ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் - ஓங்காரக்குடில் துறையூர்

  • Home
  • India
  • Tiruchirappalli
  • ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் - ஓங்காரக்குடில் துறையூர்

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் - ஓங்காரக்குடில் துறையூர் தினமும் அன்னதானம்- ஞானிகளின் கோவில்
சத்தியமே அகத்தியம்! அகத்தியமே ஜெயம்!

துறையூர் ஓங்காரக்குடில் ஞானிகளின் சங்கமத்துறையாகத் திகழும் திருத்தலம். ஆசான் தவத்திரு அரங்கமகாதேசிகர் சுவாமிகள் அகத்திய மாமுனிவரின் அவதாரமாய் திகழும் அற்புத ஞானி. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ஏழைகளின் பசியை போக்கும் தருமச்சாலை.
இலவசஉணவு, இலவச குடிநீர், இலவச கண் மருத்துவம், இலவச திருமணம், கல்வி கற்க உதவி

16/02/2026

மகான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் திருஅவதார தின விழா சிறப்பு

🌷 #மகாசிவராத்திரி_வாழ்த்துக்கள் 🌷 #முருகப்பெருமானையும் ,  #சிவபெருமானையும் ,  #அகத்தியர்பெருமானையும் மற்றும் சிவனை வணங்க...
15/02/2026

🌷 #மகாசிவராத்திரி_வாழ்த்துக்கள்

🌷 #முருகப்பெருமானையும் , #சிவபெருமானையும் , #அகத்தியர்பெருமானையும் மற்றும் சிவனை வணங்கி சிவனோடு சிவமாக ஐக்கியமாகிய சிவசித்தர்களையும் வணங்கி நாமும் #சிவநிலையாகிய_இறைநிலை அடைவோம் !

🌷இகவாழ்வில் உள்ள எல்லா நலங்களும் வளங்களும் பெறுவதோடு
🌷பரவாழ்வாகிய
மரணம்_ஜனனம் என்னும் பிறவிப்பிணியிலிருந்து விடுபட்டு #மரணமில்லா_பெருவாழ்வு என்னும் உயர் சித்தி நிலையை நாமும் அடைந்து இறைவனோடு இறைவனாக இணைந்து இறைஇன்பமாகிய பேரின்பத்தில் என்றும் திளைத்திருக்கலாம்

🌷அதற்கு #முக்கிய_மூன்று_கொள்கைகள்

🌷 1. முருகப்பெருமான் , சிவபெருமான் , அகத்தியர்பெருமான் உள்பட நவகோடிசித்தர்களை பூஜித்து வணங்கவேண்டும்
அதாவது ஆதிதலைவனும் முதன்முதலில் கடவுள்தன்மை அடைந்த முருகப்பெருமான் முதல் 1874 ம் ஆண்டு தைபூசத்தில் சித்தி அடைந்த வள்ளலார்பெருமான் மற்றும் இரண்டு வருடங்களுக்கு முன்பாக 14.05.2024 ம் ஆண்டு வைகாசி பூசம் அன்று சித்தி பெற்ற துறையூர் #ஓங்காரக்குடிலாசான் #ஆறுமுகஅரங்கர்_பெருமான் வரை உள்ள நவகோடி சித்தர்களை நாம் தினமும் உள்ளம் உருகி பூஜித்தல் வேண்டும் .
( நவகோடி சித்தர்களில் #18சித்தர்கள் , #63நாயன்மார்கள் , #12ஆழ்வார்கள் , #சிவபெருமான் , #விஷ்ணுபெருமான் #கிருஷ்ணர் இன்னும் அநேகம் அநேகம் சித்தர்களும் ஞானிகளும் கடவுளும் அடக்கம் )

🌷 2. ஞானிகள் சித்தர்களை பூஜிப்பதோடு மாதம் இருவருக்கோ , அல்லது முடிந்த அளவு சைவஉணவினை #அன்னதானம் செய்தல்வேண்டும்

🌷 3. கண்டிப்பாக #உயிர்கொலை_தவிர்த்தல் வேண்டும் , இறைவனுக்கு வேண்டிக்கொண்டேன் என்ற பெயரிலோ அல்லது நாம் உண்ணும் பொருட்டு நம் நாக்கு சுவைக்காகவோ எந்த உயிரையும் கொல்லுதல் கூடாது , அசைவ உணவு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் . எல்லா உய்ரிகளும் இறைவன் குழந்தைகள் என்று எண்ணி #ஜீவகாருண்யம் கடைபிடித்தல் வேண்டும்

🌷இந்த மூன்று அடிப்படை கொள்கைகளை கடைபிடித்தால் நிச்சயமாக
#சாதாவரங்களோடு_சாகாவரமும்_சாத்தியமே !

