கர்த்தரின் யுத்த சேனை - ஜெபிக்கும் கிறிஸ்தவன்

  • Home
  • India
  • Salem
  • கர்த்தரின் யுத்த சேனை - ஜெபிக்கும் கிறிஸ்தவன்

கர்த்தரின் யுத்த சேனை - ஜெபிக்கும் கிறிஸ்தவன் The purpose is to encourage people to pray for nations and world.

ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போரின் காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல்கள் விரைவில் சரி செய்யப்பட ஜெபிப்போம்...
11/03/2026

ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் போரின் காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் சிக்கல்கள் விரைவில் சரி செய்யப்பட ஜெபிப்போம்

வணிக சிலிண்டர்கள் வினியோகிப்பது நிறுத்தப்பட்டுள்ளதால் பல தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது இது விரைவில் முடிவுக்கு வர வாரதோடு ஜெபிப்போம்

வணிக சிலிண்டர் நிறுத்தம் காரணமாக உணவு தேவைக்காக உணவகங்களை மட்டுமே நம்பி இருக்கும் பல லட்சக்கணக்கான உணவக வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் அவர்களுக்கு வேண்டிய உணவுகள் கிடைக்கப்படும் ஜெபிப்போம்

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பல உணவு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது பல தொழிற்சாலைகள் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது வணிக குறு நிறுவனங்களும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளும் பாதிக்கப்படாமல் இருக்க கருத்தாய் ஜெபிப்போம்

உணவகங்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவும் கூடுதல் மின்சாரத்தை வழங்கவும் அரசாங்கம் ஆவண செய்ய ஜெபிப்போம்

ஹோட்டல் நடத்துபவர்கள் ஹோட்டலில் வேலை செய்பவர்கள் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படாதபடி நிலைமை சீக்கிரம் சரி செய்யப்பட ஜெபிப்போம்

வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு இல்லாமல் அனைவருக்கும் கிடைக்க ஜெபிப்போம்

சர்வதேச அளவில் இந்த சிலிண்டர் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு காரணமாக உள்ள இந்தப் போர் சூழல்கள் மாறி மீண்டும் நிலைமை சீராக ஜெபிப்போம்

கச்சா எண்ணெய் எரிவாயு விற்பனை செய்யும் வளைகுடா நாடுகள் அமெரிக்கா ரஷ்யா போன்ற எண்ணெய் விற்பனை செய்யும் நாடுகளின் தலைவர்களுடன் தேவன் இடைபடவும் சமாதானமான முடிவுகள் எட்டப்படவும் ஜெபிப்போம்

நாடு சந்தித்துள்ள இந்த இக்கட்டான நிலைமையை கையாளுவதற்கு வேண்டிய ஞானத்தையும் அறிவையும் தேவன், ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தந்து, மக்களுக்கு பாதிப்பு வராமல் தடுக்கப்பட ஜெபிப்போம்

தேசத்தின் ஆரோக்கியத்திற்காய் திறப்பில் நிற்போம்.... 🧎🏻‍♂️🧎🏻‍♀️
18/02/2026

தேசத்தின் ஆரோக்கியத்திற்காய்
திறப்பில் நிற்போம்.... 🧎🏻‍♂️🧎🏻‍♀️

05/03/2022

கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்படி கொரனா செய்திகளை தினமும் கேட்டு கேட்டு பின்னாட்களில் அது பழகிப் போனதோ,
அதே போல இனி வரும் நாட்களில் யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் தினமும் கேட்க வேண்டி வரும். காரணம் நிச்சயமாக இது கடைசி காலம். கிருபையின் காலத்தின் கடைசி விளிம்பில் இருக்கிறோம்.

ஜெபமே ஜெயம், ஜெபமே பெலன்,
ஜெபமே வழி, ஜெபமே அரண்.

*நீ ஆயத்தப்படு, உன்னுடனேகூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு.*
எசேக்கியேல் 38:7

30/06/2018
18/11/2015

நீ எப்படி இருந்தாய் என்பது தேவனுக்கு முக்கியமல்ல, இனிமேல் தேவனுடைய வார்த்தைக்குள் எப்படி நிலைத்திருக்கிறாய் என்பது தான் முக்கியம். தேவனுடைய மன்னிப்பு என்பது உலகின் மனிதனாய் பிறந்த அனைவருக்கும் உண்டு. அதை உன் மரண பரியந்தம் பிடித்து கொள்வாயா?

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே....

இன்று பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி.. தேவன் என்னை மீண்டும் ஏற்று கொள்வாரா? தேவன் என்னையும் மன்னிப்பாரா?
இப்படி கேட்க்கும் உங்களிடம் இயேசு கிறிஸ்து கேட்பது என்ன தெரியுமா? உங்களுக்கு தேவன் கொடுக்கும் ஓர் அழைப்பு. "இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?" (யோவான் 21:15). உங்கள் பதிலை கீழே உள்ளவற்றை வைத்து முடிவு செய்யுங்கள்.

