24/04/2026
ஏழு ஆண்டுகளாக வெள்ளாளன்விளையில் “கல்லூரி கட்டப் போகிறோம்” என்று சொல்லி பணம் வசூலித்தது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.
இந்த பணம் வெளிநாடுகளில் இருப்பவர்களிடமிருந்து மட்டும் இல்லை —
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வேலை பார்க்கும் நம் ஊர் மக்களிடமிருந்தும்,
மற்ற மாநிலங்களில் இருக்கும் மக்களிடமிருந்தும் கூட சேகரிக்கப்பட்டது.
ஆனா இன்று வரை அந்த கல்லூரி முழுமையாக கட்டப்படவில்லை.
👉 இந்த கோடிக்கணக்கான பணம் எங்கே போனது?
👉 யார் கணக்குத் தரப் போகிறார்கள்?
👉 ஏன் இதுவரை எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை?
மேலும், வெள்ளாளன்விளையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு நிர்வாக உறுப்பினரும் இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உடையவர்கள்.
அவர்கள் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களா இல்லையா என்பது வேறு விஷயம் —
ஆனால் மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்திற்கான கணக்கு கேட்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கடமை.
முதலில் நம்ம ஊருக்குள்ள நடந்த விஷயத்துக்கு நாமே நியாயம் கேட்கணும்.
அதுக்கு முன்பாகவே “அரசு ஊழல்” என்று கத்துறது எந்த நியாயம்?
உண்மையா நீங்க ஊழலுக்கு எதிரானவர்கள் என்றால்,
முதலில் நம்ம ஊர்ல நடந்த விஷயத்துக்கு பதில் கேளுங்கள்.
கணக்கு காட்டுங்கள்.
பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள்.
உண்மை வெளிவரட்டும்.
மௌனமாக இருப்பது கூட ஒரு தவறு.