01/07/2015
விசுவாச பரீட்சை....
===================
உன்னை தெரிந்து கொண்ட தேவனா...???
கெர்ச்சிக்கும் சிங்கமா...???
========================================
வேதத்திலே சத்துருவை சிங்கம் என்று வருணிக்கும் வசனங்கள் அநேகம் உண்டு. எதிராளியான பிசாசு கெர்ச்சிக்கிற சிங்கம் போல எவனை விழுங்கலாமோ என்று வகை தேடி சுற்றி திரிகிறான் என்று 1 பேதுரு 5:8 வசனத்தில் நாம் வாசிக்கலாம். சிங்கம் தன்னுடைய ஆதிக்கத்தை காண்பிக்க இந்த கர்ச்சிப்பு சத்தத்தை எழுப்புமாம். இந்த கர்ச்சனையை கேட்க்கும் மற்ற மிருகங்கள் சிங்கம் இருப்பதை அறிந்து பயந்து இருக்குமாம். இப்படி கொடூரமான பயமுறுத்தும் சிங்கமாகிய சத்துரு நம்மையும் பயமுறுத்துவது உண்டு. சிங்கங்களை கண்டு பயந்து கொண்டிருக்கும் நம்மை பார்த்து வேதம் தரும் ஆலோசனையை ஆராய்வது நமக்கு பயனளிக்கும்.
சிங்கங்கள் மற்ற மிருகங்களை வேட்டையாடி தின்னும் குணம் படைத்தவை. அவைகள் பசித்திருக்கும்போது, மற்ற விலங்குகள் தன் எல்லைக்குள் வரும்படி அமைதியாய் இருந்து வேடிக்கை பார்க்குமாம். இரையாகும் மிருகங்கள் தன் எல்லைக்குள் இருக்கும் பட்சத்தில் மெதுவாக கர்ச்சித்து பயமுறுத்த ஆரம்பிக்குமாம். பயந்திருக்கும் விலங்குகளை வேட்டையாட மற்ற சிங்கங்களின் உதவியையும் நாடி தன் திட்டத்தை நிறைவேற்றுமாம். தானியேல் 6 ம் அதிகாரத்தில் இதுபோன்ற பசியோடு இருந்த சிங்கத்தின் கெபிக்குள் போடப்பட்டிருந்த தானியேல் என்னும் மனிதனை குறித்து நம்மில் பலர் வாசித்திருக்கலாம். நாமும் இப்படியான சத்துருவின் பிடியில் அகப்பட்டிருந்தால் தானியேலின் சூழ்நிலை நமக்கு உதாரணம்.
சிங்க கெபியில் பசியுடன் இருந்த சிங்கங்களுக்கு இரண்டு முறை உணவுகள் கொடுக்கப்பட்டது. முதலாவது, தானியேல் சிங்க கெபிக்குள் போடப்படுகிறான். ஒரு இரவு முழுவதும் சிங்க கெபியில் இருந்த தானியேலை பார்க்க, அந்த சிங்கங்களின் தீவிரமும், வேட்டையாடும் திறமையும், அதன் உணவு பழக்கங்களும் அறிந்த ராஜா கிழக்கு வெளுக்கும் நேரத்தில் செல்கிறான். நடுக்கத்துடன் கேபிக்குள் எட்டி பார்த்த ராஜா நடுங்கி போய் நிற்கிறான். காரணம், சிங்கம் அவனை ஒன்றும் செய்யவில்லை. இரண்டாவதாக தானியேலின் மேல் குற்றம் சாட்டின மனுஷரும் அவன் குமாரரும் மனைவிகளும் போடப்படுகின்றனர். அவர்கள் கெபியின் அடியில் சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள் மேல் பாய்ந்து அவர்கள் எலும்பிகளை எல்லாம் நொறுக்கி போட்டது.
ஒரே விதமான சிங்கங்கள், ஒரே கால சூழல், ஒரே விதமான உணவு. ஆனால் சிங்கங்களின் செயல்பாடுகளோ வேறுபட்டவை. தானியேல் சிங்கத்தை ஜெயித்தான். தானியேல் மேல் குற்றம் சாட்டினவர்களை சிங்கம் மேற்கொண்டது. தானியேல் பாதுகாக்கப்பட்ட காரணங்களை அறிந்து, நம் வாழ்க்கையில் செயல்படுத்துவது, நம் ஆவிக்குரிய வாழ்க்கையை பலப்படுத்தும்.
