CSI Christ Church, Salem

CSI Christ Church, Salem C.S.I Christ Church The church has 700(Around 2100 No's) family members as its congregation. it has more than 10 missionary people's cemetery.

C.S.I Christ Church has be built by the British people around 140 years ago.The Exact city center point cross comes in the middle of the church alter. The historical Building structure made it looks beautiful in middle of the busy town. One of the most important historical place is the Anglican cemetery which is near the church. The people who have came as missionary where buried there.

22/12/2024
19/07/2015

ACTIVE ADMIN for this page who can update Church's News Regularly can send your request via msg

25/06/2015
VERY SAD NEWS:MRS.LYDIA XAVIER(76 YEARS OLD) Mother of Mr.X.Paul Joseph..Ex.P.C.Member) expired  at 7am due to sickness ...
15/06/2015

VERY SAD NEWS:

MRS.LYDIA XAVIER(76 YEARS OLD)

Mother of Mr.X.Paul Joseph..Ex.P.C.Member)

expired at 7am due to sickness

on 14th Sunday at Bharathi Nagar Extension,(Near J.J.Gateway)Chinna Thirupathi, Kannankurichi Road...

FUNERAL SERVICE at 4.30 pm on 16th June(Tuesday)..

For further Details Contact Mr.X.Paul Joseph...9443404299

11/06/2015

உயிரைப்போல நம்மை நேசிக்க பலர் இருக்கலாம். ஏதாவது ஒரு சூழ்நிலையில் அவர்களும் நம்மை வெறுக்க நேரிடலாம். எல்லா உறவுகளைவிட ஒரு தாயின் மனநிலை என்பது மிகவும் வித்தியாசமானது. ஆனால் அந்தத் தாயின் மனநிலையைக்காட்டிலும் மேலானதே நம்மைப் படைத்த தேவனுடைய மனநிலை.
நம் தேவன் பாகுபாடற்ற தேவன். எல்லோரையும், எந்த சூழ்நிலைகளிலும், நேசிக்கும் ஒருவர், நம் தேவன் மட்டுமே.

20/05/2015
23/03/2015

ஒரு பாதையில் நான் நடந்து
அந்த பாதையில் தவறு என்று
என் மனமும் அறிந்திட்ட வேளையிலே
என்னை காத்திட யாரும் உண்டோ???
தேவா உன்னையன்றி யாரும் உண்டோ ????
1) பல்வேறு நேசங்கள் அறிந்திட்ட வேளையிலே
பல்வேறு வேஷங்கள் புனைந்திட்ட வேளையிலே
பல்வேறு நினைவுகள் மனதினில் பொதிந்து
கசந்திட்ட வேளையிலே
என் இருகரம் கூப்பி,.
என் அறியாமை குறித்து
இறைவா வேண்டுகின்றேன்
பதில் என் நிலை உணர்ந்து
மனத்திடம் கொடுத்து
உம் சாயல் உருக் கொடுப்பீர்
தேவா உம் சாயல் உருக் கொடுப்பீர்
2) உலகத்தின் வழி தனில்,
என் மனம் போன போக்கினிலே
இறைவழி மறந்து
என் வாழ்வும் நடக்கையிலே
பிறர் நலம் மறந்து
சுயநலம் கொண்டு
நடக்கின்ற வேளையிலே
என் இரு கரம் கூப்பி
என் பாவம் மன்னிக்க
இறைவா வேண்டுகின்றேன்
பதில் என் பாவம் மன்னித்து
என் நிலை உணர்த்தி
பிறர் நலம் பேணச் செய்வீர்
தேவா பிறர் நலம் பேணச் செய்வீர்
+ + + + + + + + + + + + + + + + + + + +

