Thiruvadidharisanam yathra

Thiruvadidharisanam yathra A devotional tour company operates

* Kasi yathra
* Shirdi Yatra
* All dhivya deasam Yatra

06/02/2026

*மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவடி தரிசனம் யாத்திரை பெருமையுடன் வழங்கும் பஞ்ச ஆரண்ய தலங்கள் யாத்திரை...*

*இந்த யாத்திரையில் பரமேஸ்வரன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கும் திருக்கருகாவூர், அவளிநல்லூர், ஹரிதுவாரமங்கலம், ஆலங்குடி ,திரு கொள்ளம்புதூர் ஆகிய ஐந்து சக்தி வாய்ந்த ஆரண்ய சிவ ஷேத்திரம் ஒரே இரவில் தரிசிக்க இருக்கிறோம் .* *மேலும் இந்த தலங்களில் பூசணிக்காயில் இலுப்பை எண்ணெய் ஊற்றி சிகப்பு திரியிட்டு சிறப்பான தீப வழிபாடு செய்கிறோம்.* *மேலும் அந்தந்த தலங்களில் அந்தந்த தலத்திற்குரிய தேவாரப் பதிகங்களை ஒன்றாக பாராயணம் செய்கிறோம். திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் ஒரே நாளில் ஐந்து காலங்களில் வழிபட்ட இந்த ஸ்தலங்களை மகா சிவராத்திரி அன்று பூஜிப்பதன் மூலம் கிடைத்ததற்குரிய பலன்களை பெறலாம். நோய் நீக்கமும் நல்ல லட்சுமி கடாட்சமான வாழ்வும் என்றென்றும் மகிழ்ச்சியும் தரும் சக்தி வாய்ந்த இந்த தலங்களை தரிசிக்க உங்களை திருவடி தரிசனம் அன்போடு அழைக்கிறது.*

*நல்ல வசதியான ஏசி வாகனம்,*
*வசதியான ஏசி ரூம்கள், சுவையான சைவ உணவு என்று ஏற்பாடு செய்திருக்கிறோம்* .

மேலும் விவரங்களுக்கு :
9789196501/8148018501

15/01/2026

ஆன்மீக சுற்றுலா வரலாற்றில் முதன்முறையாக திருவடி தரிசனம் யாத்திரை பெருமையுடன் வழங்கும் சித்தர்கள் உலா...

தமிழகத்தின் ஆதி சித்த புருஷர்கள் 18 பேரில் 14 சித்தர்களை இந்த அற்புதமான யாத்திரையில் நாம் தரிசிக்கிறோம் .

நமது தமிழகத்தில் வாழ்ந்த மிகப் பழமையான சித்தர்கள் மிகுந்த அற்புத செயல்களை செய்து கொண்டிருப்பவர்கள்... நமக்கும் இறைவனுக்கும் இடையே பாலமாக இருந்து இறைவனுடைய அருளை நமக்கு அள்ளித் தந்து கொண்டிருப்பவர்கள்....

தமிழகத்தில் உள்ள மிக பிரசித்தி பெற்ற பழமையான தொன்மையான திருக்கோவில்களில் சித்த பெருமக்கள் சூட்சும ரூபமாக வீற்றிருந்து இறையருளையும் குருவருளையும் நமக்கு அள்ளித் தந்து கொண்டிருக்கிறார்கள்

இந்த திருக்கோயில்களில் உள்ள இறைவனையும் அம்பாளையும் சித்தர்களையும் தரிசிப்பதன் மூலம் நாம் நமது வாழ்வில் வெற்றிகளையும் எப்பொழுதும் மகிழ்ச்சியையும், நல்ல உடல் நலமும், மனநலமும், நோயில்லாத வாழ்வையும் பெறலாம்..
அப்படி தமிழகத்தின் தொன்மையான ஆலயங்களில் வீற்றிருக்கும் 14 சித்தர்களை இந்த யாத்திரையில் நாம் தரிசிக்கப் போகிறோம்..

நல்ல வசதியான ஏசி வாகனம் .,
வசதியான ஏசி ரூம்கள்... சுவையான சைவ உணவு என்று ஏற்பாடு செய்திருக்கிறோம்... இந்த அரிய யாத்திரையில் பங்கு பெற்று எல்லாம் வல்ல இறைவனுடைய அருளையும் சித்தர்களின் குருவருளையும் பெற உங்களை திருவடி தரிசனம் அன்போடு அழைக்கிறது..

