ஸ்ரீ நந்திதேசம்

ஸ்ரீ நந்திதேசம் மெல்லியதொரு ஆன்மீக பயணம் சிவாயநமக

எங்கள் குடும்பத்தோடு இணைந்து வாழக்கூடிய, நற்குணமும் பக்குவமும் கொண்ட பெண் துணையாக அமைய வேண்டும் என்று விரும்புகிறோம். பட...
04/05/2026

எங்கள் குடும்பத்தோடு இணைந்து வாழக்கூடிய, நற்குணமும் பக்குவமும் கொண்ட பெண் துணையாக அமைய வேண்டும் என்று விரும்புகிறோம். படிப்பு மற்றும் வேலை என்பது மணமகளின் விருப்பத்தைப் பொறுத்தது. மதுரையைச் சுற்றி வரன் அமைந்தால் கூடுதல் சிறப்பு."
​தொடர்புக்கு: 📞 செல்போன்: 9629160206

இருகரம் 🙏🙏🙏கூப்பி அழைக்கிறோம்
31/07/2024

இருகரம் 🙏🙏🙏கூப்பி அழைக்கிறோம்

27/02/2022

🥀 சிவராத்திரி கதைகள்...

சிவனுக்கு ஐந்து வித சிவராத்திரிகள் புனிதமானவை என்று கூறப்படுகிறது. யோக சிவராத்திரி என்பது யோகத்தின் மூலம் ஒரு யோகி தனக்கென ஒரு இரவை உருவாக்கி சிவனை வழிபடும் சிவராத்திரி, நித்திய சிவராத்திரி என்பது தினமும் வருவது. பக்க்ஷ சிவராத்திரி என்பது இரு வாரங்களுக்கு ஒரு தடவை வருவது. மாச சிவராத்திரி என்பது மாதாந்தம் வருவதாகும். வருடத்திற்கு ஒரு தடவை வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி எனப்படுகிறது. மகாசிவராத்திரி என்ற சமஸ்கிருதச் சொல்லின் கருத்து சிவனுக்குரிய பெரிய அல்லது சிறந்த இரவு என்பதாகும். அது மாசி மாதத்தில் அதாவது February-March மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் அமாவாசைக்கு முதல் நாள் சதுர்த்தசியில் வருவதாகும். இது ஒரு பண்டைய சமய விழாவாகும். ஏனைய பல இந்து சமய விழாக்களிலிருந்து சிவராத்திரி மாறுபட்டுள்ளது. பெரும்பாலான விழாக்கள் விரதத்திலும் வழிபாட்டிலும் ஆரம்பித்து விருந்தில் நிறைவடைவனவாகும். ஆனால் சிவராத்திரியின் போது முழு நாளும் சிவ வழிபாட்டிற்காக ஒதுக்கப்படுகிறது. மனித வாழ்வில் நாளாந்தம் செய்யப்படும் இரண்டு முக்கிய செயல்கள் அதாவது உணவு உண்ணுதலும், இரவு உறக்கமும் அன்று சிவ வழிபாட்டிற்காக துறக்கப்படுகிறது.

மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம். சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது எமது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது எமது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழிவகுக்கிறது.

சிவபுராணத்தின்படி மகாசிவராத்திரி வழிபாட்டில் ஆறு அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும். சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும். லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும். உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும். தீபமிடுதல் செல்வத்தை வழங்கும். எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும். வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும். இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோயிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.

சிவராத்திரி அன்று காலையில் எழுந்து புனித நீரில் நீராடி புத்தாடை தரித்து சிவனுக்கு நீராட்ட புனித நீரை குடத்தில் நிறைத்து ஏந்தியவாறு பக்தர்கள் கோயிலுக்குப் போகிறார்கள். கோயிலுக்குப் போகும் பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து கோயிலின் கருவறையில் உள்ள லிங்கத்துக்கு நடைபெறும் அபிஷேகங்களிலும் பூசைகளிலும் கலந்து கொள்கிறார்கள்.

சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூசைகளின் போது எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.

முதல் யாமப் பூசையின் போது தாமரை மலரால் அர்ச்சித்து பொங்கலை நிவேதனமாக வழங்கி, ருக்கு வேதத்தை ஓதி வழிபடவேண்டும்.

இரண்டாவது யாமப் பூசைக்குரிய இலை துளசியாகும், அத்துடன் பாயாசத்தை நிவேதித்து யசுர் வேதத்தை ஓதி வழிபட வேண்டும்.

மூன்றாவது யாமத்தில் வில்வம் இலைகளால் சிவனுக்கு அர்ச்சனை நடைபெறுகிறது. எள்ளும் மாவும் கலந்த உணவை நிவேதித்து சாமவேதத்தை ஓதி வழிபட வேண்டும்.

நான்காவது யாமத்தில் நீலோத்பல மலர்கள் அர்ச்சனைக்குரியவை. அத்துடன் எளிமையான ஒரு பிரசாதத்தை நிவேதித்து அதர்வன வேதத்தை ஓதி வழிபடுவது சிறப்பானது.

விரதம் அனுஷ்டிக்கும் பக்தர்கள் அடுத்த நாள் விடியும் வரை சிவனுக்கு நிவேதித்த உணவுப் பொருட்களை உண்ணுதல் கூடாது என்றும் விதிக்பட்டுள்ளது.

இந்து விரதங்களினதும் கொண்டாட்டங்களினதும் பெருமையையும் சிறப்பையும் பழமையையும் உணர்த்த புராணக் கதைகளில் அவற்றின் மூலத்தைத் காண்பது போல, சிவராத்திரியின் ஆரம்பமும் புராணக் கதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தனது கணவனான சிவனை நினைத்து அவரது நலனுக்காகவும் தீமைகள் அவரை நெருங்காதிருப்பதற்காகவும் பார்வதி உணவைத் துறந்து பிரார்த்தனையிலும் தியானத்திலும் ஈடுபட்ட தினமே சிவராத்திரி என்கிறது ஒரு கதை. ஆண்களும் பெண்களும் சிவராத்திரியன்று விரதம் அனுஷ்டித்து சிவனை வழிபடுகின்ற போதும் இந்த கதையின் படி அது பெண்களுக்கு விசேடமாக உரிய வழிபாட்டுத் தினமாகவே கருதப்படுகிறது. இன்று திருமணமான பெண்கள் தமது கணவனதும் மகன்களதும் நலனுக்காக இவ்விரதத்தை அனுஷ்டிக்கிறார்கள். திருமணமாகாத பெண்கள் சிவனைப் போல ஒரு நல்ல கணவன் கிடைக்கவேண்டும் என்பதற்காக வழிபடுகிறார்கள்.

