Iyan Adimaigal

Iyan Adimaigal இருமுடிதாங்கிஒருமனதாகி குருவெனவேவந்தோம். இருள்வினைத்தீர்க்கும்எமனையும்வெல்லும்திருவடியைக்காணவந்தோம்.

பாண்டி, மலையாளம் காசி, ராமேஸ்வரம், அடக்கியாளும் ஸ்ரீபூர்ணா, ஸ்ரீபுஷ்கலா ஸமேத ஹரிஹரபுத்திரன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐய...
29/03/2026

பாண்டி, மலையாளம் காசி, ராமேஸ்வரம், அடக்கியாளும் ஸ்ரீபூர்ணா, ஸ்ரீபுஷ்கலா ஸமேத ஹரிஹரபுத்திரன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா!! சரணம் ஐயப்பா!!! (கட்டிய வசனம் - 22)

​1. பாண்டி, மலையாளம், காசி, ராமேஸ்வரம் :
​இந்த நான்கு இடங்களும் ஐயப்ப சுவாமியின் செல்வாக்கையும், அவரது அவதார நோக்கத்தையும் குறிக்கின்றன:

🕉 பாண்டி (மதுரை/பாண்டிய தேசம்): ஐயப்பன் பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த பந்தள ராஜாவால் வளர்க்கப்பட்டவர். எனவே, பாண்டிய தேசத்தின் தொடர்பு இதில் குறிக்கப்படுகிறது.

🕉 மலையாளம் (கேரளா): அவர் வளர்ந்த இடமும், தவம் புரியும் இடமுமான சபரிமலை கேரளாவில் உள்ளது.

🕉 காசி & ராமேஸ்வரம்: ஐயப்பன் 'ஹரிஹரபுத்திரன்' (விஷ்ணு மற்றும் சிவனின் மகன்). காசி சிவனுக்கும், ராமேஸ்வரம் ராமருக்கும் (விஷ்ணு) உகந்த இடங்கள். இந்த இரண்டையும் இணைக்கும் பாலமாக, அதாவது சைவம் மற்றும் வைணவத்தை இணைக்கும் தெய்வமாக ஐயப்பன் திகழ்கிறார்.

​2. அடக்கியாளும் :

​"அடக்கியாளும்" என்பது ஐயப்பனின் பேராற்றலைக் குறிக்கிறது. அவர் ஐம்புலன்களையும், தீய சக்திகளையும், கர்ம வினைகளையும் அடக்கி ஆள்பவர். தன்னை நாடி வரும் பக்தர்களின் மனக்கவலைகளையும், அகந்தையையும் அடக்கி அவர்களுக்கு அமைதி வழங்குகிறார்.

​3. ஸ்ரீபூர்ணா, ஸ்ரீபுஷ்கலா ஸமேத :

சபரிமலையில் நாம் காணும் ஐயப்பன் பிரம்மச்சாரி கோலத்தில் (நைஷ்டிக பிரம்மச்சாரி) இருக்கிறார். ஆனால், அவர் "தர்மசாஸ்தாவாக" அவதரித்தபோது பூர்ணா மற்றும் புஷ்கலா ஆகிய இரு தேவியருடன் கிருகஸ்த (இல்லற) கோலத்தில் வீற்றிருக்கிறார்.

🕉 ஸ்ரீபூர்ணா: 'முழுமை' என்று பொருள். இவரை வணங்குவதால் வாழ்வில் குறைகள் நீங்கி முழுமை கிட்டும்.

🕉 ஸ்ரீபுஷ்கலா: 'வளம்' அல்லது 'செழிப்பு' என்று பொருள். இவரை வணங்குவதால் செல்வம் மற்றும் அனைத்து வளங்களும் பெருகும்.
​அதாவது, ஞானமும் (பூர்ணா) கிரியா சக்தியும் (புஷ்கலா) ஐயப்பனிடம் இணைந்துள்ளன என்பது இதன் தாத்பர்யம்.

