25/07/2021
இலுப்பை மரங்களை அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது நமது கடமை.
அகன்ற, நீண்ட இலைகளைக்கொண்ட வகை, தென் இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் உள்ளது. இதன் தாயகம் இந்தியா. இலுப்பை மரமானது மேகக்கூட்டங்களை வரச்செய்து மழையைத் தரும் குணம் கொண்டது. இலுப்பை தமிழகம் தவிர நேபாளம், இலங்கை மற்றும் மியான்மரிலும் காணப்படுகிறது. நம் நாட்டில், ஜார்க்கண்ட், குஜராத், மத்தியப்பிரதேசம், பீகார், ஒடிசா, கேரளாவிலும் அதிக அளவில் இருக்கின்றன. இது சப்போட்டா மரக் குடும்ப வகையைச் சேர்ந்தது.
உலகில் முதலில் மதிக்கப்பட வேண்டியது மரங்கள்தான். மனிதன் கொடுக்கும் இடர்பாடுகளை எல்லாம் சுத்தப்படுத்தி மழையைக் கொண்டு வரும் அற்புத படைப்பு அவைதாம். ஆனால், அலட்சியத்தால் அவற்றை நாம் கண்டும்காணாமல் விட்டுவிட்டோம். இதனால் நிறைய பாரம்பர்ய மரங்கள் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தின் பாரம்பர்ய மரங்களில் ஒன்றான இலுப்பை மரமும் இப்போது அழிவின் விளிம்பில் சிக்கியிருக்கிறது. 1950-ம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் 30,000-க்கும் மேற்பட்ட மரங்கள் இருந்திருக்கின்றன. ஆனால், 2015-ம் ஆண்டுக் கணக்கின்படி 10.000-க்கும் குறைவான மரங்களே இருக்கின்றன.
இலுப்பை மரங்களை அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது நமது கடமை.
இலுப்பை மரம் வெப்ப மண்டல தாவர வகையைச் சேர்ந்தது. வறண்ட நிலங்களிலும் எளிதாக நிலைத்து நின்று வளரக்கூடியது. இலுப்பையின் ஆயுட்காலம் நூறு ஆண்டுகளுக்கும் அதிகமானது. சுமார் அறுபது அடிக்கும் மேல் வளரக்கூடியது. அதிகமான மருத்துவ குணங்களையும் கொண்ட தாவரம். இதன் இலை, பூ, விதை, பட்டை ஆகிய அனைத்தும் மருத்துவக் குணங்களைக் கொண்டவை. சங்க காலம் முதல் இன்று வரை மருத்துவத்துக்காக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாம்புக்கடி, வாத நோய், சர்க்கரை வியாதி, சளி, இருமல், மூலநோய், வயிற்றுப் புண், சுவாசக் கோளாறு, காயம் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலுப்பைப் பூ ஊறுகாய் காச நோய்க்கு அருமருந்தாகும். இலுப்பை எண்ணெய் ஒரு சிறந்த வலி நிவாரணியும் கூட, சமையலுக்கும் சிறந்த எண்ணெய்யாகப் பயன்படுகிறது.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை' என்ற பழமொழியும் இலுப்பையின் அவசியத்தை உணர்த்துகிறது.
நன்கு விளைந்த ஒரு மரத்திலிருந்து வருடத்துக்கு 200 கிலோ முதல் 300 கிலோ வரை இலுப்பைப் பூவை எடுக்கலாம். 200 கிலோ வரை இலுப்பை விதையும் கிடைக்கும். ஒரு கிலோ விதையிலிருந்து 300 மி.லி எண்ணெய் எடுக்கலாம். இதுவே ஒரு டன் இலுப்பைப் பூவிலிருந்து 700 கிலோ சர்க்கரை எடுக்கலாம். ஒரு மரத்தில் கிடைக்கும் 200 கிலோ பூவிலிருந்