ஊழிக் காலத்தில் பிரபஞ்சம் அசைவற்றிருந்த போது தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி சிவன் மீண்டும் இயக்கத்தை உண்டாக்கினார் என்றும் அப்போது முதலில் இயக்கம் பெற்ற உருத்திரர்கள் திருவைந்தெழுத்தை ஓதி சிவனை வழிபட்ட தினமே சிவராத்திரி என்று இன்னொரு கதை கூறுகிறது. எல்லாம் ஒடுங்கி சூனியம் மட்டும் இருந்த நிலையில் சிவன் யோக துயில் கொண்ட போது அவரது சொருப நிலையில் தேவி ஒன்றி நின்ற தினமே சிவராத்திரி என்கிறது மற்றொரு கருத்து. சிவ புராணத்தில் இன்னுனொரு கதையும் உள்ளது. பிரமாவும் விஷ்ணுவும் ஒளி வடிவ லிங்கமாக சிவனின் அடியையும் முடியையும் தேடிக் காணா முடியாத போது அவன் லிங்கோத்பவ வடிவமாக அவர்களுக்கு அருள் செய்த நாளே சிவராத்திரி என்று அது கூறுகிறது. சிவன் லிங்க வடிவில் முதலில் தோன்றிய அந்த நாள் மாசி மாதத்து கிருஷ்ண பட்சத்தில் 14ஆம் நாளாக இருந்த காரணத்தால் அது லிங்க வடிவில் சிவனை வழிபடுவதற்கோற்ற நாளாக, சிவராத்திரியாக மாறியது என்கிறது அந்தக் கதை.

வரும் சிவராத்திரியன்று (01-03-2022) சிவனை வழிபட அனைத்து நன்மைகளும் உண்டாகும்...

26/02/2022
26/02/2022

சிவ சிவ
உமையம்மை சிவபெருமானிடம் .....

" நாம் உழவுத் தொழிலை மேற்கொள்ளலாம்; திருமால் நமக்கு அதற்கான நிலத்தைத் தருவார்.

உமது தோழனாகிய குபேரனிடமிருந்து விதைப்பதற்கான விதைகளைப் பெற்றுக் கொள்ளலாம்;

பலராமனிடம் இருந்து உழவுக்கு இன்றியமையாத கலப்பையைப் பெற்றுக் கொள்வோம்;

உழுவதற்கு எமனிடமிருந்து எருமைக்கடாவினை வாங்கிக் கொள்ளலாம்;

அதற்கு இணையாக உழுவதற்கு நம்மிடம்தான் இன்னொரு எருது இருக்கிறதே... அதைப் பயன்படுத்திக் கொள்வோம்;

கலப்பையில் இணைப்பதற்கு உம்மிடம் உள்ள மும்முனை களையுடைய சூலத்தைக் கொழுவாக ஆக்கிக் கொள்வோம்;

உழவுப் பணிகளுக்குத் தேவையான கயிறு உள்ளிட்ட ஏனைய பொருள்களை நம் அன்பர்களிடமிருந்து இரந்து கொள்வோம்;

நாம் விரும்புகின்ற இளைய பிள்ளையாகிய முருகன் இனிமையோடு மாடு மேய்ப்பான்.

இனிமேலாவது பிச்சை பெற்று வாழும் உமது பழைய தொழிலை விட்டுவிடுங்கள்; உழுது பயிரிட்டு வாழ்தலே நன்று, மிக நன்று'' என்று சிவபெருமானிடம் கூறினாளாம்.!

கற்பனைக் களஞ்சியம்' என்று போற்றப்படும் துறைமங்கலம் #சிவப்பிரகாச_சுவாமிகள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியும் அதனால் பிறந்த ஒரு பாடலும் அவர் கற்பனை வளத்துக்கு சிறந்ததொரு சான்று.

சிவப்பிரகாச சுவாமிகள் தான் துறவை விரும்பி மேற்கொண்டு, தன் தம்பியர்க்குத் திருமணம் செய்விக்கிறார். துறவியானாலும் புலவராயிற்றே! மணவாழ்த்துப் பாடல் இல்லாமலா? ஐந்து செய்யுள்களால் இடம்பெறும் அவ்வாழ்த்துப் பாக்கள் அவரை "கற்பனைக் களஞ்சியம்' என்பதற்குக் கட்டியம் கூறுகின்றன. அவ்வைந்து பாடல்களுள் ஒன்றில், சிவபெருமானைத் திருமணம் செய்து கொண்ட உமையம்மை, உழவுத் தொழிலை மேற்கொள்ள எம்பெருமானுக்குஅழைப்பு விடுப்பது புதுமையிலும் புதுமை.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்னும் திருக்குறளை மனத்தில் நிறுத்தும் இப்பாடலைக் கற்பனை நயத்துடன் வாழ்த்தாகப் பாடி, "உமையம்மை விரும்பியவாறு உழவுத் தொழிலை மேற்கொண்டு இல்லறத்தில் சிறப்பீர்களாக!' என்று மணமக்களை வாழ்த்துகிறார் சிவப்பிரகாச சுவாமிகள். இந்த அறிவுரையும் வாழ்த்தும் நமக்கும்தான்!

இதோ அந்தப் பாடல்....

அச்சுதன் அளிப்பவன் நிலம்உமது நேயன்வித்தை
அருளுவன் பலபத் திரன்
அலமுதவு வன்சமன் பகடுஈவன் நம்தமக்கு
ஆனதோர் எருதும் உண்டே
முச்சிரம் அயிற்படையினைக் கொழுவ தாக்குவோம்
மொய்ம்புடன் இழுத் திறுக்க
முந்திய வடக்கயிற் றுடன்மற்றும் நமதுஅன்பர்
முன்போய் இரந்து கொள்வோம்
இச்சையுடை நமதுஇளைய தனயன்ஆ கியகந்தன்
இனிமை யொடுமாடு மேய்ப்பன்
இனிஉழுது பயிரிடுதல் நன்றுநன்று இதைவிட்டு
இரந்துண்பது ஈனம் எனவே
கச்சுமுலை மாதுமை யுரைத்திடும் புத்தியைக்
கைக்கொண் டுள்ளத்தில் இதுநற்
காரியமெனக் கருதி மெத்தக் களித்திடும்
கண்ணுதல் உமைக் காக்கவே.

இணையத்திரிருந்தும் பிரகாஷ் முனுசாமி ஐயன் அளித்த படங்களின் தொகுப்புமாய்

26/02/2022

ஹனுமான் பற்றி அறியாத தெரியாத விஷயங்கள்......!!!!

ஹனுமான் குழந்தை பருவத்தில் சூரியனைப் பிடிக்க முயற்சி செய்தது, இந்திரனினால் அடிக்கப்பட்டு, மயங்கி கிடந்தது, வாயு கோபம் அடைந்து உலகோரை மூச்சு விடாமல் திணர செய்தது,

மும்மூர்த்திகளும், மற்ற தேவர்களும் தோன்றி அவருக்கு எல்லா வரங்களையும் அளித்த கதை சிறுவர் முதல் பெரியவர்
வரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

மேலும், அவர் பெரியவரான போது, சுக்ரீவருக்கு மந்திரியானது, ராம லக்ஷ்மணரை சந்தித்தது, ராமருக்காக சீதையை தேட ஆகாயத்தை கடந்தது,

சீதையிடம் மோதிரத்தை கொடுத்து சூடாமணியை வாங்கியது, ராவணனை சந்தித்து அறிவுரை வழங்கியது, இலங்கையை எரித்தது- என்ற நிகழ்ச்சிகள் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.