4. ஹரிஹரபுத்திரன் ஐயன் ஐயப்ப ஸ்வாமி :

ஹரிஹரபுத்திரன்: மகாவிஷ்ணு (ஹரி) மற்றும் சிவபெருமான் (ஹரன்) ஆகிய இருவரின் சக்தியும் இணைந்து உருவானவர்.

🕉 ஐயன்: 'ஐயன்' என்றால் தலைவன் அல்லது தந்தை என்று பொருள். நம்மை வழிநடத்தும் தந்தை அவர்.

​5. சரணம் ஐயப்பா! :

​"சரணம்" என்றால் சரணாகதி அடைதல். "என் உடல், பொருள், ஆவி அனைத்தும் உன்னுடையது; நீயே எனக்கு கதி" என்று அவரிடம் முழுமையாக நம்மை ஒப்படைப்பதே இதன் பொருள். மூன்று முறை கூறுவது நமது காயம் (உடல்), வாக்கு (சொல்), மனசு (மனம்) ஆகிய மூன்றாலும் அவரை வணங்குவது.

சரணம் ஐயப்பா 🙏

சுவாமி சரணம்மாசி உத்திரம் - பங்குனி உத்திரம்இரண்டையும் பகவான் நட்சத்திரமாக கொண்டாடுகிறார்களே எது உண்மையான நட்சத்திரம் என...
04/03/2026

சுவாமி சரணம்
மாசி உத்திரம் - பங்குனி உத்திரம்

இரண்டையும் பகவான் நட்சத்திரமாக கொண்டாடுகிறார்களே எது உண்மையான நட்சத்திரம் எனும் கேள்வி கட்டாயம் எழுகிறது

குறிப்பாக பந்தள குடும்பம் பல ஆண்டுகளாக கடைபிடிக்கின்ற பொழுதும் தற்போது தான் மாசி உத்திரம் வெகு ஜன ஐயப்ப பக்தர்களூடே பரவுகிறது

மாசி உத்திரம் என்பது

உதயணனை வதம் செய்து சாஸ்தா பீடத்தை பிரதிஷ்டை செய்து விரத நியமங்களை உண்டு செய்து தத்வமஸி கொள்கையை நிலைநாட்டி யோக நிலையில் பகவானோடு கலந்திட பந்தளத்தில் வந்துதித்த மாமணி கண்டெடுக்கப்பட்ட நட்சத்திரம் என ஒரு சாராரும் பிறந்த நட்சத்திரம் என மறுசாரரும் மகிழ்கிறார்கள் ஊருக்கு அரசனோ தெய்வமோ வளர்த்தவர்களுக்கு குழந்தை தனியுடைமை என்பதாகவே பந்தளத்து குடும்பத்தால் அவர்கள் பகவான் நட்சத்திரத்தை கொண்டாடுகிறார்கள்

சபரிமலை உத்திரம் :-

பண்டைய காலத்தில் மகர உற்சவம் தவிர பிற உற்சவங்களுக்கு திறக்கப்படாத ஆலயமான சபரிமலையில் மகரத்திற்காக ஆழி தோண்டி அதில் தீ வளர்த்தே மிருகங்களிடமிருந்து விழாவை அன்றைய பக்தர்கள் நடத்தியுள்ளார்கள் அன்றைய கால கட்டத்தில் சபரிமலையில் கொடி மரமும் கிடையாது பங்குனி உத்திரமும் கிடையாது

இவை கொடி மரம் வைத்து ஒரு தாந்தீரிக கோவிலாக முழுவதுமாக மாற்றப்பட்டு ஆலயத்தன் அடிப்படை மரபுகளான பலி நிகழ்வுகள், பள்ளிவேட்டை ஆராட்டு போன்றவற்றை நிகழ்த்த உன்னத ஐயப்ப மெய்யன்பர்களால் கோரிக்கை வைக்கப்பட்டு தேர்தெடுக்கப்பட்ட ஒரு நாள் எனவே மரபு அடிப்படையில் சபரிமலை பங்குனி உத்திரம் பின் நாள் வருகையே

