புனிதர்கள் உலகம்

புனிதர்கள் உலகம் செபிப்போம் ! செழிப்போம் !!

கத்தோலிக்கத் திருச்சபையில் தூய்மையான வாழ்வும், தியாக உள்ளமும், அர்ப்பணிப்பும் தன்னகத்தே கொண்டு கற்பு நெறியுடன் வாழ்ந்து, சோதனைகளிலும், துன்பவேளைகளிலும் தளராத இறைனம்பிக்கையுடன் திகழ்ந்தவர்களைத்தான் திருச்சபை புனிதர்களாக உயர்த்துகிறது. இறைவனோடு ஒன்றித்திருக்கும் அப்புனிதர்களிடம் நாம் விசுவாச பிரமாணத்தின்படி நமது தேவைகளுக்காக இறைவனிடம் பரிந்துரைக்கச் சொல்லி செபிக்க வேண்டும். அவ்வாறு செபிக்க உதவியாக ப

ாதுகாவலர்களாக உள்ள புனிதர்களின் குறிப்பும், அவர்கள் எதற்க்கெல்லாம் பாதுகாவலர்களாக உள்ளனர் என்பதையும் சுருக்கமாக சொல்லிடுருக்கிறேன். மேலும் அந்தந்த புனிதர்களின் திருவிழா நாட்களையும்.அவர்கள் வாழ்ந்த காலத்தையும் குறிப்பிட்டுள்ளேன். செபிப்போம் ! செழிப்போம் !!

20/09/2020
*NEW PLAY LIST* இதோ உங்களுக்காக மொத்தம் *23* பாடல்கள். *எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள்*. உள்ளம் உருக்கும்  கிறிஸ்துவ பக்த...
17/08/2020

*NEW PLAY LIST*
இதோ உங்களுக்காக
மொத்தம் *23* பாடல்கள்.
*எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள்*.
உள்ளம் உருக்கும்
கிறிஸ்துவ பக்தி பாடல்கள்.

*பயணம் செய்யும் போது கேட்கலாம்*......

*நவநாள் மற்றும் விழாக்காலங்களில் கேட்டு மகிழலாம்*....

*வீட்டு விசேஷங்களில் பயன்படுத்தலாம்*..

*வீட்டு வேலை செய்யும்போது கேட்டுக்கொண்டே வேலை செய்யலாம்*....

*தூங்கும் முன் கேட்கலாம்*....

நண்பர்களுக்கும் இந்த பாடல் தொகுப்பை share செய்து பரிசளியுங்கள்.
💐💐💐💐💐💐💐💐💐

*SUPER HIT SONGS COLLECTION.*
🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸
1.நான் சிறு மூங்கில்தான் என் இறைவா.

2. ஒருகோடி பாடல்கள் நான் பாடுவேன்.

3. உம்மை நான் நேசிக்கின்றேன் இறைவா இறைவா

4. தாயாக அன்பு செய்யும் என் உயிர் நீதான் ஐயா
5. உன் நினைவே என்னை ஆளுதய்யா.

6. எனில் வாரும் என் இயேசுவே.

7. நீ செய்த நன்மை நினைக்கின்றேன்.

8. அஞ்சாதே ஆண்டவர் துணை இருக்க

9. உனக்காகவே நான் வாழுவேன்.

10. இசை ஒன்று இசைக்கின்றேன் இறைவா.

11. என் வாழ்வில் எல்லாமே இயேசுதான்.

12. இயேசுவே என்னும் நாமம் பேசுகின்றபோது.

13. ஆண்டவரே வானளவு உயர்ந்து உள்ளது உன் பேரன்பு.

14. தெய்வம் தரிசனம் தேடும் மனம் தினம்.

15. நீயே எமது வழி நீயே எமது ஒளி

16. என் இயேசுவே உன்னை நான் மறவேன்

17. நம்மை அன்பு செய்யும் இதயம்

18. இயேசுவின் மதுர திருஇருதயமே.

