Pothakalanvilai Thirukalyanamatha

Pothakalanvilai Thirukalyanamatha Our beloved Thirukalyana Matha was born to the parents of swaikin and Anne in the clan of David.

02/03/2022
புனித பரலோக மாதா திருத்தலம் காமநாயக்கன்பட்டி திருவிழா 2021 குறித்து பாளையங்கோட்டை மறைமாவட்டம் மேதகு ஆயர் ச.அந்தோணிசாமி அ...
04/08/2021

புனித பரலோக மாதா திருத்தலம் காமநாயக்கன்பட்டி திருவிழா 2021 குறித்து பாளையங்கோட்டை மறைமாவட்டம் மேதகு ஆயர் ச.அந்தோணிசாமி அவர்களின் அறிவிப்பு

பொது அறிவிப்பு புனித பரலோக மாதா திருத்தலம்காமநாயக்கன்பட்டி கொரோனா நோய் தொற்றின் காரணமாக மத்திய, மாநில அரசுகள.....

நேரலை : அருட்தந்தை ம அருள் அம்புரோஸ் 5 ஆண்டுகள் பணி நிறைவு நன்றி திருப்பலி . அருள்நிறை சகாய அன்னை ஆலயம், ஜவகர் நகர் பங்க...
18/07/2021

நேரலை : அருட்தந்தை ம அருள் அம்புரோஸ் 5 ஆண்டுகள் பணி நிறைவு நன்றி திருப்பலி . அருள்நிறை சகாய அன்னை ஆலயம், ஜவகர் நகர் பங்கு, பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

ஆண்ட்ராய்ட் செயலி பதிவிறக்கம் : நேரலைகள் மற்று 24/7 கத்தோலிக்க வானொலி : https://bit.ly/3mcXiq1
முகநூலில் பின்தொடர : https://www.facebook.com/MyCatholicCh...
வலைத்தளம் : http://mycatholicchurch.com/

அருட்தந்தை ம அருள் அம்புரோஸ் 5 ஆண்டுகள் பணி நிறைவு நன்றி திருப்பலி. அருள்நிறை சகாய அன்னை ஆலயம், ஜவகர் நகர் பங்கு, ...

பகைவரை அன்பு செய்வதால் நமக்கு என்ன கிடைக்கும்?  அருட்தந்தை ம அருள் அம்புரோசுWhat do we get for loving the enemy? Fr Arul...
14/07/2021

பகைவரை அன்பு செய்வதால் நமக்கு என்ன கிடைக்கும்? அருட்தந்தை ம அருள் அம்புரோசு
What do we get for loving the enemy? Fr Arul Ambrose
நேரலையில் இணைய ... (Subscribe) : https://bit.ly/3hVoFFH

ஆண்ட்ராய்ட் செயலி பதிவிறக்கம் : நேரலைகள் மற்று 24/7 கத்தோலிக்க வானொலி : https://bit.ly/3mcXiq1

முகநூலில் பின்தொடர : https://www.facebook.com/MyCatholicChurchTamil

வலைத்தளம் : http://mycatholicchurch.com/

My Catholic Church | Matha TV | Jesus TV | மறையுரை | Sermon | பிரசங்கம் | எமது கத்தோலிக்க திருச்சபை | RC Church

#மறையுரை #தமிழ்_மறையுரைகள் #பிரசங்கம்

நோன்பு என்பது நம்மை கொடுப்பதற்காக.. அருட்தந்தை ம அருள் அம்புரோசு Fasting is not for us to grieve. Rather to give. Fr Arul Ambroseநேரலையில் இணைய ... (Subscrib...

நேரலையில் இணைய ... (Subscribe) : https://bit.ly/3hVoFFHஆண்ட்ராய்ட் செயலி : நேரலைகள் மற்று 24/7 கத்தோலிக்க வானொலி : https...
13/06/2021

நேரலையில் இணைய ... (Subscribe) : https://bit.ly/3hVoFFH

ஆண்ட்ராய்ட் செயலி : நேரலைகள் மற்று 24/7 கத்தோலிக்க வானொலி : https://bit.ly/3mcXiq1

நேரலையில் இணைய ... (Subscribe) : https://bit.ly/3hVoFFHஆண்ட்ராய்ட் செயலி : நேரலைகள் மற்று 24/7 கத்தோலிக்க வானொலி : https://bit.ly/3mcXiq1நேரலை நேரங்கள் : த....

