Thoranamalai Shri Murugan Temple

Thoranamalai Shri Murugan Temple “THORANAMALAI“ is an elephant shaped natural hill as part of the continuous chain of southern part of Western Ghats.

தென்றல் தவழும் தென்பொதிகை மலைத் தொடரில் திருநெல்வேலி மாவட்டத்தில்,தென்காசி-கடையம் பாதையின் மேற்கில் யானை வடிவமாய் அமைந்துள்ள மலை. இந்த மலையில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே அகத்தியர் தலைமையில் தேரையர் உள்பட பல சித்தர்கள் அமர்ந்து ஒரு கபால அறுவை சிகிச்சை நடத்தியுள்ளனர். உலகிலே முதல் கபால அறுவை சிகிச்சை நடந்த இடம் தோரணமலை தான் .இம்மலையில் நானூறு ஆண்டுகள் பழமையான முருகன் கோவில் ஒன்று உள்ளது. 1000

வருடங்களுக்கு முன்பு அகத்தியரின் மருத்துவமனையாக விளங்கிய இந்த தோரணமலை நாளடைவில் தூர்ந்துவிட்டது .இங்கு முருகனுக்கு அமைக்கபடிருந்த கோயிலும் காணாமல்போய்விட்டது
இதற்கிடையில் குற்றாலம் அருகிலுள்ள முத்துமாலைபுரம் என்னும் ஊரைச் சேர்ந்த நா.பெருமாள் என்பவரின் கனவில் வேல் ஏந்திய சிறுவன் தோன்றி மலை மேல் உள்ள சுனையில் தான் கிடப்பதாகவும் தன்னை வணங்குமாறும் கூறினான்.முருகபெருமானை வணங்கி சுனையில் தேடியபோது அங்கே முருகன் சிலை கிடைத்தது அதை எடுத்து தற்போது உள்ள இடத்தில் வைத்து வணங்க ஆரம்பித்தனர். இன்று வரை அந்த சிலையே மூலவராக வணங்கப்படுகிறது.
இதற்கு பின் தலைமைஆசிரியர் திரு.கு.ஆதிநாராயணன் (பரம்பரை அறங்காவலர்) என்பவர் இந்த கோயிலை மக்களுக்கு அறிமுகபடுத்த பல முயற்சிகள் செய்தார். கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள சுமார் 150 சினிமா தியேட்டர்களில் தோரணமலை குறித்த சிலைடு காட்டினர். ஒரு கோயிலுக்கு விளம்பரமாக இது போல் சினிமா தியேட்டரில் சிலைடு காட்டிய வரலாறு வேறு எங்கும் நடந்ததாக தெரியவில்லை .அதை பார்த்து பல பக்தர்கள் தோரணமலை வர ஆரம்பித்தனர் முருகபெருமானை வணங்க ஆரம்பித்தனர்.
இரு நதிகளுக்கிடையே ஒரு கோவில் இருந்தால் அது சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும் அந்த வகையில் தோரணமலையும் தனிச்சிறப்பு பெற்றது. தோரணமலைக்கு தென்புறம் மலையில் இருந்து பாய்ந்து வருகிறது ராமநதி,மலையின் வடபுறம் ஜம்பு நதி தவழ்ந்து வருகிறது.இந்த இரு நதிகளுக்கு இடையேதான் தோரணமலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த நதிகள் இரண்டும் தோரணமலைக்கு மாலையிட்டது போல் காணபப்டுகிறது. இந்த மலைக்குச் சென்றாலே நம்மை அறியாமல் உடல் நம் சிலிர்ப்தை நாம் அறிய முடியும்.அங்கெல்லாம் பலசித்தர்கள் அரூபமாக இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இம்மலையில் 64 சுனைகள் உள்ளன.இந்த சுனைகளில் உள்ள நீர் புனித நீராக கருதப்படுகிறது. இந்த சுனைகள் எல்லாம் சித்தர்கள் தற்போதும் தங்கி தவம் புரியும் இடமாகத்தான் பக்தர்கள் கருதுகிறார்கள். இந்த சுனை நீரை பருகி, இதில் நீராடி முருகனை வழிப்பட்டால் தீராத நோயும் தீருகிறது சகல சௌபாக்கியம் உண்டாகிறது என்பது மக்கள் அனுபவித்து கூறும் கூற்றாகும்.
