Thiruvengadu-திருவெண்காடு

Thiruvengadu-திருவெண்காடு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thiruvengadu-திருவெண்காடு, Thiruvengadu, Sirkazhi.

Thiruvengadu (also spelled Thiruvenkadu), Sirkazhi Taluk,Mayiladuthurai District, PIN 609114
இறைவர்: சுவேதாரண்யேஸ்வரர், இறைவி: பிரம்ம வித்யாம்பிகை, தனிச்சிறப்பு: அகோரமூர்த்தி, புதன்.

வைகாசி விசாகம் பற்றிய தகவல்கள்...இன்று மதியம் மணி 12.04 முதல் நாளை 14.18 வரை...முருகப்பெருமானின் தெய்வீக அவதார நாள்வைகாச...
29/05/2026

வைகாசி விசாகம் பற்றிய தகவல்கள்...

இன்று மதியம் மணி 12.04 முதல் நாளை 14.18 வரை...

முருகப்பெருமானின் தெய்வீக அவதார நாள்
வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திர நாள், முருக பக்தர்களுக்கு சாதாரண நாளல்ல.

அது ஒரு அருள் இறங்கும் நாள்.
ஒரு வேல் பிறந்த நாள்.
ஒரு தெய்வீக சக்தி பூமியை தொட்ட நாள்.
“கந்தன் பிறந்த நாள்” என்று பக்தர்கள் ஆனந்தமாகக் கொண்டாடும் இந்த திருநாள், தமிழ் ஆன்மிக பாரம்பரியத்தின் மிகப் பெரிய விழாக்களில் ஒன்று.

🔥 முருகப்பெருமானின் அவதார ரகசியம்
அசுரர்களின் கொடுமை அதிகரித்த போது, தேவர்கள் சிவபெருமானிடம் காப்பு வேண்டினர்.
அப்போது சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்டது ஆறு அக்னிப் பொறிகள்.
அந்த தீப்பொறிகள்:
✨ அக்னி தேவனால் ஏந்தப்பட்டு
✨ கங்கை வழியாக கொண்டு செல்லப்பட்டு
✨ சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக தோன்றின.
பின்னர் பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளையும் அரவணைத்து, ஒரே ஆறுமுக முருகனாக இணைத்தாள்.

அதனால் முருகன்:
ஆறுமுகன்
சரவணபவன்
கார்த்திகேயன்
கந்தன்
சுப்பிரமணியன்

என்ற பல திருநாமங்களால் அழைக்கப்படுகிறார்.

🌺 *ஏன் “விசாகம்” நட்சத்திரம் முக்கியம்?*
முருகப்பெருமான் விசாக நட்சத்திரத்தில் அவதரித்ததால், இந்த நட்சத்திரம்:
✅ ஞானம்
✅ வீரியம்
✅ தைரியம்
✅ ஆன்மிக சக்தி
✅ வெற்றி

எனும் சக்திகளை தரும் நட்சத்திரமாக கருதப்படுகிறது.
ஜோதிட ரீதியாகவும், விசாகம் நட்சத்திரம் “வெற்றியை நோக்கி செல்லும் தீ சக்தி” என கூறப்படுகிறது.

🛕 *வைகாசி விசாகத்தில் செய்ய வேண்டிய பூஜைகள்*
🌄 காலை வழிபாடு
வீட்டை சுத்தம் செய்து கோலம் போடுதல்
முருகன் படத்திற்கு செம்பருத்தி அல்லது கந்தள் பூ அலங்காரம்
நெய் தீபம் ஏற்றுதல்
சிவப்பு அல்லது மஞ்சள் துணி சமர்ப்பித்தல்

🥛 அபிஷேகங்கள்
இந்த நாளில் முருகனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கு தனி மகிமை உண்டு.
பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்கள்:
🥛 பால்
🍯 தேன்
🥥 இளநீர்
🍌 பஞ்சாமிர்தம்
🌹 ரோஜா நீர்
🧂 சந்தனம்
இதில் பால் அபிஷேகம் மிகவும் முக்கியமானது.
அது மன சுத்தத்தையும் குடும்ப அமைதியையும் தரும் என நம்பப்படுகிறது.

