04/01/2020
குருமகான் ஓம் ஸ்ரீ இராமசுந்தரம் அடிகளார் அவர்களுடன் ஒரு வாய்ப்பு..!!
மகா ஞானி "கௌதமபுத்தர்" வழங்கிய,
விபாஸனா தியானப் பயிற்சி முகாம்.
(வாழும் கலை பயிற்சி)
நடைபெறும் இடம்;
சித்தர் ஞானாலயம்,
உத்தமசோழபுரம்,
கரபுரநாதர் கோயில் வடபுறம், மான்காரன் காடு,
சேலம்.
தொடர்புக்கு ;
94433 92026, 7402040999,
81484 28397.
--விபாஸனா தியானம் பற்றி தெரிந்துகொள்வோம்--
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம புத்தர்
மனிதரின் துன்பத்தை போக்க உன்னதமான ஒரு உண்மையை கண்டு பிடித்தார். மக்களுக்கு போதித்தும் வழிகாட்டினார்.
அதுவே விபாஸனா தியானம்...!!!
நாம் உடலாலும், மனதாலும்
துன்பப்படுகின்றோம். பொருளாதார பிரச்சனைகளாலும், உறவுகளாலும், நட்புகளாலும் மற்றும் தொழில் குடும்ப
பிரச்சனைகளாலும் அல்லல்படுகின்றோம்.
இவற்றிலிருந்து மீள முடியாதா?
துன்பம் இல்லாது வாழமுடியாதா?
விபாசனா தியானம் உங்கள்
வாழ்க்கையை நிச்சயமாக மாற்றி
அமைக்கும் என்கிறார் கெளதமா,
புத்தர் கூறும் 4 மகா உண்மைகள் :
1. துன்பம் என்பது உண்டு,
2. துன்பம் வந்து சேருவதற்கு
காரணங்கள் உண்டு,
3. துன்பத்திலிருந்து மீளமுடியும்
துன்பங்களை போக்கி கொள்ள முடியும்,
4. துன்பங்களை
தவிர்ப்பதற்கு (பயிற்சிகள்) வழிகள் உண்டு.
இந்த துன்பங்களிலிருந்து விடுபடும் கலைதான் விபாஸனா
தியான பயிற்சி.
இந்த அதிசயமான பயிற்சியை புத்தர் நாடெங்கும்
சென்று போதித்தார்.
பௌத்தம் இந்தியா முழுவதும் பரவியது,
அக்காலத்தில் சிலரால் பௌத்தம் இந்தியாவை விட்டு
விரட்டப்பட்டது. ஆனாலும் உலகமெங்கும் பரவியது. பலநாடுகளிலும்
கோடிக்கணக்கான மக்கள் இதனை பின் பற்றுகிறார்கள். அறிஞர்கள் அதிசயத்து பாராட்டுகிறார்கள். காலத்தால் மறைந்த
இத்தியானம் இன்று நம்மை தேடிவந்துவிட்டது.
விபாஸனா தியானம் உங்களில் எப்படி வேலை செய்கிறது :
(சிறப்பம்சம்)
மனித உடலும், மனமும் ஒவ்வொரு நொடியும் மாரி கொண்டே இருக்கின்றது. ஒருவர் விபாசஸனா தியானத்தின் மூலம் மனதை ஒருமுகப்படுத்த முடியும், தன் உடல் மற்றும் மனதின் இயல்பினை உற்று நோக்குவதால் நிலையாமை.
துன்பம் ஆகியவைகளை உணர்கின்றார். இப்படி உணரும்
பயிற்சியால் தன்னைத்தானே தூய்மை படுத்தி கொள்கின்றார்.
மனதில் கோபம், வெறுப்பு, காமம், பயம் போன்ற பலவித உணர்வுகள் தோன்றி கொண்டே இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு விநாடியும், நமது உடலும், மனமும் இறுக்க
மடைகின்றது. துன்பத்தையே அடைகின்றது. பழக்கம் காரணமாக
மனம் எப்போதும் இறந்த காலம், எதிர்கால நினைவுகளிலேயே
அலைபாய்கிறது.
மனம் நிகழ்கால உண்மையை விட்டு தப்பி செல்கின்றது.
இப்பயிற்சியால் அலையும் மனம் நிகழ்காலத்தில் ஒருநிலைபடுகிறது. ஒருமுகப்படுகிறது. மனோசக்தி பெருகுகிறது.
தன்னிலை, முன்னிலை, படர்க்கை என்று 3 நிலைகள்
உள்ளது. மனம் எப்போதும் முன்னிலை, படர்க்கையிலேயே
உழல்கிறது. இப்பயிற்சி அடங்காத மனதை தன்னிலையில்
நிறுத்துகிறது. அமைதியும் சாந்தமும் பெறச் செய்கிறது.
நம் உடலில் காலங்காலமாக ஒவ்வொரு விநாடியும்,
விருப்பு வெறுப்புகளால், கர்ம பதிவுகள் பதிந்து கிடக்கின்றது.
அவைகளால் துன்பங்களையும், நோய்களையும் அடைந்து
கொண்டே இருக்கின்றோம்.
