ஸ்ரீவை தோழர்கள்

ஸ்ரீவை தோழர்கள் நம் தேவைகள் ,சிறப்புகள்,உதவுதல் , நம் ?

14/01/2024

#பொங்கச்சோறும்_சுண்டக்கறியும்:

✴️திருநெல்வேலிக்காரன் தின்னே கெட்டான்னு ஒரு சொல் வழக்கு உண்டு. அந்த வகையில சாப்பாட்டை ரசனையாக உண்ணும் திருநெல்வேலிக்காரர்கள் வரலாற்றில் சுண்டக்கறி முக்கிய இடம்பெறும்.

✴️தைப் பொங்கல் அன்று வாசலில் பொங்கல் வைத்து, இலையில் படைத்த காய்கறிகளை கொண்டு அவியல், பூசணிக்காய் பச்சடி, புடலங்காய் பொறியல், சிறுகிழங்கு பொறியல் ஆகியவற்றுடன் இடி சாம்பார் வைத்து மதியம் சாப்பிடுவது வழக்கம்.

✴️பொங்கல் அன்று மதியம் பொங்கலுக்கென்றே சிறப்பாக கிடைக்கும் சிறுகிழங்கு, சேப்பங்கிழங்கு, பிடி கிழங்கு ஆகியவற்றுடன் கேரட், பீன்ஸ், உருளை, சீனி அவரைக்காய், முருங்கைக்காய், நாட்டு வாழைக்காய், மாங்காய் ஆகியவை சேர்த்து அவியல் செய்வார்கள்.

✴️அது போல பொங்கச்சோறுக்கு என்றே திருநெல்வேலி பகுதியில் பல வித காய்கறிகளை கொண்டு இடி சாம்பார் என்ற குழம்பு வைப்பார்கள்.

✴️இதோடு பூசணிக்காய் பச்சடி அல்லது வெண்டக்காய் பச்சடி , சிறு கிழங்கு பொறியல் வகைகள் என தயார் செய்து பொங்கல் விருந்து தடபுடலாக நடைபெறும்.

✴️பொங்கல் அன்று மதியம் இதனை உண்டு ஒய்வெடுத்த பின்னர் இரவில் மீதமிருக்கும் (கட்டாயம் மீதமிருக்கும் அதற்காகவே அதிகமா வைப்பார்கள் )இடிசாம்பார், அவியல், பச்சடி என அனைத்தையும் கொண்டு சுண்டக்கறி வைக்கும் படலம் இனிதே துவங்கும்.

✨அதென்ன சுண்டக்கறி?✨

✴️மதியம் வைத்த இடி சாம்பார், அவியல், பச்சடி, பொறியல் என அனைத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து அதனை மீதமான தீயில் சூடேற்ற வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து சுண்டி வரும். அதன் வாசனையே ஒரு விதமாக ரம்மியமாக இருக்கும்.

✴️இந்த கலவையோடு தேவைக்கேற்ப சற்று புளிக்கரைசல் மற்றும் மிளகாய் வத்தல் பொடி, உப்பு சேர்த்து மண் சட்டியில் சுண்ட வைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

✨பொங்கச்சோறு✨

✴️பொங்கல் விட்ட சாதத்தை முந்தைய நாள் இரவில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வைத்து விடுவோம். இந்த சாதம் தான் எங்களுக்கு மறுநாள் மதிய உணவே....

✴️இந்த பொங்கச்சோறில் (பழைய சோறு) தயிர் விட்டு பிசைந்து சாதம்பாதி சுண்டகறி பாதின்னு சுண்டக்கறிய தொட்டு சாப்பிட்டால் பச்சரிசி சாதம் உருண்டை உருண்டையா உள்ள போறதே தெரியாம வயித்தை நிரப்பிடும்.

✴️பொங்கலுக்கு மறுநாளுக்கு மறுநாள் பொங்கல் சோறு தீர்ந்திடும். ஆனா சுண்டக்கறி இருக்கும். கொஞ்சம் சூடா சாதம் வடிச்சு சுண்டக்கறி சேர்த்து அதில் சிறிது நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டால் தேவாமிர்தமாக இருக்கும்....

✴️அதே சுண்டக்கறியை சூடாக தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் ஆகா.... சுவையோ சுவையாக இருக்கும்....

✴️பொங்கல் முடிந்த இரண்டு நாட்களுக்கு சுண்டக்கறி தான் எல்லாத்துக்கும் தொடுகறி.... 😊🔥

-திருநெல்வேலிக்காரன் & தூத்துக்குடிக்காரன்...