📿 ஜெபிக்க வேண்டிய *மந்திரங்கள்*
முக்கிய மந்திரங்கள்:
🕉️ “ஓம் சரவணபவ”
🕉️ “வேல் வேல் முருகன்”
🕉️ “ஓம் சுப்பிரமண்யாய நமஹ”
108 முறை ஜெபித்தால்:
✨ மனஅழுத்தம் குறையும்
✨ பயம் நீங்கும்
✨ குழந்தைகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்
✨ தீய சக்திகள் விலகும்

📖 *பாராயணம் செய்ய ஏற்றவை*
📜 கந்த சஷ்டி கவசம்
📜 சுப்பிரமணிய புஜங்கம்
📜 திருப்புகழ்
📜 கந்தர் அநுபூதி
இவை அனைத்தும் முருக அருளை ஈர்க்கும் சக்தி வாய்ந்த பாடல்கள்.

👶 *குழந்தை* பாக்கியத்திற்கான சிறப்பு நாள்
பல தம்பதிகள் இந்த நாளில் முருகனை வேண்டி விரதம் இருப்பார்கள்.
காரணம்:
முருகன் குழந்தைகளின் காவல்தெய்வமாக கருதப்படுகிறார்.
அதனால்:
💛 குழந்தை பாக்கியம்
💛 குழந்தைகளின் ஆரோக்கியம்
💛 கல்வி முன்னேற்றம்
💛 பேச்சுத்திறன் வளர்ச்சி
என பல நன்மைகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

⚔️ பகை மற்றும் தடைகள் நீங்கும்
முருகனின் வேல்போன்ற என்பது வெறும் ஆயுதமல்ல.
அது:
🔥 அறியாமையஎன்ற அழிக்கும் ஞானம்
🔥 பயத்தை உடைக்கும் தைரியம்
🔥 தீய சக்திகளை விரட்டும் ஒளிy
என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அதனால் வைகாசி விசாகத்தில் முருக வழிபாடு செய்தால்:
✅ எதிரிகள் விலகுவர்
✅ கண் திருஷ்டி நீங்கும்
✅ வேலை தடைகள் அகலும்
✅ மனதில் தைரியம் பிறக்கும்

🛕 அறுபடை வீடுகளில் வைகாசி விசாகம்
இந்த நாளில் முருகனின் அறுபடை வீடுகள் அனைத்தும் விழாக்கோலமாக மாறிவிடும்.

🔱 *திருச்செந்தூர்*
கடற்கரையில் நடைபெறும் தீபாராதனை மற்றும் தேரோட்டம் பக்தர்களை மெய்மறக்கச் செய்யும்.

🔱 *பழனி*
பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் மலையேரும் பக்தர்களின் “ஹரோகாரா” முழக்கம் — அதுவே ஒரு ஆன்மிக அனுபவம்.

🔱 *சுவாமிமலை*
முருகன் சிவனுக்கே “ஓம்” பொருள் சொன்ன ஞான ஸ்தலம்.

🔱 *திருத்தணி*
திருமண தடைகள் நீங்க வேண்டி ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கிறார்கள்.

விரதம் இருப்பது எப்படி?
சிலர் முழு நாள் பழம் மற்றும் பால் மட்டும் அருந்தி விரதம் இருப்பார்கள்.
சிலர் ஒரு வேளை சைவ உணவு மட்டும் எடுத்துக்கொள்வார்கள்.
முக்கியமானது:
❌ கோபம் இல்லாமல் இருப்பது
❌ பொய் பேசாமல் இருப்பது
❌ மனதை அமைதியாக வைத்திருப்பது
அதுவே உண்மையான விரதம்.

✨ ஆன்மிக ரகசியம்
வைகாசி விசாகம் நமக்கு ஒரு விஷயத்தை நினைவூட்டுகிறது:
“இருள் எவ்வளவு இருந்தாலும்,
ஒரு வேல் போதும் ஒளி தர.”
முருகன் என்பது வெறும் தெய்வம் அல்ல.
அவர்:
🕊️ நம்பிக்கை
🔥 தைரியம்
🌺 கருணை
⚔️ நீதியின் வடிவம்

வைகாசி விசாகம் என்பது கோவிலில் மட்டும் நடக்கும் திருவிழா அல்ல…
அது மனதிற்குள் ஒளி ஏற்றும் ஆன்மிக விழிப்பு.

