Our Lady Of Fathima Church Koovaikinaru

Our Lady Of Fathima Church Koovaikinaru Our Lady Of Fathima Pray For Us!

13/12/2024
             #2021
09/12/2024






#2021

30/11/2019

கருணை மழையே மேரிமாதா கண்கள் திறவாயோ......

கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ....

கருணை மழையே மேரிமாதா கண்கள் திறவாயோ.....

கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ....

கருணை மழையே மேரிமாதா கண்கள் திறவாயோ.....

30/11/2019
23/11/2019

Catholic Church

23/11/2019

★★★★★ · Catholic church · Our Lady Of Fathima Church Koovaikinaru

23/11/2019

Our Lady Of Fathima Pray For Us.....

03/08/2019

முதல் வாசகம்

லேவியர் நூலிலிருந்து வாசகம் 25: 1, 8-17

ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயிடம் கூறியது: தொடர்ந்து வரும் ஏழு ஓய்வுஆண்டுகளை - ஏழேழு ஆண்டுகளாக - ஏழுமுறை எண்ணிக்கையிட்டு அவை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆகும். ஏழாம் மாதம் பத்தாம் நாள் எக்காள ஒலி எழட்டும்; பாவக் கழுவாய் நிறைவேற்றும் அந்த நாளில் உங்கள் நாடெங்கும் எக்காளம் முழங்கச் செய்யுங்கள். ஐம்பதாம் ஆண்டைத் தூயதாக்கி, நாட்டில் வாழ்வோருக்கு எல்லாம் தன்னுரிமை அறிவியுங்கள். அது உங்கள் யூபிலி ஆண்டு - அந்த ஆண்டில் நீங்கள் உங்கள் நிலப் பகுதிக்கும் உங்கள் இனத்தாரிடமும் திரும்ப வேண்டும். ஐம்பதாம் ஆண்டு உங்களுக்கு யூபிலி ஆண்டு; அந்த ஆண்டு பயிரிட வேண்டாம்; தானாய் விளைந்ததை அறுக்க வேண்டாம். கிளை நறுக்காத திராட்சைக் கொடியினின்று கனி சேர்க்கவும் வேண்டாம்; ஏனெனில், அந்த ஆண்டு யூபிலி ஆண்டு; அது உங்களுக்குத் தூயது. நிலத்தினின்று அவ்வப்போது கிடைக்கும் பலனை உண்ணுங்கள். அந்த யூபிலி ஆண்டில் அவரவர் தம் காணியாட்சிக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். உங்களுக்குள் ஒருவனுக்கு நிலத்தை விற்கவோ அவனிடத்தில் வாங்கவோ செய்யும்பொழுது ஒருவரை ஒருவர் ஏமாற்றாதிருங்கள். யூபிலி ஆண்டிற்குப் பின், ஆண்டுகளைக் கணக்கிட்டு அவற்றின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாங்கலாம். பயன்படுத்தும் ஆண்டுகளுக்கு ஏற்ப அவன் அதை உனக்கு விற்கவேண்டும். பலனைப் பயன்படுத்தும் ஆண்டுகள் எண்ணிக்கை மிகுந்திருந்தால் விலையை உயர்த்த வேண்டும்; குறைந்திருந்தால் விலையைக் குறைக்க வேண்டும். ஏனெனில், பயனுள்ள ஆண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவே அவன் விற்கிறான். உங்களுள் எவரும் தம் இனத்தாரை ஏமாற்றலாகாது. கடவுளுக்கு அஞ்சி நடங்கள்! ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 67: 1-2. 4. 6-7 (பல்லவி: 3)
பல்லவி: கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்.

1 கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!
2 உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்;
பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்துகொள்வர். -பல்லவி

4 வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில்,
நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். -பல்லவி

6 நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.
7 கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக! -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

மத்தேயு 14:1-12

பொதுக்காலம் 17 வாரம் சனி



நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12

அக்காலத்தில் குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப் பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான். அவன் தன் ஊழியரிடம், ``இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்'' என்று கூறினான். ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின் பொருட்டு யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் அவனிடம், ``நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல'' என்று சொல்லி வந்தார். ஏரோது அவரைக் கொலை செய்ய விரும்பினான்; ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான். ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள். அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான். அவள் தன் தாய் சொல்லிக் கொடுத்தபடியே, ``திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்'' என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் வருந்தினான்; ஆனாலும் தான் விருந்தினர்முன் ஆணையிட்டதால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்; ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்; அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள். யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

திருப்பாடல் 67: 1 – 2, 4, 6 – 7
”கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்ந்து போற்றிடுவர்”

இறைவனின் ஆசீரை முழுமையாகப் பெற்றுவிட வேண்டும் என்று எண்ணுகிற ஒரு தாகமுள்ள மனிதனின் குரல் தான் இந்த திருப்பாடல். இறைவனின் ஆற்றலைக்கொண்டு எதையும் செய்ய முடியும் என்று, இறைவல்லமையின் மீது ஒரு மனிதன் வைத்திருக்கிற, அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த திருப்பாடல் வெளிப்படுத்துகிறது. இறைவனை அறியாத, அனுபவிக்காத இந்த உலகத்திற்கு ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிற தீராத ஆசையையும் இந்த பாடல் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

இறைவனுடைய ஆசீர் கிடைத்தால் என்ன செய்யவிருப்பதாக ஆசிரியர் கூறுகிறார்? இறைவனுடைய ஆசீரை திருப்பாடல் ஆசிரியர் தன்னுடை சுயநலத்திற்காகக் கேட்கவில்லை. மாறாக, அவர் இறைவனின் வல்லமையை மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டுமென்று கேட்கிறார். ஒருவரை மற்றவர் மதிக்க வேண்டுமென்றால், அவர் தன்னுடைய வலிமையை நிரூபிக்க வேண்டும் என்கிற பார்வையைக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், இது புரிந்து கொள்ளக்கூடியது. மனித உணர்வுகளில் ஆசிரியர் பேசுகிறார். இதனை நாம் தவறாக புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக, இறைவல்லமையை அனைவரும் உணர்ந்து, அவருக்கு ஆராதனை செலுத்த வேண்டும் என்று ஏங்குகிற மனநிலையை இது நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது.

இறைவனின் வல்லமை நம்மிலிருந்து செயல்பட நாம் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இறைவனின் கருவிகளாக நாம் அவருடைய கரங்களில் தவழ வேண்டும். அது இறைவனின் புகழை பரப்புவதற்கும், அவரைப்பற்றி இந்த உலகம் அறிந்து கொள்வதற்கும் நிச்சயம் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

நன்மை செய்வதே வாழ்க்கை

”ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா? இல்லையா?” – என்பது கடினமான கேள்வி. பதில் சொல்ல முடியாத கேள்வியல்ல. ஆனால், பதில் சொல்ல தயங்கக்கூடிய கேள்வி. அப்படிப்பட்ட கேள்வியை இயேசு கேட்கிறார். நிச்சயம், பரிசேயர்களின் உள்ளத்தில், அதற்கான பதில் உடனே வந்திருக்கும். ”முறையல்ல” என்பதாகத்தான், அவர்களுடைய பதில் இருந்திருக்கும். ஆனாலும், சொல்லத் தயங்குகிறார்கள். ஏன்? அவர்களைப் பொறுத்தவரையில் அது சரியான பதிலாக இருந்தாலும், அவர்களின் பதில் மக்கள் மத்தியில் வெறுப்பைக் கொடுக்கும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். எனவே தான், அமைதியாக இருந்தனர்.

