கண்ணபுரத்தாள்

கண்ணபுரத்தாள் தாயே மகமாயி உன்னைத் தேடி
வரும் உன் பிள்ளைகள் பலகோடி
உன்னருள் தேடி வந்தவருள்ளே நானொரு கடைக்கோடி (அன்பு கொண்டு)

அன்பு கொண்டு காப்பவளே
ஆதிசக்தி மகமாயி!
துன்பங் கண்டு கலங்குமெனக்குத்
துணையிருக்க வருவாய் நீ! (அன்பு கொண்டு)

தேவையென்று சொன்னால்தான்
தேவதையே வருவாயோ?
தேவைகளை அறியாயோ
வேதனைகள் மறியாயோ? (அன்பு கொண்டு)

ஆயிரம் பிழைகள் செய்தாலும்
அன்னை நீயன்றோ?
பாயிரம் பாடி வாழ்த்திடும் பிள்ளையைப்
பொறுப்பதுன் கடனன்றோ?

அம்மா என்று கதறிடும் கன்றை
வெறுத்திடும் பசு உண்டோ?
துரத்திடும் துன்பத்தின் துயரத்தைப் போக்க
உனையின்றி எவருமுண்டோ?

 #சமயபுரத்தில்_சித்திரை_பெருந்திருவிழா_2026சமயபுரத்தில் மாபெரும் விழாவான சித்திரை பெருந்திருவிழா வருகிற 05.04.2026 ஞாயிற...
26/03/2026

#சமயபுரத்தில்_சித்திரை_பெருந்திருவிழா_2026
சமயபுரத்தில் மாபெரும் விழாவான சித்திரை பெருந்திருவிழா வருகிற 05.04.2026 ஞாயிற்றுக்கிழமை முதல் 17.04.2026 வெள்ளிக்கிழமை வரையும் மற்றும் திருத்தேர் முடிந்து எட்டாம் திருநாள்(21.04.2026_செவ்வாய்கிழமை நடைபெறும்.

( #சித்திரைபெருந்திருவிழா2026_அழைப்பிதழ்_இணைத்துள்ளேன்)

கண்ணபுரநாயகியாம் நம் சமயபுரத்தாய் பச்சை பட்டினி விரத பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடமுள்ள சர்வசக்தியையும் பெற்று ஐந்து தொழில்களையும் பெற்று அதாவது #படைத்தல், #காத்தல், #அழித்தல், #மறைத்தல், #அருள்புரிதல்)சித்திரை பெருவிழா நாட்களில் காட்சி தந்து தாய்மகமாயி அருள்புரிவது சமயபுர ஆலயத்தின் சிறப்பு.

#முகூர்த்தகால்நடுதல் 03-04_2026
#படைத்தல்_கொடியேற்றம் –05.04.2026
#காத்தல்_ரிஷபவாகனம் -09_04_2026
#தேர்முகூர்த்தகால்நடுதல் 12-04_2026
#அழித்தல்_திருத்தேர் _14-04-2026
#மறைத்தல்_ஊஞ்சல்பல்லக்கு _15-04-2026
#அருள்புரிதல்_தெப்பம் -17- 04 -2026

மேற்கண்ட திருவிழா நாட்களில் தாய் மகமாயி இரவு 8 மணிக்கு திருவீதி உலாவில் பக்த கோடிகளுக்கு காட்சி கொடுப்பாள்.

https://www.facebook.com/kannapurathal/

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
எப்பிறவியிலும் மகமாயியின் அன்புக்கு அடிபணிய ஏங்கும் கடைக்கோடி அன்பன்.

03_04_2026 #வெள்ளிக்கிழமை பங்குனி மாதம் 20ம் நாள் முகூர்த்தகால்நடுதல்(கிராம சாந்தி)காலை 7-00 மணிக்கு மேல் 8-00 மணிக்குள்

#முதல்_திருநாள்:
05.4.2026 #ஞாயிற்றுக்கிழமை பங்குனி மாதம் 22ம் நாள்
காலை 7-00 மணிக்கு மேல் 8-30 மணிக்குள் #கொடியேற்றம்
இரவு 7-00 மணிக்கு #தாய்மகமாயிமரகேடயத்தில் வாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

#இரண்டாம்திருநாள் :
06.4.2026 திங்கள்கிழமை,பங்குனி மாதம் 23ம்நாள்
காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இரவு 8-00 மணிக்கு தாய்மகமாயி #மரசிம்மவாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