*கருவறை தீப ஒளி தரிசனம்*கருவறை தெய்வத்தை தீபஒளியில் மட்டுமே தரிசிக்க வேண்டும். ஏன் தெரியுமா?. ஆண்டவன் குடியிருக்கும் ஆலய...
25/04/2026

*கருவறை தீப ஒளி தரிசனம்*

கருவறை தெய்வத்தை தீபஒளியில் மட்டுமே தரிசிக்க வேண்டும். ஏன் தெரியுமா?. ஆண்டவன் குடியிருக்கும் ஆலயங்கள், மிகுந்த ஆசாரங்களுடனும், சரியான விதிமுறைபடியும் கட்டப்படும். முக்கியமாக மூலவர் இருக்கும் கருவறை தெய்வீக ஒளி, மிதமான வெப்பம், கட்டுப்படுத்தப்பட்ட காற்று இவைகளுடன் ஐதீக முறைப்படியும், சாஸ்திர சம்பிரதாயங்களுடனும் கட்டப்பட்டு, நம்பிக்கையுடன் தேடிவரும் பக்தர்களுக்கு நல்வழி காட்டும்.

வெகுகாலமாக கருவறையினுள் எண்ணெய்களால் எரியும் தீப ஒளியினால் மட்டுமே தெய்வ தரிசனைத்தைக் கண்டோம். நவீன காலங்களில் நமது பகட்டைக் காட்ட அலங்கார விளக்குகள், வண்ண வண்ண லைட்டுகளால் கருவறையை அலங்கரிப்பதால், அதிலிருந்து வெளிப்படும் அதிக வெப்பமானது கர்ப்பக்கிரகத்தில் உள்ள மின்காந்த அலைகளை பாதிக்கிறது.

கருவறை தெய்வத்தை தீப ஒளியில் தரிசிக்கும்போது, நம் மனதில் உள்ள கவலைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். கோவிலை நம் உடலாகவும், அங்குள்ள கருவறையை நம் மனம் போன்று இருள் கொண்டதாகவும் எண்ணிக் கொள்ளுங்கள். இருளானது எண்ணெய் தீபம் கொண்டு விளக்கேற்றுவதால் அகன்று, அங்குள்ள தெய்வ விக்கிரகம் நம் கண்களுக்குத் தெரியும். அதே போல நம் மனதில் நிலைகொள்ளும் அஞ்ஞானம் ஏற்படுத்தும் இருளை அகற்றி, ஆத்மாவை ஞானம் பெறச் செய்ய இறையருள் துணை செய்யும்.

தற்போதுள்ள வண்ண வண்ண விளக்குகளின் அதீத ஒளியால், ஒருமுகப்படுத்த வேண்டிய மனது அடங்க மறுத்து கவனம் சிதறும். இதனால் முழு மனதுடன் நம்மால் தெய்வத்தை வணங்கமுடியாது. ஆகவே தான் மனதுக்கு சாந்தம் தந்து, உடலுக்கு நன்மை தரும் தீபத்தின் வெளிச்சமே கருவறை தெய்வங்களுக்கு ஏற்றது என்று கூறியிருக்கிறார்கள், சான்றோர்

23/04/2026
  | கோடைகால நோய்களுக்கு பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்   |
22/04/2026

| கோடைகால நோய்களுக்கு பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

|

🌸 🌺 ஐந்தெழுத்து மந்திரத்தின் ரகசியம்ந ம சி வ ய 🙏 🌼🍀
22/04/2026

🌸 🌺 ஐந்தெழுத்து மந்திரத்தின் ரகசியம்
ந ம சி வ ய 🙏
🌼🍀

  | விதிகளை மீறினால் சிறை.. வாக்களர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
22/04/2026

| விதிகளை மீறினால் சிறை.. வாக்களர்களுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

21/04/2026
17/04/2026

முதன் முதலில் மகுடி நாதஸ்வரத்தில் வாசித்தவர் இவர்தான் திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை அவர்கள்

திருவெண்காடு அருள்மிகு பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் அனுக்ரஹத்தாலும் அருள்தரும் அகோரமூர்த்தி அருளாலும் இந்த ...
14/04/2026

திருவெண்காடு அருள்மிகு பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் அனுக்ரஹத்தாலும் அருள்தரும் அகோரமூர்த்தி அருளாலும் இந்த புத்தாண்டு உங்கள் வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் கொண்டு வரட்டும்...