தற்போது தான் ஓணத்திற்கு கூட திருநடை திறப்பானது நடக்கிறது அப்படி இருக்க ஏன் பந்தள குமாரன் உதித்த திரு நட்சத்திரம் கொண்டாட மாசி உத்திரம் நடை திறக்க கூடாது எனில்

சபரிமலை என்பது துறவு கோவில் அங்கே பகவான் என்பவன் சந்நியாசி

எந்த ஒரு சந்நியாசி பீடமும் சந்நியாசியின் பூர்வாசிரமமான பிறந்த வீட்டு அடையாளங்களையும் ஏற்று துறவு கொள்ள கூடாது பிறந்த நாள் நட்சத்திரம் உட்பட சகலத்தையும் துறந்து தான் சந்நியாசி தன் தவ வாழ்வு வாழ வேண்டும் அப்படி ஒரு நிலையில் மாசி உத்திரம் சபரிமலையில் கொண்டாடப்பட அவசியமற்றது

உயர்ந்த சந்நியாசிகள் தங்கள் வாழ்ந்த வாழ்கையை சீடர்கள் குருநாதர் மறைந்த திருநட்சத்திரத்தை தான் அவருக்கு உண்மையான இறைமை பிறந்த நாள் என நம் மரபில் கொண்டாடுகிறார்கள். நாயன்மார்கள் சித்தர்கள் என நம் மரபில் மோட்சம் அல்லது சமாதி நட்சத்திரத்தை தான் கொண்டாடுகிறார்கள்

பங்குனி உத்திரம் ஏன்

பந்தள குமாரனுக்கு முன்பும் பின்பும் ஆயிரம் அவதாரங்களை சாஸ்தா கொண்டிருந்தாலும் சகல அவதாரங்களும் அடங்கும் பரப்பிரம்மமான சாஸ்தாவானவனுக்கு உரிய நட்சத்திரமாய் கருதப்படுவது பங்குனி உத்திரம் ஆகும்

சாஸ்தாவின் அங்கமான சபரீசன் சாஸ்தாவோடு கலந்துவிட்ட நிலையில் சந்நிதானத்தில் சாஸ்தாவின் அடையாளங்களை தான் நாம் கருத வேண்டுமே தவிர பகவானின் பூர்வாசிரமமான அடையாளங்களை நாம் கொண்டாட கூடாது

எனவே மாசி உத்திரத்தை அவர்வர் இல்லங்களிலும் பந்தளத்திலும் உற்சவமாக மகிழலாம்

சாஸ்தாவின் நட்சத்திரமான பங்குனி உத்திரத்தை பொதுவாக அனைத்து ஐயப்ப பக்தர்களும் பகவான் நட்சத்திரமாக கருதி சந்நிதானத்திலோ சகல சாஸ்தாவின் ஆலயங்களிலும் கொண்டாடலாம் 🙇🏽‍♂️🙏🏽

வாழ்கையில் எதிலுமே திருப்தி இல்லை, பகவான் எதையுமே எனக்கு தரவில்லை என புலம்புவர்கள் யாராவது இருந்தால் தயவுசெய்து இந்த புக...
24/11/2025

வாழ்கையில் எதிலுமே திருப்தி இல்லை, பகவான் எதையுமே எனக்கு தரவில்லை என புலம்புவர்கள் யாராவது இருந்தால் தயவுசெய்து இந்த புகைப்படத்தை பாருங்கள் இருகால்களும் நடந்து ஏறக்கூடிய ஆற்றல் இல்லை தலையில் ஏற்றி இருமுடியில் தடுமாற்றம் இல்லை கையில் தானே அபிசேகம் செய்ய நெய்பாத்திரம் தானே கொண்டு படியேறும் இந்த ஒற்றை உயிரை காணுங்கள் பக்தி என்பது எது என புரியவரும் 🙇🏽‍♂️🙏🏼

24/11/2025

#இந்துசமய_கலை_கலாசார_பண்பாட்டு_விளக்கங்கள் – பதிவு 35
(தெளிவை நோக்கிய ஓர் பயணம்)

❓ #வினா: ஐயப்ப வழிபாடானது ஓர் ஆகமம் சார்ந்த வழிபாடா? அல்லது சிறு தெய்வ வழிபாடா?