உடலில் மேலோட்டமாகவும், ஆழமாகவும் பதிந்துள்ள
கர்மப்பதிவுகளை இப்பயிற்சியால் விலக்கி சுத்தப்படுத்துகின்றோம்.
பரு உடலையும், நுண்ணுடலையும் தூய்மைபடுத்தி கொள்கின்றோம். இதனால் நலம் பெறுகின்றோம்.
இறைவன் சூட்சமத்திலும் சூட்சுமமாய் இருக்கின்றார்.
தூணிலும் இருக்கின்றார். துரும்பிலும் இருக்கின்றார்.
நம்முள்ளும் இருக்கின்றார். நம்முள் சூட்சுமமாய் உள்ள
தெய்வீகத்தை - நாம் சூட்சுமம் அடைவதால் அதனுடன் ஒன்ற
முடிகிறது. இணைய முடிகின்றது.
இரகசியமான இறைவனை அடைய இதைவிட சுலபமானவழி
வேறு இல்லை. முக்தி அடைதலையும், ஞானம் பெறுவதையும் விபாஸனா சுலபமாக்குகிறது!
உயர்ந்த நிலையான நிப்பானம் எனும் ஞானத்தை
அடைவதற்கும், துன்பங்களிலிருந்து, குழப்பங்களிலிருந்தும்
தங்களை தாங்களே விடுவித்துக்கொள்ள உதவும் கலை
விபாஸனா.
இப்பயிற்சியால் உடலிலுள்ள ஒவ்வொரு செல்லும்
விழிப்படைகிறது. எழுச்சிபெறுகிறது. உடல் நலம் பெறுகிறது.
மனநோய்கள் அகலுகிறது. கோபம், பயம், விருப்பு, வெறுப்பு,
அறியாமை, தீய பழக்க வழங்கங்கள் போன்றவைகள் மறைகிறது.
அன்பு, அமைதி, சாந்தம் பெருகுகிறது.
அதனால் ஆரோக்கியம் பெருகி வாழ்க்கை உயருகிறது.
ஆகையால்
புத்தரின் போதனைகளை படிப்பதாலோ, தெரிந்து
கொள்வதாலோ, துன்பத்திலிருந்து நாம் விடுபடமுடியாது. பயிற்சி
செய்வதால் பட்டுமே வாழ்நாள் முழுவதும் பலன் பெறலாம்.
வாழ்க்கையும் மேலானதாக மாறும்.
புத்தரின் காலத்திலிருந்தே இப்பயிற்சி தொடர்ந்து
பல நாட்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகின்றது. இது அனைவரும்
பின்பற்ற கூடிய எளிய பயிற்சியாகும். இந்த 11 நாட்கள்
பயிற்சியில் நம்முள் இருக்கும் மன இறுக்கங்களையும்,
துன்பங்களையும் நாமே உணர்ந்து கொள்கின்றோம்.
எப்படி அவற்றை படிப்படியாக கரைந்து போகவும், நீங்கி
போகவும் செய்வது என்பதை கற்றுகொள்கின்றோம்.
இதனால் நம் மனம் தூய்மையும், அமைதியும், மகிழ்ச்சியும்
பெறுகின்றது.
ஒரு புண் புரையோடி சீழ் பிடித்து இருக்கின்றது. அப்புண்ணில்
உள்ள சீழை - குத்தி கிழித்து வெளியேற்றாமல் புண் ஒருபோதும்
ஆறாது. அதுபோலவே இந்த நாள் பயிற்சி செய்வதனால் மட்டுமே!
மனதின் இறுக்கங்களிலிருந்து விடுபட்டு உயர்ந்த மனநலத்தை
அடைகின்றோம். வாழ்க்கை மகிழ்ச்சியாக, நலமாக மாறுகிறது.
மனதின் இறுக்கங்களிருந்தும், தப்பான எண்ண ஓட்டங்களிருந்தும் எப்படி விடுபடுவது என்பதை கற்று
கொள்ளவாரீர்.
இந்த அற்புத பயிற்சியைப் பயில இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிடாதீர்கள் - மீண்டும் உங்கள் வாழ்க்கையில்
இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைப்பது அரிதாகிவிடும்.
நல்ல சந்தர்ப்பங்கள்
எப்போதோ ஒருமுறைதான் வரும்.
அவரவர் யுத்தத்தை அவரவரே நடத்த வேண்டும். ஆன்ம
விடுதலையை அவரவரே பாடுபட்டு தேடி கொள்ள வேண்டும்.
உடல், மனம் ஆரோக்கியம் பெற சரியான பயிற்சி..!
விபாஸனா தியானம் யார் யாரெல்லாம் செய்யலாம்...??
விபாசஸனா ஆண், பெண்
அனைவருக்கும் பொதுவானது.
(ஏற்கனவே முகாமில் கலந்து கொண்டவர்களின் கவனக்கிற்கு
"நிப்பாணம்" எனும் முழுமை நிலையை அடையும் வரை அவசியம்
முகாமில் தொடர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.)
நன்றி,
--சித்தர் ஞானாலயம் சபை
தியான அன்பர்கள்.🙏