அடிவாரத்தில் வல்லப விநாயகர்,கன்னிமார் அம்மன், வியாழ பகவான்,மற்றும் நவகிரகங்களுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. மேலும் சிவபெருமான்,சரஸ்வதி,மகாலட்சுமி ஆகியோரின் தரிசனமும் கிட்டுகிறது. அரசமரத்தடியில் வீற்றிருக்கும் சப்தகன்னியரை வணங்கி வளையல்களும் தொட்டில்களும் பிராத்தனையாக கட்டினால்வேண்டுதல் நிறைவேறுவது திண்ணம். மலைக்கு செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் தனிச் சன்னிதியில் பாலமுருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மலை ஏறி மூலவரை தரிசிக்கும் முன் இவரை வணங்கிச் செல்வது நலம் பயக்கும். உச்சியை அடைய 926 படிகட்டுகள் ஏற வேண்டும். ஒரு காலத்தில் இந்த படிகட்டுகள் கிடையாது பாறையில் பெரும்விரலை மட்டும் ஊனும்படி ஓட்டை வடித்து வைத்திருப்பார்கள் அதன் வழியாகத் தான் ஏற வேண்டும்.ஆனால் தற்போது அப்படியல்ல படிக்கட்டு வழியாக ஏறிச்செல்லலாம். தோரணமலை படிக்கட்டுகளை ஏறிச் செல்வது இந்த பிறவியில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் கடந்து விட்டதை உணர்த்துகிறது. வழியில் சுயம்பாக அமைந்த சிவபெருமானை தரிசிக்கலாம்.இந்த இடங்கள் எல்லாம் நல்லசுவாச காற்றும், அருமையான நறுமணம் தரும் மூலிகை காற்றும் நமது உடல் பிணியை போக்கும் வண்ணம் நம்மை தொட்டு செல்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கை அழகையும் அதில் தவழ்ந்து வரும் மேகக்கூட்டங்களையும், ரசித்துக்கொண்டே உச்சியை அடையலாம்.
மலையின் உச்சியில் உள்ள குகையில் தான் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.கையில் வேல் ஏந்தி மயில் வாகனத்தோடு நின்ற கோலத்தில் அழகின் அரசனாக திகழ்கிறார் மூலவர் முருகப்பெருமான். இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.முருகப்பெருமானின் இடதுபுறம் சற்று உயரமான இடத்தில் இருக்கும் சுனையில் இருந்து தான் முருகப்பெருமானுக்கு அபிஷேகத்துக்கு தண்ணீர் எடுத்துவரப்படுகிறது. மலை உச்சியில் பெரும் பாறைக்கு இடையில் இப்படி ஊற்று பொங்கி வருவதும் கடும் கோடையிலும் இது வற்றாமல் இருப்பது இறையருள் மட்டுமின்றி ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். மலை மீது ஏறி இதில் குளிப்பது ஆனந்தமாக இருப்பதோடு அருளும் கிடைப்பதை அந்தநொடியிலேயே உணரலாம். அதேபோல் முருகப்பெருமானின் வலதுபுறம்பாறையில் ஒரு கை மட்டுமே போகும் அளவுக்கு துவாரம் ஒன்று உள்ளது. அது சாதாரண துவாரம் அல்ல அதுவும் ஒரு சுனை தான் .அதனுள்ளும் தண்ணீர் எப்போதும் இருக்கும். எதிரே ராமர் பாதம் உள்ளது. அதன் அருகே பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னதியும் உள்ளது.

துன்பம் தீர்க்கும் தோரணமலை முருகனுக்கு ஒவ்வொரு ஆண்டும் தைபூசம், வைகாசி விசாகம், சித்திரை திருநாளும் முக்கிய திருவிழாக்களாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
துன்பம் தீர்க்கும் தோரணமலை,துலங்கி வரும் தோரணமலை, பாவம் போக்கும் புன்னியமலை யானை முகம் கொண்ட மலையின் மேல் வீற்றிருக்கும் இம்முருகனின் திருவீடு எழாம் படை வீடு என்று சொன்னால் மிகை அல்ல.