#மூன்றாம்திருநாள் :
07.4.2026 செவ்வாய்கிழமை,பங்குனி மாதம் 24ம் நாள்
காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இரவு 8 - 00 மணிக்கு தாய் மகமாயி #மரபூதவாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

#நான்காம்திருநாள்:
08.4.2026 புதன்கிழமை,பங்குனி மாதம் 25ம் நாள்
காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இரவு 8.00 மணிக்கு தாய்மகமாயி #மரஅன்னவாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

#ஐந்தாம்திருநாள் :
09-4-2026 வியாழக்கிழமை,பங்குனி மாதம் 26ம் நாள்
காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இரவு 8.00 மணிக்கு தாய்மகமாயி #மரரிஷபவாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

#ஆறாம்திருநாள் :
10.4.2026 வெள்ளிக்கிழமை,பங்குனி மாதம் 27ம் நாள்
காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இரவு 8.00 மணிக்கு #மரயானைவாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

#ஏழாம்திருநாள் :
11.4.2026 சனிக்கிழமை,பங்குனி மாதம் 28ம் நாள்
காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இரவு 8.00 மணிக்கு தாய்மகமாயி #மரசேஷவாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

#எட்டாம்திருநாள்:
12.4.2026 ஞாயிற்றுகிழமை, பங்குனி மாதம் 29ம் நாள்
காலை 6.30 to7.30 #தேர்முகூர்த்தகால் நடுதல்
காலை 10-00 மணிக்கு தாய் மகமாயி பல்லக்கில் புறப்பட்டு வழி நடை உபயங்கள் கண்டருளி பகல் 12.00 மணிக்கு இனாம் சமயபுரத்தில் அருள் புரியும் தன் தாய் வீடான #ஆதிமாரியம்மன் திருக்கோவில் சென்றடைவாள்.
மறுநாள் அதிகாலை(13.4.26) திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் கண்டருளி அதிகாலை 6.00 மணிக்கு #மரகுதிரைவாகனத்தில் புறப்பட்டுவழிநடை மண்டகபடி உபயங்கள் கண்டருளி காலை 10.00 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைவாள்.

#ஒன்பதாம்திருநாள் :
13.4.2026 திங்கள்கிழமை,பங்குனி மாதம் 30ம் நாள்
மதியம் 1.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
வருடத்திற்க்கு ஒருநாள் மட்டுமே புறப்பாடு ஆகும் ஆயிரம் கண்ணுடையாள் இரவு 8.00 மணிக்கு வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வழி நெடுகிலும் இரவு விடிய விடிய மண்டகபடி உபயங்கள் கண்டருளிமறுநாள் 14-4-2026 செவ்வாய்கிழமை காலை 7-00 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைவாள்.

#பத்தாம்திருநாள்
14-4-2026 செவ்வாய்கிழமை,சித்திரை மாதம் 1ம் நாள்
உலகிலுள்ள ஜீவராசிகளை காக்கும் பொருட்டு உலகநாயகியாம் நம் சமயபுரத்தாள் காலை 10-31 மணிக்கு மேல் 11-30 மணிக்குள் மிதுன லக்னத்தில் #திருத்தேர் வலம் வந்து பக்தகோடிகளுக்கு அருள்காட்சி தருகிறாள்.
இரவு 9-00 மணி அளவில் தாய் மகமாயி திருத்தேரிலிருந்து புறப்பாடாகி மூலஸ்தானம் வந்தடைவாள்.

#பதினொன்றாம்திருநாள் :
15-4-2026 புதன்கிழமை,சித்திரை மாதம் 2ம் நாள்
காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இரவு 8 -00 மணிக்கு வெள்ளி #காமதேனு வாகனத்தில் புறப்பட்டுவழிநடை மண்டகபடி உபயங்கள் கண்டருளி மூலஸ்தானம் வந்தடைவாள்.

