28/05/2026
ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் நடக்கும் மோசடி. Not for lighthearted.
இந்த புகைப்படத்தில் போடப்பட்டிருக்கும் "முகுந்தாச்சாரியார்" என்பவர் கோமடம் வம்சம் என்று சொல்லிக் கொள்கிறார். ஸ்வாமி மணவாள மாமுனிகளின் வம்சத்தவர் என்று சொல்லிக் கொள்கிறார்.
ஆனால், நான் விசாரித்தவரை இவர் அப்படி சொல்லிக் கொள்வது போலியானது.
அப்படி இருக்க, ஸ்ரீரங்கத்தில் வசிக்கும், தன்னை ஸ்ரீவைஷ்ண்வன் என்று சொல்லிக் கொண்டு, ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தின் ஆணிவேரானதிருவரங்கம் திருப்பதியில் எழுந்தருளியிருக்கும் நம்பெருமாளுக்கும் பெரிய பெருமாளுக்கும் நடந்த, நடந்து கொண்டிருக்கிற கணக்கிலடங்கா கொடூரங்களை, குறித்து வாய் திறக்காமல் இருக்கும் கீழே உள்ள புகைப்படத்தில் இருப்பவர்கள், இப்படி ஸ்வாமி "மணவாளமாமுனிகள் வம்ஸம்" என்று ஒருவர் தன்னை முறையில்லாமல் சொல்லிக் கொள்ளும் பொழுது, ஸ்ரீரங்கத்திலேயே இருக்கும் ஸ்வாமி மணவாளமாமுனிகள் வம்ஸத்தவர்கள் (ஸ்வாம் மணவாளமாமுனிகள் சந்நதியை அன்றிலிருந்து இன்றுவரை நிர்வகிக்கும் கோமடத்தார்) ஏற்காத இந்த முகுந்தாசாரியார் நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு உபந்யாசம் செய்கிறேன் என்று போகின்றனரே!!! அப்படி என்றால் இவர்கள் இவரை அங்கீகரிக்கின்றனரா!!
இந்த கேள்வியை நான் கேட்பதற்கு ஒரே ஒரு வ்யக்தி கூட பதில் சொல்லாது என்பது எனக்கு தெரியும். மாறாக, "இவனுக்கு வேறு வேலை இல்லை. எல்லோரையும் குறை சொல்வான்" என்று சொல்வார்கள் என்பதும் எனக்கு தெரியும்.
என்று ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தினை அதன் ஏற்றத்தை புரிந்து கொண்டு, ஸ்வாமி எம்பெருமானாருக்கு தாஸன் என்று பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டேனோ, அன்றிலிருந்து இந்த ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் நடக்கும் அனைத்து அநீதிகளுக்கும், அக்கிரமங்களுக்கும், அட்டூழியங்களுக்கும், பாதுகாவலனாக, அடிநாயேனாக எம்பெருமானுக்கு என்னை எழுதிக் கொடுத்தவன் நான்.
நேரத்துக்கு, ஆளுக்கும், இடத்துக்கும், சௌகரியத்துக்கும், லாபத்துக்கும், புகழுக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு நிறம் மாறும் பச்சோந்தி இல்லை நான்.
திருமாலிருஞ்சோலையில் இருப்பதாகச் சொல்லும் இவர், அங்கே ஸ்ரீ கள்ளழகர் கோவிலுக்கு உள்ளே சட்டவிரோதமாக ஒரு கொலைக்கூடம் (Slaughterhouse) நடத்திக் கொண்டு, ஒவ்வொரு நாளும் பல கணக்கில்லா மிருகங்களை கோவில் வளாகத்திலேயே கொலை செய்து, அங்கேயே அதை சமைத்து உண்டு கொண்டிருக்கும் கேவலத்தை பற்றி வாய் திறக்காமல், அங்கிருந்து இங்கே ஸ்ரீரங்கத்திற்கு வந்து, "பகவத் தத்துவ ஞான உபதேச உபந்யாஸம்" நடத்துகிறாராம்.
இதற்காக கோடிக்கணக்கில் பசூல் வசூல் வேட்டையும் நடக்கின்றது.
எனக்கு தெரிந்தே, ஒரு பெர்ய செல்வந்தரிடம் இவர் சென்று 75 லக்ஷ ரூபாய் அன்னதானத்திற்கு கேட்டுள்ளார்.
அப்படி என்றால் இப்படி எத்தனை பேரிடம் கேட்டாரோ!! என்ன கணக்கு வழக்கோ!!
பெரிய பெருமாள் திருவடியை சரி செய்ய துப்புகெட்ட ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தவர்கள். அதை பேசக் கூட திராணி இல்லாத ஸ்ரீவைஷ்ணவன் என்று துளியும் வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டிருக்கும் வேஷதாரிகள், பணம் சம்பாதிக்க என்னவெல்லாம் செய்கின்றனர்?!!!
யார் இவர்கள்?!! இவர்களை கேட்பாரே இல்லையே!! எங்கே போகிறது ஸ்ரீவைஷ்ணவம்!!