நலம் தரும் தைபூச நாயகனை, வைகாசி விசாகனை, வாரணம் ஆயிரம் பலம் தரும் தோரணமலை முருகனை
வணங்க ”அனைவரும் வருக அவனருள் பெறுக”.

29/04/2026

தோரணமலை அடிவாரத்தில் தினசரி மதியம் அன்னதானம் நடைபெற்று வருகிறது.

சாம்பார், ரசம், ஒரு கூட்டு என வழங்கி வந்த நிலையில் இனி கோடை காலத்தை முன்னிட்டு ரசத்திற்கு பதில் மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோரணமலையில் சித்திரை மாத பெளர்ணமி கிரிவலம் வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறும்.அனைவரும் வருக ; அவனருள் பெறுக! 🙏
28/04/2026

தோரணமலையில் சித்திரை மாத பெளர்ணமி கிரிவலம் வரும் வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறும்.

அனைவரும் வருக ; அவனருள் பெறுக! 🙏

கோடைக் காலம் வந்தாச்சு ;குழந்தைகளுக்கு விடுமுறையும் விட்டாச்சு ; இனி வரும் மே மாத ஞாயிறுகளில் தோரணமலைக்கு வரும் மாணவமணிக...
27/04/2026

கோடைக் காலம் வந்தாச்சு ;
குழந்தைகளுக்கு விடுமுறையும் விட்டாச்சு ;

இனி வரும் மே மாத ஞாயிறுகளில் தோரணமலைக்கு வரும் மாணவமணிகள் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்வுகள் யாவும் மனித மனதை கொள்ளை கொள்ளும் ;

விரைவில் அறிவிப்பு வரும் ;
கடந்த காலம் போல,
அனைவரும் தாங்கள் குடும்பத்துடன், உறவுகளுடன், நட்புகளுடன் கலந்து கொள்ள தயாராகுங்கள் !

தோரணமலை அடிவாரத்தில் உள்ள கட்டடத்தின் மேற்பகுதியில் இலையுதிர் காலத்தில் உதிர்ந்த சருகுகள் சுத்தம் செய்யப்படுகிறது ..தோரண...
21/04/2026

தோரணமலை அடிவாரத்தில் உள்ள கட்டடத்தின் மேற்பகுதியில் இலையுதிர் காலத்தில் உதிர்ந்த சருகுகள் சுத்தம் செய்யப்படுகிறது ..

தோரணமலை பக்தர் மூலம் மலையேறும் படிகளின் இருபுறமுள்ள மரக்கன்றுகள் நன்கு வளர்ந்திட சொட்டு நீர் பாசன வசதி உருவாகிறது .

நூலகம் விரிவாக்க வேலை ஆவுடையானூரில் உடன் பயின்று, இன்று சென்னையில் தொழிலதிபராக உள்ள திரு இராம ரத்ன ராஜ் மூலம் அலுமினியம் தடுப்பு வேலை துடிப்பாக நடைபெற்று வருகிறது.

கழிப்பறைகள் யாவும் வேகமாக நீர் பாய்ச்சும் மின் மோட்டார் மூலம் சுத்தம் செய்யப்படுகிறது.

குரங்களுக்கான குடிநீர் பகுதியும் அவ்வப்போது சுத்தம் செய்யப்படுகிறது.

சின்னத் திரைகளில் பல நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்த திரு கோபி அவர்கள் தோரணமலை முருகனின் அபிசேகம் மற்றும் பல வித அலங்காரத்...
18/04/2026

சின்னத் திரைகளில் பல நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்த திரு கோபி அவர்கள் தோரணமலை முருகனின் அபிசேகம் மற்றும் பல வித அலங்காரத்தில் தீபாராதனையை ஒளிப்பதிவு செய்தார்.
ஒளிப்பதிவு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த கோவில் தரிசனம் யூடியூப் தளத்தின் அதிபர் திரு துரை நாகராஜன் அய்யா அவர்களுக்கு நன்றி!