ராம-ராவண யுத்ததில், அவருடைய பங்கு, ராமாயண கதை படித்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அனுமார் இல்லாமல் ராமரால் இவ்வளவு சாதனைகள் செய்திருக்க முடிந்திருக்குமா, என்று நினைக்க தோன்றும்.

ஆனால், அனுமாருக்கு அந்த மாதிரி எண்ணம் வந்ததே இல்லை.வரவும் வராது. அதனால் தான், அவருடைய நல்ல பண்புகளையும் குணங்களையும்
நினைத்து, அவரை, இன்றும் என்றும் வணங்கி வருகிறோம்.

எப்படி இவரால், அதுவும் ஒரு குரங்காக இருந்து கொண்டு, இவ்வளவு சாதனைகள் செய்ய முடிந்தது? அதற்கு ஒரே காரணம் தான் இருக்க முடியும்.

அவர் தேவாம்சம் பெற்றவராக இருந்திருக்க வேண்டும். சாதரண தேவருடைய அம்சமாக இருக்க வாய்ப்பில்லை. பின் யாருடைய அம்சம் இவர்?

சாஷாத் பரமேஸ்வரனுடைய அம்சம். அது என்ன கதை ? பார்ப்போமா....!!!!!

சிவபெருமான் தன் தியானத்திலிருந்து எழுந்து வரும் போது ராம நாமத்தை
உச்சரித்து கொண்டு வந்தார். பார்வதி தேவி, எம்பெருமானை
பார்த்து கேட்டாள்,

“சுவாமி,நீரே எல்லோருக்கும் மேலான கடவுள். அப்படியிருக்க, நீர் ஏன் இன்னொரு கடவுளின் பெயரை சொல்கிறீர்.”

சிவன், அதற்கு பதில் சொல்கிறார். ”தேவி, 'ராம' என்ற எழுத்து 2 விஷயங்களை குறிக்கிறது.

ஒன்று,”ராம” என்பது தான் பிரம்மம். இரண்டாவது, அது விஷ்ணுவின் அவதாரமான ஒரு இளவரசனை குறிக்கிறது. ராமர் தான் என்னுடய இஷ்டமான அவதாரம். நான் பூலோகத்தில் அவதரித்து
ராமருக்கு தொண்டு செய்ய போகிறேன்.“

இதை கேட்ட பார்வதிக்கு கோபம் வந்து, தான் சிவனை விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிந்து இருக்க மாட்டேன் என்று சொன்னாள்.சிவன் சொன்னார். "

தேவி, கவலை வேண்டாம். பூலோகத்துக்கு அனுப்ப போவது என்னுடய ஒரு சிறு பகுதி தான். மற்றபடி நான் உன்னுடன் தான் இருப்பேன்.” என்றார்.

பார்வதியும் சமாதானமாகி சுவாமியுடன் அவர் எடுக்கப்போகும் அவதாரத்தை பற்றிவிவாதிக்க தயாரானாள்.

பலத்த விவாதத்துக்கு பிறகு சுவாமியின் அவதாரம்
ஒரு குரங்காக இருக்க வேண்டும் என்று நிச்சயிக்கப்பட்டது.

ஏன், குரங்கு அவதாரம்?
பரமேஸ்வரன் விளக்குகிறார். ” மனிதனாக அவதாரம் எடுத்தால், அது தர்மத்திற்கு ஒவ்வாத செயலாக அமையும்.

"எஜமானனை விட சேவகன்
ஒரு படி கீழ் நிலையில் இருக்க வேண்டும். இந்த சூழலில் குரங்கு அவதாரம் பல காரணங்களால் சிறந்தது. குரங்குக்கு விசேஷமான தேவைகள் கிடையாது. நிறைய சேவகம் செய்ய வாய்ப்பு உண்டு.” என்றார்.

பார்வதி தேவி தானும் கூட வருவதாக அடம் பிடித்தாள். சுவாமியும் சம்மதித்து பார்வதி தான் எடுக்க போகும் அவதார குரங்குக்கு வாலாக இருக்கலாம் என்று முடிவு செய்தார். ( இப்போது புரிகிறதா? ஏன் அனுமார் வால் அழகாகவும் பலமுள்ளதாகவும் இருக்கிறது என்று).

பார்வதி கடைசியாக இன்னொரு சந்தேகத்தை கிளப்பினாள். “சுவாமி, ராவணன் உங்கள் பரம பக்தன். நீங்கள் எப்படி அவன் மரணத்துக்கு
உதவ முடியும்? ”,என்று கேட்டாள்.

சிவன், ” தேவி,உனக்கு நினைவு இருக்கிறதா? ராவணன் என் 11 ருத்ர அம்சங்களை திருப்தி பண்ணுவதற்காக
தன்னுடைய ஒவ்வொரு தலையையும் வெட்டி நெருப்பில் போட்டான்.

ராவணனுக்கு 10 தலைகள் தானே! 10 ருத்ரர்கள் தான் திருப்தி ஆனார்கள்.
ஓரு ருத்ரருக்கு கோபம். அந்த 11வது ருத்ர அம்சம் தான் குரங்கு அவதாரம் எடுக்க போகிறது.” என்றார்

அனுமான் நம் எல்லோரையும் காப்பாற்ற, வேண்டி வணங்கி எல்லாம் அருளையும் பெறுவோம்.!!!

21/02/2022

இந்துக்கள் தினமும் செய்யும்
பஞ்ச மஹா யக்ஞம் –
ஐந்து வேள்வி —

1.பிரம்ம யக்ஞம்/வேதம்
ஓதுதல்,

2.தேவ யக்ஞம்/
தெய்வங்களுக்குப் பூஜை
செய்தல்,

3.மனுஷ யக்ஞம்/
விருந்தினருக்கு சோறிடுதல்,

4.பூத யக்ஞம்/பிராணிகளுக்கு
உணவு படைத்தல்,

5.பித்ரு யக்ஞம்/நீத்தாருக்கு
நீர்க்கடன் செலுத்தல்
என்பன அடக்கம்.

எல்லா இந்துக்களும் பஞ்ச
மஹா யக்ஞம் என்னும் ஐந்து
வேள்விகளைச் செய்ய
வேண்டும்.பிராமணர்கள்
வேதம் ஓதும் இடத்தில்
மற்றவர்கள் தேவாரம்,
திவ்வியப் பிரபந்தம்,
திருவாசகம், திருக்குறளை
ஓதலாம். வேள்வி என்பது
யாகத்தீயில் அவிஸை
(நெய்யுடன் கலந்த சோறு)
போடுவது மட்டுமல்ல.
மனதளவில் பல
வேள்விகளைச் செய்யலாம்.

வள்ளுவரும் சொல்லி
இருக்கிறார்:—

தென்புலத்தார், தெய்வம்,
விருந்து, ஒக்கல், தான்
என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை
(43)

பொருள்: இறந்து போய் தென்
திசையில் வாழ்ந்து
கொண்டிருக்கும் நம்
முன்னோர்கள், கடவுள்,
வீட்டிற்கு வரும் விருந்தாளிகள்,
சுற்றத்தார் (இதில் நாம்
வளர்க்கும் பசு முதலிய
பிராணிகளும், வீட்டில்
ஊர்ந்து செல்லும் எறும்புகளும்
அடங்கும்), தனது குடும்பம்
என்ற ஐந்து பேரையும்
போற்றுவது இல்வாழ்வானின்
தலையாய கடமை.