இன்றைய புனிதர்சிரியன் புனித எஃப்ரெம் (புனித எபிரேம்) 09-சூன்-2021 | St Ephrem The Syrian 9th June 2021அனைத்து புனிதர்கள்...
08/06/2021

இன்றைய புனிதர்
சிரியன் புனித எஃப்ரெம் (புனித எபிரேம்) 09-சூன்-2021 | St Ephrem The Syrian 9th June 2021
அனைத்து புனிதர்கள் விபரங்கள் பெற : (Subscribe) : https://bit.ly/3hVoFFH

இதனைஉங்கள் கிறிஸ்தவ நண்பர்களுக்கு பகிர வேண்டுகிறோம்.
நன்றி!

சிரியன் புனித எஃப்ரெம் (புனித எபிரேம்) 09-சூன் | st ephrem the syrian 9th June பிறப்பு:சுமார்.306, நுசாய்பின் (நிசிபிஸ்), துருக்கி.இறப்பு:...

நேரலையில் இணைய ... (Subscribe) : https://bit.ly/3hVoFFHஆண்ட்ராய்ட் செயலி : நேரலைகள் மற்று 24/7 கத்தோலிக்க வானொலி : https...
30/05/2021

நேரலையில் இணைய ... (Subscribe) : https://bit.ly/3hVoFFH
ஆண்ட்ராய்ட் செயலி : நேரலைகள் மற்று 24/7 கத்தோலிக்க வானொலி : https://bit.ly/3mcXiq1
நேரலை நேரங்கள் : தினமும் மாலை : 6:30 மணி மற்றும் ஞாயிறு காலை : 8:00 மணி சகாய மாதா ஆலயம், ஜவகர்நகர், பாளையங்கோட்டை
#திருப்பலி_நேரலை

நேரலையில் இணைய ... (Subscribe) : https://bit.ly/3hVoFFHஆண்ட்ராய்ட் செயலி : நேரலைகள் மற்று 24/7 கத்தோலிக்க வானொலி : https://bit.ly/3mcXiq1நேரலை நேரங்கள் : த....

01/01/2021

நேர்மை நாயகன் திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களின் புத்தாண்டு 2021 வாழ்த்துச் செய்தி

27/12/2020

https://bit.ly/3mcXiq1
28.12.2020 திங்கட்கிழமை.
புனித மாசில்லாக் குழந்தைகள் - மறைச்சாட்சியர் விழா
===========
முதல் வாசகம்
===========
திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5 - 2: 2

சகோதரர் சகோதரிகளே, நாங்கள் இயேசு கிறிஸ்துவிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்கு அறிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்து கொண்டு, அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம்; உண்மைக்கேற்ப வாழாதவர் ஆவோம். மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல் நாம் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டிருப்போம். மேலும் அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்தும். ஆனால் பாவம் நம்மிடம் இல்லை என்போமென்றால் நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வோம்; உண்மையும் நம்மிடம் இராது. மாறாக நம் பாவங்களை நாம் ஒப்புக்கொள்வோம் என்றால் கடவுள் நம் பாவங்களை மன்னித்து, குற்றம் அனைத்திலிருந்தும் நம்மைத் தூய்மைப்படுத்துவார். ஏனெனில் அவர் நம்பிக்கைக்குரியவர், நேர்மையுள்ளவர். நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யர் ஆக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும். என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

=============
பதிலுரைப் பாடல்
============
திபா 124: 2-3. 4-5. 7-8

பல்லவி: வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவை போல் ஆனோம்.

2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,
3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். -பல்லவி

4 அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்;
பெருவெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;
5 கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். -பல்லவி

7b கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம்.
8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!
விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! -பல்லவி

===============
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இறைவா, உம்மை வாழ்த்துகிறோம், ஆண்டவர் நீரெனப் போற்றுகிறோம்; மறைச்சாட்சியரின் வெண்குழுவும் நிறைவாய் உம்மைப் போற்றிடுமே. அல்லேலூயா.
மத்தேயு 2:13-18

மாசில்லா குழந்தைகள் திருநாள்
===========
நற்செய்தி வாசகம்
===========
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-18

ஞானிகள் திரும்பிச் சென்றபின் ஆண்டவருடைய தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றி, ``நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடிச் செல்லும். நான் உமக்குச் சொல்லும் வரை அங்கேயே இரும். ஏனெனில் குழந்தையை ஏரோது கொல்வதற்காகத் தேடப்போகிறான்'' என்றார். யோசேப்பு எழுந்து, குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு, இரவிலேயே எகிப்துக்குப் புறப்பட்டுச் சென்றார்; ஏரோது இறக்கும் வரை அங்கேயே இருந்தார். இவ்வாறு, ``எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறியது. ஞானிகள் தன்னை ஏமாற்றியதை ஏரோது கண்டு மிகுந்த சீற்றம் கொண்டான். அவன் அவர்களிடம் கருத்தாய்க் கேட்டறிந்ததற்கு ஏற்பக் காலத்தைக் கணக்கிட்டுப் பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான். அப்பொழுது ``ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; இராகேல் தம் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை'' என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது நிறைவேறியது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