19. இயேசுவின் இருதயமே

20. உன் திரு யாழில் என் இறைவா.

21. ஆண்டவர் எனது நல்லாயன்

22. எல்லாம் உமக்காக.

23. இன்பக் கனவு நான் கண்டேன்.


https://www.youtube.com/playlist?list=PLZCJopmuQwi0Jd76_0osZNrBZMTbi6uhq
YOUTUBE.COM

Tamil Christian Songs collection

1. nan siru moongilthan en iraiva 2. oru kodi padalgal nan paduven 3. ummai nan nesikiren iraiva iraiva 4. thayaga anbu seiyum ennuyir neethanaya 5. un ninai...

27/07/2016

சிலுவை அடையாளத்தை நெற்றியிலும் வாயிலும் மார்பிலும் வரைந்து,திருச்சிலுவை அடையாள செபம் சொல்கிறோம்.

"அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென்."

எதற்காக நாம் சிலுவை அடையாளத்தை வரைகிறோம் என்பது தெரியுமா?

1)நெற்றியில் சிலுவை வரைவது

இறைவார்த்தையைக் குறித்து மனிதருக்கு முன்பாக வெட்கப்படுகிறதில்லையென்று காட்டும்படிக்கும்,

ஆங்காரம்,கோபம்,மோகம் முதலியவைகளைப் பற்றிய கெட்ட நினைவுகள் நம் புத்தியில் உண்டாகாமல், சர்வேசுரனைப் பற்றிய நல்ல எண்ணங்கள் நமது புத்தியில் ஏற்படும்படிக்கும் நெற்றியில் சிலுவை வரைந்து கொள்கிறோம்.

2)வாயில் சிலுவை வரைவது

இறைவார்த்தைக்கு தைரியத்தோடு சாட்சியம் சொல்லுவேன் என்று காட்டவும்,

வாயால் பொய்,புரட்டு,தீய பேச்சு முதலிய பாவங்களைக் கட்டிக் கொள்ளாமல், ஜெபத்தாலும், தூய்மையான வார்த்தைகளாலும் சர்வேசுரனைத் தோத்தரிக்கும் படிக்கான ஆசீர்வாதம் நமக்கு உண்டாகும்படிக்கும் வாயில் சிலுவை வரைந்து கொள்கிறோம்.

3)மார்பில் சிலுவை வரைவது

மன உறுதியோடு இறைவார்த்தைகளை அனுசரிப்போம் என்று காட்டவும்,

நமது இருதயத்தில் கெட்ட ஆசை,பகை,வைராக்கியம் முதலிய பாவங்கள் உண்டாகாமல்,சர்வேசுரனுடைய சிநேகம் நமக்குள் அதிகரிக்கும்படியாகவும்,மார்பில் சிலுவை வரைந்து கொள்கிறோம்.

26/04/2016
24/11/2015

இன்றைய புனிதர்
2015-11-24
மறைசாட்சி கிறிசோகோனுஸ் Chrysogonus

பிறப்பு
3 ஆம் நூற்றாண்டு,
உரோம், இத்தாலி

இறப்பு
303
அக்குயிலேயா Aquileja, இத்தாலி

இவர் ஓர் சிறந்த கத்தோலிக்கர். ஏறக்குறைய 300 ஆம் ஆண்டு அரசி அனஸ்தாசியாவின் (Anastasia) ஆசிரியராக பணியாற்றினார். இவர் எப்போதும் கிறிஸ்துவை பின்பற்றி வாழ்ந்தார். இதனால் தியோக்ளேசியன் (Diokletion) என்ற அரசனால் வதைக்கப்பட்டார். பின்னர் அக்குயிலேயாவிற்கு பிடித்துகொண்டு போகப்பட்டார். அங்கு அவரின் நம்பிக்கையை அரசன் தியோக்ளேசியன் சோதித்தார். கிறிஸ்துவை பின்பற்ற தடைவிதித்தான். ஆனால் அனைத்து தடைகளையும் மீறி கிறிசோனோலுஸ் கிறிஸ்துவை பின்பற்றினார். இதனால் அரசன் சினங்கொண்டு அவரை கொன்றான்