சாதாரண மக்களுக்கு தெரிந்த மனிதநேயம் கூட பரிசேயர்களுக்கு தெரியாதது வேதனையிலும் வேதனை. அவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசினார்கள். சாதாரண பாமர மக்கள், மனிதநேயத்தைக் காப்பாற்றுவதுதான், சிறந்த ஒன்றாக இருக்கும் என எண்ணுகிறபோது, படித்த, அறிவாற்றலோடு விளங்குகிற பரிசேயர்கள், அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பது, நிச்சயம் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதிகாரத்தில் இருக்கிறவர்களும், ஆணவத்தில் இருக்கிறவர்களும் இத்தகைய மனநிலையோடு தான் இருக்கிறார்கள். அவர்கள் உள்ளத்திலிருந்து, இத்தகைய எண்ணங்கள் களையப்பட வேண்டும்.

இயேசு அதிகாரவர்க்கத்தினருக்கு பயந்தவர் அல்ல. நன்மை செய்ய வேண்டும் என்றால், நன்மை கிடைக்கும் என்றால், அதற்கான எத்தகைய கடினமான முயற்சியையும் எடுப்பதற்கு தயங்காதவர். அந்த துணிவு தான், சென்ற இடங்களில் எல்லாம் இயேசுவை நன்மை செய்ய தூண்டியது. நாமும், இயேசுவைப்போல நன்மை செய்ய தயங்காது வாழ அருள்வேண்டுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
------------------------------------------------

பலவீனங்களை வெற்றி கொள்வோம்

ஏரோது ஒரு பலவீனமான மனிதன் என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்க முடிகிறது. சாதாரணமாக தான் கொடுத்த ஒரு வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக, உயிராக மதிக்கப்படும் சட்டத்தையே காவு கொடுத்தவர் இந்த ஏரோது. தான் செய்வது மிகப்பெரிய தவறு என்பது, ஏரோது அறியாதது அல்ல. ஆனால், ஏரோதியாவுடனான நெருக்கம், மயக்கம், பயம் அனைத்தும், இந்த தவறை அவர் துணிவோடு செய்வதற்கு உதவி செய்தது. தான் செய்யப்போவது தவறு என்று தெரிந்தும், எதைச்செய்தால் அது சரியாக இருக்கும் என்பதை அறிந்தும், தவறுக்கு துணைபோனால், அதுதான் பலவீனம். ஏரோது இந்த பலவீனத்திற்குச் சொந்தக்காரர்.

ஏரோதியாவுடனான இந்த தவறான உறவு எந்தவிதத்திலும் ஏதோதுவிற்கு நன்மையைத்தரவில்லை. தனது முதல் மனைவியை விலக்கியதால், முதல் மனைவியின் தந்தையான, நாப்தானியர்களின் அரசனான அரேற்றஸ், போரிலே ஏரோதுவைத் தோற்கடித்து தனது கோபத்தைத் தீர்த்துக்கொண்டான். உரோமையர்களின் உதவி இருந்ததால், தனது பதவியை, போரில் தோற்றாலும் தக்கவைத்துக்கொண்டான். கலிகுல்லா உரோமை அரசராகப் பதவியேற்றபோது, ஏரோதியாவின் நச்சரிப்பால், சிறப்புப்பட்டங்கள் பெறுவதற்கு முயற்சி எடுத்தான். இறுதியில் குற்றம்சாட்டப்பட்டு, நாடுகடத்தப்பட்டார். இவ்வாறு ஏரோதியாவின் உறவினால், தனது வாழ்க்கையே நாசமாகிக்கொண்டிருந்தாலும், அதையே அறிந்திருந்தாலும், அதைவிட்டு விலக முடியாமல் வாழ்ந்த ஏரோது உண்மையில் பலவீனமானவன் தான்.

பலவீனம் தவறல்ல. தனது பலவீனம் தெரிந்திருந்தும், அதனால் தனக்கு ஏற்படும் பாதகங்களை அறிந்திருந்தும், அந்த பலவீனத்திலே வீழ்ந்து கிடப்பதுதான் தவறு. நமது வாழ்விலும் நமது பலவீனங்களை அறிந்திருந்தாலும், அதனால் நமக்கு வரும் துன்பங்களைத் தெரிந்திருந்தாலும், அவற்றில் வீழ்ந்து கிடந்தால், நிச்சயம் அது தவிர்க்கப்பட வேண்டும். இயேசுவின் துணைகொண்டு, நமது பலவீனங்களை வெற்றிகொள்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

மனச்சான்றின் குரலுக்குச் செவிமடுப்போம்

பெரிய ஏரோதுக்கு பல பிள்ளைகள் இருந்தார்கள். தான் இறக்கும்போது உரோமையர்களின் ஒப்புதலுடன், தன்னுடைய நாட்டை மூன்று பிள்ளைகளுக்கு பிரித்துக்கொடுத்தார். அவர்கள் ஆர்க்கெலாஸ், பிலிப் மற்றும் இன்றைய நற்செய்தியில் வருகின்ற அந்திபாஸ் ஏரோது. ஏரோது அந்திபாஸ் தன் சகோதரன் பிலிப்பு பொறுப்பாளராக இருந்த உரோமை நகருக்குச்சென்றபோது, அவனுடைய மனைவியை தன்னோடு அழைத்துக்கொண்டு வந்து தனது மனைவியாக்கிக் கொள்கிறான். இதன்மூலம், ஏரோது இரண்டு தவறுகளைச் செய்கிறான். ஒன்று தன்னுடைய சகோதரன் மனைவியை தன்னுடைய மனைவியாக்கியது. இரண்டாவது, இப்படித்தவறான வாழ்வு வாழ தன்னுடைய மனைவியை எந்தக் காரணமும் இல்லாமல் விவாகரத்து செய்தது. திருமுழுக்கு யோவான் இதைத்தான் கண்டிக்கிறார்.

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பதைப்போல, தான் யோவானைக் கொன்றது தவறு என்கிற குற்ற உணர்ச்சி, ஏரோதுவைப் புலம்ப வைக்கிறது. தவறு என்று தெரிந்தும், தவறைச்செய்தால், நிம்மதியற்ற வாழ்வுதான் நமக்கு மிஞ்சும் என்பதை ஏரோதுவின் வாழ்வு நமக்கு எச்சரிக்கையாக இருக்கிறது. தவறுவது மனித இயல்பு என்று சொல்வார்கள். இது தவறு செய்கிற அனைவருக்குமே பொருந்தாது. நிச்சயமாக, தெரிந்தே தவறு செய்கிறவர்களுக்கு இது பொருந்தாது. நன்றாக வாழ வேண்டும், நிறைவாக வாழ வேண்டும் என்று நாம் முயற்சி எடுத்து வாழ நினைக்கின்ற போது, தவறினால், நாம் துவண்டுவிடக்கூடாது என்பதற்காக சொல்லப்பட்ட இந்த ஆறுதல் வார்த்தைகளை நாம் செய்கிற தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கின்ற வார்த்தைகளாக, மாற்றிவிடக்கூடாது.