மனு ஸ்மிருதியில் 3-72 –ல்
மனு சொன்னதை வள்ளுவரும்
சொல்லி இருக்கிறார்.
ஆகவே இமயம் முதல்
குமரி வரை ஒரே கொள்கை
இருந்திருக்கிறது.

விருந்தாளிகளுக்குச் சாப்பாடு
போட்டவுடன் தான்
வீட்டிலுள்ளோர் சாப்பிட
வேண்டும்.

ஏழு பாக யக்ஞங்கள்

பாக யக்ஞங்கள் ஏழு வகை;
பாக என்றால் சமைக்கப்பட்ட
என்று பொருள்; பல
வேள்விகளுக்குப் பலருக்கும்
பொருள்கூடத் தெரியாது.
நானும் அனுபவத்திலன்றி
நூல்களில் படித்ததையே
எழுதுகிறேன். முதல் இரண்டும்
நீத்தார் நினைவாக
செய்யப்படுபவை. இப்போதும்
பழக்கத்தில் உள. மற்றவை
அபூர்வம்

1.பித்ரு சிராத்தம்

2.பார்வண சிராத்தம்

3.அஷ்டகா

4.சிராவணீ

5.அஸ்வயுஜி

6.ஆக்ரஹாயணீ

7.சைத்ரீ

14 ச்ரௌத யக்ஞங்கள்

இந்த 14 வேள்விகளும்
7 ஹவிர் யக்ஞங்கள்,
7 சோம யக்ஞங்கள்
என்று இரண்டு வகைகளாகப்
பிரிக்கப்பட்டுள்ளன.

ஏழு ஹவிர் யக்ஞங்கள்

ஏழு ஹவிர் யக்ஞங்களில்
பால், நெய், பல வகை
தானியங்கள், அப்பம்
முதலியன தீயில் இடப்படும்.
பிராமணர்கள் தினமும்
காலையிலும் மாலையிலும்
அக்னி ஹோத்ரம் செய்ய
வேண்டும் என்கிறார்.
ஒவ்வொரு பக்ஷத்தின்
முடிவிலும் தர்ச, பூர்ணமாச
செய்யவேண்டும் என்று மனு
பகர்வார். ஆக்ராயன என்பது
புது தானியம் அறுவடையாகும்
போது செய்யப்பட வேண்டும்.
சாதுர்மாஸ்யம் என்பது
மழைக்காலத்தில்
செய்யப்படுவது.

நிரூட பசு பந்த யக்ஞம்
என்பது தட்சினாயண,
உத்தராயண புண்ய
காலங்களில் (ஜூன் 21,
டிசம்பர் 22) செய்யப்பட
வேண்டும்.

1.அக்ன்யாதேயம்

2.அக்னிஹோத்ரம்

3.தர்ச பூரணமாசம்

4.ஆக்ரயணம்

5.சாதுர்மாஸ்யம்

6.நிரூட பசு பந்த:

7.சௌத்ராமணி

ஏழு சோம யக்ஞங்கள்

1.அக்னி ஷ்டோம:

2.அத்யக்னிடோம:

3.உக்த்ய:

4.ஷோடஷீ

5.வாஜபேய:

6.அதிராத்ர:

7.ஆப்தோயாம:

சோமயாகங்களில் சோம ரசம்
பயன்படுத்தப்படும். எல்லா
யாகங்களிலும் புரோகிதர்கள்
இருப்பர். அவர்களின்
எண்ணிக்கை சக்திக்கேற்பவும்,
வேள்விக்கேற்பவும் மாறுபடும்.
யாகத்தைச் செய்பவர்
யஜமானன் எனப்படுவார்.
வீட்டில் மூன்றுவகை அக்னி
இருக்க வேண்டும் ஆஹவனீயம்
என்பது கிழக்கு திக்கிலும்
(தேவ பூஜைக் கானது),
தட்சிணாக்னி என்பது
தெற்கு திக்கிலும் ( இறந்தோருக்கு
கடன் செலுத்த), கார்ஹபத்யம்
என்பதூ மேற்கு திக்கிலும்
எப்போதும் எரிந்து கொண்டு
இருக்கவேண்டும்.

இதில் 14 ச்ரௌத வேள்விகளும்
செய்யப்படும். சங்க இலக்கியப்
புலவர்கள் அந்தணர்களைப்
போற்றுகையில் முத்தீ அந்தணர்
என்று புகழ்வது இதனால்தான்.
இதுதவிர சில நூல்கள் நாலாவது
தீ பற்றியும் கூறும்.

மனு தர்ம சாத்திரத்தில்
3-70/75; 3-80; 3-92/94;
4-25/26 ஆகியவற்றில்
இவற்றின் விவரங்களை
காணலாம்.

***********

அகத்தியர் கூறும் பதில் :உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் அந்த உடலுக்கு யாதொரு மதிப்பும் கிடையாது. ஒன்று உடலைச் சுட்டெ...
20/02/2022

அகத்தியர் கூறும் பதில் :
உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் அந்த உடலுக்கு யாதொரு மதிப்பும் கிடையாது. ஒன்று உடலைச் சுட்டெரித்து விடுகிறோம் அல்லது புதைகுழிக்குப் போகிறது. ஆக உயிர் தங்கி இருக்கும் வரையில்தான் இந்த உடலுக்கு அவசியமும், தேவையும், மரியாதையும் இருக்கிறது.

இப்படிப் பட்ட இந்த உடலும், உயிரும் எப்போது எப்படித் தோன்றுகின்றன? எது முதலில் உருவாகிறது?, உடலா?, உயிரா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர் தனது "அகத்தியர் ஆயுர் வேதம்” என்ற தனது நூலில் பதில் வைத்திருக்கிறார்.

"சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு கேளாய்
இன்னமுஞ் சுக்கிலத்தில் பிராணவாய்வதுவுஞ் சென்று
தின்னமாய் பிராணவாயுவு சென்றது கோபமுற்றி
யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய் வளர்க்கம்
சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங் கலக்குமென்று
பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும் குமிழிபோல
ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு மாய்ந்த
நாளிருபத்தைந்தி லருங்முளை போற்றோன்றும் "

- அகத்தியர்.

ஆணின் சுக்கிலத்தில் பிராணவாயு சென்றடைந்து கிளர்ச்சியுற்று உயிரணுக்கள் வளர்ச்சி அடையும். இந்த சமயத்தில் ஏற்படும் உறவினால், பெண்ணின் சுரோணியத்துடன் ஆணின் சுக்கிலம் கலந்து வாத, பித்த, கபம் என்று சொல்லப்படும் மூன்று விகற்பங்களும் அதனுடன் சேர்ந்து சிறு குமிழி போலாகி கருப்பையின் உட்சென்று தங்கி வளரத் துவங்கி, இருபத்தி ஐந்து நாளில் முளை போல தோன்றும் என்கிறார். இது உயிரற்ற ஒரு நிலை.

முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும்
பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி
யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள்
ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே.
- அகத்தியர்.