இன்றைய சிந்தனை:
ஒருவருடைய எண்ணங்களை, உணர்வுகளைக் குற்றம் சாட்டாமல் நம்மால் இருக்க முடியாது. அவர்களுடைய செயல்கள், போதனைகள், உண்மைகள் நம் மனதோடு ஒத்துப் போவதில்லை.
யேசு இவ்வுலகில் வாழ்ந்த போதினில், அவர் யாரையும் தீர்ப்பிட இந்த உலகத்தில் வரவில்லை. மாறாக, நாம் அனைவரும் கொடிய தீர்ப்புக்கு உள்ளாகாமல் பார்த்துக் கொள்ளவே, நம்மை பாதுகாத்து, நம்மை மீட்க சிலுவை சாவை ஏற்றார்.
குற்றம் புரிந்தவள் என்று அவருக்கு முன்பாக நிறுத்தப்பட்ட ஒரு பெண்மணியிடம் கூட “நானும் தீர்பிடேன்” என்று அவர் இயம்பியது அவரது கொள்கையாக மட்டுமன்றி கருணை உள்ளத்தையும் “ இனி பாவம் செய்யாதே” என்பது அவரது மீட்பின் ஆதங்கத்தையும் நமக்கு எண்பிக்கின்றது.
சோதரமே / தோழமையே
நாமும் நம் வாழ்விலும் கூட பல முறை பாவங்களில் விழுந்து அந்த பெண்மணியை போல் தீர்ப்புக்கு உள்ளாகாமல், அவரின் மீட்பின் உன்னதத்தையும் அதற்காக அவர் கொடுத்த விலையையும் எண்ணி யேவுக்குச் சான்று பகர்கின்ற வாழ்வை வாழ முயல்வோம்.
சிந்திப்போம் – செயல்படுவோம்

22/03/2015

தேவ மைந்தா - நீ அழைக்கும் குரலை
நானும் உணர்ந்தேனே
தேகம் யாவும் பாவம் கணலாய்
உணர்த்தும் வலி அறிந்தேனே
எந்தன் தேவனை நான் தழுவிடா நிலையில்
மனம் நொந்து அழுகின்றேன்
எந்தன் பாவங்களை உன் பலியின் வழியாய்
குணம் செய்ய வேண்டுகின்றேன்
என் குரல் கேட்கின்றதா – ஐயா
என் குரல் கேட்கின்றதா
1) கரடு முரடான கல்வாரி பாதையின் வழியாய்
உலக மாந்தரின் பாவச் சிலுவையை நீயும் சுமந்தாய்
குருதி பொங்கவே உனது கால்களும் நடையை இழக்கவே
சிலுவை பாரமும், சிந்தும் வேர்வையும் உம்மை வீழ்த்தவே
உடன் உதவியாய் என்ன செய்வாய் என்று நீயும் கேட்டால்
உமது உயிரை எமக்கே தருவாய் என்றுதானே கூறினோம்
எமது சிந்தை சிறுமை ஆனது எமது வாழ்வும் இருளில் வீழ்ந்தது
சுயநலங்கள் கொண்ட ஒரு கயமை உள்ளம் மிகுந்து போனது
\
2) நிலையில்லாத வாழ்க்கை வாழும் காலம் தனிலே
நிலையான வாழ்க்கை வழங்க வந்த என் அன்பு வள்ளலே
உம் இறப்பின் வழியாய் இதனை நாங்கள் வெகுவாய் உணர்ந்தோம்
விழலின் நீராய் இதனை நாங்கள் நிதமும் மறந்துப் போனோம்
வெகுமதியாய் என்ன வேண்டும் என்று நீயும் கேட்டால்
எங்கள் பாவம் யாவையும் மன்னிப்பாய் என்று வேண்டுவோம்
உமது கருணை அளவில்லாதது உமது அன்பும் ஆழமானது
நீர் ஈந்த பலியில்தான் எமது வாழ்வும் மீட்பை பெற்றது
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

இன்றைய சிந்தனை:
உலக ரீதியான வாழ்க்கையில், நீதியையும், நேர்மையையும் கடைப்பிடிக்கும் யாருக்கும் சரியான மரியாதை கிடைப்பதில்லை. மறை நூலில் கூட, இறைவாக்கினர்களுக்கு சொந்த ஊரில் மரியாதை இல்லை என்று குறிப்பிடப்படுகின்றது.
இன்றைய சூழலில் கூட, நமக்கு தெரிவிக்கப்படும், அறிவிக்கப்படும் மறைசெய்திகளை படித்து அதன் வழியில் நம்மை சீர் செய்து மாற்றி வாழ்வதை விட்டு விட்டு, மனமாற்ற குரலுக்கு செவிகொடுப்பதை மறந்து / மறுத்து விட்டு “இவன் யார்? இவன் எந்த குடும்பம்? எந்த இனம்? எந்த சாதி? எந்த மதம்? எந்த கோத்திரம் என்று பல வித குறுகிய சிந்தனைகளிலே நம்மை முடக்கி வாழ பழகி விடுகின்றோம்.
சோதரமே / நட்பே

உலக வாழ்க்கையில், இந்த விதமான குறுகிய சிந்தனைகளை விட்டு விட்டு, எல்லோரும் இறைவனின் பிள்ளைகளே, ஒவ்வொரு மனிதனும், இறைவன் பயன்படுத்தும் ஒரு கருவி, நற்செய்தியின் தூதுவன் என்ற உண்மையை உணர்ந்து வாழ முயற்சி எடுப்போம்.