ஏரோதுவுக்கு தான் செய்வது முழுக்கு, முழுக்க தவறு என்பது நன்றாகத் தெரியும். இருந்தும் தவறைத் துணிந்து செய்கிறான். இறுதியில் நிம்மதியற்ற வாழ்வு வாழ்கிறான். நிம்மதியற்ற வாழ்வு, கடவுள் கொடுத்த கொடையாகிய வாழ்வை சூன்யமாக்கிவிடும். எனவே தவறு செய்கிறவர்களுக்கு அஞ்சுகிறவர்களாக வாழ்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
------------------------------------------------------



ஏரோதும் யோவானும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு விதமான மனிதர்களைக் காண்கிறோம்;

நெற்றிக் கண் திறந்தாலும், குற்றம் குற்றமே என்று துணிவுடன் ஏரோதின் பாவத்தைச் சுட்டிக்காட்டிய இறைவாக்கினர் யோவான். யோவானின் வார்த்தைகளுக்கும் அஞ்சி, மனைவி ஏரோதியாவுக்கும் அஞ்சி, யோவானை இறைவாக்கினர் எனக் கருதிய மக்கள் கூட்டத்துக்கும் அஞ்சி, அஞ்சி வாழ்ந்த ஏரோது.

நன்றாகத்தான் சொன்னார்கள்; வீரன் ஒருமுறை சாகிறான், கோழையோ தினம் தினம் சாகிறான் என்று. இம்மொழி யோவானுக்கும், ஏரோதுக்கும் நன்றாகப் பொருந்துகிறது. கடவுளுக்கும், மனச்சான்றுக்கும் அஞ்சுபவர்கள் வேறு எதற்கும், யாருக்கும் அஞ்சவேண்டியதில்லை. கடவுளுக்கும், மனச்சான்றுக்கும் அஞ்சாதவர்கள் மற்ற அனைத்துக்கும், அனைவருக்கும் அஞ்ச வேண்டியதிருக்கிறது.

கடவுளுக்கு அஞ்சி, தீமையைத் துணிவுடன் சுட்டிக்காட்டும் அனைவரும் இறைவாக்கினர்களே. அத்தகைய இறைவாக்குப் பணிக்கு இன்று இறைவன் உங்களையும், என்னையும் அழைக்கிறார். நாம் யாருக்கும் அஞ்சவேண்டாம். இறைவனுக்கும், அவர் நம் இதயத்தில் பதித்துள்ள மனச்சான்றிற்கு மட்டும் அஞ்சும் வரத்தை இறைவனிடம் கேட்போம்.

மன்றாடுவோம்; அஞ்சாதீர்கள் என்று மொழிந்த இறைவா, அஞ்சா நெஞ்சுடன் இறைவாக்குரைத்து, உமக்கு சான்று பகர்ந்த திருமுழுக்கு யோவானுக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். தீமையைக் கண்டு அஞ்சவும், தீமை செய்வோரைக் கண்டு அஞ்சாதிருக்கவும் எங்களுக்கு உமது ஆவியின் ஆற்றலைத் தாரும். யோவானைப் போல நாங்களும் அச்சமற்ற இறைவாக்கினராக வாழ அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

''ஏரோது திருமுழுக்கு யோவானைக் கொலைசெய்ய விரும்பினான்; ஆயினும் மக்கள் கூட்டத்தினர்
அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்'' (மத்தேயு 14:5)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- திருமுழுக்கு யோவான் இயேசுவின் வருகையை முன்னறிவித்து, இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தவர். அவருடைய வாழ்வும் சாவும் இயேசுவின் வாழ்வையும் சாவையும் பெரிதும் ஒத்திருப்பதை மத்தேயு கோடிட்டுக் காட்டுகிறார். கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கிறது என்னும் நல்ல செய்தியை இருவரும் துணிச்சலோடு அறிவித்தனர் (காண்க: மத் 3:1-10). இருவருமே மக்களின் எதிர்ப்பைச் சந்தித்தனர் (காண்க: மத் 11:18-19). அதிகார வர்க்கத்தின் அட்டூழியத்தின் காரணமாக இருவருமே கைதுசெய்யப்பட்டு அநியாயமாக் கொலைசெய்யப்பட்டனர். இவ்வாறே இயேசுவின் சீடர்களுக்கும் நிகழும் எனவும் இயேசு முன்னறிவித்தார் (காண்க: மத் 10:17-18).

-- திருமுழுக்கு யோவானைக் கொலைசெய்த ஏரோது (அந்திப்பா என்பதும் அவன் பெயர்) வரலாற்றில் வருகின்ற பெரிய ஏரோது என்னும் மன்னனின் மகன். தன் தந்தையின் சாவுக்குப் பிறகு கலிலேயாவின் தெற்குப் பகுதிக்குக் குறுநில மன்னன் ஆனான் (மத் 14:1). அங்குதான் இயேசு பெரும்பாலும் பணிபுரிந்தார். இக்குறுநில மன்னனான ஏரோது அந்திப்பா யூத சமய வழக்கத்தை மீறித் தன் சகோதரனான பிலிப்பின் மனைவியைத் தன் மனைவியாக்கிக் கொண்டிருந்தான். அதைக் கண்டித்த யோவானை எப்படியாவது ஒழித்துவிடத் திட்டமிட்டான். இன்றைய உலகிலும் இறைவாக்கு என்பது ''ஆபத்தானது''. உண்மையைத் துணிச்சலோடு எடுத்துரைப்போர் ஆளும் வர்க்கத்தின் சீற்றத்துக்கு ஆளாகின்றனர். அவர்களுடைய உயிருக்கே ஆபத்து எழுகிறது. ஆயினும் இறைவாக்கை யாரும் அணைத்துவிட முடியாது; அதன் வல்லமையை அழிக்கவும் முடியாது. உண்மையின் குரல் எந்நாளும் ஒலித்துக்கொண்டே இருக்கும். இயேசுவின் சீடர் இறைவாக்குப் பணியைத் துணிவுடன் தொடர்ந்திட அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு
இறைவா, உம் சக்தியே எங்களைத் தாங்குகிறது என நாங்கள் உணர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"ஏரோது...ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின்
தலையை வெட்டச் செய்தான்" (மத்தேயு 14:10)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- திருமுழுக்கு யோவான் ஒரு தலைசிறந்த இறைவாக்கினர். கடவுளுடைய வார்த்தையை அறிவிப்பதில் அவருக்கு ஒருபோதுமே தயக்கம் இருந்ததில்லை. கடவுளின் ஆட்சி நெருங்கிவருகிறது என்னும் செய்தியை யோர்தான் நதிக்கரையில் மக்களுக்கு அறிவித்து, அவர்கள் மனம் திரும்பாவிட்டால் அழிந்தொழிவர் என அவர் முழக்கமிட்டதுண்டு. அதே துணிச்சலோடு அவர் ஏரோது மன்னனின் தவறான நடத்தையைச் சுட்டிக்காட்டி அவனைக் கண்டித்தார். ஏரோதுக்கு யோவானின் மட்டில் மதிப்பு இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால், அவனோ ஒரு கோழைபோல நடந்துகொள்கிறான். தன் உண்மையான நிலையை யோவான் தனக்கு உணர்த்திக் காட்டியபிறகும் ஏரோது அந்த உண்மையை ஏற்க முன்வரவில்லை. மாறாக, பிறர் தன்னைப் பற்றிக் குறைகூறுவார்களோ என நினைத்து, விவேகமற்ற முறையில் வாக்குக் கொடுத்துவிட்டு, அந்த வாக்கை மீற முடியாது எனவும் தவறாக நினைக்கிறான். எப்படியாயினும், உண்மைக்குச் செவிமடுத்து, உண்மையின் வழியில் நடக்கவும், யோவான் சுட்டிக்காட்டிய உண்மையை ஏற்றிடவும் ஏரோதுக்கு மனமில்லை. அவன் ஒளியைவிட இருளையே தெரிந்துகொள்கிறான்; எனவே, இருளின் வல்லமை மேலோங்கி, ஏரோது தன் உண்மையான மனச் சான்றை உதறி எறிந்துவிட்டுக் கொடூரமான கொலைச்செயலில் ஈடுபடுகிறான்.

