Tamil Muslim

Tamil Muslim The Tamilmuslim Page like only for religious page.

Its look like a all type of islamic content showing this page, In this page helps to dawa for other People, So you are Supporting this Page.

அரபா நாளில் (துல் ஹஜ் ஒன்பதாம் நாள்) ஓதுவதற்கு மிகச்சிறந்த மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட துஆ இத...
25/05/2026

அரபா நாளில் (துல் ஹஜ் ஒன்பதாம் நாள்) ஓதுவதற்கு மிகச்சிறந்த மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட துஆ இதுவாகும்:

​முக்கியமான துஆ (அரபா நாளின் சிறந்த துஆ)

​لَا إِلٰهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
​தமிழ் உச்சரிப்பு:

​"லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.

​பொருள்:
​"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை. ஆட்சி அதிகாரமும் புகழும் அவனுக்கே உரியன. அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.

​இதன் சிறப்பு:
​நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"துஆக்களில் மிகச் சிறந்தது அரபா நாளின் துஆவாகும். எனக்கும் எனக்கு முன்னிருந்த தூதர்களுக்கும் ஓதியவற்றில் மிகச் சிறந்தது (மேற்கண்ட துஆவாகும்)." (ஆதாரம்: திர்மிதி-3585)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
​"யார் ஒரு நாளில் நூறு முறை 'லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்' என்று சொல்கிறாரோ அவருக்கு அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்கு நிகரானதாகும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும்; அவருடைய கணக்கிலிருந்து நூறு பாவங்கள் அழிக்கப்படும். அன்றைய தினம் மாலை வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாக்கும் அரணாகவும் அது இருக்கும். அவர் செய்ததை விடச் சிறந்ததை எவராலும் கொண்டு வர முடியாது — ஒரு மனிதர் அதைவிட அதிகமாகச் செய்தாலே தவிர!"
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலி).
(ஸஹீஹுல் புகாரி - 6403)

25/05/2026
 #மறு_பதிவு...அன்பார்ந்த இஸ்லாமிய சமூகத்திற்கு இந்த பதிவை மீண்டு மறு பதிவு செய்வதற்கு காரணம் இருக்கிறது..சமீபத்தில் வடக்...
20/05/2026

#மறு_பதிவு...

அன்பார்ந்த இஸ்லாமிய சமூகத்திற்கு இந்த பதிவை மீண்டு மறு பதிவு செய்வதற்கு காரணம் இருக்கிறது..

சமீபத்தில் வடக்கர் ஒருவரை சந்திக்க நேரிட்டது அவர் இந்த படத்தை பற்றியும் அது முஸ்லீம் வேடம் அணிந்த கதாபாத்திரத்தில் உள்ளவனை கொலை செய்யும் காட்சிகள் வரும்போழுது எல்லாம் அவர் ஆனந்த அடைவதாகவும்.. அதே சமயம் சாதாரண முஸ்லீம் மனிதர்களை சந்தித்தால் கூட ஒரு விதமான வெறுப்புகள் வருவதாகவும் கூறினார்..

இது போன்ற திரைப்படம் என்னை போன்ற சாதாரண மனிதர்களுக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துவா தாகவும் கூறி வந்தார்..

அவர் மனம் அதை வெறும் படமாக மட்டும் பார்க்க முடியவில்லை.. எங்களின் உள்ளத்தை மாற்றுவதாகவும் கூறி வந்தார்..

இதிலிருந்து நாம் விளங்கி கொள்வது இந்துக்கலில் பலர் தான் முஸ்லீமிகளுக்கு எதிராக இன்றய ஆட்சியாளர்கள் சினிமா இயக்குனர்கள் செய்வது உணர்த்துவது பார்ப்பது தவறு என்று அவர்கள் மனதில் போரடி கொண்டு இருக்கின்றனர்..

அது போன்ற மனிதர்களுக்கு இது போன்ற படங்களை கொண்டு மக்களை குழப்பும் செய்தானின் தோலர்களுக்கு எதிராக நாம் பிரார்த்தனை செய்வது அவசியம்

"லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்" (لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ) என்ற துவா, இஸ்லாத்தில் மிக மகத்தான மற்று...
18/05/2026

"லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்" (لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ) என்ற துவா, இஸ்லாத்தில் மிக மகத்தான மற்றும் சக்திவாய்ந்த ஒரு பிரார்த்தனை ஆகும்.

#துவாவின்_நேரடி_அர்த்தம் :
"தீமைகளில் இருந்து விலகிச் செல்வதற்கோ, நன்மைகள் செய்வதற்கான சக்தியைப் பெறுவதற்கோ அல்லாஹ்வைத் தவிர வேறு எவராலும் எவ்வித ஆற்றலும் கிடையாது."