அனைவருக்கும் பராபவ தமிழ் வருட புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்🙏

*_ஈசன் உபதேசித்தத் தலங்கள்_*1. ஓமாம்புலியூர் - தட்சிணாமூர்த்தி உமாதேவிக்குப் பிரணவப்பொருள் உபதேசித்தது.2. உத்திரகோசமங்கை...
10/04/2026

*_ஈசன் உபதேசித்தத் தலங்கள்_*

1. ஓமாம்புலியூர் - தட்சிணாமூர்த்தி உமாதேவிக்குப் பிரணவப்பொருள் உபதேசித்தது.

2. உத்திரகோசமங்கை - பார்வதிக்கு இறைவன் வேதா கமலங்களின் இரகசியங்களை உபதேசித்தல்.

3. இன்னம்பர் - அகத்தியர் வழிபாட்டு இலக்கண உபதேசம் பெற்றது.

4. திருவுசாத்தானம் - இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் ராமர் மந்திர உபதேசம் பெற்றார்.

5. ஆலங்குடி - சுந்தரர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டுப் பஞ்சாட்சர உபதேசம் பெற்றார். மற்றும் ஆதிசங்கரர் குருபகவானைத் தரிசித்து மகா வாக்கிய உபதேசம் பெற்றார்.

6. திருவான்மியூர் - அகத்தியருக்கு மூலிகை {வைத்தியம்} பற்றி உபதேசம் அருளியது.

7. திருவாவடுதுறை - அரிக்கும் அந்தணர்களுக்கும் சிவஞான உபதேசம் செய்தல், மற்றும் போகர் முதலிய நவகோடி சித்தர்களுக்கு அஷ்டமா சித்தி அருளியது.

8. சிதம்பரம் - பைரவர் பிரம்ம தத்துவத்தை உபதேசித்தல்.

9. திருப்பூவாளியூர் - நுன்முனிவர் 70 பேருக்கு பரஞான உபதேசம்.

10. திருமங்களம் - சௌமினி முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

11. திருக்கழுக்குன்றம் - சனகர் முதலிய முனிவர்க்கு சாமவேதம் உபதேசம்.

12. திருமயிலை - ஆயிரம் முனிவர்கள் அறநெறிகளை அறிவுரையாகப் பெற்றது.

13. செய்யாறு - வேதம் பற்றிக் கருப்பொருள் பற்றி தவசிகள் பலருக்கு அருளுரை.

14. #திருவெண்காடு - நான்முகன் குருமூர்த்தியிடம் ஞானோபதேசம் பெற்றது, அம்பாள் பிரம்மனுக்கு பிரம்ம வித்தையை உபதேசித்ததால் பிரம்ம வித்யாம்பிகை என்று பெயர் பெற்றார்.

15. திருப்பனந்தால்

16. திருக்கடவூர் - பிரம்மன் ஞானோபதேசம் பெற்றது.

17. திருவானைக்கா - அம்பிகை ஞானோபதேசம் பெற்றது.

18. மயிலாடுதுறை - குருபகவானிடம் நந்தி உபதேசம் பெற்றது.

19. திருவாவடுதுறை - அகத்திய முனிவர்க்கு பஞ்சாட்சரம் உபதேசம்.

20. தென்மருதூர் - ஆயிரம் முனிவர்களுக்கு உபதேசம் அருளியது.

21. விருத்தாசலம் - இறப்பவர்க்கு இறைவன் அவ்வுயிரைத் தன் தொடை மீது கிடத்தி மந்திர உபதேசம் மற்றும் இறைவி தன் முந்தானையால் விசிறி விடுதல்.

22. திருப்பெருந்துறை - மாணிக்கவாசகருக்குக் குருத்த மரத்தடியில் உபதேசம்.

23. இராமேஸ்வரம் - திருக்கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் அவற்றின் மகிமைகளும் உரைத்தல்.

24. உத்தரமாயூரம் - ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ரிஷபதேவரின் கர்வம் அடக்கி உபதேசம் செய்தது.

25. காஞ்சி - ஸப்தரிஷிகளுக்கு உபதேசம்.