மீண்டும் மீண்டும் செய்த பாவங்கள் கண் முன் வருகிறதா?
மீண்டும் தனிமையில் சிந்தனை பாவக்கூட்டில் தஞ்சம் அடைகிறதா?
என்னையே பாவத்தில் இழந்துவிட்டேன், நான் எப்படி வாழ்க்கையை மீண்டும் தொடர முடியும்?
ஒன்றிற்கும் உதவாத நிலைமையில் இருக்கிறாயா?
யாரும் மதிக்கமாட்டேன் என்கிறார்களா? எடுக்கிற முயற்சிகள் தோல்வியா? பயமா? கவலை? இதுதான் வாழ்க்கையா?
அதிகமாக கோபப்படுவதால் நிம்மதியை இழந்து விட்டீர்களா?
குடும்பத்தில் அதிக பிரச்சினை பாரங்கலால் உடைந்து போனீர்களா?
உலக கவலை வாட்டுகிறதோ?
பாவ வாழ்க்கையில் மூழ்கி வெளியில் வர முடியவில்லையா?
மறைமுக / மறைவிடத்தில் செய்யும் பாவங்கள் உங்கள் வாழ்க்கையின் சாபங்களுக்கு காரணமாகிவிட்டதா? நீ எதில் அதிகமாக வேதனைபடுகிறாயோ அதையே சாத்தான் பயன்படுத்தி, இயேசுவை நெருங்க விடாமல் தடுப்பான்.

சாத்தான் உங்கள் இறந்த காலத்தை காட்டி நகைக்கும் போது சாத்தானுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள எதிர்காலத்தை/நரகத்தை காட்டுங்கள். அவன் ஓடி விடுவான்.

தேவனை நேசிப்பதற்கு எனக்கு தகுதியில்லை என்று சொல்லும் அன்பரே, தேவன் பலவான்களை தேடி போவதில்லை. ஏன் என்றால் எல்லோரிடத்திலும் பலவீனங்கள் உண்டு. இப்பலவீனங்களை நாம் தேவனிடத்தில் அறிக்கையிட்டு ஒப்புகொடுத்த பின்பு உங்கள் பலவீனங்களை தேவன் மாற்றி உங்களை பெலமுள்ளவர்கலாக மாற்றி விடுவார். பரிசுத்த வேதாகமத்தில் தவணை சந்திக்கும் முன் எப்படி இருந்தார்கள், தேவனை சந்தித்த பின் எப்படி மாற்றப்பட்டார்கள் என்று அலசுவோமே?
நோவா ஓர் குடிகாரன்
ஆபிரகாம் வயதானவர்
ஈஸாக்கு பகல் கனவு காண்பவர்
யாக்கோபு ஓர் பொய்யன்
மோசே ஓர் திக்குவாயன்
கிதியோன் பயந்தவன்
சிம்சோன் பெண் பித்து பிடித்தவன்
ராகாப் ஓர் விபச்சாரி
தாவீது ஓர் கொலைகாரன்
எலியா தற்கொலைக்கு முயன்றவர்
யோனா ஓடிப்போனவன்
நகோமி ஓர் விதவை
யோபு எல்லாவற்றையும் இழந்தவன்
பேதுரு மறுதலித்தவன்
சீஷர்கள் ஓடிபோனார்கள்
சமாரிய ஸ்திரீ பலமுறை விவாகரத்தானவர்
மார்த்தா எல்லாவற்றுக்காகவும் கவலைப்படுபவள்
சகேயு குள்ளமானவன்
சவுல் (பவுல்) பல கிறிஸ்தவர்களை கொன்றவன்
லாசரு இறந்துபோனவன்
தோமா சந்தேகப்பட்டவன்

உன்னால் முடியாது என்று முடங்கி விடாதே.. மேலே கூறியவற்றை பார். தேவன் தகுதியுள்ளவர்களை தேடி போகவில்லை, தன்னை நோக்கி வருகிற மனிதர்களை தகுதிபடுத்தி அழகுபார்க்கிறார். உன்னை இவ்வுலகம் பைத்தியக்காரன், ஒன்றிற்கும் பிரயோஜனமற்றவன் என்று தூற்றலாம் . வசனம் தெளிவாக கூறுகிறது... 1 கொரிந்தியர் 1:27. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். 28. உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.

ஆதலால் நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பை பாருங்கள். தேவனுக்கு முன் உங்களை சரிபடுத்துங்கள். வேதாகமத்தை தினமும் வாசித்து தியானம் பண்ணுகள். அவரோடு நேரம் செலவிடுங்கள். வேத வசனங்களுக்கு கீழ்படியுங்கள்.