இரண்டு நாட்களுக்கு முன் என் இல்லத்திற்கு சில ஸ்ரீவைஷ்ணவ பாகவதோத்தமர்கள் வந்திருந்தனர். அவர்கள் சொன்னார்கள், சில அப்ராஹ்மண சன்னியாசிகளை ஒரு ஸ்ரீவைஷ்ணவ ஜீயர், சன்னியாசாசிரமம் கொடுத்து, திரிதண்டத்தை கொடுத்து, ப்ராஹ்மணர் அல்லாதவர்களுக்கு நீங்கள் சமாஸ்ரயணம் செய்யலாம் என்று சொன்னதாகவும், அந்த மனிதரை இவர்கள் நேரில் சென்று "உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?! அப்ராஹ்மணர்கள் எப்படி சன்னியாச ஆசிரமம் பெறலாம்? எப்படி சமாஸ்ரயணம் செய்யலாம்?" என்று சுமார் 4 மணி நேரம் கேட்டதாகவும், "உன்னால் ஆனதைப் பார்" என்று தகாத வார்த்தைகளால் அந்த போலி சன்னியாசி இவர்களை வசைபாடி துறத்தியதாகவும் என்னிடம் முறையிட்டனர்.
இப்படி போலிகள் மலிந்துவிட்ட காலம் இது.
அந்த சமயத்தில் இப்படிப்பட்ட, ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் நன்கு பலராலும் அறியப்பட்ட #விஷ்ணுசித்தன், , , #தேரழுந்தூர்_ராமன், #பராசர_பத்ரிநாராயணன், #பரவஸ்து_வரதராஜன், ிஜயராகவன், ேவராஜன், #கபிஸ்தலம்_ஸ்ரீநிவாசாரியார், அரவிந்தலோசனன், #திருக்கோவலூர்_மணிவண்ணன் (இது ஒரு தனி கதை, க்ருஹஸ்தராக இருக்கும் இவர் எப்படி சன்னியாசிக்கு உரிய ஜீயர் என்கிற பெயரை உபயோகிக்கிறாரோ!!), #அக்காரகனி_ஸ்ரீநிதி, #எம்பார்_கஸ்தூரிரங்கன், #சேஷாத்ரி, #ப்ரதிவாதிபயங்கரம்_ராஜஹம்ஸம்_ஸ்வாமி, ுசூதனன், ேங்கடக்ருஷ்ணன், மற்றும் வேறு சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த , #கருணாகராச்சாரியார், #வாசு, , அரசியலைச் சார்ந்த , #தாம்ப்ராஸ்_நாராயணன் ( has said loads of things about this fellow) மற்றும், யார் என்ன என்று தெரியாத சிலர் (அத்வைதிகள் உட்பட) இங்கே சென்று உபந்யாசம் செய்கின்றனர்.
மேலே குறிப்பிட்ட பெயர்களைத் தவிற மற்றவர்கள் பெயரோ, அவர்கள் டிவ்ட்டர் அக்கவுண்டோ என்னிடம் இல்லை. இருந்தால் அதை கீழே பதிவிடவும் அவர்களை டேக் செய்யவும்.
என்ன வியப்பான விஷயம் என்றால் இந்த தாம்ப்ராஸ் நாராயணன் என்னவெல்லாம் செய்தான் என்று எழுதிய பிறகும், போன்றவர்கள் அவர்கள் இருக்கும் மேடையில் பகிர்ந்து கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது.
சொல்லப்போனால் போவது மிகவும் வருத்தமான விஷயம்.
இப்படி, யாரோ தன்னை ஸ்வாமி மணவாளமாமுனிகள் வம்ஸம் என்று சொல்லிக் கொண்டு பல கோடிகள் செலவிட்டு ஒரு கூத்தை ஸ்ரீரங்கத்தில் நடத்த அதில், பெரிய பெருமாளை கருவேப்பிலை அளவு கூட மதிக்காதவர்கள், அங்கே சென்று ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை, நாராயண பரத்வத்தை நிலைநாட்ட போகின்றனர் என்பது தான் இன்றைய நிலை.
இந்த படத்தில் இருப்பவர்கள் இந்த அநியாயத்தை அங்கீகரிப்பதை ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் அறிய வேண்டும்.
4.6.2026 முதல் 10.6.2026 வரை நடக்கும் இந்த தெருக்கூத்தில் பேசப் போகும் ஒரே ஒருவராவது பெரிய பெருமாள் திருவடியை பற்றி பேசுவார்களா என்ன?!
ஒன்று மட்டும் நடக்கும். ஆளாளுக்கு சம்பாவனையை அள்ளிச் செல்வார்கள். குறைந்தபக்ஷம் ரூ. 10000 இருக்கும் என்று என் கணிப்பு. எல்லாம் பிணத்தை தின்னும் பணத்துக்கு சமம் என்பது என் கருத்து.
ஆனால் இவர்கள் பெரிய பெருமாளைப் பற்றி ஆத்து ஆத்து என்று ஆத்துவதை கூர்மையாக நான் கவனிப்பேன்.
எப்பொழுது எதிராசனுக்கு அடிநாயேன்!!
ஜெய் ஸ்ரீ ராம்!
பின் குறிப்பு:
இதை படித்துவிட்டு யுட்யூபர் பத்து சீட்டு முகத்துல காறி உமிழ்ந்ததை துடைத்து வெ.மா.சூ.சொ இல்லாமல் சொன்ன சொல்லை காப்பாற்றும் நேர்மை இல்லாத போன்றவர்கள், "ரங்கராஜன் 360 டிகிரீ எல்லோரை பற்றியும் அவதூறு பேசுவார். சம்ப்ரதாயத்தில் இருப்பவர்களின் மீதே கம்பு சுத்துவார்" என்று பேசுவார்கள் என்று தெரிந்தே எழுதுகிறேன்!!
பெரிய பெருமாளுக்கும், எம்பெருமானாருக்கும் அடிமையான நான் மற்ற எவர் சொல்வதையும் பொருட்படுத்தாதவன் என்பதை தெளிவு படுத்துகிறேன்
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!! இல்லை எனக்கெதிரே!!!