முதல் மாதத்தின் முடிவில் உருவான இந்த முளை பின்னர் வளர்ந்து ஒரு கட்டிபோல உருவாகுமாம். இரண்டாவது மாதத்தில் பிடறி, தோள், முதுகு ஆகிய பாகங்கள் உருவாகுமாம். மூன்றாவது மாதத்தில் உடல், விலா, இடுப்பு போன்றவைகள் உருவாகும்.அந்த கட்டதில் தான் கருவிற்கு உயிரும் வந்து இணையும் என்கிறார்.
ஆக,கருவானது மூன்றுமாத வளர்ச்சியின் பின்னரே உடலில் உயிர் வந்து சேருகிறது. அதன் பிறகே மற்ற அவயங்கள் வளரத்துவங்குகிறது.

இந்த தகவல்கள் எல்லாம் அறிவியல் வளராத பலநூறு வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்களால் தீர ஆராய்ந்து சொல்லப் பட்டிருக்கின்றன என்பதில்தான் இந்த தகவலின் மகத்துவமே அடங்கி இருக்கிறது. உடற்கூறியியலில் சித்தர் பெருமக்களின் ஆழ்ந்த அறிவு இன்றைய நவீன அறிவியலின் தெளிவுகளுக்கு கொஞ்சம் குறைந்ததில்லை என்பது நாம் பெருமிதத்துடன் நினைவு கூற வேண்டிய ஒன்று.(இணைப்பு - அகத்தியர் லோபாமுத்திரை மற்றும் அகத்தியர் வெண்கல உரு )

கல்லாதவனை! நல்கருத்தை மனதில் வையாதவனை!! பொல்லாதவனை! பொய் களவு காமத்தை நீக்கா நின்ற !எனை, நீ அடி  சேர்த்த அருட்கருணை என்ன...
20/02/2022

கல்லாதவனை!
நல்கருத்தை மனதில் வையாதவனை!!

பொல்லாதவனை! பொய் களவு காமத்தை நீக்கா நின்ற !எனை,

நீ அடி சேர்த்த அருட்கருணை என்னவோ!!

அகத்தீஸ்வரா..

20/02/2022

வாடாத மாலை, அணையாத விளக்கு
அற்புதங்கள் புரிந்த சிங்கம்புணரி
முத்துவடுகநாதர் சித்தர் கோவில்
🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

☘️சிங்கம்புணரி முத்துவடுகநாத சுவாமி சித்தர்.

☘️சிங்கம்புணரி மக்கள் ‘வாத்தியார் ஐயா’ என்றே இன்றளவும் அவரை அன்புடன் அழைக்கிறார்கள். சித்தர் ஜீவசமாதி அடைவதற்கு முன்பு அவர் கூறியபடியே இன்றளவும் அவரை வழிபடும் முறைகள் தொடர்கின்றன.

☘️சித்தபுருஷர்களின் வரலாறு அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்தது. பல ஆயிரம் சித்தர்கள் நம் மண்ணில் வாழ்ந்து மறைந்து இன்றும் சூட்சும ரூபமாய் அருள்பாலித்துவருகின்றனர். அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவர்தான் முத்துவடுகநாத சுவாமிகள். சிவகங்கையை அடுத்த சிங்கம்புணரியில் இவரது ஜீவசமாதி உள்ளது. இங்கு முத்துவடுகநாத சுவாமி ஜீவசமாதியில் கோயில் எழும்பிய வரலாறே சிலிர்ப்பூட்டுவது.

🌸கோயில் அமைந்த திருவிளையாடல்🌸

☘️சித்தர் மறைந்து சில காலங்கள் கழித்து அங்கு ஒரு கோயில் எழுப்பவேண்டும் என்று ஊர் மக்களுக்குத் தோற்றிற்று. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஊரில் இருந்த அனைவருக்குள்ளும் ஒரே நேரத்தில் அந்த ஆசை எழுந்தது. சித்தரின் விளையாடல்தான் என்று ஊர்மக்கள் நம்பினார்கள். பணிகள் தொடங்கின. அப்போது ஒரு நாள் கனமழை பெய்தது. மழையில் மண் அரிப்பு ஏற்பட ஜீவ சமாதியில் ஒரு சிறு ஓட்டை ஏற்பட்டது. விளையாட்டாக ஒரு சிறுமி சமாதியுள் என்ன இருக்கிறது என்று அந்தத் துளைவழியாகப் பார்த்தார். அந்த சிறுமிக்கு உடல் சிலிர்த்தது. சமாதியுள் ஒரு மகான் அமர்ந்து தியானம் செய்வதையும் அவர் கழுத்தில் மணம் வீசும் அழகிய மலர்மாலைகள் இருப்பதாகவும் விளக்கு ஒன்று சுடர்விட்டுப் பிரகாசிப்பதாகவும் கூறினாள்.

☘️இதைக் கேட்ட ஊர் மக்களுக்குப் பெரும் வியப்பு. அது எப்படிப் பல ஆண்டுகளுக்கு முன்பு அடக்கமான சித்தரின் மேல் வாடாத மலர்களும் அணையாத விளக்கும் இருக்கிறது என்று ஆச்சர்யப்பட்டு மேற்கொண்டு சித்தரின் தவத்தைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று முடிவு செய்து அந்த சமாதியைச் சீர் செய்து கோயில் எழுப்பி வழிபட்டனர். அதன் பின் அந்தச் சந்நிதியில் வந்து முறையிட்டவர்கள் அனைவருக்கும் வேண்டும் வரம் கிடைத்தது என்கிறார்கள் ஊர்மக்கள். ஜீவசமாதி அடைந்து 190 ஆண்டுகள் ஆனபிறகும் இன்றளவும் நம்பிக்கையுடன் வரும் பக்தர்களின் குறையை தீர்த்து வைக்கிறார் சித்தர்பிரான்.

☘️ராமநாதபுர சீமையின் குறுநில நாடான செம்பிநாட்டின் அரசன் பூவலவத்தேவனுக்கும் – குமராயி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு 5 வயது இருக்கும் போதே இவரது தந்தை இறைவனடி சேர்ந்தார். அரச உரிமை ஆசையால் முத்துவடுகநாதரைக் கொல்ல உறவினர்கள் திட்டமிட்டனர். செல்வத்தை விட மகனின் உயிரைப் பெரிதாக மதித்த தாய் மகனைத் தூக்கிக் கொண்டு இரவோடு இரவாக செம்பி நாட்டை விட்டு வெளியேறினாள். இருவரும் பாலமேடு என்னும் ஊரை அடைந்த போது, அந்த ஊரிலிருந்த செல்வந்தரான ஜெகந்நாதர் என்பவர் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தார்.

🌸பாம்பு குடைபிடித்த அதிசயம்🌸

☘️சிறுவனான முத்துவடுகநாதர் மாடுகள் மேய்ப்பதில் ஆர்வமாக இருந்தார். ஒரு நாள் மாடு மேய்க்க சென்றிருந்தபோது முத்துவடுகநாதர் உறக்கம் வந்துவிட அங்கேயே படுத்து உறங்கினார். அங்கு வந்த ஊர்மக்கள் கண்ட காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. முத்துவடுகநாதர் உறங்கிக் கொண்டிருக்க, அவர்‌ முகத்தில் வெயில் படாதபடி நாகப்பாம்பு படமெடுத்து அவர் தலைக்கு மேல் நின்று கொண்டிருந்தது. இவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல, ஒரு சித்தபுருஷர் என்பதை உணர்ந்த ஜெகந்நாதர் அவரைத் தன் மகன் போலவே நடத்தினார்.