-- உண்மை எப்போதும் இனிப்பதில்லை. கசப்பான உண்மையைக் கேட்க நாம் விரும்புவதில்லை. நமக்கு சாதகமானவற்றைப் பிறர் சொன்னால், அல்லது நம்மைப் புகழ்ந்துரைத்தால் நாம் மகிழ்கின்றோம். ஆனால், உண்மையாகவே நம்மிடம் இருக்கின்ற குறைகளை நம் நண்பர்கள் அல்லது நமது நலனை விரும்புவோர் நமக்குச் சுட்டிக்காட்டி நம்மைத் திருத்த முனையும்போது நாம் பல தடவைகளிலும் மகிழ்வதில்லை. மாறாக, சில சமயங்களில் நம்மில் பழிக்குப் பழி என்னும் மனநிலையே மேலோங்கிவிடுகிறது. மேலும், பிறர் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ எனத் தவறாக எண்ணிப் பிறருடைய குற்றத்தைச் சுட்டிக்காட்டி அவர்களை நல்வழிப்படுத்தவும் நாம் தயங்குகிறோம். யோவானிடம் துலங்கிய துணிச்சல் நம்மிடமும் துலங்க வேண்டும். அப்போது, உண்மையான இறைவாக்கினராக நாம் செயல்பட முடியும். நமது வாழ்வு கடவுளுக்கு உகந்ததாக இருக்கும்போது, நம்மைச் சூழ்ந்து நிகழ்கின்ற அநீதிகளைக் கண்டிக்கவும் நீதியான சமுதாயம் உருவாக நம்மையே அர்ப்பணிக்கவும் நாம் தயங்கமாட்டோம்.

மன்றாட்டு
இறைவா, உண்மையால் நாங்கள் வழிநடத்தப்பட எங்களை முழுமையாக உம்மிடம் கையளிக்க அருள்தாரும்.



--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்;

இறைவன் கொடுத்த வரம்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

குற்றம் செய்த திருடனுக்கு யாரைப ;பார்த்தாலும் போலீஸ்காரனாகத்தான் தெரியும். பாவத்தில் வாழ்பவனுக்கும் பார்க்கும் அத்தனை பேரும் இறைவாக்கினராகத்தான் தெரியும்.பயம் வெளியே பிரதிபலிக்கும். "அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்." 14:5

அந்த ஏரோது நல்லவன்தான். இறைவாக்கினரை மதிப்பவன். பாவத்துக்கு பயந்தவன். மனிதர்களை மதிப்பவன். கொடுத்த வாக்கைக் காப்பவன். ஆனால் கூட்டணி சரியில்லை. ஏரோதியாளோடு அவருக்குள்ள தொடர்பு அவரை ஒரு காமுகனாக, ஒரு கொலைகாரனாகக்கொண்டு நிருத்தியுள்ளது.

அந்த ஏரோதியாள் ஒரு சந்தர்ப்பவாதி. இறை உணர்வு அற்றவள். கொலையும் செய்வாள். குழந்தையையும் பயன்படுத்துவாள். இதுபோன்ற மனைவி, நண்பன், கூட்டணி அமையுமானால் அரசிழந்து அந்தஸ்திழந்து அலைய நேரிடும்.

நல்ல மனைவி, நண்பன்,உறவு, கூட்டணி அமையும்படி பார்த்துக்கொள். வாழ்வில் உயர்வாய். நல்ல மனைவியாக, நண்பனாக,உறவாக, கூட்டணியாக செயல்படு. உலகம் உன்னைப் பெருமைப்படுத்தும்.

--அருட்திரு ஜோசப் லீயோன்

01/08/2019

முதல் வாசகம்

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 40: 16-21, 34-38

அந்நாள்களில் ஆண்டவர் கட்டளையிட்டபடியெல்லாம் மோசே செயல்பட்டார். இரண்டாம் ஆண்டில், முதல் மாதம், முதல் தேதியன்று திருஉறைவிடம் எழுப்பப்பட்டது. மோசே திருஉறைவிடத்தை எழுப்பினார்; பாதப் பொருத்துகளை வைத்து அதன்மேல் சட்டங்களைப் பொருத்தினார், குறுக்குச் சட்டங்களையும் பொருத்தினார்; தூண்களையும் நிறுத்தினார். திருஉறைவிடத்தின்மேல் அவர் கூடாரத்தை விரித்தார்; அதற்குமேல் கூடார மேல்விரிப்பை அமைத்தார். இதுவும் ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்யப்பட்டது. உடன்படிக்கைப் பலகையை அவர் எடுத்து, அதைப் பேழையில் வைத்தார். தண்டுகளைப் பேழையில் செருகினார். இரக்கத்தின் இருக்கையைப் பேழையின்மேல் வைத்தார். திருஉறைவிடத்தினுள் பேழை எடுத்துச் செல்லப்பட்டது. திருத்தூயகத் திரை தொங்கவிடப்பட்டு, உடன்படிக்கைப் பேழை மறைக்கப்பட்டது. இதையும் ஆண்டவர் கட்டளையிட்டபடியே மோசே செய்தார். பின்பு, மேகம் சந்திப்புக் கூடாரத்தை மூடிற்று; ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று. சந்திப்புக் கூடாரத்தின் மேலே மேகம் நின்றிருந்ததாலும், ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பியதாலும் மோசே உள்ளே நுழைய முடியாமல் போயிற்று. இஸ்ரயேல் மக்கள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், மேகம் திருஉறைவிடத்தை விட்டு எழும்பும் போதெல்லாம் புறப்பட்டுச் செல்வார்கள். மேகம் எழும்பாதிருக்கும் போதோ, அது மேலே எழும்பும் நாள் வரை, அவர்கள் புறப்பட மாட்டார்கள். ஏனெனில் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் திருஉறைவிடத்தின்மேல் பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும், இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல் வீட்டார் காண்பார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 84: 2. 3. 4-5, 7. 10
பல்லவி: ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது!