மேலும் விவரங்களுக்கு ; 9789196501/8148018501

தேவாதி தேவன்... தெய்வங்களுக்கெல்லாம் ராஜா! 👑 - திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தின் மகா சிறப்புகள்! 🔱✨"ஆரூர் தியாகேசா" என்று ...
09/01/2026

தேவாதி தேவன்... தெய்வங்களுக்கெல்லாம் ராஜா! 👑 - திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தின் மகா சிறப்புகள்! 🔱✨

"ஆரூர் தியாகேசா" என்று அழைக்கும்போதே ஒரு தனி பரவசம் பிறக்கும். "தியாகராஜர்" என்ற பெயருக்கு "கடவுளுக்கெல்லாம் ராஜா" (King of all Gods) என்று பொருள். தேவர்களுக்கெல்லாம் தலைவனாக, சக்கரவர்த்தியாகத் திகழும் அந்தப் பெருமானின் ஆலயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அதிசயங்கள் இதோ:

💎 சிவபெருமான் இங்கே 'சோமாஸ்கந்த' மூர்த்தியாக (சிவன், உமை மற்றும் முருகப்பெருமான் இணைந்த வடிவம்) அருள்பாலிக்கிறார். தியாகராஜர் என்ற திருநாமத்திற்கு ஏற்ப, அனைத்து தெய்வங்களுக்கும் மேலான ராஜாவாக இத்தலத்தில் அவர் வீற்றிருக்கிறார்.

🎭 அஜபா நடனமும்.. திருமுக தரிசனமும்:

தியாகராஜரின் முகம் மற்றும் கைகள் மட்டுமே நமக்குக் காட்சி தரும்; மற்ற உடல் பாகங்கள் கவசங்களால் மறைக்கப்பட்டிருக்கும். இது ஒரு மகா ரகசிய வழிபாடாகும்.

இந்தத் தியாகேசன் வீதி உலா வரும்போது ஆடும் "அஜபா நடனம்" உலகப் புகழ்பெற்றது. இது இறைவனின் மூச்சுக்காற்றினால் ஏற்படும் அசைவைக் குறிக்கும் தத்துவமாகும்.

🏗️ எண்ணிக்கையில் அடங்கா பிரம்மாண்டம்: இந்த ஒரு கோயிலுக்குள் ஓர் ஊரே அடக்கம் என்பது போல இதன் அமைப்பு இருக்கும்: ✅ 9 ராஜகோபுரங்கள் & 80 விமானங்கள் - சிற்பக்கலையின் உச்சம். ✅ 12 பெரிய மதில்கள் & 13 மிகப்பெரிய மண்டபங்கள். ✅ 365 சிவலிங்கங்கள் - வருடத்தின் 365 நாட்களையும் குறிக்கும் அதிசயம். ✅ 15 தீர்த்தக்ணறுகள் & 3 பிரம்மாண்ட பிரகாரங்கள்.

🧘 தவக்கோல அன்னை - கமலாம்பிகை: 51 சக்தி பீடங்களில் ஒன்றான இங்கு, அன்னை கமலாம்பிகை வலது காலை மடித்து வைத்து, இடது காலைத் தொங்கவிட்டு "யோக நிலையில்" அமர்ந்து அருள்பாலிப்பது மிக அரிதான கோலமாகும்.

🌊 ஆழித்தேர் & கமலாலயம்:

ஆழித்தேர்: ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான இது அசைந்து வரும் காட்சி "தேரழகு" எனப் போற்றப்படுகிறது.

கமலாலயம்: கடலைப் போன்ற பரந்து விரிந்த புண்ணியத் தீர்த்தம்.

🎶 இசையும் முக்தியும்: "திருவாரூரில் பிறந்தால் முக்தி" என்பது ஐதீகம். இசை மும்மூர்த்திகளான தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் மூவரும் பிறந்த மண் இது. தேவார மூவர்களாலும் பாடப்பட்ட தலம்.

கடவுள்களுக்கெல்லாம் ராஜாவாகத் திகழும் தியாகேசனின் அருளைப் பெற, வாழ்நாளில் ஒருமுறையாவது திருவாரூர் மண்ணைத் தொழுது வணங்குவோம்! 🙏🚩

யாத்திரை செல்ல விரும்புவோர் :
8148018501/9789196501

08/01/2026

அன்பு திருவடி தரிசனம் குடும்ப உறவுகளே ...
2026 சித்தர்கள் ஆண்டு என்று அகத்தியர் நாடியில் உள்ளது.இந்த 2026 சித்தர்கள் அருள் ஆசியுடன் துவங்குவோம்.
இந்த அற்புதமான சித்தர்கள் யாத்திரையில் பங்கு பெற்று இறை அருளும் குரு அருளும் பெற உங்களை அன்போடு அழைக்கிறோம் .

ஆன்மீக சுற்றுலா வரலாற்றில் முதன்முறையாக திருவடி தரிசனம் யாத்திரை பெருமையுடன் வழங்கும் சித்தர்கள் உலா...தமிழகத்தின் ஆதி ச...
08/01/2026

ஆன்மீக சுற்றுலா வரலாற்றில் முதன்முறையாக திருவடி தரிசனம் யாத்திரை பெருமையுடன் வழங்கும் சித்தர்கள் உலா...

தமிழகத்தின் ஆதி சித்த புருஷர்கள் 18 பேரில் 14 சித்தர்களை இந்த அற்புதமான யாத்திரையில் நாம் தரிசிக்கிறோம் .