☘️முத்துவடுகநாதர் சிறுவயது முதலே மிகுந்த ஞானத்துடன் திகழ்ந்தார். வராகி அம்மனின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். ஜெகந்நாதருக்கு ஒருமுறை ராஜ பிளவை நோய் ஏற்பட்டது. பல மருத்துவ நிபுணர்களால் குணப்படுத்த முடியாத நோயை சித்தர் வெறும் திருநீறை வைத்து குணப்படுத்தினார்.

☘️பின்னர் முத்துவடுகநாதர் தன் தாயுடன் அழகர் மலைக்கு சென்று பாலைய சுவாமிகளிடம் பல்வேறு உபதேசங்களைப் பெற்றார். பட்டூர்‌ என்னும் ஊரை அடைந்து அங்கு சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியை மேற்கொண்டார். அந்த ஊர் மக்கள் “வாத்தியார் ஐயா” என்று அவரை அழைத்தனர்.

🌸மந்திரக்கட்டை உடைத்து மகிமைபுரிந்த விளையாடல்🌸

☘️பட்டூருக்கு வடகிழக்கில் உள்ள சிங்கம்புணரியில் ‘பீதாம்பரர்கள்’ என்னும் மந்திரக் கூட்டம் மக்களுக்குப் பெரும் தொல்லை கொடுத்து வந்தனர். முத்துவடுகநாதரின் மகிமையை அறிந்த சிங்கம்புணரி மக்கள் பீதாம்பரர்களிடம் இருந்து தங்களைக் காக்க அவரை அழைத்தனர். அவர்களுக்கு உதவும் நோக்கோடு சித்தர்‌ சிங்கம்புணரி சென்றார்.

☘️சிங்கம்புணரியில் வைகாசித் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அந்த ஊர்க்கோயிலின் தெய்வத்தை மாந்திரீகர்கள் மந்திரக் கட்டுகளால் கட்டியதை உணர்ந்த சித்தர் அந்த ஊர்க்கோயில் தெய்வத்திடம் சென்று, ‘யான் உன்னைக் கூப்பிடுவேன்,ஏன்? என்று பதில் உரைக்க வேண்டும்.இல்லையேல் உதைப்பேன்’என்றார்.

☘️மந்திரக்கட்டுகள் நீங்கும் வண்ணம் அவர் அந்த சிலையை எட்டி உதைக்க சிலை நகர்ந்தது. ஆனால் இதை உணராத ஊர்மக்கள் சிலர் அவரின் மீது கோபம் கொண்டனர். சித்தரை பலமாகத் தாக்கி ஒரு குழிக்குள் தள்ளி மிளகாய்ப்புகையையும், சூரை முற்களையும் போட்டு மூடிவிட்டனர். ஆனால் அனைவருக்கும் நடுக்கத்தைத் தரும் வகையில் சித்தர் பத்திரமாக தன் வீட்டில் அமர்ந்து இருந்தார். அவரின் மகிமையை உணர்ந்த அனைவரும் அவரிடம் மன்னிப்பு வேண்டின

☘️மீண்டும் அவரிடமே பீதாம்பரர்களை விரட்ட வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். கோபம் தணிந்த சித்தர் தன்னுடைய மந்திர சக்தியால் ஒரு துணியைப் பல துண்டுகளாக கிழித்து அவற்றைப் பாம்பாக்கி மந்திரக்கூட்டத்தை ஓட ஓட விரட்டினார். இந்த ஊரிலேயே தங்கியிருந்த சித்தர் செய்த சித்து விளையாட்டுகள் ஏராளம்.

☘️சிங்கம்புணரி மக்கள் ‘வாத்தியார் ஐயா’ என்றே இன்றளவும் அவரை அன்புடன் அழைக்கிறார்கள். சித்தர் ஜீவசமாதி அடைவதற்கு முன்பு அவர் கூறியபடியே இன்றளவும் அவரை வழிபடும் முறைகள் தொடர்கின்றன. அவரே தேர்வு செய்ததைப் போல் சிவந்திலிங்கப் பண்டாரம் என்பவரின் வம்சாவழியினர் கோயில் பூஜைகளைச் செய்கின்றனர். சித்தர் வாழ்ந்த காலத்தில் அவரைப் பெரிதும் ஆதரித்த வணிகர்கள் கோயிலுக்காகப் பல பணிகளைச் செய்கிறார்கள். வெள்ளிக்கிழமை தோறும் கடைவீதியிலுள்ள வணிகர்கள் அனைவரிடமும் கோயிலுக்கான காணிக்கை பெறப்படுகிறது.

☘️சித்தர் வாழ்ந்த வீடும் சிங்கம்புணரியில் உள்ளது. சித்தரின் வம்சாவழியினர் அவர் செய்த வராகி வழிபாட்டை இன்றளவும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

☘️சித்தர் முத்துவடுகநாதரின் வம்சாவழியினரான திரு.ராமசுப்பிரமணியம் இது குறித்து கூறுகிறார்,

☘️“நாங்கள் சித்தர் ஐயாவிற்குப் பிறகு காலம் காலமாக இந்த வராகி வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வருகிறோம். எனக்கு முன் என் அப்பா செய்து வந்தார். கிட்டத்தட்ட 61 வருடங்களாக நான் இந்த வழிபாடு செய்து வருகிறேன். ஐயா அவரின் கையால் எழுதிய 300 ஓலைச்சுவடிகள் இன்றும் உள்ளன. அவற்றை வைத்தே இந்த வழிபாடுகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.” என்கிறார்.

☘️சித்தர் வாழ்ந்த வீட்டில் அமைந்திருக்கும் பூஜையறை அவர் வாழ்ந்த காலத்தில் இருந்தது போலவே அப்படியே பராமரிக்கப்பட்டு வருகிறது. அவர் உபயோகித்த பொருள்களான பாதரட்சைகள்,கைத்தடி போன்றவையும் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

☘️முத்துவடுகநாத சுவாமி சித்தர் கோயில்
வருடாவருடம் இந்தக் கோயிலில் நடைபெறும் சித்திரா பௌர்ணமி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து சித்தரைக் குளிர்விக்கிறார்கள். ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சித்தர் ஜீவசமாதி அடைந்த தினத்தில் குருபூஜை விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் 190 ஆவது குருபூஜை விழா நடக்க இருப்பது கூடுதல் சிறப்பாகும். ஆடிப் பெருக்கு தினத்தில் வணிகர்கள் சார்பில் அன்னதானப் பெருவிழா ஒன்றும் இங்கு நடைபெறுகிறது.

