24/05/2026
கடந்த ஆறு வருடங்களாக நமது பங்கிலே சிறப்பாக பணியாற்றி நமது ஆலயத்தை வானுயர உயர்த்தி புதிதாக புதுப்பித்து, நம் பங்கு மக்களின் உள்ளங்களிலே இடம் பெற்றவர்களாய் பணி மாற்றம் பெற்று செல்லும் நமது பாசமிகு பங்குத்தந்தை R. மரிய பிரபு அவர்களது நன்றி திருப்பலி மற்றும் பிரியாவிடை நிகழ்வு. அருட்தந்தை அவர்களது பணி வாழ்வு சிறக்க தொடர்ந்து நாம் இறைவனை வேண்டுவோம் இறைவன் எந்நாளும் அவரோடு இருந்து அவருக்கு நல்ல உடல், உள்ள, ஆன்ம சுகம் தந்து எந்நாளும் அவரது பேரின்ப இதயத்திலே குடிகொள்ள தேவையான அருளை தந்தருள வேண்டுமாய் ஜெபிப்போம்.