நமது தமிழகத்தில் வாழ்ந்த மிகப் பழமையான சித்தர்கள் மிகுந்த அற்புத செயல்களை செய்து கொண்டிருப்பவர்கள்... நமக்கும் இறைவனுக்கும் இடையே பாலமாக இருந்து இறைவனுடைய அருளை நமக்கு அள்ளித் தந்து கொண்டிருப்பவர்கள்....

தமிழகத்தில் உள்ள மிக பிரசித்தி பெற்ற பழமையான தொன்மையான திருக்கோவில்களில் சித்த பெருமக்கள் சூட்சும ரூபமாக வீற்றிருந்து இறையருளையும் குருவருளையும் நமக்கு அள்ளித் தந்து கொண்டிருக்கிறார்கள்

இந்த திருக்கோயில்களில் உள்ள இறைவனையும் அம்பாளையும் சித்தர்களையும் தரிசிப்பதன் மூலம் நாம் நமது வாழ்வில் வெற்றிகளையும் எப்பொழுதும் மகிழ்ச்சியையும், நல்ல உடல் நலமும், மனநலமும், நோயில்லாத வாழ்வையும் பெறலாம்..
அப்படி தமிழகத்தின் தொன்மையான ஆலயங்களில் வீற்றிருக்கும் 14 சித்தர்களை இந்த யாத்திரையில் நாம் தரிசிக்கப் போகிறோம்..

நல்ல வசதியான ஏசி வாகனம் .,
வசதியான ஏசி ரூம்கள்... சுவையான சைவ உணவு என்று ஏற்பாடு செய்திருக்கிறோம்... இந்த அரிய யாத்திரையில் பங்கு பெற்று எல்லாம் வல்ல இறைவனுடைய அருளையும் சித்தர்களின் குருவருளையும் பெற உங்களை திருவடி தரிசனம் அன்போடு அழைக்கிறது..

மேலும் விவரங்களுக்கு ; 8148018501/9789196501

*அன்புள்ள வாடிக்கையாளர்களே🙏🙏🙏 *வணக்கம்....* *கும்பகோணம் அருகே நவகிரக கோவில்களில் தலைமை கோயிலான சூரியனார் கோவிலில் நமது த...
31/10/2025

*அன்புள்ள வாடிக்கையாளர்களே🙏🙏🙏

*வணக்கம்....*

*கும்பகோணம் அருகே நவகிரக கோவில்களில் தலைமை கோயிலான சூரியனார் கோவிலில் நமது துணை நிறுவனமான திருவடி லோகம் பிரைவேட் லிமிடெட் சார்பாக செந்தூர் முருகன் அவன்யூ என்ற வீட்டு மனைகளை இந்த கந்த சஷ்டி நன்னாளில் பக்தர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்....*

*சூரியனார் கோயில் ஸ்தலத்தில் சூரியன் கோவிலுக்கு அருகில் காவிரியின் வடகரையில் சிறந்த இயற்கை சூழ்நிலையில் இந்த மனைப்பிரிவு அமைந்துள்ளது....*

**இந்த மனை பிரிவின் மிக மிக அருகில் சூரியனார் கோவில் சூரியன் கோவில்,* *திருமாந்துறை சந்திரன் கோவில் ,நவகிரக சுக்கிர ஸ்தலமான கஞ்சனூர் ,* *திருக்கோடி காவல் ,கதிராமங்கலம் வனதுர்க்கை, திருவிசைநல்லூர்,* *கற்கடேஸ்வரர், திருவிடைமருதூர், திருபுவனம் சரபேஸ்வரர் ,திரு ஆவடு துறை திருமணஞ்சேரி, கோவிந்தபுரம் விட்டல் கோவில் போதேந்திராள் அதிஷ்டானம் போன்ற மிக புகழ்பெற்ற பக்தர்கள் அதிகமாக வரும் ஸ்தலங்கள் மிக மிக* *அருகில் அமைந்துள்ளன...மிக மிக அருகில் ஆடுதுறையில் சுவையான சைவ உணவுக்கு பெயர் பெற்ற சீதாராம விலாஸ் உணவகம் உள்ளது.*

*ஒவ்வொரு வாரமும் ஏறத்தாழ 30000 இருந்து 50,000 பக்தர்கள் இந்த ஸ்தலங்களுக்கு வந்து செல்வதால் இங்கு மனைகள் இருப்பது மிகவும் விசேஷமாகவே கருதப்படுகிறது...*

*மிகுந்த மறு விற்பனை மதிப்புள்ள இந்த இடத்தில் நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்து மனையாகவும் வாங்கி வைக்கலாம்...*

