27/01/2020
மெசஞ்சரில் வந்தது.
100/100 உண்மை
என்னவோ தமிழகத்தில் நடக்கும் ஹிந்துத்வர்கள் படுகொலை சம்பவங்களை மட்டும் மத்திய பாஜக தலைமை கண்டுகொள்வதில்லை என்ற ரீதியில் சில பதிவுகளைப் பார்க்க நேர்ந்தது...
சரி..மேற்குவங்கத்திலும் , கேரளாவிலும் வாரம் ஒரு ஹிந்து இயக்கத்தவர் கொல்லப்படுகிறார்களே , அதற்கு மட்டும் என்ன நடவடிக்கை எடுத்துக்கிழித்து விட்டார்கள்? இத்தனைக்கும் மத்தியில் ஆட்சிக்கு வந்து ஆறு வருடங்கள் ஆகின்றன... இதுவரை யார்மீது , என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
கேட்டால் விசாரணை நடக்கிறது வழக்கு நடக்கிறது என்பார்கள்... இந்த ஈரவெங்காயமெல்லாம் மத்திய அரசு தலையிடாவிட்டாலும் நடக்கும்...இவர்கள் கிழித்தது என்ன? கேட்டால் சட்டம் - ஒழுங்கு மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பார்கள்...பின்னே மத்திய அரசாங்கமும் , என்.ஐ.ஏ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளும் கேசம் பிடுங்கவா இருக்கின்றன?
கோவை சசிகுமார் வழக்கை என்.ஐ.ஏ எடுத்ததே , அது என்ன ஆயிற்று? குறைந்தபட்சம் இங்கு சிறையில் ஐந்து நட்சத்திர வசதிகளுடன் ஜாலியாக அனுபவிக்கும் ஜிஹாதிகளை வேறு மாநில சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்திருந்தால் கூட மற்றவர்களுக்கு கொஞ்சம் பயமாவது வந்திருக்கும்...
ஆனால் ஒன்று , இப்போது மட்டுமல்ல... எப்போதுமே இப்படித்தான்... பாஜக மட்டுமல்ல... ஆர்.எஸ்.எஸ்சும் இதே லட்சணம் தான்...அதிகபட்சம் ஒரு அஞ்சலி நிகழ்ச்சி... ஒரு கண்டன அறிக்கை...அவ்வளவு தான்... அடுத்தவேலையைப்பார்க்கப் போய்க்கொண்டே இருப்பார்கள்...
ஆக , உயிரை விட்டவனைப்பற்றி கவலையும் இல்லை...இப்போது பொறுப்பில் இருப்பவனின் உயிரைப்பற்றிய அக்கறையும் இல்லை...வாய்க்கரிசி வாங்கிக்கொண்டு தீர்த்த யாத்திரை புறப்படுவதைப்போல , ஹிந்து இயக்கங்களுக்கு வரும்போதே எந்நேரமும் உயிரைவிட தயாராக வரவேண்டும்.... அவ்வளவுதான்...
அவர்கள் நிலைப்பாடு இதுதான் என்பதை பலமுறை காட்டிவிட்டார்கள்.. இப்போது பொறுப்பில் இருப்பவர்களும் , இனி பொறுப்புக்கு வர இருப்பவர்களும் தான் இதைப் பற்றி முடிவு செய்ய வேண்டும் ...உங்களுக்கு எந்த குடும்பப் பொறுப்பும் இல்லை... உயிரைப் பற்றிய பயமும் இல்லை ..உங்களை நம்பி இருப்பவர்கள் யாரும் இல்லை என்றால் ஹிந்து இயக்கங்களுக்கு வரலாம்... இல்லை... உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது , உங்களை நம்பி மனைவி குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் பேசாமல் உங்கள் பிழைப்பைப் பாருங்கள்...
இங்கே எவருக்கும் , எவரைப் பற்றியும் அக்கறை இல்லை... அவரவர் சம்பாத்தியம் அவரவருக்கு முக்கியம்..ஒரு பக்கம் மாநில பொறுப்பில் இருப்பவர்கள் கட்சிப் பதவியை ஏலம் விடுதல் , எஸ்.ஆர்.எம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிடம் காலேஜ் சீட் கோட்டா வாங்கி கல்லா கட்டுதல் என்று பிஸியாக இருக்கிறார்கள்...
இன்னொரு பக்கம் 25 பட்டுப் புடவைகளை வாங்கிக் கொண்டு மத்திய அரசுப் பதவியையும் விருதுகளையும் தி.க காரனுக்கெல்லாம் வாரி வழங்குகிறார்கள்...
கோவையில் கொல்லப்பட்ட சசிகுமாரும் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்தான் ...ஆனால் அவர் குடும்பம் இன்று சீரழிகிறது ... ஆனால் தனிப்பட்ட பகை காரணமாக கொல்லப்பட்ட உடுமலை சங்கர் மனைவி கவுசல்யாவுக்கு மத்திய அரசுப் பணி , அதுவும் பாதுகாப்புத்துறையில் வழங்கப்பட்டுள்ளது ...( அதுவும் அவள் தி.கவினர் கட்டுப்பாட்டில் இருப்பது தெரிந்தும் ) ....இதுதான் இவர்கள் கட்சித் தொண்டர்களை கவனித்துக்கொள்ளும் லட்சணம் ...
மீண்டும் எச்சரிக்கிறேன் ...உங்களுக்கு உங்கள் குடும்பம் குழந்தை குட்டி இருந்தால் அதைப் பாருங்கள் ...
வலிவுள்ளது பிழைக்கும்...இந்துக்கள் தலையெழுத்து எப்படியோ அப்படி ஆகி விட்டுப் போகட்டும்... உங்களை நம்பி இருப்பது உங்கள் குடும்பம்... அதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்...