திருவைகுண்டம் சிவாலயத்தில் சித்திரை உற்சவ 7ம்திருநாள் 01/05/23 திங்கள்  அன்று காலை சிறப்பு ஆபிசேகம் பூஜை பின் 12.30 மணிக...
01/05/2023

திருவைகுண்டம் சிவாலயத்தில் சித்திரை உற்சவ 7ம்திருநாள் 01/05/23 திங்கள் அன்று காலை சிறப்பு ஆபிசேகம் பூஜை
பின் 12.30 மணிக்கு ஆலயத்தில் இருந்து எம்பெருமான் நடராஜர் புறப்பாடு ஆகி பந்தல் மண்டபம் கிழக்கு வாசல் வருகை அருகே வருகை
பின் இரவு 8.00Pm சிகப்பு சாத்தி
02/05/23 செவ்வாய் காலை 06.00Am வெள்ளை சாத்தி 8ம் திருநாள் 02.05.23 அன்று செவ்வாய் காலை 8.30Am பச்சை சாத்தி ரதவீதி புறப்பாடு பின் நடனசேர்க்கை நிகழ்வு.
வெளியே காட்சிதர வருகிறார் அனைவரும் வருக

26/03/2023

*சிவப்பு சாத்தி கூத்தப்பெருமாள் சித்திரை திருவிழா அழைப்பிதழ்*

நமது ஶ்ரீவைகுண்டம் சிவன் கோவில் 2023 ஆண்டு சித்திரை பெருந் திருவிழா ஏப்ரல் 25ம் தேதி கொடிஏற்றுதலை தொடர்ந்து , மே 1ந் தேதி ஏழாம் திருவிழா நமது மண்டகப்படி ; *நடராசர்-சிவகாமி தாயார் அபிஷேகம் மற்றும் சிவப்பு சாத்தி திருவீதி உலா* நடைபெற இருக்கிறது என்பதை மகிழ்ச்சுயுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . அன்று அபிஷேகம், அலங்காரம் மற்றும் திருவீதி உலா நடைபெறும்.இவ்விழா நம் குடும்பத்தின் முக்கிய நிகழ்வு.ஆகவே அனைவரும் குடும்ப சகிதம் கலந்து கொண்டு இறைவன் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்..

இப்படிக்கு
*ஶ்ரீவை தோழர்கள்*🙏🙏

https://youtu.be/v_XImTtrSFY
11/09/2022

https://youtu.be/v_XImTtrSFY

is about valuing nature for what we can learn, not what we can extract, harvest, or domesticate. In the process, we learn about ourselves, our pu...

10/07/2022
We welcome you all
26/04/2022

We welcome you all

06/08/2021

"சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்..."

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது...

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...

நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்.
யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,
அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...

எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

சாப்பிடும் முறை...!

1. நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...

4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க. போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...

6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...

8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

10. சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

12. சாப்பிட வேண்டிய நேரம்...
காலை - 7 to 9 மணிக்குள்
மதியம் - 1 to 3 மணிக்குள்
இரவு - 7 to 9 மணிக்குள்

13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...

14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

அமருங்கள் சம்மணமிட்டு...
சாப்பிடுங்கள் முறையாக...
வாழுங்கள் ஆரோக்கியமாக!...

https://youtu.be/c2eVkqPbSKg
19/03/2021

https://youtu.be/c2eVkqPbSKg

ஶ்ரீ சிவனணைந்த பெருமாள் துணை ,ஶ்ரீ வாலைபரமேஸ்வரி அம்மன் துணை , ஶ்ரீ சுடலைமாட சுவாமி துணை*பொங்கல் மற்றும் படைப்ப....

ஶ்ரீ சிவனணைந்த பெருமாள் துணை ,ஶ்ரீ வாலைபரமேஸ்வரி அம்மன் துணை , ஶ்ரீ சுடலைமாட சுவாமி துணை 16/03/2021 திருவிழாவிற்கு வந்து...
16/03/2021

ஶ்ரீ சிவனணைந்த பெருமாள் துணை ,ஶ்ரீ வாலைபரமேஸ்வரி அம்மன் துணை , ஶ்ரீ சுடலைமாட சுவாமி துணை

16/03/2021 திருவிழாவிற்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி நன்றி.... 🙏🙏🙏🙏

Address

Mahadevar Kovil Street
Srivaikuntam
628622

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீவை தோழர்கள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ஸ்ரீவை தோழர்கள்:

Share

Category