16/03/2015

ஓ மனிதா நீ எங்கே
உன் வாழ்வினில் ஒளி எங்கே
உன் மனதினில் கயமையும் அழுக்காறும்
பலவகையில் நிறைந்திட்டு
உன் வாழ்வை இருளாக்குதே
அதை நீ உணர்ந்து வழி தனை மாற்று
உன் வாழ்வு உடன் ஒளிபெருமே
1) படைத்திடும் போதினில் பரமனும்
உன்னை தன் சாயல் உருக்கொடுத்தார்
ஒரு பிடி மண்ணை கையடக்கி ஆவியை செலுத்தி
முதல் மனிதன், ஆணாய் உன்னை படைத்தார்
உடன் உன் துணையாய் வாழ்ந்திட தேவனும்
நல்லெண்ணம் கொண்டு துணை ஒன்றை தேர்ந்தெடுத்தார்
விலா எலும்பினின் ஒரு பகுதி எடுத்து தன் ஆற்றல் செலுத்தி
பெண் அவளை உனக்காய் நல் உருவாக்கம் கொடுத்திட்டார்
இதன் மகிமையை உணராத மானிடா நீயும்
உன்வழி சென்று ஜென்ம பாவத்தை நீ செய்தாய்
அதனினும் கடந்து, உன் பாவம் மன்னித்து
உலகனைத்தும் உனக்காக அவர் படைத்தார்
உணருவாய் மனிதனே
உன் சிந்தையை சீர் செய்வாய்
மானிட சிந்தை புடமிட்டு
மறு ரூபம் உன்னில் கொள்வாய்
2) படைத்தது யாவும் உனக்கது அன்றி
பாரில் யாவரும் பயன் பெற நிர்ணயித்தார்
உலகதன் சுழற்சியில் யாவரும் ஒளி பெற
ஆதவனும் நிலவும் கோள்களும் அவர் இணைத்தார்
இயற்கையும், அதன் சார்ந்த சூழலும்
பல வகை கனிமங்களும், நீர் நிலையும்
அதன் வழி மரங்களும், செடிகளும், கொடிகளும்
பலுகி பெறுகிட பறவைகளும், பல உயிரினங்களும் படைத்தார்
இவை யாவும் நண்பனே, தோழியே, சோதரமே
நம் சார்ந்தோர் மட்டிற்கும் பயன் பெற அல்ல
பலவகை நிலையினரும், அவரவர் வழியில் பங்கிட்டு
அன்புடன் பிறரோடு வாழ நியமனம் செய்தார் அன்றோ
உணருவாய் மனிதனே
குறுகிய மனதினை மாற்றுவாய்
சுய நிலை உணர்ந்திட்டு
உடன் அவர் பதம் நாடுவாய்
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

இன்றைய சிந்தனை:
நவீன கால மனிதன், மறைந்த வாழ்வே வாழத் துடிக்கின்றான். தணித்தொழில், தனிப்பட்ட பிரச்சினைகள், தனிமையான வாழ்வு என்று தன்னையே தனிமைப் படுத்திக்கொள்ள ஆசைப்படுகின்றான். ஏதோ, ஒரு இருளின் நிழலில்தான் வாழ முயற்சி செய்கின்றான். மனிதர்களாகிய நாம், இத்தகைய இருளை நீக்கி, ஒளியாம் எசுவைப் பின்பற்றி வாழ அழைக்கப்டுகின்றோம்.
சோதரமே / நட்பே
இறைவனின் ஒளியில் வாழ முயற்சிப்பவர்கள், அதன் அண்டை வருபவர்கள் உண்மையின் வழியை தேடுபவர்கள். உண்மையான ஒளியாம் இறையவன் வழி பின்பற்றி வாழ முயற்சிப்போம்
இறைவேண்டுதலுடன் / ஜெபங்களுடன்

