அப்பர் தொண்டர் அணி, நால்வர் கோயில், திருக்கழுக்குன்றம்

  • Home
  • India
  • Thirukalukundram
  • அப்பர் தொண்டர் அணி, நால்வர் கோயில், திருக்கழுக்குன்றம்

அப்பர் தொண்டர் அணி, நால்வர் கோயில், திருக்கழுக்குன்றம் அப்பர் தொண்டர் அணி,நால்வர் கோயில்,திருக்கழுக்குன்றம்

"அப்பர் தொண்டர் அணி" : தொடக்கம் (11-மே-1977)

'அறிவுக்கடல்' மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். இவர் தந்தையார் சொக்கநாதர், தாயார் சின்னம்மையார். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும் , அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார

். பின்னர் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். அவர் தம்முடை பிள்ளைகள் திருநாவுக்கரசு,நீலாம்பிகை தவிர மற்றவர்களின் வடமொழிப்பெயர்களைத், திருஞான சம்பந்தம்: அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம் : மணிமொழி, சுந்தரமூர்த்தி: அழகுரு, திரிபுரசுந்தரி : முந்நகரழகி எனத் தனித்தமிழாக்கினார்.

தமிழ் இலக்கண இலக்கியங்களிற் சிறந்த புலமையும் சைவ சித்தாந்த நுண்பொருள்களோடு சமய நூற் புலமையும் மிக்க வரும் 'அறிவுக்கடல்' மறைமலையடிகளின் தலை மாணவரும் ஆகிய திருக்குறள் பீடம் முதற்குரவர்.தவத்திரு.அழகரடிகள் சமயப்பணி செய்வதற்கு திருக்கழுக்குன்றத் தலத்தை தெரிந்தெடுத்தார். அவர் "திருக்கோயில்" நவம்பர் 1976 இதழில் " 'குருவருளால் திருவருள்' என்னும் உண்மைக்குத் திருக்கழுக்குன்றத்தலம் தகுதியாய் இருக்கிறது. ஆண்டுக்கு ஒருகால் சித்திரை முதல் ஆடி வரையில் வரும் நால்வர் திருநாட்களில் திருக்கழுக்குன்றம், நால்வர் கோயிலுக்கு வந்து வழிபடுதல் சிறப்பாகும். தெய்வத் திருமுன்னிலையும்(மலைக்கு நேர் எதிரே), நால்வர் திருமுன்னிலையும் ஒன்றாய் இருப்பதோடு, நால்வர் திருக்கோயில் தனிக்கோயிலாக மலை தாழ்வரையில் நேரே அமைந்திருக்கின்றது. திருக்கழுக்குன்றம் பிணி தீர்த்து அருள் சேர்க்கும் மலைத்தலம் என்பது கவனத்திற்குரியது. சித்திரைச் சதயம் அப்பர் திருநாளில் சமயத்தொண்டர்கள் திருக்கழுக்குன்றத்தில் ஒருங்கே கூடி வழிபாடு செய்யலாம்" என்று தன் உள்ளக்கிடங்கையை வெளிப்படுத்தி உள்ளார்.


திருக்குறள் பீடம் முதற்குரவர் தவத்திரு அழகரடிகளின் அருட்கட்டளையின்படி 11-05(மே)-1977 பிங்கள ஆண்டு சித்திரைத் திங்கள் 29 சதய நன்னாளில் "அப்பர் தொண்டர் அணி" 'குருகுல மாணவர்','கேதாரசசெல்வர்' ஒளியகம் சிவத்திரு. ந.ரா.ஆடலரசு (அம்பலவாண தேசிகர்) அவர்களால் தொடங்கப்பட்டது. இவ்வணியின் வழிவழித் தலைவர்களாக திருக்குறள் பீடாதிபதிகள் இருப்பார்கள். இவ்வணியின் நோக்கங்களுள் தலையாயதான திருக்கழுக்குன்றம் நால்வர் கோயிலின் திருநாள் விழாக்களை வளர்ச்சி முகமாகக் கவனித்து வருதல் மற்றும் நால்வர் திருநாள் விழாக்களை நடத்தும் நான்கு திருக்கூட்டத் தொண்டர்களுடன் கலந்து பணி செய்தல் ஆகிய நோக்கங்களுக்கு ஒப்ப அப்பர் தொண்டர் அணியினர் செயலாற்றி வருகின்றனர்.

