Our Lady of Lourdes Church India

Our Lady of Lourdes Church India CHURCH OF OUR LADY OF LOURDES Fr.Celle,S.J. Fr.Louis Garnier,S.J. Adopted the Norman style of architecture , with massive walls, round pillars and topped arches.

The CAUVERY with its ceaseless and bounteous flow and the ROCKFORT with its timeless history seem to converge imperceptibly in the divine precincts of the hallowed CHURCH OF OUR LADY OF LOURDES at the heart of ST.JOSEPH'S COLLEGE. St.Joseph's College church completed in A.D. 1895 JESUIT FATHERS presents a fascinating study of contrasting styles for a connoisseur of architecture as it is a repli

ca of our Lady of Lourdes church - France. Suggested the Gothic Style of architecture with its penchant for the pointed arch - the church top rises 62 feet above the nave. ARCHITECTURAL FEATURES OF THE CHURCH:

* 5 Statues of Great Saints in the middle of the Tower.
* The Gothic Tower filled with artistic petal like flowers and dolls in the shape of pet animals.
* The Chimney Bell at a height of 90 feet.
* Colourful stained glass windows depicting the life of Jesus, Jesuit Saints and Evangelists.
* Grotto of our Heart of Jesus on the right side and grotto of our Lady on the left side at the entrance.
* 14 stations of the Way of the Cross on the inner church road.

Feast Day of St Francis Xavier 🙏🙏
08/12/2025

Feast Day of St Francis Xavier 🙏🙏

சாரோனின் கோபுரம், தாவீது அரசரின் உப்பரிகை, வாக்குத்தத்தின் பெட்டகம், தந்தமயமான ஆலயம் 🛕 அமல அன்னை பெருவிழா வாழ்த்துக்கள் ...
08/12/2025

சாரோனின் கோபுரம், தாவீது அரசரின் உப்பரிகை, வாக்குத்தத்தின் பெட்டகம், தந்தமயமான ஆலயம் 🛕 அமல அன்னை பெருவிழா வாழ்த்துக்கள் 🎉

*✝️ காலை ஜெபம்*"ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரம...
08/12/2025

*✝️ காலை ஜெபம்*

"ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவு கூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்".

(திருப்பாடல் 98 : 1-4)

அன்பும், கருணையும், இரக்கமும் நிறைந்த எங்கள் பரலோக பிதாவே! இந்த புதிய நாளின் அதிகாலை வேளையில் உம்மை வணங்குகின்றேன், போற்றுகின்றேன், வாழ்த்துகின்றேன், ஆராதிக்கின்றேன், உமக்கு நன்றி செலுத்துகின்றேன்.

இறைவா! அகிலத்தையும் படைத்த ஆண்டவராகிய உமக்கு முன் தூசிக்கும் சமமான மனிதர்களாகிய எங்கள் மேல் நீர் கொண்ட அளவற்ற அன்பு, உமது படைப்புகளிலேயே நாங்கள் எவ்வளவு பாக்கியவான்கள் என்பதை அனுதினமும் நினைவூட்டுகின்றது. தந்தையே! உமது இரக்கப் பெருக்கத்தின் நிமித்தம், மனுக்குலம் உமது மீட்புத் திட்டத்தினால் தப்பிப் பிழைத்தது.

இனிய இயேசுவே! மனிதகுல மீட்பிற்கான அந்த மீட்புத் திட்டத்தில், மாசில்லாத, ஜென்ம பாவமில்லாத அமலோற்பவ அன்னையிடம், அன்பு மகனாகப் பிறந்தீரே! உமது தூய அன்னையை, எங்களுக்கும் தாயாக அடையாளம் காட்டினீர். நன்றி இயேசுவே!

எல்லாம்வல்ல தந்தையிடம், அமலோற்ப அன்னையின் இடைவிடா பரிந்துரையாலும், வேண்டுதல்களினாலும், பாவம் நிறைந்த இவ்வுலகம் இன்னும் அழியாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. அமலோற்ப அன்னையே! படைப்புகள் அனைத்தோடும் சேர்ந்து உமக்கு நன்றி செலுத்துகின்றோம்.