ஐயப்ப வழிபாட்டில் உள்ள பூஜைகளையும் விளக்குக.
உ+ம்: சக்தி பூஜை, ...

✅ #விடை:
“ஐயப்ப வழிபாடு ஆகமச் சார்ந்ததா அல்லது சிறு தெய்வ வழிபாடா?” என்ற கேள்வி சரியாகவே கேள்விக்குறி வைக்கும் ஒன்று.

பலரும் உணர்ச்சிவசப்பட்ட பதிலைத் தருவார்கள்; ஆனால் இப்பதிவின் பதில் உண்மையை ஏற்கும் நிலையைப் பொருத்து அமையும் என்பதில் அயமில்லை.

கடினமான, நேரான பதில்:

்ப_வழிபாடு_சிறுதெய்வ_வழிபாடு_அல்ல.

இதைக் குழப்பமாக கூறுபவர்கள் இரண்டு காரணங்களால் அப்படிச் சொல்வார்கள்:

i. ஐயப்பன் தனியொரு ஆகமத்தில் விவரிக்கப்படவில்லை.

ii. பல இடங்களில் மக்கள் வழிபாட்டு முறைகள் கலந்திருப்பது.

ஆனால் இது “சிறுதெய்வம்” என்று நிர்ணயிப்பதற்கான ஆதாரம் அல்ல.

்ப_வழிபாடு_ஆகம_அடிப்படை_கொண்டது!

ஆனால் தனியான ஆகமம் இல்லை.

இது தான் நிலைமை. உண்மை.

ஐயப்பன் தர்மசாஸ்தா. “சாஸ்தா” என்ற தெய்வம் வேதம், உபநிஷது, புராணம் வரை வருகிறது.

ஐயப்ப வழிபாடு தனியான “ஐயப்ப ஆகமம்” என்று பிரிந்து எழுதப்பட்ட கட்டாய நூல் கிடையாது. ஆனாலும் தெய்வத்தைப் பிரதிஷ்டிக்கும் விதி, பீடார்த்த நியாசம், ஹோமம், தின பூஜை, உத்சவ விவரங்கள் எல்லாம் பொது ஆகமங்களுக்கு உட்பட்டது. (சைவ ஆகம, வைணவ ஆகம ஒத்த நடை).

அதாவது: ஆகம விதிகளைச் சரியாகப் பின்பற்றும் தன்மையும் உள்ளது.

மக்கள் வழிபாட்டு கலப்பும் உள்ளது
எது உண்மை என்பதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ார_நூல்கள் (நேரடி “ஐயப்ப ஆகமம்” இல்லை, ஆனால் இணை ஆதாரங்கள் உறுதி):

(A) #புராண_ஆதாரம் - “சாஸ்தா”

சாஸ்தா பற்றிய தெளிவான குறிப்புகள்:

🔅பிரமாண்ட புராணம் - உத்தர காண்டம் → சாஸ்தாவின் அவதார வரலாறு

🔅ஸ்கந்த புராணம் - காவிரி மஹாத்மியம் → சாஸ்தா பற்றிய விரிவான விவரங்கள்

🔅ஹரிவம்சம் → சாஸ்தா மகாவிஷ்ணு - ஶிவசக்தி சார்ந்த தெய்வம்

மொத்ததில் "சாஸ்தா" என்பது வேத புராண மரபில் நன்றாக பதிவு செய்யப்பட்ட தெய்வம்.

