31/05/2026
#தலைப்பு:
ீதியும்_இறைவனின்_பொறுமையும்:
#முன்னுரை:
இன்றைய காலகட்டத்தில், உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்கள் பலதரப்பட்ட சோதனைகளுக்கும், நெருக்கடிகளுக்கும், அநீதிகளுக்கும் ஆளாகி வருவதை நாம் காண்கிறோம். சர்வதேச அளவிலும், குறிப்பாக இந்திய அளவிலும் பல்வேறு காரணங்களைக் கூறி முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவது மிக அதிகம்.
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில்,
"உண்மையிலேயே அல்லாஹ் என்ற இறைவன் ஒருவன் இருந்தால், அவனது அடியார்களுக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும்? ஏன் இந்த நிலை?" என்ற கேள்வி சில முஸ்லிம்களிடமும், மாற்று மத சகோதரர்களிடமும் எழுகிறது.
ஆனால், இஸ்லாமியப் பார்வையில் இப்படிப்பட்ட சோதனைகளை முஸ்லிம்கள் சந்திப்பார்கள் என்று இறைவன் முன்கூட்டியே கூறி இருக்கிறான். ஏன் என்றால், உண்மையான மார்க்கம் இஸ்லாமாகும்; அதைப் பின்பற்றுபவர்களுக்கு இது போன்ற சோதனைகள்தான் வரும் என்பதை இறைவன் தெளிவாகக் கூறியிருக்கிறான்.
நிச்சயமாக நாம் உங்களைச் சற்றே அச்சத்தினாலும், பசியினாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். (நபியே! இத்தகைய சோதனைகளில்) பொறுமையாய் இருப்போருக்கு நீங்கள் நன்மாராயங் கூறுவீராக!" — (அல்குர்ஆன், சூரா அல்-பகரா : 155)
#வரலாறு_காட்டும்_சான்று_நபித்தோழர்கள்_சந்தித்த_கொடூரங்கள்:
இன்று முஸ்லிம்கள் சந்திக்கும் நெருக்கடிகள் புதியவை அல்ல. இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உயிரோடு வாழ்ந்த போதே, அவர்களைப் பின்பற்றிய மக்கள் மீது மக்கத்துக் குரைஷிகள் கட்டவிழ்த்து விட்ட அநீதிகள் வரலாற்றில் பதியப்பட்டுள்ளன.
• #ஹஸ்ரத்_பிலால்_ரலி: சுட்டெரிக்கும் அரேபியப் பாலைவன மணலில் படுக்க வைக்கப்பட்டு, நெஞ்சின் மீது கனத்த பாறை வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்.
• #அம்மாருடைய_குடும்பத்தினர்: அம்மார் (ரலி) அவர்களின் தாயார் சுமையா (ரலி) அவர்கள், இஸ்லாத்திற்காக முதன்முதலில் ஈட்டி முனையில் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
• #யாசிர்_ரலி :அம்மார் (ரலி) அவர்களின் தாயார் சுமையா (ரலி) அவர்கள் ஈட்டியால் குத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதைப் போல, அவருடைய தந்தையான யாசிர் (ரலி) அவர்களும் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.அபூ ஜஹ்ல் மற்றும் மக்கத்துக் குரைஷிகள் யாசிர் (ரலி) அவர்களின் இரண்டு கால்களையும் இரண்டு வேறு வேறு ஒட்டகங்களில் கயிறு கொண்டு கட்டினார்கள். பின்னர் அந்த இரண்டு ஒட்டகங்களையும் எதிர் எதிர் திசையில் வேகமாக ஓட்டச் செய்தார்கள். இதனால் அவருடைய உடல் நடுவே இரண்டாகப் பிளந்து அவர் தீரமாக மரணமடைந்தார் (ஷஹீதானார்).
இத்தகைய கொடூரங்கள் நடந்தபோதும் இறைவன் உடனடியாக அநீதி இழைத்தவர்களை அழிக்கவில்லை. அதுவே "இறைவனின் பொறுமை" (அல்-ஹலீம்) ஆகும். அநீதி இழைப்போருக்கு இறைவன் அவகாசம் அளிக்கிறான்; அதேநேரம் அநீதியை எதிர்கொள்ளும் அடியார்களுக்கு மறுமையில் மகத்தான கூலியைத் தயாரிக்கிறான்.
எவ்வளவுதான் அநீதி இழைக்கப்பட்டாலும், கொலை செய்யப்பட்டாலும் உண்மையான முஸ்லிம்கள் 'அல்லாஹ்' என்ற ஒரே இறைவனை மட்டும் கைவிட மாட்டார்கள். இந்த அசைக்க முடியாத ஈமான் (நம்பிக்கை) தான் இன்றைய முஸ்லிம்களுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும்.
#நவீன_காலச்_சோதனையும்_முஸ்லிம்களின்_வீழ்ச்சியும்:
மறுபுறம், முஸ்லிம்களுக்கு ஏன் இத்தகைய சோதனைகளும் இறைவனின் உதவியற்ற நிலையும் ஏற்படுகிறது என்பதை நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும். இன்று மனித இனத்தை வழிகெடுக்கும் கருவிகள் பெருகிவிட்டன. அதற்கு மிக முக்கிய சாட்சி நம் கைகளில் இருக்கும் தொலைபேசி (Smart Phone) ஆகும்.
ஒரு காலத்தில் சாத்தானின் தூண்டுதல்கள் மனிதனைத் தேடி வர வேண்டியிருந்தது, இன்று சாத்தான் மனிதனின் கைகளிலேயே உலா வருகிறான்.