🌷 #சாகாவரம்_அருளும்_உயர்ந்த_நாமஜெபங்கள்

🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_சிவபெருமான்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_திருவள்ளுவர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_மாணிக்கவாசகர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_திருஞானசம்பந்தர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_திருநாவுக்கரசர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_சுந்தரர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

03/02/2026

தைப்பூசம் விழா - ஓங்காரக்குடில் 01.02.2026

🌷மகான்  #அருணகிரிநாதர்  #திருத்தணிகை  #திருப்புகழ் 279 #பகலி ராவினுங் கருவி யாலனம்     பருகி யாவிகொண் ...... டுடல்பேணிப்...
23/01/2026

🌷மகான் #அருணகிரிநாதர் #திருத்தணிகை #திருப்புகழ் 279

#பகலி ராவினுங் கருவி யாலனம்
பருகி யாவிகொண் ...... டுடல்பேணிப்

#பழைய வேதமும் புதிய நூல்களும்
பலபு ராணமுஞ் ...... சிலவோதி

#அகல நீளமென் றளவு கூறரும்
பொருளி லேயமைந் ...... தடைவோரை

#அசடர் மூகரென் றவல மேமொழிந்
தறிவி லேனழிந் ...... திடலாமோ

#சகல லோகமும் புகல நாடொறுஞ்
சறுகி லாதசெங் ...... கழுநீருந்

#தளவு நீபமும் புனையு மார்பதென்
தணிகை மேவுசெங் ...... கதிர்வேலா

#சிகர பூதரந் தகர நான்முகன்
சிறுகு வாசவன் ...... சிறைமீளத்

#திமிர சாகரங் கதற மாமரஞ்
சிதற வேல்விடும் ...... பெருமாளே.

🌷 #பாடலின்_கருத்து

பகலிலும் இரவிலும் இந்த உடம்பு என்ற கருவியால் சோறு உண்டு உயிரைப் பாதுகாத்து இவ்வுடம்பை விரும்பி வளர்த்த யான்,

பழமையான வேத நூல்களையும் புதுமையான நூல்களையும் பலவகையான புராணங்களையும் ஒரு சிலவற்றை ஓதி உணர்ந்து, இத்தனை அகலம் இத்தனை நீளம் என்று அளக்க முடியாத பேரின்பப் பொருளிலே மனத்தை வைத்து அமைதியுறும் ஆன்றோரை, மூடர், ஊமையர் என்றெல்லாம் வீண் வார்த்தைகளால் அவமதித்து அறிவிலியாகிய அடியேன் அழிந்து போகலாமா?

எல்லா உலகங்களும் போற்றிப் புகழும்படி, தினந்தோறும் தவறாமல் மலர்கின்ற செங்கழுநீர் மலரும், முல்லையும், கடப்ப மலரும் தரிக்கின்ற மார்பனே, அழகிய #திருத்தணிகையில் வாழ்கின்ற செவ்வொளி வீசும் #வேலாயுதா, சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலை பொடிப்பொடியாக, #பிரம்மாவும், மேல்நிலையிலிருந்து தாழ்ந்த #இந்திரனும் சூரனது சிறைச்சாலையிலிருந்து மீட்சி பெற, இருண்ட கடல் கொந்தளித்து அலை ஓசை மிக, மாமரமாக மாய உருக்கொண்ட #சூரனது உடல் பிளவுபட, #வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.

🌷 #ஓம்_முருகா
🌷 #ஓம்_சரவணபவ
🌷 #ஓம்_சரவணஜோதியே_நமோ_நம
🌷 #ஓம்_சுப்பிரமணியர்_திருவடிகள்_போற்றி

🌷 #ஓம்_அகத்தியர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_அருணகிரிநாதர்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_வள்ளலார்_திருவடிகள்_போற்றி
🌷 #ஓம்_ஆறுமுக_அரங்கர்_திருவடிகள்_போற்றி

🌷FaceBook
https://www.facebook.com/SriAgathiarSanmarkaSangam
🌷youtube:
https://www.youtube.com/c/MurugaYugamArumugaArangar
🌷Instagram
https://www.instagram.com/murugayugam

18/10/2025

முருகா! அரங்கா!

வாருங்கள் அற்புதம் நிகழும் ஓங்காரக்குடிலுக்கு வந்து ஓங்காரக்குடில் ஆசான் ஆறுமுக அரங்கமாக தேசிக சுவாமிகள் ஜீவமகா சமாதியை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள்.

