07/05/2020
இன்று ஐயா M.K. #சாம்சுந்தரம் அவர்களின் நினைவு நாள் (7.5.2019).
1) #வேதத்தை வாழ்க்கையில் #அனுபவிக்க வேண்டும்.
2) #வேதத்தால் வாழ்க்கையில் #அனுபவித்ததை போதிக்க வேண்டும்.
3) வாழ்க்கையில் #சாட்சி அல்ல #சாட்சியான வாழ்க்கை இருக்க வேண்டும்.
4) #பிரசங்கிக்கும் ஊழியர்கள் எப்படி இருக்க வேண்டும் #முன்மாதிரியாய் வாழ்ந்து காண்பித்தவர்...
#சிறந்த #உண்மையுள்ள தேவ ஊழியர், தேவ மனிதர், ஆவிக்குரிய தகப்பனார்..
*ஐயா அவர்களும் நாங்களும்*
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
#என் #தந்தை(காந்தாராவ். P) #வாழ்ந்த #காலங்களில் ஐயா அவர்களுக்கும் என் தந்தைக்கும் இடையே நடந்த உரையாடல்கள் (கடிதங்கள் மூலம்) அதை வாசிக்கும் போதெல்லாம் அதில் இருவருக்கும் இடையே உள்ள அன்பை பார்த்து மெய்சிலிர்த்துப் போகிறேன்..
(இருவரும் அடிக்கடி சொல்லிக் கொண்டது உங்களுடைய வலிகள் எனக்குத் தெரியும் என்னுடைய வலிகள் உங்களுக்கு புரியும் என்று காரணம் இருவருக்கும் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டிருந்தது ஒன்று போலவே)..
கடிதங்களிலேயே இப்படி என்றால் நேரில் அன்பின் உறவு எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்..!!!
#என் #தந்தையின் #மறைவுக்கு #பின் ஐயா அவர்கள் எங்களை குடும்பமாக தன் வீட்டிற்கு அழைத்து எங்களோடு அநேக காரியங்களை பகிர்ந்து கொண்டு பல மணி நேரங்களை எங்களுடன் செலவு செய்தார்..
(என் தந்தையின் இழப்பிலிருந்து நாங்கள் வெளிவந்து கர்த்தருக்காக இன்னும் அதிக உற்சாகமாய் ஊழியம் செய்வதற்கு குடும்பமாய் தைரியமாய் வாழ்வதற்கு அவருடைய ஆலோசனைகள் ஜெபங்கள் பேருதவியாக இருந்தது).
#என்னை #தன்னுடைய (Apostolic Bible Training Institute - ACA Head Church, Chennai) - வேதாகம கல்லூரியில் நேரடியாக தேர்வு செய்து போதித்து என்னை ஆவிக்குரிய ஊழியனாக உருவாக்கியவர்.. இன்னும் ,
🔥ஆவிக்குரியதந்தை. #தாமஸ்ராஜ் ஐயா அவர்கள்,
🔥மதிப்புக்குரிய. #விசுவாசம் ஐயா அவர்கள்,
🔥மதிப்புக்குரிய. #கேப்ரியல் தாமஸ்ராஜ் ஐயா அவர்கள்,
🔥மதிப்புக்குரிய. #ஆனந்த் ஐயா அவர்கள்,
🔥ஆவிக்குரிய தந்தை. #ஜேம்ஸ்எபினேசர் ஐயா அவர்கள்,
🔥மதிப்புக்குரிய. #ஜோசப்பிரியகுமார் ஐயா அவர்கள்,
🔥மதிப்புக்குரிய. #ஜேக்கப் ஐயா அவர்கள்,
🔥இன்னும் #பல #மூத்தஊழியர்களின் கீழ் #ஊழியத்தையும் #வேதத்தையும் #வாழ்க்கையையும் கற்றுத் தேர என் வாழ்வில் மிகப் பெரும் பங்காற்றியவர் என் அன்பு ஆவிக்குரிய தகப்பனார் எம்கே சாம் சுந்தரம் ஐயா அவர்கள்....
என் அனுபவத்தில் தற்போது உள்ள சாலசிறந்த வேதாகமக் கல்லூரிகளில் கிடைக்காத அனுபவங்களோடு கூடிய போதனைகளை நான் அறிந்து கொள்ள கற்றுக்கொள்ள வழிவகுத்தவரும் அவரே..!!
மேலும்,
ஏசிஏ தலைமை சபையில், வேதாகமக் கல்லூரி பயிலும் நாட்களில்..
நான் தங்குவதற்கும், நான் பிரயாணம் செய்வதற்கும், நான் ஆகாரம் கொள்வதற்கும் அனைத்தையும் எனக்காக ஏற்று செய்தவர் என்னுடன் வயது வித்தியாசம் இல்லாமல் என் தந்தையைப் போல என் நண்பனை போல என் மேல் கையை போட்டு என்னோடு அவர் பேசி நடந்த சில மணி நேரங்களை இன்றைக்கும் நினைக்கும்போது என் இருதயம்......!!!!!!!!!!!
இன்னும் பல........,
அவர்களுடைய ஆலோசனைகள் ஜெபங்கள் அடிச்சுவடுகளுடன் உண்மையுள்ள ஊழியனாக பூமியில் என் பணியை முடித்து விசுவாசத்தை காத்து பரலோகராஜ்யத்தில் அவர்களை சந்திப்பேன் என்றும் அவருடைய நினைவுகளுடன்..!!!
கர்த்தருடைய பணியில் அன்பு ஊழியன்,
ஜேம்ஸ் ஜெப ராஜன். கா
ACA சேலம் ஊழியங்கள்