இறைவா! இன்று தேவகிருபையின் நேரத்தில், எங்கள் பாவங்களுக்கு மன்னிப்பும், அமலோற்ப அன்னையின் தாழ்ச்சியையும், இரக்க உள்ளத்தையும், தூய வாழ்வையும் எங்களுக்குத் தந்தருள்வீராக.

ஆண்டவரே, உம்மை ஈன்றெடுத்த நம் அன்னை மரியாளின் புனித நாமம், என்றென்றும் போற்றப்படுவதாக.

இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

*ஆமென்.*

விண்ணுலகில் இருக்கிற...(1)
அருள் நிறைந்த...(3)
பிதாவுக்கும், சுதனுக்கும்...(1)

*ஆமென்.*

Happy Fiesta Immaculate conception ❤️ ❤️ ❤️ 𝗣𝗥𝗔𝗬𝗘𝗥 𝗧𝗢 𝗧𝗛𝗘𝗜𝗠𝗠𝗔𝗖𝗨𝗟𝗔𝗧𝗘 𝗛𝗘𝗔𝗥𝗧 𝗢𝗙 𝗠𝗔𝗥𝗬O Immaculate Heart of Mary, Heavenly be...
07/12/2025

Happy Fiesta
Immaculate conception ❤️ ❤️ ❤️
𝗣𝗥𝗔𝗬𝗘𝗥 𝗧𝗢 𝗧𝗛𝗘

𝗜𝗠𝗠𝗔𝗖𝗨𝗟𝗔𝗧𝗘 𝗛𝗘𝗔𝗥𝗧 𝗢𝗙 𝗠𝗔𝗥𝗬

O Immaculate Heart of Mary, Heavenly beauty and splendor of the Father, You are the most valued Heavenly treasure.
New Eve, Immaculate in soul, spirit and body, Created of the godly seed by the Spirit of God, You are the spiritual Mother of mankind.

Pure Virgin, full of grace then and now, Your whole being was raised Heavenly in full glory, To be elevated above all the hosts within the Kingdom of God.
O Heavenly Mother, Queen of Heaven and earth, I recognize the glory of your highest title, The Immaculate Mother of God!

Loving Mother, dispenser of endless blessings, You who continuously intercedes on our behalf, please present my need before your loving Son Jesus.
(In your own words, make your special request here)

O Immaculate Heart of Mary, I know that you are now presenting my need before Jesus, For you have never turned away those in dire need.
Mother dearest, I await your favorable answer, submitting myself to the Divine will of the Lord, For all glories are His forever and ever. Amen.

Immaculate Heart of Mary,
Pray for us. Amen.

*🌜இரவு செபம்**வல்லமை நிறைந்த ஆண்டவரே!  இன்று முழுவதும் என்னை பாதுகாத்து, வழி நடத்திய உமது மேலான ஆசீருக்காக நன்றி செலுத்த...
06/12/2025

*🌜இரவு செபம்*

*வல்லமை நிறைந்த ஆண்டவரே! இன்று முழுவதும் என்னை பாதுகாத்து, வழி நடத்திய உமது மேலான ஆசீருக்காக நன்றி செலுத்துகின்றேன்.*

*இன்று நான் எண்ணிய எண்ணங்கள், தேவைகள், செயல்திட்டங்கள், செய்து முடித்த பணிகள் அனைத்தையும், உம் பாதத்தில் சமர்ப்பித்து நன்றி கூறுகின்றேன்.*

*இன்று நான் யாருடைய மனதையாவது புண்படும்படியாக நடந்து இருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கின்றேன். உமது அருளினால் தான், நான் இன்று பல்வேறு காரியங்களை செய்ய முடிந்தது.*

*இன்று எனக்கு நீர் தந்த உணவு, உடை, பாதுகாப்பு அனைத்திற்கும் நன்றி கூறுகின்றேன்.*

*இந்த இரவில், தீய எண்ணங்கள், கெட்ட கனவுகள் என் மனதில் தோன்றாமல், எம்மை ஆசீர்வதியும்.*