*நமது மற்றொரு துணை நிறுவனமான திருவடி பவனம் ஹோம் ஸ்டே பிரைவேட் லிமிடெட் மூலமாக இங்கே ஒரு மனை வாங்கி அதில் குறைந்தது 6 லட்சம் முதலீட்டில் சிறிய ஆன்மீக குடில்கள் கட்டி நீங்கள் வரும் நேரத்தில் இங்கு தங்கி சுற்றியுள்ள தலங்களை சுவாமி தரிசனம் செய்யலாம்....* *மற்ற நேரங்களில் இந்த கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வாடகைக்கு கொடுத்து நமது ஆயுள் காலம் முழுவதும் மாதாமாதம் 15000 முதல் 20000 வரை வாடகை வருமானம் ஈட்டலாம்*

*ஆரம்ப விற்பனை விலையாக சதுரடி 899/- முதல்... சட்டபூர்வமான DTCP மற்றும் RERA அங்கீகாரம்... தெளிவான தாய் பத்திரங்கள் ...வழக்கறிஞரின் ஒப்புதல் உடன் அனைத்து பத்திரங்களும் தெளிவாக இருக்கின்றன...*

*மேலும் இந்த மனைப்பிரிவின் உள்ளேயே பல நூறு ஆண்டுகள் பழமையான ஒரு சுயம்புலிங்கம் இயற்கையாகவே அமைந்துள்ளது ஒரு மிகப்பெரிய விசேஷமாகும்*

💫 *பத்து ஆண்டுகளாக ஆன்மீக சுற்றுலா துறையில் முன்னணி நிறுவனமாக வளர்ந்து வரும் திருவடி தரிசனத்தின் புதிய நிறுவனம்தான் திருவடி பவனம் ஆன்மீக இல்லங்கள்( devotional home stay).*

*💫டெல்டா மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலங்கள் அருகே இயற்கையான சூழ்நிலையில் அற்புதமான இடங்களை தேர்வு செய்து அந்த இடங்களில் வீட்டு மனை பிரிவுகளை அமைத்து அங்கே கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு ஆன்மீக சுற்றுலா இல்லங்களை அமைக்கும் பணியில் திருவடி பவனம் ஈடுபட்டு வருகிறது.*

*💫ஆன்மீக சுற்றுலாத்துறை மிக வேகமாக வளர்ந்து வருவதால் ஒவ்வொரு வாரமும் 20 ஆயிரம் முதல் 30,000 பக்தர்கள் டெல்டா மாவட்ட கோயில்களுக்கு வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது எப்பொழுதும் போல பெரிய ஹோட்டல்களில் தங்காமல் கிராமத்து சூழ்நிலையில் அமைந்த இயற்கையான அழகான ஆன்மீக இல்லங்களில் தங்கி தெய்வ தரிசனம் பெறுவது அனைவராலும் மிகவும் விரும்பப்படுகிறது.*

*💫எனவே திருவடி பவனம் ஆன்மீக இல்லங்களுக்கான வரவேற்பு மிக மிக அதிகமாக உள்ளது.*

*இந்த சூரியனார் கோவில் செந்தூர் அவென்யூ மனைப்பிரிவில் 600 அடி முதல் 1200 சதுர அடி உள்ள மனைகளில் நீங்கள் ஒரு மனையை வாங்கினால் அதில் திருவடி பவனம் ஒரு அழகான ஆன்மீக குடிலை 350 சதுர அடியில் 600000 பட்ஜெட்டில் கட்டிக் கொடுத்து விடுவோம்.*

*💫இந்த முதலீட்டு திட்டத்தின் படி நீங்கள் ஒரு ஆன்மீக இல்லத்தை உங்களது செலவில் கட்டிக் கொள்ளலாம். அங்கே நீங்கள் குடும்பத்துடன் தங்கி கோவில்கள் தரிசனம் செய்யலாம் நீங்கள் தங்காத மற்ற நாட்களில் அந்த ஆன்மீக இல்லங்களில் பக்தர்கள் வந்து தங்குவதற்கான மார்க்கெட்டிங் வேலைகளையும் தங்க வைத்து உபசரிப்பதற்கான hospitality வேலைகளையும் திருவடி பவனமே செய்து விடும். அதில் கிடைக்கும் வாடகையில் திருவடி பவனம் நிறுவனமும் நீங்களும் பங்கு பெற்றுக் கொள்ளலாம் .நீங்கள் உங்களுடைய முதலீட்டை 5 வருடங்களில் எடுத்து விடலாம். பிறகு உங்கள் வாழ்நாள் முழுவதும் நிரந்தர மாத வாடகை வருமானம் பெறலாம். *மேலும் இந்த ஆன்மிக இல்லங்களில் நீங்கள் விரும்பும்* *பொழுது வந்து தங்கி சுவாமி தரிசனம் பண்ணலாம். *இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிக வெளிப்படுத்தன்மையுடன்*
( *transparent ) நடைபெறுவதால் ஒவ்வொரு கட்டத்தையும்* *நீங்கள் நேரடியாக கண்காணிக்கலாம்.*

*முதலீடாகவோ அல்லது ஆன்மீக குடில் கட்டி பக்தர்களுக்கு வாடகைவிடும் நோக்கமோ உங்களது எந்த விசாரணையாக இருந்தாலும் எங்களை அழைக்கவும் நன்றி...*

* . *மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.*
*Ph no

*9789158501*
*9789196501*

*நன்றி*

18/09/2025

அன்புள்ள பக்தி உறவுகளே....