தற்போது இவ்வணியின் தலைவராக திருக்குறள் பீடம் சிவத்திரு. குருபழநி அடிகள் அருளாட்சி செய்து வருகின்றார்கள். 'கேதாரச்செல்வர்' ஒளியகம் சிவத்திரு. ந.ரா.ஆடலரசு (அம்பலவாண தேசிகர்) அவர்களால்,திருக்குறள் பீடம் முதற்குரவர் தவத்திரு அழகரடிகளின் அருட்கட்டளையின்படி, தொடங்கப்பட்ட அப்பர், சுந்தரர் விழாக்களையும், திருஞானசம்பந்தர் இசைவிழாவையும் 'தமிழ்நெறி வேள்வி செம்மல்' 'சைவத்தமிழ்மணி' ஒளியகம்.சிவத்திரு.ந.ஒளியரசு அவர்கள் அறக்கட்டளை செயலாளராக இருந்து நடத்திவருகிறார்.

29/11/2025
முத்து விழா காணும் சித்தாந்த சரபம் அருணை பாலாறாவாயன் ஐயா - பா.சாந்த குமாரி அம்மை திருவடிகளை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம்....
14/09/2025

முத்து விழா காணும் சித்தாந்த சரபம் அருணை பாலாறாவாயன் ஐயா - பா.சாந்த குமாரி அம்மை திருவடிகளை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறோம்.!!!

Arunai Palaravayan

வழிவழியாக தந்தையார் மகாவித்துவான் அருணை வடிவேலனார் வழியில் தெய்வத் தமிழ் தொண்டு ஆற்றும் ஐயா அவர்களுக்கு இயன்றவரை உதவியும், அன்னாரின் நூல்கள் அனைவரும் படித்து பயன் பெற முயல்வமாக !!!

அப்பர் தொண்டர் அணி, நால்வர் கோயில் , திருக்கழுக்குன்றம்

"குறிப்பறிதல்" (அருட்குருநாதர் அறிவுக்கடல் மறைமலை  அடிகளாரின் 'உலகியல் திறனில்' குறிப்பறிதலின் முதன்மை பற்றிஅருட்குருநாத...
07/09/2025

"குறிப்பறிதல்"

(அருட்குருநாதர் அறிவுக்கடல் மறைமலை அடிகளாரின் 'உலகியல் திறனில்' குறிப்பறிதலின் முதன்மை பற்றி
அருட்குருநாதர் திருக்குறள்பீடம் அழகரடிகள் எழுதியருளியது.
அரிய ஆய்வுக் கட்டுரையில் இருந்து ஒரு சிறுபகுதி...)

"உலகம் பலவகை" என்று பெரியோர் கூறுவர். மக்கள் பல வகையான உள்ளம் வாய்ந்தவர்களாக இருப்பதே அப்பழமொழிக்குக் காரணம். பலர் பல குறிப்பு உடையவர்கள் என்பது இதனால் தெரிகிறது. "உலகியல் உணர்வு" என்பது குறிப்புணர்ந்து செயலாற்றுவதைப் பொறுத்திருக்கிறது.