நோவா ஓர் குடிகாரன் ஆனால் தேவன் அவனை ஓர் பெரிய பேழை / கப்பலை கட்ட சொன்னார். ஆபிரகாம் வயதானவர் ஆனால் தேவன் குழந்தையை கொடுத்து விசுவாசிகளுக்கு தகப்பனாக உயர்த்தினார். ஈஸாக்கு ஓர் பொய்யன். பயத்தில் தன் மனைவியையே சகோதரி என்றவர். யாக்கோபு ஓர் எத்தன். எசாக்கு போய் சேரவேண்டிய ஆசீர்வாதத்தை குருடரான தன் தந்தையை ஏமாற்றி பறித்தவர். மோசே ஓர் திக்குவாயன். பேச முடியாத ஒருவரை ஓர் நாட்டையே தன் திட்டப்படி வழிநடத்தி தேவன் பயன்படுத்தினார். கிதியோன் பயந்தவன் ஆனால் வீராமாய் எழுந்தான். சிம்சோன் பெண் பித்து பிடித்தவன். கண்கள் பிடுங்கப்பட்டு மரண தருவாயில் தேவனிடத்தில் மன்னிப்பு கேட்டு பின் வீரமரணத்தை தழுவினார். ராகாப் ஓர் விபச்சாரி. தேவன் தன் பிள்ளைகளை காப்பாற்ற இப்பெண்ணை பயன்படுத்தினார். தன் விசுவாசத்தினால் யோசுவாவின் இரு ஒற்றர்களையும் காப்பாற்றினாள்.
தாவீது ஓர் கொலைகாரன். பெண் ஆசையில் இன்னொருவனின் மனைவியினடத்தில் பிரவேசித்து பின்பு சங்கீதம் 51ம் அதிகாரத்தில் தேவனை நோக்கி மன்னிப்பிற்காக கெஞ்சினவர். "தாவீதின் குமாரன் இயேசு கிறிஸ்து" என்று உலகமே போற்றும் அளவுக்கு தேவன் இவரை உயர்த்தினார். எலியா தற்கொலைக்கு முயன்றவர். ஆனால் தேவனின் தீர்க்கதரிசியானார். யோனா ஓடிப்போனவன். மீனின் வயிற்றில் சிக்கினான். ஆனால் தன் தவறை உணர்ந்து தேவனுக்கு கீழ்ப்படிந்ததால் ஓர் பெரிய நகரத்தையே தேவன் காப்பாற்றினார். நகோமி ஓர் விதவை. ஆனால் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன் ஓபேத்தை இவள் தன் பிள்ளையாக வளர்த்தாள். யோபு எல்லாவற்றையும் இழந்தவன். தேவனை மாத்திரம் நம்பினபடியால் அனைத்தையும் தேவன் திரும்ப கொடுத்தார். பேதுரு மறுதலித்தவன். கோபக்காரன். ஆனால் தேவனுக்கு பின்பு அற்புதங்கள் செய்து முதல் "போப்" ஆக பொறுப்பேற்றுக் கொண்டவர். சீஷர்கள் ஓடிபோனார்கள். ஆனால் தேவனின் சுவிஷேசச்தை உலகம் முழுவதும் பரப்பினவர்கள் இவர்கள்தாம். சமாரிய ஸ்திரீ பலமுறை விவாகரத்தானவர். தேவன் இவரை சந்தித்தார். சகேயு குள்ளமானவன். தேவன் இவரின் வீடிற்கு வந்தார். சவுல பல கிறிஸ்தவர்களை கொன்றவன். தேவன் பவுலாக மாற்றி பரலோக காட்சியை கொடுத்தார். லாசரு இறந்துபோனவன். தேவன் உயிரோடு எழுப்பினார். தோமா சந்தேகப்பட்டவன். இந்தியாவில் சுவிஷேசத்தை அறிவித்து நாம் இரட்சிக்கப்படுவதற்கு ஓர் காரணமாய் இருந்தவர்.

பல பாவங்களில் அடைபட்டு, அவை இல்லாமல் வாழ்க்கை இல்லை என்று பரிதவிக்கும் தேவ பிள்ளையே... நீ எப்படிப்பட்டவராய் இருந்தாலும் சரி. இந்த இயேசுவை நேசித்து பார். நிச்சயம் தேவன் உன்னை எடுத்து பயன்படுத்துவதை உணர்வாய். உன் மூலம் பலர் இரட்சிக்கப்படுவார்கள். உன் தேசம் வாழ்க்கைப்படும்.

தேவன் உன்னை எடுத்து பயன்படுத்த வேண்டும் என்றால் ஒன்றை மாத்திரம் நீ முழுமனதுடன் செய்ய வேண்டும். நீ இதை படித்துகொண்டு இருக்கும் இடத்தில் "இயேசு கிறிஸ்துவே என் பாவங்களை மன்னியும். முழு மனதுடன் உம்மை ஏற்றுகொள்கிறேன்" என்று அவரை சொந்த ரட்சகராக ஏற்றுகொள்ளுங்கள். நிச்சயம் வித்தியாசத்தை உணர்வீர்கள்.

உன் இதயம் உடையும் போது
ஆவியானவர் உள்ளே வருகிறார்.

