18/10/2025
முருகா! அரங்கா!
வாருங்கள் அற்புதம் நிகழும் ஓங்காரக்குடிலுக்கு வந்து ஓங்காரக்குடில் ஆசான் ஆறுமுக அரங்கமாக தேசிக சுவாமிகள் ஜீவமகா சமாதியை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள்.
சுமார் 48 வருடங்களாக மகான் முருகப்பெருமான், அகத்தியபெருமான் திருவடிகளில் கடுந்தவம் மேற்கொண்டு அந்த தவத்தின் பலனாக மகான் முருகப்பெருமானின் வாசியோடு வாசியாக கலந்து, ஞானிகள் வகுத்துள்ள சுத்த சைவ சன்மார்க்க நெறியில் எண்ணிலடங்கா அறப்பணிகளையும் தொடர் அன்னதான சேவைகளையும் செய்து வந்த *ஓங்காரக்குடிலாசான்* *மகான்* *ஆறுமுக* *அரங்கமகா* *தேசிக* *சுவாமிகள்* 14.05.2024 அன்று மகான் முருகப்பெருமானோடு இணைந்து மகா சமாதி அடைந்தார்கள். *ஒங்காரக்குடிலாசானின்* *ஜீவமகா* *சமாதியை* *தரிசிப்பதும்* , அந்தப் புனிதமான இடத்தில் தியானிப்பதும், நம்முடைய வேண்டுதல்களை அவருடைய திருவடிகளில் சமர்ப்பிப்பதும் நமக்குக் கிடைத்தற்கரிய ஒரு பெரும் வாய்ப்பு திருச்சி மாவட்டம் துறையூரில் அமைந்திருக்கும் இந்த ஜீவமகா சமாதி, நமது ஆன்மீகப் பயணத்திற்கும், ஆன்ம விமோசனத்திற்கும் ஒரு ஒளிமயமான வழிகாட்டியாகத் திகழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆசானின் அருள் அங்கே நிறைந்திருக்கிறது. அந்த அமைதியான சூழலில் நாம் தியானிக்கும்போது, நமது மனம் ஒருமுகப்பட்டு ஆன்மீக அனுபவத்தைப் பெற முடியும். நம்முடைய உள்ளார்ந்த கவலைகள் நீங்குவதற்கு, வேண்டுதல்களை அவருடைய திருவடிகளில் வைக்கும்போது, அவை நிறைவேறும் என்ற நம்பிக்கையும், மன அமைதியும் நமக்குக் கிடைக்கும். *ஓங்காரக்குடிலாசானின்* *ஜீவமகா* *சமாதிக்குச்* செல்வது என்பது, ஒரு மகானின் அருளை நேரடியாகப் பெறுவதற்கான ஒரு பாக்கியம். இந்த வாய்ப்பை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, நமது ஆன்மீக வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வோம்..
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்.
ஓங்காரக்குடில், துறையூர் - 621010
தொடர்புக்கு . :
திரு. ரவிச்சந்திரன்
தொலைபேசி எண்.: 94883 91565