🙏🙏🙏திருவடி தரிசனம் யாத்ராவின் அன்பு வணக்கம் 🙏🙏🙏

எதிர்வரும் கார்த்திகை அமாவாசை முன்னிட்டு சிறப்பான அயோத்தி காசி ,கயா,புத்தகயா, திருவேணி சங்கமம் யாத்திரை திட்டமிட்டுள்ளோம்.👇👇👇

✨✨இந்த யாத்திரையில் புனிதமான பிரதோஷ தினத்தன்று காசியின் காவல் தெய்வமான காலபைரவரையும் , மாத சிவராத்திரி தினத்தன்று ஸ்ரீ விஸ்வநாதர், , அன்னபூரணி ,துண்டி கணபதி சாட்சி, காலராத்திரி துர்கா , நீல சரஸ்வதி, கங்கா ஆரத்தி ,காசியின் காவல் தெய்வமான சோழியம்மன்,சங்கட் அனுமான் கூஸ் மாண்டா துர்க்கை
தெய்வங்களை தரிசிக்கிறோம்.

✨புத்தகயாவில் ஸ்ரீ புத்தர் ஞானமடைந்த போதி மரத்தை தரிசிக்கிறோம்.

✨மேலும் வித்தியாசமான புத்த ஸ்தலங்களை தரிசிக்கிறோம்.நாம் முன்னோர்கள் பூமிக்கு வரும் மிக புனிதமான கார்த்திகை அமாவாசை அன்று கயா விஷ்ணு பாதத்தில் நமது 32 தலைமுறை முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்கிறோம் .

✨ஏழு ஏழு ஜென்ம பாவங்களை தீர்த்து புண்ணியம் தரும் கங்கையின் ஸ்நானம் செய்து கங்கை கரையில் நம் முன்னோர்கள் காண சடங்குகளை செய்கிறோம்.மேலும் காசியில் புனிதமான கங்கா தீர்த்தமும் பூஜை பொருள்களும் வாங்குகிறோம்.

✨சமீபத்தில் கும்பமேளா நடைபெற்ற திரிவேணி சங்கமத்தில் வேணிதானம் என்ற தம்பதி பூஜையை சிறப்பாக செய்கிறோம் .
மேலும் அம்பாளுடைய சக்தி பீடங்களில் ஒன்றான அலோபி மாதாவையும் , வேணி மாதவரையும்,பரத்வாஜ மகரிஷியும் ஆசிரமத்தையும் தரிசிக்கிறோம்.

✨இந்த புனித யாத்திரையில் நாம் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பால ராமச்சந்திர மூர்த்தி அவதாரம் செய்த முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான அயோத்தியை தரிசிக்கிறோம்.மேலும் அயோதியில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திரு அயோத்தி திவ்ய தேசத்தையும் தரிசிக்கிறோம் மற்றும் ராமர் பட்டாபிஷேக மண்டபம் படா ஆஞ்சநேயர் ஆலயத்தையும்
சீதை சமையல் செய்த சமையல் அறையையும் தரிசிக்கிறோம்.

இனிய நினைவுகளுடன் சென்னையில் திரும்புகிறோம் .

இந்த யாத்திரையில் வசதியான த்ரீ ஸ்டார் ஹோட்டல் சுவையான சைவ உணவு ,ஏசி பஸ், தெளிவான தலபுராண விளக்கம், வயதானவர்களுக்கு ஏற்றவாறு நிதானமான கோயில் நிகழ்ச்சிகள் என ஏற்பாடு செய்திருக்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்: 9789196501 ,8148018501,8148016501

*திருவடி தரிசன யாத்ராவின் இன்றைய ஆன்மிக தகவல்* *பெருமாளும் ஐந்து மனைவிகளும்* 🙏🙏🙏திருச்சேறை சாரநாத பெருமாள் கோயிலில் பெரு...
18/09/2025