† இன்றைய திருவிழா †
(டிசம்பர் 28)

✠ மாசில்லா குழந்தைகள் படுகொலை ✠
(Massacre of the Innocents)

மறைசாட்சிகள்:
(Martyrs)

நினைவுத் திருநாள்: டிசம்பர் 28

மாசில்லா குழந்தைகள் படுகொலை என்பது, திருவிவிலியத்தின்படி, “யூதர்களின் அரசனான” (King of the Jews) “முதலாம் ஏரோது”, (Herod the Great) பெத்லகேமில் (Bethlehem) இருந்த குழந்தைகளை கொன்ற நிகழ்வினைக் குறிக்கும். மத்தேயு நற்செய்தியின்படி, ஞானிகள் தன்னை ஏமாற்றியதை கண்டு மிகுந்த சீற்றம் கொண்ட ஏரோது, அவர்களிடம் கருத்தைக் கேட்டறிந்ததற்கேற்ப காலத்தைக் கணக்கிட்டு, “பெத்லகேமிலும்” (Bethlehem) அதன் சுற்றுப்புறமெங்கும் ஆட்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்.

அப்பொழுது “ராமாவிலே” (Ramah) ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது; “ராச்சேல்” (Rachel) தன் குழந்தைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்; ஆறுதல் பெற அவர் மறுக்கிறார்; ஏனெனில் அவர் குழந்தைகள் அவரோடு இல்லை என்று இறைவாக்கினர் “எரேமியா” (Jeremiah) உரைத்தது நிறைவேறியது.

கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை விவிலியத்தில் குறிப்பிடப்படவில்லை எனினும், அச்சமயத்தில் ஏரோது அரசன் 14 ஆயிரம் சிறுவர்களையும் குழந்தைகளையும் கொன்றான் என கிரேக்க மரபு கூறுகிறது. ஆனால், சிரியா நாட்டினரின் நம்பிக்கையின்படி இவ்வாறு கொல்லப்பட்ட சிறுவர்கள் 64 ஆயிரம் எனவும், மத்தியகால எழுத்தாளர்களின் கூற்றுப்படி இவ்வாறு கொல்லப்பட்ட சிறுவர்கள் ஒரு இலட்சத்து 44 ஆயிரம் எனவும் சொல்லப்படுகின்றது. இருந்தபோதிலும், நவீன எழுத்தாளர்கள் இந்த எண்ணிக்கையைக் குறைத்தே சொல்கின்றனர். பெத்லகேம் ஏறக்குறைய ஆயிரம் பேரைக் கொண்ட சிறிய நகரம், அதனால் அச்சமயத்தில் ஏறக்குறைய இருபது பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

விவிலிய சான்று:
மாசில்லா குழந்தைகளின் படுகொலை, மத்தேயு நற்செய்தி 2:16-18ல் (Gospel of Matthew (2:16-18) கூறப்பட்டுள்ளன.

கொல்லப்பட்ட இக்குழந்தைகள் அனைவரும் யூதக் குழந்தைகளாய் இருப்பினும், அவர்கள் யாவரும் கிறிஸ்தவ மறைசாட்சிகளாக ஏற்கப்படுகின்றனர்.

27/12/2020

https://bit.ly/3mcXiq1
இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம் விழா 27 12 2020
=============
முதல் வாசகம்
==============
உனக்குப் பிறப்பவனே உனக்குப்பின் உரிமையாளன் ஆவான்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-6; 21: 1-3

ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: “ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்."

அப்பொழுது ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப் பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்! நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப்போகிறான்” என்றார். அதற்கு மறுமொழியாக, “இவன் உனக்குப் பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப் பின் உரிமையாளன் ஆவான்” என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.

ஆண்டவர் தாம் கூறியிருந்தபடி சாராவைக் கண்ணோக்கினார். ஆண்டவர் தம் வாக்குறுதிக்கேற்ப சாராவுக்குச் செய்தருளினார். கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாரா கருத்தாங்கி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆபிரகாம் தமக்குப் பிறந்த, சாரா தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு ‘ஈசாக்கு’ என்று பெயரிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

===========
பதிலுரைப் பாடல்
===========
திபா 105: 1-2. 3-4. 5-6. 8-9 . (பல்லவி: 8a)

பல்லவி: ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொண்டுள்ளார்.