முதலாவது, தானியேல் சொல்லுகிறான் நான் தேவனுக்கு முன்பாக குற்றமற்றவனாய் காணப்பட்டேன். எத்தனையோ மனிதர்கள் அங்கு இருந்திருக்க கூடும். தேசத்தின் உயர் அதிகாரிகள், தேசத்தின் சட்டதிட்டங்களை எழுதும் அதிகாரம் பெற்றவர்கள், அறிவுரை கூறும் அறிஞர்கள் என பலர் இருந்த போதிலும், தானியேல் அவர்கள் முன் குற்றமற்றவனாய் நடிக்க பல வழிமுறைகள் இருந்தபோதிலும், அவன் தேவனுக்கு முன்பாக குற்றமற்றவனாய் இருந்தான். அப்படியே இருக்க ஆசைபட்டான். எனவே தான் வேதம் சொல்லுகிறது, (தானி 6:10) தானியேலோவென்றால் (...), தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேலறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான். தேவனுக்கு கீழ்ப்படிந்தான், தேவன் விரும்பினதை செய்தான். தன் மன்றாட்டுக்களை தேவனுக்கு தெரியப்படுத்தினான். நாமும் சத்துருவுக்கு பயந்து கொண்டிருப்போமானால் இன்று தேவன் நமக்கு உணர்த்துவது, நாம் சத்துருவை பார்த்துக்கொண்டு, சத்துருவின் வலிமைகளை யோசித்துக்கொண்டு, சத்துருவை உலகப்பிரகாரமான போராயுதங்களை தரித்து போராட முயற்ச்சித்து களைத்துப்போய் முடிவில் சத்துரு நம்மை மேற்க்கொள்ள அனுமதிக்கும் அந்த பாதையை விட்டு தேவனை நோக்கி பார்த்து, தேவனை மகிமைப்படுத்தி, தேவனை நோக்கி மன்றாடி விண்ணப்பம் செய்வோமானால், எந்த சிங்கங்களும் நம்மை மேற்க்கொள்ளாதவாறு தேவன் சிங்கங்களின் வாய்களை கட்டிப்போடுவார். அல்லேலூயா!
இரண்டாவதாக, தானியேல் சொல்லுகிறான், நான் ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை. தேவனால் தானியேல் அந்த இடத்துக்கு கொண்டுவரப்பட்டதை உணர்ந்த தானியேல் அந்த சூழ்நிலையிலும் நீதி செய்கிறவனாக காணப்பட்டான். தானி 6:4 சொல்லுகிறது, பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை. இன்றும் நம்மை தேவன் வைக்கும் ஸ்தலங்களில் இப்படியான வாழ்க்கை வாழ்கிறோமா? நம்மை சுற்றி இருக்கும் நம் அதிகாரிகள், நம் உடன் வேலை செய்யும் நண்பர்கள், நம் குடும்ப அங்கத்தினர்கள், நம் அயலகத்தார் நம்மை குற்றப்படுத்தாத முடியாத படி நீதியாய் நேர்மையாய் வாழ்ந்து, அதன் வழியாய் தேவனுடைய நாமம் தூஷிக்கப்படாத படி பாதுகாக்க நாம் ஜாக்கிரதை உள்ளவர்களாக இருக்கிறோமா. அப்படியான வாழ்க்கைக்கு நம்மை அற்பணிக்கும்போது நம்மை எதிர்த்து சிங்கங்களின் கெர்ச்சனைகள் கேட்கலாம். சிங்கங்கள் நம்மை நெருங்கி வரலாம். ஆனால் தானியேலை பாதுகாக்க தம் தூதனை அனுப்பி சிங்கங்களின் வாய்களை கட்டின தேவன் நமக்கு எதிராக வரும் சிங்கங்களின் வாய்களையும் கட்ட வல்லமை உள்ளவராய் இருக்கிறார். அல்லேலூயா!
தேவன் சத்துருவின் வாய்களை கட்டினார். நடந்தது என்ன, துன்மார்க்கர் அழிக்கப்பட்டார்கள். தானியேலின் காரியம் ஜெயமாய் இருந்தது மாத்திரம் அல்ல, என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும் என்றும், தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார் என்றும் ராஜா பறைசாற்றும் அளவுக்கு பெரிய காரியங்கள் நடந்தன.
இதை வாசிக்கும் என் அன்பு முகநூல் வாசகர்களே,
தேவன் நம்மை விலை கிரயமாய் மீட்டு உன்னதமான ஆசீர்வாதமான கானானை நோக்கி நடத்தி செல்லும் வழி ஒருவேளை வனாந்தரமாக இருக்கலாம். போராட்டமான வாழ்க்கை நம்மை பயமுறுத்தலாம். தேவன் நம்மை மீட்டுக்கொண்டதற்கு ஒரு நோக்கம் உண்டு. கெபியத்தனை தூரம் பார்த்து அதில் இருக்கும் சத்துருவை கண்டு பயந்து சத்துருவோடு நாம் போராடிக்கொண்டிருக்கிரோமா...??? இல்லை உலகத்தனையும் படைத்து நம்மை தெரிந்துக்கொண்டு அழைத்த தேவனை நோக்கி, அவரை மகிமைப்படுத்தி, அவர் ஆளுகைக்கு நம்மை ஒப்புக்கொடுத்து, நம்மை சூழ கெர்கஜிக்கும் சிங்கங்களும் சத்துருக்களும் நின்றாலும் அவ் விசுவாச பரீட்சையில்ஜெயமேடுத்து, அவர் வழி நடந்து அந்த இன்ப கானானுக்கு நேராக முன்னேறுகிறோமா..???
தானியேலைப் போல தேவனுக்காய் வைராக்கியமாய் நிற்ப்போம். கெர்ஜிக்கும் சிங்கமாகிய பிசாசை, நம் யூத ராஜ சிங்கத்தின் நாமத்தில் தோற்கடிப்போம். சேனைகளின் கர்த்தர் நம்மொடு இருக்கிறார்.. ஆமென்!!!