சுமார் 48 வருடங்களாக மகான் முருகப்பெருமான், அகத்தியபெருமான் திருவடிகளில் கடுந்தவம் மேற்கொண்டு அந்த தவத்தின் பலனாக மகான் முருகப்பெருமானின் வாசியோடு வாசியாக கலந்து, ஞானிகள் வகுத்துள்ள சுத்த சைவ சன்மார்க்க நெறியில் எண்ணிலடங்கா அறப்பணிகளையும் தொடர் அன்னதான சேவைகளையும் செய்து வந்த *ஓங்காரக்குடிலாசான்* *மகான்* *ஆறுமுக* *அரங்கமகா* *தேசிக* *சுவாமிகள்* 14.05.2024 அன்று மகான் முருகப்பெருமானோடு இணைந்து மகா சமாதி அடைந்தார்கள். *ஒங்காரக்குடிலாசானின்* *ஜீவமகா* *சமாதியை* *தரிசிப்பதும்* , அந்தப் புனிதமான இடத்தில் தியானிப்பதும், நம்முடைய வேண்டுதல்களை அவருடைய திருவடிகளில் சமர்ப்பிப்பதும் நமக்குக் கிடைத்தற்கரிய ஒரு பெரும் வாய்ப்பு திருச்சி மாவட்டம் துறையூரில் அமைந்திருக்கும் இந்த ஜீவமகா சமாதி, நமது ஆன்மீகப் பயணத்திற்கும், ஆன்ம விமோசனத்திற்கும் ஒரு ஒளிமயமான வழிகாட்டியாகத் திகழும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆசானின் அருள் அங்கே நிறைந்திருக்கிறது. அந்த அமைதியான சூழலில் நாம் தியானிக்கும்போது, நமது மனம் ஒருமுகப்பட்டு ஆன்மீக அனுபவத்தைப் பெற முடியும். நம்முடைய உள்ளார்ந்த கவலைகள் நீங்குவதற்கு, வேண்டுதல்களை அவருடைய திருவடிகளில் வைக்கும்போது, அவை நிறைவேறும் என்ற நம்பிக்கையும், மன அமைதியும் நமக்குக் கிடைக்கும். *ஓங்காரக்குடிலாசானின்* *ஜீவமகா* *சமாதிக்குச்* செல்வது என்பது, ஒரு மகானின் அருளை நேரடியாகப் பெறுவதற்கான ஒரு பாக்கியம். இந்த வாய்ப்பை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, நமது ஆன்மீக வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வோம்..

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்.
ஓங்காரக்குடில், துறையூர் - 621010

தொடர்புக்கு . :
திரு. ரவிச்சந்திரன்
தொலைபேசி எண்.: 94883 91565

முருகா! அரங்கா!தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்                              அருளியமுருகன் ஆசி பெற உபாயம...
03/08/2025

முருகா! அரங்கா!
தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்

அருளிய

முருகன் ஆசி பெற உபாயம்

முருகா என்றால் தாய்மை குணம் வரும்!
அகத்தீசா என்றால் அண்டத்தையும் பிண்டத்தையும் அறியலாம்!
முருகா என்றால் தம்மைச் சார்ந்தோரை மதிக்கக் கற்றுக்கொள்வான்!
அகத்தீசா என்றால் அமிழ்தபானம் உண்ணும் வாய்ப்பை பெறலாம்!
முருகா என்றால் முருகன் திருவடியே வேதமென்று அறியலாம்!
அகத்தீசா என்றால் விந்து நாதமே சக்தி சிவம் என்று அறியலாம்.

மகான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க கட்டளை
ஓங்காரகுடில்,
துறையூர்

முருகா! அரங்கா! தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்           அருளிய முருகன் ஆசி பெற உபாயம் முருகா என்றால் ...
02/08/2025

முருகா! அரங்கா!

தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்

அருளிய

முருகன் ஆசி பெற உபாயம்

முருகா என்றால் மும்மூலங்களை அறிவோம்

அகத்தீசா என்போம் உடம்பின் இரகசியம் அறிவோம்
முருகா என்போம் மும்மலக் குற்றம் அறிவோம்!
அகத்தீசா என்போம்! தன்னைப்பற்றி அறிவோம்!!
முருகா என்போம் முக்குணம் அறிவோம்!
அகத்தீசா என்றால் நல்ல நட்பு உண்டாகும்!!
முருகா என்றால் மூக்கு முனையறியும் முனைப்பு உண்டாகும்!
அகத்தீசா என்றால் தாய்மை குணம் பெறலாம்!!
முருகா என்றால் அகர உகர மகரம் அறியலாம்! அகத்தீசா என்றால் தானத்தின் தன்மை உணரலாம்!
முருகா என்றால் முருகனே ஞானம் என்று அறியலாம்! அகத்தீசா என்றால் ஆசையை வெல்லலாம்!
முருகா என்றால் முதுமையை வெல்லலாம்!
அகத்தீசா என்றால் அன்புணர்ச்சி பெருகும்!
முருகா என்றால் வஞ்சமில்லா வாழ்வு அமையும்!
அகத்தீசா என்றால் அருள் பெருகும்.

