Our Lady of Refuge Church, Navalur Kuttapattu

Our Lady of Refuge Church, Navalur Kuttapattu அடைக்கல அன்னை ஆலயம்

பெரிய சஞ்சிவி நாதர் மற்றும் வீரமாமுனிவர் அருள்வாக்கின் ஈர்ப்பினால் மனமாறிய இறைமக்களின் வழியில் 300 ஆண்டுக்கள பழமையான அருள்நிறை அடைக்கல அன்னை ஆலயம்.

நவலூர் குட்டப்பட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா 2026        🔥👑✨️  🔥👑✨️😈🔜  🔥👑✨️😈  🔥👑
19/01/2026

நவலூர் குட்டப்பட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா 2026

🔥👑✨️ 🔥👑✨️😈🔜 🔥👑✨️😈 🔥👑

நவலூர் குட்டப்பட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா 2026 இன்று காலை அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் ஊர் மக்களின் வணக்க...
19/01/2026

நவலூர் குட்டப்பட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா 2026 இன்று காலை அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் ஊர் மக்களின் வணக்கத்துடனும் செபத்துடனும் தொடங்கியது.

🔥👑✨️ 🔥👑✨️😈🔜 🔥👑✨️😈 🔥👑

நவலூர் குட்டப்பட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா 2026 இன்று காலை அருள்நிறை அடைக்கல அன்னை ஆலயத்தில் ஊர் மக்களின் வணக்கத...
19/01/2026

நவலூர் குட்டப்பட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா 2026 இன்று காலை அருள்நிறை அடைக்கல அன்னை ஆலயத்தில் ஊர் மக்களின் வணக்கத்துடனும் செபத்துடனும் தொடங்கியது.

🐂 🐂

கத்தோலிக்க இளைஞர் மன்றத்தின் பொன் விழா ( 1975 - 2025 ) நிகழ்வுகள் 💥❤️‍🔥💥
03/01/2026

கத்தோலிக்க இளைஞர் மன்றத்தின் பொன் விழா ( 1975 - 2025 ) நிகழ்வுகள் 💥❤️‍🔥💥

கிறிஸ்துமஸ் விளையாட்டு மற்றும் பண்பாட்டு விழா — 50 ஆண்டுகளின் பயணம்1975ஆம் ஆண்டு, சில இளைஞர்களின் ஆன்மீக உற்சாகத்திலிருந...
27/12/2025

கிறிஸ்துமஸ் விளையாட்டு மற்றும் பண்பாட்டு விழா — 50 ஆண்டுகளின் பயணம்
1975ஆம் ஆண்டு, சில இளைஞர்களின் ஆன்மீக உற்சாகத்திலிருந்து பிறந்த ஒரு சிறிய முயற்சி… இன்று நம் ஊரின் பெருமையாகவும், 50 ஆண்டுகளாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விளையாட்டு மற்றும் பண்பாட்டு விழாவாகவும் வளர்ந்துள்ளது.
அப்போது அவர்கள் செய்தது எளிதாகத் தோன்றினாலும், அது சாதாரணமான ஒன்றல்ல. அன்றைய காலத்தில் வசதிகள் குறைவான நிலையில், சில இளைஞர்கள் கூடிவந்து, கொடை வள்ளல்களிடமிருந்து பெற்ற ₹100 மட்டுமே வைத்துக் கொண்டு, 10 நாட்களுக்கு மேலாக உழைத்தார்கள். முதல் குடில் தயாரிப்பிலிருந்து காலை 50 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆரம்பித்து நடைபெற்ற பகல் நேர களப்போட்டிகளாகட்டும், இரவு ஒன்றரை மணி வரை நடைப்பெற்ற பாட்டு, நடனம், மாறுவேடம், சைகை நடிப்பு, பேச்சுப் போட்டிகளாட்டும் அவை அனைத்தும் நம் உற்சாகத்தின் அடையாளங்கள்.
தோரணங்களுக்குக் கூட அவர்கள் கலர் காகிதத்தை முக்கோண வடிவில் வெட்டி கயிற்றில் ஒட்டி தொங்கவைத்தார்கள். குடிலில் பயன்படுத்திய மலைக்காகிதங்கள் கூட பழைய தினசரி நாளிதழ்களைப் பயன்படுத்தி, கையால் நிறங்கள் பூசி தயாரிக்கப்பட்டன. ஒரு ரூபாய்க்கு மேலான செலவு கூட அன்றைய காலத்தில் ஒரு சுமையாக இருந்தது.
அந்த நேரத்தில் நவலூர், தாயானூர், அருங்கால்பட்டி, அரியாவூர், கல்லுக்குடி போன்ற சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த விழா, 50 ஆண்டுகள் ஒரே வடிவில் இல்லை — ஒவ்வொரு ஆண்டும் புதிய முகம், புதுமையான யோசனைகள், சண்டைகள், விவாதங்கள், இணக்கங்கள் ஆகியவற்றைத் தாங்கி வளர்ந்தது. அந்த பல்வேறு மாற்றங்கள் தான் இன்று இதை ஒரு நம் அனைவரின் சொந்தமான திருவிழாவாக உருவாக்கியது.
பல இளைஞர்களின் ஒத்துழைப்பும், மன்றத் தலைவர்களின் வழிநடத்தலும், மணியக்காரர்கள் மற்றும் ஊர் தலைவர்களின் வழிகாட்டுதலும் இந்த விழாவை மட்டுமல்ல, நம்முடைய சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தின.
இந்த விழா வெறும் போட்டி அல்ல — இது நம் ஊரின் கலாச்சார அடையாளம், நம் குழந்தைகளுக்கான திறமையின் மேடை, நம் ஒவ்வொருவரையும் களத்தில் இறங்க வைத்த பயணம் மற்றும் நம் மனங்களில் இல்லாத புதுமைக்கு வழி திறந்த ஒரு நிகழ்வு.
50 ஆண்டுகளாக ஒலிக்கும் ஒரு ஒற்றுமையின் ஒலி — இதுவே நம் ‘கிறிஸ்துமஸ் விளையாட்டு மற்றும் பண்பாட்டு விழா!’