(B) ்

ஐயப்பன் சந்நிதிகள் பொதுவாக:

🔅 #சைவ_ஆகம விதிமுறைகளின் படி நியாசம், ஆவாஹனம், ஆலயம், பரிகாரங்கள் செயல்படும்.

🔅பல கோவில்களில் கமிகா, கரணம், சூலம், சரித்ராதி ஆகம முறை பின்பற்றப்படுகிறது.

#சபரிமலை_தாந்திரம்:

🔅தாந்த்ர சமுச்சயம் (கேரள தாந்த்ர கலாசாரம்) அடிப்படையில்.
இது சிறு தெய்வக் கலாச்சாரம் அல்ல; இது ஒரு மிகக்கட்டுப்பட்ட கேரள ஆகம மரபு.

்_இது_சிறுதெய்வ_வழிபாடு_என_சிலர்_தவறாக_நினைக்கிறார்கள்?

நேரம் விரயம் செய்யாமல் சொல்லுகிறேன்:

🔅கிராமத்துக்கேற்ப மக்கள் பூஜை கலப்பு (பொக்கு, கோலம், கருப்பு தீபம், கற்பூரம், மிளகு, பறை இசை) → மக்கள் நடை

🔅மலை ஏற்றம், விரதம், இளஞ்சிவப்புப் பாவாடை, கருப்பு ஆடை, இரும்பு கொண்டு நடப்பது → ஆகமத்தைச் சார்ந்தது அல்ல.

இவை “சிறுதெய்வபோன்ற” தோற்றம் தரலாம். ஆனால் தெய்வம் மற்றும் ஆலய முறைகள் முழுக்க ஆகமார்த்தமானவை.

்ப_வழிபாட்டில்_உள்ள_பூஜை முறைகள் (உண்மையான அமைப்பு)

பொதுவில் மூன்று நிலைகள்:

(A) ாந்திர_பூஜைகள் (கேரள ஆகம முறை)

i. த்ரிகால பூஜை (காலை, உச்சி, சாயங்காலம்)

ii. அபிஷேகங்கள்:

🔆பால்
🔆தயிர்
🔆பன்னீர் நீர்
🔆தேன்
🔆சந்தனம்
🔆வேப்பிலை/அரிவாள் பச்சிலை நீர் (சாஸ்தாவிற்கு சிறப்பு)

iii. நைவேத்யங்கள்:

🔆அரவண பாயசம் (சபரிமலை தனிப்பேர்)
🔆அப்பம்
🔆பலகாரம்

iv. ஹோமங்கள்:

🔆தர்மசாஸ்தா ஹோமம்
🔆சாஸ்தா மொளி ஹோமம்
🔆பூர்ணாஹூதி
🔆நவகரஹ ஹோம் (அவசியமெனில்)

V. ஆராதனைகள்:

🔆தீபாராதனை
🔆ஆரத்தி
🔆சாஸ்தா அஷ்டோத்ரம் / நாமவலி

(B) மக்கள் நடை (ஆகம சார்பல்ல, ஆனால் பரவலாக உள்ளவை)

இதையும் சரியாகப் பிரித்துக் காட்டுகிறேன்:

🔅சக்தி பூஜை / சக்தி ஆராதனை → இது ஐயப்ப ஆராதனையின் ஆதாரமல்ல; இது மக்கள் நடைமுறை.

🔅பொக்கு தீபம் / மிளகு தீபம்
🔅இரும்பு/பொறி நடை
🔅 கருப்பு கயிறு, மாலை, மெழுகு தீபம்

இவை முற்றிலும் மக்களின் கலாசார ரீதியான வழிபாடுகள். ஆகம நூல் அல்ல.