(சின்னத்) திரை வடிவம் பெற்றதும் ஒளிபரப்பாகும் சமயம் தங்களுக்கு தெரியப்படுத்தப்படும் ;

அவனருளின்றி அனைத்தும் சத்தியமாய் சாத்தியமில்லை 🌹🙏

தோரணமலை ஸ்ரீ முருகன் கோவிலில் பராபவ தமிழ்ப் புத்தாண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.அதிகாலை நடை திறக்கப்பட்டு அபிசேகம்...
15/04/2026

தோரணமலை ஸ்ரீ முருகன் கோவிலில் பராபவ தமிழ்ப் புத்தாண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதிகாலை நடை திறக்கப்பட்டு அபிசேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தோரணமலை பக்தைகள் 51 பானைகளில் சர்க்கரை பொங்கல் வைத்து, விவசாய பூஜைகள் சிறப்பாக நடந்திட உதவினர்.

வள்ளி தெய்வானை சமேத சமேத தோரணமலை உற்சவ மூர்த்திக்கு சிறப்பாக அபிசேகம் நடத்தப்பட்டு, தென்காசி திரு நம்பி குழுவினர் சிவ வாத்தியம் முழங்க, அடிவார வீதி உலா நடத்தப்பட்டது.

விவசாயிகள் கெளரவிக்கப்பட்டனர்.
வண்டி, மாடு, ஏர், கலப்பை, கூனை போன்ற விவசாய கருவிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

சமூக மேம்பாடு மற்றும் சிறப்பாக சேவை செய்வோருக்கு தோரணமலையான் விருது வழங்கப்பட்டது.
திரு முத்தாலங்குறிச்சி காமராசு அய்யா அவர்கள் விருது விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி தந்தார்கள்.

காலை முதல் மாலை வரை அன்னதானம் வழங்கப்பட்டது.

முத்துமாலைபுரம்
K. ஆதிநாராயணன் - -
A.சந்திர லீலா நினைவு மாலை நேர கட்டணமில்லா படிப்பக மாலைச் செல்வங்கள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
மாலையில் தோரணமலை பகுதி பக்தைகள் நடத்திய அகல் விளக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

கலந்து கொண்டோருக்கு
புளியோதரை, சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது.

முருகன் அருளுடன், பக்தர்கள் உதவிகளும் இணைந்து விழாவை சிறப்பாக நடத்திட உதவின! _🙏

11/04/2026

தோரணமலையில் பங்குனி மாத கடைசி வெள்ளி பூஜை சிறப்பாக நடைபெற்றது.

விவசாயம் தழைக்க, விவசாயி செழிக்க ஸ்ரீ வருண கலச பூஜை நடைபெற்றது.

காலை, மதியம் அன்னதானம் நடைபெற்றது.

உதவி வரும் பக்த உள்ளங்கள் வாழ்க .... .... வாழ்கவே!

திருச்செந்தூரின் கடலோரத்தில் ...😊
05/04/2026

திருச்செந்தூரின்
கடலோரத்தில் ...😊

சின்னையா டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களிடம் பணிபுரிந்த போது திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி அறநிலையத்தில் ஏப்ரல் 1...
04/04/2026

சின்னையா டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களிடம் பணிபுரிந்த போது திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி அறநிலையத்தில் ஏப்ரல் 1992 முதல் அக்டோபர் 1993 வரை பணிபுரிந்தேன்.

அந்த சமயத்தில் அய்யா அவர்கள் தனது சொந்த ஊரான காயாமொழி அம்மன் கோவிலில் சுற்றுச்சுவர் மற்றும் இரும்பு கிராதி அமைக்கும் வேலைகளை செய்து கொடுக்க முடிவெடுத்தார்கள்.

அப்போது அந்த வேலை கண்காணிப்பாளராக தெய்வத் திருவாளர் சந்திர சேகர ஆதித்தன் தாத்தா அவர்கள் நம்மை நியமித்தார்கள்.

உடன்குடி அன்னம் கட்டுமான கம்பெனி அதிபர் திரு சந்திரசேகர் அவர்களிடம் இந்த பணி ஒப்படைக்கப்பட்டது.
பணியும் சிறப்பாக நடந்துள்ளதாக சின்னையா அவர்கள் அனைவரையும் பாராட்டினார்கள்.

இந்த வழியே செல்லும் போதெல்லாம் உச்சி வெயிலில் பணி புரிந்த நாட்களை எண்ணி மனம் உச்சி குளிர மகிழ்வு கொள்ளும்.