*எமக்கு அமைதியான தூக்கம் தந்து, அதன் மூலம் நல்ல ஓய்வை கொடுத்து, நாளை புத்துணர்வோடு எழுந்து, என் பணிகளை தொடர வரம் தாரும். ஆமென்.*

_* #இதுவும்_கடந்துபோகும்*__*நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால்..*_ _இந்த வாக்கியத்தின் மகத்தான உண...
06/12/2025

_* #இதுவும்_கடந்துபோகும்*_

_*நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால்..*_

_இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்..!_

_*எத்தனை வெற்றிகள்,*_
_*எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன..!*_

_வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா..!_

_*வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா..!*_

_எத்தனை நண்பர்கள்,_
_எத்தனை பகைவர்கள்,_ _எத்தனை உறவுகள்_
_நம் வாழ்வில்_ _முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்..!_

_*வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன..!*_

_ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா..!_

_*இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானதல்ல..!*_

_அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கி கொள்ளுங்கள்..!_

_*வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்..*_
_*கர்வம் தலை தூக்காது..!*_

_தோல்விகள் தழுவும் போது_ _"இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்.._
_சோர்ந்து விட மாட்டீர்கள்..!_

_*நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்..!*_

_இருக்கும் போது - அவர்களை கௌரவிப்பீர்கள்.._
_அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்..!_

_*தீய மனிதர்களும்,*_ _*பகைவர்களும்*_
_*உங்கள் வாழ்வில் வரும் போது*_ _*"இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்..*_
_தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள்._ _பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்..!_

_*நெற்றி சுருங்கும் போதெல்லாம்*_
_*"இதுவும் கடந்து*_ _*போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள்..!*_

_சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்..!_

_*நினைவில் கொள்ளும் அவசியமே இல்லாமல் வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால்..!*_

_அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்..!_

_*வாழ்வை கொண்டாடுவோம்..*_
_*வாழ்கின்ற வரையில்..!*_

_*வாழ்க வளமுடன்*_
_*வாழ்வோம்*_ _*நலமுடன்..!*_

06/12/2025

*✝️ காலை ஜெபம்*"ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.மனிதர்மீது நம்பி...
06/12/2025

*✝️ காலை ஜெபம்*

"ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!
உயர் குடியினர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்து விடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.
ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.
என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும். ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்".

(திருப்பாடல் 118: 1,8-9. 19-21. 25-27a)

என்றென்றும் வாழும், எல்லாம்வல்ல எம் இறைவா! இந்த அதிகாலை வேளையில், நீர் படைத்த படைப்புகள் அனைத்தோடும் சேர்ந்து, உம்மைப் போற்றித் துதிக்கின்றேன். உமக்கு நன்றி கூறுகின்றேன்.

இறைவா ! ஏற்கனவே எங்களை விட்டுப் பிரிந்த மரித்த ஆன்மாக்களை, சென்ற மாதத்தில் நாங்கள் நினைக்கும்படி செய்தீர். அவர்களுக்காக மன்றாட வேண்டிய எங்களது கடமையை, எங்களுக்கு நீர் அறிவுறுத்தினீர். அதுபோல இந்த மாதத்தில், உமது திருச்சட்டத்திலிருந்து நாங்கள் என்றும் விலகாதிருக்கவும், உமது இறைவார்த்தையின்படியே நாங்கள் என்றும் நடக்கவும் எங்களுக்கு அருள் புரிவீராக.

ஏனெனில், தந்தையின் திருவுளப்படி நடப்பவர், பாறையை அடித்தளமாகக் கொண்ட வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார் என நீர் கூறி இருக்கிறீர். இயேசுவே! உமது இரண்டாம் வருகையின்போது, நாங்கள் நிலைத்து நிற்கும் வகையில், எங்களது விசுவாசம் என்னும் அடித்தளம், உறுதிமிக்க பாறைபோல் இருக்க எங்களுக்கு அருள் புரிவீராக.

இயேசு, மரி! சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன்.