*திருவடி தரிசன யாத்ராவின் இன்றைய ஆன்மிக தகவல்*

*பெருமாளும் ஐந்து மனைவிகளும்* 🙏🙏🙏

திருச்சேறை சாரநாத பெருமாள் கோயிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி ஆகிய ஐந்து தேவியருடன் அருள்பாலிக்கிறார். இங்குள்ள மண்ணின் சிறப்பு காரணமாக, இந்தத் தலத்தின் பெருமாள் சாரநாதப்பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இந்த ஐந்து தேவியருடன் பெருமாள் அருள்பாலிக்கும் சிறப்பு, மற்ற திவ்யதேசங்களில் இல்லை.
தலத்தின் சிறப்பு
பஞ்ச சாரா க்ஷேத்திரம்: இந்த இடம் சாரநாதப்பெருமாள், சாரநாயகி, சாரவிமானம், சாரதீர்த்தம், மற்றும் சாரம் (இடத்தின் பெயர்) என ஐந்து 'சாரம்' அம்சங்களை உள்ளடக்கியிருப்பதால், இது பஞ்ச சாரா க்ஷேத்திரம் எனப்படுகிறது.
பெருமாளின் தேவியர்: ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி ஆகியோரும் இந்தத் தலத்தில் பெருமாளுடன் காட்சியளிக்கின்றனர்.
மண் வளம்: இந்தத் தலத்தின் மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்ததாகக் கருதப்படுகிறது.
கோயில் வரலாறு
பிரம்மாண்டமான சூழல்: உலகப் பிரளயத்தின்போது, பிரம்மா இந்தத் திருத்தலத்தில் இருந்து மண்ணை எடுத்து வேதங்களுடன் சேர்த்து பாதுகாத்தார் என்று ஸ்தல வரலாறு கூறுகிறது.
சோழ மன்னனின் திருப்பணி: பிரம்மாவின் செயலைக் கண்டு உருகிய ஒரு சோழ மன்னன் இந்தக் கோயிலுக்குப் பெரிய அளவில் திருப்பணிகள் செய்ததாக ஸ்தல வரலாறு தெரிவிக்கிறது.

கல்யாண வரம் தரும் திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாள்
கல்யாண வரம் தரும் திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாள்!!!

