15/08/2026
*தூய கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா சிறப்பு ஜெபம்*
அன்பும் இரக்கமும் நிறைந்த எங்கள் வானகத் தந்தையே!,
இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக உம்மை நன்றியோடு போற்றுகிறோம். "வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்" என்று தூய கன்னி மரியா ஆனந்தக் களிப்புடன் பாடிய புகழ்ச்சிப் பாடலை நாங்களும் எங்கள் உள்ளத்தில் எதிரொலிக்கச் செய்கிறோம்.
தாழ்நிலையில் இருப்போரைத் கடைக் கண்ணோக்கி உயர்த்தும் கிருபையாளரே, உம்மை ஆராதிக்கிறோம். மரியாவின் விசுவாசத்தையும், உம் திட்டத்திற்கு அவர் முழுமையாகத் தன்னைத் தந்துகொண்ட கீழ்ப்படிதலையும் கண்டு வியக்கிறோம். எலிசபெத்தைச் சந்தித்து உமது அன்பைப் பகிர்ந்துகொண்டது போல, நாங்களும் பிறருக்கு நற்செய்தியின் தூதுவர்களாய் வாழ எங்களுக்கு அருள் தாரும்.
வான்புகழ் கொண்ட எங்கள் அன்னையே, விண்ணேற்புப் பெற்ற மரியாவே!
இன்று உமது விண்ணேற்புப் பெருவிழாவை, நாங்கள் கொண்டாடும் இவ்வேளையில், உடலோடும் உள்ளத்தோடும் மகிமையின் உச்சிக்கு உயர்த்தப்பட்ட உம்மைப் போற்றுகிறோம். மண்ணுலகில் எளிய வாழ்வு வாழ்ந்த உமக்கு, உமது மகனாகிய இயேசு கிறிஸ்து விண்ணகத்தில் சூட்டிய கிரீடம் உமது தாழ்ச்சிக்கும் விசுவாசத்திற்கும் கிடைத்த பரிசாகும்.
அன்னையே, நீர் உமது மண்ணக வாழ்க்கையை முடித்துவிட்டு, வானக மாட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது போல, நாங்களும் இவ்வுலகப் பயணத்தை நிறைவுசெய்து, என்றைக்கும் உம்மோடும் உமது திருக்குமாரனோடும் நிலைவாழ்வில் பங்கெடுக்க எங்களை வழிநடத்துங்கள்.
எங்கள் வாழ்வின் இக்கட்டுகளிலும், தாழ்நிலைக் கணங்களிலும், சோதனைகளிலும் உமது தாயுள்ளத்தால் எங்களைத் தாங்கிப் பிடியுங்கள் அம்மா!. எங்கள் மன்றாட்டுகளை உமது திருக்குமாரனிடம் சேர்ப்பித்து எங்களுக்காகப் பரிந்துபேசுங்கள் தாயே!, ஆமென்.
> மரியாவின் மட்டற்ற ஆனந்தம்: "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது; என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது" – லூக்கா 1:46-47
>
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
அன்புடன் ❤️
ரெஜி அம்மா