2 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது;
என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை
மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. -பல்லவி

3 படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே!
உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது;
தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச்
சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. -பல்லவி

4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்;
அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
5 உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர்.
7 அவர்கள் நடந்து செல்கையில் மேலும் மேலும் வலிமை பெறுகின்றார்கள். -பல்லவி

10 வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும்
உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது;
பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும்,
என் கடவுளது இல்லத்தின் வாயிற் காவலனாய் இருப்பதே இனிமையானது. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.
மத்தேயு 13:47-53

பொதுக்காலம் 17 வாரம் வியாழன்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-53

அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: ``விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.'' ``இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?'' என்று இயேசு கேட்க, அவர்கள், ``ஆம்'' என்றார்கள். பின்பு அவர், ``ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்'' என்று அவர்களிடம் கூறினார். இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

திருப்பாடல் 84: 2, 3, 4 – 5, 7a & 10
”ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது”

இறைவன் வசிக்கக்கூடிய ஆலயம் எத்துணை மகிமையானது என்பதை இந்த திருப்பாடல் விளக்குவதாக இருக்கிறது. ”அருமையானது” என்கிற பொருள், ஆலயத்தின் உயர்ந்த மண்டபங்களையும், சுரூப வேலைப்பாடுகளையும் குறிக்கக்கூடிய வார்த்தையல்ல. ஆலயத்தின் சிறப்புத்தோற்றத்தையும் குறிப்பதல்ல. இங்கே நாம் கவனிக்கக்கூடிய முக்கியமான ஒன்று, திருப்பாடல் ஆசிரியர் எருசலேம் தேவாலயத்தை மையமாக வைத்து இந்த பாடலை எழுதுகிறார். எருசலேம் தேவாலயம் பார்ப்பதற்கு அழகானது. பரவசம் தரக்கூடியது. அப்படியானால், ஆசிரியர் ஆலயத்தைப்பார்த்து, “அருமையானது“ என்று சொல்லக்கூடிய பிண்ணனி என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.

ஆலயம் என்பது ஆண்டவர் வாழக்கூடிய இல்லம். ஆண்டவரின் ஆலயத்தில் இருக்கிறபோது, நமக்கு எந்த கவலையும் எழுவது கிடையாது. ஒரு தாயின் மடி எப்படி நம்முடைய கவலைகளுக்கெல்லாம் சிறந்த மருந்தாக இருக்கிறதோ, அதேபோல இறைவனின் இல்லம் நம் அனைவருக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. நம்முடைய கவலைகளைப் போக்கக்கூடிய இடமாகவும், கண்ணீரைத்துடைக்கக் கூடிய இடமாகவும் இருக்கிறது. எவ்வளவு துயரத்தோடு இறைவனின் ஆலயத்திற்கு வந்தாலும், நாம் கவலை நீங்கிச் செல்வதற்கு இறைவனின் ஆலயம் துணைசெய்கிறது. ஏனென்றால், அங்கே இருப்பது உண்மையின் ஆண்டவர். நமக்கெல்லாம் வாழ்வு தரக்கூடியவர். நம் கண்ணீரைத்துடைக்கக் கூடியவர். இந்த காரணத்தினால் தான், ஆசிரியர் ஆண்டவரின் ஆலயத்தை உயர்வானதாகச் சொல்கிறார்.

நம்முடைய வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாக ஆலயம் அமைந்திருக்கிறது. அது நம்முடைய வெறும் வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல, அதனையும் தாண்டிய இறையனுபவத்தைக் கொடுக்கக்கூடிய இடம். அந்த இறையனுபவத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இடமாக நாம் ஆலயத்தைப் பார்ப்போம். அதன் புனிதத்தன்மையை உணர்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

திருப்பாடல் 84: 2, 3, 4 – 5, 7a & 10
”ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது”

இறைவன் வசிக்கக்கூடிய ஆலயம் எத்துணை மகிமையானது என்பதை இந்த திருப்பாடல் விளக்குவதாக இருக்கிறது. ”அருமையானது” என்கிற பொருள், ஆலயத்தின் உயர்ந்த மண்டபங்களையும், சுரூப வேலைப்பாடுகளையும் குறிக்கக்கூடிய வார்த்தையல்ல. ஆலயத்தின் சிறப்புத்தோற்றத்தையும் குறிப்பதல்ல. இங்கே நாம் கவனிக்கக்கூடிய முக்கியமான ஒன்று, திருப்பாடல் ஆசிரியர் எருசலேம் தேவாலயத்தை மையமாக வைத்து இந்த பாடலை எழுதுகிறார். எருசலேம் தேவாலயம் பார்ப்பதற்கு அழகானது. பரவசம் தரக்கூடியது. அப்படியானால், ஆசிரியர் ஆலயத்தைப்பார்த்து, “அருமையானது“ என்று சொல்லக்கூடிய பிண்ணனி என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.

ஆலயம் என்பது ஆண்டவர் வாழக்கூடிய இல்லம். ஆண்டவரின் ஆலயத்தில் இருக்கிறபோது, நமக்கு எந்த கவலையும் எழுவது கிடையாது. ஒரு தாயின் மடி எப்படி நம்முடைய கவலைகளுக்கெல்லாம் சிறந்த மருந்தாக இருக்கிறதோ, அதேபோல இறைவனின் இல்லம் நம் அனைவருக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. நம்முடைய கவலைகளைப் போக்கக்கூடிய இடமாகவும், கண்ணீரைத்துடைக்கக் கூடிய இடமாகவும் இருக்கிறது. எவ்வளவு துயரத்தோடு இறைவனின் ஆலயத்திற்கு வந்தாலும், நாம் கவலை நீங்கிச் செல்வதற்கு இறைவனின் ஆலயம் துணைசெய்கிறது. ஏனென்றால், அங்கே இருப்பது உண்மையின் ஆண்டவர். நமக்கெல்லாம் வாழ்வு தரக்கூடியவர். நம் கண்ணீரைத்துடைக்கக் கூடியவர். இந்த காரணத்தினால் தான், ஆசிரியர் ஆண்டவரின் ஆலயத்தை உயர்வானதாகச் சொல்கிறார்.