மகான் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள்.
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க அறக்கட்டளை. ஓங்காரக்குடில் துறையூர்

முருகா! அரங்கா!தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்                      அருளிய *முருகன் ஆசி பெற உபாயம்* அகத...
01/08/2025

முருகா! அரங்கா!

தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்

அருளிய

*முருகன் ஆசி பெற உபாயம்*

அகத்தீசா என்போம் ஆசிபெறுவோம்!

முருகா என்போம் முற்றுப்பெறுவோம்.

அகத்தீசா என்போம் ஆக்கம் பெறுவோம்!

முருகா என்றால் முக்தி அருளுவான்!

அகத்தீசா என்போம் ஆக்கம் பெறுவோம்!

முருகா என்போம்! தம் குற்றங்களை உணர்வோம்!

அகத்தீசா என்றால் இன்பம் அருள்வார்!

முருகா என்றால் மூர்க்க குணம் நீங்கும்.

அகத்தீசா என்போம் நல்வினை தீவினை அறிவோம்.

ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி.

ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம !கலியுக கருணைக் கடவுளாம் நமது குருநாதர்மகான் ஆறுமுக அரங்கமகாதேசிக சுவாமிகள்துவக்கி வைத்தஅ...
18/07/2025

ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம !

கலியுக கருணைக் கடவுளாம் நமது குருநாதர்

மகான் ஆறுமுக அரங்கமகாதேசிக சுவாமிகள்

துவக்கி வைத்த

அன்னதான சேவையில் பங்கு பெற்று ஆசானின் அருளாசி பெற விரும்பும் அன்பர்கள் தங்களது பங்களிப்பை தொகையாகவோ மற்றும் கீழ்க்கண்ட பொருட்களாகவோ ஓங்காரக்குடிலுக்கு வழங்கலாம்.

1. அரிசி

2. காய்கறிகள்

3. மளிகை சாமான்கள்

4. தேங்காய்

5. சமையல் எண்ணெய் வகைகள்

6. பூஜைக்குரிய மலர் வகைகள்

7. பராமரிப்பு பொருட்கள்

அன்னதானத்திற்கு தாங்கள் தானமாக கொடுக்கும் பொருட்கள் அனைத்தும் ஏழை எளிய மக்கள் பசியாறுவதற்கு பயன்படுத்தப்படும். மேலும் தாங்கள் கொடுக்கும் பூஜைக்குரிய பொருட்கள். மலர்கள் இங்கு நடைபெறும் பூஜைக்கு தங்கள் சார்பாக பயன்படுத்தப்படும். தாங்கள் கொடுக்கும் பொருட்களும் நன்கொடைகளும் அறப்பணிகளுக்கு உபயோகமாக இருப்பதால் தங்கள் திருவடி பணிந்து ஏற்றுக் கொள்கிறோம்.

உதவி எண் : 96882 78666

G Pay No. 96882 7866

*குறிப்பு*
நன்கொடை மற்றும் பொருள்களுக்கு இரசீது பெற்றுக் கொள்ளவும்.

ஓங்காரக்குடில், துறையூர்-621 010, திருச்சி Dt.

முருகா ! அரங்கா !

நம் குடிலின் நிகழ்வுகள், அறபணிகள், குருநாதரின் சொற்பொழிவுகள் காண pls subscribe

FACEBOOK::- https://www.facebook.com/Arangarkudil

INSTAGRAM::- https://www.instagram.com/

YOUTUBE::- https://youtube.com/?si=u34wtqrV7mYLSKYU

WEBSITE::- https://www.agathiar.in/

தகவல் தொடர்புக்கு. திரு. கே. ரவிச்சந்திரன் அவர்கள்
தொலைபேசி எண். 9488391565

முருகப்பெருமான் துணை *ஏழேழு தலைமுறைக்கு ஆசியும்பாதுகாப்பும்* உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவினை மேற்க...
15/07/2025

முருகப்பெருமான் துணை

*ஏழேழு தலைமுறைக்கு ஆசியும்பாதுகாப்பும்*

உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவினை மேற்கொண்டு காலை மாலை மகான் முருகப்பெருமான் திருவடியை " *ஓம் சரவணஜோதியே நமோ நம"* என்றும் " *ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி"* என்றும் பூசித்து வாரம் ஒரு பசித்த ஏழைக்காவது அன்னதானம் கொடுத்து வர வேண்டும்.

