23/04/2026
தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் — எண்களில் மறைந்திருக்கும் அரசியல் சிக்கல்
ஒரு ஜனநாயகத்தின் நம்பகத்தன்மை, அதன் தேர்தல் முறையின் வெளிப்படைத்தன்மையில் தான் அமைகிறது. வாக்காளர் பட்டியல் என்பது வெறும் நிர்வாகப் பட்டியல் அல்ல; அது மக்கள் அதிகாரத்தின் உயிர்நாடி. ஆனால் சமீப காலங்களில் வெளிவந்த வாக்காளர் பட்டியல் தரவுகளை ஆராய்ந்தால், சில முக்கியமான கேள்விகள் தவிர்க்க முடியாதவையாக எழுகின்றன.
2025 டிசம்பரில் SIR நடவடிக்கைக்கு பிறகு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5,43,76,755 பேர் இருந்தனர். பின்னர் 2026 பிப்ரவரியில் வெளியான இறுதி பட்டியலில் இந்த எண்ணிக்கை 5,67,07,380 ஆக உயர்ந்தது. இது இயல்பான வளர்ச்சி எனக் கருதலாம். ஆனால், அதற்கு முன் SIR நடவடிக்கையில் 97 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம்.
இதற்கு மேலாக, மார்ச் 26 வரை புதிய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 10 அன்று வெளியான “இரண்டாம் இறுதி பட்டியலில்” வாக்காளர்கள் எண்ணிக்கை 5,73,43,291 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, மூன்று மாதங்களில் சுமார் 29.6 லட்சம் பேர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன் பொருள் என்ன?
ஒரு பக்கம் பெருமளவில் நீக்கம், மறுபக்கம் அதற்குச் சமமான அளவில் புதிய சேர்ப்பு. இது நிர்வாகத் திருத்தமா? அல்லது தேர்தல் அரசியலின் மறைமுக விளையாட்டா? என்பது முக்கியமான கேள்வி.
தொகுதி அளவிற்கு கொண்டு சென்றால், சராசரியாக 40,000க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டிருக்க, 12,000க்கும் மேற்பட்டோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இத்தகைய பெரும் மாற்றங்கள், ஒவ்வொரு தொகுதியிலும் வாக்கு கணக்கீட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.
இப்போது வாக்குப்பதிவு சதவீதத்தை பார்க்கலாம்.
90% வாக்குப்பதிவு நடந்தால் 5.16 கோடி பேர், 80% நடந்தால் 4.58 கோடி பேர், 70% நடந்தாலும் கூட 4.01 கோடி பேர் வாக்களிப்பார்கள்.
இந்த எண்ணிக்கைகள் வெறும் கணக்குகள் அல்ல; கடந்த தேர்தல் தரவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது மேலும் முக்கியமடைகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் 4.34 கோடி பேர் வாக்களித்தனர். அது அப்போதைய பட்டியலின் 69.72%. ஆனால் தற்போதைய பட்டியலை வைத்து அதே சதவீதம் கணக்கிட்டால், அது 4 கோடிக்கும் குறைவாக வந்து விடுகிறது.
தமிழ்நாட்டின் வாக்குப்பதிவு வரலாறு இப்படிப் பேசுகிறது — 4 கோடிக்கு கீழ் வாக்குப்பதிவு செல்வது அபூர்வம். 2021 சட்டமன்றத் தேர்தலிலேயே 4.62 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர். தற்போதைய பட்டியலின் அடிப்படையில் இதே அளவு வாக்குகள் பதிவானால், 1/3