(C) அத்யாத்மார்த்தமான, ஏற்றுக்கொள்ளப்பட்ட பூஜைகள்

🔅 தர்மசாஸ்தா த்ரிஷட்டி / சாஸ்தா சஹஸ்ரநாமம்
🔅 அஷ்டோத்தரம்
🔅 மந்திர ஜபம்: “ஸ்வாமியே சரணம் அய்யப்பா”
🔅தர்மசாஸ்தா மூல மந்திரம்
🔅தர்மசாஸ்தா தியானம்
🔅 சாஸ்தா யந்திர,தந்திர முறை (கேரள தந்திரம்)

ுடிவு

✔ ஐயப்ப வழிபாடு “சிறுதெய்வ வழிபாடு” அல்ல.

✔ ஐயப்ப வழிபாடு தனிப்பட்ட ஆகமம் கொண்டதில்லை; ஆனால் ‘சாஸ்தா’ என்ற தெய்வம் வேத புராண ஆகம அடிப்படையில் உள்ளது.

✔ கோவில் பூஜைகள் -ஆகம, தாந்திர (கேரள தாந்த்ர ).

✔ பக்தர்களிடையே பரவிய நடைமுறைகள் - மக்கள் கலாச்சாரத்திலிருந்து வந்தவை (ஆகம சார்ந்தவையல்ல).

பதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம் உண்டு அவையாவனமுதல் படி – விஷாத யோகம்பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் ...
16/11/2025

பதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம் உண்டு அவையாவன

முதல் படி – விஷாத யோகம்
பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம்.

இரண்டாம் படி – சாக்கிய யோகம்
பரமாத்மாவே எம் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம்.

மூன்றாம் படி – கர்ம யோகம்
கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்,

நான்காம் படி – ஞானகர்ம சன்னியாச யோகம்
பாவ- புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.

ஐந்தாம் படி – சன்னியாச யோகம்
நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது.

ஆறாம் படி – தியான யோகம்
கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இதுவே ஆறாவது படி.

ஏழாம் படி – பிரம்ம ஞானம்
இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான். எல்லாமே இறைவன்தான் என உணர்வது பிரம்ம ஞானம்.

எட்டாம் படி – அட்சர பிரம்ம யோகம்
எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.

ஒன்பதாம் படி – ஆன்மிக யோகம்
கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.

பத்தாம் படி – விபூதி யோகம்
அழகு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது.

பதினொன்றாம் படி – விஸ்வரூப தரிசன யோகம்
பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.

பன்னிரெண்டாம் படி – பக்தி யோகம்
இன்பம் - துன்பம், ஏழை – பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது.

பதிமூன்றாம் படி – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல்.
பதினான்காம் படி – குணத்ர விபாக யோகம்
வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவது.

பதினைந்தாம் படி – தெய்வாகர விபாக யோகம்
நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.

பதினாறாம் படி – சம்பத் விபாக யோகம்
இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது.

பதினேழாம் படி – சிரித்தாத்ரய விபாக யோகம்
’சர்வம் பிரம்மம்’ என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது.

பதினெட்டாம் படி – மோட்ச சன்னியாச யோகம்
உன்னையே சரணாகதி என்று அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் அடைக்கலம் அடைந்து, அவன் அருள்புரிவான் என்று அவனையே சரணடைவது.

சத்தியம் நிறைந்த இந்து பத்தினெட்டுபடிகளை பக்தியோடு கடந்து வந்தால் நம் கண் எதிரே அருள் ஒளியாய் தரிசனம் தந்து அருள் புரிய காத்திருப்பான் ஐயன் ஐயப்பன் என்பதே இந்த பதினெட்டாம் படி தத்துவம்.

சத்தியம் காக்கும் சத்தியமான பொன்னு பதினெட்டாம் படிகளே சரணம்!
சரணம்! சரணம்! சரணம் பொன் ஐயப்பா!

நமது இந்திய ஜனாதிபதி தயவால் சபரிமலையில் இருக்கும் மஞ்சமாதா சன்னிதானம்  முடியாதவர்கள் நன்றாக Zoom செய்து தரிசித்து கொள்ளவ...
24/10/2025

நமது இந்திய ஜனாதிபதி தயவால் சபரிமலையில் இருக்கும் மஞ்சமாதா சன்னிதானம் முடியாதவர்கள் நன்றாக Zoom செய்து தரிசித்து கொள்ளவும்...

ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🕉️🙏🐘🙏

55 ஆண்டுகள் பிடித்திருக்கிறது ஒரு ஜனாதிபதி சபரிமலையில் ஐயனை தரிசிக்க.பாரதத்தின் ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று கேரளாவில் ...
22/10/2025

55 ஆண்டுகள் பிடித்திருக்கிறது ஒரு ஜனாதிபதி சபரிமலையில் ஐயனை தரிசிக்க.

பாரதத்தின் ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலில் பிரார்த்தனை செய்த முதல் பதவிக் கால அரச தலைவர் என்ற வரலாற்றைப் படைத்தார்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் 3,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு, பம்பாவிலிருந்து சன்னிதானம் வரை நான்கு கிலோமீட்டர் மேல்நோக்கி நடைபயணம் தேவைப்படுகிறது, பாரம்பரியமாக கால்நடையாக மட்டுமே செல்ல முடியும்.

குறிப்பாக, கோயில் கடுமையான வயதுக் கட்டுப்பாட்டை அமல்படுத்துகிறது: 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் மலை உச்சியில் உள்ள சன்னதிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.

67 வயதில், சன்னதிக்குச் சென்று சடங்குகளைச் செய்த முதல் பெண் தலைவர் ஜனாதிபதி முர்மு ஆவார், இதில் 18 புனிதப் படிகளில் ஏறுவதும் அடங்கும்.

1970களில் வி.வி. கிரியின் வருகைக்குப் பிறகு, சபரிமலைக்குச் சென்ற இரண்டாவது இந்திய ஜனாதிபதியும் ஜனாதிபதி முர்மு ஆவார்.

21/07/2025

ஶ்ரீ சபரிமலையில் நவக்கிரக பிரதஸ்டை மற்றும் கும்பாபிஷேகம் மற்றும் வெகுவாக நடைபெற்ற அற்புதமான காட்சிகள். சாமி சரணம்.🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

Which one you like poll itAm go with oldஉணர்தொரா உணர்வுக்கு உணர்வே சரணம் ஐயப்பா       Kindly send your ayyappa bajanai p...
21/07/2025

Which one you like poll it

Am go with old

உணர்தொரா உணர்வுக்கு உணர்வே சரணம் ஐயப்பா



Kindly send your ayyappa bajanai poojai pictures & pilgrim pictures in message we will upload with ur id and tag you it may reach all devotees we can also praying ayyappa from here அய்யப்ப பக்தர்கள் உங்கள் அய்யப்ப பூஜையின் படங்களை இங்கே பதிவேற்ற முடியும்









.

55வயது ஆகும் சபரிமலையின் செல்லப்பிள்ளையான மணிகண்டன் யானை நேற்று மாலை உடல் நலக்குறைவால் உயிர் பிரிந்தது.பிரபல திரைப்பட நட...
03/07/2025

55வயது ஆகும் சபரிமலையின் செல்லப்பிள்ளையான மணிகண்டன் யானை நேற்று மாலை உடல் நலக்குறைவால் உயிர் பிரிந்தது.
பிரபல திரைப்பட நடிகர் கே.ஆர். விஜயாவுக்குச் சொந்தமான இந்த யானை, சபரிமலை கோயிலுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. அப்போதைய சபரிமலை தந்திரியால் அதற்கு மணிகண்டன் என்று பெயரிடப்பட்டது. கஜராஜா என்றும் அன்பாக அழைக்கப்பட்ட மணிகண்டன், சபரிமலை சன்னிதானத்தில் புனிதமான திடம்புவையும் உற்ச்சவ மூர்த்தியையும் ஏந்தி பல ஆண்டுகள் சேவை செய்தார்.

Address

Rani

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iyan Adimaigal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category