான புரிந்துகொள்ளுதலின் செவிகளையும், கண்களையும் உடைய அந்தசொற்ப பேர் மத்தியில் இருக்கிறோம்.
🙇🏻♂️ மேலும், இவைகளை கேள்விப்பட்டாலும் சொல்லிமுடியாத சந்தோஷத்தில் களிக்கூர்ந்து, தங்களுக்கென்று ஆசீர்வாதங்களை சொந்தமாக்கிக்கொண்ட இன்னமும் சொற்பபேறாக உள்ளவர்கள் மத்தியில் இருக்கிறோம்.
🙇🏻♂️ கூடுதலாக நாம், தேவனுடைய கிருபையை விருதாவாக பெற்றுக்கொள்ளாமல் கர்த்தருடைய வார்த்தை மற்றும் ஆவியின் வழிநடத்துதலின்கீழ், நியாயமான ஊழியராக தங்கள் சரீரங்களை பரிசுத்தமும், தேவனுக்கு பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புவித்த இன்னமும் சொற்பபேறாக உள்ளவர்கள் மத்தியில் இருக்கிறோம்.
"என் இரட்சகரும், என் தேவனுமானவரே உம்மிலே எனது விருப்பத்தை உறுதிப்படுத்தின நாள் சந்தோஷமான நாள்
ஒளிவீசுகிற இந்த இருதயம் களிக்கூர்ந்து இந்த பெரும் மகிழ்ச்சியை எல்லாவிடங்களிலும் எடுத்துரைக்கும்"
☔ "மற்றவர்கள் மேன்மைபாராட்டுவதற்கு இடமிருந்தால் நான் அதிகம்" என்று அப்போஸ்தலர் தம்மைக்குறித்தே சொல்லியிருக்கிறார்.
⏳ தேவனுடைய கிருபைவரங்களுக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் உலகமானது மேன்மைபாராட்டுவதற்கு ஏதாவது இருந்ததேயாகில், நன்றிகூறுவதற்கு உலகத்திடம் ஏதாவது இருந்ததேயாகில், கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிற நமக்கு நன்றிகூறுவதற்கு எவ்வளவோ இருக்கின்றன.
☔ அதாவது தேவனுடைய நல்வார்த்தையையும், இனிவரும் யுகத்தின் பலன்களையும் ருசிபார்த்த நாம், பரிசுத்த ஆவியை பெற்ற நாம், அபரிமிதமான அளவில் களிகூருவதற்கு ஏராளமாக உள்ளன.
⏳ இங்கே நமக்கு நிலையான நகரம் இல்லையென்றபோதிலும், வாசம் செய்யக்கூடிய பாதுகாப்பான இடம் இல்லையென்றபோதிலும், உலகம், மாம்சம், எதிராளி ஆகியோரால் தொடர்ந்து தாக்கப்பட்டாலும் நமது பரதேசி யாத்திரையின் வீட்டிலும் கூட நாம் சந்தோஷப்பட கூடும்.
☔ நமது பெரிய மீட்பரான கர்த்தர் நம்மோடு இருக்கிறார். அவருடைய மகா மேன்மையும் விலையேறப்பெற்றதுமான வாக்குத்தத்தங்கள் நம்முடைய ஆதரவுக்காகவும், ஆறுதலுக்காகவும் இருக்கின்றன. இரட்சிக்க வல்லமையுள்ளவரிடத்திலே நம்மை ஒப்புவித்திருக்கிறோம். ஆம், அப்போஸ்தலர் கூறுகிறபடி "கிறிஸ்து இயேசுவுக்குள் நாம் பற்றிப்பிடிக்கப்பட்டிருக்கிறோம்" (பிலிப்பியர் 3:12). நம்முடைய இருதயங்கள் அவருக்கு உண்மைப்பற்றோடு இருக்கும்வரைக்கும் நம்மை அவர் பற்றிக்கொண்டிருப்பார்.
⏳ ஒருவேளை நம்முடைய பங்கில் விருப்பத்துணிவு இருந்ததேயாகில் அதுவே கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கும் தேவ அன்பிலிருந்து நம்மை பிரிக்கக்கூடியதாக இருக்குமேயொழிய மற்றபடி மேற்கூறப்பட்ட அந்த வகுப்பாரை சேர்ந்த நாமனைவரும் விசேஷமாக ஆவிக்குரிய நிலைப்பாட்டிலிருந்து இந்த வருடத்தை ஆராய்ந்து பார்க்கக்கடவோமாக.
☔ ஆவிக்குரிய வளர்ச்சியிலும், கிருபையிலும், அறிவிலும், அன்பிலும், பரிசுத்த ஆவியின் கனிகளிலும், கிருபை குணாம்சங்களிலும் எந்தளவிற்கு முன்னேற்றமடைந்திருக்கிறோம் என்பதை கவனித்து பார்க்கக்கடவோமாக.
