பாரத நாடு பழம் பெரு நாடு - Rss

பாரத நாடு பழம் பெரு நாடு - Rss Karyanam karmanaparam yo gachathi sha bhuthimaan

ஸ்ரீ கிருஷ்ணா வேதாகம வித்யாலயம் சேனலை அனைத்து சிவநேயச் செல்வா்களும் Subscribe செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்
30/04/2024

ஸ்ரீ கிருஷ்ணா வேதாகம வித்யாலயம் சேனலை அனைத்து சிவநேயச் செல்வா்களும் Subscribe செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்

...ராகு தோஷம் போக்கும் திருவிடைக்கழி...மயிலாடுதுறையில் இருந்து தில்லையாடி சென்று, அங்கிருந்து திருவிடைக்கழி திருத்தலத்தை...
07/11/2014

...ராகு தோஷம் போக்கும் திருவிடைக்கழி...

மயிலாடுதுறையில் இருந்து தில்லையாடி சென்று, அங்கிருந்து திருவிடைக்கழி திருத்தலத்தை அடையலாம். இது முருகனும், சிவனும் இணைந்த ஓர் தலமாகும். இங்குள்ள முருகப் பெருமானுக்குத் தல மரமாக மலைகளில் மட்டுமே தோன்றக்கூடிய குராமரம், இத்திருத்தலத்தில் நிலத்தில் தோன்றி வளர்ந்துள்ளது.

இந்தக் குராமரத்தை, குரா, குரா என்று சொல்லச் சொல்ல, `ராகு', `ராகு' என்ற உச்சரிப்புத் தொடர்வதை அறியலாம். இம்மரத்தின் கீழ் முருகர் யோக நிட்டையில் இருப்பதால், இங்கு அமர்ந்து தியானம் செய்வது சிறப்பாகும். பங்குனி மாதம் பூக்கள் பூக்கும் இம்மரத்தின் கீழ் அர்த்தசாம பூஜையின்போது பால் வைக்கப்படுகிறது.

அதனை இரவு பாம்புகள் அருந்திச் செல்வதாக ஐதீகம் உள்ளது. இத்தனை சிறப்புமிக்க இத்தலத்தை ராகு தோஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் தரிசித்து, அர்த்தசாம பூஜையைக் கண்டு வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்.

...சென்னையில் தோஷம் போக்கும் நவக்கிரகத் தலங்கள்...* சூரியன் - சென்னை செங்குன்றம் அருகேயுள்ள ஞாயிறு கோவில் * சந்திரன் - ச...
07/11/2014

...சென்னையில் தோஷம் போக்கும் நவக்கிரகத் தலங்கள்...

* சூரியன் - சென்னை செங்குன்றம் அருகேயுள்ள ஞாயிறு கோவில்

* சந்திரன் - சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் அமைந்துள்ள அகஸ்தியர் கோவில்

* செவ்வாய் - வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில்

* புதன் - திருவாலங்காடு

* வியாழன் - பாடி வலிதாயநாதர் கோவில்

* சுக்கிரன் - மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோவில்

* சனி - சென்னை பூக்கடை தங்கசாலையில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில்

* ராகு-கேது - சென்னை பாரிமுனை மண்ணடியில் உள்ள மல்லீஸ்வரர், குன்றத்தூர் நாகேஸ்வரர்

...முருகனின் தோஷம் போக்கிய தலம்...கந்தசஷ்டியின் போது முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்து, பின் மிகவும் களைப்பாகி சோர்ந்த...
07/11/2014

...முருகனின் தோஷம் போக்கிய தலம்...