நம்முடைய வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாக ஆலயம் அமைந்திருக்கிறது. அது நம்முடைய வெறும் வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல, அதனையும் தாண்டிய இறையனுபவத்தைக் கொடுக்கக்கூடிய இடம். அந்த இறையனுபவத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இடமாக நாம் ஆலயத்தைப் பார்ப்போம். அதன் புனிதத்தன்மையை உணர்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------
உண்மைக்கு சான்று பகர…

மக்கள் இயேசுவிடம் திரளாக வந்தபோது, அவர்களுக்கு புதிதாகக் கற்றுக்கொடுக்க வேண்டும், புதிய சிந்தனைகளைக் கொடுக்க வேண்டும், தனது கருத்துக்கள் மட்டும் தான் மக்களின் உள்ளத்தில் பதிக்கப்பட வேண்டும் என்று, இயேசு ஒருபோதும் நினைத்தது இல்லை. அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்த, திருச்சட்டத்தைப் பற்றிய விளக்கங்களை முற்றிலுமாக மாற்றி, புதிய நெறிமுறைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் விரும்பியதில்லை. மக்களுக்கு எது நன்மையோ, அது ஏற்கெனவே அவர்களுக்குச் சொல்லப்பட்டிருந்தால், அதனையும் சேர்த்தே அவர்களுக்குப் போதிக்கிறார். இதிலிருந்து இயேசுவின் சிந்தனை, மக்கள் உண்மையை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப வாழ வேண்டும் என்பதுதான்.

இன்றைய உலகின் அறிவு வளர்ச்சி நாம் நினைக்காத வண்ணம் வளர்ந்திருக்கிறது. உண்மையை அறிந்து கொள்வதற்கு பல வாய்ப்புகள் நமக்கு தரப்படுகிறது. எது உண்மை? என்பதை அறிவது மிக எளிதானதாக இருக்கிறது. ஆனால், அந்த உண்மையை திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்கிறோமா? என்றால், அது கேள்விக்குறிதான். உண்மை என்ன? என்பது தெரிந்திருந்தாலும், அதனை நாம் ஒரு பொருட்டாக எடுப்பதில்லை. அதற்கு துணைநிற்பதுமில்லை. நமக்கு ஏன் தேவையில்லாத வம்பு? என்று ஒதுங்கிவிடுகிறோம். இந்த சூழ்நிலை மாற வேண்டும். உண்மையை நாம் ஏற்று, நமது வாழ்வில் உண்மை உள்ளவர்களாக நாம் வாழ வேண்டும்.

இந்த உலகம் பொய்யான மனிதர்களால் நிறைந்திருக்கிறது. அவர்கள் உண்மையை மறைத்து பொய்மையை விதைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், உண்மையை எப்படியாவது வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக, பல மனிதர்கள் தங்களையே தியாகமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் துணைநிற்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
---------------------------------------------

நிறைவான பணிவாழ்வு

பொதுவாக பாலஸ்தீனத்தில் இரண்டு வகையான மீன்பிடிப்பு முறை வழக்கத்தில் இருந்தது. முதலாவதாக, கரையிலிருந்து தனியே ஒரு மனிதர், வலையை கடலில் வீசி, காத்திருந்து, அதனைக் கரைக்கு இழுத்து மீன் பிடிப்பது. நமது பகுதிகளில் “மணிவலை“ என்ற வலையைப் பயன்படுத்தி, மீன்பிடிக்கும் முறைக்கு இது ஒப்பானது. இரண்டாவது, ”இழுப்பு மடிவலை” மீன்பிடிப்பு முறை. இந்த முறையில் வலையில் சிக்குவது அனைத்தையும் அப்படியே இழுத்து கரைக்கு வருவது. இந்த பிண்ணனியின் அடிப்படையில் இயேசு தனது கருத்தை விளக்குகிறார்.

இயேசு தனது போதனைக்கு இங்கே பயன்படுத்துவது இரண்டாவது முறையை. கடவுளின் பணியைச் செய்கின்ற ஒவ்வொருவரும் யாரானாலும், எவரானாலும் சரி, நபரைப்பற்றிக் கவலைப்படாமல் அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்க வேண்டும். அனைவரையும் அன்பு செய்ய வேண்டும். தீர்ப்பை கடவுளிடம் விட்டுவிட வேண்டும். அதைப்பற்றி நாம் கவலைப்படக்கூடாது. நமது வாழ்வில் நமக்கு கடவுள் தந்திருக்கிற பணியைச் சிறப்பாகச் செய்ய நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.

நமது பணியை திறம்பட, அர்ப்பண உணர்வோடு நாம் செய்துகொண்டே இருப்போம். முடிவு எப்படி இருக்குமோ? என்று கவலைப்படாமல், நமது பணியை நிறைவோடு செய்வதில், முழுமையாக ஈடுபடுவோம். அதையே, நாம் தொடர்ந்து செய்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

நற்செய்திப்பணியாளர்களாக மாற….

எளிய மக்களின் வாழ்க்கை நடைமுறைகளுக்கு ஏற்ப, அவர்களின் புரிந்துகொள்ளும் திறனுக்கேற்ப, எந்த அளவுக்கு அவர்கள் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பாக இருக்குமோ, அந்தந்த வழிகளில் தன்னுடைய போதனையை மாற்றி அமைத்துக்கொள்வதில் இயேசுவுக்கு நிகர் இயேசுதான். மீன்பிடித்தொழில் அதிகம் செய்துவந்த மக்களுக்கு அவர்களுக்கு புரிகிற மொழியில் இயேசுவின் இந்தப் போதனை அமைகிறது. மீன்பிடிப்பில் பலமுறைகள் உண்டு. அதில் ஒன்று இன்றைய நற்செய்திப்பகுதியில் பயன்படுத்தப்படுகிறது. படகில் சென்று மொத்தமாக கடலில் இருப்பதை அரித்து, கரைக்குக்கொண்டு வந்து பிரித்தெடுக்கின்ற முறை. கரைக்குக் கொண்டுவந்தபிறகு தேவையானதையும், தேவையற்றதையும் பிரித்தெடுப்பது.

விண்ணரசு இந்த வலைக்கு ஒப்பாகும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, நல்லவை, தீயவை அனைத்துமே விண்ணரசுக்குள் இழுத்துவரப்பட வேண்டும். அதுதான் நமது கடமை. யாரையெல்லாம் ஆண்டவரின் பக்கம் நம்மால் கொண்டுவரமுடியுமோ, அவர்கள் வெளிப்போக்காக எப்படி இருந்தாலும் சரி, அதைப்பற்றி கவலைப்படாமல், அவர்கள் அனைவரையும் ஆண்டவர் பக்கம் கொண்டு வர நாம் முயற்சி எடுக்க வேண்டும். அதை நல்லதாக, கெட்டதாக பிரித்தெடுப்பது கடவுளின் பணி. அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

திருச்சபை நம்மிடமிருந்து பலவற்றை எதிர்பார்க்கிறது. அவற்றுள் முக்கியமான, முதன்மையான ஒன்று: நற்செய்தி அறிவிப்பது. நாம் ஒவ்வொருவரும் நற்செய்திப்பணியாளர்களாக மாறி, ஆண்டவரிடம் மக்களைக் கொண்டுவரவேண்டும் என்கிற திருச்சபையின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுகின்ற நல்ல போதகர்களாக மாற உறுதி எடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