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்
write to me: [email protected]

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள். அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். - (நீதிமொழிகள் 4:23).==============...
18/11/2015

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள். அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். - (நீதிமொழிகள் 4:23).
======================================
கிராமம் ஒன்றில் பெரிய வேப்ப மரம் ஒன்று பல ஆண்டுகளாக செழித்து நின்றது. பலர் அதன் நிழலில் வந்து இளைப்பாறுவர். சிலர் இந்த மரத்தடியில் ஆடு, மாடுகளை கட்டி வைத்திருப்பர். கயிற்று கட்டிலில் ஒன்றை போட்டு மரத்தின் நிழலில் தூங்குவோரும் உண்டு. பலத்த காற்று, பெருமழை கொடிய வெயில் இடி மின்னல் எதுவும் அம்மரத்தை அசைக்கவில்லை. ஆனால் திடீரென்று ஒரு நாள் பலத்த சத்தத்துடன் அம்மரம் முறிந்து விழுந்தது. நல்ல வேளை யாரும் அதனடியில் இல்லை. பலத்த சத்தம் கேட்டதும் ஊர் ஜனங்கள் ஓடி வந்து பார்த்தனர். பல ஆண்டுகள் நமக்கு நிழல் கொடுத்த அருமையான மரம் விழுந்து விட்டதே என கவலைப்பட்டனர். அருகில் சென்று பார்த்த போது மரத்தின் பட்டையில் வண்டுகள் துளையிட்டு உள்ளே சென்று மரத்தின் திசுக்களையெல்லாம் சாப்பிட்டு தீர்த்தன. நாளுக்கு நாள் உள்ளுக்குள் வலு இழந்த அந்தபெரிய வேப்ப மரம் முறிந்து விழுந்தது. அந்தோ பரிதாபம்!

அந்த வேப்ப மரத்தின் வெளித்தோற்றத்தை பார்த்தால் அது உடைந்து விழுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமலிருந்தது. ஆனால் அதன் உட்புறத்தில் சிறு வண்டுகளும், பூச்சிகளும் அந்த பெரிய வேலையை செய்து முடித்தன. ஆம் இன்றும் நாம் வெளியரங்கமாக எந்த ஒரு பெரிய பாவமும் செய்யாமல் இருக்கலாம். கொலைக்காரர்களாகவோ, கொள்ளைக்காரர்களாகவோ, விபச்சாரக்காரர்களாகவோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் உள்ளான இருதயத்தில் தீய சிந்தனைகள், அசுத்த எண்ணங்கள், இரகசிய பாவங்கள், கெட்ட புத்தகங்கள், அசுத்த படங்கள் போன்ற வண்டுகள் நம் இருதயத்தை அரித்து கொண்டு இருந்தால் கடைசியில் பாவத்தில் விழுவது நிச்சயமே!

முதலில் கண்களின் வழியாக நுழையும் பாவம், இருதயத்திற்குள் பிரவேசித்து, நம்மை கறைபடுத்தி விடுகிறது. தேவன் நம்மை பாவம் செய்ய வைத்து சோதிக்கிறவரல்ல, 'அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்' என்று வேதம் நமக்கு சொல்கிறது. நாம் நம் இருதயத்தை காத்து கொள்ளாதிருந்தால், கண்களின் வழியாக பாவம் இருதயத்திற்குள் உட்பிரவேசித்து, நம்மை அதற்கேற்ப செயல்பட வைக்கும். ஒருவேளை நாம் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை போன்று வெளியே பரிசுத்தவான்களை போல தோற்றமளிக்கலாம், ஆனால் உள்ளேயே புழுக்கள் தின்று அழுகி போன நிலையிலே காணப்படும் செத்த பிரேதத்திற்கு ஒப்பாக இருந்தால் என்ன பயன்?

பிரியமானவர்களே, நம் இருதயம், சிந்தனை, நினைவு, யோசனை, எண்ணம் இவற்றை கறைபடுத்தும் எந்த ஒரு காரியத்தையும் முதலில் உள்ளத்திற்குள் நுழைய முயற்சிக்கும் போதே அதற்கு தடைவிதிக்க வேண்டும். இல்லையேல் இந்த வண்டுகள் நம்முடைய ஆத்தும இரட்சிப்பை அழித்து விடும். ஆகவே ஒவ்வொரு நாளும் வேத வசனத்தின் மூலம் நம்மை காத்து கொள்வோம். ஒரேயடியாக விழுந்து போனபின், பாவம் செய்து செய்து இருதயம் மழுங்கி போக ஆரம்பிக்கும். முதலில் 'இதை செய்யாதே பாவம்' என்று உணர்த்தின இருதயம், 'என்ன பெரிய பாவம், இதை செய்யாதவர்கள் யார்' என்று காரணம் காட்டி, மழுங்கி போக ஆரம்பிக்கும். பின் யார் என்ன கூறினாலும், அது இருதயத்திற்குள் செல்லாது. இருதயம் கடினப்பட்டு போகும். பரிசுத்த ஆவியானவர் உணர்த்தி கொண்டு இருக்கும் வரை தேவ கிருபை அங்கு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. ஆவியானவர் யாரையும், வற்புறுத்த மாட்டார், தொடர்ந்து பாவத்தில் ஈடுபடும்போது, ஒரு நாள் அவர் விட்டு விலகி விடுவார். கிருபையும் நம்மை விட்டு எடுபட்டு போகும். அதன்பின் இருதயம் பாவத்திலே மூழ்கி கிடக்க ஆரம்பிக்கும். கர்த்தர் அருமையாக கொடுத்த ஆத்தும இரட்சிப்பை இழந்து, பரிதாபமான நிலையை அடைந்து விடுவோம். ஆகவே பாவத்தின் ஆரம்பத்திலேயே அதற்கு தடைவிதித்து, எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள் என்ற வசனத்தின்படி, நம்முடைய இருதயத்தையும் கண்களையும் காத்து கொண்டு, பரிசுத்தமாக வாழ தேவன் தாமே ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