தெய்வத் திருவள்ளுவர், தமது பொதுமறையைச் சுருக்கமாக யாத்தவர். அத்தகைய பெரியவர் "குறிப்பறிதல்" என்னும் அதிகாரத் தலைப்பை மட்டும் "பொருட்பாலில்" ஓர் இடத்திலும், இன்பப் பாலில் மற்றோர் இடத்திலும் அமைத்திருக்கிறார். இன்பப் பாலிலேயே "குறிப்பறிவுறுத்தல்" என்பது வேறொரு இடத்திலும் வருகின்றது. அவ்வளவோடு நில்லாமல்,

"குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்

யாது கொடுத்தும் கொளல்"

என்றும் அவர் அருளிச் செய்கின்றார். உடம்பையே இழந்து விட்டால், பின்பு, வாழ என்ன இருக்கிறது? குறிப்பினுள் குறிப்பறிவதாய் இருந்தால் உடம்பின் உறுப்புக்களையும் வழங்கிவிடலாம் என்பது திருவள்ளுவர் கருத்தாயிருக்கிறது; கண்ணையும் இழந்து விடலாம் போலும். அப்படியானால் "குறிப்பறிதல்" எவ்வளவு முதன்மையானது என்பது இதனால் தெரிந்து கொள்ளலாம்.

அறிவு பெருகும் பொருட்டுக் கற்பது கூட, ' உலகத்தாரோடு ஒட்ட ஒழுகுதலையே பொறுத்திருக்கிறது' என்று அவர் தெரிவிக்கிறார். அல்லாதவரைக் கற்றவராகவே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்"

என்பது அவர் பொய்யா மொழி. கோட்பாடு பிறழாமல் ஒழுக வேண்டும், குறிப்பறிந்தும் நடக்க வேண்டும், அவரவர் பண்பறிந்தும் செயலாற்ற வேண்டும். இன்னார் இன்ன செயலுக்கு உரியவர் என்னும் வகை தெரிந்து அவரை ஏவ வேண்டும். தன் இனத்தாரையும் காக்க வேண்டும் என்பனவெல்லாம் திருமறை கற்பிக்கும் நெறிகள்.

"குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில

வேண்டுப வேட்பச் செயல்."

இங்ஙனம் எத்தனையோ பல திருக்குறள் உண்மைகளுக்கு ஏற்ப அடிகளார் தம் செயல்களை உலகியல் இயற்கைக்கண் கொண்டு நோக்கிச் செய்து நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இவ்வளவு சிறப்புகளுக்கு அடிகளார் உலகியல் திறத்தில் எவ்வளவு மேம்பட்டவர்களாக இருந்தாக வேண்டும் என்பதை எல்லாரும் எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

- அடிகளின் தலைமாணாக்கர் திருக்குறள் பீடம். அழகரடிகள்

குருவருட்பணியில்,

அப்பர் தொண்டர் அணி, நால்வர் கோயில், திருக்கழுக்குன்றம் மற்றும்
தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றம், சென்னை - 01. (https://www.facebook.com/ApparThondarAni/)

திருக்குறள் பீடம் முதற்குறவர்  அருட்டிரு அழகரடிகளார் அவர்கள் மற்றும்சைவசித்தாந்தச் சான்றோர் சிவநெறிச்செம்மல் சைவசித்தாந்...
30/08/2025

திருக்குறள் பீடம் முதற்குறவர் அருட்டிரு அழகரடிகளார் அவர்கள் மற்றும்
சைவசித்தாந்தச் சான்றோர் சிவநெறிச்செம்மல் சைவசித்தாந்தச் சான்றோர் 'ஒளியகம்' ந ரா ஆடலரசு ஐயா அவர்களின் குருவருள் துணையோடு,

அருட்குருநாதர் ஒளியகம் ந. ஒளியரசு ஐயா அவர்களின் திருமுன்னிலையில்,

456 ஆவது மாத கூட்டு வழிபாடு

அடியார் அன்பர் பெருமக்கள் வருக வருக!!!

குருவருள் திருவருள் பெறுக!!

சிவனடி மறவாத் திருத்தொண்டர் தாள் போற்றி!!

அவனடி அணையும் அன்பர் அடி போற்றி!!!

