06/06/2026
அன்னையின் நாக்கு செம்பருத்தி பூ போல சிவந்து இருக்கும். சிவந்த நாக்கு கொண்டு நமக்கு சிறப்பான வாக்கு வன்மையை தருகிறாள்.
" தாயே! உன்னுடைய நாவானது உன் பதியாகிய பரமசிவனின் மங்களகரமான கதைகளை இடைவிடாமல் எந்நேரமும் திரும்பத் திரும்ப மந்த்ர ஜபத்தைப் போலச் சொல்லி வருவதால் செம்பருத்திப் பூவைப் போலச் சிவந்து காணப்படுகிறது. அந்த நாக்கின் நுனியில் சரஸ்வதி தேவி வசிக்கின்ற காரணத்தால் தான், தெளிவான ஸ்படிகம் போன்று வெண்மையாய்க் காணப்படும் சரஸ்வதியின் திருமேனிகூட, மாணிக்கத்தைப் போல் சிவந்து மாறிக் காணப்படுகிறது." என்று பாடுகிறார் சங்கரர்.
அவிஶ்ராந்தம் பத்யுர் குணகண கதாம்ரேடனஜபா
ஜபாபுஷ்பச்சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா
_ ஸௌந்தர்யலஹரீ 64
முத்தாரம்பிகையை தியானிப்போம் ! அவள் அருளால் சிறந்த வாக்குவன்மையும் கவித்துவமும் பெறுவோம் !
🌺🌺🌺🌺🌺