கும்பகோணத்திலிருந்து குடவாசல் அருகே உள்ளது திருச்சேறை ஸ்ரீசாரநாதப் பெருமாள் கோயில்.
பிரளய காலம். இந்தத் தலத்தில் இருந்து மண்ணை எடுத்த பிரம்மா, ஒரு கடம் செய்தார். அந்தக் கடத்தில் நான்கு வேதங்களையும் வைத்துக் காப்பாற்றி, அடுத்த பிரஜோற்பத்தியின்போது அளித்தாராம். அத்தகைய பெருமை பெற்ற தலமாக விளங்குகிறது திருச்சேறை.
ஒரு முறை கங்கை, காவிரி மற்றுமுள்ள ஆற்று நங்கையர் விந்திய மலையின் ஓர் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, கந்தர்வன் ஒருவன் அவ்வழியாகப் போனான். நிமிட நேரம் அங்கே நின்ற அவன், அவர்களை வணங்கிச் சென்றான். அப்போது நதி நங்கையர் அனைவரும் கந்தர்வனிடம், அவன் யாரை வணங்கினான் என்று கேட்டனர். அதற்கு கங்கை மற்றும் காவிரியைக் கண்ணால் பார்த்துவிட்டு அவன் சென்றுவிட்டான்.
இப்போது, கங்கையும் காவிரியும் யார் புனிதமானவர் என்று போட்டியிட்டனர். இந்த விவகாரம் பிரம்மாவிடம் சென்றது. அவர், “நான் நித்திய பூஜைக்கு ஸ்ரீவிஷ்ணுவின் பாதத்தைத் தொட்டு வரும் கங்கை நீரையே பயன்படுத்துகிறேன். எனவே, கங்கையே புனிதமானவள், உயர்ந்தவள்” என்றார். இதனால், காவிரிக்கு வருத்தமும் ஏமாற்றமும் ஏற்பட்டது. தனக்கும் அதே கவுரவம் வேண்டும் என்று எண்ணினாள் காவிரி. பெருமாளின் பாதம் தொட்டு வருவதால்தானே கங்கைக்குப் புண்ணியம். அதுபோல் தான் பெற விரும்பினாள் காவிரி. பெருமாளை நோக்கித் தவம் புரிய எண்ணினாள்.
இந்த மனக்கவலையுடன் பெருமாளிடம் வந்தாள் காவிரி அன்னை. திருச்சேறைத் தலத்தில், சார புஷ்கரிணியில் ஓர் அரச மரத்தடியில் தவம் மேற்கொண்டாள். இவளது தவத்தைக் கண்டு மனம் இரங்கிய ஸ்ரீமந் நாராயணர், ஒரு குழந்தையின் வடிவில் காவிரித் தாயின் மடியில் தவழ்ந்தார். ஆனால், காவிரியோ தனக்கு இதைக் காட்டிலும் பெருமை வேண்டும் என்றாள். எனவே காவிரியின் வேண்டுகோளை ஏற்று சங்கு சக்ரதாரியாக, கருட வாகனத்தில் ஏறி, தேவியர் ஐவருடன் காட்சி தந்தார் பெருமாள்.
மேலும், காவிரியிடம் வேண்டும் வரம் கேட்டுப் பெறக் கூறினார். ஐந்து லட்சுமியருடன் அழகு தரிசனம் பெற்ற காவிரித் தாயோ, தாங்கள் எப்போதும் இதே கோலத்தில் இங்கே தரிசனம் தர வேண்டும். மேலும், கங்கையிலும் புனிதமான மேன்மையை எனக்கு அருள வேண்டும் என்று வேண்டினாள். ஆயிரம் வருட தவத்துக்குப் பிறகு, விந்திய மலைக்குத் தெற்கே கங்கைக்கு சமமான அந்தஸ்து காவிரிக்கும் கிடைத்தது. மேலும், காவிரி அன்னைக்குக் காட்சி தந்த பெருமாள் திருச்சேறையில் அவ்வண்ணமே எழுந்தருளினார். கருவறையில் சாரநாதப் பெருமாளுக்கு இடப்புறத்தில் காவிரித்தாய் அமர்ந்து கொண்டார்.
ஸ்ரீமந் நாராயணன் கோவில் கொண்ட புகழ்பெற்ற வைணவத் திருப்பதிகள் 108ல் இந்தத் தலமும் ஒன்று. சார என்ற சொல்லுக்கு, ஆன்மா, சாரம் என்று பொருள். பெருமாளுக்கு பக்தர்கள் தங்கள் ஆன்மாவை அர்ப்பணிப்பதால் பெருமாளுக்கு ஆன்மாக்களின் நாதனாக, சாரநாதனாகப் பெயர் ஏற்பட்டது. இதுவும் சார க்ஷேத்ரம் என்று பெயர் பெற்றது. சாரநாதன் என்ற திருப்பெயருடன் திகழும் பெருமாள், சாரநாயகி என்ற திருப்பெயருடன் திகழும் தாயார், சார விமானம் என்ற பெயருடன் விமானம், சார புஷ்கரிணி என்ற பெயருடன் தீர்த்தம்.. எல்லாம் சாரம்தான். முற்காலத்தில் இந்தத் தலம் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது. காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது. அதுமட்டுமா… இங்குள்ள சிவபெருமானையும் சார பரமேஸ்வரர் என்ற திருநாமத்துடன் பக்தர்கள் அழைக்கின்றனர். இவரது கோயிலை உடையார் கோவில் என்கின்றனர். அம்பாளின் திருநாமம் ஞானவல்லி என்பது.
சாரநாதப் பெருமாள் ஆலயத்தின் சிறப்பம்சம், இத்தலத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீளாதேவி என லட்சுமியின் அம்சமாய் ஐந்து தேவியருடன் அருள் வழங்குகிறார் என்பது.
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் சாரநாதப் பெருமாள். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். சுமார் 90 அடி உயரத்தில் திகழ்கிறது. கோயிலுக்கு எதிரே உள்ள சாரபுஷ்கரிணி மேற்குக் கரையில், அகத்தியர், பிரம்மா, காவிரி ஆகியோர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீனிவாசப் பெருமாள், ஆழ்வார்கள், நம்மாழ்வார், உடையவர், கூரத்தாழ்வான், அனுமத் சமேத ஸ்ரீராமர், ராஜகோபாலன், ஆண்டாள் மற்றும் சத்தியபாமா, ருக்மிணி, நரசிம்மர், பாலசாரநாதர் என சந்நிதிகள் உள்ளன. கருவறையில் காவிரி மட்டுமல்லாது, மார்க்கண்டே மகரிஷியும் காட்சி தருகிறார். மார்க்கண்டேயர் இந்தத் தலத்தில் முக்தி அடைந்ததாக தல புராணம் கூறுகிறது.
இந்தப் பெருமாள் வரலாற்று காலத்திலும் முக்கியத்துவம் பெற்றவர். நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், வைணவத் தலங்கள் பலவற்றையும் புனரமைத்து வழிபட்டு வந்தனர். மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி திருக்கோயிலுக்கு திருப்பணி நடைபெற்று வந்தது. மன்னரின் ஆணைப்படி மன்னார்குடி கோயில் திருப்பணிக்காக இந்த ஊரின் வழியே கற்கள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டன. ஆனால், மன்னனின் அமைச்சருக்கு இந்தப் பெருமாளின் மீது அளவற்ற பக்தி.
சாரநாதப் பெருமாளின் திருப்பணிக்கு தேவைப்படும் என்று வண்டிக்கு ஒரு கல் வீதம் அமைச்சர் நரசபூபாலன் இங்கே இறக்கிவைத்தான். ஆனால் இந்தச் செய்தி மன்னனின் காதுகளை எட்டியது. அவனுக்குக் கோபம் தலைக்கேற, இங்கே வந்தான். இதனால் மிகவும் பயந்து போன அமைச்சரோ, சாரநாதப் பெருமாளை வேண்டிக் கொண்டார். மன்னன் வந்த அதே நேரம் சாரநாதப் பெருமாள், மன்னார்குடி ராஜகோபாலனாகவே காட்சி தந்தார். இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த மன்னன், இந்தக் கோவிலுக்கும் திருப்பணிகளை சிறப்பாக நிறைவேற்றினான் என்பர். இந்தப் பெருமாளை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். “தண்சேறை எம்பெருமான் திருவடியைச் சிந்தித்தேற்கு, என் ஐயறிவும் கொண்டானுக்கு ஆளானார்க்கு ஆளாம் என் அன்புதானே” என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.
திருவிழா: இந்தத் தலத்தில் சிறப்புத் திருவிழா தைப்பூச விழாதான். இது, பத்து நாள்களுக்குக் கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் தேர்த் திருவிழா. இங்கே காவிரித் தாய்க்கு பெருமாள் காட்சியளித்தது, ஓர் தை மாத, பூச நட்சத்திரத்தில்தானாம். இது, வியாழன் சஞ்சரித்த காலம் என்பதால், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாத பூச நட்சத்திரத்தில் வியாழன் வரும் போது இங்குள்ள சார புஷ்கரணியில் நீராடினால், மகாமாகத்தில் நீராடியதற்கு ஒப்பாகும் என்பர். எனவே, இந்த விழாவை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
திருமணத் தலம்: இங்கே பெருமாள் கல்யாண வரம் தரும் பெருமாளாக, ஐந்து லட்சுமியருடன் திகழ்கிறார். எனவே, புதன் அல்லது வெள்ளிக் கிழமைகளில் கோயிலில் கல்யாண உற்ஸவம் செய்வதாகவும் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். திருமணம் முடிந்த பின்னர், தம்பதியாக கோயிலுக்கு வந்து, பெருமாள், தாயாருக்கு வஸ்திரம் சாத்துகின்றனர்.
பாபம் போக்கும் பெருமாள்: இங்கே பெருமாள் பாபத்தைப் போக்கி, புண்ணியத்தைக் கூட்டுகிறார். காவிரித் தாய்க்கு புண்ணிய மகிமையை அளித்தவர் என்பதால், இங்கே பெருமாளை வழிபட்டாலே, காவிரியில் நூறு முறை முங்கி எழுந்த புண்ணியம் கைகூடுகிறது.