26. திருப்புறம்பயம் - சனகாதி முனிவர்களுக்கு தர்மோபதேசம்.

27. விளநகர் - அருள் வித்தன் என்னும் மறையவருக்கு ஞானோபதேசம்.

28. திருத்துருத்தி - சிவன் பிரம்மசாரியாய் வேதத்தைத் தாமே சொன்னது.

29. கரூர் - ஈசன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மந்திரத்தை சுக்கிரனுக்கு உபதேசித்தல்.

30. திருவோத்தூர் - ஈசன் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதத்தை உபதேசித்தல்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

💫 நாக தோஷம் நீக்கும் திருநாங்கூர் 11 கருட சேவை – தெய்வீக அற்புதம் 💫மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழிக்கு அருகே அமைந்துள...
02/04/2026

💫 நாக தோஷம் நீக்கும் திருநாங்கூர் 11 கருட சேவை – தெய்வீக அற்புதம் 💫

மயிலாடுதுறை மாவட்டத்தில், சீர்காழிக்கு அருகே அமைந்துள்ள திருநாங்கூர் — தெய்வீக அதிசயங்கள் நிறைந்த புனித பூமி. இங்கு உள்ள மணிமாடக் கோயில் என அழைக்கப்படும் நாராயண பெருமாள் திருக்கோயில், பக்தர்களின் நம்பிக்கையின் மையமாக விளங்குகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள், இங்கு நடைபெறும் “11 கருட சேவை” — உலகிலேயே அபூர்வமான, கண்களால் காண வேண்டிய ஒரு தெய்வீக நிகழ்வு!

🌿 திருநாங்கூரின் தெய்வீக மகிமை

திருநாங்கூரில் மட்டும் ஆறு திவ்யதேசங்கள் அமைந்துள்ளன. அதனைச் சுற்றி சுமார் நான்கு கிலோமீட்டர் பரப்பில் மேலும் ஐந்து திவ்யதேசங்கள் உள்ளன. இவ்வாறு மொத்தம் பதினொரு திவ்யதேசங்கள் — ஒரு சிறிய பகுதியிலேயே அமைந்திருப்பது இதன் அற்புதம்.

🔸 திருநாங்கூரில் உள்ள திவ்யதேசங்கள்:
திருக்காவளம்பாடி, திரு அரிமேய விண்ணகரம், குடமாடு கூத்தர் ஆலயம், திருவெண்புருடோத்தமம், திருச்செம்பொன் செய்கோயில், திருமணிமாடக் கோயில்.

🔸 சுற்றுப்பகுதியில் உள்ள திவ்யதேசங்கள்:
திருதேவனார் தொகை, திருத்தெற்றியம் பள்ளி, திருமணிக்கூடம், திருவெள்ளக்குளம், திருப்பார்த்தன்பள்ளி.

🔱 தல வரலாறு – சிவனுக்கும் நாராயணனுக்கும் இடையேயான தெய்வீக சம்பந்தம்

முன்னொரு காலத்தில், பிரம்மதேவருக்கு ஐந்து தலைகள் இருந்தன. அதனால் அவர் தன்னை சிவபெருமானுக்கு இணையாகக் கருதி ஆணவம் கொண்டார். இதனால், சிவபெருமான் அவரின் ஒரு தலையை அகற்றினார்.

அந்தக் கர்மத்தின் விளைவாக, சிவனுக்கு “பிரம்மஹத்திய தோஷம்” ஏற்பட்டது.

அந்த தோஷத்தை நீக்க, சிவபெருமான் திருக்கோகர்ணம் போன்ற பல தலங்களில் தவம் இருந்தார். இறுதியில், திருமால் அவருக்கு அருள் வழங்கி:

“திருநாங்கூர் சென்று, பதினொரு ருத்ர ரூபங்களில் அஸ்வமேத யாகம் செய்” என்று உபதேசம் செய்தார்.

அதன்படி, சிவபெருமான் திருநாங்கூரில் பதினொரு ருத்ர ரூபங்களில் யாகம் செய்தார்.

அந்த யாகம் நிறைவடைந்த தருணத்தில்…

பிரணவ விமானத்தில் நாராயணன் அருள்பாலித்து தோன்றி, சிவபெருமானின் தோஷத்தை நீக்கினார்!