06/08/2015
எல்லோருக்கும் பிடித்த மனிதராய் வாழ விரும்புகிறீர்களா...??======================================================* உங்கள் ...
01/08/2015

எல்லோருக்கும் பிடித்த மனிதராய் வாழ விரும்புகிறீர்களா...??
======================================================

* உங்கள் அன்பு உண்மை உள்ளதாய் இருக்கட்டும்.

* ஒருவரில் ஒருவர் கனிவான சகோதர அன்புடையவர்களாய் இருங்கள்.

* உங்களை விட மற்றவர்களை உயர்வானவர்களாக எண்ணி கணம் பண்ணி நடவுங்கள்.

* உபசரிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள்.

* உங்களிடம் உள்ளதை பகிர்ந்து கொள்ளுங்கள்.

* ஒருவரோடு ஒருவர் மனமொத்து வாழுங்கள்.

* தாழ்ந்த நிலையில் உள்ளவர்களுடன் நட்புறவு கொள்ளுங்கள்.

* நீங்கள் தற்பெருமை கொள்ளாதிருங்கள்.

* பிரார்த்தனையில் உறுதியாய் தரித்திருங்கள்

* உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.

* தீமைக்கு பதில் நன்மை செய்யுங்கள்.

* முடிந்தவரை எல்லாருடனும் சமாதானமாய் இருங்கள்.

******* (ரோமர் 12) **********

கிருபையின் ஆவி...!===================“நான் தாவீதின் குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் ...
27/07/2015

கிருபையின் ஆவி...!
===================
“நான் தாவீதின் குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்” (சகரியா 12:10).
=======================================================
வேதப் புத்தகத்திலே, “கிருபையின் ஆவி” என்று பழைய ஏற்பாட்டில் சகரியா 12:10-லும் புதிய ஏற்பாட்டிலே எபி.10:29-லும் வாசிக்கிறோம். கிருபையின் ஆவியானவர், தேவனுடைய கிருபையை உங்களுக்குள் ஒரு நதிபோல கொண்டு வருகிறார். அந்த அபிஷேகம் சோர்வு நேரங்களில் உங்களைத் தாங்குகிறது. துயர நேரங்களில் தேற்றுகிறது. சோதனை நேரங்களில் ஜெயத்தைக் கொண்டு வருகிறது. ஒவ்வொருவருக்கும் கிருபையின் ஆவி எவ்வளவு அவசியம்!

கர்த்தர் கிருபையின் ஆவியையும், விண்ணப்பத்தின் ஆவியையும் கலந்து உங்கள்மேல் ஊற்றுகிறார். இதனாலே கர்த்தருடைய பாதத்தில் அமர்ந்து, ஊக்கமா ஜெபிக்க முடிகிறது. சாத்தான் உங்களுடைய இருதயத்தைக் கடினப்படுத்த விரும்பு கிற போதிலும், கர்த்தரோ நருங்குண்ட நொறுங்குண்ட இருதயத்தை உங்களுக்குத் தந்தருளுகிறார். கிருபையின் ஆவியும் விண்ணப்பத்தின் ஆவியும் ஊற்றும் போது கர்த்தர் சோல்லுகிறார், “அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல, எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல, எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்” (சகரியா 12:10).

கிருபையின் ஆவியானவர் உங்களுக்குள்ளே வந்து, ஜெபத்தின் ஆவியை உங்களுக்குள் ஊற்றுவார். நீங்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், எவ்வளவு வேதனையில் இருந்தாலும், அவர் உங்களுக்கு வேண்டிய கிருபையைத் தருவார். உங்களைத் தூக்கிவிடுவார். கிருபையின் ஆவியானவரை நீங்கள் பெற்றுக்கொண்டபின் உங்களுடைய வாழ்க்கை இயற்கைக்கு அப்பாற்பட்டதா மாறுகிறது. ஒருவேளை உலகத்தின் கண்களுக்கு நீங்கள் சாதாரணமானவர்களாத் தோன்றலாம். ஆனால் உங்களுக்குள் விலையேறப்பெற்ற ஒரு பொக்கிஷம் இருக்கிறது. அதுதான் கிருபையின் ஆவி. இதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.

“தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே” (ரோமர் 11:29). கிருபையின் ஆவியானவர் கிருபையின் வரங்களை உங்களுக்குள் கொண்டு வருகிறார். நீங்கள் ஜெபிக்க முடியாதபடி போராட்டமாக உங்களுடைய வாழ்க்கை இருந்தாலும், நீங்கள் பெற்றிருக்கிற கிருபையின் வரங்கள் மாறாதவைகள். கிருபையின் ஆவியானவர் உங்களுக்குள் இருந்து விண்ணப்பம் பண்ணுவார். நீங்கள் பிரசங்கம் பண்ணினாலும், ஊழியம் செய்தாலும், உங்களுக்குள் கிருபையின் வரங்கள் கிரியை செய்ய ஆரம்பிக்கும். அப்பொழுது அற்புதங்கள் தானாக நிகழும்.

மட்டுமல்ல, நாம் வாழுகிற இந்த காலம் கிருபையின் காலம் என்று அழைக்கப் படுகிறது. அறியாமையின் காலம் இருந்தது, மனச்சாட்சியின் காலம் இருந்தது, விருத்தசேதனத்தின் காலம் இருந்தது. நியாயப்பிரமாணத்தின் காலம் இருந்தது. ஆனால் கல்வாரிச் சிலுவைக்கு பின்போ, கர்த்தர் கிருபையின் காலத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இந்த காலத்தில்தான் பரிசுத்த ஆவியாகிய பின்மாரி ஊற்றப் படுகிறது. கிருபையின் ஆவியும் விண்ணப்பத்தின் ஆவியும் உங்களுக்குள் வருகிறது. கிருபையாக சுவிசேஷத்தின் கதவுகளைக் கர்த்தர் திறந்து வைத்திருக்கிறார். காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்வது உங்களுடைய கடமை.

சேனைகளின் கர்த்தர் தாமே உங்கள் மேலும் உங்கள் குடும்பத்தின் மேலும் உங்கள் திருச்சபையின் மேலும் தமது கிருபையின் ஆவியை அளவில்லாமல் ஊற்றுவாராக... ஆமென்..

தீவிரவாதம் அழிக்கப்பட - திறப்பிலே நிற்ப்போம்============================================விலையேறப்பெற்ற மனித உயிர்களை கூட...
02/07/2015

தீவிரவாதம் அழிக்கப்பட - திறப்பிலே நிற்ப்போம்
============================================
விலையேறப்பெற்ற மனித உயிர்களை கூட்டம் கூட்டமாய்கொன்று குவிக்கும் எல்லா தீவிரவாத
இயக்கங்களும் அழிக்கப்பட ஜெபிப்போம்...

தீவிரவாதிகளின் மறைவிடங்களும், ஆயுதக் கிடங்குகளும் அழிக்கப்பட ஜெபிப்போம்

வாலிபர்களை குறி வைத்து தங்கள் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த நினைக்கிற தீவிரவாத இயக்கங்களின் திட்டங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட ஜெபிப்போம்...

பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தவும், விற்கவும் செய்கிற வேசித்தன கிரியைகள் அழிக்கப்பட ஜெபிப்போம்

தேவப் பிள்ளைகளுக்கு எதிராக ஒரு இயக்கமும் கிரியை செய்யாதபடி தேவ பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம்..

உலக நாடுகளின் ராணுவங்களுக்கும், உளவுத்துறை அமைப்புகளுக்கும் தீவிரவாதிகளின் மறைவிடங்களும், ஆயுதக் கிடங்குகளும் வெளிப்பட ஜெபிப்போம்..
====================================
ஜெபமும் ஜெபிக்கிரவர்களும் மாத்திரமே தேசத்தின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம்.. ஜெபத்தாலும் ஜெபிக்கிரவர்களாலும் மட்டுமே சேனைகளின் கர்த்தரின் கரத்தின் கிரியைகளுக்கு கட்டளை கொடுக்க முடியும்
(ஏசாயா 45 : 11).. திறப்பிலே நிற்ப்போம்,, தேசத்தை பாதுகாப்போம்.. ஜெயம் நமக்கே...