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். 2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! - பல்லவி

3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! 4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! - பல்லவி

5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். 6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! - பல்லவி

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். - பல்லவி

===============
இரண்டாம் வாசகம்
===============
ஆபிரகாம், சாரா, ஈசாக்கு ஆகியோரின் நம்பிக்கை.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 8, 11-12, 17-19

ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார்.

ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிட மிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.

ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். “ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்” என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன் வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.

ஆண்டவரின் அருள்வாக்கு.

=================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
==================
எபி 1: 1-2

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

===========
நற்செய்தி வாசகம்
=============
பாலன் வளர்ந்து ஞானம் நிறைந்தவராய் இருந்தார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். “ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை” என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,

“ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்றார்.

குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.

ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.

ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அல்லது
==========================

குறுகிய வாசகம்

பாலன் வளர்ந்து ஞானம் நிறைந்தவராய் இருந்தார்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22, 39-40

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.

ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

================
இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம் விழா 27 12 2020
================

திருப்பலி முன்னுரை

ஆண்டின் இறுதி வாரம் இது. வழிபாட்டுக் கொண்டாட்டத்திற்கு வந்தள்ள உங்கள் யாவரையும் அன்புடனே வரவேற்கின்றேன்.

திருக்குடும்பத் திருவிழாவை கொண்டாட அழைப்பு பெற்று இருக்கின்றோம்.

நம்முடைய குடும்பங்களுக்கு இறைவன் இந்த ஆண்டு முழுவதும் செய்த நல்ல பல மேலான காரியங்களுக்கு நன்றி கூறுவதோடு, குடும்பத்தை ஓப்புக் கொடுத்து, அவரது ஆசீரை இறைஞ்சுவோம்.

ஆபிரகாம், ஈசாக், சிமியோன், அன்னா இந்த குடும்ப அன்பர்கள் தங்களது வாழ்விலே கொண்டிருந்த நம்பிக்கை, அவர்கள் குடும்பத்தில் பெற்ற நம்பிக்கை தான். வாழ்விலே பெற்ற நம்பிக்கை அவர்களுக்கு நலம் தந்ததோடு, இறைவனது மேலான ஆசீரையும் பெற்றுத் தந்தது.

இன்று குடும்பங்களில், இத்தகைய நம்பிக்கையே விதைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அவநம்பிக்கை மேலோங்குவதாலேயே குடும்பங்கள் சிதைவது அதிகமாகின்றது.

குடும்பங்களில் நம்பிக்கை விதைக்கப்பட, உறவுகள் உறுதிப்படவும், உண்மையான அன்பை பகிரவும், வழிபாட்டுக் கொண்டாட்டங்கள், குடும்ப செபங்கள் அரங்கேறவும் வேண்டும். திருக்குடும்ப விழுமியங்கள் நமதாக வேண்டும் என்ற வேண்டுதலோடு பங்கேற்போம். பயன் பெறுவோம்.

மன்றாட்டுக்கள்:

நன்மையின் நாயகனே இறைவா! திருஅவை குடும்ப உறவோடு தன் எல்லா மக்களையும் ஒருங்கிணைத்து அழைத்துச் செல்ல, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்மையின் நாயகனே இறைவா! நாடு முன்னேற, குடும்பங்கள் ஒன்றிணைந்து செல்வது அவசியமானது என்பதனை உணர்ந்து பயணிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்மையின் நாயகனே இறைவா! இல்லங்கள் இறைவேண்டடலின் இல்லங்களாக அமையவும், முந்தமுந்த உம்மையும், உமது அரசையும் நாடும் இல்லங்காளக வாழ, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்மையின் நாயகனே இறைவா! திருக்குடும்ப பண்புகளும், விழுமியங்களும் எங்களது குடும்பங்களில் பிரதிப்பலிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்மையின் நாயகனே இறைவா! குடும்பங்களில் வாழ்வோர் ஒவ்வொருவரும், பிறருக்கு நம்பிக்கையின் நட்சத்திரமாக விளங்கிட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நன்மையின் நாயகனே இறைவா! குடும்பங்களில் ஓருவர் ஓருவர் நலன் பேணவும், அக்கறையோடு கூடிய அன்பினை விதைத்திடவும், அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Address

Thirukalyanamatha
Thoothukudi
628702

Telephone

04639261230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pothakalanvilai Thirukalyanamatha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share