குயவன் கையில் நாம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று குயவர் தம் கையால் செய்த மண்கலம் சரியாக அமையாதபோதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக்கொண்டிருந்தார் என்னும் வரிகளைத் தியானிப்போம். இறைவன் ஒரு குயவர். நாம் அவர் கையில் உள்ள களிமண். நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். அத்திட்டத்தின்படியே அவர் நம்மை வனைகிறார். ஆனால், சில வேளைகளில் நாம் அவரது திட்டத்தின்படி ஒத்துழைப்பதில்லை, வாழ்வதில்லை. எனவே, நமது வாழ்வு சரியாக அமையாதபோதெல்லாம், இறைவன் தமது விருப்பப்படி வேறொரு கலமாக நம்மை வடிக்கின்றார். இந்த மாபெரும்; உண்மையை நாம் உணர்ந்துகொண்டால், நம் வாழ்வில் என்ன நேர்ந்தாலும், நாம் கவலை கொள்ள மாட்டோம். நமது வாழ்வில் நாம் சந்திக்கின்ற விபத்துகள், தோல்விகள், நோய்கள் நம்மை அலைக்கழிக்கின்றன. நாமும் சோர்ந்துபோகின்றோம், மன உளைச்சலில் வாடுகிறோம். அப்போதெல்லாம், நாம் இந்த இறைமொழியை மனதில் கொள்ளவேண்டும். இறைவன் இந்த சூழ்நிலையையும் தமது விருப்பப்படி மாற்றி வேறொரு கலமாக, பயனுள்ள விதத்தில் வடிப்பார். இந்த நம்பிக்கையை இன்று ஆழப்படுத்திக்கொள்வோம்.

மன்றாடுவோம்: தெய்வீகக் குயவனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது கையில் களிமண்ணாக எங்களைக் கையளிக்கிறோம். உமது விருப்பப்படி எங்களை வடித்தருளும். ஒருவேளை எங்கள் தவறுகளால் எங்கள் வாழ்வு சரியாக அமையாவிட்டால், உமது விருப்பப்படியே வேறொரு விதத்தில் எங்களை வடிப்பீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா



புதியனவும், பழையனவும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இந்த உலகம் நாள்தோறும் மாறி வருகிறது. புதிய புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் அற்புதங்கள், வாழ்வை எளிதாகவும், இனியதாகவும் மாற்றி வருகின்றன. எனவே, புதிய வரவுகளுக்காக இறைவனைப் போற்றுவோம். புதியவைகளை ஏற்றுக்கொள்வோம்.

அதே வேளையில், பழைய அனுபவங்கள் கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடங்கள், காலம் காலமாக நாம் போற்றி வந்த மரபுகள், நல்ல நடைமுறைகள் இவற்றையும் நாம் மறந்துவிடக்கூடாது.

உண்மையான ஞானமென்பது பழையன, புதியனவற்றில் உள்ள நல்லவற்றை ஏற்றுக்கொண்டு, பழையன, புதியனவற்றில் உள்ள தீமைகளைத் தூர எறிந்துவிடுவது.

புனித மத்தேயு நல்ல மறைநூல் அறிஞர் என்பவர் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும், பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர் என்கிறார்.

இறைவார்த்தைமீது ஆர்வம் கொண்டுள்ள நாமும் பழையன, புதியன இரண்டையும் இணைத்து, ஞானத்தோடு வாழ்வோமாக.



மன்றாடுவோம்; பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு இரண்டையும் இணைக்கும் பாலமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். கடந்த கால அனுபவங்களிலிருந்து நல்ல பாடங்களை மறந்துவிடாதிருக்கவும், புதிய புதிய நிகழ்வுகளில் உமது பேரன்பை நன்றியுடன் ஏற்றுக்கொள்ளவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.



-- அருட்தந்தை குமார்ராஜா

''இயேசு, 'இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா' என்று கேட்க,
சீடர்கள், 'ஆம்' என்றார்கள்'' (மத்தேயு 13:51)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கிறது என்னும் நல்ல செய்தியை அறிவித்த இயேசு அதைப் பல உவமைகள் வழியாக மக்களுக்கு அறிவித்தார். குறிப்பாக, தம்மோடு நெருங்கிப் பழகி தம் போதனைகளை அருகிருந்து கேட்டு, தாம் புரிந்த அரும் செயல்களை நேரடியாகக் கண்டு அறிந்த தம் சீடர்களுக்கு இயேசு தம் உவமைகளின் உட்பொருளையும் விளக்கிக் கூறினார். இத்தகைய பேற்றினைப் பெற்ற சீடர்கள் இயேசு கூறியவற்றையும் அவர் செய்தவற்றையும் நன்றாக அறிந்து புரிந்திருப்பார்கள் என்றுதான் எண்ணத் தோன்றும். ஆனால் உண்மையில் அவர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டார்கள். பல தடவைகளில் இயேசுவின் போதனை அவர்கள் காதுகளில் விழுந்தும் அவர்கள் அப்போதனையை உள்வாங்கித் தம் நடத்தையில் எண்பிக்கத் தயங்கினார்கள்.

-- அன்று இயேசுவின் சீடர்கள் இயேசுவை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லையே என நாம் குறைகூறுகின்ற அதே தருணத்தில் நாம் இயேசுவை உண்மையிலேயே புரிந்துகொண்டுள்ளோமா என்னும் கேள்வியையும் எழுப்ப வேண்டும். இயேசு நம்மைப் பார்த்தும் அதே கேள்வியைக் கேட்கின்றார்: ''இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?'' (மத் 13:51). இயேசு யார் எனவும் அவர் நமக்கு வழங்கிய செய்தி யாது எனவும் நாம் உண்மையிலேயே புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நாம் திறந்த மனத்தோடு அவரை அணுக வேண்டும். அவரிடத்தில் நாம் முழுமையாக நம்பிக்கை கொள்ள வேண்டும். நம் இதயத்தைத் திறந்துவைத்து, அங்கே நம்மோடு பேசுகின்ற கடவுளின் குரலுக்கு நாம் கவனமாகச் செவிமடுத்தால் இயேசுவின் போதனைகளை நாம் அறிவளவில் மட்டுமன்றி, நம் இதய ஆழத்திலும் உணர்ந்து புரிந்துகொள்வோம். அப்போது அப்புரிதல் நம் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் கொணரும். இவ்வாறு நாம் மனம் மாறிய மனிதராக வாழ வேண்டும் என்பதே இயேசுவின் போதனையின் நோக்கம். நாம் மரபு வழி பெறுகின்ற மதிப்பீடுகளைப் ''பழையது'' என்னும் ஒரே காரணத்திற்காக ஒதுக்கிவைத்துவிடாமல், அவற்றைப் புதுப் பார்வையோடு ஏற்று, இயேசு கொணர்ந்த புது வாழ்வின் ஒளியில் நாம் பெற்றுக்கொண்டால் ''தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல'' (மத் 13:52) நாமும் அறிவோடு செயல்படுவோம்.