கந்தசஷ்டியின் போது முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்து, பின் மிகவும் களைப்பாகி சோர்ந்து விடுகிறார். கொல்வது என்பது யாராக இருந்தாலும் ஹத்திதோஷம் பிடிக்கும். பரமேஸ்வரன் ஆனாலும் அல்லது பரந்தாமன் ஆனாலும் அவர்களும் தோஷம் நீங்க பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

முருகனும் ஹத்தி தோஷம் போக்க கீழ்வேளூர் என்ற இடத்திற்கு வந்தார். இது நாகப்பட்டினம் அருகில் இருக்கிறது. அழகான ஆறு ஒன்று அங்கு ஓடுகிறது. முருகன் இந்தத் தலத்திற்கு வந்து தன் வேலை ஊன்ற, அந்த இடத்திலிருந்து புனிதநீர் வெளி வந்தது. அதுவே தீர்த்தமானது. அந்த தீர்த்தத்தில் நீராடி, பின் தியானத்தில் அமர்ந்தார்.

அப்போது சூரசம்ஹாரக் காட்சிகள் அவர் தியானத்தைக் கலைத்தன. உடனே முருகன் தன் அன்னை உலகமாதாவை வணங்கினார். பின் வேண்டிக் கொண்டார், "தாயே, உலக நன்மைக்காக சூரசம்ஹாரம் செய்து விட்டு வந்தேன், ஆனாலும் என் மனம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறது, தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்றார்.

உடனே பார்வதி தேவி இத்தலத்தின் எல்லா திசைகளிலும் தன் உருவத்தைப் பரப்பி ஒரு வேலி போல் போட்டு நின்றாள். அவள் பெயர் அஞ்சு வட்டத்தம்மன் ஆயிற்று. அவள் முழு வட்டமாக தன் உருவத்தை பரப்பி நின்று முருகனைக் காத்ததால் இந்தப் பெயர்.

இதனால் பிரும்ம ஹத்திகள் ஓடிப்போயின. முருகனும் தவத்தை முடித்து தோஷம் நீங்கி அருள் பெற்றார். இந்த இடம் கீழ்வேளூர் என்று ஆனது.

ஒரு மனித உடல் ஆகாயம் அக்னி நீர் காற்று மண் என்ற ஐந்து நிலை வடிவங்களைக்கொண்டது. ஆகாயம் தலை வழியும் மண் பாதம் வழியும் அழுத...
31/10/2014

ஒரு மனித உடல் ஆகாயம் அக்னி நீர் காற்று மண் என்ற ஐந்து நிலை வடிவங்களைக்கொண்டது. ஆகாயம் தலை வழியும் மண் பாதம் வழியும் அழுத்தம் கொடுக்கிறது.
அக்னி துரியம் வழியே உட்சென்று மேலும் கீழும் காந்தசக்தியாய் மாறி இயங்குகிறது.
வலது பாகம் காற்றாய் மாறி இயங்கி உடல் முழுதும் உஷ்ணம் பரப்புகிறது.
இடது பாகம் நீர்காந்தமாய் மாறி உடற்கழிவுகளை அகற்றுகிறது.
இம்மூன்று (அக்னி நீர் காற்று) நிலையை இயக்கமாக்கும் தன்மை சூரியனிலிருந்து வரும் ஓசை அசைவுகாந்தத்தை உருவாக்கி நம் உடலை இயக்குகிறது. இந்த இயக்கமே சிவமாகும். இந்த இயக்கம் தடைபட்டால் நமக்கு மரணம் வருகிறது. மரணத்தை வெல்லும் சக்தியாய் நாம் அபிராமவல்லி மார்க்கண்டேயனாய் நிற்க்கும் சிவனை வணங்குதல் நலம்…

31/10/2014

அனைவருக்கும் காலை வணக்கம்...

திருநீரு பூசுவதால் மூளைசோர்வு நீங்குகிறது இரத்த அழுத்தம் சரியாகிறது.
நாமம் இடுவதால் ஆண்மைகுறைவு நீங்குகிறது.
சந்தனம் வைப்பதால் நரம்புதளர்ச்சி நீங்குகிறது.
ஜவ்வாது பூசுவதால் காசநோய் வராமல் தடுக்கலாம.
குங்குமம் இடுவதால் இரத்தசோகை போகிறது.
விபூதி குங்குமம் சேர்ந்து வைப்பதால் உடல்சோர்வு நீங்கும்.
சந்தனம் குங்குமம் வைப்பதால் மனக்கிளர்ச்சி போகும்.
மீனாட்சி குங்குமம் மங்களத்தை அதிகரிக்கும் சக்தி கொண்டது.
மங்களயோகம் வேண்டுவோர் மீனாட்சியை வணங்குதல் நலம்.