☘️சித்தர் முத்துவடுகநாதர் பக்தியுடன் வரும் அனைத்து மக்களின் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறார். குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் நலிவுற்றோர், மாந்திரீகத்தால் அல்லல் படுவோர் என அனைவருக்கும் சித்தரை வேண்டிக் கொள்ளுதல் நல்ல தீர்வாக அமைகிறது. பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களைப் பார்க்க நேர்ந்தாலோ, அவற்றை கொன்று விட்டாலோ முட்டையும் பாலும் வாங்கி சித்தருக்கு செலுத்துகிறார்கள். அந்த விஷப்பிராணிகளால் மேலும் இடையூறு நேராமல் சித்தர் காப்பாற்றுவார் என்பது இந்த ஊர் மக்களின் நம்பிக்கையாக உள்ளது. சித்தரின் உருவப்படம் இருக்கும் இடத்தில் விஷப்பிராணிகள் வராது எனவும் கூறுகின்றனர்.

☘️நம் வாழ்வின் அல்லல்கள் அகழ சிங்கம்புணரி சித்தரை வழிபடுவோம்! நலம் பெறுவோம்!வாடாத மாலை, அணையாத விளக்கு
அற்புதங்கள் புரிந்த சிங்கம்புணரி
முத்துவடுகநாதர் சித்தர் கோவில்
🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

☘️சிங்கம்புணரி முத்துவடுகநாத சுவாமி சித்தர்.

☘️சிங்கம்புணரி மக்கள் ‘வாத்தியார் ஐயா’ என்றே இன்றளவும் அவரை அன்புடன் அழைக்கிறார்கள். சித்தர் ஜீவசமாதி அடைவதற்கு முன்பு அவர் கூறியபடியே இன்றளவும் அவரை வழிபடும் முறைகள் தொடர்கின்றன.

☘️சித்தபுருஷர்களின் வரலாறு அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்தது. பல ஆயிரம் சித்தர்கள் நம் மண்ணில் வாழ்ந்து மறைந்து இன்றும் சூட்சும ரூபமாய் அருள்பாலித்துவருகின்றனர். அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவர்தான் முத்துவடுகநாத சுவாமிகள். சிவகங்கையை அடுத்த சிங்கம்புணரியில் இவரது ஜீவசமாதி உள்ளது. இங்கு முத்துவடுகநாத சுவாமி ஜீவசமாதியில் கோயில் எழும்பிய வரலாறே சிலிர்ப்பூட்டுவது.

🌸கோயில் அமைந்த திருவிளையாடல்🌸

☘️சித்தர் மறைந்து சில காலங்கள் கழித்து அங்கு ஒரு கோயில் எழுப்பவேண்டும் என்று ஊர் மக்களுக்குத் தோற்றிற்று. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஊரில் இருந்த அனைவருக்குள்ளும் ஒரே நேரத்தில் அந்த ஆசை எழுந்தது. சித்தரின் விளையாடல்தான் என்று ஊர்மக்கள் நம்பினார்கள். பணிகள் தொடங்கின. அப்போது ஒரு நாள் கனமழை பெய்தது. மழையில் மண் அரிப்பு ஏற்பட ஜீவ சமாதியில் ஒரு சிறு ஓட்டை ஏற்பட்டது. விளையாட்டாக ஒரு சிறுமி சமாதியுள் என்ன இருக்கிறது என்று அந்தத் துளைவழியாகப் பார்த்தார். அந்த சிறுமிக்கு உடல் சிலிர்த்தது. சமாதியுள் ஒரு மகான் அமர்ந்து தியானம் செய்வதையும் அவர் கழுத்தில் மணம் வீசும் அழகிய மலர்மாலைகள் இருப்பதாகவும் விளக்கு ஒன்று சுடர்விட்டுப் பிரகாசிப்பதாகவும் கூறினாள்.

☘️இதைக் கேட்ட ஊர் மக்களுக்குப் பெரும் வியப்பு. அது எப்படிப் பல ஆண்டுகளுக்கு முன்பு அடக்கமான சித்தரின் மேல் வாடாத மலர்களும் அணையாத விளக்கும் இருக்கிறது என்று ஆச்சர்யப்பட்டு மேற்கொண்டு சித்தரின் தவத்தைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று முடிவு செய்து அந்த சமாதியைச் சீர் செய்து கோயில் எழுப்பி வழிபட்டனர். அதன் பின் அந்தச் சந்நிதியில் வந்து முறையிட்டவர்கள் அனைவருக்கும் வேண்டும் வரம் கிடைத்தது என்கிறார்கள் ஊர்மக்கள். ஜீவசமாதி அடைந்து 190 ஆண்டுகள் ஆனபிறகும் இன்றளவும் நம்பிக்கையுடன் வரும் பக்தர்களின் குறையை தீர்த்து வைக்கிறார் சித்தர்பிரான்.

☘️ராமநாதபுர சீமையின் குறுநில நாடான செம்பிநாட்டின் அரசன் பூவலவத்தேவனுக்கும் – குமராயி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு 5 வயது இருக்கும் போதே இவரது தந்தை இறைவனடி சேர்ந்தார். அரச உரிமை ஆசையால் முத்துவடுகநாதரைக் கொல்ல உறவினர்கள் திட்டமிட்டனர். செல்வத்தை விட மகனின் உயிரைப் பெரிதாக மதித்த தாய் மகனைத் தூக்கிக் கொண்டு இரவோடு இரவாக செம்பி நாட்டை விட்டு வெளியேறினாள். இருவரும் பாலமேடு என்னும் ஊரை அடைந்த போது, அந்த ஊரிலிருந்த செல்வந்தரான ஜெகந்நாதர் என்பவர் தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்தார்.

🌸பாம்பு குடைபிடித்த அதிசயம்🌸

☘️சிறுவனான முத்துவடுகநாதர் மாடுகள் மேய்ப்பதில் ஆர்வமாக இருந்தார். ஒரு நாள் மாடு மேய்க்க சென்றிருந்தபோது முத்துவடுகநாதர் உறக்கம் வந்துவிட அங்கேயே படுத்து உறங்கினார். அங்கு வந்த ஊர்மக்கள் கண்ட காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. முத்துவடுகநாதர் உறங்கிக் கொண்டிருக்க, அவர்‌ முகத்தில் வெயில் படாதபடி நாகப்பாம்பு படமெடுத்து அவர் தலைக்கு மேல் நின்று கொண்டிருந்தது. இவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல, ஒரு சித்தபுருஷர் என்பதை உணர்ந்த ஜெகந்நாதர் அவரைத் தன் மகன் போலவே நடத்தினார்.

☘️முத்துவடுகநாதர் சிறுவயது முதலே மிகுந்த ஞானத்துடன் திகழ்ந்தார். வராகி அம்மனின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார். ஜெகந்நாதருக்கு ஒருமுறை ராஜ பிளவை நோய் ஏற்பட்டது. பல மருத்துவ நிபுணர்களால் குணப்படுத்த முடியாத நோயை சித்தர் வெறும் திருநீறை வைத்து குணப்படுத்தினார்.

☘️பின்னர் முத்துவடுகநாதர் தன் தாயுடன் அழகர் மலைக்கு சென்று பாலைய சுவாமிகளிடம் பல்வேறு உபதேசங்களைப் பெற்றார். பட்டூர்‌ என்னும் ஊரை அடைந்து அங்கு சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியை மேற்கொண்டார். அந்த ஊர் மக்கள் “வாத்தியார் ஐயா” என்று அவரை அழைத்தனர்.