டிவிஎஸ் சேம்ப்பில் பயணித்த
அந்த ஆன்மிக நாட்கள் ஆயுள் வரைக்கும் ஆர்வமுடன் பயணிக்கும்.

திருவேற்காடு அம்மன் கோவில் சுற்றுப் பிரகாரம், சேவார்த்திகள் தங்கும் விடுதியில் சில நாட்கள் வேலை செய்தாலும்,
இது போன்ற பணிகள் எந்தளவு புண்ணியம் தந்துள்ளது என்பதை தொடர்ந்து என் பதிவை படிக்கும் உங்களுக்கு தெரியும்தானே?

குறிப்பு : திருச்செந்தூர் பகுதி மட்டுமல்ல எந்த வண்டியில் பயணித்தாலும் பெரும்பாலும் முருகன் படம், வேல், ஓம் என அமர்ந்து முருகர் நம்முடனே பயணிக்கிறார் 🙏🥰

தோரணமலை _  மார்ச் '2026 தோரணமலை அன்னதானம் _ _ விபரம் :தோரணமலை தினசரி அன்னதானம் சரியாக 9 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த போ...
03/04/2026

தோரணமலை _ மார்ச் '2026 தோரணமலை அன்னதானம் _ _ விபரம் :

தோரணமலை தினசரி அன்னதானம் சரியாக 9 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த போது எரிவாயு அடுப்பு விறகு அடுப்பாக மாறியது.

மாறினாலும் அன்னதான சேவை தொய்வின்றி தொடரத்தான் செய்கிறது.

கடந்த மார்ச் மாத மதியம் அன்னதானத்தில் 16,800 க்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர்.
13ந் தேதிக்கு பிறகு 10800 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஞாயிறு , பௌர்ணமி கிரிவலம் மற்றும் தமிழ் மாத கடைசி வெள்ளி போன்ற நாட்களில் காலையில் நடைபெற்ற அன்னதானத்தில் 5800க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று உள்ளனர்.
13 ந் தேதிக்கு பிறகு, 2700 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுள்ளனர் .

உதவி வரும் பக்த உள்ளங்கள் வாழ்க ... .... நீடூழி வாழ்கவே 🙏

02/04/2026

தோரணமலையில் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அதிகாலை அபிசேகம் முடிந்து, சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டது .
மதியம் அன்னதானத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் மதியம் அன்னதானத்தில் பங்கு பெற்றனர்.

முருகனருள் முன்னிற்க ...
நமக்கென்ன மனக் கவலை 🙏

இந்த படம்  தோரணமலை ஸ்ரீ வல்லப விநாயகர் ஆலயத்தில் எடுக்கப்பட்டது.1990 களில் தாய்மாமா மருத்துவர் ஜோதி என்ற செல்லத்துரை மாம...
29/03/2026

இந்த படம் தோரணமலை ஸ்ரீ வல்லப விநாயகர் ஆலயத்தில் எடுக்கப்பட்டது.

1990 களில் தாய்மாமா மருத்துவர் ஜோதி என்ற செல்லத்துரை மாமா நோய் வாய்ப்பட்ட சமயம் அவர்கள் பூரண குணமடைய வேண்டி அப்பா மொட்டை போட்டு சொந்தங்களை அழைத்து சிறப்பு பூஜை நடத்தினார்கள்.
மடத்தூர் சொந்தங்கள் பெருமளவில் வந்திருந்தனர் என கேள்விப்பட்டேன்.
இந்த படத்தில் அமரர் SKT பாரி பாரி மாமா, முக்கூடல் அமரர் மூக்க மாமா (கடிகாரம் பீடி, என் அம்மா, திருமதி SKTR புவனேஸ்வரி பாட்டியம்மா, சகுந்தலா அத்தை, அமரர் பால அருணாசலம் தாத்தா, மூத்த தாய் மாமா கணேசன், ஆதிரை சித்தி, கடையம் அமரர் குட்டி சித்தப்பா ஆகியோர் உள்ளனர்.

உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் தெரியப்படுத்துங்களேன்.

Address

THORANAMALAI
Tenkasi
627811

Alerts

Be the first to know and let us send you an email when Thoranamalai Shri Murugan Temple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share