கூகுள் மேப் மூலம் கோயிலுக்கு வர : https://maps.app.goo.gl/xmC8iZKZGkioZYX9A

தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றம், சென்னை - 01

அருட்குருநாதர் "அறிவுக்கடல்" மறைமலை அடிகளார் குருபூசை விழா - 75 ஆம் ஆண்டு திருவருளால் நல்லூழ் வாய்க்கப்பெற்ற அடியார் அன்...
16/08/2025

அருட்குருநாதர் "அறிவுக்கடல்" மறைமலை அடிகளார் குருபூசை விழா - 75 ஆம் ஆண்டு

திருவருளால் நல்லூழ் வாய்க்கப்பெற்ற
அடியார் அன்பர் பெருமக்கள் அவசியம் வந்து கலந்துகொண்டு குருவருள் பெற்று உய்ய வேண்டுகிறோம்.

"மறைமலையடிகளாரது பெருமையை மதியாதவர் யாரும் இருக்க முடியாது. ஆனால், அதனை அளந்தறிவது நமக்கு அரிது. ஏனெனில், இன்றும் நாம் பேசும் தமிழ், எழுதும் தமிழ், கேட்கும் தமிழ் என அனைத்தும் அவர் நமக்குத் தந்த தமிழ். நம் தமிழறிவு, நம் தமிழ்ப்பற்று, நம் தமிழின எழுச்சி யாவும் அவர் நமக்குத் தந்த தமிழறிவும், தமிழ்ப்பற்றும், தமிழின எழுச்சியுமே. நம்மிடையே உள்ள பெரியார், அறிஞர், கலைஞர், எழுத்தாளர், தமிழ்ப்பற்றாளர் யாவரும் அத்தமிழ் மலையிலிருந்து பிறந்து வளர்ந்த பேராறுகளும், சிற்றாறுகளுமே" - பொன்னி இதழ்

நடைபெறும் இடம் : கமல விநாயகர் சத் சங்கம், ஐ.சி.எப், சென்னை - https://maps.app.goo.gl/e6JybinouxBhLBat6

#தமிழ் #மறைமலையடிகள் #தனித்தமிழ்
#குருபூசை #தமிழர் #வழிபாடு #மொழி #தமிழ்க்கவிதை #தமிழ்மொழி #உரைநடை
#தூயதமிழ் #கலப்படமில்லாதமிழ் #தமிழ்நாடு #சுவாமி #சுவாமிவேதாசலம் #வேதாசலம் #பல்லாவரமுனிவர் #அறிவுக்கடல் #தமிழ்வாழ்க #தமிழ்வெல்க #சைவசித்தாந்தி #சைவசித்தாந்தம் #சைவம் #ஆராய்ச்சி #ஆய்வுத்திறன் #மொழித்திறன் #சைவத்திறன் #ஆசிரியத்திறன் #ஆசிரியர்மறைமலையடிகள் #குருநாதர் #பல்லாவரம்

சீர் அடியார்கள் திருவடி பணிந்து அழைத்து மகிழும்,

தெய்வீக சித்தாந்த இலக்கிய மன்றம், சென்னை,
பவானி சிவனடியார் திருக்கூட்டம், பவானி

அருட்குருநாதர் சிவத்திரு மறைமலையடிகள் 75 ஆம் ஆண்டு குருபூசை விழாநாள்: 17.08 2025 அன்று ஞாயிற்றுக்கிழமைஇடம்: சென்னை கமல வ...
11/08/2025

அருட்குருநாதர் சிவத்திரு மறைமலையடிகள் 75 ஆம் ஆண்டு குருபூசை விழா
நாள்: 17.08 2025 அன்று ஞாயிற்றுக்கிழமை

இடம்: சென்னை கமல விநாயகர் சத்சங்கம் ஐ.சி.எஃப் .

