21/12/2025
தேவனுக்கே மகிமை உண்டாவதாக!
நமது சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் 2025 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் கீத ஆராதனை ஞாயிற்றுக்கிழமை 21.12.2025 அன்று ஆண்டவருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாக வெகு சிறப்பாக நடைபெற்றது.
நமது திருச்சபையைச் சேர்ந்த தாய்மார்கள், ஆண்கள், வாலிப ஆண்கள், வாலிபப் பெண்கள், பாடகர் குழுவினர், ஓய்வு நாள் பாடசாலை குழந்தைகள் மற்றும் நமது சபை மக்கள் அனைவரும் உற்சாகமாக கலந்து கொண்டு உலக இரட்சகராம் இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் பண்டிகையாம் கிறிஸ்துமஸ் பண்டிகை பாடல்களைப் பாடி ஆண்டவருடைய நாமத்தை மகிமைப்படுத்தினார்கள்.
இந்தச் சிறியரில் ஒருவருக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்ற இயேசு கிறிஸ்துவின் வாக்குகிணங்க, இந்த கீத ஆராதனையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நமது ஊருக்கு அருகாமையில் உள்ள செல்வ மணி நகர் மற்றும் பட்டாண்டி விலை கிராமத்தில் வசிக்கும் சுமார் 50 ஏழை தாய்மார்களுக்கு நமது சேகர கமிட்டி அங்கத்தினர்களின் சார்பில், கிறிஸ்துமஸ் பரிசுகள், புத்தாடைகள் மற்றும் கிறிஸ்மஸ் விருந்தும் வழங்குவதற்கு தேவன் கிருபை செய்தார்.
கீத ஆராதனை முடிவில் சபை மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் அன்பின் விருந்து வழங்கப்பட்டது.
சபை மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புது வருட (2026) வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!
கர்த்தர் தாமே நமது திருச்சபை மக்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவராக! ஆமென்!