மெஞ்ஞானம் என்பது மிகச்சிறந்த விஞ்ஞானமே...

29/10/2014

...நெஞ்சு எரிச்சலை குறைக்க...

நீங்கள் அடிக்கடி `அசிடிடி'யால் பாதிக்கப்படுபவராக இருந்தால் கீழ்கண்ட முறைகளை கையாளுங்கள்.

இஞ்சி: இது செரிமானத்தை சீராக்கும். சிறு இஞ்சி துண்டு சாறினை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

புதினா இலை: இது ஆசிட்டினை குறைத்து செரிமானத்தை கூட்டும். உடலை குளிரச் செய்யும்.

வாழைப்பழம்: அசிடிடிக்கு சிறந்த தீர்வு

குளிர்ந்த பால்: பாலிலுள்ள கால்ஷியம் அசிடிடி உருவாவதைத் தவிர்க்கும்.

கீழாநெல்லிச்சாறு, பொன்னாங்கண்ணி சாறு ஒரே அளவாக எடுத்து அதே அளவு நல்லெண்ணெயுடன் காய்ச்சி சடசடப்பு அடங்கியதும் வடித்து வைத...
29/10/2014

கீழாநெல்லிச்சாறு, பொன்னாங்கண்ணி சாறு ஒரே அளவாக எடுத்து அதே அளவு நல்லெண்ணெயுடன் காய்ச்சி சடசடப்பு அடங்கியதும் வடித்து வைத்து கொண்டு வாரம் இரண்டு முறை தலை முழுகி வர பார்வைக்கோளாறு அனைத்தும் நீங்கும். கீழாநெல்லி தைலத்தால் வாரம் இரண்டு முறை தலைமுழுகி வந்தால் உட்சுரம், வெப்பம், கை, கால், கண் எரிச்சல், நடுக்கம், தலை சுற்றல், வாந்தி ஆகியவை தீரும்.பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உடல் நொந்து மெலிந்தவர்களுக்கு கீழாநெல்லியை அரைத்து காய்ச்சிய பசும்பாலில் கலந்து நாள்தோறும் குடித்து வர உடல் தேறும். கற்ப முறைப்படி குடித்து வந்தால் பித்த நோய்கள் அனைத்தும் போகும். இதைத்தான்

கீழாநெய் லிக்குணந்தான் கேளாய் மதுமேகந்
தாழாக்கா மாலைகளைச் சண்ணுந்தா- தெழனலுந்
தொக்கினனலுந் தொலைக்குந் தொன்மேகம் போக்கிவிடந்தக்கவி ணங்கெடுக்குந் தான்’’-

என்கின்றது தேரையர் குணவாடகம்.

...நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை...பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல கொய்யாவோடு சேர்ந்த இலையும் மணம் பெறும்....
29/10/2014

...நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை...

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல கொய்யாவோடு சேர்ந்த இலையும் மணம் பெறும். கொய்யாபழம் என்றதும் அதனுடைய இலைகளையும் சேர்த்து தான் நமக்கு நினைவு வரவேண்டும். அந்த அளவுக்கு கொய்யா இலை மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவுநோயால் அவதிபடுபவர்கள் அனைவருக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது கொய்யா இலை.

கொய்யாஇலை நீரிழிவுக்கு மட்டும் பயன்படுவது அல்ல., பல அற்புதமான குணாதிசயங்களை கொண்டுள்ளது. காயங்கள், பல் வலி ஈறு வீக்கம் வயிற்றுபோக்கு, மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. கொய்யாஇலை கிருமிகளை அழித்து உடலை கட்டுக்குள்கொண்டு வந்துவிடும் சிறந்த உணவாகும். இதயநோய், புற்றுநோய், அல்சைமர்நோய், கீல்வாதம், தசைபிடிப்பு போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

தேவையான கொய்யா இலைகளை சேகரித்து தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் இறக்கி குளிரவைக்கவும். இதை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம். மேலும் பெண்கள் தங்கள் உறுப்புகளை கழுகவும் பயன்படுத்தலாம். ஏனெனில் நோய் கிருமிகளை அழிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.