#பன்னிரென்டாம்திருநாள் :
16- 04 -2026 வியாழக்கிழமை,சித்திரை மாதம் 3ம் நாள்
காலை 10.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இரவு 8.00 மணிக்கு #முத்துப்பல்லக்கு வாகனத்தில் திருவீதி உலாவில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

#பதிமூன்றாம்திருநாள்:
17- 04 -2026 வெள்ளிக்கிழமை,சித்திரை மாதம் 4ம் நாள்
நண்பகல் 12.00 மணிக்கு தாய்மகமாயி பல்லக்கில் புறப்பாடகி ஆஸ்தான மண்டபம் சென்றடைதல்.
மாலை 5.00 மணிக்கு தாய் மகமாயிக்கு ஆஸ்தான மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
இரவு 8.00 மணிக்கு தெப்ப உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

#திருத்தேர்முடிந்துஎட்டாம்திருநாள் :
21.4.2026 செவ்வாய்கிழமை,சித்திரை மாதம் 8ம் நாள்,திருத்தேர் முடிந்து எட்டாம் திருநாள்
மாலை 5.00 மணிக்கு திருக்கோயிலில் அபிஷேகம் கண்டருளி
இரவு 7- 00 மணிக்கு தங்க கமலவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து மூலஸ்தானம் வந்தடைவாள்.

அனைவரும் வருக தாய்மகமாயி அருள் பெருக .

சமயபுரத்தாள்.....🥹🙏🌿
25/03/2026

சமயபுரத்தாள்.....🥹🙏🌿

 #அகரவரிசையில்_என்_தாய்மகமாயி #அன்பின்  அமுதசுரபி அம்மா மகமாயி அனுதினமும்  அவளை அழைப்பவர்களின் அன்பான மனதில்  அமர்ந்திரு...
09/12/2025

#அகரவரிசையில்_என்_தாய்மகமாயி

#அன்பின் அமுதசுரபி அம்மா மகமாயி
அனுதினமும் அவளை அழைப்பவர்களின் அன்பான மனதில் அமர்ந்திருவாள்
அளவில்லா அமைதி தருவாள்
அழகிய வாழ்வு அமைத்திடுவாள்.

#ஆயி மகமாயி ஆயிரங்கண்ணுடையவளே
ஆடி மாத நாயகியே கலியுகத்தின் தாயே

ஆழி கடல் போல அன்பு மனம் உள்ளவளே
ஆனந்த வாழ்வினையும் தந்திடுபவளே

ஆயுள் முழுவதும் எங்கள் மனதில்
ஆலமர விழுது போல படர்ந்திடம்மா தாயே

ஆனி சுவாதியில் உதித்த என் குல தெய்வ துர்க்கை தாயின் அம்சமும் நீயே தாயே

ஆரோக்கியமான உடலினை தந்தருளும் அற்புத மருத்துவச்சி நீயே தாயே மகமாயி

#இதழோரம் புன்முறுவல் பூத்தவள்
இதய கமலத்தில் அமர்ந்தவள்
இளகிய மனம் கொண்டவள்
இச்சை எண்ணங்களை அழிப்பவள்
இன்னல்களை கருவருப்பவள்.

இசையில் கலந்து மனதை கரைப்பவள்
இலக்கணத்தில் இமயமாய் இருப்பவள்
இல்லந்தோறும் வழிபடும் இனியவள்
இறைசக்தியாய் உணர வைத்து
இஷ்ட தெய்வமாய் பலருக்கு ஆனவாள்.

#ஈன (இழிவான) புத்தியை நம் மனதில் மக்க வைக்கும் மாயகாரியாம் மகமாயி

ஈதையை (துன்பம், வருத்தம்)வேரறுக்கும் வேப்பிலைகாரி

ஈண்டுநீர் (கடல்) போன்று பரந்த மனம் கொண்டவள்

ஈதி (மழையின்மை) என்பதையே இவ்வுலகில் இல்லாமை என்பதை உருவாக்கி செழுமைஆக்குபவள் மாரி

ஈர மனம் கொண்டவள், தாய் மகமாயினை வணங்கும் பக்தனுக்கு
ஈகை மனதை (பொருள் இல்லாதவர்க்கு உதவும் மனம்) வழங்குபவள்

ஈமன் (சிவன்) மனதை வென்றவள்

ஈயவரி (பெருமருந்து) உருவாக்கி சகல ஜீவராசிகளின் உயிரை காக்கும் கலியுக மருத்துவச்சி என் தாய் மகமாயி

#உள்ளம் நிறைந்த குங்கும நிறத்தவளே உடன் என் குறைகளை கருவருப்பவளே
உயிரில் கலந்த மாதுளை நிறத்தவளே
உன்னருளால் என் வேதனை களைபவளே