இதைக் கடைப்பிடித்து, துறையூர் ஓங்காரக்குடிலில் தொண்டு செய்து *ஓங்காரக்குடிலாசான் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிகரே* முருகப்பெருமானாக வழிபட்டு வரும் மக்களுக்கு ஏழேழு தலைமுறைக்கு (49 தலைமுறை) முருகப்பெருமானின் ஆசியும் பாதுகாப்பும் கிடைக்கும் என்று மகான் *கண்ணிச்சித்தர்* ஆசி வழங்கியுள்ளார்கள்.

உயிர்ப்பலி கொடுத்தால் இந்திர பதவி கிடைக்கும் என்று சிலர் சொல்வார்கள். உயிர்ப்பலி கொடுத்தால் கண்டிப்பாக இந்திர பதவி கிடைக்காது, பாவம் தான் சூழும். அப்படியே இந்திர பதவி கிடைத்தாலும் சான்றோர்களும் ஞானிகளும் உயிர்ப்பலி கொடுப்பதை இழிவான செயல் என்றே கூறுவார்கள். அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உயிர்க்கொலை செய்து புலால் உண்ணும் மக்களுக்கு ஜீவதயவு இருக்காது.

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.

திருக்குறள் -கொல்லாமை - குறள் எண் 328.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்.

**திருக்குறள் -புலால் மறுத்தல் - குறள் எண் 260.

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.**

திருக்குறள் -புலால் மறுத்தல் - குறள் எண் 253.

கையில் ஆயுதம் வைத்திருக்கும் மக்களுக்கு கொலை செய்யும் எண்ணம் வரும். அதே போலவே புலால் உண்ணும் மக்களுக்கும் அந்த எண்ணம் வரும்.

பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாருங் காண இயமன்றன் தூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில் மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே.

*திருமந்திரம் - புலால் மறுத்தல் - கவி எண் 199.*

தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.

*திருக்குறள் -புலால் மறுத்தல் - குறள் எண் 256.*

புலால் உண்ணும் பழக்கம் உள்ள மக்கள், புலால் விற்பவரிடம் சென்று கேட்காமல் விட்டால், அவன் கொலை செய்யும் தொழிலை விட்டுவிடுவான். சிலர் "நான் கொன்று தின்பதில்லை. கடையில் வாங்கித்தான் சாப்பிடுகிறேன். என் மேல் குற்றமில்லை. நான் கொலை செய்யவில்லை" என்று கூறுவார்கள். அதற்கு மகான் திருவள்ளுவர் "நீ வாங்குவதால் தான் அவன் விற்கிறான். அதனால் அந்த குற்றம் உன் மேல் தான்" என்று சொல்கிறார்.

சிறிதும் கருணையில்லாது உயிர்க்கொலை செய்து புலால் உண்ணும் மக்களை ஞானியென்று சொல்ல முடியாது *என்று மகான் இராமலிங்க வள்ளலார் கூறியுள்ளார்*

மருவாணைப் பெண்ணாக்கி யொருகணத்திற் கண்விழித்து வயங்குமப் பெண் உருவாணை யுருவாக்கி யிறந்தவரை எழுப்புகின்ற வுறுவ னேனும்
கருவாணை யுறவிரங்கா துயிருடம்பைக் கடிந்துண்ணும் கருத்த ளேலெங் குருவாணை யொதுசிவக் கொழுந்தாணை ஞானியெனக் கூறொணாதே.

- இறுக்கம் இரத்தின முதலியார்க்கு திருமுகம் -22

பற்றற்ற வேலவன் பதமலர் பற்றிட நற்றவமும் சித்திக்கும் நமனும் அஞ்சுவன்.

எந்தை வேலவன் இணையடி போற்றிட சிந்தையும் தெளிய சிவமது ஆவாரே.

*மகான் ஆறுமுக அரங்கமகா தேசிகர்*

08/07/2025

முருகா! அரங்கா!

ஒருமுறை அகத்தீசா என்றால் என்ன ஏற்படும்?

மகான் ஆறுமுக அரங்கமாக தேசிக சுவாமிகள் அருளுரை

Address

113 Extension, Thuraiyur
Tiruchirappalli

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் - ஓங்காரக்குடில் துறையூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் - ஓங்காரக்குடில் துறையூர்:

Share