நிகழ்ச்சி நிரல்:
நேரம் காலை:7.30 முதல் 9.30 வரை
அருட்குருநாதர் சிவத்திரு மறைமலையடிகள் திருமேனிக்கு திருக்குட நன்னீராட்டு விழா

முன்னிலை :
சிவத்திரு.மறை தாயுமானவன்


அருட்குருநாதர் கயிலைமாமணி சைவத்தமிழ்மணி ஒளியகம் சிவத்திரு ந.ஒளியரசு ஐயா அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

காலை : 9.30 மணிக்கு
திருவாசக செந்நாவலர்
திரு பா.சற்குருநாதன் ஓதுவார் திருமயிலை
அவர்களின்
சொக்கநாத வெண்பா இசை விரலி வெளீயிடு .

சிறப்பு
சொற்பொழிவு
ஞானாசிரியர்:
சிவத்திரு ப.குமரலிங்கம்
அவர்கள்
செயலாளர் மணிவாசகர் அருட்பணி மன்றம்,கோவை
தலைப்பு: மறைமலை அடிகள் மொழித்திறன்

ஞானாசிரியர்:
சிவத்திரு அ.தியாகராசன் ஐயா அவர்கள் ,
தலைவர் அரன்பணி அறக்கட்டளை .
தலைப்பு:
மறைமலை அடிகள் சைவத்திறன்.

ஞானாசிரியர்:
சிவத்திரு
அ.மோகன்ராசு அவர்கள்,
செயலாளர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை பவானி.
தலைப்பு: மறைமலை அடிகளின் உரைத்திறன்.

அருட்குருநாதர் சிவத்திரு மறைமலையடிகள் 75 ஆம் ஆண்டு குருபூசை விழாநாள்: 17.08 2025 அன்று ஞாயிற்றுக்கிழமைஇடம்: சென்னை கமல வ...
07/08/2025

அருட்குருநாதர் சிவத்திரு மறைமலையடிகள் 75 ஆம் ஆண்டு குருபூசை விழா
நாள்: 17.08 2025 அன்று ஞாயிற்றுக்கிழமை

இடம்: சென்னை கமல விநாயகர் சத்சங்கம் ஐ.சி.எஃப் .

நிகழ்ச்சி நிரல்:
நேரம் காலை:7.30 முதல் 9.30 வரை
அருட்குருநாதர் சிவத்திரு மறைமலையடிகள் திருமேனிக்கு திருக்குட நன்னீராட்டு விழா


அருட்குருநாதர் கயிலைமாமணி சைவத்தமிழ்மணி ஒளியகம் சிவத்திரு ந.ஒளியரசு ஐயா அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

காலை : 9.30 மணிக்கு
திருவாசக செந்நாவலர்
திரு பா.சற்குருநாதன் ஓதுவார் திருமயிலை
அவர்களின்
சொக்கநாத வெண்பா இசை விரலி வெளீயிடு .

சிறப்பு
சொற்பொழிவு
ஞானாசிரியர்:
சிவத்திரு ப.குமரலிங்கம்
அவர்கள்
செயலாளர் மணிவாசகர் அருட்பணி மன்றம்,கோவை
தலைப்பு: மறைமலை அடிகள் மொழித்திறன்

ஞானாசிரியர்:
சிவத்திரு அ.தியாகராசன் ஐயா அவர்கள் ,
தலைவர் அரன்பணி அறக்கட்டளை .
தலைப்பு:
மறைமலை அடிகள் சைவத்திறன்.

ஞானாசிரியர்:
சிவத்திரு
அ.மோகன்ராசு அவர்கள்,
செயலாளர் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை பவானி.
தலைப்பு: மறைமலை அடிகளின் உரைத்திறன்.

Address

நால்வர் கோயில், திருக்கழுக்குன்றம்
Thirukalukundram
603109

Alerts

Be the first to know and let us send you an email when அப்பர் தொண்டர் அணி, நால்வர் கோயில், திருக்கழுக்குன்றம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to அப்பர் தொண்டர் அணி, நால்வர் கோயில், திருக்கழுக்குன்றம்:

Share