(அதாவது, "அல்லாஹ்வின் உதவியின்றி என்னால் எந்த ஒரு பாவத்திலிருந்தும் தப்பிக்க முடியாது, அவனது அருளின்றி என்னால் எந்த ஒரு நன்மையையும் செய்ய முடியாது. அனைத்து அதிகாரமும், ஆற்றலும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது" என்பதை முழுமையாக ஒப்புக்கொள்வதாகும்).

#இந்த_துவாவை_ஓதுவதால்_ஏற்படும்_நன்மைகள்:
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இந்த துவாவின் சிறப்புகளைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள்:

#சொர்க்கத்தின்_பொக்கிஷம்:
நபிகளார் கூறினார்கள்: "இந்த வார்த்தையை அதிகமாகக் கூறுங்கள். ஏனெனில், இது சொர்க்கத்தின் பொக்கிஷங்களில் (Treasures of Paradise) ஒரு பொக்கிஷமாகும்." (நூல்: புகாரி, முஸ்லிம்).

#கவலைகள்_மற்றும்_கஷ்டங்கள்_நீங்கும்:
வாழ்வில் ஏதேனும் பெரிய கஷ்டம், தீர்க்க முடியாத கவலை அல்லது மன அழுத்தம் (Stress) ஏற்படும் போது இதை ஓதினால், அல்லாஹ் உள்ளத்திற்கு நிம்மதியைத் தந்து, அந்தப் பிரச்சினையிலிருந்து வெளிவர வழிகாட்டுவான்.

#இயலாமை_மற்றும்_சோம்பல்_நீங்கும்:
ஒரு வேலையைச் செய்ய முடியாமல் சோர்வாகவோ அல்லது பலவீனமாகவோ உணரும்போது இதை ஓதினால், அந்த வேலையைச் செய்து முடிப்பதற்கான மனவலிமையையும் ஆன்மீக ஆற்றலையும் அல்லாஹ் வழங்குவான்.

#அல்லாஹ்வின்_மீதான_முழு_நம்பிக்கை: (தவக்குல்): நம்முடைய சுய பலத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், அனைத்தையும் படைத்த இறைவனின் ஆற்றல் மீது மட்டுமே நாம் நம்பிக்கை வைத்துள்ளோம் என்பதை இந்த துவா உறுதிப்படுத்துகிறது.

#ஷைத்தானிடமிருந்து_பாதுகாப்பு:
வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது ஓத வேண்டிய துவாவிலும் இந்த வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. இதை ஓதிவிட்டுச் செல்பவருக்கு வழிகாட்டுதலும், பாதுகாப்பும் கிடைப்பதுடன் ஷைத்தான் அவரை விட்டும் தூரமாகிவிடுகிறான்.

, #சுருக்கமாக:
இது வெறும் துவா மட்டுமல்ல, மனிதனின் பலவீனத்தை இறைவனிடம் ஒப்புக்கொண்டு, அவனது எல்லையற்ற பேராற்றலைத் துணையாக அழைக்கும் ஒரு அற்புதமான திக்ர் (இறை நினைவூட்டல்) ஆகும். எனவே, கஷ்டமான நேரங்களிலும், அன்றாட வாழ்க்கையிலும் இதனை எவ்வளவு அதிகமாக ஓத முடியுமோ அவ்வளவு அதிகமாக ஓதுவது சிறந்த நன்மைகளைத் தரும்.

13/05/2026

இஸ்லாம் என்கிற மதம் மட்டும் தான் மனிதர்களை இன்றளவும் பாதுகாப்பு அளிக்கிறது.. ஆனால் அதை எதிர்ப்புவர்கள் இஸ்லாம் குறித்து அச்ச்சுருத்தலை மட்டுமே தங்களது மீடியாக்கள் மூலமாக காண்பிகின்றனர்..

இஸ்லாம் சொல்லும் கருத்தை இஸ்லாம் அல்லாதவர்கள் சிந்திக்க கூடாது என்று..

சில மனிதர்கள் மட்டுமே சிந்திகின்றனர். சிந்திப்பவர்களுக்கு மட்டுமே தெரியும் இஸ்லாமின் அருமை..

நன்றி சகோதரி...

ஜகாத் நிதியில் சாதனை படைத்தஒரு சாமான்யரின் கல்விப்புரட்சி..ஜகாத் நிதியில் சாதனை படைத்தஒரு சாமான்யரின் கல்விப்புரட்சி..மே...
18/04/2025

ஜகாத் நிதியில் சாதனை படைத்த
ஒரு சாமான்யரின் கல்விப்புரட்சி..