விசுவாச பரீட்சை....===================உன்னை தெரிந்து கொண்ட தேவனா...???கெர்ச்சிக்கும் சிங்கமா...???======================...
01/07/2015

விசுவாச பரீட்சை....
===================
உன்னை தெரிந்து கொண்ட தேவனா...???
கெர்ச்சிக்கும் சிங்கமா...???
========================================
வேதத்திலே சத்துருவை சிங்கம் என்று வருணிக்கும் வசனங்கள் அநேகம் உண்டு. எதிராளியான பிசாசு கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று வகை தேடி சுற்றி திரிகிறான் என்று 1 பேதுரு 5:8 வசனத்தில் நாம் வாசிக்கலாம். சிங்கம் தன்னுடைய ஆதிக்கத்தை காண்பிக்க இந்த கர்ச்சிப்பு சத்தத்தை எழுப்புமாம். இந்த கர்ச்சனையை கேட்க்கும் மற்ற மிருகங்கள் சிங்கம் இருப்பதை அறிந்து பயந்து இருக்குமாம். இப்படி கொடூரமான பயமுறுத்தும் சிங்கமாகிய சத்துரு நம்மையும் பயமுறுத்துவது உண்டு. சிங்கங்களை கண்டு பயந்து கொண்டிருக்கும் நம்மை பார்த்து வேதம் தரும் ஆலோசனையை ஆராய்வது நமக்கு பயனளிக்கும்.

சிங்கங்கள் மற்ற மிருகங்களை வேட்டையாடி தின்னும் குணம் படைத்தவை. அவைகள் பசித்திருக்கும்போது, மற்ற விலங்குகள் தன் எல்லைக்குள் வரும்படி அமைதியாய் இருந்து வேடிக்கை பார்க்குமாம். இரையாகும் மிருகங்கள் தன் எல்லைக்குள் இருக்கும் பட்சத்தில் மெதுவாக கர்ச்சித்து பயமுறுத்த ஆரம்பிக்குமாம். பயந்திருக்கும் விலங்குகளை வேட்டையாட மற்ற சிங்கங்களின் உதவியையும் நாடி தன் திட்டத்தை நிறைவேற்றுமாம். தானியேல் 6 ம் அதிகாரத்தில் இதுபோன்ற பசியோடு இருந்த சிங்கத்தின் கெபிக்குள் போடப்பட்டிருந்த தானியேல் என்னும் மனிதனை குறித்து நம்மில் பலர் வாசித்திருக்கலாம். நாமும் இப்படியான சத்துருவின் பிடியில் அகப்பட்டிருந்தால் தானியேலின் சூழ்நிலை நமக்கு உதாரணம்.

சிங்க கெபியில் பசியுடன் இருந்த சிங்கங்களுக்கு இரண்டு முறை உணவுகள் கொடுக்கப்பட்டது. முதலாவது, தானியேல் சிங்க கெபிக்குள் போடப்படுகிறான். ஒரு இரவு முழுவதும் சிங்க கெபியில் இருந்த தானியேலை பார்க்க, அந்த சிங்கங்களின் தீவிரமும், வேட்டையாடும் திறமையும், அதன் உணவு பழக்கங்களும் அறிந்த ராஜா கிழக்கு வெளுக்கும் நேரத்தில் செல்கிறான். நடுக்கத்துடன் கேபிக்குள் எட்டி பார்த்த ராஜா நடுங்கி போய் நிற்கிறான். காரணம், சிங்கம் அவனை ஒன்றும் செய்யவில்லை. இரண்டாவதாக தானியேலின் மேல் குற்றம் சாட்டின மனுஷரும் அவன் குமாரரும் மனைவிகளும் போடப்படுகின்றனர். அவர்கள் கெபியின் அடியில் சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள் மேல் பாய்ந்து அவர்கள் எலும்பிகளை எல்லாம் நொறுக்கி போட்டது.

ஒரே விதமான சிங்கங்கள், ஒரே கால சூழல், ஒரே விதமான உணவு. ஆனால் சிங்கங்களின் செயல்பாடுகளோ வேறுபட்டவை. தானியேல் சிங்கத்தை ஜெயித்தான். தானியேல் மேல் குற்றம் சாட்டினவர்களை சிங்கம் மேற்கொண்டது. தானியேல் பாதுகாக்கப்பட்ட காரணங்களை அறிந்து, நம் வாழ்க்கையில் செயல்படுத்துவது, நம் ஆவிக்குரிய வாழ்க்கையை பலப்படுத்தும்.

முதலாவது, தானியேல் சொல்லுகிறான் நான் தேவனுக்கு முன்பாக குற்றமற்றவனாய் காணப்பட்டேன். எத்தனையோ மனிதர்கள் அங்கு இருந்திருக்க கூடும். தேசத்தின் உயர் அதிகாரிகள், தேசத்தின் சட்டதிட்டங்களை எழுதும் அதிகாரம் பெற்றவர்கள், அறிவுரை கூறும் அறிஞர்கள் என பலர் இருந்த போதிலும், தானியேல் அவர்கள் முன் குற்றமற்றவனாய் நடிக்க பல வழிமுறைகள் இருந்தபோதிலும், அவன் தேவனுக்கு முன்பாக குற்றமற்றவனாய் இருந்தான். அப்படியே இருக்க ஆசைபட்டான். எனவே தான் வேதம் சொல்லுகிறது, (தானி 6:10) தானியேலோவென்றால் (...), தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான். தேவனுக்கு கீழ்ப்படிந்தான், தேவன் விரும்பினதை செய்தான். தன் மன்றாட்டுக்களை தேவனுக்கு தெரியப்படுத்தினான். நாமும் சத்துருவுக்கு பயந்து கொண்டிருப்போமானால் இன்று தேவன் நமக்கு உணர்த்துவது, நாம் சத்துருவை பார்த்துக்கொண்டு, சத்துருவின் வலிமைகளை யோசித்துக்கொண்டு, சத்துருவை உலகப்பிரகாரமான போராயுதங்களை தரித்து போராட முயற்ச்சித்து களைத்துப்போய் முடிவில் சத்துரு நம்மை மேற்க்கொள்ள அனுமதிக்கும் அந்த பாதையை விட்டு தேவனை நோக்கி பார்த்து, தேவனை மகிமைப்படுத்தி, தேவனை நோக்கி மன்றாடி விண்ணப்பம் செய்வோமானால், எந்த சிங்கங்களும் நம்மை மேற்க்கொள்ளாதவாறு தேவன் சிங்கங்களின் வாய்களை கட்டிப்போடுவார். அல்லேலூயா!