மன்றாட்டு
இறைவா, உம் மகன் வழியாக நீர் எங்களுக்கு அளிக்கின்ற நற்போதனையை நாங்கள் ஆழமாகப் புரிந்திட எங்களுக்கு அருள்தாரும்.



--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும்
வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்" (மத்தேயு 13:47)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு தம் சீடராகத் தெரிந்துகொண்டவர்களுள் பலர் மீனவர். பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு ஆகியோர் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளையில் இயேசுவால் அழைக்கப்பட்டு, அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தனர். சீடர்கள் மீன்பிடித்த இடம் கடல்போல் விரிந்து பரந்த "கெனசரேத்து ஏரி" ஆகும் (லூக்கா 5:1). இதுவே மக்களால் "கலிலேயக் கடல்" என்றும் "திபேரியக் கடல்" என்றும் அழைக்கப்பட்டது. அந்த ஏரியில் வலைவீசி மீன்பிடித்தல் கலிலேயாவில் நடந்த முக்கிய தொழிலாகும். இந்தக் கலிலேயப் பகுதியில்தான் இயேசுவின் பணி பெருமளவு நிகழ்ந்தது. கலிலேயக் கடல் என்றழைக்கப்பட்ட அந்த ஏரியின் பரப்பளவு 166 சதுர கிலோமீட்டர்; ஆழம் சுமார் 30 மீட்டர். இந்த ஏரியில் மீன்பிடிக்க வலைவீசும்போது பல மீனவர் சேர்ந்து உழைப்பில் ஈடுபடுவர். அவர்கள் வீசிய வலையில் விழுகின்ற மீன்கள் பலவகையாக இருக்கும். சமைத்து உண்பதற்குத் தகுந்த நல்ல மீன்களும் சமையலுக்குப் பயன்படாத மீன்களும் பிற உயிரினங்களும் வலையில் அகப்படும். வலையைக் கரையில் இழுத்துக் கொண்டுவந்தபின் மீனவர் நல்ல மீன்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு, பயனற்றவற்றை வெளியே எறிந்துவிடுவர். இந்த நிகழ்ச்சியை இயேசு எத்தனையோ முறை நேரில் பார்த்திருந்தார். அது இயேசுவின் வாயில் இறையாட்சி பற்றிய ஓர் உவமையாக உருவெடுத்தது. வலையில் அகப்பட்ட நல்ல மீன்களை எடுத்துக்கொண்டு கெட்ட மீன்களை விட்டுவிடுவதுபோல கடவுளாட்சியின் இறுதியிலும் கடவுள் நல்லவர்களைத் தீயோரிடமிருந்து பிரித்துத் தீர்ப்பு வழங்குவார்.

-- இவ்வுலகில் கடவுளாட்சி படிப்படியாக வளர்கின்ற காலத்தில் வலையில் நல்ல மீன்களும் கெட்ட மீன்களும் படுவதுபோலவே கடவுளாட்சியிலும் நல்லவரும் இருப்பர், தீயவரும் இருப்பர். இவர்களை வேறுபடுத்திப் பார்த்து, ஒருசிலரை ஏற்றுப் பிறரை ஒதுக்கிவைப்பது நம் பொறுப்பு அல்ல. கடவுள்தாமே மக்களில் நல்லவர் யார் என்றும் தீயவர் யார் என்றும் இறுதிக்காலத்தில் தீர்ப்பு வழங்குவார். எந்தவொரு வேறுபாடும் காட்டாமல் அனைவரையும் அன்போடு ஏற்று வரவேற்பதே நம் கடமை. தீர்ப்பு வழங்கும் உரிமை கடவுளுக்கே உண்டு. இருப்பினும், நன்மை தீமை அறிவதற்கான திறமையை நாம் கடவுளிடமிருந்து இறைஞ்சிக் கேட்க வேண்டும். நன்மையைத் தேர்ந்துகொண்டு தீமையை நாம் தவிர்க்க வேண்டும். ஆனால், பிற மனிதரை நல்லவர் தீயவர் எனத் தீர்ப்பிடும் பொறுப்பைக் கடவுளிடமே விட்டுவிட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, பிறர் மட்டில் யாதொரு வேறுபாடும் காட்டாமல் அன்போடு அவர்களை ஏற்றிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்;

கரையில் இருந்து.. ..

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

ஏம்பா! கஷ்டப்பட்டு கடலில் உழைத்து கௌரவமாக வாழாமல் இப்படி உடலையும் வாழ்க்கையையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்குகிறாயே ! கொஞ்சம் சேர்த்து சேமித்து செழிப்போடு வாழலாமே ! என்றார் அந்த பங்கு குருவானவர். "சாமி, கடல் வற்றவாபோகிறது" என்றார் நெத்தியடியாக.

நிலமும் நெருப்பும்;, கடலும் காற்றும், ஆகாயமும் கடவுள் மனிதனுக்குத் தந்த வற்றாத செல்வத்தின் ஊற்றுக்கள். இவற்றிலிருந்து நல்லவைகளை வாரி எடுத்து வாழ்க்கையை வளமாக்க வலையாகக் கொடுத்ததுதான் அறிவு. அறிவு என்ற வலையைப் பயன்படுத்தி, தெய்வீக அமைதி உள்ள வாழ்வை, விண்ணரசு வாழ்வை மனிதன் வாழவேண்டும் என்றே இத்தனை செல்வங்களையும் கடவுள் தந்துள்ளார்.

அறிவு வலை அத்தனையும் அள்ளி வந்தாலும், அறிவெல்லாம் கடந்த மெய்யறிவில், தியானத்தில், கரையில் அமர்ந்து, அள்ளி வந்தவற்றுள் நல்லவைகளை நமதாக்கி, அல்லவற்றை அப்புற எறிந்துவிடுவதே விண்ணக நிறைவைத் தரும்.

இன்று மனிதன் வான்வெளியில் வீசும் வலையால் (iவெநசநெவ ) வற்றாத வளங்களைப் வாரிக்கொண்டு வருகிறான். அனால் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைச் சேகரிக்கவில்லை. மாராக, வேண்டாதவற்றை, விபரீதமானவற்றைச் சேகரித்து வேதனையில் சிக்கித்தவிக்கிறான். மகிழ்ச்சியைத், விண்ணரசைத் தரவேண்டிய வலை இன்று வேதனையையும் விரக்தியையும் தருகிறது.

வலையைப் பயன்படுத்து. கரையில் அமர்ந்து நல்லவற்றை சேகரி. வாழ்வு தெய்வீகமாகும்.



--அருட்திரு ஜோசப் லீயோன்

Address

Koovaikinaru
Sathankulam
628704

Alerts

Be the first to know and let us send you an email when Our Lady Of Fathima Church Koovaikinaru posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Our Lady Of Fathima Church Koovaikinaru:

Share