நமது அருள்நிறை அடைக்கல அன்னை ஆலயத்தைச் சுற்றி மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் மூலம் ஒப்பந்தம் பெற்று பேவர் பிளாக் க...
26/12/2025

நமது அருள்நிறை அடைக்கல அன்னை ஆலயத்தைச் சுற்றி மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டத்தின் மூலம் ஒப்பந்தம் பெற்று பேவர் பிளாக் கல் அமைத்து கொடுத்த திரு. பழனிச்சாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

மணியக்காரர்கள்

கிறிஸ்து பிறப்பு நாளில் நெதர்லாந்து நாட்டில் இருந்து நமது அடைக்கல அன்னை ஆலயத்திற்கு வந்திருந்த போது ஆலய நிர்வாகத்தின் சா...
26/12/2025

கிறிஸ்து பிறப்பு நாளில் நெதர்லாந்து நாட்டில் இருந்து நமது அடைக்கல அன்னை ஆலயத்திற்கு வந்திருந்த போது ஆலய நிர்வாகத்தின் சார்பாக கௌரவித்த தருணம்....

25/12/2025

அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துக்கள்....

இவண்,

அ. ஆரோக்கியசாமி
பா. ஜான் கென்னடி
மணியக்காரர்கள்

பிறப்பின் போது குழந்தையின் அழுகை வாழ்வின் மையமான மகிழ்வை நம் குடும்பத்தில் கொண்டாடிகிறோம்.ஆனால் இந்த  யேசுவாவின் (Yeshua...
24/12/2025

பிறப்பின் போது குழந்தையின் அழுகை வாழ்வின் மையமான மகிழ்வை நம் குடும்பத்தில் கொண்டாடிகிறோம்.

ஆனால் இந்த யேசுவாவின் (Yeshua) அழுகை உலகத்திற்கு மீட்பின் செய்தியை கொண்டு வந்து, மனித வாழ்வை நெரியேற்றி, அன்பின் பகிர்வை மையப்படுத்தி நாம் அனைவரையும் கொண்டாட வைத்துள்ளது.

இனிய கிறிஸ்து பிறப்பு பெருநாள் வாழ்த்துகள்

❤️❤️

நமது அருள்நிறை அடைக்கல அன்னை ஆலயத்தின் வளர்ச்சி பணிக்காக "கம்ப்யூட்டர் சிஸ்டம்" வழங்கிய திரு அடைக்கலம் அவர்களுக்கு மனமார...
24/12/2025

நமது அருள்நிறை அடைக்கல அன்னை ஆலயத்தின் வளர்ச்சி பணிக்காக "கம்ப்யூட்டர் சிஸ்டம்" வழங்கிய திரு அடைக்கலம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

மணியக்காரர்கள்

நேற்று அருள் நிறை அடைக்கல அன்னை ஆலயத்தின் அர்ச்சிப்பு நாள் விழாவை முன்னிட்டு திருப்பலி நடைபெற்றது. இத்திருப்பலியை பங்குத...
23/12/2025

நேற்று அருள் நிறை அடைக்கல அன்னை ஆலயத்தின் அர்ச்சிப்பு நாள் விழாவை முன்னிட்டு திருப்பலி நடைபெற்றது. இத்திருப்பலியை பங்குத்தந்தை அருட்திரு. ஜான் கென்னடி மற்றும் திருச்சிலுவை சபையின் அருட்திரு. ஜான் கென்னடி அவர்களும் நிறைவேற்றினர்.

திருப்பலியின் நிறைவில் கடந்த மூன்று மாத காலமாக அடைக்கல அன்னை ஆலயத்திற்கு உதவிய நன்கொடையாளர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அதன்பின்னர் அன்பின் விருந்துடன் விழா சிறப்பாக நிறைவுபெற்றது.

இவண்,

மணியக்காரர்கள்

Address

3, Alpha Nagar, Karumandapam
Tiruchirappalli
620001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Lady of Refuge Church, Navalur Kuttapattu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share