🌸மந்திரக்கட்டை உடைத்து மகிமைபுரிந்த விளையாடல்🌸

☘️பட்டூருக்கு வடகிழக்கில் உள்ள சிங்கம்புணரியில் ‘பீதாம்பரர்கள்’ என்னும் மந்திரக் கூட்டம் மக்களுக்குப் பெரும் தொல்லை கொடுத்து வந்தனர். முத்துவடுகநாதரின் மகிமையை அறிந்த சிங்கம்புணரி மக்கள் பீதாம்பரர்களிடம் இருந்து தங்களைக் காக்க அவரை அழைத்தனர். அவர்களுக்கு உதவும் நோக்கோடு சித்தர்‌ சிங்கம்புணரி சென்றார்.

☘️சிங்கம்புணரியில் வைகாசித் திருவிழா நடந்து கொண்டிருந்தது. அந்த ஊர்க்கோயிலின் தெய்வத்தை மாந்திரீகர்கள் மந்திரக் கட்டுகளால் கட்டியதை உணர்ந்த சித்தர் அந்த ஊர்க்கோயில் தெய்வத்திடம் சென்று, ‘யான் உன்னைக் கூப்பிடுவேன்,ஏன்? என்று பதில் உரைக்க வேண்டும்.இல்லையேல் உதைப்பேன்’என்றார்.

☘️மந்திரக்கட்டுகள் நீங்கும் வண்ணம் அவர் அந்த சிலையை எட்டி உதைக்க சிலை நகர்ந்தது. ஆனால் இதை உணராத ஊர்மக்கள் சிலர் அவரின் மீது கோபம் கொண்டனர். சித்தரை பலமாகத் தாக்கி ஒரு குழிக்குள் தள்ளி மிளகாய்ப்புகையையும், சூரை முற்களையும் போட்டு மூடிவிட்டனர். ஆனால் அனைவருக்கும் நடுக்கத்தைத் தரும் வகையில் சித்தர் பத்திரமாக தன் வீட்டில் அமர்ந்து இருந்தார். அவரின் மகிமையை உணர்ந்த அனைவரும் அவரிடம் மன்னிப்பு வேண்டின

☘️மீண்டும் அவரிடமே பீதாம்பரர்களை விரட்ட வேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். கோபம் தணிந்த சித்தர் தன்னுடைய மந்திர சக்தியால் ஒரு துணியைப் பல துண்டுகளாக கிழித்து அவற்றைப் பாம்பாக்கி மந்திரக்கூட்டத்தை ஓட ஓட விரட்டினார். இந்த ஊரிலேயே தங்கியிருந்த சித்தர் செய்த சித்து விளையாட்டுகள் ஏராளம்.

☘️சிங்கம்புணரி மக்கள் ‘வாத்தியார் ஐயா’ என்றே இன்றளவும் அவரை அன்புடன் அழைக்கிறார்கள். சித்தர் ஜீவசமாதி அடைவதற்கு முன்பு அவர் கூறியபடியே இன்றளவும் அவரை வழிபடும் முறைகள் தொடர்கின்றன. அவரே தேர்வு செய்ததைப் போல் சிவந்திலிங்கப் பண்டாரம் என்பவரின் வம்சாவழியினர் கோயில் பூஜைகளைச் செய்கின்றனர். சித்தர் வாழ்ந்த காலத்தில் அவரைப் பெரிதும் ஆதரித்த வணிகர்கள் கோயிலுக்காகப் பல பணிகளைச் செய்கிறார்கள். வெள்ளிக்கிழமை தோறும் கடைவீதியிலுள்ள வணிகர்கள் அனைவரிடமும் கோயிலுக்கான காணிக்கை பெறப்படுகிறது.

☘️சித்தர் வாழ்ந்த வீடும் சிங்கம்புணரியில் உள்ளது. சித்தரின் வம்சாவழியினர் அவர் செய்த வராகி வழிபாட்டை இன்றளவும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

☘️சித்தர் முத்துவடுகநாதரின் வம்சாவழியினரான திரு.ராமசுப்பிரமணியம் இது குறித்து கூறுகிறார்,

☘️“நாங்கள் சித்தர் ஐயாவிற்குப் பிறகு காலம் காலமாக இந்த வராகி வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வருகிறோம். எனக்கு முன் என் அப்பா செய்து வந்தார். கிட்டத்தட்ட 61 வருடங்களாக நான் இந்த வழிபாடு செய்து வருகிறேன். ஐயா அவரின் கையால் எழுதிய 300 ஓலைச்சுவடிகள் இன்றும் உள்ளன. அவற்றை வைத்தே இந்த வழிபாடுகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.” என்கிறார்.

☘️சித்தர் வாழ்ந்த வீட்டில் அமைந்திருக்கும் பூஜையறை அவர் வாழ்ந்த காலத்தில் இருந்தது போலவே அப்படியே பராமரிக்கப்பட்டு வருகிறது. அவர் உபயோகித்த பொருள்களான பாதரட்சைகள்,கைத்தடி போன்றவையும் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

☘️முத்துவடுகநாத சுவாமி சித்தர் கோயில்
வருடாவருடம் இந்தக் கோயிலில் நடைபெறும் சித்திரா பௌர்ணமி விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து சித்தரைக் குளிர்விக்கிறார்கள். ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சித்தர் ஜீவசமாதி அடைந்த தினத்தில் குருபூஜை விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் 190 ஆவது குருபூஜை விழா நடக்க இருப்பது கூடுதல் சிறப்பாகும். ஆடிப் பெருக்கு தினத்தில் வணிகர்கள் சார்பில் அன்னதானப் பெருவிழா ஒன்றும் இங்கு நடைபெறுகிறது.

☘️சித்தர் முத்துவடுகநாதர் பக்தியுடன் வரும் அனைத்து மக்களின் பிரச்னைகளையும் தீர்த்து வைக்கிறார். குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் நலிவுற்றோர், மாந்திரீகத்தால் அல்லல் படுவோர் என அனைவருக்கும் சித்தரை வேண்டிக் கொள்ளுதல் நல்ல தீர்வாக அமைகிறது. பாம்பு, தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்களைப் பார்க்க நேர்ந்தாலோ, அவற்றை கொன்று விட்டாலோ முட்டையும் பாலும் வாங்கி சித்தருக்கு செலுத்துகிறார்கள். அந்த விஷப்பிராணிகளால் மேலும் இடையூறு நேராமல் சித்தர் காப்பாற்றுவார் என்பது இந்த ஊர் மக்களின் நம்பிக்கையாக உள்ளது. சித்தரின் உருவப்படம் இருக்கும் இடத்தில் விஷப்பிராணிகள் வராது எனவும் கூறுகின்றனர்.

☘️நம் வாழ்வின் அல்லல்கள் அகழ சிங்கம்புணரி சித்தரை வழிபடுவோம்! நலம் பெறுவோம்!

Address

Thiruvananthapuram

Telephone

+919442073203

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ நந்திதேசம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category