உன்னை நம்பியோரை எத்தருணத்திலும் உடனிருந்து வழிகாட்டி காப்பவளே
உன் வட்ட திருமுகம் என்றும் என் உள்ளத்தில் உறைய அருள்வாய் தாயே

உள்ளம் தடுமாறுகின்றபொழுது
உன்னை நினைத்தவுடன் தீர்வு தருபவளே
உன் சிவந்த திருமேனி தரிசனத்தில் என்
உள்ளமும் தெளிவடையும் தாயே மகமாயி

உன் விழியின் தரிசனத்தில் என் விழியும் உள்ளமும் கசிந்து மனபாரம் குறையும்
உபத்திரவமும் உருண்டோடும்
உடலும் புத்தணர்வு பெறுமே மகமாயி

உலகாளும் உலகநாயகி தாயே
உன் விழியின் அழகில் என்
உள்ளம் உருக வைப்பவளே தாயே என் உயிரிலும் உதிரத்தில் இருப்பவளே

#ஊசிமுனை போன்ற கடின வாழ்வை உன் அருளால் எளிதாக்குபவளே நீயே மகமாயி

ஊனமுள்ள மனதினை எளிதினில் செம்மையாக்குபவள் நீயே மகமாயி

ஊக்கம் அளித்திடும் முகராசி கொண்டவள் எனக்கு நீயே மகமாயி

ஊக்கம் அளித்து உயர்ந்த நிலையுடைய
வாழ்வினை தருபவள் நீயே மகமாயி

ஊழ்வினை துன்பத்தை இன்பமாக மாற்றும் மாசக்தி தாயே நீயே மகமாயி

ஊதுபத்தி நறுமன வாசனை போல்
உன் பக்தகோடிகளின் வாழ்வினை மணக்க வைப்பவள் நீயே மகமாயி

ஊர் உலகம் முழுவதும் அறிய வைத்து
மனம் தெளிய வைக்கும் கலியுகத்தின் அவதாரம் தாயே நீயே மகமாயி.

#எங்கும் நிறைந்து அருள் தருபவள்
எழில் கொஞ்சும் என் தாய் மகமாயி

எண்ணத்தில் அவளை விதைத்து விட்டால்
எந்த நற்செயலும் நிறைவேற்றிடுவாள்

எத்தனை கடினமான சூழ்நிலையும்
எளிதாக்கும் வல்லமை பெற்றவள்

என்னுடையது என்ற கர்வத்தை அழித்தால்
எளிதில் தாய்மகமாயின் அருள் கிடைக்கும்

எச்செயலும் தாய்மகமாயின் செயலே
என்று உணர்ந்தால் நன்மையே கிடைக்கும்

எத்துணை ஆயிரங்கள் இருந்தாலும்
என் தாய் துணையே நம்மை காக்கும்

எளிய பக்தியில் பரவசம் கொள்பவள்
எள்ளி நகைப்பவரை கருவருப்பவள்

எளிதில் தீயவரை உணர வைத்து நம்மை
எதிலும் காப்பது தாய்மகமாயின் அருளே

#ஏகசக்கரவர்த்தினியாய்(பேரரசியாய்) சமயபுரத்தில் அருள்புரிபவள் தாய்மகமாயி

ஏராளமான(மிகுதியாக) இளகிய மனம் கொண்டவள் என் தாய் மகமாயி

ஏழைகளின் எளிய தெய்வமாய்
ஏணியாய் வாழ்வினை உயர்த்துபவள்

ஏவல்காரர்களை பத்திரகாளியாய் உருமாறி அழிப்பதில் கெட்டிக்காரி

ஏற்றமிகுந்த வாழ்வினை அளிப்பவள்
ஏமாற்றுகாரர்களை கருவருப்பவள்

ஏகாந்தத்தில்(தனிமையில்) நம் பிழைகளை உணர்ந்து மனதை தெளிய வைப்பவள் என் தாய் மகமாயி

#தொடரும். அன்புடன்
தெ.கார்த்திகேயன், சமயபுரம்

ஓம் சமயபுரம் மாரியம்மன் சரணம்
ஓம் சமயபுரத்தாள் திருவடிகள் சரணம்

ஓம் சமயபுரம் மாரியம்மன் சரணம்
ஓம் சமயபுரத்தாள் திருவடிகள் சரணம்🙏🙇‍♂️🙏

Address

Kannapurathal
Samayapuram
621112

Website

Alerts

Be the first to know and let us send you an email when கண்ணபுரத்தாள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share