*ஆமென்.*

விண்ணுலகில் இருக்கிற ... (1)
அருள் நிறைந்த... (3)
பிதாவுக்கும், சுதனுக்கும்..(1)

*ஆமென்.*

*🌜இரவு ஜெபம்*இரக்கமிகு ஆண்டவரே, ஒவ்வொரு நாளும் நீர் எங்களுக்காக  செய்யும் அனைத்து வல்லமைமிக்க மற்றும் அற்புதமான காரியங்க...
05/12/2025

*🌜இரவு ஜெபம்*

இரக்கமிகு ஆண்டவரே, ஒவ்வொரு நாளும் நீர் எங்களுக்காக செய்யும் அனைத்து வல்லமைமிக்க மற்றும் அற்புதமான காரியங்களுக்காகவும் நாங்கள் உம்மை நேசிக்கிறோம், நன்றி செலுத்துகிறோம்!

எங்கள் எதிரிகளின் அனைத்து தாக்குதல்களையும் தடுக்க உமது வலிமைமிக்க சம்மனசுக்களை எங்களைச் சூழ்ந்திருக்கச் செய்ததற்காக நன்றி. கடினமான பகல்வேளைப் பணிகளின் பிறகு, பல சவால்களை எதிர்கொண்டு, உமது அளவற்ற அன்பு, கவனிப்பு மற்றும் பாதுகாப்பில், முழுமையாக ஓய்வெடுக்க எங்களுக்கு உதவி புரியும். இப்போது நாங்கள் உறங்கச் செல்லும்போது, ​​இரவில் எங்களைக் காத்துக்கொள்ளவும், கவனிக்கவும், பாதுகாக்கவும், விடியற்காலையில் எங்களை எழுப்பவும் உம்மை பிரார்திக்கிறோம்.

அப்பா, எங்கள் கவலைகளை நீர் அறிவீர்! எங்கள் கஷ்டங்களை கவனித்துக்கொள்கிறீர். எனவே எங்களுடைய கடினமான கவலைகள் அனைத்தையும் நாங்கள் உம்மிடம் ஒப்படைக் கிறோம். எமது கடின சூழ்நிலைகளை நாங்கள் உமது காலடியில் வைக்கிறோம். ஒரு புதிய நாள் தொடங்கும்வரை எங்களுக்கு அமைதியான உறக்கத்தைக் கொடுத்தருளும். இவை அனைத்தையும் எங்கள் இரட்சகராகிய இயேசுவின் தூய திருநாமத்தில் ஜெபிக்கிறோம்.
ஆமென்!

New Flag Pole Erected at Lourdes Church
05/12/2025

New Flag Pole Erected at Lourdes Church

*🌜இரவு செபம்**அன்பும், இரக்கமும்  நிறைந்த எங்கள் அன்பு ஆண்டவரே,**இந்த இரவு நேரத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். மனி...
05/12/2025

*🌜இரவு செபம்*

*அன்பும், இரக்கமும் நிறைந்த எங்கள் அன்பு ஆண்டவரே,*

*இந்த இரவு நேரத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். மனிதரின் வார்த்தைகள் மற்றவர்களை விழச்செய்யும், செயலற்று போகச்செய்யும். ஆனால் ஆண்டவரின் வார்த்தைகள் வல்லமையுள்ளது; அவரின் வார்த்தைகள், எங்கள் வாழ்வில் காணப்படும் எல்லா பிரச்சனைகளையும் மாற்றவும், அமைதிப்படுத்தவும், விடுதலை தரவும், வல்லமையுள்ளதாகவும் எங்களுக்கு உமது ஆசீராக இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.*

*ஆண்டவரே, நாங்கள் எப்போதும் உம்முடைய குரலுக்கு செவி கொடுக்கிறவர்களாகவும், உம்முடைய இறை வார்த்தைகள், எங்கள் வாழ்வில் ஆசீர்வாதமாகவும் இருக்க உமது அன்பை எங்களுக்கு தந்தருள வேண்டுகிறோம்.*

*இன்றைய எங்கள் அன்றாட பணிகளை, எங்கள் குடும்பத்தினரை ஆசீர்வதித்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.*

*இந்த நாள் முழுவதும், எம் வாழ்க்கை பயணத்தில் சிறப்பாக பயணிக்க, நல்ல உடல் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியான மனநிலையையும் தந்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.*