இரண்டாவதாக, தானியேல் சொல்லுகிறான், நான் ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை. தேவனால் தானியேல் அந்த இடத்துக்கு கொண்டுவரப்பட்டதை உணர்ந்த தானியேல் அந்த சூழ்நிலையிலும் நீதி செய்கிறவனாக காணப்பட்டான். தானி 6:4 சொல்லுகிறது, பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை. இன்றும் நம்மை தேவன் வைக்கும் ஸ்தலங்களில் இப்படியான வாழ்க்கை வாழ்கிறோமா? நம்மை சுற்றி இருக்கும் நம் அதிகாரிகள், நம் உடன் வேலை செய்யும் நண்பர்கள், நம் குடும்ப அங்கத்தினர்கள், நம் அயலகத்தார் நம்மை குற்றப்படுத்தாத முடியாத படி நீதியாய் நேர்மையாய் வாழ்ந்து, அதன் வழியாய் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படாத படி பாதுகாக்க நாம் ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்கிறோமா. அப்படியான வாழ்க்கைக்கு நம்மை அற்பணிக்கும்போது நம்மை எதிர்த்து சிங்கங்களின் கெர்ச்சனைகள் கேட்கலாம். சிங்கங்கள் நம்மை நெருங்கி வரலாம். ஆனால் தானியேலை பாதுகாக்க தம் தூதனை அனுப்பி சிங்கங்களின் வாய்களை கட்டின தேவன் நமக்கு எதிராக வரும் சிங்கங்களின் வாய்களையும் கட்ட வல்லமை உள்ளவராய் இருக்கிறார். அல்லேலூயா!

தேவன் சத்துருவின் வாய்களை கட்டினார். நடந்தது என்ன, துன்மார்க்கர் அழிக்கப்பட்டார்கள். தானியேலின் காரியம் ஜெயமாய் இருந்தது மாத்திரம் அல்ல, என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும் என்றும், தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார் என்றும் ராஜா பறைசாற்றும் அளவுக்கு பெரிய காரியங்கள் நடந்தன.

இதை வாசிக்கும் என் அன்பு முகநூல் வாசகர்களே,
தேவன் நம்மை விலை கிரயமாய் மீட்டு உன்னதமான ஆசீர்வாதமான கானானை நோக்கி நடத்தி செல்லும் வழி ஒருவேளை வனாந்தரமாக இருக்கலாம். போராட்டமான வாழ்க்கை நம்மை பயமுறுத்தலாம். தேவன் நம்மை மீட்டுக்கொண்டதற்கு ஒரு நோக்கம் உண்டு. கெபியத்தனை தூரம் பார்த்து அதில் இருக்கும் சத்துருவை கண்டு பயந்து சத்துருவோடு நாம் போராடிக்கொண்டிருக்கிரோமா...??? இல்லை உலகத்தனையும் படைத்து நம்மை தெரிந்துக்கொண்டு அழைத்த தேவனை நோக்கி, அவரை மகிமைப்படுத்தி, அவர் ஆளுகைக்கு நம்மை ஒப்புக்கொடுத்து, நம்மை சூழ கெர்கஜிக்கும் சிங்கங்களும் சத்துருக்களும் நின்றாலும் அவ் விசுவாச பரீட்சையில்ஜெயமேடுத்து, அவர் வழி நடந்து அந்த இன்ப கானானுக்கு நேராக முன்னேறுகிறோமா..???

தானியேலைப் போல தேவனுக்காய் வைராக்கியமாய் நிற்ப்போம். கெர்ஜிக்கும் சிங்கமாகிய பிசாசை, நம் யூத ராஜ சிங்கத்தின் நாமத்தில் தோற்கடிப்போம். சேனைகளின் கர்த்தர் நம்மொடு இருக்கிறார்.. ஆமென்!!!

Address

Prayer Warriors Group
Salem
007

Alerts

Be the first to know and let us send you an email when கர்த்தரின் யுத்த சேனை - ஜெபிக்கும் கிறிஸ்தவன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share