ஜகாத் நிதியில் சாதனை படைத்த
ஒரு சாமான்யரின் கல்விப்புரட்சி..

மேற்கு வங்க மாநிலம் ஹவ்ரா மாவட்டத்தில் சேரிகளால் சூழ்ந்த காலாப்பூர் கிராமத்தில் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த நூறுல் ஹஸன் என்பவரால் 1986 ல் 11 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அல் அமீன் அரபி பாடசாலை இன்று சர்வதேச தரத்தில் பிரமாண்ட வளர்ச்சி பெற்று மிகப்பெரிய கல்விப்புரட்சியை நான்கு மாநிலங்களில் ஏற்படுத்தியுள்ளது ஆச்சர்யமான விஷயம்...

தலித்களை விட மோசமான நிலையில் முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்று சச்சார் கமிஷனால் குறிப்பிடப்பட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் முஸ்லிம் குடும்பத்தின் வாரிசுகள் நூறுல் ஹஸன் என்ற தனிமனிதரின் தொலைநோக்கு பார்வையால் டாக்டர், இஞ்சினியர், பேராசிரியர்கள் என்று பல்துறைகளில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்...
இதற்கான மூலதனம் மற்றும் நிதியாதாரமாக ஆண்டு தோறும் நல்லுள்ளங்கள் வழங்கும் ஜகாத் பங்களிப்பு என்பது ஆச்சர்யமான தகவல்...

உணவு மற்றும் தங்கும் விடுதிகளுடன் கூடிய கல்வித்திட்டத்தை வடிவமைத்த நூறுல் ஹஸன் சில கல்வியாளர்களை ஆலோசகர்களாக இணைத்து உருவாக்கிய Al Ameen Educational Mission மூலம் மேற்கு வங்கத்தில் 17 மாவட்டங்கள், அஸ்ஸாம்,திரிபுரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலுமாக 76 கல்வி நிலையங்கள் நடத்தி வருகிறார்...

23000 மாணவ மாணவியர்களுக்கு தனித்தனி தங்கும் விடுதி வசதியுடன் தற்போது மொத்தமாக இவரது கல்வி வளாகங்களில் 70000 மாணவர்கள் பயின்று வருகின்றனர...
சுமார் 700 அநாதை குழந்தைகள், ஐயாயிரத்துக்கும் அதிகமான வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் முற்றிலும் இலவசமாக கல்வி கற்று வருகின்றனர்..

1986ல் துவங்கப்பட்ட மதரஸா வளாகம் முழுக்க முழுக்க ஜகாத் நிதியுதவி மூலம் பிரமாண்ட கட்டிடங்களுடன் கூடிய 76 கல்வி வளாகங்களில் பயின்ற 3500பேர் மருத்துவர்களாக, 3000 பொறியாளர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணினி துறை வல்லுநர்கள், பல்லாயிரம் பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் உட்பட உலகம் முழுவதும் அல் அமீன் மிஷன் முன்னாள் மாணவர்கள் பணியாற்றி வருகிறார்கள்..

கடந்தாண்டு நீட் தேர்வுக்கு 1800பேர் சிறப்பு பயிற்சியளித்ததன் மூலம் 62 மாணவிகள் உட்பட இவரது மாணவர்கள் 510பேர் மருத்துவம் படிக்க தேர்வாகியுள்ளது மேற்கு வங்க மாநிலத்தையே வியப்பில் ஆழ்த்திய செய்தி...
அதிலும் 150 பேர் முழுவதும் ஸகாத் நிதி மூலம் பயின்ற ஏழை மாணவர்கள் என்பதும், பெரும்பாலோர் மிகவும் பின்தங்கிய மால்டா, முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும் மகிழ்ச்சியான செய்தியாகும்...
நூறுல் ஹஸன் துவங்கிய கல்வி நிலையங்களில் 25 சதவீதம் இடங்கள் முற்றிலும் ஏழைகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்காக வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.....

தமிழகத்திலும் ஆங்காங்கே பயன்பாடு இன்றி தரிசாக கிடக்கும் மஹல்லா நிலங்களை சமுதாயம் பயன்படும் வகையில் திட்டங்கள் வகுத்து பயன்பாடுக்கு கொண்டு வருவது காலத்தின் கட்டாயம்...

https://alameenmission.org

பதிவு: Colachel Azheem - குளச்சல் அஸீம்
வெளியீடு: மக்கள் உரிமை



Address

Trichy
Tiruchirappalli
600023

Telephone

+917010806286

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Muslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share