*இன்று இரவு எமக்கு மன அமைதியையும், நல்ல உறக்கத்தையும் தந்தருளும். அதிகாலை எழுந்து, உம்முடைய பாதத்தில் அமர்ந்து, செபித்து, நாளைய எங்கள் பணிகளை இனிதே துவங்க, உமது மேலான இரக்கத்தின் ஆசீரை எமக்கு அளித்தருளும்.*

*எங்கள் தாழ்மையின் நன்றிகளையும், வேண்டுதல்களையும் ஏற்று, உமது அன்பின் ஊற்றால், இறை இரக்கத்தினால் எம்மை நிரப்பி ஆசீர்வதியும்.*

*- ஆமென்.*

*🌻 காலை ஜெபம்**எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்...
05/12/2025

*🌻 காலை ஜெபம்*

*எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள்.*

*தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.*

*வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார்.*

*அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்; அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது.*

*அவர் நீடுழி வாழ்க! சேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக! அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக*

(திருப்பாடல்கள் 72:11-15)

*என் ஆண்டவரே! என் கடவுளே! உம்மை போற்றுகிறோம். நீரே எங்கள் கடவுள், உம்மையன்றி எங்களுக்கு வேறு தெய்வம் இல்லை. உமது மகனையன்றி, எங்களுக்கு வேறு மீட்பர் இல்லை. தூய ஆவியார்தான் எங்களை வழிநடத்தும் தெய்வம். மூவொரு தெய்வமே! உம்மை ஆராதிகின்றோம்.*

*அன்பான தந்தையே! இந்த பொல்லாத உலகில், எங்களை ஒவ்வொரு நாளும் வழி நடத்தி வருவதற்காக, உம்மை பணிந்து வணங்கி நன்றி கூறுகின்றோம் அப்பா!*

*அப்பா! எங்களை மயக்கும் உலக ஆசைகள், எங்களை பாவத்திற்கு இட்டுச்செல்லும் எங்கள் உடல் ஆசைகள், எங்களை நரகத்திற்கு கூட்டிச் செல்ல துடிக்கும் சாத்தான், இந்த மூன்றிலிருந்தும் எங்களை காப்பாற்றும் படியாக‌ உம்மை மன்றாடுகின்றோம்.*

*ஆண்டவரே! ஒவ்வொரு நாளும் எத்தனையோ வழிதவறி சென்ற ஆன்மாக்கள், மீண்டும் உம்மிடம் வருவதற்கு ஏங்கிகொண்டு, தவித்து கொண்டு இருக்கிறது. அவர்களோடு சாத்தான் போராடுகிறான், அவர்களுக்கு துன்பத்தை கொடுக்கிறான்; அல்லது ஆசைகளை காட்டி தவறான பாதையை நோக்கி இழுக்கிறான். ஆண்டவரே! இவ்வான்மாக்கள் மீண்டு வரவேண்டும் என்றால், உமது இரக்கம் தேவை; உமது கருணை அவர்களுக்கு தேவை; உமது மன்னிப்பு அவர்களுக்கு தேவை, உமது அன்பு அனைவருக்கும் தேவை தந்தையே.*

*அப்பா! எங்களுக்கு உமது மன்னிப்பைத் தாரும், உமது அன்பைத் தாரும், உமது அரவணைப்பைத் தாரும். உமது கனிவை எங்களுக்கு கற்றுத்தாரும், உமது இரக்கத்தை எங்கள் மீது பொழிந்தருளும், உமது கருணையால் எங்களைக் காத்தருளும்.*

*இவ்வாறு நாங்கள், உமது பார்வையில் இருந்து ஒருபோதும் விலகாமல் வாழ்ந்து, பாவத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெற்று, ஒளியின் மக்களாக இவ்வுலகில் வாழ எங்களுக்கு உதவி செய்தரும்.*

*இயேசு மரியே சூசையே! என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். ஆமென்!*

Address

Teppakulam
Tiruchirappalli
620002

Alerts

Be the first to know and let us send you an email when Our Lady of Lourdes Church India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Our Lady of Lourdes Church India:

Share