அதோடு மட்டும் அல்லாமல் —
அந்த பதினொரு ருத்ர வடிவங்களுக்கு, பதினொரு பெருமாள் ரூபங்களில் காட்சி தந்தார்!

அந்த பதினொரு தெய்வீக ரூபங்களே — இன்றைய திருநாங்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 11 திவ்யதேசங்களாக அமைந்துள்ளன.

🕉️ அரிய உபதேசம் நிகழ்ந்த தலம்

திருநாங்கூரின் இன்னொரு அதிசயம் —
மகாவிஷ்ணு தன்னுடைய “ஸ்ரீமன் நாராயண” என்னும் நாமத்தையே அஷ்டோத்திர மந்திரமாக மாற்றி, தானே குருவாக இருந்து, தன்னையே சீடனாகக் கொண்டு உபதேசம் செய்த தலம் இதுவாகும்.

இதன் மூலம், “எல்லா ஜீவராசிகளிலும் நானே இருக்கிறேன்” என்ற பரம தத்துவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டினார்.

🦅 11 கருட சேவை – கண்களால் காண வேண்டிய பரம அதிசயம்

ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள், திருநாங்கூர் மணிமாட நாராயண பெருமாள் கோயிலில் — பதினொரு திவ்யதேசங்களிலிருந்து பெருமாள்கள் அனைவரும் தங்க கருட வாகனங்களில் வந்து ஒன்று கூடுவார்கள்.

காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை, ஒவ்வொரு பெருமாளும் வருகை தருவார்.

அவர்களுக்கு திருமஞ்சனம், அலங்காரம் நடைபெறும். பின்னர், ஒவ்வொருவரும் வீதி உலா வருவார்கள்.

அந்த தருணம் —
பூமியில் வைகுண்டம் இறங்கியதுபோல் இருக்கும்!

🌾 திருமங்கை ஆழ்வாரின் அதிசய வருகை

இந்த விழாவின் மிகப்பெரிய சிறப்பு —
திருமங்கை ஆழ்வார் இவ்விழாவில் கலந்து கொண்டு, பெருமாள்களுக்கு மங்களாசாசனம் செய்வதாக ஐதீகம் கூறுகிறது.

விழாவுக்கு முந்தைய இரவு…

வயல்வெளியில் காற்று வீசும் போது, நெற்பயிர்கள் சலசலக்கும் சத்தம் அதிகரிக்கும். அந்த நேரத்தில், “ஆழ்வார் வந்துவிட்டார்!” என்று பக்தர்கள் ஆனந்தத்தில் கூத்தாடுவார்கள்.

ஆழ்வார் கால்பட்ட நிலம் —
அடுத்த ஆண்டு அதிகமான விளைச்சலை தரும் என்று அங்குள்ள மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

🙏 பக்தர்களின் நம்பிக்கை

💫 இந்த 11 கருட சேவையை தரிசிக்கும் பக்தர்களுக்கு:
🔸 நாக தோஷம் நீங்கும்
🔸 வாழ்க்கைத் தடைகள் அகலும்
🔸 மனநிறைவு கிடைக்கும்
🔸 மறுபிறவி கூட இல்லை என்பதும் ஐதீகம்!

📍 திருநாங்கூர் — சீர்காழியிலிருந்து சுமார் 11 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

✨ இது போன்ற மேலும் பல கருத்துள்ள சிறுகதைகள், தெய்வீக வரலாறுகள் — அனைத்தையும் படிக்க Thannasi Appar பக்கத்தை பின்தொடருங்கள் 💫

#திருநாங்கூர் #கருடசேவை #நாகதோஷநிவர்த்தி #திவ்யதேசம் #திருமங்கைஆழ்வார்

Address

Thiruvengadu
Sirkazhi
609114

Opening Hours

Monday 6am - 12:30pm
4pm - 8:30pm
Tuesday 6am - 12:30pm
4pm - 8:30pm
Wednesday 6am - 12:30pm
4pm - 12:30pm
Thursday 6am - 12:30pm
4pm - 8:30pm
Friday 6am - 12:30pm
4pm - 8:30pm
Saturday 6am - 12:30pm
4pm - 8:30pm
Sunday 6am - 12:30pm
4pm - 8:30pm

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvengadu-திருவெண்காடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Thiruvengadu-திருவெண்காடு:

Share