*கும்பகோணம் அருகே உள்ளது திருச்சேறை*
*சந்நிதி திறக்கும் நேரம் காலை 6-11 மாலை 5-8 வரை*

*மேலும் தகவல்களுக்கு திருவடி தரிசனம் சேனலை ஃபாலோ பண்ணுங்க*

https://whatsapp.com/channel/0029VaNLW00KAwEoV5S4DV2F

*ஆன்மீக யாத்திரை செல்ல விரும்புவோர்*
9789196501
8148018501
8148016501

20/08/2025

திருவடி தரிசனம் யாத்ரா வழங்கும் மலைநாடு திவ்ய தேச யாத்திரை

எல்லாம் வல்ல ஸ்ரீ பரந்தாமன் மகாவிஷ்ணு அருள் மழை பொழியும் 108 திவ்ய தேசங்களில் இயற்கை எழில் கொஞ்சும் கேரள மண்ணில் அமைந்திருக்கக் கூடிய 13 திவ்ய தேசங்கள் யாத்திரை..

இந்த யாத்திரையில் நாம் குருவாயூர் திரு வித்துவக்கோடு திருநாவாய், கொடுங்கலூர் பகவதி, கேரள மண்ணில் பாடல் பெற்ற ஒரே சிவஸ்தலமாகிய திருவஞ்சைக்களம் திருமொழிக் களம், ஆதிசங்கரர் அவதரித்த காலடி, திருவல்லா , செங்கனூர் சுற்றியுள்ள திவ்ய தேசங்கள் ,ஐயப்ப சுவாமி அவதரித்த பந்தளம், திருவனந்தபுரம், திருவட்டாறு, திருவன்பரிசாரம் போன்ற 13 திவ்ய தேசங்களை தரிசிக்கிறோம்...

மிகவும் வசதியான 4 star நட்சத்திர அறைகள், சொகுசான ஏசி பஸ், சாத்வீக சைவ உணவு உடன் விரிவான தல புராண விளக்கம்...
வயதானவர்களுக்கு ஏற்ற வகையில் மிக நிதானமான யாத்திரையாக அமைத்துள்ளோம்...

சென்னையிலிருந்து
செப்டம்பர் - 10 காலை 5 மணிக்கு சொகுசு பேருந்தில் புறப்படுகிறோம்...

அனைத்தும் உள்ளடக்கிய கட்டணம் rs 26,500/- மட்டுமே...

தொடர்புக்கு 8148018501/ 8148016501/ 9789196501

17/04/2025

இல்லறமா?.... துறவறமா?.. எது சிறந்தது...! இறைவனின் பதில்!!!!

Address

No 23 Raja Street, Thiruvarur
Thiruvarur
610001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+919789648501

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvadidharisanam yathra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Thiruvadidharisanam yathra:

Share

Category