11/03/2015

மூலவனே, முப் பரம்பொருளே
எம்மை சிருஷ்டித்த சர்வேஸ்வரனே
தேவனே, எம் இறையவனே
தயவாய் காக்கும் தயாபரனே
பணிவுடன் உம் பாதம், பணிந்து
எம் அகம் புறம் யாவும் சமர்ப்பித்தோம்
மன்னியும், எம் பாவம் யாவும் மன்னியும்
பொறுத்தருளும், எம் பிழையெல்லாம் பொறுத்தருளும்
எம்மை புடமிட்டு,
உம் கை தன்னில்
யாம் மென் பட்டு
நேரியதாய் வாழ
சுகந்தமான மனதை
மீண்டும் தருவாயா
1) இறை உம் வழியில் வாழ எம் மனம் நாடினும்
இவ்வுலகின் மாயை எம்மை தினம் தடுக்குது
பகட்டாக வாழும் வாழ்வே போதும் என்றெண்ணி
இவ்வுலக வழியில் நித்தம் எம் மனம் செல்லுது
யாம் என்ன செய்திட, எம் மனம் பலவீனமானது
நொடிப்பொழுதில் திசை மாறிடும் சருகொத்தது
மாயை நிறைந்த உலகில்,
எம் மரக்கலம் போகையில்
சூழ்ந்திடும் சூழலில்,
சோதனை புயல் வீசுகையில்
எம் மனதை திசை திருப்பிடா, அதிலே கவனம் மாறிடா
நான் வீழ்ந்திடா, கறையுள்ள வாழ்வினில் மீண்டும் மூழ்கிடா
கலம் விட்டு என்னை வீசி எறிந்திடா, என் களம் மாற்றிடா
உம் வழிதனில் தொடர்ந்து பயணித்திட, அதில் நிலை கொண்டிட
நீர் எம் மேல் காட்டும்
என்றென்றும் மாறாத அன்பானது
வாழ்வின் கள வலிமையை
எண்பித்திடும் ஒரு துடுப்பானது
இது ஒரு அரிய விந்தை அல்லவோ
உம் திருச்சித்த கொடை அல்லவோ

2) எம் வாழ்வு இங்கு உம் முன்னே வெறும் கசடானது
இந்நிலை மாற்றிட எம் மனம் நித்தம் நிஜம் ஏங்குது
இதன் இயலாமையில், பொங்கிடும் ஆற்றாமையில்
எம் மனம் விளிம்பின் நிலைக்கு நித்தம் செல்கின்றது
காண்கின்ற தேவனே, இவை யாவும் முன்பே அறிந்திடினும்
எம்மை காத்து வழிநடத்திட உம் தூதர்கள் இருப்பிடினும்
இவ்வுலக ஆசாபாசங்கள்
என்னை தடம் மாற்றுது
இள வயதின் வாழ்வை நோக்கி
மனம் திசை மாறுது
எம் வயதொத்த நபரின் வாழ்வு கண் முன் நிழலாடுது
அவர் வாழ்ந்திடும் மாய்மாலங்களில் மனம் சிதையுது
ஏன் இந்த விழலான வாழ்க்கையை நோக்கி மனம் நாடுது
என்றெண்ணிய வேதனை எம் மனதை சுமையாக்குது

உம் அருள் ஒன்றே போதும்,
ஒரு வார்த்தை மட்டும் கூறும்
எம் ஆன்மா உடன் சுத்தம் அடையும்,
உம் வழிதனில் மாறும்
இது ஒரு அரிய விந்தை அல்லவோ
உம் திருச்சித்த கொடை அல்லவோ
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +

இறையவன், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதரை நியமித்துள்ளார். அந்த தூதர் எப்போதும் நமது அருகில் இருக்கின்றார். அதை நாம் நினவில் கொள்ள வேண்டும் . நம் பாவ சோதனை வேளையிலும், ஆபத்து நேரத்திலும் அவருடைய துணையை நாட வேண்டும்.
சோதரமே / நட்பே
பலவீன உள்ளம் கொண்ட நாம், காவல்தூதர் நம்மை எப்போதும் காத்திட வேண்டுதல் ஏறெடுப்போம்.
காவல் தூதர்களே: நாங்கள் என்றும், சோதனைகளிலும், துன்பங்களிலும் விழாமல் இருக்க எம்மை பாதுகாக்கும். அங்ஙனம் நாங்கள் வீழ்ந்தாலும், நீரே எம் அரணாயும் கேடயமுமாய் திகழ்ந்திட வேண்டும்.

Address

CSI Christ Church
Salem
636001

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSI Christ Church, Salem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share