கொய்யா இலையின் பயன்பாடுகள்.

நீரிழிவை கட்டுப்படுத்தும்: கொய்யாஇலை ஆரோக்கியம் தரும் சிறந்த உணவு என்று ஜப்பான் நாடு உறுதிப்படுத்தியுள்ளது. இது நிழிவுநோயை தடுக்க உதவுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரில் சுக்ரோஸ் மற்றும் மேல்டோஸ் ஆகிய இரண்டு விதமான சர்க்கரையை உறிஞ்சம் தன்மை கொண்டது. மேலும் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த விளைவை பற்றி நியூட்ரீஷன்- மேட்டாபாலீஷம் ஆகிய இரண்டு ஆய்வுகளும் விரிவுபடுத்தியுள்ளது.

குறுகிய கால பயன்கள்: வெள்ளை சாதத்தை உட்கொண்ட பின் கொய்யாஇலை தேநீரை பருகினால் ரத்தத்தில் அதிகமாகக்கூடிய சர்க்கரை அளவு 30, 90 மற்றும் 120 நிமிடத்தில் குறைக்கக்கூடியதட தன்மையை கொண்டுள்ளது.

நீண்ட கால பயன்கள்: இந்த கொய்யாஇலை தேநீரை நாம் தொடர்ந்து 12 வாரங்கள் பருகினால் தொடங்கும் போது இருந்த இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்திருக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கொய்யா இலை தேநீரை பருகக்கூடாது.

நீரிழிவு நோயை குணமாக்கும் மிளகுமிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மைய...
29/10/2014

நீரிழிவு நோயை குணமாக்கும் மிளகு

மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது. உடலில் தோன்றுகின்ற வாயுவையும் நீக்கி, உடலில் உண்டாகும் சுரத்தையும் போக்கும் தன்மை உடையது. இது காரமும் மணமும் உடையது. உணவை செரிக்கவைக்க உதவுகிறது. விட்டு விட்டு வருகின்ற முறை சுரத்தை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை ஒவ்வொன்றையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை சாப்பிட வேண்டும்...

சுசீந்திரம் தாணுமாலையன்! சிவன், விஷ்ணு, பிரம்மா - இந்த முப்பெரும் கடவுளர்களும் ஸ்ரீதாணுமாலய ஸ்வாமியாய் அருளும் அற்புதத் ...
27/10/2014

சுசீந்திரம் தாணுமாலையன்! சிவன், விஷ்ணு, பிரம்மா - இந்த முப்பெரும் கடவுளர்களும் ஸ்ரீதாணுமாலய ஸ்வாமியாய் அருளும் அற்புதத் திருத்தலம் சுசீந்திரம். நாகர்கோவிலில் இருந்து 6 கி.மீ. தொலைவில், கன்னியாகுமரி சாலையில் அமைந்துள்ளது. 'தாணு’ என்பது சிவனையும், 'மால்’ என்பது விஷ்ணுவையும், 'அயன்’ என்பது பிரம்மாவையும் குறிக்கும். பதிவிரதை அனுசூயாதேவியின் விருப்பப்படி மூன்று தெய்வங்களும் ஓர் உருவில் காட்சி தந்த திருத்தலம் இது என்று புகழ்கின்றன ஞான நூல்கள். அகலிகை தந்த சாபம் நீங்கி, தேவர்கள் தலைவன் தேவேந்திரன் உடல் சுத்தி (தூய்மை) பெற்ற இடம் என்பதால், இத்தலத்துக்கு 'சுசீந்திரம்’ என பெயர் ஏற்பட்டது என்பர்.

Address

Tiruchirappalli
620006

Telephone

9384705933

Website

Alerts

Be the first to know and let us send you an email when பாரத நாடு பழம் பெரு நாடு - Rss posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to பாரத நாடு பழம் பெரு நாடு - Rss:

Share