⏳ இவை அதிக அளவில் இருந்ததேயாகில் நாம் களிகூரக்கடவோமாக. ஒருவேளை குறைந்த அளவில் இருந்ததேயாகில் இந்த இந்த உண்மை நிலையைக்குறித்து மனம் வருந்த கடவோமாக. எனினும் அதைரியமடைந்தோ அல்லது சத்துருவிடம் சரணடைந்துவிடக்கூடிய அளவுக்கோ இது சென்றுவிடக்கூடாது.
☔ "என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" (யோவான் 16:33; 2 கொரிந்தியர் 12:9) என்று சொன்ன நமது எஜமானாருடைய சத்தத்தை நாம் கேட்க கடவோமாக.
⏳ இந்த வருடத்தின் தற்காலிகமான ஆசீர்வாதங்கள், இரக்கங்கள், சிலாக்கியங்கள் மற்றும் தயவுகள் ஆகியவற்றிலும், ஆவிக்குரிய சந்தர்ப்பங்கள், பலம், அறிவு, நமது அருமை மீட்பருடைய குணாம்ச சாயலின் அபிவிருத்தி ஆகியவற்றிலும் இந்த வருடத்தை ஆராய்ந்து பார்க்கும்போது இவை அனைத்திலும் நாம் களிகூரும் அதேசமயத்தில் தெய்வீக நன்மையிலுள்ள ஆசீர்வாதங்களால் தேவன் வருடத்தை முடிசூட்டுகிறார் என்ற நமது பாட வசனத்தின் வாக்கியத்தை நாம் நமக்குள்ளாக சொல்லிக்கொள்ளுவோமாக.
☔ தேவன் நமக்காக ஒவ்வொன்றையும் செய்வதால் நாம் ஒன்றும் செய்யவேண்டியதில்லை என்றல்லாமல், நம்முடைய காரியங்கள் அனைத்தும் அவருடைய ஒத்தாசை இல்லாமல் நடந்தேறாது, ஆகவே தெய்வீக தயவும், ஆசீர்வாதமும் இருந்தால் மட்டுமே நமது முயற்சிகளும், நம்முடைய பிரயாசங்களும் பிரயோஜனமான பலாபலனாக அமையும் என்பதையே நாம் புரிந்துகொள்ளவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார்.
⏳ தேவனுடைய நன்மையே நமக்காக வருஷத்தை முடிசூட்டுகிறது. விசேஷமாக விசுவாச வீட்டாருக்கு அவர் என்னே நல்லவராகவும், என்னே தயாளராகவும், என்னே ஒத்துணர்வுள்ளவராகவும், என்னே காருண்யமுள்ளவராகவும், என்னே அன்பும், கனிவுமுள்ளவராகவும் இருந்திருக்கிறார் என்பதை இந்த வருடத்தின் முடிவிலே நாம் நினைவுகூர்ந்து களிக்கூறக்கடவோமாக.
☔ இப்படிப்பட்டவர்களுக்கு மட்டுமே தமது கிருபையின் செய்தியையும், சமாதானத்தின் செய்தியையும் தேவன் வெளிப்படுத்துகிறார் (அ) அனுப்புகிறார்.
⏳ இருப்பினும், சீக்கிரத்திலேயே புது உடன்படிக்கை துவங்கப்பட்டு, எக்காள தொனியோடு இதன் பாவமன்னிப்பின் செய்தியும், புது உடன்படிக்கையை முத்தரிக்கக்கூடிய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் மீட்கப்பட்டு, "உலகம் உண்டானது முதற்கொண்டு தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளின் வாக்கினாலே உரைத்த இழந்துபோனவைகளை திரும்ப கொடுத்தலை" (அப்போஸ்தலர் 3:21) சாத்தியமாக்கக்கூடிய உலக மனுகுலத்திற்கான யூபிலி செய்தியும் புறப்பட்டு செல்லும்.
☔ நம்முடைய தயவு மற்றும் ஆசீர்வாதங்கள் மட்டுமல்லாமல், வரவிருக்கும் ஆசீர்வாதங்களும் தெய்வீக நன்மையினாலும் தெய்வீக நன்மையின் மூலமாகவும் வருகிறது என்பதை உணர்ந்துகொள்ளுவதின் மூலம் களிகூரக்கடவோமாக.
⏳ இந்த தெய்வீக நன்மையின் மகா பெரிய ஊற்றின் வாய்க்காலாக நமது கர்த்தராகிய இயேசுவே இருக்கிறார். இவர் மூலமாக இவரை பின்பற்றும் இவருடைய சீஷர்களாகிய நம்மை இது வந்தடைகிறது.
☔ ஆகவே, நாம் அவரோடுகூடிய பந்தத்தினுள் வருவதற்கு அனுமதிக்கப்படுகிறோம். எனவே, முடிவில் சுபாவ இஸ்ரயேலர்களுக்கும், பூமியின் வம்சங்கள் அனைத்திற்கும் தெய்வீக நன்மையை பொழிந்தருளக்கூடிய வாய்கால்களாக நாமும் ஆவோம்.
📝 REF: R 4100