இறைவன் குர்ஆன் மூலம் எச்சரித்த பெரும் பாவங்கள் இன்று தொலைபேசி மூலம் மிக எளிதாக, பெரும்பான்மையான முஸ்லிம்களால் தினசரி செய்யப்படுகின்றன:
• #இசை (Music): முன்பு இசை கேட்க சினிமா தியேட்டருக்குச் செல்ல வேண்டும். இன்று கையில் இருக்கும் தொலைபேசியில் எப்போதும் இசை ஒலிக்கிறது.
• #விபச்சாரம் (Zina): முன்பு விபச்சாரம் செய்ய இரகசிய இடங்களைத் தேடிச் செல்ல வேண்டும். இன்று விரல் நுனியில் ஆபாசப் படங்களும், சாட்டிங் (Chatting) முறைகளும் விபச்சாரத்தைக் கைகளுக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளன.
• #வட்டி (Riba): முன்பு வட்டி வாங்க வங்கிக்குச் செல்ல வேண்டும். இன்று மொபைல் ஆப் (Mobile Apps) மூலமாகவே வட்டிப் பரிவர்த்தனைகள் மிக எளிதாகச் செய்யப்படுகின்றன.
இன்று நம்முடைய நன்மை, தீமைகளைக் கணக்குப் போட்டுப் பார்த்தால், தீமைகளே அதிகமாக இருக்கும் நிலையில் நாம் வாழ்கிறோம். இத்தகைய பாவங்களில் மூழ்கியிருப்பதனால்தான், முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது இறைவனின் நேரடி உதவி உடனடியாக வராமல் தாமதமாகலாம்.
#சோதனைகள்_நன்மைகளாக_மாறும்_விந்தை:
முஸ்லிம்கள் பலவீனமடைந்து பாவங்கள் செய்திருந்தாலும், அவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்கி முஸ்லிம்களாக வாழ்ந்து, தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டால், அதுவே அவர்களின் பாவங்களுக்குப் பரிகாரமாகவும், சுவனம் (சொர்க்கம்) செல்வதற்கான வாய்ப்பாகவும் மாறிவிடுகிறது.
இதனைப் பின்வரும் நபிகளாரின் அமுதமொழிகள் (ஹதீஸ்கள்) உறுதிப்படுத்துகின்றன:
#முள்_குத்தியதற்குக்_கூலி: "ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் சோர்வு, நோய், கவலை, துக்கம், துன்பம், மனவேதனை மற்றும் அவரைத் தைக்கும் ஒரு முள் உட்பட அனைத்திற்கும் பகரமாக அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிக்கிறான்." (நூல்: புகாரி, முஸ்லிம்)
#நோயைப்_பொறுத்துக்_கொள்வதன்_சிறப்பு: இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவரை சோதனைகளுக்கு உள்ளாக்குகிறான்." (நூல்: புகாரி). நோய்வாய்ப்படும் போது பொறுமையாக இருப்பது பாவங்களை உதிர்த்து நன்மையைக் கூட்டுகிறது.
#வலிப்பு_நோய்_வந்த_பெண்ணின்_வரலாறு: அத்தாஃ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், "சொர்க்கவாசியான ஒரு பெண்ணை உங்களுக்குக் காட்டட்டுமா?" என்று கேட்டு, கறுப்பு நிறப் பெண்மணி ஒருவரைக் காட்டினார்கள். அந்தப் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு வலிப்பு நோய் ஏற்படுகிறது. அப்போது என் ஆடைகள் விலகி விடுகின்றன. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ விரும்பினால் பொறுமையாக இருக்கலாம், உனக்குச் சொர்க்கம் உண்டு. நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்க அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்" என்று கூறினார்கள். உடனே அந்தப் பெண்மணி, "நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், ஆடை விலகாமல் இருக்க பிரார்த்தியுங்கள்" என்றார். நபி (ஸல்) அவர்களும் அவ்வாறே பிரார்த்தித்தார்கள். (நூல்: புகாரி: 5652, முஸ்லிம்).
#முடிவுரை_சுருக்கம்:
இன்று நாம் அடையும் துன்பங்கள் அனைத்தும் நம் கைகளால் நாமே தேடிக் கொண்டவை ஆகும். இன்று உலகளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி, நம்மை—முஸ்லிம்களைக் கொலை செய்கிறார்கள் என்றால் இறைவன் அதைப் பார்க்காமல் இல்லை. அநீதி நிறைந்த, பாவங்கள் செய்யக்கூடிய இந்த உலகத்தில் வாழ்வதை விட, இறைமறுப்பாளர்கள் செய்யும் கொடுமையின் காரணமாக, முஸ்லிம்கள் அதனைப் பொறுத்துக் கொண்டால் நமக்குச் சுவனம் (சொர்க்கம்) பரிசாகக் கிடைக்கிறது.
ஏனென்றால், இன்றைய உலகில் நாம் நன்மைகள் செய்து சொர்க்கம் புகுவது என்பது கடினமாக உள்ளது. பிறர் செய்யும் தீமைகளைப் பொறுத்துக் கொண்டு இறைவனிடம் வேண்டுவதும், அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்தால் நம்மை அவர்கள் கொடுமை செய்கிறார்கள் என்பதால் இறைவன் நமக்குச் சுவனம் வழங்க வாய்ப்புகள் மிக அதிகம்.
முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநீதிகளை இறைவன் பார்க்காமல் இல்லை. நாம் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்குக் கொடிய நரக நெருப்பு காத்துக் கொண்டிருக்கிறது. பொறுத்திருங்கள், இறைவனின் உதவி நிச்சயம் வரும்.