செபம்:
எங்கள் தாயும் தந்தையுமான இறைவ! உம்மை பின்பற்றியதற்காக தன் உயிரை ஈந்த கிறிசோகோனுஸ்சின் பக்தியையும், விசுவாசத்தையும் நாங்களும் பின்பற்றி வாழ எமக்கு உதவி செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

• லூட்டிக் நகர் ஆயர் ஆல்பர்ட் Albert von Lüttich
பிறப்பு: 1160 பிரபாண்ட் Brabant, பெல்ஜியம்
இறப்பு: 24 நவம்பர் 1192 லூட்டிக்Lüttich, பெல்ஜியம்

• துறவி மரியா சாலா Maria Sala
பிறப்பு: 21 ஏப்ரல் 1829 லேசேLecce, இத்தாலி
இறப்பு: 24 நவம்பர் 1891, மிலான் Milan, இத்தாலி

29/06/2015
13/05/2015
11/03/2015
† இன்றைய புனிதர் †( ஜனவரி 6 )✠ புனித பெர்கன் நகர் வில்ட்ரூட் ✠( St. Wiltrud of Bergen )துறவி :பிறப்பு : 10 ஆம் நூற்றாண்ட...
07/01/2015

† இன்றைய புனிதர் †
( ஜனவரி 6 )
✠ புனித பெர்கன் நகர் வில்ட்ரூட் ✠
( St. Wiltrud of Bergen )
துறவி :
பிறப்பு : 10 ஆம் நூற்றாண்டு
இறப்பு : 6 ஜனவரி 995
பெர்கன் Bergen, பவேரியா Germany
நினைவுத் திருநாள் : ஜனவரி 6
புனித வில்ட்ரூட், நொய்பூர்க் Neuburg
என்ற ஊரில் டோனவ் Donau நதியோரம்
பெனடிக்டீனர் துறவற இல்லம்
ஒன்றை நிறுவினார். இவர்
பவேரியா நாட்டு அரசர்
பெர்த்ஹோல்டு Berthold என்பவருடன்
திருமணம் செய்து வாழ்ந்தார்.
தன் கணவரின் இறப்பிற்குப் பின் அரசர் 2 ஆம்
ஓட்டோ Otto II என்பவரின் துணையுடன் தன்
சொத்துக்கள் அனைத்தையும் விற்று துறவற
மடங்களை எழுப்பினார். அதன்பிறகு பணம்,
பொருள், பதவி, சொந்தம் என
அனைத்தையும் துறந்து துறவியானார்.
இறையன்னையின்மீது மிகுந்த
பக்தி கொண்டு வாழ்ந்தார். தன்
சொந்த முயற்சியால் துறவற மடம்
ஒன்றை நிறுவி அதில் தானே தலைமைப்
பொறுப்பேற்று வழி நடத்தினார்.
தன்னுடன் வாழ்ந்த மற்ற துறவியர்களுக்கு
தாய்க்கு தாயாய் இருந்து வழிகாட்டினார்.
செபம் :
அன்பை அளவில்லாமல் வாரி வழங்குபவரே எம்
தலைவா! புனித வில்ட்ரூட்டைப் போல எளிமையான
வாழ்வை தெரிந்துக் கொள்ள
எமக்கும் வழிகாட்டும். அன்னையாம்
கன்னி மரியாளை எங்களின் தாயாக
ஏற்று வாழ வரம் தாரும். அன்னை மரியின்
ஆசீரை நாங்கள் என்றும் பெற்று வாழ
உமதருள்
தந்து காத்திடுமாறு இறைவா உம்மை வேண்டுகின்றோம்,
ஆமென்!

Address

Thuckalay

Website

Alerts

Be the first to know and let us send you an email when புனிதர்கள் உலகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share